Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 523
- Thread Author
- #1
சதூர்வேதமங்கலம்:
கடந்த ஐந்து வருடங்களுக்குப் பின்னர் தனது காதல் மனைவியின் வாயிலிருந்து அவள் அழைக்கும் பிரத்தியோகமான அழைப்பான லாம்ப் போஸ்ட் என்ற வார்த்தையை கேட்டவனுக்கு உள்ளுக்குள் எண்ணற்ற பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் இருந்தது..
தன்னை அணைத்துக் கொண்டிருப்பவளின் முதுகில் தட்டிக் கொடுத்தவன் அட ஆண்டவா எனக்கு ஏன் இப்படி ஒரு சோதனை?
ருத்ரா உன் வீர தீர செயலை காட்ட வேண்டியது தானென்று சொல்லியவன் தன்னை அணைத்துக் கொண்டு அழுபவளை தூக்கி நிமிர்த்தியவன் அவள் உயரத்திற்கு தனது தலையை கீழே சாய்த்து அவள் உதட்டோடு தனது உதட்டை பதித்தான்.
இந்த அதிரடி அதிர்ச்சியால் ஆர்கலியின் அழுகை நிற்க ருத்ரனும் தனது காதல் லீலைகளை காட்டத் தொடங்கினான்.
அதில் அவளின் எண்ணமும் மாற மனைவியாக அவனுக்கு இசைந்து கொடுத்தாலும் மூன்று நாட்களுக்கு முன்பு தான் டெலிவரி ஆகிய உடம்பு என்பதால் சிறிது பயம் வந்து அவனை தன்னிடம் இருந்து விலக்க,எல்லா ஈர வெங்காயமும் எனக்கும் தெரியும்டி என்று அவள் காதோரம் சொல்லும் போது ருத்ரனின் தாடியும் மீசையும் குத்தி ஏற்படுத்திய குறு குறுப்பில் கணவனை இறுக்கி கட்டிக் கொண்டாள்.
மனைவியின் அணைப்பிலேயே அவள் மனம் புரிய அந்நேரம் பார்த்து குழந்தைகள் இருவரும் அழுக,அட கரடி குட்டிங்களா!
இப்போதாண்டா என் பொண்டாட்டி ஒரளவுக்கு ஒத்து வந்தா அது உங்களுக்கு பொறுக்கவில்லையா என்று ருத்ரன் சொல்ல அவன் முதுகில் பட்டு பட்டென்று அடித்தவள் என்ன குழந்தைகளை போய் கரடி குரடி என்று சொல்லுற.அப்பனை போல தான் பிள்ளைகளும் இருக்கும் என்று திட்டினாள்.
மனைவியின் இயல்பான குணம் திரும்பியதை கண்டவன் ஏண்டி என்ன பாத்தா என்ன கரடி போலயா இருக்கு?
கொஞ்சம் உன்னுடைய மனசாட்சியை தொட்டு சொல்லு என்றான்.
தன் மேல் இருந்தவனை பார்த்தவள் ஆமா சத்தியமா நிஜமா உண்மையா என்று சொல்ல வர,கமான் கமான் சொல்லுடி..
உன் புருஷன் ஸ்மார்ட்டா செம்மையா ஹேண்ட்ஸமா இருக்கேன் அதானே என்று ருத்ரன் கேட்க,அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் 100 சதவீதம் சத்தியமா நீ கரடி போல தாண்டா இருக்க என்றாள்.
அவள் சொன்னதை கேட்டவன் கரடி என்ன பண்ணும் என்பது தெரியுமாடி என்று அங்கே அங்கே அவளை கடித்து வைத்தான்.
அப்பொழுது குழந்தைகளும் இன்னும் கொஞ்சம் சத்தத்தை கூட்ட தள்ளு எருமை.எவ்வளவு வெயிட்டா இருக்க...
உன் வெயிட்டை எப்படி தாங்க முடியும் என்று சொல்ல ஏண்டி புருஷன் என்று கொஞ்சமாச்சும் மரியாதை கொடுக்குறியா?.
உனக்கெல்லாம் என்னடா மரியாதை வேண்டி கிடக்கு.தள்ளுடா என்று தன் மேலிருப்பவனை புறட்டி கீழே தள்ளியவள் எழுந்து போய் தொட்டிலில் இருந்த குழந்தைகளை பார்க்க இரண்டு பேரும் நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டு அழுதார்கள்.
பெட்டிலிருந்து எழுந்து வந்த ருத்ரனும் தங்க குட்டிங்க ஏன் அழுறீங்க என்றவாறு ஆளுக்கொரு குழந்தையை தூக்கினர்.
ஏய் பசிக்குது போலடி என்றான்.ஆமாம் என்றவள் சரி நீ ஒரு குழந்தையை தூக்கிட்டு வெளியில போ நான் ஒருவரை பார்க்கிறேன் என்று சொல்ல அதுக்கு ஏண்டி நான் வெளிய போகணும். இங்கே இருக்கிறேன் என்றான்.
சரி அப்போ திரும்பி உட்காரு என்றாள். என்னாலையெல்லாம் திரும்பி உட்கார முடியாது நான் இப்படி தான் இருப்பேன் என்க,ஆண்டவா இவன் ரொம்ப படுத்துறானே என்று மனதிற்கு நினைத்தவள் வேறு பக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டாள்.
இரண்டு குழந்தைகளுக்கும் மாற்றி மாற்றி பசியாற்றியவள் பின்னர் ஆளுக்கு ஒரு குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு தட்டிக் கொடுத்தனர்.
இருவரும் சிறிது நிமிடத்தில் ஏப்பம் விட்டதும் பெட்டில் கிடத்த கை காலை உதைத்து கொண்டிருந்தனர்.
பெட்டில் படுத்திருந்த குழந்தைகளை இருவரும் பார்த்த கொண்டிருக்கும் போது நிஜமாகவே உன்னை போல தான் ரெண்டு பேரும் இருக்கிறாங்கள் லாம்ப் போஸ்ட் என்று ஆர்கலி சொல்ல தேங்க்யூ தேங்க்யூ.
என் பொண்டாட்டிக்கு என் மேல அம்புட்டு காதல் டி.என் குட்டிங்க அவள் வயிற்றில் இருக்கும் போது என்னை ரொம்ப சைட் அடிச்சிட்டா.அதான் அப்படியே அய்யா போலவே ஜூனியர்ஸ் வந்தாச்சி என்றவன்,
ஆர்கலி என்று கூப்பிட்டான்.
அவன் வழக்கமாய் கூப்பிடும் செல்லப்பேரான பார்பி டால் இல்லாமல் ஆர்கலி என்று மூச்சிக்கு மூச்சி சொல்வது அவளுக்கு கோபம் வந்து முறைத்து பார்த்தாள்.
ஏன் இந்த பார்பி டால் எங்க போயிடுச்சாம்? என்னமோ இவன் பெயர் வைத்த போல ஆர்கலி ஆர்கலி என்று ஏலம் விடுறான் என முணுமுணுத்தாள்.
அவள் முணுமுணுப்பது ருத்ரனின் காதில் நன்கு விழுந்தது.
அப்பொழுது மதிய சாப்பாடு எடுத்துக்கொண்டு தேவகியும் கருப்பாயியும் வீட்டிற்கு வந்தனர்.
வாம்மா என்று பாட்டி சொல்லும் குரல் உள்ளே இருந்தவர்களுக்கு கேட்க ஆர்கலியும் பொறுமையாக எழுந்து வாசலுக்கு வந்தவள் வாங்கம்மா என்றாள்.
பேரப்பிள்ளைகள் ரெண்டு பேரும் என்னம்மா பண்றாங்க என்று தேவகி கேட்க முழிச்சிட்டு தான் படுத்திருக்காங்கம்மா என்றாள்.
அம்மா,ஆர்கலிக்கு இதில் பத்திய சாப்பாடு தனியாக இருக்கு.மத்தது உங்களுக்கும் தம்பிக்கும் என்று தேவகி சொல்ல சரிமா என்றார்.
ஆரமா நீ நேரத்தோடு சாப்பிடு குழந்தைகளுக்கு பால் கொடுக்கணும் இல்லையா.அவங்களை நாங்க பாத்துக்குறோம் என்க,சரிங்கண்ணி என்றவளுக்கு எடுத்து வந்த சாப்பாட்டை பரிமாறியவர்,தம்பி என்று வாசல் பக்கம் நின்று குரல் கொடுக்க உள்ளே வாங்கக்கா என்றான்.
மருமக குட்டீங்க என்ன பண்றாங்க என்றவாறு அங்கே போய் பார்க்க இரண்டு பேரும் விழித்துக் கொண்டு பெட்டில் படுத்திருப்பதை கண்டவர்,நான் பார்த்துக்கிறேன் பா.
நீயும் போய் சாப்பிடு என்க,இல்லக்கா காலையில் டிபன் சாப்பிட்டதே ஒரு மாதிரியா இருக்கு.நான் கொஞ்சம் லேட்டா சாப்பிடுகிறேன்.எனக்கு இஞ்சி டீ மட்டும் வச்சி தாங்களென்க,இதோப்பா என்றவாறு கிச்சனிற்குள் சென்று டீயை போட்டு எடுத்துட்டு வந்து கொடுத்தார்.
தேங்க்ஸ்க்கா என்றவன் எங்கக்கா மாமாவை ஆளைக் காணும் என்க உங்க மாமா திருச்செந்தூர் வரைக்கும் போயிருக்காங்க தம்பி என்றார்.
என்னக்க சொல்றீங்க நேற்று ஈவ்னிங் பார்த்தேனே என ருத்ரன் சொல்ல,ஆமா தம்பி.மாமா இராவுக்கு தான் கிளம்பி போனாரு.
தங்கச்சிக்கு நல்லபடியா பிரசவம் ஆனால் கோயிலுக்கு வரேன்னு வேண்டி இருந்தாராம்.அதுக்கு தான் போயிருக்கிறாரென்று கருப்பாயி சொல்ல அதைக் கேட்டு ருத்ரனுக்கும் வெளியே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆர்கலிக்கும் சங்கரின் பாசத்தை நினைத்து என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
நேரமும் கடந்து சென்றது மூவரும் அங்கிருந்த சாப்பாட்டை பகிர்ந்து சாப்பிட்டனர்.
குழந்தைகள் இருவரும் தூங்கிவிட அவர்களை தூக்கி தொட்டிலில் கிடத்திய கருப்பாயி ஆராமா நீயும் கொஞ்ச நேரம் படுத்துக்க.
உன் மவனும் மவளும் தான் ரா முழுவதும் தூங்க விடமாட்டேங்குறாங்களே என்று சொல்லி சிரிக்க ஆமாங்கண்ணி என்றாள்.
சரி நீ படு என்றவாறு கருப்பாயி திண்ணைக்கு வந்தவர் பாட்டியோடு உட்கார்ந்து கொண்டு ஏற்கனவே தைத்த சட்டைகளுக்கு இருவரும் பட்டன்களை கட்டினர்.
சிறிது நேரம் போனில் மூழ்கியிருந்தவன் உள்ளே வந்து பார்க்க குழந்தைகளும் மனைவியும் தூங்குவது தெரிந்து அங்கு இருந்த தனது லேப்டாப்பை எடுத்துக் கொண்டு ஹாலிற்கு வந்தவன் அதை ஆன் பண்ணி அவன் வேலையை பார்க்கலானான்.
ஆச்சி பதினாருக்கு குழந்தைங்களுக்கு படைக்கணும்.அன்றைக்கே பேர் வைப்பாங்களாயென்று கருப்பாயி கேட்க, அது தெரியலையே கண்ணு.
ஆனால் பதினாறுக்கு நம்ப வழக்கம் போல படைச்சிடலாமென்றவர் அதற்கு என்னென்ன செய்யலாமென இருவரும் கலந்து பேசியபடி வேலை பார்க்க நேரமும் கடந்து சென்றது.
அப்பொழுது கார் ஒன்னு அவர்கள் வீட்டு வாசலில் வந்து நிற்க,இருவரும் சத்தம் கேட்டு யாரென்று பார்த்தார்கள்.
கதவை திறந்து கொண்டு தனாவும், தேவியும் இறங்கினர். அவர்கள் யார் என்பது தெரியவில்லை.
வணக்கம்மா என்க,பாட்டியும் வணக்கம் பா என்றவர்,தமிழர்களுக்கே உரிய பண்பாடானா வந்தவர்களை வாங்கயென்று உள்ளே அழைத்தார்.
அந்த ஓட்டு வீட்டிற்குள் வந்த தனா ஹாலில் வேலையாய் இருந்த மகனை பார்த்து வீரா என்க, தனது வேலையில் மூழ்கியிருந்தவன் அந்த குரலில் நிமிர்ந்து பார்த்து திகைத்தான்.
அவருக்கு பின்னாடி இருந்து தேவியை பார்த்த ருத்ரன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க வாங்க உள்ள வந்து உட்காருங்கள் என்றார் பாட்டி.
இருவரும் ஆளுக்கொரு சேரில் உட்கார்ந்தனர்.கருப்பாயி ஆளுக்கு ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க எடுத்து குடித்துவிட்டு அங்கிருந்து டேபிளில் வைத்தனர்.
பாட்டியையும் கருப்பாயியையும் பார்த்தவர் நான் தன வீர சிம்ஹன். இவங்க என்னோட மனைவி விஷாலா தேவி.நாங்கள் தான் ருத்ரனுடைய அப்பா அம்மா என்று அவரே அறிமுகப்படுத்திக்கொண்டார்.
பேரப்பிள்ளைங்க பிறந்திருக்காங்கன்னு மைக்கேல் அண்ணே சொன்னாங்க. அதான் ரெண்டு பேரும் உடனே கிளம்பி வந்துட்டோம் என்றார்.
அம்மாடி டீ போடு என்று கருப்பாயி கிட்ட சொல்ல வேண்டாங்கம்மா வரும் போது தான் குடிச்சிட்டு வந்தோம் என்று மறுத்து விட்டார்.
ருத்ரனுக்கு அவர்கள் இருவரிடமும் பேச சிறிதும் மனம் வரவில்லை ஒரு பார்வையாளராக அமைதியாக உட்கார்ந்திருந்தான்.
அம்மா குழந்தைகள் எங்கே என்று தேவி கேட்க இரண்டு பேரும் தூங்கிட்டு இருக்காங்கம்மா என்றார்.
தூங்கிட்டு இருக்காங்களா என்று முணவியர் அம்மா உள்ள போய் பார்க்கலாமா?.
இது என்னமா கேள்வி?
உன்னோட பேர பிள்ளைகளை நீ போய் பார்க்க அதுக்கு யாருடைய அனுமதி உனக்கு வேண்டும் என்று பாட்டி கேட்க ரொம்ப நன்றிங்கம்மா என்றவர் வேகமாக எழுந்து அங்கிருந்து உள்ளே சென்று பார்த்தவருக்கு இரண்டு குழந்தைகளும் தனது மகன் ருத்ரனுடைய குழந்தை பருவத்தை விஷாலா தேவிக்கு ஞாபகப்படுத்தினர்.
தன் மகனும் பிறந்த போது இவர்களைப் போல தானே இருந்தான்.முப்பது வருடங்களுக்கு பின்னர் அப்படியே மகனின் சாயலில் தனது பேர பிள்ளைகள் பிறந்திருப்பதை பார்த்தவருக்கு ஆனந்தத்தில் கண்கள் கலங்கியது.
சிறிது நொடிகள் சென்று உள்ளே வந்து குழந்தைகளை பார்த்த தனாவிற்கும் அதே எண்ணம் தான் தோன்றியது.
கடந்த ஐந்து வருடங்களுக்குப் பின்னர் தனது காதல் மனைவியின் வாயிலிருந்து அவள் அழைக்கும் பிரத்தியோகமான அழைப்பான லாம்ப் போஸ்ட் என்ற வார்த்தையை கேட்டவனுக்கு உள்ளுக்குள் எண்ணற்ற பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் இருந்தது..
தன்னை அணைத்துக் கொண்டிருப்பவளின் முதுகில் தட்டிக் கொடுத்தவன் அட ஆண்டவா எனக்கு ஏன் இப்படி ஒரு சோதனை?
ருத்ரா உன் வீர தீர செயலை காட்ட வேண்டியது தானென்று சொல்லியவன் தன்னை அணைத்துக் கொண்டு அழுபவளை தூக்கி நிமிர்த்தியவன் அவள் உயரத்திற்கு தனது தலையை கீழே சாய்த்து அவள் உதட்டோடு தனது உதட்டை பதித்தான்.
இந்த அதிரடி அதிர்ச்சியால் ஆர்கலியின் அழுகை நிற்க ருத்ரனும் தனது காதல் லீலைகளை காட்டத் தொடங்கினான்.
அதில் அவளின் எண்ணமும் மாற மனைவியாக அவனுக்கு இசைந்து கொடுத்தாலும் மூன்று நாட்களுக்கு முன்பு தான் டெலிவரி ஆகிய உடம்பு என்பதால் சிறிது பயம் வந்து அவனை தன்னிடம் இருந்து விலக்க,எல்லா ஈர வெங்காயமும் எனக்கும் தெரியும்டி என்று அவள் காதோரம் சொல்லும் போது ருத்ரனின் தாடியும் மீசையும் குத்தி ஏற்படுத்திய குறு குறுப்பில் கணவனை இறுக்கி கட்டிக் கொண்டாள்.
மனைவியின் அணைப்பிலேயே அவள் மனம் புரிய அந்நேரம் பார்த்து குழந்தைகள் இருவரும் அழுக,அட கரடி குட்டிங்களா!
இப்போதாண்டா என் பொண்டாட்டி ஒரளவுக்கு ஒத்து வந்தா அது உங்களுக்கு பொறுக்கவில்லையா என்று ருத்ரன் சொல்ல அவன் முதுகில் பட்டு பட்டென்று அடித்தவள் என்ன குழந்தைகளை போய் கரடி குரடி என்று சொல்லுற.அப்பனை போல தான் பிள்ளைகளும் இருக்கும் என்று திட்டினாள்.
மனைவியின் இயல்பான குணம் திரும்பியதை கண்டவன் ஏண்டி என்ன பாத்தா என்ன கரடி போலயா இருக்கு?
கொஞ்சம் உன்னுடைய மனசாட்சியை தொட்டு சொல்லு என்றான்.
தன் மேல் இருந்தவனை பார்த்தவள் ஆமா சத்தியமா நிஜமா உண்மையா என்று சொல்ல வர,கமான் கமான் சொல்லுடி..
உன் புருஷன் ஸ்மார்ட்டா செம்மையா ஹேண்ட்ஸமா இருக்கேன் அதானே என்று ருத்ரன் கேட்க,அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் 100 சதவீதம் சத்தியமா நீ கரடி போல தாண்டா இருக்க என்றாள்.
அவள் சொன்னதை கேட்டவன் கரடி என்ன பண்ணும் என்பது தெரியுமாடி என்று அங்கே அங்கே அவளை கடித்து வைத்தான்.
அப்பொழுது குழந்தைகளும் இன்னும் கொஞ்சம் சத்தத்தை கூட்ட தள்ளு எருமை.எவ்வளவு வெயிட்டா இருக்க...
உன் வெயிட்டை எப்படி தாங்க முடியும் என்று சொல்ல ஏண்டி புருஷன் என்று கொஞ்சமாச்சும் மரியாதை கொடுக்குறியா?.
உனக்கெல்லாம் என்னடா மரியாதை வேண்டி கிடக்கு.தள்ளுடா என்று தன் மேலிருப்பவனை புறட்டி கீழே தள்ளியவள் எழுந்து போய் தொட்டிலில் இருந்த குழந்தைகளை பார்க்க இரண்டு பேரும் நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டு அழுதார்கள்.
பெட்டிலிருந்து எழுந்து வந்த ருத்ரனும் தங்க குட்டிங்க ஏன் அழுறீங்க என்றவாறு ஆளுக்கொரு குழந்தையை தூக்கினர்.
ஏய் பசிக்குது போலடி என்றான்.ஆமாம் என்றவள் சரி நீ ஒரு குழந்தையை தூக்கிட்டு வெளியில போ நான் ஒருவரை பார்க்கிறேன் என்று சொல்ல அதுக்கு ஏண்டி நான் வெளிய போகணும். இங்கே இருக்கிறேன் என்றான்.
சரி அப்போ திரும்பி உட்காரு என்றாள். என்னாலையெல்லாம் திரும்பி உட்கார முடியாது நான் இப்படி தான் இருப்பேன் என்க,ஆண்டவா இவன் ரொம்ப படுத்துறானே என்று மனதிற்கு நினைத்தவள் வேறு பக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டாள்.
இரண்டு குழந்தைகளுக்கும் மாற்றி மாற்றி பசியாற்றியவள் பின்னர் ஆளுக்கு ஒரு குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு தட்டிக் கொடுத்தனர்.
இருவரும் சிறிது நிமிடத்தில் ஏப்பம் விட்டதும் பெட்டில் கிடத்த கை காலை உதைத்து கொண்டிருந்தனர்.
பெட்டில் படுத்திருந்த குழந்தைகளை இருவரும் பார்த்த கொண்டிருக்கும் போது நிஜமாகவே உன்னை போல தான் ரெண்டு பேரும் இருக்கிறாங்கள் லாம்ப் போஸ்ட் என்று ஆர்கலி சொல்ல தேங்க்யூ தேங்க்யூ.
என் பொண்டாட்டிக்கு என் மேல அம்புட்டு காதல் டி.என் குட்டிங்க அவள் வயிற்றில் இருக்கும் போது என்னை ரொம்ப சைட் அடிச்சிட்டா.அதான் அப்படியே அய்யா போலவே ஜூனியர்ஸ் வந்தாச்சி என்றவன்,
ஆர்கலி என்று கூப்பிட்டான்.
அவன் வழக்கமாய் கூப்பிடும் செல்லப்பேரான பார்பி டால் இல்லாமல் ஆர்கலி என்று மூச்சிக்கு மூச்சி சொல்வது அவளுக்கு கோபம் வந்து முறைத்து பார்த்தாள்.
ஏன் இந்த பார்பி டால் எங்க போயிடுச்சாம்? என்னமோ இவன் பெயர் வைத்த போல ஆர்கலி ஆர்கலி என்று ஏலம் விடுறான் என முணுமுணுத்தாள்.
அவள் முணுமுணுப்பது ருத்ரனின் காதில் நன்கு விழுந்தது.
அப்பொழுது மதிய சாப்பாடு எடுத்துக்கொண்டு தேவகியும் கருப்பாயியும் வீட்டிற்கு வந்தனர்.
வாம்மா என்று பாட்டி சொல்லும் குரல் உள்ளே இருந்தவர்களுக்கு கேட்க ஆர்கலியும் பொறுமையாக எழுந்து வாசலுக்கு வந்தவள் வாங்கம்மா என்றாள்.
பேரப்பிள்ளைகள் ரெண்டு பேரும் என்னம்மா பண்றாங்க என்று தேவகி கேட்க முழிச்சிட்டு தான் படுத்திருக்காங்கம்மா என்றாள்.
அம்மா,ஆர்கலிக்கு இதில் பத்திய சாப்பாடு தனியாக இருக்கு.மத்தது உங்களுக்கும் தம்பிக்கும் என்று தேவகி சொல்ல சரிமா என்றார்.
ஆரமா நீ நேரத்தோடு சாப்பிடு குழந்தைகளுக்கு பால் கொடுக்கணும் இல்லையா.அவங்களை நாங்க பாத்துக்குறோம் என்க,சரிங்கண்ணி என்றவளுக்கு எடுத்து வந்த சாப்பாட்டை பரிமாறியவர்,தம்பி என்று வாசல் பக்கம் நின்று குரல் கொடுக்க உள்ளே வாங்கக்கா என்றான்.
மருமக குட்டீங்க என்ன பண்றாங்க என்றவாறு அங்கே போய் பார்க்க இரண்டு பேரும் விழித்துக் கொண்டு பெட்டில் படுத்திருப்பதை கண்டவர்,நான் பார்த்துக்கிறேன் பா.
நீயும் போய் சாப்பிடு என்க,இல்லக்கா காலையில் டிபன் சாப்பிட்டதே ஒரு மாதிரியா இருக்கு.நான் கொஞ்சம் லேட்டா சாப்பிடுகிறேன்.எனக்கு இஞ்சி டீ மட்டும் வச்சி தாங்களென்க,இதோப்பா என்றவாறு கிச்சனிற்குள் சென்று டீயை போட்டு எடுத்துட்டு வந்து கொடுத்தார்.
தேங்க்ஸ்க்கா என்றவன் எங்கக்கா மாமாவை ஆளைக் காணும் என்க உங்க மாமா திருச்செந்தூர் வரைக்கும் போயிருக்காங்க தம்பி என்றார்.
என்னக்க சொல்றீங்க நேற்று ஈவ்னிங் பார்த்தேனே என ருத்ரன் சொல்ல,ஆமா தம்பி.மாமா இராவுக்கு தான் கிளம்பி போனாரு.
தங்கச்சிக்கு நல்லபடியா பிரசவம் ஆனால் கோயிலுக்கு வரேன்னு வேண்டி இருந்தாராம்.அதுக்கு தான் போயிருக்கிறாரென்று கருப்பாயி சொல்ல அதைக் கேட்டு ருத்ரனுக்கும் வெளியே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆர்கலிக்கும் சங்கரின் பாசத்தை நினைத்து என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
நேரமும் கடந்து சென்றது மூவரும் அங்கிருந்த சாப்பாட்டை பகிர்ந்து சாப்பிட்டனர்.
குழந்தைகள் இருவரும் தூங்கிவிட அவர்களை தூக்கி தொட்டிலில் கிடத்திய கருப்பாயி ஆராமா நீயும் கொஞ்ச நேரம் படுத்துக்க.
உன் மவனும் மவளும் தான் ரா முழுவதும் தூங்க விடமாட்டேங்குறாங்களே என்று சொல்லி சிரிக்க ஆமாங்கண்ணி என்றாள்.
சரி நீ படு என்றவாறு கருப்பாயி திண்ணைக்கு வந்தவர் பாட்டியோடு உட்கார்ந்து கொண்டு ஏற்கனவே தைத்த சட்டைகளுக்கு இருவரும் பட்டன்களை கட்டினர்.
சிறிது நேரம் போனில் மூழ்கியிருந்தவன் உள்ளே வந்து பார்க்க குழந்தைகளும் மனைவியும் தூங்குவது தெரிந்து அங்கு இருந்த தனது லேப்டாப்பை எடுத்துக் கொண்டு ஹாலிற்கு வந்தவன் அதை ஆன் பண்ணி அவன் வேலையை பார்க்கலானான்.
ஆச்சி பதினாருக்கு குழந்தைங்களுக்கு படைக்கணும்.அன்றைக்கே பேர் வைப்பாங்களாயென்று கருப்பாயி கேட்க, அது தெரியலையே கண்ணு.
ஆனால் பதினாறுக்கு நம்ப வழக்கம் போல படைச்சிடலாமென்றவர் அதற்கு என்னென்ன செய்யலாமென இருவரும் கலந்து பேசியபடி வேலை பார்க்க நேரமும் கடந்து சென்றது.
அப்பொழுது கார் ஒன்னு அவர்கள் வீட்டு வாசலில் வந்து நிற்க,இருவரும் சத்தம் கேட்டு யாரென்று பார்த்தார்கள்.
கதவை திறந்து கொண்டு தனாவும், தேவியும் இறங்கினர். அவர்கள் யார் என்பது தெரியவில்லை.
வணக்கம்மா என்க,பாட்டியும் வணக்கம் பா என்றவர்,தமிழர்களுக்கே உரிய பண்பாடானா வந்தவர்களை வாங்கயென்று உள்ளே அழைத்தார்.
அந்த ஓட்டு வீட்டிற்குள் வந்த தனா ஹாலில் வேலையாய் இருந்த மகனை பார்த்து வீரா என்க, தனது வேலையில் மூழ்கியிருந்தவன் அந்த குரலில் நிமிர்ந்து பார்த்து திகைத்தான்.
அவருக்கு பின்னாடி இருந்து தேவியை பார்த்த ருத்ரன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க வாங்க உள்ள வந்து உட்காருங்கள் என்றார் பாட்டி.
இருவரும் ஆளுக்கொரு சேரில் உட்கார்ந்தனர்.கருப்பாயி ஆளுக்கு ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க எடுத்து குடித்துவிட்டு அங்கிருந்து டேபிளில் வைத்தனர்.
பாட்டியையும் கருப்பாயியையும் பார்த்தவர் நான் தன வீர சிம்ஹன். இவங்க என்னோட மனைவி விஷாலா தேவி.நாங்கள் தான் ருத்ரனுடைய அப்பா அம்மா என்று அவரே அறிமுகப்படுத்திக்கொண்டார்.
பேரப்பிள்ளைங்க பிறந்திருக்காங்கன்னு மைக்கேல் அண்ணே சொன்னாங்க. அதான் ரெண்டு பேரும் உடனே கிளம்பி வந்துட்டோம் என்றார்.
அம்மாடி டீ போடு என்று கருப்பாயி கிட்ட சொல்ல வேண்டாங்கம்மா வரும் போது தான் குடிச்சிட்டு வந்தோம் என்று மறுத்து விட்டார்.
ருத்ரனுக்கு அவர்கள் இருவரிடமும் பேச சிறிதும் மனம் வரவில்லை ஒரு பார்வையாளராக அமைதியாக உட்கார்ந்திருந்தான்.
அம்மா குழந்தைகள் எங்கே என்று தேவி கேட்க இரண்டு பேரும் தூங்கிட்டு இருக்காங்கம்மா என்றார்.
தூங்கிட்டு இருக்காங்களா என்று முணவியர் அம்மா உள்ள போய் பார்க்கலாமா?.
இது என்னமா கேள்வி?
உன்னோட பேர பிள்ளைகளை நீ போய் பார்க்க அதுக்கு யாருடைய அனுமதி உனக்கு வேண்டும் என்று பாட்டி கேட்க ரொம்ப நன்றிங்கம்மா என்றவர் வேகமாக எழுந்து அங்கிருந்து உள்ளே சென்று பார்த்தவருக்கு இரண்டு குழந்தைகளும் தனது மகன் ருத்ரனுடைய குழந்தை பருவத்தை விஷாலா தேவிக்கு ஞாபகப்படுத்தினர்.
தன் மகனும் பிறந்த போது இவர்களைப் போல தானே இருந்தான்.முப்பது வருடங்களுக்கு பின்னர் அப்படியே மகனின் சாயலில் தனது பேர பிள்ளைகள் பிறந்திருப்பதை பார்த்தவருக்கு ஆனந்தத்தில் கண்கள் கலங்கியது.
சிறிது நொடிகள் சென்று உள்ளே வந்து குழந்தைகளை பார்த்த தனாவிற்கும் அதே எண்ணம் தான் தோன்றியது.