• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
360
நண்பர்கள் பிரிவு:

ஊட்டியில் மூன்று நாட்கள் சுற்றி பார்த்தவர்கள், மீண்டும் எப்போ சந்திப்போமோ என்பது தெரியாமல், மனமேயின்றி அங்கிருந்து புறப்பட்டனர்.

"கடந்த மூன்று நாட்களின் நிகழ்வுகளை தோழிகள் இருவரும் பேசிக்கொண்டு பர்தில் படுத்தவர்கள், களைப்பில் உறங்கி விட்டனர்".

" இருவரும் மயிலாடுதுறை ஜங்ஷனிற்கு வந்து சேர இரவு 9 மணி ஆனது. லக்கேஜோடு வெளியே வர, அங்கே டிரைவரோடு, கண்ணனும் காத்திருந்தார்".

டிரைவர் தான் வருவார் என்று எதிர்பார்க்க, இங்கே கண்ணன் வந்திருந்தது இருவருக்கும் சர்ப்ரைஸாக இருந்தது".

" பின்னர் ஊட்டி பயணத்தை கேட்டுக் கொண்டே காரில் சென்றவர்கள், போகும் வழியிலே இரவு டின்னரை முடித்துக்கொண்டு கிளம்பினர்".

" இவர்களுக்காய் தேவகியும் தூங்காமல் காத்திருந்தார்".

"மேலும் இரண்டு நாட்கள் செல்ல,மூவரிடமும் சொல்லிக்கொண்டு ஆதிரா இலங்கைக்கு( லண்டன்) கிளம்பினாள்".

ஆதிரா லண்டன் பயணம்:

" சென்னை ஏர்போர்டிற்கு ரியாவும், கண்ணனும் வந்திருந்தனர்.இன்னும் ஒரு மணி நேரத்தில் லண்டனுக்கு செல்ல வேண்டிய ஃப்ளைட் வந்து விடும். அதற்குள் இவர்களை அனுப்பி வைக்கணுமே, என தனக்குள் ஆதிரா முணுமுணுத்தாள்".

" அவள் நேரமோ என்னவோ, இலங்கைக்கு செல்லும் விமானம் இரண்டறை மணி நேரம் தாமதமாக செல்லுமென்று அறிவிப்பு வந்தது".

" தேங்க்யூ காட் என்றவள் ஒரு வழியாக பேசி இருவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தாள்".

பின்னர் அவளுக்கான ஃப்ளைட் அறிவிப்பு வர,பார்மாலிட்டிஸ் முடிந்து ஆதிராவும் ப்ளைட்டில் ஏறினாள்.25 மணி நேரம் வானில் பறந்து வந்த விமானம்,லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வந்து இறங்கியது".

" இது தான் ஆதிராவின் நீளமான விமானப்பயணம். தன் கனவை எப்படியாவது வெற்றியாக்கி விட்டு தான் இங்கிருந்து போக வேண்டுமென்ற உறுதியோடு , ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வர,பேபி என்ற குரலில் திரும்பினாள்".

"அங்கே நடுத்தர வயதுள்ள ஆண் ஒருவர் நிற்க, அங்கிள் என்றவாறு போய் அணைத்துக்கொண்டாள்" .

" வா பேபி வீட்ல போய் பேசிக்கலாம் என்று அவளை அழைத்துக்கொண்டு கார் நிற்கும் இடத்திற்கு சென்றார்"

" ஆதிராவுக்கும் அவருக்கும் பேசுவதற்கு வார்த்தை வரவில்லை. கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு பிறகு பார்த்துக் கொள்கிறார்கள் என்பதால், மனம் முழுவதும் சந்தோஷம் நிறைந்திருந்தது".

" ஒரு மணி நேர கார் பயணத்தில் அந்த வில்லாவின் உள்ளே கார் நுழைந்தது.இருவரும் லிப்டில் ஏற, அவர் 17 வது ப்ளோரை பிரஸ் பண்ண, சிறிது நிமிடத்தில் மேலே வந்து லிப்ட் நிற்க, கமான் பேபி என்றவர், ஆதிராவின் டிராலியை இழுத்துக் கொண்டு முன்னாடி நடக்க, ஆதிராவும் அவர் பின்னாடியே சென்றாள்".

"அங்கிருந்து லெப்ட் சைடு திரும்பியவர், நான்காவதாக இருக்கும் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார்".

" சில நொடியில் கதவை திறந்த பெண்மணி, என்ன ஜேம்ஸ் லக்கேஜ் என்க, சர்ப்ரைஸ் என்றவாறு ஆதிரா வந்து நிற்க, ஜேம்ஸின் மனைவியான ஆலீஸ், ஜீசஸ் என்று அதிர்ந்து போய், தனது நெஞ்சில் கையை வைத்துக் கொண்டார்".

" சிரித்துக்கொண்டே ஆலிஸை போய் ஆதிரா அணைக்க, பேபிமா என்று அணைத்துக் கொண்டவரின் கண்கள் கலங்கியது".

" சரி சரி வழியை விடுங்க உள்ள போகலாமேன்று ஜேம்ஸ் சொல்ல, வாடா பேபிமா என்று ஆதிராவோடு வீட்டின் உள்ளாரே சென்றவர் எத்தனை வருஷம் ஆகுது உன்னை பார்த்து பேபிமா என்று, அவள் கன்னத்தைக் கிள்ளி ஆலீஸ் முத்தம் கொடுத்தார்".

" சரி முதல்ல மாம், டாட் கிட்ட இங்கு வந்ததை சொல்லுறேனென்றவள், ஜேம்ஸிடமிருந்து ஃபோனை வாங்கி மேகலாவிற்கு கால் பண்ணினாள்".

" கால் அட்டென் பண்ணிய மேகலா, அண்ணா என்க, மாம் என்று தனது முகத்தை ஆதிரா காட்ட, ஹேய்..., நல்லபடியாக போய்ட்டியா பாப்பு".

" ம்ம் என்றவள், இந்தா உன் ஆருயிர் தோழியிடம் பேசுயென்று ஆலிஸிடம் ஃபோனை கொடுத்து விட்டு, ப்ரஷ் ஆக சென்றாள்".

" தோழிகள் இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு ஜேம்ஸிடம் கொடுக்க அவரும் பேசி முடித்தவர், பின்னர் போனை வைத்தனர்".

" அதற்குள் ஆதிராவும் பிரஷ் ஆகி வெளியே வந்தவள், என்ன ஆலிஸூஊஊஊ, ஒருத்தி ஊர்ல இருந்து வந்திருக்காளே, அவளுக்கு பசிக்குமே , ஏதாச்சு கொடுக்கணும்கிற எண்ணமே இல்லாமல், இப்படியே உக்காந்து இருக்குறியே என்கவும் நான் பார்த்து பிறந்தவளா நீ?, இன்று இவ்வளவு பெரிய பொண்ணா வளர்ந்திட்டியே என்று ஆச்சரியப்பட்டார்".

" ஹலோ டீச்சர்,இப்ப நான் வயசு பொண்ணு மட்டும் இல்லை. ஐ அம் டாக்டர், ஞாபகம் இருக்கா என்க?, நீ எப்பவும் எனக்கு பேபி மா தாண்டா என்று, அவள் கன்னத்தை கிள்ளியவர், இருடா பேபிமா,உனக்கு புடிச்ச காஃபி போட்டு எடுத்துட்டு வரேன் என்று சொல்லி, வேகமாக கிச்சன் உள்ளே சென்றார்".

"பின்னர் ஜேம்ஸூம், ஆதிராவும் காம்படேஷன் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்".

"அப்பொழுது பார்வையை வீட்டினுள் சுழல விட்டவள்,ஒரு பக்கம் சுவர் முழுவதும் இருந்த ஃபோட்டோக்களை பார்த்து விழி விரித்தாள்".

" அந்த சுவர் முழுவதும் ஆதிராவின் சிறு வயது புகைப்படங்களும், ஜேம்ஸ், ஆலிஸ், சுந்தர், மேகலா நால்வரும் இலங்கையில் இருந்த போது, எடுத்த புகைப்படங்களாக இருந்தது".

" அதன் அருகில் போய் பார்த்தவளுக்கு, களுத்துறையில் இவர்களோடு இருந்த சிறு வயது ஞாபகங்கள் வந்து செல்ல, இன்னொரு புகைப்படத்தை பார்க்க, அதில் இருந்த முகத்தை உற்று பார்க்க, ஆதிராவின் கண்கள் கலங்கியது".

" விரைவில் உங்களை மீட் பண்ணுவேன் மிஸ்டர். மை டியர் என மனதிற்குள் சொல்லிக் கொண்டவளின் தோளை தொட்ட ஆலீஸ், பேபிமா காஃபி ரெடிடா என்றார்".

"அதன் பிறகு இரண்டு நாட்கள் லண்டனில் சில இடங்களை மூவரும் சுற்றி பார்த்தனர். இன்னும் போட்டிக்கு ஒரு வாரம் தான் மீதம் இருந்தது".

" இரவும் பகலும் தங்களுக்கு தெரிந்தையெல்லாம் ,ஆதிராவிற்கு ஜேம்ஸ் தம்பதிகள் சொல்லி கொடுத்தனர்".

"ஆதிராவிற்கு ஓவியம் வரைய கற்று கொடுத்ததே ஆலீஸ் தான்".

" நேரமும் நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் ஓடியது".

" போட்டிக்கான நாளும் வந்தது".

" மூவரும் போட்டி நடக்கும் இடத்திற்கு வந்தனர்".

சதூர்வேதமங்கலம்:

" ஆர்கலிக்கு நாட்களும் வேகமாக ஓடியது".

" அவ்வப்போது சித்தர் சொல்லிய வார்த்தைகளும் நினைவுக்குள் வராமலில்லை".

" அன்று ஞாயிறு விடுமுறையாகையால் ஓய்வாக வாசல் திண்ணையில் உட்கார்ந்து, பாட்டு கேட்டுக் கொண்டிருக்கும் போது, தேவகியும், ரியாவும் அவர்கள் வீட்டு கதவை திறந்து வருவது தெரிந்து, பொறுமையாக கையை ஊன்றி எழுந்தவள், வாங்க என்றாள்".

" சிரித்துக்கொண்டே வந்த தேவகி, உடம்பு நல்லா இருக்காமா என்க, நல்லா இருக்குங்கம்மா என்றவள், உள்ளே வாங்க".

" நீண்ட வருடங்களுக்கு பின்னர் ரியா இந்த வீட்டிற்கு வந்ததால், இடத்தையும், அவர்கள் பராமரிப்பதையும் பார்த்தவளுக்கு, திருப்தியாக இருந்தது".

" பாட்டி, பாட்டி என தோட்டத்து பக்கம் குரல் கொடுத்தவள், இருவருக்கும் தண்ணீர் டம்ளரை நீட்ட,எடுத்துக்கொண்டனர்".

" இதோ வரேன் ஆரா கண்ணு என்றபடியே உள்ளே வந்த பாட்டியம்மா, வாங்கம்மா என்றார். பின்னர் பொதுவாக நலம் விசாரித்து விட்டு, இவள் தான் என்னுடைய அண்ணன் பொண்ணு ரியா".

" என் பையனுக்கு தான் மா நிச்சயம் பண்ணியிருக்கென்க, அப்படியாமா, ரொம்ப சந்தோஷமென்றனர். ரியாவும் ஆர்கலியை பார்த்து சிரித்து வைத்தாள்".

"அம்மா நாளைக்கு வீட்டில் பூஜை வைத்திருக்கோம். அதற்கு ரெண்டு பேரும் கட்டாயம் வர வேண்டும். அதான் நேரில் பார்த்து சொல்லிட்டு போகலாமென்று வந்தோம்".

" அதற்கு பாட்டியம்மாவும், சரி கண்ணு. ஸ்கூலும் கிருஷ்ண ஜெயந்திக்காக லீவ் தான். நிச்சயமாக வரோமென்றார்".

" இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே,ப்ரிஜில் இருந்த முட்டை கோஸைபகோடாவாக பொறித்தெடுத்தவள், ஆளுக்கொரு பிளேட்டில் வைத்து, அதனோடு காஃபியும் போட்டு ஹாலிற்கு கொண்டு வந்தாள்".

"அதை பார்த்த தேவகி, அட என்ன பொண்ணுமா நீ, எதற்கு உனக்கு இந்த வேலை என்க, இருக்கட்டுங்கம்மா. தினமுமா வரீங்களென்று சொல்லியபடியே ஆளுக்கொரு தட்டை கொடுத்தாள்".

" சாப்பிட்டு பார்த்த இருவரும் ரொம்ப நல்லா இருக்கே என்க, முட்டை கோஸில் பண்ணியது தான் என்று ஆர்கலி சொல்ல, நிஜமாவாயென வியந்தார்கள்".

" மேலும் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு எழுந்தவர்கள், தென்னை காய்க்குது தானே என்றவாறு தோட்டத்தை போய் பார்த்த தேவகி அசந்து போனார்".

" காய்கறிகள் செடிகளும், அவரை, புடலை பந்தலென்று, பார்க்கவே சுத்தமாகவும், அழகாகவும் இருந்தது".

" ரொம்ப நல்லா இருக்குமாயென்றவருக்கு, எல்லாம் பாட்டியோட கை வண்ணம் தான் என்றாள் ஆர்கலி".

"சரிங்கம்மா நாளைக்கு பார்க்கலாமென்று சொல்லிக்கொண்டு, தேவகி ரியாவோடு அங்கிருந்து சென்றார்".

" அடுத்த நாள் விடியலும் தொடங்கியது. நல்லநேரத்தை பார்த்து காலையிலே வீட்டில் கிருஷ்ணஜெயந்திக்கான பூஜையை பாட்டியும் செய்து முடித்தார்".

"நேரமும் ஓடியது. சரி கண்ணு பெரிய வீட்டின் பூஜைக்கு கிளம்பலாமென்க, ஓகே பாட்டி என்றவள், ரூமிற்கு தயாராக போனாள்".

" சிறிது நிமிடத்தில் தயாராகி வந்தவளை பார்த்தவர்,அழகா இருக்கடா கண்ணு. யாரு கண்ணும் என் பேத்தி மேலே படக்கூடாதுயென்றவர், அங்கிருந்த மை டப்பாவை திறந்து, விரலில் தொட்டவர், ஆர்கலியின் காதுக்கு பின்னால் பொட்டு வைக்க, அவள் சிரித்து விட்டாள்".

" பின்னர் வீட்டை பூட்டிக்கொண்டு, வாசல் லைட்டை ஆன் பண்ணியவர்கள், மெயின் கேட்டையும் பூட்டி விட்டு பெரிய வீட்டை நோக்கி நடந்தனர்".

"பூஜைக்காக வீடு அலாங்காரம் பண்ணியிருந்ததை பார்த்துக்கொண்டே இருவரும் உள்ளே செல்ல, அங்கே இருந்த கருப்பாயி இவர்களை பார்த்து கையசைத்தார்".

" வந்தவர்களை வரவேற்ற தேவகியும், ரியாவும், இருவரையும் வாங்க வாங்களென்று சொல்ல, தலையசைப்போடே உள்ளே வந்தவர்கள், ஹாலில் அலங்கரிக்கப்பட்டிருந்த கிருஷ்ணனின் உருவச்சிலையின் அழகில் மயங்கி போனார்கள்".

" அங்கே தெரிந்தவர்களும் இருக்க, டீச்சர் இங்கே வாங்களென்று இருக்கையை காட்ட, பாட்டியும் ஆர்கலியும் அங்கு சென்று அமர்ந்தனர்".

" கண்களால் வீட்டை சுற்றி பார்க்க, அங்கங்கே மாயக்கண்ணனின் ஃபோட்டோக்கள்,சுவற்றில் பிரேம் பண்ணபட்டது தொங்கிக் கொண்டிருந்தது".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
360
பூஜை முடிய ஒன்னரை மணி நேரம் ஆனது. ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தது, ஆர்கலிக்கு, இடுப்பும், கால்களிலும் வலி வர, தூணை பிடித்துக்கொண்டு எழுந்தவள், பாட்டி கொஞ்ச நேரம் வெளியே நிற்கிறேனென்று சென்றாள்".

" தற்செயலாக தேவராஜ் வாசல் பக்கம் திரும்ப, அங்கே நடந்து கொண்டிருந்த ஆர்கலியை பார்த்தவர், எங்கையோ பார்த்த முகமா இருக்கேயென்று யோசனையானார்".

" அப்பொழுது நண்பனை பார்த்த கண்ணன், அங்கே என்னடா என்க,ஆர்கலியை காட்டிய தேவராஜ்,அந்த பொண்ணு யாருடா? ஆர்கலியா.. ".

" அந்த பொண்ணு தான் நம்ப ஸ்கூலிற்கு புதுசா வந்த டீச்சர் டா.தங்கமான பொண்ணு.அவங்க பாட்டியும், அந்த பொண்ணும் தான் நம்ப ஓட்டு வீட்டில் இருக்காங்க".

" வீட்டுக்காரர் வெளியில( வெளிநாடு) இருக்காருடா.ஓஓ..அந்த பொண்ணோட முகம் எனக்கு ரொம்ப பழக்கப்பட்டது போல இருக்குடா".

" நானும் யோசித்து பார்க்குறேன் யாரென்று அடையாளம் தெரியவில்லை என தேவராஜ் சொல்ல, அதற்கு கண்ணனோ, அதான் ஒருவரை போல ஆறு பேர் இருப்பாங்க என்று சொல்வார்களே, அப்படி இருக்கும்டா என்றார்".

" பாட்டி, அக்கா எங்கேயென்று ரியா கேட்க, கால் மரத்து போய்ட்டென்று வாசல்ல தான் நடந்து கிட்டு இருக்கா கண்ணு என்க, சரி சரி நானே போய் பிரசாதம் தருகிறேனென்று சொல்லி வாசலுக்கு வந்தவள், நடந்து கொண்டிருந்த ஆர்கலியின் முன்பு போய் நின்று, அக்கா இந்தாங்க".

" கிட்டுக்கு பூஜை பண்ணிய பிரசாதமென்று லட்டுவை நீட்ட, கொஞ்சோண்டு எடுத்து வாயில் போட்டுக்கொண்டவள், நீ சாப்டியா ரியா?, இல்லைக்கா".

" இதோ என்றவாறு இரண்டு லட்டை வாய்க்குள் போட்டவளை பார்த்து ஆர்கலி முழிக்க,ரியாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது".

" அக்கா உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் என்க, கேளு ரியா என்றாள். அது வந்து வந்து, மாமா பேர் என்ன?, ருத்ர வீர சிம்ஹன் என ஆர்கலி சொல்ல, அந்த பெயரை எங்கையோ கேட்டிருப்பதாக ரியாவிற்கு தோணியது".

" திரும்ப சொல்லுங்கக்கா என்கவும், ஆர்கலி ருத்ர வீர சிம்ஹனென்று மீண்டும் அவள் சொல்ல, மாமா பெயர் ரொம்ப சின்னதா தான் இருக்கு".

" பாவம் இதற்கு மேல நீளமாக வைக்க முடியாது போலயென்று ரியா சிரிக்க, அடி வாலு என ரியாவின் தோளில் தட்டினாள்".

" அதன் பிறகு வந்த நாட்களில், ஆர்கலியோடு ரியாவும் நன்கு பழக ஆரம்பித்தாள்".

" ரியாவும் டாக்டர் என்பதால், அப்படி இப்படி என்று ஆர்கலிக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்க, சாமி முடியலடி. இன்னும் உனக்கு பைனல் செம் ரிசல்ட் வரவில்லைடி, அதில் பாஸ் ஆனால் தான் நீ டாக்டர். அதற்குள் என்னை போட்டு படுத்தாதடி என்றாள்".

கலசங்காடு:

" நீங்க தான் வனஜாவோட பெற்றோர்களாயென்று போலிஸ் எங்களிடம் கேட்க, இருவரும் ஆமாம் என்றோம்".

"உங்க பொண்ணுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. அங்க ஜிஹெச்ல இருக்காங்க. மற்றதை எல்லாம் அங்க வந்து பேசிக்கலாம், வாங்க என எங்களை அழைத்துக் கொண்டு ஜிஹெச்க்கு போனாங்கள்".

" எங்க ரெண்டு பேருக்கும் ஒன்னும் புரியலை. அழுது கொண்டே நாங்கள் ஹாஸ்பிடல்ல போய் பார்க்கும் போது, என் பொண்ணு ஆபத்தான நிலைமையில் இருப்பதாக டாக்டர் சொன்னார்".

ரெண்டு மணி நேரம் கழிச்சு, நர்ஸ் வந்து என்னை கூப்பிட்டாங்க"நான் உள்ளே போய் பார்க்கும் போது எங்க பொண்ணு மேலே பார்த்துக்கொண்டு இருந்தாள்".

"சரி பயத்துல தான் இப்படி இருக்கான்னு நாங்க பெருசா கண்டுக்கவில்லை. காயமெல்லாம் குணமாகி வீட்டுக்கு வந்த பிறகு,அவள் கிட்ட சின்ன சின்ன மாற்றங்கள் தெரிந்தது".

" எப்போ பார்த்தாலும் விட்டத்தையை பார்ப்பது, ஏதாவது வண்டி சத்தம் கேட்டால் காதை பொத்திக்கொண்டு வீட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்வதுனு, நாளுக்கு நாள் எதாவது இப்படி பண்ணிட்டு இருந்தாள்".

"பிறகு டாக்டரிடம் கூட்டிட்டு போய் காமிக்கும் போது கண்ணு முன்னாடி ஏதோ நடந்திருக்கு.அதை பார்த்து தான் மனதளவில் பாதிச்சிருக்காளென்று டாக்டர் சொன்னாங்க".

" அந்த டாக்டர் கிட்டயே வைத்தியம் பண்ணிக்கிட்டு மூணு வருஷம் ஆனது. அவ நல்ல குணமான பிறகு, அங்க உள்ள சொத்துக்களை விற்று விட்டு, இந்த ஊருக்கு வந்து புது வாழ்க்கையை தொடங்கினோம்".

" கரஸ்ல என் பொண்ணு படித்தாள்.அப்போ ஓர் நாள் அவள் சொல்லி தான் எங்களுக்கு விஷயமே தெரிஞ்சிது.அதைக்கேட்டு தலையில் இடி விழுந்த போல இருந்தது".

" அதன் பின்னர் தான் வனஜாவிற்கு மாப்பிள்ளை பார்த்தோம். உங்க ஜாதகம் என் பொண்ணோடு பொருந்தி வந்தது, அதன் பின்னர் நடந்தது தான் உங்களுக்கு தெரியுமேயென்று வனஜாவின் பெற்றோர்கள் சொல்லி முடித்தார்கள்".

" எல்லாம் கேட்ட நகுலனுக்கும், ஜீவாவிற்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை".

" எதுவும் பேசாமல் குழந்தைகளோடு அங்கிருந்து சென்று விட்டனர். நகுலனுக்கு தான் மகனின் வாழ்க்கையை நினைத்து மீண்டும் கவலையானது".

" கல்யாணம், கல்யாணமென்று வற்புறுத்தி ஒத்த மகன் வாழ்க்கையை நாசமாக்கிட்டோமே? என்ற குற்ற உணர்ச்சி அவரை குடைய ஆரம்பித்தது".

" குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு, கடையையும் பார்க்க ஜீவாவிற்கு ரொம்ப சிரமமாக இருந்தது".

"இரவு உணவை சாப்பிட்டு முடித்து நகுலனின் ரூமிற்கு வந்த ஜீவா, அப்பா என்றான்.பேத்திகளை தட்டிக்கொடுத்து தூங்க வைத்தவர்,சோபாவில் உட்கார்ந்திருந்த மகனிடம் வந்தவர், சொல்லுப்பா என்க, அப்பா நான் யோசித்து ஒரு முடிவு பண்ணியிருக்கேன், இது தான் இப்போதைக்கு சரிவருமென்று எனக்கு தோணுதுப்பா என்க, ஒரு நொடி கண்ணை மூடி திறந்தவர், சரிப்பா".

" உன் யோசனை போலவே செய் என்க, அடுத்த இரண்டு நாளில் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கலசங்காட்டிற்கு ஜீவாவும், நகுலனும் வந்து சேர்ந்தனர்".

"இருவரின் முகத்தை வைத்தே ஏதோ அங்கு சரி இல்லை என்பது புரிந்து கொண்டவர்கள், எதையுமே கேட்காமல் வழக்கம் போல் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தனர்".

" மீனாட்சி, தனது பேரனை ஸ்கூலுக்கு ரெடி பண்ணியவர், என்னங்க என்க, இதோ வரேன் மா என்றவாறு உள்ளே வந்தவரிடம், கூப்பிட்டு போங்களென்றார்".

" சரி மா.சிம்ஹா போலாமா என வீரையன் கேட்க, அங்கு விளையாடிக்கொண்டிருந்த மாமன் மகள்களை பார்த்துக்கொண்டே ம்ம் என்று தலையசைத்தான்".

" பாப்பாங்க இங்க தான் இருப்பாங்க சிம்ஹா, வாய்யா என அழைத்துக்கொண்டு வாசலுக்கு வந்தவர், மச்சான் வாங்க. பள்ளிக்கூடம் வரை போய் வரலாமென நகுலனை கூப்பிட, அவரும் அவர்களோடு சென்றார்".

"ஜீவாவும் ஜெய்யும் காலையிலே வண்டி எடுத்துக்கொண்டு ரோட்டுக்கு வந்தவர்கள், அங்கிருந்த வாய்க்கால் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, உட்கார்ந்து கொண்டனர்".

"நண்பன் ஏதோ மன கஷ்டத்தில் இருக்கிறான் என்பதை ஜெய்யால் புரிந்து கொள்ள முடிந்தது. சிறிது நிமிடம் அமைதியாக இருந்த ஜீவா, பின்னர் வனஜாவை பற்றி அனைத்தையும் சொல்லி முடித்து கண் கலங்கினான்".

நண்பன் சொல்லியதையெல்லாம் கேட்ட ஜெய்யிற்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது".

" கொஞ்ச நாள் அப்பாவும் புள்ளைங்களும் இங்கு இருக்கட்டும் டா. இதுல ஒன்னும் சிரமம் இல்லையே? என்று ஜீவா கேட்க, அடிச்சி பல்லெல்லாம் ஒடச்சிடுவேன் டா".

"இதெல்லாம் நீ என்கிட்ட கேட்கணுமா? என்று சத்தம் போட்ட ஜெய், நீ கவனமா போயிட்டு தொழிலை பாரு.இது போதும்டா என்று நண்பனின் கையை இறுக்கமாக பிடிக்கும் போது, ஜீவாவின் கண்ணில் இருந்து விழுந்த கண்ணீர் ஜெய்யின் கையில் பட்டு தெரித்தது".

" சித்ராவை பற்றி ஏதாவது தெரிந்ததா? என்று ஜெய் கேட்க ,இல்லடா எதுவுமே தெரியலை".

" வனஜாவை டாக்டரிடம் காட்ட பணம் கொடுத்துட்டு வந்திருக்கிறேன். அவளோட கண்டிஷன் ஏற்கெனவே வைத்தியம் பார்த்த டாக்டருக்கு தான் தெரியும் ".

"புதுசா நாம இங்கு காட்டினால் அது சரி வராது என ஜீவா சொல்ல,ஆமாடா நீ சொல்றது வாஸ்தவம் தான் என்றவன், சரி வா போகலாமென்று இருவரும் வண்டியில் ஏறி வீட்டிற்கு வந்தனர்"

" மேலும் ஒரு வாரம் இருந்து விட்டு, எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு ஜீவா இலங்கைக்கு சென்று விட்டான்".

" ஒத்த புள்ளையா சிம்ஹன் மட்டும் இருந்த வீட்டில், இப்போது இரண்டு பெண் பிள்ளைகள் இருக்க, பெரியவர்களுக்கு மகிழ்ச்சி தாளவில்லை".

" ஒரு மாதம் சென்று நகுலனும் ஜீவாவிற்கு துணையாக இலங்கைக்கு சென்று விட்டார்"

"நாட்களும் மாதங்களாக ஓடியது. ஓர் நாள் ஜீவாவிடமிருந்து வனஜா இறந்து விட்டதாக தந்தி வந்தது. லீலாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை".

" மீனாட்சியிடம் பிள்ளைகளை விட்டு விட்டு, ஜெய், லீலா இருவரும் இலங்கைக்கு வந்தவர்கள், எல்லா காரியமும் முடிந்து ஊருக்கு புறப்படும் போது, இனி பிள்ளைகள் அங்கே இருக்கட்டுமென்று சொல்லி விட்டு வந்தார்கள்".

" கலசங்காட்டிற்கு பிள்ளைகள் வந்து இரு வருடம் ஆகிவிட்டது. அவர்களுக்கும் நான்கு வயது தொடங்க, சிம்ஹன் படிக்கும் பள்ளிக்கூடத்திலே கிரிஜா, சைலஜாவை சேர்த்து விட்டனர்".

" நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஜீவா வந்து பார்த்து செல்வான்".

" இப்பொழுது சிம்ஹன் ஆறாம் வகுப்பும், இரட்டையர்கள் இரண்டாம் வகுப்பும் படித்துக்கொண்டிருந்தனர்".

" ஓர் நாள் உறக்கத்திலே நகுலனின் உயிர் பிரிந்தது".

"கூட இருந்த ஒரு ஆதரவும் இல்லாமல் போக ஜீவா தான் உடைந்து போனான். நகுலனுக்கு 40 வது நாள் காரியம் முடிந்த அன்று வக்கீல் வீட்டிற்கு வந்திருந்தார்".

" இந்நாளில் லீலாவையும் வர வைத்திருந்தனர். நகுலன் சார் சாகுறதுக்கு முன்னவே உயில் எழுதி ரிஜிஸ்டர் பண்ணி இருந்தார்".

" அவர் இறந்து 40 நாளுக்கு பிறகு இதை பிள்ளைகளிடம் படித்து காட்ட வேண்டும் என, கைப்பட லெட்டர் எழுதி வைத்திருப்பதாக சொல்லியவர், உயிலை படிக்க தொடங்கினார்".

" அதாவது நகுலன் சுயமாய் சம்பாரித்த அத்தனை சொத்துக்களையும், மகன் மகள் இருவரின் வாரிசுகளுக்கு சமமா பிரித்து கொடுக்க வேண்டும் எனவும், தங்களின் பூர்வீக நகைகளையும், மனைவியின் நகைகளையும், மகளுக்கு கொடுக்க வேண்டும்".

" மீதமுள்ள எல்லாம் என் மகனின் உழைப்பு என்பதால், அதில் யாருக்கும் உரிமையில்லைனு எழுதியிருந்தார்".

" ஜீவா இன்னைக்கு தான் எங்களுக்கு கப்பலென்று ஜெய் சொல்ல, பெருமூச்சி விட்ட நண்பனை பார்த்தவன், கடைசி காலத்தில் உனக்கொரு துணை வேண்டும் டா. சித்ராவை தேடலாமென்க, வேண்டாம் டா என்று முடிவாக சொல்லி விட்டான்".

ஆர்கலி எங்கே...?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top