Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 453
- Thread Author
- #1
சதூர்வேதமங்கலம்:
" ஆர்கலி இங்கே என்னடி நடக்குதென்று முணு முணுத்தவாறு வீட்டின் உள்ளே வந்தவள், அய்யோ என கத்திக்கொண்டு அதிர்ந்து திரும்பினாள்".
" ஏய் அவ்வளவு சீனெல்லாம் இல்லை என்றவன், என்னமோ துணியே இல்லாமல் நிக்கிற போல மூஞ்ச திருப்பிக்கிறியேடி என்க, ருத்ரனின் பேச்சை கேட்டவள், அறிவு இல்லையா??.
இப்படியா நிற்பாங்களென்றாள்?.
ஏன் இதுக்கு என்ன குறை? என்று தன்னை பார்த்தவன், அய்யோஓஓஓ என்றவாறு இப்பொழுது ருத்ரனே உள்ளே ஓடி போனான்.
அடேய், என்னடா அவ முன்னாடி போய் இப்படி நின்னுறுக்க?. சும்மாவே லபோ திபோயென்று கத்துவாள்.
"ருத்ரா அவள் கிட்ட தலையை குடுக்காமல், மரியாதையா தப்பிச்சிக்கோடா என முணு முணுத்தவன், ரெஸ்ட் ரூமிற்கு சென்று, நைட் டிரஸை போட்டு கொண்டவன்,கட்டிலின் மேல் வந்து உட்கார்ந்து கொண்டு, தனது ஃபோனை பார்க்க ஆரம்பித்தான்".
" பிசாசு புடிச்சவன் என திட்டிக் கொண்டவள், வெளி லைட்டை ஆப் பண்ணி விட்டு, கதவை தாழிட்டவள், டிவியை ஆன் பண்ணியவாறு அங்கிருந்த சேரில் உட்கார்ந்து கொண்டாள்".
" நேரமும் ஓடிக் கொண்டிருந்தது".
" அப்பொழுது ருத்ரனுக்கு கால் வர, அட்டென் பண்ணியவன் ம்ம் சொல்லு என்க, அங்கு சொல்ல பட்ட செய்தியை கேட்டு சரி என்றான்".
" டேய் தடி மாடு நான் எவ்வளவு பெரிய விஷயம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன், நீ என்னமோ சாதாரணமாக சரி என்கிறாயே என ஆது கேட்க, லூசு பயலே, பொண்ணு பார்க்க போக சொன்னதே நான் தான்".
" நீ மரியாதையா வாயை மூடிட்டு போனை வை என்று ருத்ரன் சொல்ல, என்னடா சொல்லுற என்று ஆது அதிர்ந்து போய் கேட்டான்".
" ஆமா டா தடி மாடு.ராகினி தான் விஷயத்தை சொன்னாள்.அதான் மாமா கிட்ட விஷயத்தை நான் சொன்னேன் என்க, அடப்பாவிங்களா".
"நேற்று நைட்டில் இருந்து எனக்கு எவ்வளவு பெரிய பீதியை கிளப்பிட்டீங்கனு தெரியுமாடா என ஆது கேட்ட,நல்லாவே தெரியுமேனு சிரித்து கொண்டே போனை பார்த்த ருத்ரன், மணி என்னவென பார்க்க, இரவு பத்து என்று காட்டியது".
" இவள் என்ன பண்ணுறாளென்று எழுந்து பார்க்க போக, டிவி ஆப் பண்ணும் சத்தம் கேட்டு உட்கார்ந்து கொண்டான்".
" நைட் லேம்பை ஆன் பண்ணி விட்டு உள்ளே வந்தவள், கட்டில் மேலிருந்த தலகாணியையும், பெட்ஷீட்டையும் எட்டி எடுத்தவள், தரையில் விரித்து படுக்க, ஹலோ மேடம் பாவம் எல்லாம் எனக்கு பார்க்க வேண்டாம்".
" நானே தரையில் படுத்துக்குறேனென்று ருத்ரன் சொல்லி எழுந்தான்".
" கண்டவனுக்கெல்லாம் பாவம் பார்க்க நான் ஒன்னும் அன்னை தெரசா இல்லை என்று படுத்துக்கொண்டே ஆர்கலி சொல்ல, அதைக் கேட்டவனுக்கு கடும் கோபம் வந்தது".
" ஏய் மரியாதையா எந்திரிடி என்றான். யாருக்கோ சொல்கிறான் என்பது போல் அவள் படுத்திருக்க, 3 என்பதற்குள் மரியாதையா நீயா எழுந்து வந்தால் நல்லது. இல்லன்னாக்க இங்கு என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது என்று சொன்னான்"
" ருத்ரனின் வார்த்தையை கேட்டவளுக்கு சிறிது பயம் வந்தது. இருந்தும் அதை காட்டிக்காமல் படுத்திருந்தாள்".
" கட்டில் மேலிருந்து எழுந்தவன், அவளின் முன்பு வந்து நிற்க,ஆத்தாடி ஒரு முடிவோடு தான் இருக்கான் போலயென்று எழுந்தாள்".
" இமைக்காமல் எதிரில் நிற்பவளை பார்த்தவன்,எப்படி இது உனக்கு வந்தது என அவள் வயிற்றை காட்டி கேட்க, எதுவும் சொல்லாமல் திரும்பி நின்றவளின் அருகில் நெருங்கி வந்தவன், ம்ம் பதில் சொல்லு????
நான் தான் கண்டவனாச்சே?, அந்த கண்டவனோட எப்படி ஒன்னா இருந்த? சொல்லுடி என்று அவளின் தோள்பட்டையை பிடித்து கேட்க, டோன் டச்சென்று அவனின் கையை தட்டி விட்டாள்"
" மிஸ்டர் நீங்க தொட்டாலே அருவறுப்பாக இருக்கின்றது என்றாள்".
" உண்மையிலே இந்த வார்த்தையில் ருத்ரன் சுத்தமாய் உடைந்து போனான். அதன் பின்னர் அங்கு இருக்க அவனுக்கு மனம் வரவில்லை".
" தனது போனை எடுத்தபடியே அறையிலிருந்து வெளியே வந்தவன், ஹாலில் இருந்த ஒயர் கட்டிலில் படுத்து விட்டான்".
" சற்று முன்னர் ஆர்கலி சொல்லிய வார்த்தைகள்,மீண்டும் மீண்டும் அவன் நினைவிற்குள் வர, அந்த ஆண்மகனின் கண்கள் கலங்கியது".
" வெகு நேரம் வரை யோசனையோடு இருந்தவன் ஒரு முடிவை எடுத்து விட்டு உறங்கினான்".
"பக்கத்து வீட்டில் சேவல் கூவும் சத்தம் கேட்டு கண்ணை திறந்த ஆர்கலி, எழுந்து ரெஸ்ட் ரூமிற்கு சென்று விட்டு வெளியே வந்தவள், மணி என்னவென்று பார்க்க, அதிகாலை 4.20 என்று காட்டியது"
" இவ்வளவு தான் ஆகுதா என முணு முணுத்தவள், சரி கொஞ்சம் காஃபி குடிச்சிட்டு படுப்போமென்று சொல்லியவாறு ஹாலிற்கு வந்தவள், அங்கே தூங்கி கொண்டிருப்பவனை பார்த்தாள்"
"பேன் காற்றில் முடிகள் ஆட,இடது கையை மடக்கி கண்களின் மேல் வைத்துக்கொண்டு தூங்குபவனின் அருகில் சென்றவள், ருத்ரனின் தலை முடியின் மேல் கையை வைக்க போக, அன்று அவளின் மேல் பணத்தை தூக்கி எறிந்தது நினைவிற்கு வர, கையை மடக்கியவள், கிச்சனிற்கு சென்றாள்".
" பின்னர் ஃப்ரிஜில் இருந்து பாலை எடுத்து தனக்கு மட்டும் காஃபியை தயாரித்து, மீண்டும் லைட்டை ஆப் பண்ணி விட்டு தனது அறைக்கு வந்து குடித்து முடித்து, கட்டிலின் மேல் படுத்த சில நிமிடத்தில் தூங்கி விட்டாள்".
"வழக்கம் போல எழுந்த ருத்ரன், கதவை திறந்து, மீண்டும் சாற்றி விட்டு, அங்கிருந்து பெரிய வீட்டை நோக்கி சென்று விட்டான்"
" ஹாலில் உட்கார்ந்து பெரியவர்களும், கண்ணன் தம்பதியரும் டீ குடித்துக் கொண்டிருக்க, அப்பொழுது உள்ளே வந்த பேரனை பார்த்தவர்களுக்கு ஒன்னும் புரியவில்லை".
" கண்ணன் தம்பதியரிடம் நலம் விசாரித்தவன், அங்கிள் நான் உடனே சென்னைக்கு கிளம்பணும். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, டிரைவர் யாராவது கிடைப்பாங்களாயென கண்ணனிடம் கேட்க, அதுக்கு என்னப்பா".
" நம்ப வீட்டிலே டிரைவர் இருக்காங்க என்றவர், தனது போனை எடுத்து டிரைவர் நம்பருக்கு கால் பண்ணியவர், சீனு சென்னை வரைக்கும் போகணுமென்றவர், எத்தனை மணிக்கு வர சொல்லணுமென்று ருத்ரனிடம் கேட்க, இன்னும் ஒன் ஹவர்ல வர சொல்லுங்க அங்கிள் என்றான்".
" அதை போல ஒரு மணி நேரத்திற்குள் குளித்து தயாராகி சூட்கேஸோடு ஹாலிற்கு வந்த ருத்ரன், முடிந்தால் இன்றைக்கு நைட் வருவேன்".
" இல்லையென்றால் நாளைக்கு வந்து விடுவேனென்று சொல்லி விட்டு வெளியே செல்ல, டிரைவரும் வந்து சேர்ந்தார்".
" பின்னர் காரில் ஏறியவன் சென்னையை நோக்கி சென்றான்".
சென்னை ஏர்போர்ட்:
" வசுந்தராவின் வார்த்தைகளை கேட்ட மைக்கேல், வசு என்னடா என்க, தொண்டைக்குள்ளிருந்து வார்த்தைகள் வெளி வராமல், எதிர் பக்கமாய் வசு கையை நீட்டி ஏதோ சொல்ல முயல்வது தெரிந்தது".
" என்னடா வசுயென்று மைகக்கேலும் அங்கே பார்க்க, பத்திரிக்கையாளர்கள் ஓடி வந்து அங்கே குழுமி நிற்பது தெரிய, யாரா இருக்கும் என்று யோசித்தார்"
" வசுக்கு மட்டும் கண்கள் கலங்கி இரண்டு பக்கமும் கண்ணீர் வழிந்தோட, சுந்தரபாண்டியனோ, அம்மாடி வசு என்னம்மா ஆச்சு?, சொன்னால் தானே தெரியுமென்று பதறினார்".
" அப்பா, அப்பா என்றவர் அடுத்த வார்த்தை சொல்ல முடியாமல் கண்ணீரோடு இருக்க,பக்கத்தில் இருந்த சிலர், இவர்களை விசித்திரமாக பார்த்தனர்"
" வசு முதல்ல அமைதியாகுடா. தண்ணீர் குடிக்கிறியா என்க, கண்ணை மூடி திறந்து தன்னை நிதானப்படுத்திய வசுந்தரா,கையை மட்டும் கூட்டத்தை நோக்கி காட்டியபடியே இருந்தார்"
" என்னவா இருக்குமென்று மைக்கேல் அங்கு பார்க்க, சார் இன்னொரு கேள்வியென்று அங்கிருந்து செல்லும் ஒரு மனிதனை பத்திரிக்கையாளர்கள் பின் தொடர, சத்தியமூர்த்தி என்று வசுந்தரா கத்தினார்" .
" வசுந்தராவின் அழைப்பை கேட்டு மைக்கேல், சுந்தரபாண்டியன் மட்டுமல்ல, அங்கே பத்திரிக்கையாளர்களிடம் மாட்டிக்கொண்டவரும் அந்த குரலை கேட்டு யாரென்று திரும்பியவர், சில அடி தொலைவில் இருந்த உருவத்தை பார்த்து அதிர்ந்து போய் நின்றார்"
" தாராஆஆஆஆ என்றவாறு அவர் இவர்களை நோக்கி வர, அந்த நேரம் அப்பாஆஆஆ என்னும் சத்தம் கேட்டு, அதே அதிர்ச்சியோடு சத்தியமூர்த்தியும் சத்தம் வந்த திசையில் திரும்பி பார்த்தவர், விழிகள் விரிய மீண்டும் அதிர்ந்து போய் நிற்க, அப்பா என்றபடியே வேகமாக வந்த வெற்றி, அவரை அணைத்துக் கொண்டான் ".
" இந்த நிகழ்வை பார்த்து மைக்கேலும், சுந்தரபாண்டியனும் அதிர, வசுவோ குழம்பி போய் நின்றார்".
" அடுத்து என்ன பேசுவதென்று புரியாமல் மைக்கேலும், சுந்தரபாண்டியனும் ஒருவரையொருவர் பார்க்க, வசு மட்டும் குழம்பம் விலகாமல் சத்தியமூர்த்தியையும், வெற்றியையும் பார்த்தவாறு இருந்தார்".
" ஒன்பது மாதங்களுக்கு பின்னர் மகனை பார்த்த சத்தியமூர்த்திக்கு கண்கள் கலங்கியது. இந்த இடைப்பட்ட மாதத்தில் போனில் பேசியதோடு சரி".
" நேரில் பார்க்க வேண்டாம் என்பதில் வெற்றி உறுதியாக இருக்க, அவராலும் ஒன்னும் செய்ய முடியவில்லை".
" அப்பா எப்படி இருக்கீங்க என்க?, நல்லா இருக்கேன்யா, நீ எப்படி கண்ணு இருக்கயென்று மகனின் கன்னத்தை தடவி கேட்டவர், ஒரு நிமிஷமென்று, வெற்றியோடு வசுந்தரா இருக்கும் பக்கம் திரும்ப, என்னப்பா என்றான்".
" தலையசைத்து அங்கு பாரென்க, வெற்றியும் அவர் சொன்னதை கேட்டு என்னவா இருக்குமென்று பார்த்தவன், வசுந்தராவை கண்டு, இவங்க இவங்க நம்ப அம்மாப்பா என்று கத்தி சொன்னான்".
" அவன் சொல்வது வசுந்தராவின் காதில் நன்கு விழுந்தது".
" அம்மா என்றவாறு வெற்றி அவரை நோக்கி வர, ஏய் வெற்றி என பதறியவர், வசுந்தராவிற்கு கல்யாணம் ஆகியிருந்தால் பிரச்சினையாகிடுமே என மகனை தடுக்க போக, அதற்குள் வெற்றி வசுந்தராவிடம் வந்தவன், அம்மா என்று அணைத்துக் கொண்டான்".
" யாரோ ஒரு பையன் தன்னை அம்மா என்று அணைத்திருப்பதை கண்ட வசுந்தராவிற்கு, மனம் ஏனோ நிம்மதியாக இருந்தது".
" மைக்கேலும், சுந்தரபாண்டியனும், சத்தியமூர்த்தியை பார்க்க, அவரோ பதட்டமாய் நின்று கொண்டிருப்பதை கண்டார்கள்"
ஆர்கலி எங்கே...??
" ஆர்கலி இங்கே என்னடி நடக்குதென்று முணு முணுத்தவாறு வீட்டின் உள்ளே வந்தவள், அய்யோ என கத்திக்கொண்டு அதிர்ந்து திரும்பினாள்".
" ஏய் அவ்வளவு சீனெல்லாம் இல்லை என்றவன், என்னமோ துணியே இல்லாமல் நிக்கிற போல மூஞ்ச திருப்பிக்கிறியேடி என்க, ருத்ரனின் பேச்சை கேட்டவள், அறிவு இல்லையா??.
இப்படியா நிற்பாங்களென்றாள்?.
ஏன் இதுக்கு என்ன குறை? என்று தன்னை பார்த்தவன், அய்யோஓஓஓ என்றவாறு இப்பொழுது ருத்ரனே உள்ளே ஓடி போனான்.
அடேய், என்னடா அவ முன்னாடி போய் இப்படி நின்னுறுக்க?. சும்மாவே லபோ திபோயென்று கத்துவாள்.
"ருத்ரா அவள் கிட்ட தலையை குடுக்காமல், மரியாதையா தப்பிச்சிக்கோடா என முணு முணுத்தவன், ரெஸ்ட் ரூமிற்கு சென்று, நைட் டிரஸை போட்டு கொண்டவன்,கட்டிலின் மேல் வந்து உட்கார்ந்து கொண்டு, தனது ஃபோனை பார்க்க ஆரம்பித்தான்".
" பிசாசு புடிச்சவன் என திட்டிக் கொண்டவள், வெளி லைட்டை ஆப் பண்ணி விட்டு, கதவை தாழிட்டவள், டிவியை ஆன் பண்ணியவாறு அங்கிருந்த சேரில் உட்கார்ந்து கொண்டாள்".
" நேரமும் ஓடிக் கொண்டிருந்தது".
" அப்பொழுது ருத்ரனுக்கு கால் வர, அட்டென் பண்ணியவன் ம்ம் சொல்லு என்க, அங்கு சொல்ல பட்ட செய்தியை கேட்டு சரி என்றான்".
" டேய் தடி மாடு நான் எவ்வளவு பெரிய விஷயம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன், நீ என்னமோ சாதாரணமாக சரி என்கிறாயே என ஆது கேட்க, லூசு பயலே, பொண்ணு பார்க்க போக சொன்னதே நான் தான்".
" நீ மரியாதையா வாயை மூடிட்டு போனை வை என்று ருத்ரன் சொல்ல, என்னடா சொல்லுற என்று ஆது அதிர்ந்து போய் கேட்டான்".
" ஆமா டா தடி மாடு.ராகினி தான் விஷயத்தை சொன்னாள்.அதான் மாமா கிட்ட விஷயத்தை நான் சொன்னேன் என்க, அடப்பாவிங்களா".
"நேற்று நைட்டில் இருந்து எனக்கு எவ்வளவு பெரிய பீதியை கிளப்பிட்டீங்கனு தெரியுமாடா என ஆது கேட்ட,நல்லாவே தெரியுமேனு சிரித்து கொண்டே போனை பார்த்த ருத்ரன், மணி என்னவென பார்க்க, இரவு பத்து என்று காட்டியது".
" இவள் என்ன பண்ணுறாளென்று எழுந்து பார்க்க போக, டிவி ஆப் பண்ணும் சத்தம் கேட்டு உட்கார்ந்து கொண்டான்".
" நைட் லேம்பை ஆன் பண்ணி விட்டு உள்ளே வந்தவள், கட்டில் மேலிருந்த தலகாணியையும், பெட்ஷீட்டையும் எட்டி எடுத்தவள், தரையில் விரித்து படுக்க, ஹலோ மேடம் பாவம் எல்லாம் எனக்கு பார்க்க வேண்டாம்".
" நானே தரையில் படுத்துக்குறேனென்று ருத்ரன் சொல்லி எழுந்தான்".
" கண்டவனுக்கெல்லாம் பாவம் பார்க்க நான் ஒன்னும் அன்னை தெரசா இல்லை என்று படுத்துக்கொண்டே ஆர்கலி சொல்ல, அதைக் கேட்டவனுக்கு கடும் கோபம் வந்தது".
" ஏய் மரியாதையா எந்திரிடி என்றான். யாருக்கோ சொல்கிறான் என்பது போல் அவள் படுத்திருக்க, 3 என்பதற்குள் மரியாதையா நீயா எழுந்து வந்தால் நல்லது. இல்லன்னாக்க இங்கு என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது என்று சொன்னான்"
" ருத்ரனின் வார்த்தையை கேட்டவளுக்கு சிறிது பயம் வந்தது. இருந்தும் அதை காட்டிக்காமல் படுத்திருந்தாள்".
" கட்டில் மேலிருந்து எழுந்தவன், அவளின் முன்பு வந்து நிற்க,ஆத்தாடி ஒரு முடிவோடு தான் இருக்கான் போலயென்று எழுந்தாள்".
" இமைக்காமல் எதிரில் நிற்பவளை பார்த்தவன்,எப்படி இது உனக்கு வந்தது என அவள் வயிற்றை காட்டி கேட்க, எதுவும் சொல்லாமல் திரும்பி நின்றவளின் அருகில் நெருங்கி வந்தவன், ம்ம் பதில் சொல்லு????
நான் தான் கண்டவனாச்சே?, அந்த கண்டவனோட எப்படி ஒன்னா இருந்த? சொல்லுடி என்று அவளின் தோள்பட்டையை பிடித்து கேட்க, டோன் டச்சென்று அவனின் கையை தட்டி விட்டாள்"
" மிஸ்டர் நீங்க தொட்டாலே அருவறுப்பாக இருக்கின்றது என்றாள்".
" உண்மையிலே இந்த வார்த்தையில் ருத்ரன் சுத்தமாய் உடைந்து போனான். அதன் பின்னர் அங்கு இருக்க அவனுக்கு மனம் வரவில்லை".
" தனது போனை எடுத்தபடியே அறையிலிருந்து வெளியே வந்தவன், ஹாலில் இருந்த ஒயர் கட்டிலில் படுத்து விட்டான்".
" சற்று முன்னர் ஆர்கலி சொல்லிய வார்த்தைகள்,மீண்டும் மீண்டும் அவன் நினைவிற்குள் வர, அந்த ஆண்மகனின் கண்கள் கலங்கியது".
" வெகு நேரம் வரை யோசனையோடு இருந்தவன் ஒரு முடிவை எடுத்து விட்டு உறங்கினான்".
"பக்கத்து வீட்டில் சேவல் கூவும் சத்தம் கேட்டு கண்ணை திறந்த ஆர்கலி, எழுந்து ரெஸ்ட் ரூமிற்கு சென்று விட்டு வெளியே வந்தவள், மணி என்னவென்று பார்க்க, அதிகாலை 4.20 என்று காட்டியது"
" இவ்வளவு தான் ஆகுதா என முணு முணுத்தவள், சரி கொஞ்சம் காஃபி குடிச்சிட்டு படுப்போமென்று சொல்லியவாறு ஹாலிற்கு வந்தவள், அங்கே தூங்கி கொண்டிருப்பவனை பார்த்தாள்"
"பேன் காற்றில் முடிகள் ஆட,இடது கையை மடக்கி கண்களின் மேல் வைத்துக்கொண்டு தூங்குபவனின் அருகில் சென்றவள், ருத்ரனின் தலை முடியின் மேல் கையை வைக்க போக, அன்று அவளின் மேல் பணத்தை தூக்கி எறிந்தது நினைவிற்கு வர, கையை மடக்கியவள், கிச்சனிற்கு சென்றாள்".
" பின்னர் ஃப்ரிஜில் இருந்து பாலை எடுத்து தனக்கு மட்டும் காஃபியை தயாரித்து, மீண்டும் லைட்டை ஆப் பண்ணி விட்டு தனது அறைக்கு வந்து குடித்து முடித்து, கட்டிலின் மேல் படுத்த சில நிமிடத்தில் தூங்கி விட்டாள்".
"வழக்கம் போல எழுந்த ருத்ரன், கதவை திறந்து, மீண்டும் சாற்றி விட்டு, அங்கிருந்து பெரிய வீட்டை நோக்கி சென்று விட்டான்"
" ஹாலில் உட்கார்ந்து பெரியவர்களும், கண்ணன் தம்பதியரும் டீ குடித்துக் கொண்டிருக்க, அப்பொழுது உள்ளே வந்த பேரனை பார்த்தவர்களுக்கு ஒன்னும் புரியவில்லை".
" கண்ணன் தம்பதியரிடம் நலம் விசாரித்தவன், அங்கிள் நான் உடனே சென்னைக்கு கிளம்பணும். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, டிரைவர் யாராவது கிடைப்பாங்களாயென கண்ணனிடம் கேட்க, அதுக்கு என்னப்பா".
" நம்ப வீட்டிலே டிரைவர் இருக்காங்க என்றவர், தனது போனை எடுத்து டிரைவர் நம்பருக்கு கால் பண்ணியவர், சீனு சென்னை வரைக்கும் போகணுமென்றவர், எத்தனை மணிக்கு வர சொல்லணுமென்று ருத்ரனிடம் கேட்க, இன்னும் ஒன் ஹவர்ல வர சொல்லுங்க அங்கிள் என்றான்".
" அதை போல ஒரு மணி நேரத்திற்குள் குளித்து தயாராகி சூட்கேஸோடு ஹாலிற்கு வந்த ருத்ரன், முடிந்தால் இன்றைக்கு நைட் வருவேன்".
" இல்லையென்றால் நாளைக்கு வந்து விடுவேனென்று சொல்லி விட்டு வெளியே செல்ல, டிரைவரும் வந்து சேர்ந்தார்".
" பின்னர் காரில் ஏறியவன் சென்னையை நோக்கி சென்றான்".
சென்னை ஏர்போர்ட்:
" வசுந்தராவின் வார்த்தைகளை கேட்ட மைக்கேல், வசு என்னடா என்க, தொண்டைக்குள்ளிருந்து வார்த்தைகள் வெளி வராமல், எதிர் பக்கமாய் வசு கையை நீட்டி ஏதோ சொல்ல முயல்வது தெரிந்தது".
" என்னடா வசுயென்று மைகக்கேலும் அங்கே பார்க்க, பத்திரிக்கையாளர்கள் ஓடி வந்து அங்கே குழுமி நிற்பது தெரிய, யாரா இருக்கும் என்று யோசித்தார்"
" வசுக்கு மட்டும் கண்கள் கலங்கி இரண்டு பக்கமும் கண்ணீர் வழிந்தோட, சுந்தரபாண்டியனோ, அம்மாடி வசு என்னம்மா ஆச்சு?, சொன்னால் தானே தெரியுமென்று பதறினார்".
" அப்பா, அப்பா என்றவர் அடுத்த வார்த்தை சொல்ல முடியாமல் கண்ணீரோடு இருக்க,பக்கத்தில் இருந்த சிலர், இவர்களை விசித்திரமாக பார்த்தனர்"
" வசு முதல்ல அமைதியாகுடா. தண்ணீர் குடிக்கிறியா என்க, கண்ணை மூடி திறந்து தன்னை நிதானப்படுத்திய வசுந்தரா,கையை மட்டும் கூட்டத்தை நோக்கி காட்டியபடியே இருந்தார்"
" என்னவா இருக்குமென்று மைக்கேல் அங்கு பார்க்க, சார் இன்னொரு கேள்வியென்று அங்கிருந்து செல்லும் ஒரு மனிதனை பத்திரிக்கையாளர்கள் பின் தொடர, சத்தியமூர்த்தி என்று வசுந்தரா கத்தினார்" .
" வசுந்தராவின் அழைப்பை கேட்டு மைக்கேல், சுந்தரபாண்டியன் மட்டுமல்ல, அங்கே பத்திரிக்கையாளர்களிடம் மாட்டிக்கொண்டவரும் அந்த குரலை கேட்டு யாரென்று திரும்பியவர், சில அடி தொலைவில் இருந்த உருவத்தை பார்த்து அதிர்ந்து போய் நின்றார்"
" தாராஆஆஆஆ என்றவாறு அவர் இவர்களை நோக்கி வர, அந்த நேரம் அப்பாஆஆஆ என்னும் சத்தம் கேட்டு, அதே அதிர்ச்சியோடு சத்தியமூர்த்தியும் சத்தம் வந்த திசையில் திரும்பி பார்த்தவர், விழிகள் விரிய மீண்டும் அதிர்ந்து போய் நிற்க, அப்பா என்றபடியே வேகமாக வந்த வெற்றி, அவரை அணைத்துக் கொண்டான் ".
" இந்த நிகழ்வை பார்த்து மைக்கேலும், சுந்தரபாண்டியனும் அதிர, வசுவோ குழம்பி போய் நின்றார்".
" அடுத்து என்ன பேசுவதென்று புரியாமல் மைக்கேலும், சுந்தரபாண்டியனும் ஒருவரையொருவர் பார்க்க, வசு மட்டும் குழம்பம் விலகாமல் சத்தியமூர்த்தியையும், வெற்றியையும் பார்த்தவாறு இருந்தார்".
" ஒன்பது மாதங்களுக்கு பின்னர் மகனை பார்த்த சத்தியமூர்த்திக்கு கண்கள் கலங்கியது. இந்த இடைப்பட்ட மாதத்தில் போனில் பேசியதோடு சரி".
" நேரில் பார்க்க வேண்டாம் என்பதில் வெற்றி உறுதியாக இருக்க, அவராலும் ஒன்னும் செய்ய முடியவில்லை".
" அப்பா எப்படி இருக்கீங்க என்க?, நல்லா இருக்கேன்யா, நீ எப்படி கண்ணு இருக்கயென்று மகனின் கன்னத்தை தடவி கேட்டவர், ஒரு நிமிஷமென்று, வெற்றியோடு வசுந்தரா இருக்கும் பக்கம் திரும்ப, என்னப்பா என்றான்".
" தலையசைத்து அங்கு பாரென்க, வெற்றியும் அவர் சொன்னதை கேட்டு என்னவா இருக்குமென்று பார்த்தவன், வசுந்தராவை கண்டு, இவங்க இவங்க நம்ப அம்மாப்பா என்று கத்தி சொன்னான்".
" அவன் சொல்வது வசுந்தராவின் காதில் நன்கு விழுந்தது".
" அம்மா என்றவாறு வெற்றி அவரை நோக்கி வர, ஏய் வெற்றி என பதறியவர், வசுந்தராவிற்கு கல்யாணம் ஆகியிருந்தால் பிரச்சினையாகிடுமே என மகனை தடுக்க போக, அதற்குள் வெற்றி வசுந்தராவிடம் வந்தவன், அம்மா என்று அணைத்துக் கொண்டான்".
" யாரோ ஒரு பையன் தன்னை அம்மா என்று அணைத்திருப்பதை கண்ட வசுந்தராவிற்கு, மனம் ஏனோ நிம்மதியாக இருந்தது".
" மைக்கேலும், சுந்தரபாண்டியனும், சத்தியமூர்த்தியை பார்க்க, அவரோ பதட்டமாய் நின்று கொண்டிருப்பதை கண்டார்கள்"
ஆர்கலி எங்கே...??