• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
360
வெற்றி-ஜனனி நினைவுகள்:

"இது நம்ம நண்பர் கோதண்டமும், அவரோட மனைவி பரணி என்றவாறு விஷயத்தை சொல்லும் போதே பல்லியின் சத்தம் கேட்டது".

" நல்ல சகுனமா இருக்கேயென்ற ராஜதுரைக்கு, வணக்கமுங்க என் பேரு கோதண்டம். கோயம்புத்தூர் தான் சொந்த ஊரு. ஒரு பையன் ஒரு பொண்ணு".

"பொண்ணு பவித்ராவை சென்னையில கட்டி கொடுத்துட்டேன். ரெண்டு வயசுல பையன் இருக்கு.என் பையன் ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் துபாய்க்கு வேலைக்கு போய் இருக்கான்".

" நீங்க ஆளு வச்சி தாராளமா விசாரித்துக்கோங்க.போதும் என்ற அளவு பொருளாதாரம் இருக்கு.வீட்டுக்கு நல்ல குணமுள்ள மகாலெட்சுமி வேண்டும், அதற்கு தான் உங்க கிட்ட வந்தோமென்று முடித்தார்".

"அதற்கு ராஜதுரையோ, அதான் தம்பியே கூட வந்துருக்கே, பிறகு என்னங்க. புள்ளைங்க ஜாதகத்தை போட்டு பார்த்து விட்டு, அடுத்ததை பார்க்கலாமென்க, தாராளமா பார்க்கலாமேயென்றனர்".

" பின்னர் மதிய உணவை அங்கையே சாப்பிட்டு விட்டு, ராணியின் ஜாதக காப்பியை வாங்கிக்கொண்டு, பொள்ளாச்சிக்கு புறப்பட்டனர்".

பொள்ளாச்சி:

அத்தை, எங்கே தான் அப்பாவும் வெற்றியும் போயிருக்காங்களென்று மீண்டும் ராணி கேட்க,ஒரு நல்ல காரியமாக போயிருக்காங்க கண்ணு என, காலையிலிருந்து சொன்ன அதே டயலாக்கை வள்ளியும் சொல்ல, ஆஆஆஆ என்று கத்தியவள், டிவியை ஆன் பண்ணி பார்க்க தொடங்கினாள்".

" ஒரு மணி நேரம் கடந்திருக்க, வெற்றியும், சத்தியமூர்த்தியும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அண்ணா என வள்ளி கூப்பிட, எல்லாம் நல்லபடியாக முடிஞ்சிதுமா".

" கொஞ்ச நேரம் படுக்குறேனென்று சத்தியமூர்த்தி தனது அறைக்கு சென்று விட,அடேய் என்னை தாமரை குளத்துக்கு கூப்பிட்டு போறேனு சொன்னியே என ராணி முறைக்க, அதுக்கென்னடி".

" வா போகலாமென்க,சரியென்று வள்ளியிடம் சொல்லிக்கொண்டு இருவரும் குளத்தை நோக்கி செல்ல,இவர்கள் வயல் வழியாக தான் போக வேண்டுமென்பதால், வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஜனனி இருவரையும் பார்த்தாள்".

" ஏன் டா, அப்படி எங்கே தான் போனீங்களென்க, உனக்கு தான் மாப்பிள்ளை பார்த்திருக்கு. அது விஷயமாக போனோமென்றான்".

" வெற்றி விளையாடுவதாக நினைத்தவள், அப்படியா சரி டா சரி. மாப்பிள்ளை மன்னார் என்ன செய்யுறான்? என்க, துபாய்ல இருக்கார் டி".

" நீ இனி துபாய்காரியா ஆகிவிடுவாயென்க, ஓஓஓ ஒட்டகம் மேய்க்குறானோ, எது துபாய் குறுக்கு சந்து, விவேகானந்தர் வீதி தானே மாப்பிள்ளை அட்ரஸ் என ராணி சொல்ல, இருவரும் சிரித்துக்கொண்டே நடக்கும் போது, ராணியின் கால் இடறி, வயலில் விழுந்தவள், வெற்றி என்று அலறினாள்".

" அவள் சத்தத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பார்க்க,பதறி வயலில் இறங்கிய வெற்றி, என்னாச்சுடா பாப்பு என்றவாறு, குழந்தையை போல கைகளில் தூக்க, வலது கால் காட்டி அழுதாள்".

" அங்கே பார்க்க கால் வீங்க ஆரம்பித்தது".

" ஒன்னும் இல்லைடா பாப்பு, ஒன்னும் இல்லை என்றவாறு தூக்கிக்கொண்டே வெற்றி வர, வயலில் இருந்தவர்கள் என்னாச்சிப்பா என்க, கீழே விழுந்துட்டாள் கா. கால் வீங்க ஆரம்பிச்சிட்டென்று சொல்ல, சின்னவரே போர் கொட்டாய்கிட்ட தூக்கிட்டு வாங்களென்று சொல்லியபடியே ராக்கம்மா பாட்டி வரப்பில் ஏறி முன்னே சென்றார்".

"வெற்றியும் அங்கு வர, கீழே இறக்குப்பா என்க, பொறுமையாக ராணியை கீழே உட்கார வைத்தான். பின்னர் கால் முட்டியை சோதித்தவர், நரம்புல சுளுக்கும், சதையும் பிரண்டிருக்கு என்றார்".

கலசங்காடு:

" பதினாறாம் நாள் பூஜையும் ஆரம்பமானது. நல்ல நேரத்தில் தங்களின் பூர்வீகமான தொட்டிலில், குழந்தையை கடத்த சொல்லி லீலாவிடம் மீனாட்சி சொல்ல, சரிங்கத்தை என்றவாறு குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்தாள்".

"அப்புறம்டா, மகனுக்கு என்ன பேர் செலக்ட் பண்ணியிருக்கனு பரமுவும், பன்னீரும் கேட்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்டா என்று ஜெய் சொல்ல, அடேய் மூஞ்ச ஒடைச்சிருவேன்".

" அப்போதிலிருந்து இதே கதையை தான் டா சொல்லுற என்க, நல்ல நேரம் ஆரம்பிச்சிட்டென்று ஐயர் சொல்ல, வீர சிம்ஹன், வீர சிம்ஹன், வீர சிம்ஹன் என தனது மகனின் காதில் ஜெய் மூன்று முறை சொல்ல, பிள்ளையின் பெயரை கேட்டவர்கள் அடி சக்கை, கலக்கிட்ட ஜெய் என்றனர்".

"வந்தவர்கள் எல்லாம் குழந்தைக்கு வாங்கிய நகைகளையும், துணிகளையும் கொடுத்து,ஜீனி தண்ணியை தொட்டு குழந்தையின் நாக்கில் வைத்து, பேரைச் சொல்ல, அவர்களுக்கு வயிறார சாப்பாடு போட்டு, ஜெய் குடும்பத்தினர் அனுப்பி வைத்தனர்".

"நகுலன் தனது மகளிடமும் சம்மந்திடமும் சொல்லிக் கொண்டு மறுநாள் இலங்கைக்கு சென்று விட்டார். நாட்களும் ஓடியது. குழந்தையும் வளர ஆரம்பித்தது".

" குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும், ஜீவாவை வரவைத்து ,சொந்த பந்தங்களோடு திருச்செந்தூருக்கு போய் மொட்டை அடித்து, காது குத்தி விட்டு முருகனை தரிசித்து வந்தார்கள்".

" வைத்தியகார அம்மா சொன்னது போல் வீர சிம்ஹன் பிறந்த நேரத்திலிருந்து அவர்கள் தொழிலும் மேலும் வளர்ந்தது. கலசங்காட்டிலேயே பெரிய நகைக்கடையை ஆரம்பித்தனர்".

" சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களும், இந்த பெரிய கடைக்கு வர, வியாபாரமும் நன்கு பெருத்தது".

" முதல் குழந்தையின் பிரசவத்தில் லீலாவின் அவஸ்தையை பார்த்த ஜெய்,ஒரு குழந்தை போதும் என்று,
கண்டிப்போடு வீட்டிலும் மனைவிடமும் சொல்லி விட்டான்".

" தாத்தா பாட்டியின் வளர்ப்பிலும், தாய் தந்தை அன்பிலும் வீர சிம்ஹன் வளர்ந்தான்.ஐந்து வயதானவுடன் கலசங்காட்டில் இருக்கும் பள்ளிக்கூடத்திலே மகனை சேர்த்து விட, வீரையன் தான் பேரனை பள்ளிக்கு அழைத்துப் போவதும், திரும்ப கூட்டிட்டு வருவதும் வேலையாக வைத்துக் கொண்டார்".

" ஜெய் தங்களது நகைக்கடையை முழு வீச்சில் பார்ப்பதால், அவனுக்கு உதவியாகவும் இருந்து கொண்டார். தந்தைக்கு இனி ஓய்வு தேவை என்பது தெரிந்து, அப்பா மற்றதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்".

" நீ உன் பேரனை பள்ளிக்கூடம் அனுப்புவதை பார்த்துக் கொள் என்று சொல்லி விட,உழைத்த உடம்பென்றாலும், மகனின் பேச்சை அவராலும் தட்ட முடியவில்லை".

"சந்தோஷத்தோடு பேரனோடு பயணப்பட்டார். பேரனின் வாழ்க்கைக்கு தேவையான அத்தனையும், தன் சிறுவயதிலிருந்து பட்ட கஷ்டத்தையும், அதற்கு பிறகு முன்னேறியதையும் ஒவ்வொரு நாளும் சொல்ல மறக்கவில்லை".

"அது எல்லாம் வீர சிம்ஹன் மனதிற்குள் நன்கு பதிந்தது.சில மாதங்களாகவே இலங்கையில் இருக்கும் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்பது தெரிந்ததிலிருந்து, லீலாவிற்கு அண்ணனை நினைத்து கவலை வந்தது".

" கடந்த மூன்று வருடங்களாக ஜீவாவை கல்யாணம் பண்ணிக்க சொல்லி, நகுலனும் வற்புறுத்திக்கொண்டு இருக்கின்றார்".

" ஆனால், ஜீவா அதற்கு பிடி கொடுக்கவேயில்லை.மேலும் இரண்டு வருடங்கள் ஓடியது".

" நகுலனின் உடம்பும் மேலும் பாதிக்க தொடங்கியது.தந்தையின் கவலைக்கான காரணம் புரிந்த லீலா,அண்ணனுக்கு ஒரு தந்தியை அனுப்பினாள்".

"நீ கல்யாணம் பண்ணிக்கவில்லை என்றால், நான் எங்கையாவது போயிடுவேன்னு , அதை படித்த ஜீவாவிற்கு தங்கையின் குணம் தெரிந்ததால், சரி நீயே பொண்ணை பாரு".நான் கல்யாணம் பண்ணிக்குறேனென்று தங்கைக்கு, பதில் தந்தி அனுப்பினான்".

" வீர சிம்ஹனுக்கும் ஏழு வயது வந்து விட்டது. முழுஆண்டு பரிட்சை லீவு விட, மனைவியையும், மகனையும் தனது தாய் தந்தையோடு, இலங்கைக்கு அனுப்பி வைத்தான் ஜெய்".

" ஏற்கெனவே பெண் தேடிகொண்டிருந்ததால், தெரிந்தவர்கள் மூலயமாய் வனஜாவின் சம்பந்தம் வர, அதையே பேசி முடித்தனர்".

" ஒரே மாதத்தில் கல்யாணத்தையும் முடித்து வைத்து விட்டு, இவர்கள் கலசங்காட்டிற்கு வந்தனர்".

" இரண்டு வருடம் குழந்தை இல்லாமல் இருக்க, பின்னர் ஒரே பிரசவத்தில் இரட்டை பிள்ளைகளாய் சைலஜாவும் கிரிஜாவும் பிறந்தார்கள்".

"அவர்களுக்கு இரண்டு வயது இருக்கும் போது,குலதெய்வ கோயிலுக்கு மொட்டை அடிக்க வர சொல்ல,வீர சிம்ஹனுக்கு லீவ் நேரம் பார்த்து வைத்ததால், குடும்பத்தோடு எல்லாரும் போயிருந்தனர்".

"அப்பொழுது ஜெய்யும், ஜீவாவும் பேசிட்டு இருக்க, 5 வயது பையன் ஒருவன் ஓடிவந்து அப்பாயென்று ஜீவாவின் காலை கட்டி பிடித்துக் கொண்டான்".

"இதை பார்த்து எல்லாரும் ஷாக் ஆகினர். ஜீவாவிற்கு பையன் யாரென்று அடையாளம் தெரியவில்லை. பின்னர் யாருப்பா நீ என்று கேட்க,அப்பா அப்பா எங்க போனப்பா?,உனக்காக தான், நானும் அம்மாவும் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றான்".

" அதைக்கேட்டு என்ன சொல்றதென்று யாருக்கும் ஒன்னும் புரியவில்லை. முதல்ல பூஜையை முடிங்கள். மற்றதை பிறகு பார்க்கலாமென்று நகுலனும், வீரையனும் சொல்ல,குழைந்தைகளுக்கு மொட்டையடித்து காதை குத்தியவர்கள், சாமிக்கு படையலை போட்டு, முடித்தார்கள்".

" பின்னர், அந்த பையனிடம் உங்க வீடு எங்கே இருக்கென்று ஜீவாவும், ஜெய்யும் கேட்க,வாங்கப்பா, அம்மா இங்க தான் இருக்காங்களென்று ஜீவாவின் கையை பிடித்துக்கொண்டு அழைத்து போனவன், பக்கத்து தெருவிலிருக்கும் ஒரு வீட்டுக்கு கூட்டிட்டு போனான்".

" அங்கே வாசலில் இருந்து பார்க்கும் போது, உள்ளே யாரோ ஒரு பெண்மணி சமையல் பண்ணிட்டு இருந்தாங்க. அம்மா என்று அந்த பையன் கூப்பிட்டு உள்ளே போக,எங்க கண்ணா போனாயென்றவாறு அங்கிருந்த பெண்மணி திரும்பிப் பார்க்க, சித்ரா என்று ஜீவாவும், ஜீவாயென அந்த பெண்மணியும் சொல்லி அதிர்ந்தார்கள்".

" நடப்பதை காலையில் இருந்து பார்க்க பார்க்க, வனஜாவிற்கோ கோவம் தலைக்கு ஏறியது.

"அப்பொழுது, ஜீவாவின் சட்டையை பிடித்து, இவள் யாரென்று வனஜா கேட்க,இவதான் நான் காதலித்து கல்யாணம் பண்ணிய, என்னோட மனைவி சித்ரா".

" கிளிநொச்சியில் வியாபாரத்துக்கு போகும் போது தான் எங்களுக்குள்ள பழக்கம்.ஒரு பிரச்சனையில் அவங்க கிராமத்தை யாரோ தீ வைத்து கொளுத்தி விட்டுட்டாங்க".

"நான் தமிழ்நாட்டுக்கு போயிருந்த நேரத்தில் இது நடந்து விட்டது. நான் வந்து பார்க்கும் போது அந்த இடமே தீக்கிரையா இருந்தால், யாருமே உயிரோடு இல்லை. இங்கிருந்த எல்லாருமே இறந்து விட்டார்களென்று சொல்லிட்டாங்க".

"சந்தர்ப்ப சூழலால் நானும் சித்ராவும் கோயில்ல கல்யாணம் பண்ணிக்கொண்டோம்.தங்கச்சிக்கிட்ட சொல்லி அப்பாக்கு சொல்லலாம் என்கும் போது தான், வீராவிற்கு காது குத்த லீலா அங்க வர சொல்லியது".

" சரி இதான் சந்தர்பமென்று சொல்ல நினைத்தேன்.ஆனால் சூழல் எனக்கு சொல்ல முடியவில்லை.திரும்ப ஊருக்கு வந்த பிறகு தான் செய்தி கேள்வி பட்டு உள்ளுக்குள்ளே செத்து விட்டேன்".

"சித்ராவை மறந்து வேற வாழ்க்கையில் ஈடுபட மனசு வரவில்லை".

" வருஷமும் போக, அப்பாவும் என்கிட்ட பேசுறதை நிறுத்திட்டாங்க. அந்த நேரத்தில் தான் லீலா தந்தி கொடுத்துச்சி. சரி தங்கச்சிக்காக கல்யாணம் பண்ண சம்மதித்தேன் என்றார்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
360
எல்லாவற்றையும் கேட்ட வனஜா, இதற்கு ஒரு போதும் நான் சம்மதிக்கமாட்டேன்.வாழ்ந்தால் எனக்கு மட்டும் தான் கணவனாகவும், என் பிள்ளைகளுக்கு மட்டும் தான் அப்பனாக வாழணும்".

" இல்லையென்றால் பிள்ளையோடு நான் தற்கொலை பண்ணிப்பேனென்க, அய்யோ வனஜா என அனைவரும் பதறினார்கள்".

"வனஜாவின் வார்த்தைகளை கேட்ட சித்ரா,மிஸ்டர்.ஜீவானந்தம், என்னால் உங்க வாழ்க்கையில் இனி எந்த பிரச்சினையும் வேண்டாம்".

" எந்த சூழலிலும் உங்கள் மனைவி, மகனென்று சொல்லிக் கொண்டு, உங்களிடம் நாங்கள் வரமாட்டோம் என்றவர்,தயவு செய்து இங்கிருந்து போயிடுங்கனு கையெடுத்து கும்பிட்டார்".

"வேறு வழியில்லாமல் கனத்த மனதோடு அங்கிருந்து எல்லாரும் வீட்டுக்கு வந்தாலும், ஜீவானந்தத்திற்கு குற்ற உணர்ச்சி தாங்க முடியவில்லை".

"தான் விரும்பி காதலித்து கல்யாணம் பண்ணிய மனைவியும் பிள்ளையும், அங்கே ஒரு வேளை சாப்பாட்டுக்கு, அடுத்தவர்களிடம் வேலைக்கு நிற்கிறார்கள் என்பதை நினைக்க நினைக்க, மனம் பொறுக்கவில்லை".

" திரும்பி பார்க்க, வனஜாவும் பிள்ளைகளும் தூங்குவது தெரிந்தது.சத்தமில்லாமல் பீரோவை திறந்து,சிறிது பணத்தையும் எடுத்துக் கொண்டு, அந்த நள்ளிரவில் சித்ரா வீட்டிற்கு செல்ல, அங்கே வீடு வெளிப்புறமாக பூட்டியிருந்தது".

" இந்த நேரத்தில் யாராவது பார்த்தால் சித்ராவையும் தவறாக நினைப்பார்கள். சரி காலையில் வந்து பார்க்கலாமென்று உடனே கிளம்பி வீட்டிற்கு வந்தவர், அங்கிருந்த கோலத்தை கண்டு திகைத்து போனார்".

" வீட்டிலிருந்த பொருட்களெல்லாம் உடைந்து கிடக்க, பேய் பிடித்தவள் போல ஆங்காரத்தோடு வனஜா உட்கார்ந்திருக்க, பிள்ளைகள் ஒரு பக்கம் அழ, நகுலன் தான் அவர்களை சமாதானம் பண்ணிக்கொண்டிருப்பது தெரிந்தது".

" எங்கே போனீங்களென்க, சும்மா வெளியே போனேனென்று ஜீவா சொல்ல,வப்பாட்டி வீட்டுக்கு போனேன்னு தைரியமா சொல்ல வேண்டியது தானே என்க, வனஜா மரியாதையா பேசு".

" சட்டப்படி பார்த்தால் அவள் தான் எனக்கு உரிமையுள்ள மனைவி, அப்போ நான் யாரு?, சொல்லு நான் யாரென்று ஜீவாவின் சட்டையை பிடித்து உலுக்கினாள்".

" ஏய் என்ன பண்ணுற ?என்று அவளை அமைதி படுத்துவதற்குள், ஜீவா ஓய்ந்து போய்விட்டான்".காலை பொழுதும் விடிய,யாருக்கும் தெரியாமல் வனஜா அவளது அப்பா வீட்டிற்கு சென்று விட்டாள்".

" வனஜாவை காணுமென்று வீடு முழுவதும் தேடி விட்டு, அவங்க அப்பா வீட்டில் சென்று பார்க்கலாமென்று பிள்ளைகளோடு, நகுலனும், ஜீவாவும் பக்கத்து ஊருக்கு சென்றார்கள்".

" வனஜாவோ மூர்கதனமாய் நடந்து கொள்ள, பைத்தியம் இன்னும் குணமாகவில்லை போலயென்று அவளின் அம்மா அப்பா புலம்புவதை கேட்ட ஜீவாவும், நகுலனும் என்னாஆஆ என அதிர்ந்தனர்".

" அவர்களின் சத்தம் கேட்டு பதறி எழுந்தவர்கள், அது வந்து வந்து என்க, நகுலனோ, உண்மைய சொல்லுங்கம்மா என்றார்".

" என் பொண்ணுக்கு சில வருஷமா மனநிலை பாதித்து இருந்தது. அதற்கு வைத்தியம் பார்த்து, முழுவதும் குணமாகிட்டாளென்று தெரிஞ்சி தான் சம்பந்தி கல்யாணம் பண்ணி வைத்தோம்".

" ஆனால் அவள் மீண்டும் அதே நிலமைக்கு இப்போ வந்து விட்டதை எங்களால் நம்ப முடியவில்லைனு சொல்லி கை கூப்பி அழுதனர்".

" என்ன சொல்லுறீங்களென்று ?ஜீவா கோவமாக கேட்க, தம்பி, தம்பி, மன்னிச்சிடுப்பா".

" என் பொண்ணு பக்கத்து தெருவில இருக்கும் ஒரு பையனை விரும்பியிருக்கிறாள். அந்த விஷயம் எங்களுக்கு தெரியாதுப்பா".

" சொந்தகாரவங்க வீட்டு பங்ஷனுக்கு நானும் என் கணவரும் ஒரு நாள் போயிருக்கும் போது, அந்த பையனோடு இவள் வெளியே போயிருக்காள்".

" வண்டியில போகும் போது லாரில இடிச்சி அந்த பையன் செத்துட்டான் பா.இவளை காயங்களோடு ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருக்காங்க".

" நாங்களும் வீட்டில் புள்ளையை காணோமேயென்று தெரிச்சவங்க எல்லாரிடமும் கேட்கும் போது ,எங்க நேரம் ஓட்டர் ஐடி இவ பையில இருக்க, போலீஸ் எங்களை தேடி வந்தாங்கள்".

சதூர்வேதமங்கலம்:

"நாளைக்கு கங்கைகொண்ட சோழபுரம் போகலாமாயென? கருப்பாயி கேட்க, ஓ எஸ் போகலாமேயண்ணி என்றாள்.

" புத்தகத்தில் படித்த கோயிலை, இன்று நேரில் பார்க்கும் ஆர்கலிக்கு ஆச்சர்யமும், சந்தோஷமும் போட்டி போட்டது".

" சிறு பிள்ளைகளோ சந்தோஷத்தில் துள்ளி குதித்து ஓடினார்கள்.இவர்கள் போன நேரம் சிவனுக்கு பூஜை நடந்து கொண்டிருக்க, நேராகா உள்ளே போய் சாமியை தரிசனம் செய்தார்கள்".

" பின்னர், பொறுமையா வா ஆராமா என்றவாறு படியில் இறங்கி, ஒவ்வொன்றாக சுற்றி பார்க்க, இருபது நிமிடம் ஆனது".

" அங்கங்கே சிலர் குடும்பத்தோடு மர நிழலில் உட்கார்ந்து சாப்பிடுவதும், பிள்ளைகள் ஓடி ஆடி விளையாடுவதும், காதலர்கள் கை கோர்த்து நடப்பதும் தெரிந்தது".

" இவர்களும் உட்கார இடம் தேடி அங்கே போய் புல் தரையில் உட்கார, பிள்ளைகளோ நாங்க விளையாடுறோமென்று ஓடினார்கள்".

" கோயிலின் சிறப்பை இன்னொரு பெண்மணி சொல்ல, ஆர்கலியும் கேட்டுக் கொண்டிருந்தாள்".

" அசதியின் காரணமாய், புல் தரையிலே படுத்துக் கொண்டனர்"

" அவ்வப்போது கருப்பாயி தான் எழுந்து போய் பிள்ளைகளை பார்த்து வந்தார்.பசுமை போர்த்திய இயற்கையின் சூழலும், மரங்களிலிருந்து வரும் காற்றும் மனதிற்கு இதத்தை கொடுக்க, நீண்ட நாட்களுக்கு பிறகு,ஆர்கலி நிம்மதியாக உறங்கினாள்".

" பேத்தி தூங்குவதை பார்த்த பாட்டிக்கு, மனதிற்குள் அவள் வாழ்க்கையை நினைத்து கவலையாக இருந்தது".

" அம்மா சண்டி சாமுண்டீஸ்வரி, எதாவது ஒரு அற்புதம் செய்து, வாழ வேண்டிய புள்ளைய அவள் புருஷனோடு சேர்த்து வைத்திடு தாயே என, மானசீகமாக தன் இஷ்ட தெய்வத்திடம் வேண்டிக் கொண்டார்".

" அப்பொழுது கோயில் நிர்வாகி ஒருவர், அங்கிருந்தவர்களிடம், அன்னதானம் நடக்குது போய் சாப்பிடுங்களென்று சொல்லிக் கொண்டே வந்தவர், இவர்களிடமும் சொல்லி விட்டு சென்றார்".

" நாம தான் சாப்பாடு கொண்டு வந்திருக்கோமே என கருப்பாயி சொல்ல, கோயிலுக்கு வரும் எல்லாருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காது கண்ணு".

" கடவுள் நமக்கு விதித்திருந்தால் தான் அந்த அன்னம் நமக்கு கிடைக்குமென்க, மற்ற இரண்டு பெண்மணிகளும் அப்போ நாமும் போகலாமா என்றனர் ".

" போகலாம்மா என்ற பாட்டி, ஆரா கண்ணு என அவளை எழுப்பியவர், வா சாப்பிடலாமென்று அழைத்துக் கொண்டு, பந்தி நடக்கும் இடத்திற்கு சென்றனர்".

" ஆர்கலிக்கு இதெல்லாம் புது அனுபவமாக இருந்தது. கோயிலில் அவள் சாப்பிட்டதெல்லாம் இல்லை".

" பின்னர் இவர்கள் பிள்ளைகளோடு உட்கார,சூடான உணவும்,தாமரை இலையில் பரிமாறப்பட்டது".

" சாப்பிட்டு எழுந்து கையை கழுவினர். பிள்ளைகள் மீண்டும் விளையாட ஓடி விட, நான் ஒரு முறை இந்த கோயிலை சுற்றி பார்த்து வரேனென்று சொல்லி, ஆர்கலி சென்றாள்".

" புத்தகத்தில் படித்ததை வைத்து ஒவ்வொரு சிலைகளையும் பார்த்துக் கொண்டே நடந்து வந்தவளுக்கு, களைப்பாக இருந்தது".

" அங்கிருந்த புல் தரையில் ஒரு பக்கமாய் போய் கால்களை, நீட்டி உட்கார்ந்து விட்டாள்".

" சுற்றிலும் பார்வையை ஓட விட்டுக் கொண்டிருந்தவளின் எண்ணங்கள், திருச்சூரில் உள்ளவர்களிடம் சென்றது".

" நிச்சயமாக நான் சொல்லாமல் வந்ததை நினைத்து தவறாக தான் நினைப்பார்கள். ஆனால் ஒரு விஷயம் மட்டும் அவளுக்கு இப்பொழுதும் பேரதிர்சியாக இருந்தது".

" தான் இங்கு இருப்பது எப்படி அவருக்கு தெரிந்தது?. இலங்கையில் இருந்தவர் இங்கே எப்படி வந்தார்? என முணுமுணுக்க, கல்யாணத்திற்கு வந்திருப்பானென்று அவள் மனசாட்சி சொல்லியது".

" சரி என்னை போல அனாதை அவர் ஸ்டேட்டஸ்கு ஈடாகாது தான் என்றவளுக்கு, அன்று திருச்சூரில் ருத்ரன் பேசிய விஷயங்கள் நினைவிற்கு வர, ச்சை... ".

" கண்டவனையெல்லாம் இனி நம் வாழ்க்கையில் நினைத்து பார்க்க கூடாதென்று சொல்லியவள், கையை ஊன்றி பொறுமையாக எழுந்து செல்லும் போது, சில அடி தள்ளி உட்கார்ந்திருந்த சித்தர், ஆர்கலியை பார்த்து சிரித்தார்".

" அவரை பார்க்கவே சாமியார் போல் இருக்க, வணக்கம் சாமியென்று சொல்ல, தீர்க்க சுமங்கலியாக இருமா என்றார்".

"சித்தர் சொன்னதை கேட்டவள், இவருமா என விரக்தியாக சிரிக்க, கழுத்தில் தாலியில்லாமல் வயிற்றில் பிள்ளைகளோடு இருக்கேன்.எனக்கு இந்த ஆசீர்வாதமாயென நினைக்கிறாயோ? என்னும் சித்தரின் வார்த்தையை கேட்ட ஆர்கலிக்கு அதிர்ச்சியானது!".

" நாம மனதிற்குள் நினைத்த விஷயம் இவருக்கெப்படி தெரிந்ததென்று குழம்பியவளை, அருகில் வருமாறு கையை அசைத்தார்".

" என்னையா என்று அவள் கேட்க, உன்னை தான் ஆர்கலி என்றார். ஆர்கலியா என மீண்டும் அதிர்ந்தவள், சிறிது பயத்தோடே அவர் முன்பு போய் நிற்க, குடும்பம் ஒன்றாகும்"."முடிச்சிகள் அவிழும், குலம் தழைக்கும், கொண்டவன் வருகை விரைவிலென்றார்".

" அவர் சொன்னதை கேட்டவள், சாமி நானே ஒரு அனாதை. என்னை நம்பி வயிற்றிலென அவள் சொல்ல வர, இரண்டு ஜீவன்களென்று சித்தர் சொல்ல, இதுவும் உங்களுக்கு தெரியுமா என்றாள்".

" ம்ம் என சிரித்தவர், எல்லாம் சிவனின் திருவிளையாடல். இன்று உன்னை சந்திக்க வேண்டும். உன்னுடன் பேச வேண்டுமென்பதை, என் அப்பன் முடிவு செய்தது".

" தை பிறந்தால் வழிகள் பிறக்கும், நலமோடு வாழ்வாய், சென்று வா என்றார்".

" ஏதோ ஒரு மந்திர சக்திக்குள் கட்டு பட்டது போல, சரிங்க சாமி என்றவள் திரும்பி நடக்க, முடிவாக மும்முறை மணமேடை ஏறுவாய், மடியில் சுமந்தவர்களோடென்று சொன்னார்".

" அதைக்கேட்டு ஆணி அடித்த போல நின்றவள், திரும்பி பார்க்க, தலையசைத்து போய் வா என சித்தர் சொல்ல,ஆண்டவா என்ன இது சோதனை? ".

" இதுலாம் எப்படி சாத்தியமென்று புரியவில்லையே? என, தனக்குள் முணு முணுத்துக் கொண்டே தங்கள் வீட்டாரிடம் வந்தவள், அமைதியாக உட்கார்ந்தாள்".

" ஆச்சி நீங்க ரெண்டு பேரும் இங்கையே இருங்கள். நாங்கள் அந்த காட்டுக்கு போயிட்டு வரோம் என்று, கருப்பாயியும், மற்ற இரண்டு பெண்மணிகளும், பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர்".

"சிறிது நிமிடம் அமைதியாக இருந்தவள், பாட்டி என்றாள். சொல்லு கண்ணு என்க, பின்னர் சித்தரைப் பார்த்ததும் அவர் சொல்லிய விஷயத்தை சொல்ல, பாட்டிக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது".

"என்னம்மா சொல்ற?, சரி வா போய் பார்க்கலாம் என்று சொல்லி விட்டு, இருவரும் அங்கிருந்து சித்தர் உட்கார்ந்திருந்த இடத்திற்கு சென்று பார்க்க, அந்த இடம் காலியாக இருந்தது.

" அம்மா சாமுண்டி உன் கருணையோ என மனதிற்குள் சொல்லிக் கொண்ட பாட்டி, சரி வா கண்ணு.நடப்பது எல்லாம் அவங்களோட செயலென்று வானத்தை காட்டி சொன்னார்.

ஆர்கலி எங்கே....?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top