Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 499
- Thread Author
- #1
பொள்ளாச்சி:
அது வந்து தாத்தா,அம்மாவும் அப்பாவும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதால்,நீங்க அவர்களை ஏத்துக்காமல்,வீட்டை விட்டு அனுப்பிட்டீங்கன்னு சொன்னாங்க. அதோட உங்க போட்டோ ஒன்னு வீட்ல இருக்கு.அத வச்சு தான் எனக்கு தெரியும் நீங்க தான் தாத்தா என்று வேற எதுமே சொல்லவில்லை என்றார்.
சத்யா சொன்னதை கேட்ட பெரியவர் உன் அம்மா சகுந்தலா யாரு தெரியுமா? நம்ம வீட்டில் வேலை செய்த வேணுகோபாலுடைய தங்கச்சி தான் சகுந்தலா.
உன்னோட பெரியப்பா இந்திரனுக்கு குழந்தை பிறந்திருக்க,நாங்களாம் ஹாஸ்பிடலுக்கு போயிருக்கும் போது தான்,உன் அப்பா சந்திரனும் சகுந்தலாவும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. சாயந்திரம் வீட்டுக்கு வந்த போது தான் விஷயம் கேள்விப்பட்டேன்.
அந்த காலத்தில் ஜாதி பார்த்து தான் பழகுவாங்க.எங்க குடும்பமும் பரம்பரை பரம்பரையா அந்த ஜாதி வெறியிலே வளர்ந்தது தான். நான் படிச்சு வேலைக்கு போன பிறகு தான் இதெல்லாம் தவறுன்னு எனக்கு தோணுச்சு.
குடும்பம் குலம் கோத்திரம்னு இருக்கும் போது உனக்காக அது எல்லாம் இழக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க.எனக்கும் அவங்க ரத்தம் தானே ஓடுது.பின்ன நானும் அப்படித்தானே இருப்பேன். பொண்ணு யாருன்னு தெரிஞ்ச பிறகு,எனக்கு ஜாதி முதல்ல ஞாபகத்திற்கு வந்தது.
நம்ம வீட்டுல வேலை செய்றவங்க பொண்ண போய் எப்படி மருமகளா ஏத்துக்க முடியும் என்று,சொந்தபந்தம் எல்லாம் என்கிட்ட கேட்டாங்க அது இல்லாம,ஊருக்கே பஞ்சாயத்து பண்றவன் நானு.இத நான் எப்படி ஏத்துப்பேன்.
அன்னைக்கு சாயந்திரமே கல்யாணம் பண்ணிட்டு ரெண்டு பேரும் வாசலுக்கு வந்து நிற்க,இனி அப்பா புள்ள எந்த உறவும் கிடையாது. என் முகத்தில் முழிக்க கூடாதுன்னு சொல்லி வீட்டை விட்டுவிட்டு அனுப்பிட்டேன்.
இருவரும் எங்க போனாங்களென்று எதுவுமே எனக்கு தெரியாது.நானும் அவங்களை தேடவும் இல்லை.
வருஷமும் ஓடி போய்ட்டு.உன் பெரியப்பா பையன் சரவணனுக்கு கல்யாணம் முடிந்து வெற்றியும் பிறந்தான்.
வெற்றிக்கு ஒரு வயசு ஆனது.
அப்போ வெற்றியோட நான் வயலுக்கு போய்ட்டு வீட்டிக்கு வர,வீட்டு வாசல்ல ஒரே அழுகை சத்தம்.
என்னாச்சினு பதறி போய் நான் பார்க்க,என் மனைவி,மகன், மருமகள்,பேரன் சரவணன்,அவன் பொண்டாட்டி எல்லாருமே செத்து கிடந்தாங்க.
என்ன நடக்குதுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல.இடிஞ்சு போய் நான் உட்கார்ந்திருக்கும் போது,கணக்குபிள்ளை வேணுகோபால் வந்து சொன்னாரு.
ஐயா சாப்பிடுற சாப்பாட்டுல விஷம் கலந்துருக்குங்க.இதை சாப்பிட்ட பிறகு தான்,எல்லாருமே இறந்திருக்காங்கன்னு சொன்னாரு.
யார் இந்த வேலை செஞ்சாங்கணு விசாரிக்கும் போது தான்,நம்ம ஊருக்கு தோல் தொழிற்சாலை வேண்டாமென்றும் அதால் மக்களுக்கும்,சுற்றுச்சூழலை பாதிக்குமென்று அரசாங்கத்துக்கு நான் லட்டர் போட்டு தடுத்ததால், அவன் தான் ஆளு வச்சி சாப்பாட்டில் விஷத்தை கலந்துருக்கான்னு தெரிஞ்சது.
பிறகு போலீஸ்ல கேஸ் போட்டு,வருஷம் ஓடியது.தீர்ப்பு நம்ப பக்கம் சாதகமாக வந்தது.அவனுக்கு கொலை குற்றத்திற்காக சாகும் வரை ஆயுள் தண்டனை கொடுத்தாங்க.
அப்போ தான் வள்ளி பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்து இருந்தது.சரி பிள்ளைய காலேஜ் சேக்கலாம், தூரத்தில் இருந்தால் பாதுகாப்பா இருக்குமென்று,தெரிஞ்சவங்க மூலமா சென்னையில் காலேஜ் சேர்க்க நாங்க வந்துட்டு இருந்தோம்.அப்போ மகாபலிபுரத்துகிட்டு ஆக்சிடெண்ட் ஒன்னு நடந்திருப்பது தெரிஞ்சது.
நாங்க இறங்கி போய் பார்க்கும் போது,ரோட்டோரமா குப்புற கிடந்த உன்னை தான் முதல்ல பார்த்தோம்.
தலையில் அடிபட்டு ரத்தம் வழிச்சி ஓடிட்டு இருந்தது.அய்யோனு உன்னை தூக்கும் போது ஆம்புலன்ஸூம் அங்கு வந்தது.
அடிபட்ட எல்லாரையும் அதில் ஏத்திட்டு போனாங்க.உன்னையும் அதுல ஏத்திட்டு போகும் போது,உன் பாக்கெட்ல இருந்து பர்சு ஒன்று கீழே விழுந்தது. அதை எடுத்துப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியா இருந்தது.அதில் இருந்த போட்டோவில் என் பையன் சந்திரன், சகுந்தலா நீ,என மூணு பேரும் இருந்தீங்க.
நீ என்னோட பேரனென்று எனக்கு தெரிஞ்சது. அதோட நீ கோமாக்கு போய்ட்டான்னு டாக்டர் சொன்னாங்கஅந்த பர்சில் தந்தி வந்த ரசிது ஒன்னு இருந்துச்சு.
சகுந்தலாவுக்கு ரொம்ப உடம்பு முடியாம இருக்கதால் உன்னை வர சொல்லின்னு,அந்த அட்ரஸை வச்சுக்கிட்டு நானும் இந்த ரெண்டு பசங்களையும் கூப்பிட்டு,கணக்கு புள்ளை வேணு கூட திருச்சிக்கு போய் பார்த்தா,சகுந்தலாவும் அங்க உயிரோட இல்லை.
ஆளுங்களை வைத்து சகுந்தலாவை அடக்கம் பண்ணிட்டு,அங்க இருந்த கொஞ்சம் பொருட்களையெல்லா நம்ம வீட்டுக்கு எடுத்துட்டு வந்து வச்சுட்டேன்.
உனக்கு எப்ப வேணாலும் ஞாபகம் வரலாம்.இல்ல ஞாபகம் வராமலும் போகலாம்னு டாக்டர் சொல்லிட்டார். பிறகு அங்கு இருக்கிறவங்க கிட்ட பேசி கோயம்புத்தூருக்கு கொண்டுட்டு வந்தேன்.
நாலு வருஷமா குணாளன் தான் உனக்கு வைத்தியம் பார்த்தது.வேணுகோபல் நல்லவர். அவருக்கு தெரியாம நடந்த விஷயம் இது.அதனால் அவரை என்னால் தள்ளி வைக்க முடியலை.
அவரோட கணக்குபிள்ளை வேலைய அவர் பையன் மாரியப்பன் தான் பாக்குறார்.இவ்வளவுதான்ப்பா என்று சத்தியமூர்த்தி கவுண்டர் சொல்லி முடித்தார்.
தாத்தா சொன்னதை எல்லாம் கேட்ட சத்தியமூர்த்திக்கு,தனது அம்மாவின் ஞாபகம் வர அம்மா என்று கதறி அழுதார்.
சத்யா என் பையன் சந்திரனுக்கு என்னையா ஆச்சு?நாங்க போயிருக்கும் போது என் புள்ள போட்டோவுக்கு மாலை போட்டிருந்ததுய்யா என்று பெரியவரும் அழுது கொண்டே கேட்டார்.
நான் 12 படிக்கும் போது அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து அதுல இறந்துட்டாங்க.அதன் பிறகு அம்மா தான் ஜவுளி கடைக்கு போய் குடும்பத்தை பார்த்துக் கொண்டாங்க.
12த்ல நான் நல்ல மார்க் எடுக்க எனக்கு சென்னையில் ஃப்ரீயா சீட்டு கிடைத்தது.அவ்வளவு தூரம் நான் போய் படிக்கணுமாயென்று அம்மாகிட்ட கேட்கும் போது,வெளி உலகத்தையும் நீ தெரிஞ்சிக்கணும்.
அம்மா கைக்குள்ளே வளர வேண்டாம்னு அனுப்பி வச்சாங்க. இவ்ளோ தான் தாத்தா எனக்கு ஞாபகம் இருக்கு என்றார்.
சரி பரவால்ல விடு.இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்றார் டாக்டர் குணாளன்.
சில வருடங்களும் கடந்து சென்றது. வெற்றி அப்பொழுது ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். வள்ளியம்மை காலேஜ் படிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு முழு நேரமும் வீட்டு பொறுப்பை பார்க்க ஆரம்பித்தார்.
அப்பொழுது ஒரு நாள் படுத்துக் கொண்டிருந்த சத்தியமூர்த்திக்கு, யாருக்கோ தாலி கட்டுவது போல் நிழல் படமாக தெரிந்து,திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார்.
அவ்வப்போது இதைப் போல ஞாபகங்கள் வரும்.அதை ஓவியமாக வரைந்து வைக்க ஆரம்பித்தார். தாத்தாவிடமும் அந்த கனவில் வந்ததைப் பற்றி சொல்ல மறக்கவில்லை.
வெற்றி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது,வயது மூப்பின் காரணமாக சத்தியமூர்த்தி கவுண்டரும் இந்த உலகத்தை விட்டு சென்றார். பிறகு மொத்த பொறுப்பும் சத்தியமூர்த்திக்கு வந்து சேர்ந்தது.
வள்ளிக்கு கல்யாணம் பண்ண மாப்பிள்ளை பார்க்க, வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்து விட்டார். ஒருநாள் வீட்டில் பின்பக்கம் இருக்கும் அறைக்கு சென்றவர்,தாத்தாவின் பொருள் ஒன்றை தேடும் போது,சில மூட்டைகள் அங்கு இருப்பதை பார்த்து, இது என்னவென்று திறந்து பார்த்தார்.
முதல் இரண்டு மூட்டைகளில் பாத்திரங்கள் இருக்க,அடுத்த மூட்டையை திறந்து பார்க்க,அதில் புத்தகங்களும்,சில போட்டோக்களும் இருந்தது.
போட்டோக்களை பார்த்துக் கொண்டே வரும் போது,அதில் கல்லூரியில் படித்த போது எடுத்த போட்டோக்கள் இருந்தது.
அதில் யார் முகமாவது ஞாபகம் வருதா என்று பார்த்துக் கொண்டே வந்தவருக்கு,சிலர் முகங்கள் மட்டும் நிழலை போல் வந்தது.
அடுத்த போட்டோவை பார்க்க, அதிலிருந்த ஒரு பெண்ணை பார்க்கும் போது,தாரா என்று முணுமுணுத்தார். இப்ப நான் என்னன்னு சொன்னேன் என்று சத்தியமூர்த்தி யோசிக்கும் போது தான்,சில நினைவுகள் அவருக்கு வரத்தொடங்கியது.
சிறிது நிமிடம் கண்ணை மூடி யோசித்தவர் தேவா தேவா தேவா தேவராஜ்,பிரியா,என்னுடைய தாரா வசுந்தரா,பாபு,வினோத் என்றார்.
சதூர்வேதமங்கலம்:
தங்க குட்டிக்கு பசி தீர்ந்துவிட்டதா என்று, வயிற்றில் தனது விரல்கள் வைத்து தடவி கேட்க,அவளுக்கோ அவன் விரல்கள் பட்டு உடல் சிலிர்த்தது.
என்ன பண்ணுகிறாய் என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்டாள்.ஏன் உனக்கு கண்ணு தெரியாதா?
என் பிள்ளை கிட்ட பேசிட்டு இருக்கேன்னு உனக்கு தெரியுது இல்ல.பின்ன,என்ன பண்றேன் நொண்ண பண்றேன்னு கேள்வி கேட்டுட்டு இருக்க.
கம்முனு இருடி.உன்ன ஒன்னும் நான் பண்ணவில்லை என்றவன், பொறாமை புடிச்சவள்,உன்கிட்ட என்ன பேச விட மாட்டேங்குறாள் தங்கமென்று சொல்ல,ஆர்கலியே பல்லை நர நரவென்று கடித்தாள்.
படுபாவி இப்படி என்னை படுத்தி வைக்கிறானே?
இவனுக்கு தான் கூச்சநாச்சம் ஒன்னும் இருக்காது.இவனைப் போல நாம என்ன கல்லா இல்ல மண்ணா?
டேய் ரொம்ப சோதிக்காதடா என்று முணு முணுக்க,சோதனை தான் என்ன செய்யடி பார்பி பொண்டாட்டி.
உன்னை யாருடி என் கண்ணில் பட சொன்னா?
கியூட்டா,பார்பிடால் போல வந்து மோதுன பாரு,யப்பாஆஆஆஆ, சின்ன பொண்ணு இடிச்ச போலவா இருந்தது என கண்ணடித்து ருத்ரன் சொல்ல,ஆர்கலிக்கும் அந்த நாளை நினைத்து வெட்கமாக வந்ததும், முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு மௌனமாக சிரித்தாள்.
ஆனா பாப்பா,சத்தியமா நினைக்கலடி அந்த நிமிஷமே நான் பிளாட் ஆகுவேனென்று ருத்ரன் சொல்ல,என்ன பாப்பாவா என்றாள்.
நான் என்ன பால்வாடி பாப்பா போலவா இருந்தேனென்று ஆர்கலி மூக்கு விடைக்க கேட்க,ஆமாண்டி...
"குட்டியா பாப்பா போல க்யூட்டா இருந்தடி"என்று,அவள் கன்னத்தை பிடித்து ஆட்டிக்கொண்டே சொல்ல, அவளோ கணவனின் தீண்டல்கள் ஏற்படுத்தும் கிரக்கத்தை மறைக்க முடியாமல் திணறிப்போனாள்.
ஐயோ இந்த ஒரு நாளுக்கே இவ்வளவு பாடுபடுத்துறானே இந்த ஒரு வருஷம் எப்படி போகுமோயென்று நினைத்தவளுக்கு,உள்ளுக்குள் ஒரு பக்கம் வலித்தது.
உண்மையிலேயே ஒரு வருஷமானதும் நம்மளை வீட்டு விட்டு அனுப்பி விடுவானா?,இல்லை அனுப்ப மாட்டானா?என நினைக்க, மனசோ அனுப்பமாட்டான் என்றும், அறிவோ அவன் சொன்னதை செய்பவன்.
"சோ,கண்டிப்பாக உன்னை அனுப்பிடுவானென்று சொல்லியது"
அவள் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தவன்,என்ன யோசிக்கிறாள்? கோவப்பட்டு அடிச்சிடுவாளா?
செய்ற ஆளு தான் இவள். அன்றைக்கு கன்னத்திலே விட்டாளே. எப்பாஆஆ...
ஆள பாக்க ஒல்லியா இருக்கிறாள். அடிச்சா பலமா வலிக்குதென்று தனது கன்னத்தை தடவியவன்,ருத்ரா கொஞ்சம் அடக்கி வாசி டா .
ரொம்ப ஓவரா தான் போற.இது எல்லாம் நல்லதுக்கு இல்லை என்று சொல்லிக் கொண்டவன்,சரிடா தங்கம் நீங்க ரெஸ்ட் எடுங்க.
அப்பாவும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேனென்று அங்கிருந்து எழுந்தவன்,தள்ளி படுடி என்று சொல்லி விட்டு,ஆர்கலியின் பக்கத்திலேயே கட்டிலில் படுத்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டான்.
அதான் இவ்வளவு இடம் இருக்கே, அங்க போய் படுக்க வேண்டியது தானே என்று ஆர்கலி கேட்க,அதற்கு ருத்ரனோ ஓஓ எஸ்.இப்ப தான் ஞாபகம் வந்தது என்றவன்,அவள் வயிற்றின் மேல் தனது இடது கையை வைத்துக் கொண்டு திரும்பிப் படுத்தான்.
அது வந்து தாத்தா,அம்மாவும் அப்பாவும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதால்,நீங்க அவர்களை ஏத்துக்காமல்,வீட்டை விட்டு அனுப்பிட்டீங்கன்னு சொன்னாங்க. அதோட உங்க போட்டோ ஒன்னு வீட்ல இருக்கு.அத வச்சு தான் எனக்கு தெரியும் நீங்க தான் தாத்தா என்று வேற எதுமே சொல்லவில்லை என்றார்.
சத்யா சொன்னதை கேட்ட பெரியவர் உன் அம்மா சகுந்தலா யாரு தெரியுமா? நம்ம வீட்டில் வேலை செய்த வேணுகோபாலுடைய தங்கச்சி தான் சகுந்தலா.
உன்னோட பெரியப்பா இந்திரனுக்கு குழந்தை பிறந்திருக்க,நாங்களாம் ஹாஸ்பிடலுக்கு போயிருக்கும் போது தான்,உன் அப்பா சந்திரனும் சகுந்தலாவும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. சாயந்திரம் வீட்டுக்கு வந்த போது தான் விஷயம் கேள்விப்பட்டேன்.
அந்த காலத்தில் ஜாதி பார்த்து தான் பழகுவாங்க.எங்க குடும்பமும் பரம்பரை பரம்பரையா அந்த ஜாதி வெறியிலே வளர்ந்தது தான். நான் படிச்சு வேலைக்கு போன பிறகு தான் இதெல்லாம் தவறுன்னு எனக்கு தோணுச்சு.
குடும்பம் குலம் கோத்திரம்னு இருக்கும் போது உனக்காக அது எல்லாம் இழக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க.எனக்கும் அவங்க ரத்தம் தானே ஓடுது.பின்ன நானும் அப்படித்தானே இருப்பேன். பொண்ணு யாருன்னு தெரிஞ்ச பிறகு,எனக்கு ஜாதி முதல்ல ஞாபகத்திற்கு வந்தது.
நம்ம வீட்டுல வேலை செய்றவங்க பொண்ண போய் எப்படி மருமகளா ஏத்துக்க முடியும் என்று,சொந்தபந்தம் எல்லாம் என்கிட்ட கேட்டாங்க அது இல்லாம,ஊருக்கே பஞ்சாயத்து பண்றவன் நானு.இத நான் எப்படி ஏத்துப்பேன்.
அன்னைக்கு சாயந்திரமே கல்யாணம் பண்ணிட்டு ரெண்டு பேரும் வாசலுக்கு வந்து நிற்க,இனி அப்பா புள்ள எந்த உறவும் கிடையாது. என் முகத்தில் முழிக்க கூடாதுன்னு சொல்லி வீட்டை விட்டுவிட்டு அனுப்பிட்டேன்.
இருவரும் எங்க போனாங்களென்று எதுவுமே எனக்கு தெரியாது.நானும் அவங்களை தேடவும் இல்லை.
வருஷமும் ஓடி போய்ட்டு.உன் பெரியப்பா பையன் சரவணனுக்கு கல்யாணம் முடிந்து வெற்றியும் பிறந்தான்.
வெற்றிக்கு ஒரு வயசு ஆனது.
அப்போ வெற்றியோட நான் வயலுக்கு போய்ட்டு வீட்டிக்கு வர,வீட்டு வாசல்ல ஒரே அழுகை சத்தம்.
என்னாச்சினு பதறி போய் நான் பார்க்க,என் மனைவி,மகன், மருமகள்,பேரன் சரவணன்,அவன் பொண்டாட்டி எல்லாருமே செத்து கிடந்தாங்க.
என்ன நடக்குதுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல.இடிஞ்சு போய் நான் உட்கார்ந்திருக்கும் போது,கணக்குபிள்ளை வேணுகோபால் வந்து சொன்னாரு.
ஐயா சாப்பிடுற சாப்பாட்டுல விஷம் கலந்துருக்குங்க.இதை சாப்பிட்ட பிறகு தான்,எல்லாருமே இறந்திருக்காங்கன்னு சொன்னாரு.
யார் இந்த வேலை செஞ்சாங்கணு விசாரிக்கும் போது தான்,நம்ம ஊருக்கு தோல் தொழிற்சாலை வேண்டாமென்றும் அதால் மக்களுக்கும்,சுற்றுச்சூழலை பாதிக்குமென்று அரசாங்கத்துக்கு நான் லட்டர் போட்டு தடுத்ததால், அவன் தான் ஆளு வச்சி சாப்பாட்டில் விஷத்தை கலந்துருக்கான்னு தெரிஞ்சது.
பிறகு போலீஸ்ல கேஸ் போட்டு,வருஷம் ஓடியது.தீர்ப்பு நம்ப பக்கம் சாதகமாக வந்தது.அவனுக்கு கொலை குற்றத்திற்காக சாகும் வரை ஆயுள் தண்டனை கொடுத்தாங்க.
அப்போ தான் வள்ளி பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்து இருந்தது.சரி பிள்ளைய காலேஜ் சேக்கலாம், தூரத்தில் இருந்தால் பாதுகாப்பா இருக்குமென்று,தெரிஞ்சவங்க மூலமா சென்னையில் காலேஜ் சேர்க்க நாங்க வந்துட்டு இருந்தோம்.அப்போ மகாபலிபுரத்துகிட்டு ஆக்சிடெண்ட் ஒன்னு நடந்திருப்பது தெரிஞ்சது.
நாங்க இறங்கி போய் பார்க்கும் போது,ரோட்டோரமா குப்புற கிடந்த உன்னை தான் முதல்ல பார்த்தோம்.
தலையில் அடிபட்டு ரத்தம் வழிச்சி ஓடிட்டு இருந்தது.அய்யோனு உன்னை தூக்கும் போது ஆம்புலன்ஸூம் அங்கு வந்தது.
அடிபட்ட எல்லாரையும் அதில் ஏத்திட்டு போனாங்க.உன்னையும் அதுல ஏத்திட்டு போகும் போது,உன் பாக்கெட்ல இருந்து பர்சு ஒன்று கீழே விழுந்தது. அதை எடுத்துப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியா இருந்தது.அதில் இருந்த போட்டோவில் என் பையன் சந்திரன், சகுந்தலா நீ,என மூணு பேரும் இருந்தீங்க.
நீ என்னோட பேரனென்று எனக்கு தெரிஞ்சது. அதோட நீ கோமாக்கு போய்ட்டான்னு டாக்டர் சொன்னாங்கஅந்த பர்சில் தந்தி வந்த ரசிது ஒன்னு இருந்துச்சு.
சகுந்தலாவுக்கு ரொம்ப உடம்பு முடியாம இருக்கதால் உன்னை வர சொல்லின்னு,அந்த அட்ரஸை வச்சுக்கிட்டு நானும் இந்த ரெண்டு பசங்களையும் கூப்பிட்டு,கணக்கு புள்ளை வேணு கூட திருச்சிக்கு போய் பார்த்தா,சகுந்தலாவும் அங்க உயிரோட இல்லை.
ஆளுங்களை வைத்து சகுந்தலாவை அடக்கம் பண்ணிட்டு,அங்க இருந்த கொஞ்சம் பொருட்களையெல்லா நம்ம வீட்டுக்கு எடுத்துட்டு வந்து வச்சுட்டேன்.
உனக்கு எப்ப வேணாலும் ஞாபகம் வரலாம்.இல்ல ஞாபகம் வராமலும் போகலாம்னு டாக்டர் சொல்லிட்டார். பிறகு அங்கு இருக்கிறவங்க கிட்ட பேசி கோயம்புத்தூருக்கு கொண்டுட்டு வந்தேன்.
நாலு வருஷமா குணாளன் தான் உனக்கு வைத்தியம் பார்த்தது.வேணுகோபல் நல்லவர். அவருக்கு தெரியாம நடந்த விஷயம் இது.அதனால் அவரை என்னால் தள்ளி வைக்க முடியலை.
அவரோட கணக்குபிள்ளை வேலைய அவர் பையன் மாரியப்பன் தான் பாக்குறார்.இவ்வளவுதான்ப்பா என்று சத்தியமூர்த்தி கவுண்டர் சொல்லி முடித்தார்.
தாத்தா சொன்னதை எல்லாம் கேட்ட சத்தியமூர்த்திக்கு,தனது அம்மாவின் ஞாபகம் வர அம்மா என்று கதறி அழுதார்.
சத்யா என் பையன் சந்திரனுக்கு என்னையா ஆச்சு?நாங்க போயிருக்கும் போது என் புள்ள போட்டோவுக்கு மாலை போட்டிருந்ததுய்யா என்று பெரியவரும் அழுது கொண்டே கேட்டார்.
நான் 12 படிக்கும் போது அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து அதுல இறந்துட்டாங்க.அதன் பிறகு அம்மா தான் ஜவுளி கடைக்கு போய் குடும்பத்தை பார்த்துக் கொண்டாங்க.
12த்ல நான் நல்ல மார்க் எடுக்க எனக்கு சென்னையில் ஃப்ரீயா சீட்டு கிடைத்தது.அவ்வளவு தூரம் நான் போய் படிக்கணுமாயென்று அம்மாகிட்ட கேட்கும் போது,வெளி உலகத்தையும் நீ தெரிஞ்சிக்கணும்.
அம்மா கைக்குள்ளே வளர வேண்டாம்னு அனுப்பி வச்சாங்க. இவ்ளோ தான் தாத்தா எனக்கு ஞாபகம் இருக்கு என்றார்.
சரி பரவால்ல விடு.இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்றார் டாக்டர் குணாளன்.
சில வருடங்களும் கடந்து சென்றது. வெற்றி அப்பொழுது ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். வள்ளியம்மை காலேஜ் படிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு முழு நேரமும் வீட்டு பொறுப்பை பார்க்க ஆரம்பித்தார்.
அப்பொழுது ஒரு நாள் படுத்துக் கொண்டிருந்த சத்தியமூர்த்திக்கு, யாருக்கோ தாலி கட்டுவது போல் நிழல் படமாக தெரிந்து,திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார்.
அவ்வப்போது இதைப் போல ஞாபகங்கள் வரும்.அதை ஓவியமாக வரைந்து வைக்க ஆரம்பித்தார். தாத்தாவிடமும் அந்த கனவில் வந்ததைப் பற்றி சொல்ல மறக்கவில்லை.
வெற்றி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது,வயது மூப்பின் காரணமாக சத்தியமூர்த்தி கவுண்டரும் இந்த உலகத்தை விட்டு சென்றார். பிறகு மொத்த பொறுப்பும் சத்தியமூர்த்திக்கு வந்து சேர்ந்தது.
வள்ளிக்கு கல்யாணம் பண்ண மாப்பிள்ளை பார்க்க, வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்து விட்டார். ஒருநாள் வீட்டில் பின்பக்கம் இருக்கும் அறைக்கு சென்றவர்,தாத்தாவின் பொருள் ஒன்றை தேடும் போது,சில மூட்டைகள் அங்கு இருப்பதை பார்த்து, இது என்னவென்று திறந்து பார்த்தார்.
முதல் இரண்டு மூட்டைகளில் பாத்திரங்கள் இருக்க,அடுத்த மூட்டையை திறந்து பார்க்க,அதில் புத்தகங்களும்,சில போட்டோக்களும் இருந்தது.
போட்டோக்களை பார்த்துக் கொண்டே வரும் போது,அதில் கல்லூரியில் படித்த போது எடுத்த போட்டோக்கள் இருந்தது.
அதில் யார் முகமாவது ஞாபகம் வருதா என்று பார்த்துக் கொண்டே வந்தவருக்கு,சிலர் முகங்கள் மட்டும் நிழலை போல் வந்தது.
அடுத்த போட்டோவை பார்க்க, அதிலிருந்த ஒரு பெண்ணை பார்க்கும் போது,தாரா என்று முணுமுணுத்தார். இப்ப நான் என்னன்னு சொன்னேன் என்று சத்தியமூர்த்தி யோசிக்கும் போது தான்,சில நினைவுகள் அவருக்கு வரத்தொடங்கியது.
சிறிது நிமிடம் கண்ணை மூடி யோசித்தவர் தேவா தேவா தேவா தேவராஜ்,பிரியா,என்னுடைய தாரா வசுந்தரா,பாபு,வினோத் என்றார்.
சதூர்வேதமங்கலம்:
தங்க குட்டிக்கு பசி தீர்ந்துவிட்டதா என்று, வயிற்றில் தனது விரல்கள் வைத்து தடவி கேட்க,அவளுக்கோ அவன் விரல்கள் பட்டு உடல் சிலிர்த்தது.
என்ன பண்ணுகிறாய் என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்டாள்.ஏன் உனக்கு கண்ணு தெரியாதா?
என் பிள்ளை கிட்ட பேசிட்டு இருக்கேன்னு உனக்கு தெரியுது இல்ல.பின்ன,என்ன பண்றேன் நொண்ண பண்றேன்னு கேள்வி கேட்டுட்டு இருக்க.
கம்முனு இருடி.உன்ன ஒன்னும் நான் பண்ணவில்லை என்றவன், பொறாமை புடிச்சவள்,உன்கிட்ட என்ன பேச விட மாட்டேங்குறாள் தங்கமென்று சொல்ல,ஆர்கலியே பல்லை நர நரவென்று கடித்தாள்.
படுபாவி இப்படி என்னை படுத்தி வைக்கிறானே?
இவனுக்கு தான் கூச்சநாச்சம் ஒன்னும் இருக்காது.இவனைப் போல நாம என்ன கல்லா இல்ல மண்ணா?
டேய் ரொம்ப சோதிக்காதடா என்று முணு முணுக்க,சோதனை தான் என்ன செய்யடி பார்பி பொண்டாட்டி.
உன்னை யாருடி என் கண்ணில் பட சொன்னா?
கியூட்டா,பார்பிடால் போல வந்து மோதுன பாரு,யப்பாஆஆஆஆ, சின்ன பொண்ணு இடிச்ச போலவா இருந்தது என கண்ணடித்து ருத்ரன் சொல்ல,ஆர்கலிக்கும் அந்த நாளை நினைத்து வெட்கமாக வந்ததும், முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு மௌனமாக சிரித்தாள்.
ஆனா பாப்பா,சத்தியமா நினைக்கலடி அந்த நிமிஷமே நான் பிளாட் ஆகுவேனென்று ருத்ரன் சொல்ல,என்ன பாப்பாவா என்றாள்.
நான் என்ன பால்வாடி பாப்பா போலவா இருந்தேனென்று ஆர்கலி மூக்கு விடைக்க கேட்க,ஆமாண்டி...
"குட்டியா பாப்பா போல க்யூட்டா இருந்தடி"என்று,அவள் கன்னத்தை பிடித்து ஆட்டிக்கொண்டே சொல்ல, அவளோ கணவனின் தீண்டல்கள் ஏற்படுத்தும் கிரக்கத்தை மறைக்க முடியாமல் திணறிப்போனாள்.
ஐயோ இந்த ஒரு நாளுக்கே இவ்வளவு பாடுபடுத்துறானே இந்த ஒரு வருஷம் எப்படி போகுமோயென்று நினைத்தவளுக்கு,உள்ளுக்குள் ஒரு பக்கம் வலித்தது.
உண்மையிலேயே ஒரு வருஷமானதும் நம்மளை வீட்டு விட்டு அனுப்பி விடுவானா?,இல்லை அனுப்ப மாட்டானா?என நினைக்க, மனசோ அனுப்பமாட்டான் என்றும், அறிவோ அவன் சொன்னதை செய்பவன்.
"சோ,கண்டிப்பாக உன்னை அனுப்பிடுவானென்று சொல்லியது"
அவள் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தவன்,என்ன யோசிக்கிறாள்? கோவப்பட்டு அடிச்சிடுவாளா?
செய்ற ஆளு தான் இவள். அன்றைக்கு கன்னத்திலே விட்டாளே. எப்பாஆஆ...
ஆள பாக்க ஒல்லியா இருக்கிறாள். அடிச்சா பலமா வலிக்குதென்று தனது கன்னத்தை தடவியவன்,ருத்ரா கொஞ்சம் அடக்கி வாசி டா .
ரொம்ப ஓவரா தான் போற.இது எல்லாம் நல்லதுக்கு இல்லை என்று சொல்லிக் கொண்டவன்,சரிடா தங்கம் நீங்க ரெஸ்ட் எடுங்க.
அப்பாவும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேனென்று அங்கிருந்து எழுந்தவன்,தள்ளி படுடி என்று சொல்லி விட்டு,ஆர்கலியின் பக்கத்திலேயே கட்டிலில் படுத்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டான்.
அதான் இவ்வளவு இடம் இருக்கே, அங்க போய் படுக்க வேண்டியது தானே என்று ஆர்கலி கேட்க,அதற்கு ருத்ரனோ ஓஓ எஸ்.இப்ப தான் ஞாபகம் வந்தது என்றவன்,அவள் வயிற்றின் மேல் தனது இடது கையை வைத்துக் கொண்டு திரும்பிப் படுத்தான்.