• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
501
பொள்ளாச்சி:

போட்டோவில் இருக்கும் தனது குடும்பத்தார்களையெல்லாம் சொல்லிய வள்ளி,பக்கத்தில் இருந்த வெற்றி- ஜனனியின் நிச்சயதார்த்த போட்டோவை காட்டியவர்,இது ஜனனி.

வெற்றிக்கு நிச்சயம் பண்ணியிருக்கும் பொண்ணு.இந்த வீட்டோட அடுத்த தலைமுறை மருகளென்றவர்,மற்ற அறைகளை சுற்றி காட்டி விட்டு தோட்டத்திற்கு அழைத்து போனவர்,இங்கயிருந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் உள்ள நிலங்கள் எல்லாம் நம்பளோடது தான்.

இந்த ஜாதி சாக்கடையை எங்க தாத்தா காலத்திலே ஒழிச்சி கட்டிட்டோம்.அண்ணன் வந்த பிறகு எல்லாரும் மனித இனம் என்ற ஒரே எண்ணம் தான்.

உங்க கிட்ட ஒன்னு சொல்லணுமென்க,சொல்லுமா என்றார் சிம்ஹன் தாத்தா.அது வந்துங்க மாமா என தயங்க,அம்மாடி வள்ளி உன் அண்ணனுக்கு நான் மாமனாரென்றால்,உனக்கும் மாமனார் தான் மா. நீ தயங்காமல் மாமா என்றே கூப்பிடலாமென்றார் சுந்தரபாண்டியன் தாத்தா.

ரொம்ப சந்தோஷங்க மாமா என்றவர்.அப்புறம் மாமா, தயவு செய்து என்னோட அண்ணியை இங்கையே விட்டுட்டு போங்க.இது அவங்க வாழ வேண்டிய வீடு. இந்த 17 வருஷமா,ஒரு நாள் கூட அண்ணிக்காக எங்கண்ணன் கோயில்ல பூஜை பண்ணாமல் இல்லை.

அதிர்ந்து ஒரு வார்த்தை எங்க அண்ணன் பேசாது.எது வேண்டுமானாலும் வாயை திறந்து கூட கேட்காது.அது கேட்பது என்று பார்த்தால் டீ மட்டும் தான்.

இத்தனை வருஷத்தில் என்னுடைய அண்ணன் முகத்தில் இவ்வளவு சந்தோஷத்தை நான் பார்த்ததில்லை.

இந்த சந்தோஷம் கடைசி வரைக்கும் என் அண்ணனோட இருக்கணுமென்று தன் மனதில் உள்ளதையெல்லாம் கண்ணீரோடு வள்ளி சொல்ல,அவரின் கையை பிடித்த கிரிஜா பாட்டி கவலை படாதே மா.உன் அண்ணியை உங்க கூடவே வச்சிக்கோ.எங்களுக்கொன்றும் வேண்டாமென்று சிரித்தார்.


கதறி அழும் மனைவியின் கண்ணீரை துடைத்த சத்தியமூர்த்தி,தாரா அப்போ அப்போ என்னும் வார்த்தையை முடிக்க முடியாமல் தடுமாற,ம்ம் சக்தி.

எக்ஸாம் முடித்து நான் கோயம்புத்தூருக்கு போகலை.உங்களுக்கு தான் தெரியுமே,எனக்கு கலெக்டர் ஆவது தான் பெரிய கனவென்று.

நான் கெஸ்ட்ஹவுஸிலே தங்கி படிச்சிட்டு இருந்தேன்.மூன்று மாதம் கடந்து போயிடுச்சி.

நமக்கு தெரிஞ்ச எல்லார்கிட்டையும் உன்னை பற்றி விசாரிக்க,யாருக்குமே உன்னை பற்றி சின்ன விஷயம் கூட தெரியவில்லை.

அப்போ தான் தேவ்ராஜ்- பிரியா இருவருக்கும்,வடபழனியில் கல்யாணம் ஏற்பாடு பண்ணிருந்தாங்கள்.

பிரியா படித்து முடித்ததால்,இனியும் தன்னை வளர்த்த மாமா வீட்டிற்கு பாரமாக இருக்க வேண்டாமென்று வேலைக்கு போக,அது தேவ்ராஜ்கு தெரிஞ்சி,உடனே இந்த முடிவு எடுத்துட்டான்.

அந்த கல்யாணத்திற்கு போய்ட்டு வரும் போது தான் எனக்கு தலை சுற்றுவது போலவும்,வாமிட் வரும் பீலிங்காவே இருந்தது.

கல்யாணத்திற்காக அதிகாலையிலே எழுந்து கிளம்பி போனதால் தான்,இப்படி இருக்கென்று நான் நினைத்தேன்.

வீட்டுக்கு வந்தால் வாமிட்.

சரி உணவு தான் ஏதோ சேரலைனு இருக்க,மறுநாளும் அதோ போல வாமிட் வந்ததும்,உடனே நான் பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிட்டலுக்கு போனேன்.

அங்கு போய் டாக்டர்கிட்ட விஷயத்தை சொல்ல,டெஸ்ட் எடுக்க எழுதி கொடுத்தாங்க.எதுக்கு டாக்டர் டெஸ்டென்று நான் கேட்க,கன்பார்ம் பண்ணதான் என்றாங்கள்.

அவங்கள் என்ன சொல்லுறாங்களென்று எனக்கு புரியலை.பட் டெஸ்ட் கொடுத்து முடிச்சிட்டு,பதினைந்து நிமிடம் வெய்ட் பண்ணிட்டு இருக்குப் போது,வசுந்தரா உங்களுடைய ரிப்போர்ட் ரெடினு கூப்பிட்டாங்கள்.

நானும் போய் வாங்கினேன்.ஆனால் பிரித்து பார்க்கவில்லை.பிறகு உள்ள போய் டாக்டர் கிட்ட கொடுக்க அவங்க படிச்சு பார்த்துட்டு மிஸஸ்னு கேட்க, மிஸஸ் வசுந்தரா சத்தியமூர்த்தியென்று சொன்னேன்.

கங்கிராட்ஸ் மா நீங்க கன்சிவா இருக்கீங்கன்னு சொன்னாங்க.என்னாஆ என்று எனக்கு அதிர்ச்சியாயிடுச்சு.

டாக்டர் நீங்க என்ன சொல்றீங்கன்னு? கேட்க,ஆமாமா.

நீங்க 3 மந்த் கன்சீவா இருக்கீங்களென்று சொல்ல,எனக்கு சந்தோசப்படுவதாக இல்லை அழுவதானே தெரியவில்லை சத்தி.


எப்படி இதை அப்பா அம்மா கிட்ட சொல்றதுன்னு எனக்கு பயம்.ஒரு பக்கம் உன்னை பற்றி எதுவும் தெரியலை.குழந்தையை கலைக்கவும் எனக்கு மனசு வரவில்லை.

எப்படியாவது உன்னை கண்டுபிடிச்சிடலாம்.நீ வந்திடுவாயென்று நம்பிக்கையோடு மேலும் இரண்டு மாதம்,நம்ப நண்பர்களை விட்டு உன்னை திருச்சியில் தேட சொன்னேன்.

அப்படியே நாட்கள் போக,வயிறும் கொஞ்சம் பெருசா ஆயிடுச்சு.நம்ம வீட்டுல சமையல் செய்தவங்க,என் மேல் டவுட் வந்து,அப்பா கிட்ட விஷயத்தை சொல்லிட்டாங்க.

அந்த நேரம்,அம்மா சிலரோடு புனித யாத்திரைக்கு போயிருக்க,அப்பாவும் கேள்விப்பட்ட உடனே கிளம்பி அங்க வந்துட்டாரு.

மறுநாள் காலையில் நான் தூங்கி எந்திரிச்சு வரும்போது பார்த்தேன்,அப்பா கால் மேல கால் போட்டு,ஹால்ல இருந்த சோபாவில் உட்கார்ந்திருக்கிறார்.

அவரை பார்த்ததும் கை காலெல்லாம் எனக்கு நடுங்க ஆரம்பிச்சிடுச்சு.இங்க வந்து உட்காரு வசுனு சொன்னாங்க.

நானும் கையை பிசைந்து கொண்டு, அவருடைய பக்கத்தில் இருந்த சோபாவிலா போய் உட்க்கார,பையன் யாரு?.அவனுடைய டீட்டைல்ஸ் சொல்லுனு கேட்டாங்க.

அவரோட அந்த அமைதியான நடவடிக்கை எனக்கு பயத்தை கொடுத்துடுச்சி.அப்பா இந்த குழந்தையை மட்டும் என்னால கலைக்க முடியாது.

அப்படி ஏதாச்சும் உங்க மனசுல எண்ணம் இருந்தாக்க நிச்சயமாக நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்பதை நான் அப்பாகிட்ட உறுதியா சொல்லிட்டேன்.

நீ என்ன பேசுறனு புரிஞ்சி தான் பேசுறியா வசு?.

எல்லாருக்கும் தெரிஞ்சால் என்ன நினைப்பாங்க?.நான் ஒரு கௌரவமான போலிஸ்.என் மகள் இப்படி ஒரு காரியம் பண்ணிட்டு வந்துருக்கியே உன்னை என்ன செய்யலாம் சொல்லு?.

அதுவும் இல்லாமல் குழந்தை உண்டாகி நான்கு மாதங்களுக்கு மேலானதால் அபார்ட் பண்ணினால்,இருவர் உயிருக்கும் ஆபத்தென்பதையும் வசு சொல்ல, சுந்தரபாண்டியனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

விஷயம் வெளியே தெரியிரதுக்கு முன்னால் அவன் கூடவே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்குறேனென்றார்.

உன் பேரு சத்யமூர்த்தி அப்பா பேரு சந்திரன் திருச்சியில் பாலக்கரை.இது தவிர,எனக்கு எதுவுமே தெரியாதென்று சொன்னேன்.

அப்பாவும் முடிஞ்ச அளவுக்கு விசாரிக்க, உன்னை பற்றி எதுவும் தெரியவில்லை.மாதமும் ஓடியது.

சதூர்வேதமங்கலம்:

மனைவியின் கேள்வியில் அவள் பக்கம் திரும்பி உட்கார்ந்தவன்,நிஜமாகவே என்னை பற்றி உனக்கு தெரியாதாடி? என பாவமாக கேட்டான்.

யோவ் நீ என்ன லூசா?இல்லை செவிடா?.அதை தானே இவ்ளோ நேரம் சொல்லிட்டு இருக்கேன் என்றாள் ஆர்கலி.

ஓ...நான் சொல்வதை விட உன் புருஷன் யாரு என்பதை,நீயே பார்த்து தெரிந்து கொள்ளுடியென்று மனதிற்குள் சொல்லியவன்,பின்னர் திரும்பி நேராக உட்கார்ந்து சீட்டில் சாய்ந்து கண்ணை மூடினான்.


கண்ணை மூடியிருந்தாலும்,ருத்ரனின் அகக்கண்கள் விழித்துக் கொண்டிருந்தது.இன்னும் இரண்டு நாட்கள் கோவில் விஷயத்தில் போய்விடும்.

அதன் பின்னர் என்ன பண்ணுவது என்று பிளான் பண்ணிக் கொண்டிருக்க,ஆர்கலியின் தலை அவனின் மேல் சாய்வதை உணர்ந்து கண்களை திறக்க,அவளோ நன்கு தூக்கத்தில் இருப்பது தெரிந்தது.

எட்டி ஜன்னல் கதவை சாத்தியவன்,சிறிது இடைவெளி மற்றும் விட்டு விட்டு,தனது வலது கையை தூக்கி சீட்டின் மேல் வைக்க,அவளோ இன்னும் வசதியாக அவனோடு ஒட்டிக் கொண்டாள்.

இவளுக்கு விழிப்பு வருவதற்குள் இந்த தருணத்தை ஃபோட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்றவாறு,தனது பாக்கெட்டில் இருந்த போனை எடுத்தவன்,விதவிதமாக புகைப்படம் எடுத்து தள்ளினான்.

மெல்லிசை பாடல்கள் ஒலிக்க, தன் மனங்கவர்ந்தவளின் அருகாமையும் ருத்ரனுக்கு காதலையும் ஆண்மகனாய் அவஸ்தையையும் வாரி வழங்க,படுபாவி இப்படி கொல்லுறாளே என்று ஆர்கலியின் கன்னத்தை வலிக்காமல் கிள்ளி முத்த மிட்டவனும்,கண்ணை மூடி சீட்டில் சாய்ந்து கொண்டான்.

நன்கு உறக்கத்தில் இருந்த ஆர்கலிக்கு எதிரில் வந்த பஸ் ஹாரன் சத்தத்தில் விழிப்பு வர,கண்ணை திறந்தவள்,தன் தோளின் மேல் உள்ள ருத்ரனின் கையை பார்த்தவள் முறைத்தபடி அவனை பார்க்க, அப்பொழுது தான் அவன் வலது கையின் மேல் தான் சாய்ந்து தூங்கி வந்தது புரிய,அய்யோஓஓ என்று நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

சிறிது நிமிடம் சென்று ஓரக்கண்ணால் ருத்ரனை பார்க்க,அவன் நன்கு தூக்கத்தில் இருப்பது தெரிந்தது.

ஹப்பாடா நல்ல வேளைடி ஆர்கலி இந்த மனுஷன் தூங்கிட்டு இருக்கிறார்.

நாம மட்டும் இந்த மனுஷன் மேல் சாய்ந்து தூங்கிட்டு வந்தது தெரிந்தது,இதுக்கும் ஒரு டீல் பேசுவான் கிராதகனென்று முணு முணுத்தவளுக்கு ரெஸ்ட் ரூம் போகணும் போல இருந்தது. அவளின் அசைவில் ருத்ரனுக்கு விழுப்பு வர,என்னாச்சிடி என்று பதறி கேட்க...

எதுக்கு இப்படி கத்துற?,எல்லாரும் தூங்கிட்டு தானே இருக்காங்களென்று சொல்லி ஆர்கலி முறைக்க,அண்ணா வண்டியை கொஞ்சம் ஓரமாக நிறுத்துங்களென்றான்.

சொல்லிருக்கேன் மாப்ளையென்று சங்கர் அங்கிருந்து குரல் கொடுத்தார்.

சிறிது நிமிடத்தில் ரோட்டோரமாய் இருந்த கஃபேவின் பார்க்கிங்கில் போய் டிராவலர் நிற்க,தூக்கத்தில் இருந்தவங்களும் எழுந்தனர்.

கீழ இறங்கியவர்களில் ரெஸ்ட் ரூம் போக வேண்டியவர்கள் எல்லாம் போயிட்டு வந்து சேர்த்தனர்.

பின்னர் அவர்களுக்கு தேவையானதை வாங்கி சூடாக குடித்து விட்டு அங்கிருந்து கிளம்ப அரை மணி நேரத்துக்கு மேல் தாமதமானது.

இந்த முறை ருத்ரன் சங்கரின் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள,அவன் வருவான் என்று காத்திருந்த ஆர்கலி,ருத்ரன் அங்கே உட்கார்ந்து விட்டதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

ருத்ரன் நினைத்ததோ சரி இரண்டு சீட்டாக இருந்தால்,தன்னவள் கால்களை கொஞ்சம் நீட்டி மடக்க வசதியாக இருக்கும் என்று எண்ணத்தில் தான் அவன்,முன்பக்கம் போய் உட்கார்ந்தது.

அண்ணா இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் நம்ம போய் ரீச் ஆக என்று கேட்க,தம்பி இன்னொரு அரை மணி நேரத்தில் பாம்பன் பாலம் போயிடலாம்.அங்கு கொஞ்ச நேரம் வண்டியை நிறுத்துறேன்.

நீங்கலாம் பாத்துட்டு வந்ததும் நாம கிளம்பிட வேண்டியது தான்.பாம்பன்ல இருந்து உள்ளார கோயில் இருக்கும் இடத்துக்கு போக,எப்படியும் 20 ல இருந்து 30 நிமிஷம் ஆகும்.

டிராபிக் இந்த நேரத்தில் அவ்வளவாக இருக்காது தம்பி.அதனால்,குறிப்பிட்ட நேரத்துக்கு நாம உள்ளே போய்டலாம் என்றார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
501
பொள்ளாச்சி:

அம்மா கிட்ட மட்டும் நான் டெல்லியில் கோச்சிங் போயிருப்பதாக சொல்லிட்டோம்.ஆனா,அதன் பிறகு கடந்த 23 வருஷமா அப்பா என் கிட்ட பேசவேயில்லை சத்தி.

மாதங்களும் கண்ணீரோடு ஓட,டெலிவரி நாளும் வர,சமையல்கார அம்மா தான் என்னை ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போனாங்கள்..

நேரமும் போக பெயின் வந்தது.குழந்தை பிறக்க நானும் மயங்கிட்டேன்.அதன் பிறகு சில மணி நேரம் சென்று கண்விழித்து பார்க்க,சமையல்கார அம்மா அங்க இருந்தாங்க.

அம்மா எங்கே குழந்தைனு கேட்க, அவங்க வாயை மூடி அழுதாங்கள்.அய்யோ அம்மா என் குழந்தைக்கு என்ன ஆச்சினு தயவு செய்து சொல்லுங்களென்று நான் பதற, குழந்தை இறந்தே பிறந்துச்சினு சொன்னதும்,அதை கேட்டு அதிர்ச்சியில் எனக்கு பிக்ஸ் வந்துடுச்சி.

அதன் பிறகு ஒரு வாரம் ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தேன்.வாழ்க்கையே எனக்கு சூனியமா ஆன போல ஆகிட்டு.

இனி நம் வாழ்க்கையில் எந்த சந்தோஷத்திற்கும் இடம் கொடுக்க கூடாதென்று முடிவோடு, இரவு பகலாக கண் விழித்து,படிப்பு மட்டுமே உலகமென்று ஆனேன்.

முதல் போஸ்டிங் எனக்கு பீகார்ல, மாதமும்,வருஷமாக ஓடியது.உன் மேல எனக்கு கொலை வெறியும் அதிகமானது.

அம்மா-அப்பா இருவரும் கல்யாணம் பண்ணிக்க சொல்லி ரொம்ப தொந்தரவு பண்ணிட்டே இருந்தாங்கள்.

நீ கட்டிய தாலி என்னோட இருக்கும் போது,எப்படி இன்னொருத்தரரை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியும்?. இங்கிருந்தால் தானே எனக்கு கல்யாணத்தை பத்தி பேசுவாங்கன்னு, முடிந்த அளவு போஸ்டிங்கை நார்த்திலேயே வாங்கிட்டு தங்கி இருந்தேன்.

நான் பீகார் இருந்த நேரத்தில்,மைக்கேல் அண்ணன் தான் இரண்டு முறை என்னை காப்பாற்றியது.

அங்கிருந்து ஆந்திராக்கு எனக்கு டிரான்ஸ்பர் ஆக,நான் காரில் வரும் பொழுது தான் மைக்கேல் அண்ணன் ரோட்டில் அடிபட்டு மயங்கி கிடப்பதை பார்த்தேன் என்ற வசு மைக்கேலை பற்றி அனைத்தையும் சொல்லி முடித்தார்.

இதோ இருபத்தி மூன்று வருஷங்கள் ஓட, ஒரு நாளு அப்பா என் கிட்ட பேசனுமென்று சொல்ல,என்ன விஷயமென்று நான் கேட்கும் பொழுது தாம்,நம்ப குழந்தை உயிரோட இருப்பதை சொன்னார்.

அதேக்கேட்டு நான் மயங்கிட்டேன்.பிறகு மயக்கம் தெளிந்து எழ,கோயம்புத்தூரில் இருக்கும் ஆஸ்ரமம் பற்றி சொன்னார்.

உடனே நானும் மைக்கேல் அண்ணாவும் கார் எடுத்துட்டு கோயம்புத்தூர்ல போய் விசாரிச்சா,அங்கே பாதர் இறந்துட்டாங்களென்று சொன்னாங்க.

அங்கு இருந்த இன்னொரு பாதர்,எனக்கு பாதர் ஒரு லெட்டர் எழுதி வைத்திருந்ததை கொடுத்தாங்க.நம்ம பொண்ண பற்றி அதில் எழுதி இருந்தது.

அதை எடுத்துக்கிட்டு நாங்க சென்னைக்கு போய் ரெண்டு நாளா தேடி அலையும் போது தான்,ரோட்ல ஒரு பொண்ணு மயங்கி கிடந்ததை பார்த்தோம்.அது நம்ம பொண்ணு என்பது தெரிஞ்சு,அந்த நிமிஷம் எனக்கு எப்படி இருந்திருக்கும்ஒ?.

இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் யாரு, விதியா?இல்ல நீ செய்த வேலையா? சொல்லு சத்தி சொல்லு?.

23 வருஷமா என் குழந்தைக்காக நான் அழாத நாள் இல்லை.என் முகத்தில் இருந்த சிரிப்பு தொலைஞ்சிடுச்சி.

அம்மா நான் உயிரோட இருக்கும் போது, என் பொண்ணு ஆசிரமத்தில் வளர்ந்திருக்காளே,இது எவ்வளவு வேதனை?

உங்க பொண்ணு பசியில மயங்கியிருங்காளென்று டாக்டர் சொன்ன போது,பெத்த வயிறு எப்படி துடிச்சிது தெரியுமா?

எந்த ஆதாரமும் இல்லாமல்,அவளுக்கு நான் அம்மான்னு எப்படி சொல்ல முடியும்?. இதை சொல்ல வேண்டியது என்னுடைய அப்பா.இல்லையென்றால் இறந்து போன பாதர்,அடுத்து நீ.இது மூணுத்துக்குமே வழியில்லையே..

ஒரு வழியா அவள் கிட்ட பேசி சமாதானம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போனேன். தலையெழுத்து பாரேன் நான் எப்படி அப்பன் யாருன்னு வெளியே காட்டிக்க முடியாமல் இருந்தனே,அதே போல தான் என் பொண்ணு வயித்து புள்ளையோட என்கிட்ட வந்து சேர்ந்தாள்.

அந்தப் பையனை பற்றி எந்த ஆதாரமும் அவகிட்ட இல்லை.ஆனா முறைப்படி கல்யாணம் ஆகி தான்,இந்த குழந்தை என் வயிற்றில் வளருதுங்க மேடம்,இது மட்டும் உறுதி என்று சொன்னாள்.

நான் பெற்ற மகளே,என்னை மூச்சிக்கு மூச்சு மேடம்னு கூப்பிடும் போது எத்தனை ஈட்டி என் நெஞ்சில் பாய்ந்திருக்குமென்று, உனக்கு தெரியுமா?சத்தியமூர்த்தி..

அதையும் பல்ல கடிச்சுக்கிட்டு பொறுத்துக்கிட்டு இருந்தேன்.காரணம் இப்போதைக்கு என் மகள் என் கூட இருக்காள். அவளுக்கு நல்லபடியாக பிரசவம் ஆகணும்.அதற்கு பிறகு அவளுக்கு தாலி கட்டுனது யாருன்னு கண்டுபிடிக்கணும்னு அமைதியாக இருந்தேன்.

என் பொண்ணு வீட்டிற்கு வந்து மூணு மாதம் போயிடிச்சி.நான் ஒரு மீட்டிங்கிற்காக டெல்லி போய்ட்டு வந்து பார்க்க,என் மகள் வீட்டிலிருந்து காணாமல் போய்ட்டாளென்று,எங்க அம்மா அழுது கொண்டே சொன்னாங்க.

அதிலிருந்து மூணு மாதம் அவளை தேடி மைக்கேல் அண்ணன் அலைஞ்சி கண்டுபிடிச்சி போக,எனக்கு குண்டு பட்டதும் பஞ்சாபிற்கு வந்துட்டாங்களென்றார்.

இதுவரை மனைவி சொல்வதையெல்லாம் அதிர்ச்சியும் கண்ணீரும் வழிந்தோட கேட்டவாறு உட்கார்ந்திருந்த சத்தியமூர்த்தி,என்ன தாரா சொல்ற?

உனக்கு குண்டு பட்டுருச்சா? என்று பதறினார்.பின்னர் அவரிடம் சிபிஐ வேலை பற்றியும்,பஞ்சாபில் நடந்த தாக்குதலை பற்றியும் சுருக்கமாக சொல்லி முடித்தார்.

பின்னர் தனது பெரியம்மா குடும்பம் வீட்டிற்கு வந்ததும்,பெரியம்மாவின் பேரன் தான் தன் மகளின் புருஷனென்பதை கேட்டு அதிர்ந்து போக, பிறகு தான் இருவருக்கும் என்ன வாக்குவாதம் நடந்ததென்று தெரியாமல், மகள் வீட்டை விட்டு போனதும்,அதற்கு ருத்ரனோ மகளின் நடத்தை சரியில்லை என்று வாய்க்கு வந்த போல பேசியதை கேட்டு,அவனை அறைந்ததையும் சொல்லும் போது வசுக்கு மேல் மூச்சு வாங்கியது.

ஹேய் தாரா என்னம்மா பண்ணுதென்க, முழுசா சொல்லிடுறேனென்று தன்னை இயல்பாக்கியவர்,தற்பொழுது மகளுக்கு வளையல்காப்பு என்றும்,அதற்காக தனது அம்மா,பெரியம்மா குடும்பத்தோடு ஊருக்கு சென்றிருந்ததையும்,பஞ்சாபில் இருந்து கேரளாவிற்கு வரும் போது தான், சென்னை ஏர்போர்ட்டில் பார்த்ததையும் சொல்லி முடித்த வசுந்தரா கதறி அழுதார்.

ராமேஸ்வரம்..

அதேப்போல் சில நிமிடத்தில் பாம்பன் பிரிட்ஜின் ஓரத்தில் வந்து டிராவலர் வேன் நிறுத்த,எல்லாரும் இறங்கி போய், இரண்டு பக்கமும் கடலை பார்த்து ரசித்து வர,அங்கேயே மேலும் கால் மணி நேரம் கடந்து சென்றது.

பின்னர் வண்டியில் ஏறியவர்கள் அரைமணி நேரத்தில் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

ருத்ரன் ஆன்லைனிலே ரூம் புக் பண்ணியதால்,ரும் வாசலிலே வந்து அவர்களை இறக்கி விட்ட டிரைவர், பார்க்கிங் ஏரியாவிற்கு செல்வதாக சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார்.

ரிசப்ஷனில் புக் பண்ணிய ரெசிப்டை காட்டி ரூம் சாவியை வாங்கிய பின், இரண்டாவது தளத்தில் ரூம் இருக்கென்று சொல்லி விட்டு,அங்கிருந்த லிப்டில் ஏறி எல்லாரும் மேலே வந்தனர்.

அவரவர் ரூமிற்கான கீயை கொடுத்தவன், ஆர்கலியை பார்க்க,அவளோ எனக்கென்னவென்று நின்றாள்.

உள்ளே வாயென்று கீயால் கதவை திறந்து உள்ளே சென்றவன்,நோ நோ...

ஒன் மினிட் நீ இங்கையே வெயிட் பண்ணு என்றவன்,மாமா மாமா என்று குரல் கொடுக்க,பக்கத்து ரூமில் இருந்த சங்கரும் வெளியே வந்தார்.

கொஞ்சம் உங்க தங்கச்சி அங்க கூட்டிட்டு போங்க மாமா என்றவன்,உள்ளே போய் கேமரா மற்றும் வேறு எதாவது வித்யாசமாக தெரிகின்றதா என,ரூம் முழுவதும் செக் பண்ணிவிட்டு பக்கத்து ரூமிற்கு வந்தவன்,வா என்க,வேறு வழியின்றி ஆர்கலியும் அவனோடு அந்த அறைக்குள் வந்தாள்.

சரி நீ முதல்ல போய் குளிச்சிட்டு வா. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கென்றவன்,பேகில் இருந்த லேப்டாப்பை எடுத்து மெத்தையில் உட்கார்ந்து கொண்டு,முதல் நாள் பாதியிலே விட்ட வேலையை தொடர்ந்தான்.

அவன் வேலையில் கவனமாய் இருப்பது தெரிந்து,தனது பேகிலிருந்து மாற்றுடையை எடுத்துக்கொண்டு ரெஸ்ட் ரூமிற்குள் சென்றவள்,குளித்து உடையை மாற்றி விட்டு,தனது நீண்ட முடியை துவட்டியபடி வெளியே வர, அங்கிருப்பவனை பார்த்து திக்கென்று இருந்தது.

ருத்ரனின் கட்டுகோப்பான உடல் சூரிய ஒளி பட்டு மின்ன,பால்கனியில் நின்று உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க,இது உள்ளே இருக்கும் கண்ணாடி வழியாக அவள் கண்ணில் பட்டது.

ம்கூம் இதுக்கு ஒன்னு தான் குறைச்சலென்று முணுமுணுத்தவாறு டிரஸிங் டேபிளுக்கு முன்பு வந்து நின்றவள்,ஈரம் போக தனது முடியை துவட்டி காய வைக்கும் போது,ருத்ரனின் செல்ஃபோனிற்கு கால் வர,அது டிரஸிங் டேபிளின் மேல் இருந்ததால்,ஆர்கலியும் பார்க்க,ஏஞ்சல் என்ற பெயரோடு, அழகான பெண்ணொருத்தி ஃபோன் டிஸ்பிளேவில் தெரிந்தாள்.

அதை பார்த்தவுடனே ஆர்கலிக்கு பொறாமை வந்தது.நம்ம கிட்ட வந்து அப்படி பேசினானே.நீ இல்லன்னா நான் இல்லை.எனக்கு குழந்தையும் நீயும் தான் முக்கியம்னா.

இப்ப எவளோ ஏஞ்சல் போன் பண்றாளே என்று முணு னமுணுக்க, பட்டென்று ஒரு நீண்டகாரம் ஒன்று போனை எடுக்க, ஆர்கலியும் திரும்பி பார்க்க,அவள் அருகில் நின்ற ருத்ரன் கால் அட்டென்ட் பண்ணி அங்கு சொன்ன செய்தியை கேட்டவன்,சரிடா அண்ணா நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி ஃபோனை வைத்தவன்,ரொம்ப பொறாமையா இருக்கு போல, ஆமாம் எனக்கு ஒரு டவுட். கோயம்புத்தூரில் பார்க்கும் பொழுது உனக்கு ஆட்டு வால் போல கொஞ்சோண்டு முடி தான் இருந்தது.

அதற்குள் எப்படி இவ்வளவு நீளமான முடியென்று கேட்க,அவன் சொன்ன ஆட்டுவாலை கேட்டு ஆர்கலி முறைக்க, உண்மைய சொன்னதற்கு இப்படி முறைக்குறாளென்று சொல்லிக் கொண்டே குளிக்க சென்றான்.

டேய் ருத்ரா உன் பொண்டாட்டி சீக்கிரம் மனசு மாறிடுவாடா.அவளுக்கு உன் மேல அன்பு காதல் எல்லாம் ஏகப்பட்டது இருக்கு.

ஏஞ்சல் பேர் பார்த்து அவள் மூஞ்சி போன போக்கு நல்லா புரிஞ்சுடுச்சு என்றவன், ரெஸ்ட் ரூம் குள்ளே குத்தாட்டம் போட்டு விட்டு,பின்னர் குளித்து முடித்து டவலோடா வெளியே வர,அய்யோ என்றபடி ஆர்கலி அதிர்ந்து திரும்பினாள்.

இவ ஒருத்தி,என்னமோ எதுவும் இல்லாமல் வந்த போல அய்யோ, நொய்யோனு..

ஊரு உலகத்தில் இருக்கும் பொண்டாட்டிங்க புருஷனை குழந்தை போல கவனிக்குறாங்க.

நம்ப தலையெழுத்து கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி தான் போல என புலம்பியபடியே ஒரு கையால் பேகை திறந்து தேவையான ஆடையை எடுக்க சிரமாக இருந்தது.பின்னர் இதில் எந்த டிரஸை போடலாமென்று யோசனை பண்ணினான்..

அதை பார்த்த ஆர்கலி,எதுவும் சொல்லாமல் அவன் கையிலிருந்து பேகை புடுங்கியவள்,என்ன எடுத்து வைக்கணுமென்க,ஹம் ரெண்டு மசாலா தோசை,ஒரு இட்லி,சூடா பிளாக் காஃபி ஒன்னு என்றான்.

பல்லை கடித்தவள் இது என்ன ஹோட்டலா? என்க,ஏண்டி அது தான் நல்லா தெரியுது இல்ல.

மனுஷன் இப்படி வந்து நிற்கிறானே போட்டுக்கொள்ள டிரஸ் தானே எடுத்து கொடுக்கணும் என்று ருத்ரன் கேட்க,ஆர்கலியோ எதுவும் பேசாமல், பேகின் உள்ளே இருந்ததை எடுத்து கட்டிலின் மேல் வைத்தவள்,நான் அண்ணன் ரூமிற்கு போறேனென்று சொல்லி விட்டு அங்கிருந்து வேகமாக சென்றாள்.

ஆர்கலியில் விழுந்தேன்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top