Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 499
- Thread Author
- #1
சதூர்வேதமங்கலம்:
பாதாம் பாலோடு ஆர்கலியும் எதிரில் உள்ள சேரில் வந்து உட்கார, மனைவியை ரசித்துக் கொண்டே பாட்டியிடம் ருத்ரனும் பேசிக் கொண்டிருந்தான்.
சிறிது நிமிடங்கள் அமைதியாக இருந்தவள்,இருவரும் பேச்சில் தீவிரமாக இருப்பதை பார்த்து,இவன் என்ன என்னோட பாட்டிக்கூட இவ்வளவு இயல்பா பேசுறான்.
அதானே பேச்சிலே மயக்கும் வித்தை தெரிஞ்சவன்.அப்போ பாட்டியும் பேரான்டினு இவனோட அன்பு வார்த்தையில் மயங்கிட்டாங்க.
நெவர்...!!
இவனை என் பாட்டி கூட பேச விடக்கூடாது என மனதிற்குள் சொல்லிக்கொண்டவள்,பாட்டி என்று இருவரின் பேச்சில் குறுக்கிட்டாள்.
சொல்லுடா ஆரா கண்ணு என்க,நைட் டிபன் என்ன சமைக்கவென்று கேட்டாள்.
அதுவா கண்ணு,ருத்ராக்கு புட்டும் கடலைகறியும் வேண்டுமாம் டா. கடலைஊற வச்சிட்டேன்,அது கூட தோசையும்,நேற்று அரைச்ச பூண்டு பொடி இருக்கு,அதையும் சாப்பிட்டுக்கலாம் என்றார்.
ஓஓஓ இந்த குரங்குக்கு புட்டு கேட்குதோ என தனக்குள் ஆர்கலி சொல்ல,உன் பொண்டாட்டி சமையல்ல டாப்பு ருத்ரா.
சும்மா கிள்ளி போட்டு ரசம் வைப்பா, தேவாமிர்தமா இருக்கும்.ருசியா சமைக்கும் பொண்டாட்டி கிடைக்க, நீ கொடுத்து வச்சிருக்க ருத்ரா என்று பாட்டி சொல்ல,வாவ்...
அப்போ இன்னைக்கு என் பொண்டாட்டி கை பக்குவத்தில் கடலை கறியும் புட்டும் வெளுத்து வாங்கலாம்.
ஹேய் சூப்பர் சூப்பர் இதுக்காகவே அவ கைக்கு இன்னொரு ஜோடி தங்கவளையலை வாங்கி போடலாமே என்று ருத்ரன் சொல்ல,ஆர்கலியால் ஒன்னும் சொல்ல முடியவில்லை.
அடக்கடவுளே இன்னைக்கு நாம தான் இவனுக்கு சமைச்சு கொடுக்கணுமா??
இப்படி நம்மை பாட்டி கோர்த்து விட்டுட்டாங்களே?
இது சாப்பாடு விஷயம். எந்த தில்லுமுல்லும் பண்ண முடியாது.சரி வேற வாய்ப்பு கிடைக்கும் அப்போ இவனை பழி வாங்கிடலாமென்று தனக்குள் சொல்லியபடியே தோட்டத்திற்கு சென்று,அங்கிருந்து மல்லிகை செடியில் இருந்த பூக்களை பறித்து உள்ளே எடுத்துட்டு வந்தவள், ப்ரிஜ் மேலிருந்த நூல் கண்டை எடுத்துக்கொண்டு,திண்ணையில் போய் உட்கார்ந்து பூவை கட்ட ஆரம்பித்தாள்.
சிறிது நிமிடம் சென்று கருப்பாயி அங்கு வர,என்ன அண்ணி இன்றைக்கு ரொம்ப பிசியா?காலைல இருந்து ஆளையே காணோமே? என்றாள் ஆர்கலி.
ஆமா ஆராமா. அம்மா வீடு வரைக்கும் போயிருந்தேன்.அங்க ஊர்ல இருந்து சிலர் பஸ் ஏற்பாடு பண்ணி ராமேஸ்வரம்,வேளாங்கண்ணினு கோயிலுக்கு போறாங்கலாம்.
அம்மாவும் பசங்களை கூப்பிட்டு போறாங்க.கை செலவுக்கு உங்கண்ணன் பணம் கொடுத்தாறு.
அதான் கொண்டு போய் குடுத்துட்டு,ராவுக்கும்,நாளை காலைக்கும் சாப்பிடுற போல, மூவருக்கும் சாப்பாடு கட்டி குடுத்துட்டு வந்தேன்மா என்றார்.
ஓஓஓ அப்படிங்களாணி, சரி சரி என்றவள், நாமளும் போயிருக்காலாமில்லை என்க,எது இந்த வயித்தோட அந்த கூட்டத்தில் நீ போகணுமா?.
பிரசவம் நல்ல படியாக முடியட்டும் ஆராமா.என் மருமக்களோட இந்த உலகத்தையே சுத்தி வந்துடலாமென்று கருப்பாயி சொல்ல,அதைக்கேட்டவளின் முகம் ஒரு நொடி சுருங்கி பின் இயல்பானது.
ஆமாணி, பின்ன அதை விட வேறு வேலையென்று சொன்னாலும், ஆர்கலியின் மனமோ,அவன் தான் ஒரு வருஷம் ஆன பிறகு குழந்தையை வாங்கிட்டு என்னை துரத்தி விட்டுறுவானே அண்ணி, பிறகு நான் இங்கு தான் வரணும்.
உங்க கூடயே கடைசி காலத்தை ஓட்டிருவேனென்று நினைத்தாள்.
இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டவாறு ருத்ரனும் பாட்டியும் வெளியே வந்தவர்கள்,அங்கிருந்த மற்றொரு திண்ணையில் உட்கார்ந்து கொண்டு,அப்படி எங்க போறதுக்கு ரெண்டு பேரும் பிளான் போடுறீங்கக்கா?என்றான்.
அவனிடமும் விஷயத்தை சொல்ல, இவ்வளவு தானா?,போய்ட்டா போச்சு என்றவன்,அப்போ நைட் நாமளும் கிளம்பலாமா?என்க...
ஆர்கலியோ இது என்ன விளையாட்டு என்று கேட்டு முறைத்தாள்.
ஏய் பார்பி டால் நான் நிஜமாகத்தான் கேட்குறேன்டி என்க,அப்படியா என்று சந்தோஷமாக கேட்டவள்,பின்னர் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டாள்.
பாட்டி, அக்கா,நீங்க சொல்லுங்க?, நாம கோயிலுக்கு போகலாமா இல்லை வேண்டாமா என்று கேட்டான்.
இருவருக்கும் என்ன சொல்வதென்று தெரியாமல் ஆர்கலியை பார்க்க, அவளை ஏன் பாக்குறீங்க?.
கேள்வி கேட்டது நான் தானே?,அப்போ எனக்கு தான் பதில் சொல்லணுமென்றான் ருத்ரன்.
அதற்கு பாட்டியோ,கோயிலுக்கு போக யார் கண்ணு வேண்டாமென்று சொல்லுவாங்க?.
உன் கை இப்படி இருக்கு?,ஆரா கண்ணுக்கு இன்னும் மூன்று வாரம் தான் இருக்கு பிரசவத்துக்கு,அதான் கண்ணு யோசனையென்றார்.
பொள்ளாச்சி:
தம்பி உங்ககிட்ட ஒன்று கேட்கணும்? என்று சைலஜா பாட்டி சொல்ல கேளுங்கம்மா?.உங்களுக்கு என்ன தெரியணும் என்றார் சத்தியமூர்த்தி.
மருமகன் அம்மா என்று சொன்னதிலேயே,சைலஜா பாட்டியின் மனசு குளிர்ந்து விட்டது.
இல்லை,வசுவை பார்க்க வந்தேன்னு பெரியவங்க எல்லாம் சொல்லிட்டு போனாங்களே.அவங்க எல்லாருக்கும் உங்க கல்யாணம் பற்றி தெரியுமா? என்று கேட்டார்.
ஊர்ல இருக்க பெரியவங்க எல்லாருக்கும் தெரியும்மா.நீ,நான்னு பொண்ணு குடுக்குறேன்று தாத்தா கிட்ட வந்து எல்லாரும் கேட்க ஆரம்பிச்ச உடனே,எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சுன்னு நானே சொல்லிட்டேன்.
தாத்தாவும் வசந்தராவோட போட்டோவ காமிச்சி,ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு.சின்ன குடும்ப பிரச்சினை.அதான் ரெண்டு பேரும் பிரிஞ்சி இருக்காங்கன்னு சொல்லிட்டாங்கம்மா என்றவாறு தங்கையிடம் திரும்பிய சத்தியமூர்த்தி,வள்ளி எல்லாருக்கும் மதிய சாப்பாடு என்க...
அண்ணா உனக்கு போன் பண்ணும் போதே,சமைக்கிறதுக்காக கண்ணகி அக்காவையும்,நீலாவையும் வர சொல்லிட்டேன்ணா.
தாரா உன் கிட்ட கொஞ்சம் பேசணுமென்று சத்தியமூர்த்தி சொல்ல,மற்றவர்களை வாங்க வீட்டை சுற்றி பார்க்கலாமென்று வள்ளி கூப்பிட்டு போனார்.
இப்பொழுது அந்த ஹாலில் வசுவும் சத்தியமூர்த்தி மட்டும் தான் எதிரெதிரில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தனர்.சிறிது நிமிடம் வரைக்கும் இருவரிடமும் எந்த பேச்சும் இல்லை.
வசுவே பேச்சை ஆரம்பித்தார்..உனக்கு என்ன நடந்தது என்று நான் சொல்லணும்,அவ்வளவுதானே நான் சொல்றேன்.
ஆனா இதை யாராச்சும் காதுல வாங்குனாக்க நம்மள பத்தி என்ன நினைப்பாங்க என்று சொல்லும் போது வசுந்தராவின் முகத்தில் வெட்கம் வந்தது.
அதை பார்த்துக்கொண்டிருந்த சத்தியமூர்த்திக்கு கடவுளே,ஏதோ ஏடாகூடமாக பண்ணி இருக்கோம் போலையே என்று முணு முணுத்தவர், சரி வா நம்ப ரூமுக்கு போகலாம் என்று அழைத்துப் போனார்.
பின்னர் அங்கிருந்து கதவை தாழிட்டு விட்டு உள்பிரகமாக இருந்த கதவை திறந்து உள்ளே போக,பின்னாடியே வந்த வசு அங்கு ஆளுயரத்தில் இருக்கும் தனது போட்டோவை பார்த்து விழி விரித்து அதிர்ந்து போய் நின்றார்!!.
மனைவியின் அதிர்ந்த முகத்தை திரும்பி பார்த்துக் கொண்டே,அவர் பின்புறம் வந்து நின்ற சத்தியமூர்த்தி, வசுந்தராவின் தோளோடு அணைத்துக் கொண்டு எப்படி இருக்கு தாரா? என்க,லவ் யூ சத்தி என்று அவர் தோளின் மேல் தலை சாய்த்து கொண்டு சொல்ல,லவ் யூ டூ தாரா என்றார்.
சிறிது நிமிடம் வரை இருவரும் அந்த நிலையை ரசித்தவர்கள்,சரி வா வா. நடந்ததை சொல்லு தாராயென்றபடி அங்கிருந்து சோபாவில்,இருவரும் அருகருகே இணைந்து உட்கார்ந்து கொண்டதும்,வசந்தராவும் சொல்ல தொடங்கினார்.
பிளாஷ்பேக்...
மெட்ராஸ் யுனிவர்சிட்டி...
எல்லாரும் வந்தாச்சா என்று ப்ரொபோசர் தீனதயாளன் மீண்டும் ஒருமுறை கேட்க,அங்கிருந்த பிரியா, சார் வசுந்தரா மட்டும் இன்னும் வரவில்லை என்று சொன்னாள்.
"என்னமா சொல்லுற?
இப்போ கிளம்பினால் தான் டிரைனை பிடிக்க சரியாக இருக்கும்.இல்லை இந்த டூர் கேன்சலென்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார்.
மாணவர்களோ மனதிற்குள் வசுவை திட்டிக்கொண்டிருக்க,சிறிது நிமிடத்தில் வசுவும் அரக்க பரக்க ஓடி வந்து சேர்ந்தாள். ஏம்மா வசுந்தரா கொஞ்சம் முன்னாடியே வருவதில்லையா என்று கேட்க,சாரி சார் என்றாள்.
இந்த சாரி ஒன்றை கத்து வச்சிக்கீங்க எல்லாருமே.சரி சரி சீக்கிரம் போய் பஸ்ல ஏறுங்க.ட்ரெயினுக்கு இன்னும் 20 நிமிஷம் தான் இருக்கு.
ஹெச்ஓடி வேற சத்தம் போட்டுட்டு இருக்காங்க என்றவர்,அப்பனே விநாயகா எல்லாரும் நல்லபடியாக போய்ட்டு வரணும்.
அதற்கு உன் கருணை வேண்டுமென்று சொன்னவர், அங்கிருந்த மற்ற பேராசிரியர்களிடம் சொல்லிக்கொண்டு பஸ்ஸில் ஏற, பஸ்ஸூம் சென்னை சென்ரல் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி சென்றது.
பாருங்க எல்லாரும் கவனமா இருங்க. எங்க போனாலும் ரெண்டு,இல்லை மூணு பேராக போங்க. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களையும் கவனிச்சிக்குங்க.ட்ரெயின்ல உங்களுக்கு ஏதாவது அன்னீசியாக இருந்துச்சுன்னா பக்கத்துல இருக்குறவங்கள எழுப்பி சொல்லணும் சரியா.
நமக்கு s4,s5கோச்.இந்த காலேஜ் லைப்ல இது உங்க எல்லாருக்கும் கடைசி வருஷம்.ஒவ்வொரு முறையும் இந்த மூன்றாவது வருஷம் மாணவர்கள் கூட டூர் போகும் போது,எனக்கும் புது அனுபவமா தான் இருக்கும்.
முதல் முறை போகும் போது எனக்கு கஷ்டமா இருந்துச்சு,இன்னும் ரெண்டு மாசத்தில் இவர்களை பிரிய போறோமேயென்று.பிறகு இந்த 20 வருஷ அனுபவத்தில் பழகிடுச்சு.
நல்ல என்ஜாய் பண்ணுங்க.எந்த பிரச்சினையா இருந்தாலும் உடனே சொல்லணும் என்று மீண்டும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு முறை தீனதயாளன் சொல்ல,மாணவர்கள் எல்லாரும் சேர்ந்து எஸ் சார் என்றனர்.
சிறிது நிமிடத்தில் ஸ்டேசனுக்கு வந்து சேர,அங்கே இவர்களுக்காக காத்திருந்தனர்,இவர்களோடு டூருக்கு வரும் பேராசிரியர் கவிதா, பவானி மற்றும் விஜயன்.
பின்னர் அவர்களுக்கான டிரைன் வந்ததும் ஏறி உள்ளே போய் அவர்களுக்கான சீட்டில் உட்கார்ந்தனர்.
வசுந்தரா, பிரியா, தேவ்ராஜ், பாபு, சத்தியமூர்த்தி, வசந்த் இவர்களுக்கு எதிரெதிராக பர்த் கிடைக்க, நண்பர்களுக்கு வசதியாக போனது.
சத்யா இதுதான் நல்ல வாய்ப்பு.இந்த முறையாவது வசு கிட்ட உன் காதலை சொல்லுடாயென்று நண்பனிடம் தேவ்ராஜ் சொல்ல, கண்டிப்பாக என்றான்.
"தயவு செய்து சொல்லித் தொலைடா மச்சான்".
கடந்த மூன்று வருடமாக இப்படித்தான் உயிரை வாங்கிட்டு இருக்குற.இப்படி தூரத்தில் இருந்து நீனும்,அவளும் பார்த்துக்கொண்டே இருந்தால் என்னடா அர்த்தம்?
இன்னும் ரெண்டு மாசத்துல நம்ப காலேஜ் லைப் முடிஞ்சிடும் சொல்லிட்டேனென்றவன்,தன் காதலியான பிரியாவோடு கண்ணால் பேச ஆரம்பித்தான்.
பாதாம் பாலோடு ஆர்கலியும் எதிரில் உள்ள சேரில் வந்து உட்கார, மனைவியை ரசித்துக் கொண்டே பாட்டியிடம் ருத்ரனும் பேசிக் கொண்டிருந்தான்.
சிறிது நிமிடங்கள் அமைதியாக இருந்தவள்,இருவரும் பேச்சில் தீவிரமாக இருப்பதை பார்த்து,இவன் என்ன என்னோட பாட்டிக்கூட இவ்வளவு இயல்பா பேசுறான்.
அதானே பேச்சிலே மயக்கும் வித்தை தெரிஞ்சவன்.அப்போ பாட்டியும் பேரான்டினு இவனோட அன்பு வார்த்தையில் மயங்கிட்டாங்க.
நெவர்...!!
இவனை என் பாட்டி கூட பேச விடக்கூடாது என மனதிற்குள் சொல்லிக்கொண்டவள்,பாட்டி என்று இருவரின் பேச்சில் குறுக்கிட்டாள்.
சொல்லுடா ஆரா கண்ணு என்க,நைட் டிபன் என்ன சமைக்கவென்று கேட்டாள்.
அதுவா கண்ணு,ருத்ராக்கு புட்டும் கடலைகறியும் வேண்டுமாம் டா. கடலைஊற வச்சிட்டேன்,அது கூட தோசையும்,நேற்று அரைச்ச பூண்டு பொடி இருக்கு,அதையும் சாப்பிட்டுக்கலாம் என்றார்.
ஓஓஓ இந்த குரங்குக்கு புட்டு கேட்குதோ என தனக்குள் ஆர்கலி சொல்ல,உன் பொண்டாட்டி சமையல்ல டாப்பு ருத்ரா.
சும்மா கிள்ளி போட்டு ரசம் வைப்பா, தேவாமிர்தமா இருக்கும்.ருசியா சமைக்கும் பொண்டாட்டி கிடைக்க, நீ கொடுத்து வச்சிருக்க ருத்ரா என்று பாட்டி சொல்ல,வாவ்...
அப்போ இன்னைக்கு என் பொண்டாட்டி கை பக்குவத்தில் கடலை கறியும் புட்டும் வெளுத்து வாங்கலாம்.
ஹேய் சூப்பர் சூப்பர் இதுக்காகவே அவ கைக்கு இன்னொரு ஜோடி தங்கவளையலை வாங்கி போடலாமே என்று ருத்ரன் சொல்ல,ஆர்கலியால் ஒன்னும் சொல்ல முடியவில்லை.
அடக்கடவுளே இன்னைக்கு நாம தான் இவனுக்கு சமைச்சு கொடுக்கணுமா??
இப்படி நம்மை பாட்டி கோர்த்து விட்டுட்டாங்களே?
இது சாப்பாடு விஷயம். எந்த தில்லுமுல்லும் பண்ண முடியாது.சரி வேற வாய்ப்பு கிடைக்கும் அப்போ இவனை பழி வாங்கிடலாமென்று தனக்குள் சொல்லியபடியே தோட்டத்திற்கு சென்று,அங்கிருந்து மல்லிகை செடியில் இருந்த பூக்களை பறித்து உள்ளே எடுத்துட்டு வந்தவள், ப்ரிஜ் மேலிருந்த நூல் கண்டை எடுத்துக்கொண்டு,திண்ணையில் போய் உட்கார்ந்து பூவை கட்ட ஆரம்பித்தாள்.
சிறிது நிமிடம் சென்று கருப்பாயி அங்கு வர,என்ன அண்ணி இன்றைக்கு ரொம்ப பிசியா?காலைல இருந்து ஆளையே காணோமே? என்றாள் ஆர்கலி.
ஆமா ஆராமா. அம்மா வீடு வரைக்கும் போயிருந்தேன்.அங்க ஊர்ல இருந்து சிலர் பஸ் ஏற்பாடு பண்ணி ராமேஸ்வரம்,வேளாங்கண்ணினு கோயிலுக்கு போறாங்கலாம்.
அம்மாவும் பசங்களை கூப்பிட்டு போறாங்க.கை செலவுக்கு உங்கண்ணன் பணம் கொடுத்தாறு.
அதான் கொண்டு போய் குடுத்துட்டு,ராவுக்கும்,நாளை காலைக்கும் சாப்பிடுற போல, மூவருக்கும் சாப்பாடு கட்டி குடுத்துட்டு வந்தேன்மா என்றார்.
ஓஓஓ அப்படிங்களாணி, சரி சரி என்றவள், நாமளும் போயிருக்காலாமில்லை என்க,எது இந்த வயித்தோட அந்த கூட்டத்தில் நீ போகணுமா?.
பிரசவம் நல்ல படியாக முடியட்டும் ஆராமா.என் மருமக்களோட இந்த உலகத்தையே சுத்தி வந்துடலாமென்று கருப்பாயி சொல்ல,அதைக்கேட்டவளின் முகம் ஒரு நொடி சுருங்கி பின் இயல்பானது.
ஆமாணி, பின்ன அதை விட வேறு வேலையென்று சொன்னாலும், ஆர்கலியின் மனமோ,அவன் தான் ஒரு வருஷம் ஆன பிறகு குழந்தையை வாங்கிட்டு என்னை துரத்தி விட்டுறுவானே அண்ணி, பிறகு நான் இங்கு தான் வரணும்.
உங்க கூடயே கடைசி காலத்தை ஓட்டிருவேனென்று நினைத்தாள்.
இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டவாறு ருத்ரனும் பாட்டியும் வெளியே வந்தவர்கள்,அங்கிருந்த மற்றொரு திண்ணையில் உட்கார்ந்து கொண்டு,அப்படி எங்க போறதுக்கு ரெண்டு பேரும் பிளான் போடுறீங்கக்கா?என்றான்.
அவனிடமும் விஷயத்தை சொல்ல, இவ்வளவு தானா?,போய்ட்டா போச்சு என்றவன்,அப்போ நைட் நாமளும் கிளம்பலாமா?என்க...
ஆர்கலியோ இது என்ன விளையாட்டு என்று கேட்டு முறைத்தாள்.
ஏய் பார்பி டால் நான் நிஜமாகத்தான் கேட்குறேன்டி என்க,அப்படியா என்று சந்தோஷமாக கேட்டவள்,பின்னர் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டாள்.
பாட்டி, அக்கா,நீங்க சொல்லுங்க?, நாம கோயிலுக்கு போகலாமா இல்லை வேண்டாமா என்று கேட்டான்.
இருவருக்கும் என்ன சொல்வதென்று தெரியாமல் ஆர்கலியை பார்க்க, அவளை ஏன் பாக்குறீங்க?.
கேள்வி கேட்டது நான் தானே?,அப்போ எனக்கு தான் பதில் சொல்லணுமென்றான் ருத்ரன்.
அதற்கு பாட்டியோ,கோயிலுக்கு போக யார் கண்ணு வேண்டாமென்று சொல்லுவாங்க?.
உன் கை இப்படி இருக்கு?,ஆரா கண்ணுக்கு இன்னும் மூன்று வாரம் தான் இருக்கு பிரசவத்துக்கு,அதான் கண்ணு யோசனையென்றார்.
பொள்ளாச்சி:
தம்பி உங்ககிட்ட ஒன்று கேட்கணும்? என்று சைலஜா பாட்டி சொல்ல கேளுங்கம்மா?.உங்களுக்கு என்ன தெரியணும் என்றார் சத்தியமூர்த்தி.
மருமகன் அம்மா என்று சொன்னதிலேயே,சைலஜா பாட்டியின் மனசு குளிர்ந்து விட்டது.
இல்லை,வசுவை பார்க்க வந்தேன்னு பெரியவங்க எல்லாம் சொல்லிட்டு போனாங்களே.அவங்க எல்லாருக்கும் உங்க கல்யாணம் பற்றி தெரியுமா? என்று கேட்டார்.
ஊர்ல இருக்க பெரியவங்க எல்லாருக்கும் தெரியும்மா.நீ,நான்னு பொண்ணு குடுக்குறேன்று தாத்தா கிட்ட வந்து எல்லாரும் கேட்க ஆரம்பிச்ச உடனே,எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சுன்னு நானே சொல்லிட்டேன்.
தாத்தாவும் வசந்தராவோட போட்டோவ காமிச்சி,ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு.சின்ன குடும்ப பிரச்சினை.அதான் ரெண்டு பேரும் பிரிஞ்சி இருக்காங்கன்னு சொல்லிட்டாங்கம்மா என்றவாறு தங்கையிடம் திரும்பிய சத்தியமூர்த்தி,வள்ளி எல்லாருக்கும் மதிய சாப்பாடு என்க...
அண்ணா உனக்கு போன் பண்ணும் போதே,சமைக்கிறதுக்காக கண்ணகி அக்காவையும்,நீலாவையும் வர சொல்லிட்டேன்ணா.
தாரா உன் கிட்ட கொஞ்சம் பேசணுமென்று சத்தியமூர்த்தி சொல்ல,மற்றவர்களை வாங்க வீட்டை சுற்றி பார்க்கலாமென்று வள்ளி கூப்பிட்டு போனார்.
இப்பொழுது அந்த ஹாலில் வசுவும் சத்தியமூர்த்தி மட்டும் தான் எதிரெதிரில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தனர்.சிறிது நிமிடம் வரைக்கும் இருவரிடமும் எந்த பேச்சும் இல்லை.
வசுவே பேச்சை ஆரம்பித்தார்..உனக்கு என்ன நடந்தது என்று நான் சொல்லணும்,அவ்வளவுதானே நான் சொல்றேன்.
ஆனா இதை யாராச்சும் காதுல வாங்குனாக்க நம்மள பத்தி என்ன நினைப்பாங்க என்று சொல்லும் போது வசுந்தராவின் முகத்தில் வெட்கம் வந்தது.
அதை பார்த்துக்கொண்டிருந்த சத்தியமூர்த்திக்கு கடவுளே,ஏதோ ஏடாகூடமாக பண்ணி இருக்கோம் போலையே என்று முணு முணுத்தவர், சரி வா நம்ப ரூமுக்கு போகலாம் என்று அழைத்துப் போனார்.
பின்னர் அங்கிருந்து கதவை தாழிட்டு விட்டு உள்பிரகமாக இருந்த கதவை திறந்து உள்ளே போக,பின்னாடியே வந்த வசு அங்கு ஆளுயரத்தில் இருக்கும் தனது போட்டோவை பார்த்து விழி விரித்து அதிர்ந்து போய் நின்றார்!!.
மனைவியின் அதிர்ந்த முகத்தை திரும்பி பார்த்துக் கொண்டே,அவர் பின்புறம் வந்து நின்ற சத்தியமூர்த்தி, வசுந்தராவின் தோளோடு அணைத்துக் கொண்டு எப்படி இருக்கு தாரா? என்க,லவ் யூ சத்தி என்று அவர் தோளின் மேல் தலை சாய்த்து கொண்டு சொல்ல,லவ் யூ டூ தாரா என்றார்.
சிறிது நிமிடம் வரை இருவரும் அந்த நிலையை ரசித்தவர்கள்,சரி வா வா. நடந்ததை சொல்லு தாராயென்றபடி அங்கிருந்து சோபாவில்,இருவரும் அருகருகே இணைந்து உட்கார்ந்து கொண்டதும்,வசந்தராவும் சொல்ல தொடங்கினார்.
பிளாஷ்பேக்...
மெட்ராஸ் யுனிவர்சிட்டி...
எல்லாரும் வந்தாச்சா என்று ப்ரொபோசர் தீனதயாளன் மீண்டும் ஒருமுறை கேட்க,அங்கிருந்த பிரியா, சார் வசுந்தரா மட்டும் இன்னும் வரவில்லை என்று சொன்னாள்.
"என்னமா சொல்லுற?
இப்போ கிளம்பினால் தான் டிரைனை பிடிக்க சரியாக இருக்கும்.இல்லை இந்த டூர் கேன்சலென்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார்.
மாணவர்களோ மனதிற்குள் வசுவை திட்டிக்கொண்டிருக்க,சிறிது நிமிடத்தில் வசுவும் அரக்க பரக்க ஓடி வந்து சேர்ந்தாள். ஏம்மா வசுந்தரா கொஞ்சம் முன்னாடியே வருவதில்லையா என்று கேட்க,சாரி சார் என்றாள்.
இந்த சாரி ஒன்றை கத்து வச்சிக்கீங்க எல்லாருமே.சரி சரி சீக்கிரம் போய் பஸ்ல ஏறுங்க.ட்ரெயினுக்கு இன்னும் 20 நிமிஷம் தான் இருக்கு.
ஹெச்ஓடி வேற சத்தம் போட்டுட்டு இருக்காங்க என்றவர்,அப்பனே விநாயகா எல்லாரும் நல்லபடியாக போய்ட்டு வரணும்.
அதற்கு உன் கருணை வேண்டுமென்று சொன்னவர், அங்கிருந்த மற்ற பேராசிரியர்களிடம் சொல்லிக்கொண்டு பஸ்ஸில் ஏற, பஸ்ஸூம் சென்னை சென்ரல் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி சென்றது.
பாருங்க எல்லாரும் கவனமா இருங்க. எங்க போனாலும் ரெண்டு,இல்லை மூணு பேராக போங்க. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களையும் கவனிச்சிக்குங்க.ட்ரெயின்ல உங்களுக்கு ஏதாவது அன்னீசியாக இருந்துச்சுன்னா பக்கத்துல இருக்குறவங்கள எழுப்பி சொல்லணும் சரியா.
நமக்கு s4,s5கோச்.இந்த காலேஜ் லைப்ல இது உங்க எல்லாருக்கும் கடைசி வருஷம்.ஒவ்வொரு முறையும் இந்த மூன்றாவது வருஷம் மாணவர்கள் கூட டூர் போகும் போது,எனக்கும் புது அனுபவமா தான் இருக்கும்.
முதல் முறை போகும் போது எனக்கு கஷ்டமா இருந்துச்சு,இன்னும் ரெண்டு மாசத்தில் இவர்களை பிரிய போறோமேயென்று.பிறகு இந்த 20 வருஷ அனுபவத்தில் பழகிடுச்சு.
நல்ல என்ஜாய் பண்ணுங்க.எந்த பிரச்சினையா இருந்தாலும் உடனே சொல்லணும் என்று மீண்டும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு முறை தீனதயாளன் சொல்ல,மாணவர்கள் எல்லாரும் சேர்ந்து எஸ் சார் என்றனர்.
சிறிது நிமிடத்தில் ஸ்டேசனுக்கு வந்து சேர,அங்கே இவர்களுக்காக காத்திருந்தனர்,இவர்களோடு டூருக்கு வரும் பேராசிரியர் கவிதா, பவானி மற்றும் விஜயன்.
பின்னர் அவர்களுக்கான டிரைன் வந்ததும் ஏறி உள்ளே போய் அவர்களுக்கான சீட்டில் உட்கார்ந்தனர்.
வசுந்தரா, பிரியா, தேவ்ராஜ், பாபு, சத்தியமூர்த்தி, வசந்த் இவர்களுக்கு எதிரெதிராக பர்த் கிடைக்க, நண்பர்களுக்கு வசதியாக போனது.
சத்யா இதுதான் நல்ல வாய்ப்பு.இந்த முறையாவது வசு கிட்ட உன் காதலை சொல்லுடாயென்று நண்பனிடம் தேவ்ராஜ் சொல்ல, கண்டிப்பாக என்றான்.
"தயவு செய்து சொல்லித் தொலைடா மச்சான்".
கடந்த மூன்று வருடமாக இப்படித்தான் உயிரை வாங்கிட்டு இருக்குற.இப்படி தூரத்தில் இருந்து நீனும்,அவளும் பார்த்துக்கொண்டே இருந்தால் என்னடா அர்த்தம்?
இன்னும் ரெண்டு மாசத்துல நம்ப காலேஜ் லைப் முடிஞ்சிடும் சொல்லிட்டேனென்றவன்,தன் காதலியான பிரியாவோடு கண்ணால் பேச ஆரம்பித்தான்.