• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
453
சதூர்வேதமங்கலம்:

" ஆர்கலி இங்கே என்னடி நடக்குதென்று முணு முணுத்தவாறு வீட்டின் உள்ளே வந்தவள், அய்யோ என கத்திக்கொண்டு அதிர்ந்து திரும்பினாள்".

" ஏய் அவ்வளவு சீனெல்லாம் இல்லை என்றவன், என்னமோ துணியே இல்லாமல் நிக்கிற போல மூஞ்ச திருப்பிக்கிறியேடி என்க, ருத்ரனின் பேச்சை கேட்டவள், அறிவு இல்லையா??.

இப்படியா நிற்பாங்களென்றாள்?.

ஏன் இதுக்கு என்ன குறை? என்று தன்னை பார்த்தவன், அய்யோஓஓஓ என்றவாறு இப்பொழுது ருத்ரனே உள்ளே ஓடி போனான்.


அடேய், என்னடா அவ முன்னாடி போய் இப்படி நின்னுறுக்க?. சும்மாவே லபோ திபோயென்று கத்துவாள்.

"ருத்ரா அவள் கிட்ட தலையை குடுக்காமல், மரியாதையா தப்பிச்சிக்கோடா என முணு முணுத்தவன், ரெஸ்ட் ரூமிற்கு சென்று, நைட் டிரஸை போட்டு கொண்டவன்,கட்டிலின் மேல் வந்து உட்கார்ந்து கொண்டு, தனது ஃபோனை பார்க்க ஆரம்பித்தான்".

" பிசாசு புடிச்சவன் என திட்டிக் கொண்டவள், வெளி லைட்டை ஆப் பண்ணி விட்டு, கதவை தாழிட்டவள், டிவியை ஆன் பண்ணியவாறு அங்கிருந்த சேரில் உட்கார்ந்து கொண்டாள்".

" நேரமும் ஓடிக் கொண்டிருந்தது".

" அப்பொழுது ருத்ரனுக்கு கால் வர, அட்டென் பண்ணியவன் ம்ம் சொல்லு என்க, அங்கு சொல்ல பட்ட செய்தியை கேட்டு சரி என்றான்".

" டேய் தடி மாடு நான் எவ்வளவு பெரிய விஷயம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன், நீ என்னமோ சாதாரணமாக சரி என்கிறாயே என ஆது கேட்க, லூசு பயலே, பொண்ணு பார்க்க போக சொன்னதே நான் தான்".

" நீ மரியாதையா வாயை மூடிட்டு போனை வை என்று ருத்ரன் சொல்ல, என்னடா சொல்லுற என்று ஆது அதிர்ந்து போய் கேட்டான்".

" ஆமா டா தடி மாடு.ராகினி தான் விஷயத்தை சொன்னாள்.அதான் மாமா கிட்ட விஷயத்தை நான் சொன்னேன் என்க, அடப்பாவிங்களா".

"நேற்று நைட்டில் இருந்து எனக்கு எவ்வளவு பெரிய பீதியை கிளப்பிட்டீங்கனு தெரியுமாடா என ஆது கேட்ட,நல்லாவே தெரியுமேனு சிரித்து கொண்டே போனை பார்த்த ருத்ரன், மணி என்னவென பார்க்க, இரவு பத்து என்று காட்டியது".

" இவள் என்ன பண்ணுறாளென்று எழுந்து பார்க்க போக, டிவி ஆப் பண்ணும் சத்தம் கேட்டு உட்கார்ந்து கொண்டான்".

" நைட் லேம்பை ஆன் பண்ணி விட்டு உள்ளே வந்தவள், கட்டில் மேலிருந்த தலகாணியையும், பெட்ஷீட்டையும் எட்டி எடுத்தவள், தரையில் விரித்து படுக்க, ஹலோ மேடம் பாவம் எல்லாம் எனக்கு பார்க்க வேண்டாம்".

" நானே தரையில் படுத்துக்குறேனென்று ருத்ரன் சொல்லி எழுந்தான்".

" கண்டவனுக்கெல்லாம் பாவம் பார்க்க நான் ஒன்னும் அன்னை தெரசா இல்லை என்று படுத்துக்கொண்டே ஆர்கலி சொல்ல, அதைக் கேட்டவனுக்கு கடும் கோபம் வந்தது".

" ஏய் மரியாதையா எந்திரிடி என்றான். யாருக்கோ சொல்கிறான் என்பது போல் அவள் படுத்திருக்க, 3 என்பதற்குள் மரியாதையா நீயா எழுந்து வந்தால் நல்லது. இல்லன்னாக்க இங்கு என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது என்று சொன்னான்"

" ருத்ரனின் வார்த்தையை கேட்டவளுக்கு சிறிது பயம் வந்தது. இருந்தும் அதை காட்டிக்காமல் படுத்திருந்தாள்".

" கட்டில் மேலிருந்து எழுந்தவன், அவளின் முன்பு வந்து நிற்க,ஆத்தாடி ஒரு முடிவோடு தான் இருக்கான் போலயென்று எழுந்தாள்".

" இமைக்காமல் எதிரில் நிற்பவளை பார்த்தவன்,எப்படி இது உனக்கு வந்தது என அவள் வயிற்றை காட்டி கேட்க, எதுவும் சொல்லாமல் திரும்பி நின்றவளின் அருகில் நெருங்கி வந்தவன், ம்ம் பதில் சொல்லு????

நான் தான் கண்டவனாச்சே?, அந்த கண்டவனோட எப்படி ஒன்னா இருந்த? சொல்லுடி என்று அவளின் தோள்பட்டையை பிடித்து கேட்க, டோன் டச்சென்று அவனின் கையை தட்டி விட்டாள்"

" மிஸ்டர் நீங்க தொட்டாலே அருவறுப்பாக இருக்கின்றது என்றாள்".

" உண்மையிலே இந்த வார்த்தையில் ருத்ரன் சுத்தமாய் உடைந்து போனான். அதன் பின்னர் அங்கு இருக்க அவனுக்கு மனம் வரவில்லை".

" தனது போனை எடுத்தபடியே அறையிலிருந்து வெளியே வந்தவன், ஹாலில் இருந்த ஒயர் கட்டிலில் படுத்து விட்டான்".

" சற்று முன்னர் ஆர்கலி சொல்லிய வார்த்தைகள்,மீண்டும் மீண்டும் அவன் நினைவிற்குள் வர, அந்த ஆண்மகனின் கண்கள் கலங்கியது".

" வெகு நேரம் வரை யோசனையோடு இருந்தவன் ஒரு முடிவை எடுத்து விட்டு உறங்கினான்".

"பக்கத்து வீட்டில் சேவல் கூவும் சத்தம் கேட்டு கண்ணை திறந்த ஆர்கலி, எழுந்து ரெஸ்ட் ரூமிற்கு சென்று விட்டு வெளியே வந்தவள், மணி என்னவென்று பார்க்க, அதிகாலை 4.20 என்று காட்டியது"

" இவ்வளவு தான் ஆகுதா என முணு முணுத்தவள், சரி கொஞ்சம் காஃபி குடிச்சிட்டு படுப்போமென்று சொல்லியவாறு ஹாலிற்கு வந்தவள், அங்கே தூங்கி கொண்டிருப்பவனை பார்த்தாள்"

"பேன் காற்றில் முடிகள் ஆட,இடது கையை மடக்கி கண்களின் மேல் வைத்துக்கொண்டு தூங்குபவனின் அருகில் சென்றவள், ருத்ரனின் தலை முடியின் மேல் கையை வைக்க போக, அன்று அவளின் மேல் பணத்தை தூக்கி எறிந்தது நினைவிற்கு வர, கையை மடக்கியவள், கிச்சனிற்கு சென்றாள்".

" பின்னர் ஃப்ரிஜில் இருந்து பாலை எடுத்து தனக்கு மட்டும் காஃபியை தயாரித்து, மீண்டும் லைட்டை ஆப் பண்ணி விட்டு தனது அறைக்கு வந்து குடித்து முடித்து, கட்டிலின் மேல் படுத்த சில நிமிடத்தில் தூங்கி விட்டாள்".

"வழக்கம் போல எழுந்த ருத்ரன், கதவை திறந்து, மீண்டும் சாற்றி விட்டு, அங்கிருந்து பெரிய வீட்டை நோக்கி சென்று விட்டான்"

" ஹாலில் உட்கார்ந்து பெரியவர்களும், கண்ணன் தம்பதியரும் டீ குடித்துக் கொண்டிருக்க, அப்பொழுது உள்ளே வந்த பேரனை பார்த்தவர்களுக்கு ஒன்னும் புரியவில்லை".

" கண்ணன் தம்பதியரிடம் நலம் விசாரித்தவன், அங்கிள் நான் உடனே சென்னைக்கு கிளம்பணும். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, டிரைவர் யாராவது கிடைப்பாங்களாயென கண்ணனிடம் கேட்க, அதுக்கு என்னப்பா".

" நம்ப வீட்டிலே டிரைவர் இருக்காங்க என்றவர், தனது போனை எடுத்து டிரைவர் நம்பருக்கு கால் பண்ணியவர், சீனு சென்னை வரைக்கும் போகணுமென்றவர், எத்தனை மணிக்கு வர சொல்லணுமென்று ருத்ரனிடம் கேட்க, இன்னும் ஒன் ஹவர்ல வர சொல்லுங்க அங்கிள் என்றான்".

" அதை போல ஒரு மணி நேரத்திற்குள் குளித்து தயாராகி சூட்கேஸோடு ஹாலிற்கு வந்த ருத்ரன், முடிந்தால் இன்றைக்கு நைட் வருவேன்".

" இல்லையென்றால் நாளைக்கு வந்து விடுவேனென்று சொல்லி விட்டு வெளியே செல்ல, டிரைவரும் வந்து சேர்ந்தார்".

" பின்னர் காரில் ஏறியவன் சென்னையை நோக்கி சென்றான்".

சென்னை ஏர்போர்ட்:

" வசுந்தராவின் வார்த்தைகளை கேட்ட மைக்கேல், வசு என்னடா என்க, தொண்டைக்குள்ளிருந்து வார்த்தைகள் வெளி வராமல், எதிர் பக்கமாய் வசு கையை நீட்டி ஏதோ சொல்ல முயல்வது தெரிந்தது".

" என்னடா வசுயென்று மைகக்கேலும் அங்கே பார்க்க, பத்திரிக்கையாளர்கள் ஓடி வந்து அங்கே குழுமி நிற்பது தெரிய, யாரா இருக்கும் என்று யோசித்தார்"

" வசுக்கு மட்டும் கண்கள் கலங்கி இரண்டு பக்கமும் கண்ணீர் வழிந்தோட, சுந்தரபாண்டியனோ, அம்மாடி வசு என்னம்மா ஆச்சு?, சொன்னால் தானே தெரியுமென்று பதறினார்".

" அப்பா, அப்பா என்றவர் அடுத்த வார்த்தை சொல்ல முடியாமல் கண்ணீரோடு இருக்க,பக்கத்தில் இருந்த சிலர், இவர்களை விசித்திரமாக பார்த்தனர்"

" வசு முதல்ல அமைதியாகுடா. தண்ணீர் குடிக்கிறியா என்க, கண்ணை மூடி திறந்து தன்னை நிதானப்படுத்திய வசுந்தரா,கையை மட்டும் கூட்டத்தை நோக்கி காட்டியபடியே இருந்தார்"

" என்னவா இருக்குமென்று மைக்கேல் அங்கு பார்க்க, சார் இன்னொரு கேள்வியென்று அங்கிருந்து செல்லும் ஒரு மனிதனை பத்திரிக்கையாளர்கள் பின் தொடர, சத்தியமூர்த்தி என்று வசுந்தரா கத்தினார்" .

" வசுந்தராவின் அழைப்பை கேட்டு மைக்கேல், சுந்தரபாண்டியன் மட்டுமல்ல, அங்கே பத்திரிக்கையாளர்களிடம் மாட்டிக்கொண்டவரும் அந்த குரலை கேட்டு யாரென்று திரும்பியவர், சில அடி தொலைவில் இருந்த உருவத்தை பார்த்து அதிர்ந்து போய் நின்றார்"

" தாராஆஆஆஆ என்றவாறு அவர் இவர்களை நோக்கி வர, அந்த நேரம் அப்பாஆஆஆ என்னும் சத்தம் கேட்டு, அதே அதிர்ச்சியோடு சத்தியமூர்த்தியும் சத்தம் வந்த திசையில் திரும்பி பார்த்தவர், விழிகள் விரிய மீண்டும் அதிர்ந்து போய் நிற்க, அப்பா என்றபடியே வேகமாக வந்த வெற்றி, அவரை அணைத்துக் கொண்டான் ".

" இந்த நிகழ்வை பார்த்து மைக்கேலும், சுந்தரபாண்டியனும் அதிர, வசுவோ குழம்பி போய் நின்றார்".

" அடுத்து என்ன பேசுவதென்று புரியாமல் மைக்கேலும், சுந்தரபாண்டியனும் ஒருவரையொருவர் பார்க்க, வசு மட்டும் குழம்பம் விலகாமல் சத்தியமூர்த்தியையும், வெற்றியையும் பார்த்தவாறு இருந்தார்".

" ஒன்பது மாதங்களுக்கு பின்னர் மகனை பார்த்த சத்தியமூர்த்திக்கு கண்கள் கலங்கியது. இந்த இடைப்பட்ட மாதத்தில் போனில் பேசியதோடு சரி".

" நேரில் பார்க்க வேண்டாம் என்பதில் வெற்றி உறுதியாக இருக்க, அவராலும் ஒன்னும் செய்ய முடியவில்லை".

" அப்பா எப்படி இருக்கீங்க என்க?, நல்லா இருக்கேன்யா, நீ எப்படி கண்ணு இருக்கயென்று மகனின் கன்னத்தை தடவி கேட்டவர், ஒரு நிமிஷமென்று, வெற்றியோடு வசுந்தரா இருக்கும் பக்கம் திரும்ப, என்னப்பா என்றான்".

" தலையசைத்து அங்கு பாரென்க, வெற்றியும் அவர் சொன்னதை கேட்டு என்னவா இருக்குமென்று பார்த்தவன், வசுந்தராவை கண்டு, இவங்க இவங்க நம்ப அம்மாப்பா என்று கத்தி சொன்னான்".

" அவன் சொல்வது வசுந்தராவின் காதில் நன்கு விழுந்தது".

" அம்மா என்றவாறு வெற்றி அவரை நோக்கி வர, ஏய் வெற்றி என பதறியவர், வசுந்தராவிற்கு கல்யாணம் ஆகியிருந்தால் பிரச்சினையாகிடுமே என மகனை தடுக்க போக, அதற்குள் வெற்றி வசுந்தராவிடம் வந்தவன், அம்மா என்று அணைத்துக் கொண்டான்".

" யாரோ ஒரு பையன் தன்னை அம்மா என்று அணைத்திருப்பதை கண்ட வசுந்தராவிற்கு, மனம் ஏனோ நிம்மதியாக இருந்தது".

" மைக்கேலும், சுந்தரபாண்டியனும், சத்தியமூர்த்தியை பார்க்க, அவரோ பதட்டமாய் நின்று கொண்டிருப்பதை கண்டார்கள்"

ஆர்கலி எங்கே...??
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
453
சென்னை-சிம்ஹன் கெஸ்ட் ஹவுஸ்:

" மகனின் வருகைக்காய் தனா காத்திருந்தார்.திடிரென்று அதி காலையில் கால் பண்ணிய ருத்ரன், இன்னும் நான்கு மணி நேரத்தில் சென்னைக்கு வருவதாகவும், வக்கீலை அழைத்துக் கொண்டு, கெஸ்ட் ஹவுஸிற்கு வருமாறு சொல்லி விட்டு வைத்து விட்டான்".

" தனாவிற்கு என்ன விஷயமென்று புரியவில்லை. சதூர்வேதமங்கலத்திற்கு சென்றிருப்பது தெரிந்திருக்க, பிறகு எதுக்கு இங்கே என யோசனையோடு இருந்தார்"

" ருத்ரன் வந்த கார் மகாபலிபுரத்திலிருக்கும் அவர்கள் கெஸ்ட்ஹவுஸிற்கு வந்து சேர்ந்தது".

" அண்ணா உள்ளே வந்து ரெஸ்ட் எடுங்களென்று ருத்ரன் சொல்ல, டிரைவர் சீனுவோ, பரவாயில்லை தம்பி, நான் காரில் இப்படியே படுத்துக்குறேன்".

" பிரச்சினை இல்லை, நீங்க போய்ட்டு ஆக வேண்டிய வேலையை முடிச்சிட்டு வாங்களென்க, சரிங்கணா, எதா இருந்தாலும் உள்ளே வாங்களென்று சொல்லியவன், காரிலிருந்து இறங்கி போய் காலிங் பெல்லை அடிக்க, வேலையாளும் வந்து கதவை திறந்தவர், ருத்ரனை பார்த்து வாங்க தம்பி என்றார்".

" காலடி சத்தம் கேட்டு பேசிக்கொண்டிருந்த நண்பர்கள் இருவரும் வாசல் பக்கம் பார்க்க, அங்கே ருத்ரன் வருவது தெரிந்தது.

மகனின் கையில் இருந்த கட்டை பார்த்தவர், வீரா என்னாச்சு என்று பதறி எழுந்து அவனிடம் போக, ஒன்னும் இல்லை. சின்ன காயம் தானென்று சொல்லி விட்டு, வாங்க அங்கிள் எப்படி இருக்கீங்க?

வீட்ல ஆன்ட்டி,மனோ நல்லா இருக்காங்களா? என்று விசாரித்தான்".

" எல்லாரும் நல்லா இருக்காங்க வீரா நீ எப்படி இருக்க உன் பிசினஸ் எப்படி போகுது? என்று கேட்க, நல்லா இருக்கிறேன் அக்கிள் என்றான்".

" சரி சொல்லு எதுக்கு வர சொன்னா என்க,மாமா அக்ரிமெண்ட் ஒன்னு ரெடி பண்ணனும் என்றான்.சரி பண்ணிடலாம் வீரா".

" என்ன அக்ரிமெண்ட் என்று சொன்னால் தானே அதுக்கு ஏற்பாடு பண்ண முடியுமென்று புகழேந்தி கேட்க, ம்ம் என்றவன், அங்கிள் இங்கு நடக்கும் பிரச்சனை உங்களுக்கு தெரியும் இல்லையா என்க...".

" ம்ம்,எல்லாம் தனா சொன்னான். விஷாலா தேவி கிட்ட இப்படி ஒரு செயலை எதிர் பார்க்கவில்லை".

" சரி முடிந்தது முடிஞ்சு போயிடுச்சு. அடுத்தது என்ன அத தான் பாக்கணும். உனக்கு தெரியாது ஒன்னும் இல்லை. நீ என்ன முடிவு பண்ணி இருக்க சொல்லு வீரா என்றார்"

" அங்கிள், எங்க ரெண்டு பேராலும் ஆர்கலி தான் ரொம்ப வேதனை பட்டிருக்காள். ஒரு மூனாவது மனுஷனாக கூட என்னை அவள் ஏற்றுக்க விரும்பவில்லை"

" அவள் இல்லாமல் எனக்கும் வாழ்க்கை இல்லை. இப்படி அவள் ஒரு இடத்திலையும், நான் ஒரு இடத்திலையும் இருந்தால், இந்த ஜென்மத்தில் ஒன்னு சேர்ந்து வாழ வழியில்லை".

" இப்போ இருக்கும் ஒரே பாலம் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தை தான். குழந்தையை வைத்து தான், அவளை சமாதானம் பண்ணி, எங்கள் வாழ்க்கையை சரி பண்ணிக்க முடியும்".

"வேறு வழியில்லாமல் குழந்தையை பெற்று குடுத்துட்டு, நீ எங்கே வேண்டுமானாலும் போயென்று சொல்லிட்டேன்".

" அவளும் அதற்கு சரியென்று சொல்லியிருக்காள். எப்படியும் குழந்தையை பிரிந்து ஒரு தாயால் இருக்க வாய்ப்பு ரொம்ப குறைவு தான்".

" ஒரு வருஷம் கூட இருந்து குழந்தையை வளர்த்து கொடுத்துட்டு போய்டணும். அதன் பின்னர் குழந்தை கிட்ட எந்த உரிமையும் கொண்டாட கூடாதென்று அக்ரிமெண்ட் எழுதுங்க அங்கிள் என்றான்".

" ருத்ரன் சொன்னதையெல்லாம் கேட்ட தனா, என்னப்பா இதெல்லாம்?. அந்த பொண்ணு கிட்ட வேண்டுமானால் அவளை மன்னிப்பு கேட்க சொல்லலாம்".

"யோசனையோடு இருந்த புகழேந்தி, தனா, வீரா சொல்றது சரி தான் டா".

" நிச்சயமாக எந்த தாயாக இருந்தாலும் புருஷன் வேண்டாமென்று சொல்லுவாங்கள் தவிர, பிள்ளையை வேண்டாமென்று சொல்ல வழியில்லை".

" இதில் ஒரு வேலிட் பிளஸ் பாயிண்ட் என்னவென்றால், ஆர்கலி ஆசிரமத்தில் வளர்ந்த பொண்ணு".

"உறவு, சொந்தம் இல்லாத அருமை அந்த பொண்ணுக்கு நல்லா தெரியும். அப்படி இருக்கும் போது, தன் வயிற்றில் சுமக்கும் தன்னோட சொந்த உறவை எப்படி விட்டு கொடுக்க மனம் வரும்?, சோ பிரிந்து போக வாய்ப்பு ரொம்ப குறைவு தான்".

"அப்புறம்,இதில் யோசிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கு. பெண்கள் எதை வேண்டுமானாலும் பொறுத்து போவாங்கள்,அவங்கள் நடத்தையை பற்றி அவதூராக பேசினால் தாங்கவே மாட்டார்கள்".

" இங்கு நீ அதை தான் பண்ணியிருக்க. சோ, ஆர்கலி அந்த கோவத்தை மனதில் வைத்து என்ன பேசினாலும், நீ பொறுத்து தான் போகணும்".

" கண்ணாடி பாத்திரத்தை கையாளுற போல தான் பெண்கள். இது கடவுள் உனக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்திருப்பதாக நினை".

" நம்பிக்கையோடு இரு வீரா, நல்லதே நடக்குமென்றவர், சரி நான் டாக்குமெண்ட்ஸ் ரெடி ஆனதும் சொல்கிறேன் என்க, அங்கிள் முடிந்தால் இன்னைக்கே இல்லனா நாளைக்கு ஆகுமா என்று ருத்ரன் கேட்க,ஒரு நிமிடம் யோசித்தவர், சரி இன்னைக்கு ஈவினிங் ரெடியாகிடும்".

" ஹைக்கோர்டில் முக்கியமான கேஸ் ஒன்னு வருது. மதியம் ரெண்டு மணிக்கு நான் கோர்டில் இருக்கணும். ஒன்னு பண்ணுறேன், என் ஜூனியர் பூஜாகிட்ட சொல்லி ரெடி பண்ணிடுறேன், நீ ஆபீஸ்ல போய் வாங்கிக்க முடியுமா என்று கேட்க,ஓகே அங்கிள் என்றான்".

"மேலும் சிறிது நிமிடங்கள் பேசியிருந்து விட்டு,புகழேந்தி அங்கிருந்து சென்று விட்டார்".

களுத்துறை பயணம்:

" டேய் ரோடு நல்லா இருக்கேயென்று சும்மா போனோன். எத்தனை முறை இங்கு வந்துருக்கோம், எனக்கு தெரியாதா என சமாளித்த ஆது, வண்டியை திருப்பி விட்டு, ஆதிராவின் வீடு இருக்கும் தெருவை நோக்கி ஓட்டினான்".

" சில நிமிடத்தில் வீட்டின் முன்பு போய் காரை நிறுத்த, மற்றவர்களெல்லாரும் இறங்கினர்".

" கார் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்த ஜேம்ஸ் வாங்க, வாங்க என்றவாறு கேட்டை திறந்து விட, காரை உள்ளே ஓட்டி போய் பார்க்கிங்கில் நிறுத்தினான்"

" பின்னர் சில நொடிகள் அமைதியாக இருந்தவன், எவனுக்கும் என் நிலை வர கூடாது".

" காதலிக்குறவளை எவனோ பொண்ணு பார்க்க வரான். அதற்கு நானே அவளை கூப்பிட்டு போறேன் பாரேன் என்னும் போது ஆதுவின் கண்கள் கலங்கியது".

" அப்போழுது, டேய் இன்னுமாடா காரை பார்க்கிங் பண்ணுகிறாய்? என்கும் ரஞ்ஜனின் குரல் கேட்க, தனது கண்ணை துடைத்து கொண்டவன், இதோ வரேன் டா என்று சொல்லிக் கொண்டு, கதவை திறந்து இறங்கியவன்,பின்னர் கார் கதவை சாத்தி விட்டு, இயல்பாக இருப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு நண்பனை நோக்கி சென்றான்".

" இருவரும் உள்ளே செல்ல, வாங்க தாம்பியென்ற ஆலிஸ் ஆதுவிற்கு குடிக்க தண்ணீர் கிளாஸை நீட்ட தேங்க்ஸ் என்று சொல்லியவாறு வாங்கியவன், இவள் எங்கே போய்விட்டாளென்று ராகினியை பார்வையால் தேடினான்".

" ஓஓஓ... மேடம் பொண்ணு பார்க்க வருவாங்களென்று மேக்கப் பண்ண போயிருப்பாள், அதான் என தனக்குள் சொல்லியவன், அமைதியாக இருக்க...

" ஆனந்த் மற்றும் ஜேம்ஸ் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்".

" சில நிமிடங்கள் செல்ல, ஜேம்ஸ் என்கும் ஆலீஸின் குரல் கேட்டு, இதோ வரேனென்று உள்ளே சென்றவர், சில நொடியில் வெளியே வந்தார்".

" ஆனந்தனிடம் விஷயத்தை சொல்ல, ம்ம் என தலையாட்ட,சற்று தள்ளி நின்ற மனைவியை பார்த்து ஜேம்ஸூம் ஓகே என்க, சில நொடியில் பட்டுபுடவை சரசரக்க, கையில் காஃபி டிரேயோடு ராகினியும் அங்கு வந்தாள்"

" ராகினி இதான் மாப்பிள்ளை பார்த்துக்கோ என ரஞ்ஜன் சொல்ல, ஆதுவின் முன்பு வந்த நின்றவள், கையிலிருந்த டிரேவை நீட்டினாள்".

" இப்பொழுது தான் ஆதுக்கு விஷயமே புரிந்தது".

" எதிரிலிருக்கும் அப்பாவையும், அருகில் இருக்கும் நண்பனையும் ஒரு பார்வை பார்த்தவன், எனக்கு இந்த பொண்ணை கல்யாணம் பண்ண இஷ்டமில்லை என்க,என்னா என்று அங்கிருந்த அனைவரும் அதிர, ராகினியோ அழுது கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள்".

" ஆதுவோ சாவகாசமாய் சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, கையிலிருந்த காஃபியை ரசித்து குடிக்க, ரஞ்ஜனுக்கு நண்பனின் சேட்டை புரிந்தாலும் சோகமாக இருப்பது போல முகத்தை வைத்துக் கொண்டான்".

" மகனின் செயலைப் பார்த்து ஆனந்தனுக்கு கோபம் வர,ஏன் டா,உனக்கு தான் ராகினியை ரொம்ப பிடிக்குமே?,அதனால தானே பொண்ணு பார்க்க வந்திருக்கோம்".

" அதும் உனக்கு சர்ப்ரைஸாக இருக்கட்டுமென்று சொல்லாமல் உன்னை கூப்பிட்டு வந்தால், இப்போ இப்படி சொல்லிட்டு இருக்கியே என்றார்"

" ஆன்டி வழக்கம் போல உங்க காஃபி அல்டி மேட் என்று காலி கப்பை டீப்பாயின் மேல் வைத்தவன், ராகினியை எனக்கு பிடிக்குமென்று உன்கிட்ட நான் சொன்னேனா? என்று திருப்பி கேட்டான்".

" டேய் வீரா தான் சொன்னான் என்க,ஓஓஓ என்ற ஆதவன், சரி முகத்தை பாவமா வச்சிக்காதப்பா, பார்க்க சகிக்கவில்லை என்றவன், உனக்கு மட்டும் தான் ஷாக் தரமுடியுமா?, எப்படி என் ஷாக்கென்று சிரித்தான்".

" மகனின் விளையாட்டை கேட்டு முறைத்தவர், ஜேம்ஸ் கண்டிப்பா ராகினிக்கு இவன் தான் மாப்பிள்ளையாக வேண்டுமா?, எதற்கும் ஒரு முறை நல்லா யோசித்தே முடிவெடுங்கள் என்றார்".

" அய்யோ அப்பாவென்று ஆது அலர, டேய் ராகினியை போய் பாரென்றார். ம்ம் என்றவாறு எழுந்தவன் ஜேம்ஸையும், ஆலிஸையும் அனுமதி வேண்டி பார்க்க,சில நொடிகள் இருவரும் அமைதியாக இருக்க, ஆதுக்கோ பக்கு பக்கென்று இருந்தது".

" ஜேம்ஸ் போதுமென்று ஆலீஸ் சொல்ல, ம்ம் என்றவர் பின்னர் சிரித்து தலையசைத்தார்கள்"

" ஆஞ்சநேயா நீ தான் காப்பற்றணுமென்று சொல்லியவன், ராகினி இருக்கும் அறை கதவை திறந்து எட்டி பார்க்க, ரூமிற்குள் அவள் இருப்பது போல தெரியவில்லை".

" எங்கே போனாளென்று உள்ளே வந்தவன், பால்கனி கதவு திறந்திருப்பதை பார்த்து, ஓஓஓ இங்க இருக்காளோயென்று செல்ல, அங்கே சுவற்றில் சாய்ந்து கொண்டு ராகினி அழுது கொண்டிருப்பது தெரிந்தது".

" இவ்வளவு தான் என் மேல் உனக்கு நம்பிக்கையா என்ற குரல் கேட்ட ராகினி, திடுக்கிட்டு திரும்பி பார்க்க, அங்கே தனது கைகளை கட்டிக்கொண்டு ஆது நின்று கொண்டிருந்தான்".

ஆர்கலி எங்கே...?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top