• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
477
சதூர்வேதமங்கலம்:

மேலும் சிறிது நேரம் பேசி விட்டு ரஞ்ஜன் போனை வைக்க, "ஸ்சூஊஊஊ..."

"எவ்வளவு பேச்சு? இவனுக்கு
வாய் வலிச்சிருக்குமா, இல்லையா? என முணு முணுத்தவன்,மீண்டும் டிசைன் பண்ணும் வேலையில் மூழ்கினான்"

"நேரமும் இரண்டு மணி நேரத்திற்கு மேலே கடந்து செல்ல,ஆட்டோ வந்து வாசலில் நிற்க,அதிலிருந்து மூவரும் இறங்கியவர்கள்,உள்ளே உட்கார்ந்திருப்பவனை கண்டனர்"

"அம்மாடி கொஞ்சம் சீக்கிரம் போய் கதவை திற.எவ்ளோ நேரம் தம்பி வெளியில இருக்காங்கன்னு தெரியலையே என்றவாறு அங்கு வந்த பாட்டி,தம்பி வாங்க என்றார்"

"ருத்ரனோ காதில் உள்ள புளுடூத்தில் பேசிக்கொண்டிருக்க,பாட்டி கூப்பிட்டது காதில் விழவில்லை"

அப்பொழுது பாட்டியை தொட்டுக் கூப்பிட்ட ஆர்கலி லேப்டாப்பை காட்டி,யாரிடமோ பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை சைகையில் சொல்ல,ஓ சரி சரி என்று கதவை திறந்து மூவரும் வீட்டின் உள்ளே சென்றவர்கள்,வேகமாக மதிய உணவை சமைக்க தொடங்கினர்"

"சமையலை முடித்து விட்டு வெளியே வந்து கருப்பாயி பார்க்க,ருத்ரன் அவனது வேலையில் கவனமாய் இருப்பது தெரிந்தது"

" தம்பி,தம்பி என்று அந்த சத்தத்தில் நிமிர்ந்தவன்,வாங்கக்கா. ஹாஸ்பிட்டலில் இருந்து இப்போ தான் வந்தீங்களா என கேட்க,எதேஏஏ என அதிர்ந்தவர், தம்பி நாங்க வந்து ஒரு மணி நேரம் ஆகிட்டுப்பா" வாங்க தம்பி சாப்பிடலாம் என்க, அதுக்குள்ளே சாப்பாடா என்றவாறு தனது மொபைலில் அதுவும் மதியம் 1.15 என்று காட்டியது"

"இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு வேலை இருக்குங்கக்கா. நான் முடிச்சுட்டு வந்துடறேன்.நீங்க போய் சாப்பிடுங்க என்று சொன்னவன், அக்கா,டாக்டர் என்னக்கா சொன்னாங்களென்று தயங்கியபடியே கேட்டான்"

"ஒன்னும் பிரச்சனை இல்ல.இன்னும் ரெண்டு இல்லை மூன்று வாரத்துல, எப்ப வேணாலும் டெலிவரி ஆகும்னு சொன்னாங்கப்பா என்க,சரிங்கக்கா என்றான்"

"வேலைய முடிச்சிட்டு வாப்பா என்றவாறு உள்ளே சென்றவர், ஆராமா நீ முதல்ல சாப்பிட்டுக்கோ என்க,சரிங்கண்ணி என்றவள், தரையில் உட்கார்ந்து கொண்டு, நீங்களும் வாங்களேன் பாட்டி என்க, தம்பி சாப்பிடட்டும் கண்ணு, நான் பிறகு சாப்பிட்டுக்கிறேனென்றார் பாட்டி"

"ம்கூம்,பொல்லாத தும்பி,இந்த உலகத்தில் இல்லாதவன் வந்திருக்கிறான்.அந்த தொம்பிக்கு பசிச்சா அவன் வந்து சாப்பிட போறானென்று முணு முணுத்தவள், நீங்க எனக்கு குடுங்கண்ணி,ரொம்ப பசிக்குது என்றாள்"

"வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் இலையில் தான் ஆர்கலி சாப்பிடுவது. இலையை போட்டு சமைத்தவைகளை அவளுக்கு பரிமாறும் போது, ருத்ரனும் உள்ளே வந்தான்"

"கையை கழுவிவிட்டு வாப்பா, சாப்பிடலாமென்று பாட்டி சொல்ல, அய்யோ பாட்டி அந்த டாக்டர் கையை கழுவ வேண்டானு சொல்லியிருக்காரே,நான் ஸ்பூனை வேண்டுமானால் கழுவிட்டு சாப்பிடுறேனென்று சொல்ல,அவன் சொல்லியதை கேட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு புரை ஏறியது"

"ஏய் பார்த்து பார்த்து என்று அவள் தலையில் தட்ட,ஆர்கலியோ நிமிர்ந்து அவனை முறைத்து பார்த்தாள்"

"டேய்,அவள் பார்வையே சரியில்லை டா.அடக்கி வாசியென ருத்ரன் தனக்குள் சொல்லியவன், ஆர்கலியின் அருகிலேயே தரையில் உட்கார,ஏன் உனக்கு வேற இடம் கிடைக்கலையா? என ஆர்கலி கேட்க,இருவருக்கும் இருக்கும் இடைவெளியை பார்த்தவன்,ஓஓ கேப் வேண்டானு சொல்லுறாயா,சரி சரி புரிஞ்சிட்டுயென்று அவளருகில் நெருங்கி உட்கார,ஆர்கலியோ ஆஆ என தனது பல்லை கடித்தாள்"

"பாட்டிக்கும் கருப்பாயிக்கும் சிரிப்பு தாங்கவில்லை.அம்மாடி நான் செத்த காத்தாட உட்காருறேனென்று பாட்டி எழுந்து தோட்டத்திற்கு சென்று விட, சமைத்த உணவுகளை எடுத்து கீழே வைத்தவர்,ருத்ரனுக்கு தட்டும் அதில் ஸ்பூனும் வைத்து விட்டு,கூப்பிடாத பாட்டிக்கு,இதோ வரேன் ஆச்சியென்று சொல்லி கருப்பாயியும் தோட்டத்திற்கு சென்றார்"

ஏண்டா பெரியவங்களாம் இருக்கும் போது இப்படி நடந்துக்கறியே,கொஞ்சம் கூட உனக்கு வெட்கமா இல்லையா?என்று பல்லை கடித்துக் கொண்டு ஆர்கலி கேட்க, அவளை பார்த்து கண்ணடித்தவன், என் செல்ல பொண்டாட்டி பக்கத்தில் உட்காருவதற்கு,நான் ஏண்டி வெக்கப்படணும் என்று கேட்டான்"

"நான் உன் பொண்டாட்டினு யாரு உனக்கு சொன்னா என்று ஆர்கலி கேட்க,அதற்கு ருத்ரனோ,இது யார் சொல்லி எனக்கு தெரியனும்டி?

சட்டப்படி நம்ம கல்யாணம் ரிஜிஸ்டர் ஆயிருக்கே கண்மணி என்க,இது யாரு புதுசா கண்மணி?

ஏன் அந்த ஆதிரா எங்க போனாள்,இப்ப கண்மணியை புடிச்சு தொங்கிட்டு இருக்க என கடுப்போடு கேட்க..

"ஓஓஓஓஓ எனக்கு புரிஞ்சிட்டுடி செல்லம்"

"ஆதிரா உன் வாழ்க்கையில் குறுக்க வந்ததால தான்,என் கண்மணிக்கு இவ்வளவு கோவமா?என்று ருத்ரன் கேட்க,அதைக்கேட்டு ஆர்கலிக்கு மேலும் கோவம் வந்தது"

"இங்க பாரு,ஒழுங்கு மரியாதையா வாயை மூடிட்டு போய்டு".

"குழம்புலாம் கொதிக்க கொதிக்க இருக்கு.எடுத்து மூஞ்சிலியே ஊத்திடுவேன் என்க,ஏய் இந்த மூஞ்சை தான் டி சில வருஷமா நல்லாவே சைட் அடிச்ச"

"அதும் வீடியோ கால்ல முழுங்குற போல,இந்த முட்ட முழிய வச்சிக்கிட்டு பார்ப்பியே,அதெல்லாம் மறந்துடுச்சா செல்லம் என்றான்"

"டேய் பிசாசு ஒழுங்கு மரியாதையா எந்திரிச்சு போயிடுடா.எனக்கு வர கோவத்துக்கு நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்று ஆர்கலி சொல்ல,என்னடி வர வர மரியாதை ரொம்ப தேயுது என்று,அவள் கன்னத்தை பிடித்து ஆட்டிக்கொண்டே ருத்ரன் கேட்டான்"

"கையை எடுடா கபோதி என்றாள்"

ஏன்டி ஒரு டீச்சர் போலவா பேசுறே?,வாயில இப்படி வார்த்தைகள் வருது என்க,எனக்கு இன்னமும் வரும்.அது நீ நடந்து கொள்வது பொறுத்து என்றாள்.

"ஹேய் செல்லம் நான் நல்லா ஸ்டைலா தாண்டி நடப்பேன்".

இரு இப்போ நடந்து காட்டுறேனென்று உட்கார்ந்திருந்தவன் எழப்போக,டேய் இப்படி சாப்பிட உட்கார்ந்து பாதிலே எந்திரிக்கிறியே,கொஞ்சம் கூட உனக்கு அறிவே கிடையாதா? என்க,ஐயோ ஐயோ....

"என் பொண்டாட்டிக்கு என் மேல எவ்வளவு அக்கறை.இதை பார்க்கும் போது உடம்புலாம் அப்படியே புல்லரிக்குதென்று,தனது இரண்டு கைகளையும் அவள் முன்பு காட்டி ருத்ரன் சொல்ல, அதற்கு ஆர்கலியோ, குஷ்டமா இருக்க போகுது.போய் நல்ல டாக்டரிடம் காட்டு என்றாள்"

"எனக்கு வைத்தியம் பண்ண தான் பெரிய டாக்டர் என் செல்ல பொண்டாட்டி இருக்கியேடி"

"உன்னை விட பெரிய மருந்து இந்த உலகத்தில் இருக்கா செல்லம்"என கண்ணடித்து கேட்க,கோவத்தில் என்ன செய்கிறோமென்று தெரியாமல்,சாதத்தில் இருந்த கரண்டியை எடுத்தவள்,ருத்ரன் சுதாரிப்பதற்குள் தையல் போட்ட கையில் வேகமாக அடித்து விட,வலியில் ஆஆ என்று கத்தி விட்டான்"

"ருத்ரனின் சத்தத்தில் தோட்டத்திலிருந்த கருப்பாயியும், பாட்டியும் என்னாச்சு என்று உள்ளே வந்து பார்க்க,தையல் போட்ட கையில் இருந்து ரத்தம் கசிந்தது"

"அய்யோ தம்பி என்றவாறு செல்பில் இருந்த பஞ்சை எடுத்த கருப்பாயி அவன் கையில் துடைத்து விட, இரத்தம் மேலும் அதிகமாக வெளியேற,தம்பி இருய்யா உன் மாமனை வரச்சொல்லுறேன்"

"டாக்டர் கிட்ட போகலாமென்றவர், இடுப்பில் இருந்த போனை எடுத்து சங்கருக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்ல,ஏய் புள்ள இன்றைக்கு நம்ப ஊருக்கு நர்ஸ் வரும் நாள் தான் டி"

"அங்க போகலாம் இதோ வரெனென்றவர் வேகமாக வந்து ருத்ரனை கூப்பிட்டுக்கொண்டு, பக்கத்து தெருவில் இருக்கும் பால்வாடிக்கு சென்று நர்ஸிடம் விஷயத்தை சொல்ல,செக் பண்ணி பார்த்தவர் நல்ல வேளை தையல் பிரியலை என்றவாறு கையை துடைத்து விட்டு,தன்னிடமிருந்த மருந்தை போட்டு விட்டார்"

கனடா-களுத்துறை:

"வீடியோகாலில் இருப்பவனின் உருவத்தை பார்க்க முடியாத அளவுக்கு
ஆதிராவின் கண்கள் நீரால் நிரப்பி இருந்தது"

சரி நாம பக்கத்தில் இருந்தால் என்னத்தை பேசுவாங்களென்ற ஆனந்த்,ரஞ்சா நீ போய் பேசிட்டு வா என்க,"சரி மாமா என்றவாறு மொபைலோடு எழுந்து வெளியே வந்தான்"

"தன்னவனின் உருவத்தை கண்டவள் கண்ணை ஒரு நொடி சிமிட்டினாலும் உள்ளிருந்த நீர்த்துளி கீழே பட்டு சிதறும்"

நிச்சயமாக இது அருகில் இருக்கும் ரியாவிற்கு தெரிந்துவிடும் என்பதால், போனை எடுத்துக் கொண்டு, "அங்கிருந்த அறைக்குள் சென்று கதவை தாழிட்டாள்"

"ஓஓஓ மேடமிற்கு வெட்கம் போலவென்று ரியா சிரித்து விட்டு, இரவு உணவை தயார் பண்ண கிச்சனிற்குள் சென்று விட்டாள்"

" ஹலோ ஹலோ என்ற ரஞ்ஜனின் குரல் கேட்டு,ஆதிராவிற்கு ரொம்ப பட படப்பாக இருந்தது"

"ஹலோ ஆதிரா நீங்க லைன்ல இருக்கீங்களா,இல்லையா?என்று ரஞ்ஜன் கேட்க,அந்த குரலில் உள்ள கம்பீரத்தில் சற்று மயங்கி போனவள், மீண்டும் ஒருமுறை தனது பெயரை சொல்ல மாட்டானா??என்று ஆவலோடு காத்திருந்தாள்"

"சிறிது நொடி அமைதியாக இருந்த ரஞ்ஜன்.ஓகே மிஸ் ஆதிரா.

உங்களுக்கு என்கிட்ட பேச பிடிக்கவில்லை என்பது நல்லா தெரியுது"

"இதிலேயே உங்கள் முடிவும் எனக்கு புரிந்து விட்டது".

இது சரிவராது என்று நான் வீட்டில் சொல்லி விடுகிறேனென்க,அய்யோஓஓஓ!!

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை என்று வேகமாக சொன்னாள்"

"தன் மனதிற்கு பிடித்தவளின் பதற்றமான குரலை கேட்டு, ரஞ்ஜனின் உள்ளுக்குள் சாரல் மழை வீசி சென்றது"

"அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்,பின்ன என்னங்க ஆதிரா,நீங்க என் முகத்தை கூட பார்த்து பேச மாட்டேங்கிறீங்க.

"ஒருவேளை உங்க அழகுக்கு நான் ஈடான ஆள் இல்லை என்று நினைத்து விட்டீர்களா?போல என்று மீண்டும் அவளை வம்புக்கு இழுத்தான்"

"உங்களுக்கு என்ன அப்பதிலிருந்து நீங்க ஹேண்ட்ஸமா தானே இருக்கீங்க என்று,பொறுமையாக ஆதிரா சொல்வது ரஞ்ஜனின் காதில் நன்கு விழுந்தது"

"எப்போ இருந்து என்று ரஞ்சன் ஒரு மார்க்கமாக கேட்க,நீங்க மூன்று பேரும் என்னை காப்பாற்றினீங்களே அன்றிலிருந்து தான் என்றாள்"

"ஆதிராவின் பேச்சு ரஞ்ஜனுக்கு எதையோ புரிய வைக்க,ஒரு நிமிஷம் உன் முகத்தை நல்லா காட்டியபடி என்னை பாரு என்று போனை பார்த்து சொல்ல,என்னால இப்போ பார்க்க முடியல என்று சொன்னாள்"

"ஏன் வெட்கமா இருக்கா?என்று கேட்க ம்ம் என்றவளை பார்த்து,எதே பிடாரிக்கு வெட்கம்லாம் வருமா என்று கேட்டுக்கொண்டே அங்கே வந்தான் ஆது"

" இங்க குடுடா என்றவாறு போனை வாங்கியவன், ஏய் பிடாரி எப்படி டி இருக்க என்க,நல்லா இருக்கேன்ணா, நீங்கள் எப்படி இருக்கிறீங்க என்றாள்"

எதேஏஏஏ அண்ணனாவாஆஆஆ என்றபடி ஆது தனது நெஞ்சில் கையை வைக்க,ம்ம்.நீங்க கடைசியா பார்த்த ஆதிரா இப்போ இல்லைணா.

இந்த ஆதிராவிற்கு உலகம் புரிஞ்சிட்டு. மனிதர்களுடைய நிறங்களை கண்டறியும் அறிவும் வளர்ந்துட்டுணா என்க, ஆதி உண்மையிலே நீயாடா பேசுற என ஆது கேட்க,நானே தான் அண்ணா.

இப்போ பேசுறது புது மனுஷி தான் என்றவள்,என் தப்பை நான் அன்றே உணர்ந்துட்டேன் ணா.நீங்க நம்பலாமென்று ஆதிரா கம்பிரமாக சொல்ல,இது போதும்டா ஆதி.

"நாம் பேசுறது இங்க ஒரு பண்ணாடைக்கு வயிற்றெரிச்சலா இருக்கு.உன் வாயை திறந்து ஒரு வார்த்தை புடிச்சிருக்கென்று சொல்லிடுடா என்க,எனக்கு ரொம்ப புடிச்சிருக்குணா,நீங்களேஇதை நம்ப வீட்ல சொல்லிடுங்களென்று சொல்லிய ஆதிரா அழைப்பை கட் பண்ணினாள்"
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
477
சதூர்வேதமங்கலம்:

"ரொம்ப நன்றிங்க நர்ஸம்மா என்று சொல்லிய சங்கர்,போகலாம்பா என்றவாறு அங்கிருந்து வெளியே வர,என்ன சங்கரு,தங்கச்சி புருஷன் கூட அப்படியே நகர்வலம் போல என, மாமன் முறை உள்ளவர் கிண்டல் பண்ண,ஹம் ஆமா மாமா"

"அத்தை தான்,மாமா எங்கணு பார்த்துட்டு வர சொல்லுச்சி என்க, உன் அத்தக்காரி இருக்காளே அவள் சிஐடியா ஆகியிருக்க வேண்டிய ஆள். தப்பி தவறி எனக்கு பொண்டாட்டியா வாச்சிட்டா"

"அங்க இங்க திரும்ப முடியலை.திருடனை போலீஸ் தேடுவது போல ஆள் வச்சு உடனே தேடிடுறாள்.

அது ஏன் தெரியுமா உன் மாமன் மன்மதன்டா அதானென்க,சுடுகாட்டுக்கு போகப்போகும் வயசில் இந்த ஆசை வேறா என குரல் கேட்க,ஆத்தாடி என்று அவர் திரும்பி பார்க்க,அங்கே அவரின் மனைவி நின்று கொண்டிருந்தார்"

"நல்லா இருக்கீங்களா தம்பி?, புள்ளை(ஆர்கலி) நல்லா இருக்கா என்க,ருத்ரனுக்கோ இன்னும் குழந்தை பிறக்கவில்லையே.பிறகு எப்படி குழந்தையை பற்றி சொல்ல முடியுமென்று முழித்தான்"

"ருத்ரனின் முக பாவானையை வைத்து புரிந்து கொண்டு சங்கர், தங்கச்சிமாவை தான் மாப்பிள்ளை கேக்குறாங்க என்று சொல்ல,ஓஓஓ சரிங்க மாமா என்றவன்,நல்லா இருக்காம்மா என்றான்"

"ஆமா சங்கரூ,உன் நோமா என்னமோ மன்மதன் குன்மதன்னு பிணாத்திட்டு கிடந்தாரே,என்னப்பா சங்கதி என்று கேட்க,ஏய் சாந்தி மாப்ள கூட என்னமோ கிண்டலுக்கு பேசிட்டு போறேன்"

"அத போய் ஆராய்சி பண்ணி கிட்டு. மாட்டை ஓட்டிட்டு போகணுமென்று சொன்னியே சாந்தி வா வா என நிற்காமல் சொல்லிக்கொண்டே அவர் முன்னே செல்ல,யோவ் நீ வீட்டுக்கு தான வரணுமென்று சாந்தியும் சொல்லியவாறு பின்னாடியே சென்றார்"

"அத்தை கொஞ்சம் பார்த்து பதமாகவே செய்கை இருக்கட்டும். எதற்கும் உள்காயமாவே இருக்கட்டும் என் மாமனுக்கென்று சங்கர் சத்தம் போட்டு சொல்ல,அட ஏண்டா இப்படி என்றார்"

"சும்மா தான் மாமா என்று சிரிக்க, உசுரோட இருந்தா நாளைக்கு பாக்கலாம் மாப்பிள்ளை என்று சொல்லிவிட்டு அவர் வேகமாக சென்றார்.இவர்கள் பேசிக் கொண்டதை கேட்டு ருத்ரனுக்கு சிரிப்பு வந்தது"

"சங்கர் மட்டும் வீட்டிற்கு வருவதை பார்த்து,தம்பி எங்கேயென கருப்பாயி கேட்க,மாப்ளை அப்படியே அய்யா வீட்டுக்கு போயாச்சி புள்ள"

"நல்ல வேளை,கையில் போட்ட தையலுக்கு ஒன்னும் ஆகலை.ஆமா நல்லா தானே இருந்துச்சி,பிறகு எப்படி திடீர்னு அவ்வளவு ரத்தம் வந்துச்சியென்க,என்னை கேட்டா?

"உன் தங்கச்சிக்கு தான்யா தெரியுமென்று கருப்பாயி சொல்லி விட்டு,சரி வாய்யா சாப்பிடு என்றார்"

"அண்ணன் மட்டும் வருவதை பார்த்த ஆர்கலி,எங்கே இந்த மனுஷனென்று பார்வையால் தேடினாள்"

"நீங்களாம் சாப்டீங்களாயென்று கேட்டவாறு சங்கர் சாப்பிட உட்கார, இல்ல மாமா.நீங்க வந்த பிறகு சாப்புடுறேனு ஆராவும் சொல்லிட்டு என்க அட ஏண்டி கூறுகெட்டவளே"

"வாயும் வயிறுமா இருக்க புள்ளைக்கு நேரத்தோட சோத்தை குடுக்காம மண்டைய மண்டைய ஆட்டிட்டு இருந்தியா?என்று சத்தம் போட்டவர், தங்கச்சிமா,ஆச்சி வந்து உட்காருங்க, தேவையானதை போட்டு சாப்டுக்கலாம் என்றார்"

"ஆர்கலிக்கோ உள்ளுக்குள் குற்ற உணர்ச்சி இருந்தாலும் வெளியே காட்டிக்காமல்,கொஞ்சமாக சாப்பிட்டு எழுந்தாள்"

"திண்ணையில் போய் உட்கார, அங்கே ருத்ரனின் லேப்டாப்,ஃபைல் மற்றும் செல்ஃபோன் எல்லாம் இருந்தது"

"ஓ...ஐயா எல்லாத்தையும் இங்கையே வச்சிட்டு போயிட்டாரு இல்லையா, எப்படியும் இதையெல்லாம் எடுக்க இங்க வருவான்.அப்போ ஒரு சாரி சொல்லிட வேண்டியதுதான் என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்"

"அப்பொழுதுதான் சாப்பிட உட்கார்ந்த கண்ணன்,காலடி சத்தம் கேட்டு பார்க்க ருத்ரன் வருவது தெரிந்தது.ருத்ரா வாப்பா சாப்பிடு என்க,இதோ வருகிறேன் அங்கிள் என்றவன்,வாஷ்பேஷனில் முகத்தை கழுவிக்கொண்டு வந்து உட்கார்ந்தான்"

"அவன் முன்பு உள்ள தட்டில் உணவை பரிமாறிய தேவகி,அதில் ஸ்பூன் வைக்க,தேவகி கண்ணன் தம்பதியரோடு பேசிக்கொண்டே ருத்ரனும் சாப்பிட்டு முடித்தான்"

"அப்பொழுது கண்ணன் போனிற்கு கால் வர,தேவகி அந்த போனை எடுத்துட்டு வா என்க,அவரும் எடுத்துட்டு வந்து கணவரிடம் கொடுக்க,அதில் சிம்ஹன் தாத்தா நம்பர் வந்தது"

"அட்டென்ட் பண்ணியவர் சொல்லுங்க மாமா என்க,கண்ணா நாங்க பொள்ளாச்சி வந்துட்டோம் பா.இங்கு சத்தியமூர்த்தி வீட்டில் தான் இருக்கிறோம்.ஆமாம் வீரா எங்கே?,போன் பண்ணா எடுக்கவே இல்லையே என்றார்"

பக்கத்துல தான் மாமா.இதோ கொடுக்கிறேன் என்று சொல்லியவர், ருத்ரா மாமா தான் போன் பண்றாங்க என போனை அவன் பக்கம் நீட்டினார்"

"கண்ணனிடமிருந்து போனை வாங்கியவன் ம்ம் என்க,அந்த பக்கத்தில் இருந்து கிரிஜா பாட்டி பேசினார்.வீரா மாத்திரை போட்டியா?,சாப்டியா? என்க, ஹம் இப்போ தான் என்றான்"

"சரிப்பா,முடிந்தால் இன்னைக்கு நைட்டு கிளம்பிடுவோம். இல்லையென்றால் நாளைக்கு தான் வருவோம். நீ உடம்ப பார்த்துக்கோ என்று சொல்லி போனை வைக்க,மாமா இதுல சங்கர் மாமாக்கு ஒரு கால் பண்ணி,என்னோட லேப்டாப்-போன் எடுத்துட்டு வர சொல்லுங்களேன்.

அந்த ஃபைலை மட்டும் ஆர்கலி கிட்ட கொடுக்க சொல்லுங்களென்க, கண்ணனும் அதே போல் போன் பண்ணி சங்கர் கிட்ட விஷயத்தை சொன்னார்.

"சரி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குறேனென்று சொல்லி ரூமிற்குள் சென்ற ருத்ரன்,கட்டிலின் மேலே படுத்தவன்,என் பொண்டாட்டி கொலகாரியா இருப்பாள் போல"

"அடேய் ருத்ரா,எதுக்கும் அவள் கிட்ட கேர்ஃபுல்லா இருடா.இல்லைனா உன்ன துவைத்து துவம்சம் பண்ணிடுவாளென்று சொல்லிக் கொண்டவன்,வலியின் காரணமாய் மாத்திரை போட்டவன் கண்ணை மூட, அப்படியே அசதியில் தூங்கி விட்டான்"

"தங்கச்சிமா இந்த பைலை மாப்பிள்ளை உன்கிட்ட கொடுக்க சொன்னாரு என்று கொடுத்துவிட்டு, ருத்ரனின் லேப்டாப்பையும் போனையும் எடுத்துக் கொண்டு, பெரிய வீட்டை நோக்கி சென்றார்"

" ஓஓஓ அய்யாக்கு ரொம்ப கோவம் வந்துட்டு போல,அதான் அண்ணன் கிட்ட சொல்லி எடுத்துட்டு வர சொல்லி இருக்கானா,டேய் உன் கோவம் என்னை என்னடா பண்ண போகுது என்று சொல்லிக் கொண்டவள்,அவரிடமிருந்து பைலை வாங்கியவள் தனது அறைக்குள் சென்று,அங்கிருக்கும் கட்டிலின் மேல் உட்கார்ந்தாள்"

"கையில் இருந்த ஃபைலை திருப்பி திருப்பி பார்த்தவள் என்ன இது?.இதை ஏன் நம்ம கிட்ட கொடுக்க சொல்லிருக்கான்?என்று முணு முணுக்க,ஏய் முதல்ல அதை திறந்து பாருடி"

"அதை விட்டு உன் பாட்டுக்கு புலம்பிட்டு இருக்க.உனக்கு தான் படிக்க தெரியுமே,பிறகென்ன.அதை படித்து பார்த்தால் என்ன விஷயமென்று தெரிந்து விட போகிறதென்று என அவள் மனசாட்சி சொல்லியது"

"நீ வேற அப்பப்போ வந்து என் உசுர வாங்கு?,ஏன் எனக்கு தெரியாதா என்று கேட்க,அடியே கிறுக்கி.உனக்கு தெரியாது என்பதால் தாண்டி நான் சொல்றேன்"

"உனக்கு அந்தளவுக்கு அறிவு வேலை செய்து,இது தெரிஞ்சா நான் ஏன் அதை சொல்ல போறேன் சொல்லு? என்று முறுக்கி காட்டி விட்டு, மனசாட்சி அங்க இருந்து சென்றுவிட்டது"

"ச்சை,நாம எப்படினு இதுங்களே முடிவு பண்ணிக்குதுங்க என்றவள், சரி ஓப்பன் பண்ணி பார்க்கலாம். அப்படி என்ன தான் பொல்லாத பொக்கிஷத்தை எனக்கு அனுப்பி இருக்கானென்று,அந்த நீல கலர் ஃபைலை திறந்தவள் உள்ளே இருந்ததை எடுத்து படிக்க படிக்க அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனாள்"

"ஆனால் அவள் விழிகள் மட்டும் கண்ணீரை பொழிய மறக்கவில்லை"

" எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாளோ தெரியவில்லை.ஆரா கண்ணு ஆரா கண்ணு என பாட்டி கதவை தட்டி கூப்பிடும் சத்தம் கேட்க, ஃபைலை மூடியவள் அங்கிருந்த கபோர்டில் வைத்து விட்டு இதோ வரேன் பாட்டி என்றவாறு ரெஸ்ட் ரூமிற்குள் சென்று ப்ரஷாகி ஹாலிற்கு வந்தாள்"

சென்னை- விஷால் வீடு:

"கார் சத்தம் கேட்கும் போதெல்லாம், மகன் தானோ என்று எழுந்து போய் வாசலை பார்த்து விட்டு வந்து சத்தியமூர்த்தி உட்கார,அய்யோ சத்யா எதுக்கு நீ இவ்வளவு டென்ஷன் ஆகிறாய்?

"வெற்றிக்கு ஒன்னும் இல்லை. நல்லா இருக்கிறான்.நீயும் வீடியோவில் பார்த்த தானே என்று, விஷாலின் தந்தை கேட்க,இல்ல விஸ்வா,மனசு எப்படி இருந்துச்சு தெரியுமா?

"கல்யாணம் பண்ணுற வயசு வந்தாலும் அவங்க நமக்கு எப்போதும் குழந்தைங்க தானே என்கும் போது,வெற்றியும் உள்ளே வர,அங்கே பாரு சத்யா என கைக்காட்ட,மகனை பார்த்த சத்தியமூர்த்தி,என் ராசா என வேகமாக போய் மகனை கட்டி பிடிக்க அவர் கண்கள் கலங்கியது"

"என்னப்பா பயந்துட்டியா?,நான் நல்லா இருக்கேன்.ஒன்னும் இல்லை என்க, ம்ம் புரியுது.ஆனால் மனசு கேட்கவில்லை என்றார்"

"நல்லா சொல்லு வெற்றி.உன் அப்பாவுக்கு எவ்வளவு தான் நானும் சொல்லிட்டு இருக்கிறது என்று சொல்லி சிரித்தாலும்,அமைச்சர் விஸ்வநாதனுக்கும் உள்ளுக்குள் வெற்றியை நினைத்து கொஞ்சம் படபடப்பு இருந்தது என்பது உண்மை தான்"

அவரும் பயத்தை காட்டினால், சத்தியமூர்த்தி இன்னும் கவலை படுவார் என்பதால்,வெளியே காட்டிக் கொள்ளவில்லை .

வெற்றி என்று அவர் கையை நீட்ட, அங்கிள் என்றவாறு அவர் கையை பிடித்துக் கொண்டான்.

பின்னர் மற்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.

மேலும் சிறிது நேரம் பேசியவர்கள், விஸ்வநாதனிடம் சொல்லிக்கொண்டு வெற்றியும் சத்தியமூர்த்தியும் மீனம்பாக்கம் ஏர்போர்ட் நோக்கி சென்றனர்.

ஒரு மணி நேரத்தில் வந்து சேர்ந்தனர்.அப்பா ஒன்னும் நினைக்காமல் போ என்று சொல்ல,சரிப்பா என்றவர்,நீயும் உன் உடம்பை பார்த்துக்க.

ஜாக்கிரதை கண்ணு என்றபடியே மகனின் கையை இறுக்கி பிடிக்க, ஒன்னும் இல்லைப்பா.

இதுலாம் சும்மா டிரையல் தான்.இன்னும் உன் மவன் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்குதானே என வெற்றி கேட்க,கண்டிப்பாக என் மகன் சாதனையை உலகமே பாராட்டணும்.

அது பார்த்து நான்காலம் முழுவதும் ரசிக்கணும் இது தான் என்னோட ஆசை என்றார்.

கோயம்புத்தூர் செல்லும் பிளைட் அறிவிப்பு வந்ததும் மகனிடம் சொல்லிக் கொண்டு,சத்தியமூர்த்தி அங்கிருந்து சென்று விட,தந்தையின் உருவம் மறையும் வரை வெற்றியும் பார்த்துக்கொண்டே நின்றான்"

"ஒரு மணி நேரம் வானில் பறந்து வந்த ஏர்இந்தியா விமானம்,கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது"

வழக்கமான பார்மாலிட்டிஸ் முடித்துக் கொண்டு டிராலியோடு சத்தியமூர்த்தி வெளியே வர,அங்கே கோபி நின்று கொண்டிருந்தான்

மாமா என்று அவரிடமிருந்து டிராலி பேகை வாங்கியவன்,எப்படி மாமா இருக்கீங்க?.எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?என்று கேட்க,எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

நான் நல்லா இருக்கேன் மாப்ளை.ஊர்ல எல்லாரும் எப்படி இருக்கீங்க?என்று கேட்டார்.

"அனைவரும் நலம் மாமா என்றவன், சரி கிளம்பலாமா என்க ம்ம் என்றார். பின்னர் இருவரும் காரில் ஏறி பொள்ளாச்சியில் இருக்கும் வேடன்புத்தூரை நோக்கி சென்றனர்"

அவன் எப்படி மாமா இருக்கானென்க,போலீஸ் கட்டிங்கில் என் பையன் கம்பீரமா இருக்கான் மாப்ளை என்று பெருமையாக சொன்ன சத்தியமூர்த்தி,பின்னர் விமான விபத்து பற்றி இருவரும் பேசிக்கொண்டே தங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.

ஆர்கலி எங்கே...?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top