Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
சதூர்வேதமங்கலம்:
" கோழி கொக்கரக்கோ என்று பக்கத்து வீட்டில் கூவும் சத்தம் கேட்டு கண் விழித்த ஆர்கலி,எழுந்து ரெஸ்ட் ரூமிற்குள் சென்றவள், காலை கடன்களை முடித்து வெளியே வந்து பார்க்க, அங்கே பாட்டி தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது".
"பின்னர் சத்தம் இல்லாமல் கிச்சனிற்குள் போனவள், ஃப்ரிஜில் இருந்த பாலை எடுத்து சூடு பண்ணி, பாட்டிக்கு டீ போட்டு முடிக்கவும், பாட்டியும் எழுந்து உட்கார்ந்தார்".
" கட்டில் சத்தம் கேட்டு,பாட்டி டீ எடுத்துட்டு வரட்டுமா என்க, மூஞ்சி கழுவிட்டு வந்துடறேன் என்றவர், தோட்டத்திற்கு சென்று முகத்தை கழுவி, வாய் கொப்பளித்து விட்டு உள்ளே வர, அவர் கையில் டீ டம்ளர் கொடுத்து விட்டு, தனக்கானதை குடித்தாள்".
"ஆரா கண்ணு, காலையிலையே விதையை விதைச்சிடலாமா?, சரிங்க பாட்டி என்றவள், முதல் நாளே சாம்பலில் கலந்து வைத்த கீரை விதையையும், ஊறவைத்த மற்ற விதைகளும் எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு செல்ல, கிழக்கே சூரியன் உதயமாவது தெரிந்தது".
"அதை பார்த்த பாட்டி, சூரிய பகவானே முதன் முதலா இந்த ஊருக்கு வந்து நாங்க ஒரு விதையை விதைக்கிறோம்.நீ தானப்பா அருள் புரியணுமென்று வேண்டிக்கொண்டு விதையை தூவ, ஆர்கலியும் பாட்டி எப்படி செய்கிறாரோ அதேபோல் செய்தாள்".
"பின்னர் பாத்தி கட்டிய இடத்தில் ஒவ்வொரு விதைக்கும் இரண்டு அடிகள் இடைவெளி விட்டு சிறுசிறு துளைகளை போட்டபடி பாட்டியும் செல்ல, அதில் காய்கறிகள் விதையை போட்டு மண்ணை மூடிக்கொண்டே வந்தாள்".
"பிறகு விதைத்த விதைகளுக்கெல்லாம் தண்ணீரை விட்டவர்கள், முதல் நாள் கூட்டி ஒதுக்கிய குப்பைகளை போய் பாட்டியை கொளுத்தி விட, பாட்டி நான் போய் சாப்பாடு பண்ணட்டுமா என்றாள்".
"இவ்வளவு காலையிலேயே எதுக்கு கண்ணு, கொஞ்ச நேரம் இரு கண்ணு. சரி பாட்டி என்றவள் தோட்டத்திலிருந்து எல்லாத்தையும் சுற்றி பார்க்க, முதல் நாள் இருந்ததற்கும், இன்று இப்போது பார்க்க திருப்தியாக இருக்க,பக்கத்து வீட்டில் ஆட்கள் நடமாடுவது தெரிந்தது".
"சரி பாட்டி, நான் போய் முன் வாசலை கூட்டிட்டு கோலம் போடுறேனென்றவள், கிணற்றில் நீரை இறைத்து பக்கெட்டில் ஊற்றி எடுத்துக் கொண்டு,சந்து பக்கமாக முன் பக்கம் வந்தவள், வாசலில் தண்ணீரை தெளித்து கூட்டி விட்டு, கோலத்தை போட்டு முடிக்க, கேட் சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க,சங்கர் தான் நின்று கொண்டிருந்தான்".
"தங்கச்சிமா உன் அண்ணி பால் கொடுத்து அனுப்பியிருக்கா. கையிலிருந்த கோலமாவு டப்பாவை கீழ வைத்து விட்டு வாசலுக்கு சென்றவள், தாழ்பாளை திறந்து விட, உள்ளே வந்து வாளியை கொடுத்தவன், வரேம்மானு அங்கிருந்து செல்ல, இவளும் காலை டிபனை செய்ய தொடங்கினாள்".
" மேலும் இரண்டு நாட்கள் வேகமாக கடந்து சென்றது.திங்கட்கிழமை விடியலும் தொடங்கியது".
" இன்று வேலையில் ஜாயின் பண்ண வேண்டுமென்பதால், வழக்கம் போல நேரத்தோடே எழுந்தவள் பாட்டிக்கும் அவளுக்கும் டீ, பால் வைத்து குடித்து விட்டு குளிக்க சென்றாள்".
" அவள் வருவதற்குள் பாட்டியே காய்கறிகள் போட்ட வெஜிடபிள் உப்புமாவும்,சட்னியும் செய்து முடித்தார்".
" புதுப்புடவையில் ஒன்றை எடுத்து கட்டிக்கொண்டு, சுவற்றிலிருக்கும் கடிகாரத்தை பார்க்க, காலை 8 மணி என்று காட்டியது".
" சரி சீக்கிரமா காலை மதியம் சமைக்கலாமென்று கிச்சனிற்குள் சென்று பார்த்து, பாட்டிஈஈ என்றாள்".
" வாடா ஆரா கண்ணு".
" சூடா சாப்பிட்டுக்கோ".
" நான் பண்ண மாட்டேனா பாட்டியென்க, காலை, மதியம் நான் பார்த்துக்குறேன் கண்ணு.நைட்ல நீ வந்து செய், லீவில் இருக்கும் போது ரெண்டு பேரும் சேர்ந்தே செய்வோம், ஓரளவுக்கு எனக்கும் சமைக்க தெரியும் கண்ணுயென்க, பாட்டியென்று சிரித்தவள், தட்டில் போட்டு ஒரு வாய் வைத்தவள், வாவ் செம்ம செம் டேஸ்ட் என்றாள்".
" நீங்களும் வாங்க பாட்டி என்க, வேணாம் கண்ணு. நான் வீட்டில் தான் இருக்க போறேன் அதானால்,கொஞ்ச நேரம் போன பிறகு சாப்டுகிறேன்."
நீ சாப்பிட்டு,சாமியை கும்பிட்டு விட்டு,நல்ல நேரத்தில் போய் வேலையில் சேர்".
"சரி பாட்டி என்றவள், சாப்பிட்டு முடித்து நீண்ட பின்னலை பின்னி முடித்தவள்,நெற்றி வகுடில் பொட்டு வைக்க போகும் போது, இனி இது ஏனென்றது? அவள் மனசாட்சி".
" மற்றவர்களுக்கு கேள்விக்குறியா ஆகக்கூடதென்று உள்ளுக்குள் சொல்லியவள், பின்னர் குங்குமத்தையும், பொட்டையும் நெற்றியில் வைத்துக்கொண்டு அப்பாயின்மென்ட் லட்டர்,வாட்டர் பாட்டிலில் தண்ணீர் எடுத்து ஹேண்ட்பேகில் வைத்துக்கொண்டே மணியை பார்க்க எட்டே முக்கால் என்று காட்டியது".
"சரிங்க பாட்டி நான் போயிட்டு வரேனென்று அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க போக,அய்யோ ஏன் டா கண்ணு".
" மாசமா இருக்கும் போது எதுக்கு இப்படி?, நல்லா இருப்ப தாயி. பாத்து பத்திரமா போய்விட்டு வா. மறக்காமல்,மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துடு".
அவர் அன்பில் கண் கலங்கியவள்,சரிங்க பாட்டி. நீங்க பத்திரமா இருங்களென்று பள்ளிக்கூடத்தை நோக்கிச் சென்றாள்".
கபிலன்- ரியா நினைவுகள்
" வண்ணங்கள் தீட்டி முடித்தவள்,பின்னர் எழுந்து நின்று பார்க்க மனதிற்கு திருப்தியாக இருக்க, ஓகேயென்று உள்ளே செல்ல, அப்பொழுது வாசலுக்கு வந்து தேவகியோ கோலத்தை பார்த்து அசந்து போனார்".
" ஆதிமா ரொம்ப அழகா இருக்குடானு, அவள் நெற்றியை சுற்றி நெட்டி முறித்தவர்,இரு டீ எடுத்து வரேனென்று சொல்லும் போது வாக்கிங் போய்விட்டு வீட்டிற்கு வந்த கபிலன்,யார் மா ரங்கோலி போட்டா?,ரொம்ப அழகா இருக்கு?,ஆதி தான் பா".
" என்னம்மா சொல்லுற என்க, ஆதிராவோ கபிலனை முறைத்து பார்த்தாள்".
" தங்கையின் பார்வையை கண்டவன் சும்மாடா என்க, சமாளிப்பாணா என்றாள்".
" ஹீஹீஹீ என்றவன், நிஜமாகவே நீதான் போட்டியா ஆதி? என்றவனின் அருகில் வந்தவள், சத்தியமா நான் தான் போட்டேனென்று, கபிலன் தலையில் அடிக்க, அய்யோ என் மண்டையென்று கத்தினான்".
" கபிலன் கத்துவதை கேட்டுக்கொண்டே அங்கு வந்த கண்ணன்,என்னமா காலையிலே உன் அண்ணனுக்கு விளையாட்டு?".
"எதேஏஏ விளையாட்டா என்றவன், மண்டை பணியாரம் போல வீங்கி கிடக்கு, இவருக்கு நக்கலென்க, கபிலன் சொன்னதை கேட்ட ஆதிராவோ ஹாஹாஹா என சிரித்து விட்டாள்".
" பின்னர், அப்பா என்க, ம்ம் சொல்லுப்பா னு கண்ணன் கேட்க, உங்களுக்கு கோவம் இல்லையே?".
" மகன் எதைப் பற்றி கேட்கிறான் என்று புரிந்த கண்ணன், நிச்சயமா இல்லப்பா. உன் ஆசையை நிறைவேற்றுவது தான் இந்த அப்பனோட கடமை".
"அதுக்காய், எனக்கு பிடிக்கல என்பதற்காக உன்னோட ஆசையை தடை பண்ணனும் என்கிற எண்ணம், எனக்கு கொஞ்சம் கூட கிடையாது என்றவர், எப்போ கிளம்பணும்பா".
"எப்படி போற போல? என மகனிடம் ட்ரைனிங் பற்றி விசாரிக்க, திங்கட்கிழமை அங்கு இருக்கணும் என்றும், ஞாயிற்றுக்கிழமை கிளம்பினால் சரியா இருக்கும் பா".
" அப்புறம் பா,வர இரண்டு வருஷமாகும். நடுவில் நேரம் கிடைத்தால் தான் வருவேன்.முதல் மூன்று மாதம் உங்களை கான்டக்ட் பண்ண முடியாது.ஆனால் நீங்க வரலாமென்று நினைக்கிறேன்".
"நீங்க ரெண்டு பேரும் பத்திரமா இருந்து கொள்வீர்களா?, நாங்க என்னப்பா சின்ன பிள்ளைங்களா?, எங்களை பற்றி கவலை படாதே.".
"ஆமா,ரெண்டு வருஷம் ஆகுமா என்றார்.ம்ம் பார்ட் பார்டா பிரித்து தான் ட்ரைனிங் கொடுப்பாங்கள்பா. ரெண்டு வருஷம் முடிஞ்சா தான் உங்க பையன் ஐபிஎஸ் ஆபீசர் என்க, சந்தோசம் சந்தோஷம்".
"நல்லபடியா போயிட்டு வெற்றியோடு வாப்பா. உன்மேல எனக்கு பூரண நம்பிக்கை இருக்கு. நீ தொட்டதெல்லாம் வெற்றியாகவே இருக்கட்டும் என்று மகனை ஆசிர்வதித்தவர்,தேவகி தேவகி...".
" டீ போட போனியா?,இல்ல மாடு வாங்கி இனி தான் பால் கரக்குறியா?".
" இதோங்களென்று அங்கு வந்தவர், கணவருக்கும், மகனுக்கும் டீயை கொடுக்க, குடித்து முடித்தவர், தேவகி திடல்ல எள்ளு விதைக்கும் வேலை இருக்கு, நான் வயலுக்கு போயிட்டு வரேனென்ற கண்ணனோ அங்கிருந்து சென்று விட்டார்".
"அம்மா என்ன நீ எதுவுமே அதை பத்தி பேச மாட்டேங்கறனு கபிலன் கேட்க, நான் பேசறதுக்கு என்ன கண்ணா இருக்கு".
"உன்னோட விருப்பம் தான் என்னோட விருப்பமென்று தேவகி சொல்ல, அம்மான்னா அம்மா என்று அவர் தோளில் சாய்ந்து கொண்டவன், அப்புறம் இனிமே ரெண்டு பேரும் காதல் புறா தானே".
"உங்களை கேள்வி கேட்க ஆள் கிடையாது என்று தாயை கிண்டல் பண்ண, போடா போக்கிரி என மகனின் தலையில் கொட்ட, என்ன அம்மாவும் பொண்ணும் மாத்தி மாத்தி கொட்டி, என் மண்டைய ஒடச்சிடுவீங்க போல?".
"ஆமா அப்படியே, நாங்க கொட்டி தான் மாங்காய் போல பொளந்துடுச்சு பாரு என தேவகி சொல்ல,அம்மா நல்லா பேச கத்துக்கிட்ட நீ என்றான்".
"ஏன்பா, இத்தனை நாள் நான் என்ன ஊமையாகவா இருந்தேன்? என்று தேவகி கேட்க, தேவகி கலக்குற கலக்குற என்றவன், என்னமா,உன் மருமகளுக்கு இன்னும் விடியலையா?,இப்படி இருந்தாக்க எங்கே இருந்து என் வாழ்க்கை பிரகாசிக்கும்".
" அதிகாலை நாலு இல்லை அஞ்சு மணிக்கு எல்லாம் எழுந்து வாசல் கூட்டி, கோலம் போட்டு, 6 மணிக்கெல்லாம் டிபன் ரெடியா இருக்கிறது இல்லையா?, என்னவோ போ".
"உன் அண்ணன் பொண்ணை என் தலையில் கட்டி வைத்து, என் வாழ்க்கையை கெடுத்துட்ட என்று சொல்லிக் கொண்டிருந்தவன் காலடி சத்தம் கேட்டு திரும்பி பார்க்க, ரியாவோ,மாடிப்படியிலிருந்து அவனை முறைத்துக் கொண்டே கீழே இறங்கி வந்து கொண்டிருந்தாள்".
"ஆத்தாடி, சொன்னதெல்லாம் காதுல வாங்கிட்டா போலயே?, அடேய் கபிலா நீ செத்தடா என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்".
" ஹிஹிஹி அம்மா உன் மருமகளும் வந்தாச்சி டீ குடு, எனக்கு கொஞ்சம் மெயில் செக் பண்ணுற வேலை இருக்கு, நான் வரெனென்று அங்கிருந்து வேகமாக சென்றான்".
" வாடா ரியா, டீயா இல்லை காஃபி என்க, அத்தை, நான் போட்டுக்குறேன். நீங்கள் இருங்களென்றவள், எதுக்கு உங்க பையன் இப்படி தலைதெறிக்க ஓடுறாரு? என்றாள்".
" கோழி கொக்கரக்கோ என்று பக்கத்து வீட்டில் கூவும் சத்தம் கேட்டு கண் விழித்த ஆர்கலி,எழுந்து ரெஸ்ட் ரூமிற்குள் சென்றவள், காலை கடன்களை முடித்து வெளியே வந்து பார்க்க, அங்கே பாட்டி தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது".
"பின்னர் சத்தம் இல்லாமல் கிச்சனிற்குள் போனவள், ஃப்ரிஜில் இருந்த பாலை எடுத்து சூடு பண்ணி, பாட்டிக்கு டீ போட்டு முடிக்கவும், பாட்டியும் எழுந்து உட்கார்ந்தார்".
" கட்டில் சத்தம் கேட்டு,பாட்டி டீ எடுத்துட்டு வரட்டுமா என்க, மூஞ்சி கழுவிட்டு வந்துடறேன் என்றவர், தோட்டத்திற்கு சென்று முகத்தை கழுவி, வாய் கொப்பளித்து விட்டு உள்ளே வர, அவர் கையில் டீ டம்ளர் கொடுத்து விட்டு, தனக்கானதை குடித்தாள்".
"ஆரா கண்ணு, காலையிலையே விதையை விதைச்சிடலாமா?, சரிங்க பாட்டி என்றவள், முதல் நாளே சாம்பலில் கலந்து வைத்த கீரை விதையையும், ஊறவைத்த மற்ற விதைகளும் எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு செல்ல, கிழக்கே சூரியன் உதயமாவது தெரிந்தது".
"அதை பார்த்த பாட்டி, சூரிய பகவானே முதன் முதலா இந்த ஊருக்கு வந்து நாங்க ஒரு விதையை விதைக்கிறோம்.நீ தானப்பா அருள் புரியணுமென்று வேண்டிக்கொண்டு விதையை தூவ, ஆர்கலியும் பாட்டி எப்படி செய்கிறாரோ அதேபோல் செய்தாள்".
"பின்னர் பாத்தி கட்டிய இடத்தில் ஒவ்வொரு விதைக்கும் இரண்டு அடிகள் இடைவெளி விட்டு சிறுசிறு துளைகளை போட்டபடி பாட்டியும் செல்ல, அதில் காய்கறிகள் விதையை போட்டு மண்ணை மூடிக்கொண்டே வந்தாள்".
"பிறகு விதைத்த விதைகளுக்கெல்லாம் தண்ணீரை விட்டவர்கள், முதல் நாள் கூட்டி ஒதுக்கிய குப்பைகளை போய் பாட்டியை கொளுத்தி விட, பாட்டி நான் போய் சாப்பாடு பண்ணட்டுமா என்றாள்".
"இவ்வளவு காலையிலேயே எதுக்கு கண்ணு, கொஞ்ச நேரம் இரு கண்ணு. சரி பாட்டி என்றவள் தோட்டத்திலிருந்து எல்லாத்தையும் சுற்றி பார்க்க, முதல் நாள் இருந்ததற்கும், இன்று இப்போது பார்க்க திருப்தியாக இருக்க,பக்கத்து வீட்டில் ஆட்கள் நடமாடுவது தெரிந்தது".
"சரி பாட்டி, நான் போய் முன் வாசலை கூட்டிட்டு கோலம் போடுறேனென்றவள், கிணற்றில் நீரை இறைத்து பக்கெட்டில் ஊற்றி எடுத்துக் கொண்டு,சந்து பக்கமாக முன் பக்கம் வந்தவள், வாசலில் தண்ணீரை தெளித்து கூட்டி விட்டு, கோலத்தை போட்டு முடிக்க, கேட் சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க,சங்கர் தான் நின்று கொண்டிருந்தான்".
"தங்கச்சிமா உன் அண்ணி பால் கொடுத்து அனுப்பியிருக்கா. கையிலிருந்த கோலமாவு டப்பாவை கீழ வைத்து விட்டு வாசலுக்கு சென்றவள், தாழ்பாளை திறந்து விட, உள்ளே வந்து வாளியை கொடுத்தவன், வரேம்மானு அங்கிருந்து செல்ல, இவளும் காலை டிபனை செய்ய தொடங்கினாள்".
" மேலும் இரண்டு நாட்கள் வேகமாக கடந்து சென்றது.திங்கட்கிழமை விடியலும் தொடங்கியது".
" இன்று வேலையில் ஜாயின் பண்ண வேண்டுமென்பதால், வழக்கம் போல நேரத்தோடே எழுந்தவள் பாட்டிக்கும் அவளுக்கும் டீ, பால் வைத்து குடித்து விட்டு குளிக்க சென்றாள்".
" அவள் வருவதற்குள் பாட்டியே காய்கறிகள் போட்ட வெஜிடபிள் உப்புமாவும்,சட்னியும் செய்து முடித்தார்".
" புதுப்புடவையில் ஒன்றை எடுத்து கட்டிக்கொண்டு, சுவற்றிலிருக்கும் கடிகாரத்தை பார்க்க, காலை 8 மணி என்று காட்டியது".
" சரி சீக்கிரமா காலை மதியம் சமைக்கலாமென்று கிச்சனிற்குள் சென்று பார்த்து, பாட்டிஈஈ என்றாள்".
" வாடா ஆரா கண்ணு".
" சூடா சாப்பிட்டுக்கோ".
" நான் பண்ண மாட்டேனா பாட்டியென்க, காலை, மதியம் நான் பார்த்துக்குறேன் கண்ணு.நைட்ல நீ வந்து செய், லீவில் இருக்கும் போது ரெண்டு பேரும் சேர்ந்தே செய்வோம், ஓரளவுக்கு எனக்கும் சமைக்க தெரியும் கண்ணுயென்க, பாட்டியென்று சிரித்தவள், தட்டில் போட்டு ஒரு வாய் வைத்தவள், வாவ் செம்ம செம் டேஸ்ட் என்றாள்".
" நீங்களும் வாங்க பாட்டி என்க, வேணாம் கண்ணு. நான் வீட்டில் தான் இருக்க போறேன் அதானால்,கொஞ்ச நேரம் போன பிறகு சாப்டுகிறேன்."
நீ சாப்பிட்டு,சாமியை கும்பிட்டு விட்டு,நல்ல நேரத்தில் போய் வேலையில் சேர்".
"சரி பாட்டி என்றவள், சாப்பிட்டு முடித்து நீண்ட பின்னலை பின்னி முடித்தவள்,நெற்றி வகுடில் பொட்டு வைக்க போகும் போது, இனி இது ஏனென்றது? அவள் மனசாட்சி".
" மற்றவர்களுக்கு கேள்விக்குறியா ஆகக்கூடதென்று உள்ளுக்குள் சொல்லியவள், பின்னர் குங்குமத்தையும், பொட்டையும் நெற்றியில் வைத்துக்கொண்டு அப்பாயின்மென்ட் லட்டர்,வாட்டர் பாட்டிலில் தண்ணீர் எடுத்து ஹேண்ட்பேகில் வைத்துக்கொண்டே மணியை பார்க்க எட்டே முக்கால் என்று காட்டியது".
"சரிங்க பாட்டி நான் போயிட்டு வரேனென்று அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க போக,அய்யோ ஏன் டா கண்ணு".
" மாசமா இருக்கும் போது எதுக்கு இப்படி?, நல்லா இருப்ப தாயி. பாத்து பத்திரமா போய்விட்டு வா. மறக்காமல்,மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துடு".
அவர் அன்பில் கண் கலங்கியவள்,சரிங்க பாட்டி. நீங்க பத்திரமா இருங்களென்று பள்ளிக்கூடத்தை நோக்கிச் சென்றாள்".
கபிலன்- ரியா நினைவுகள்
" வண்ணங்கள் தீட்டி முடித்தவள்,பின்னர் எழுந்து நின்று பார்க்க மனதிற்கு திருப்தியாக இருக்க, ஓகேயென்று உள்ளே செல்ல, அப்பொழுது வாசலுக்கு வந்து தேவகியோ கோலத்தை பார்த்து அசந்து போனார்".
" ஆதிமா ரொம்ப அழகா இருக்குடானு, அவள் நெற்றியை சுற்றி நெட்டி முறித்தவர்,இரு டீ எடுத்து வரேனென்று சொல்லும் போது வாக்கிங் போய்விட்டு வீட்டிற்கு வந்த கபிலன்,யார் மா ரங்கோலி போட்டா?,ரொம்ப அழகா இருக்கு?,ஆதி தான் பா".
" என்னம்மா சொல்லுற என்க, ஆதிராவோ கபிலனை முறைத்து பார்த்தாள்".
" தங்கையின் பார்வையை கண்டவன் சும்மாடா என்க, சமாளிப்பாணா என்றாள்".
" ஹீஹீஹீ என்றவன், நிஜமாகவே நீதான் போட்டியா ஆதி? என்றவனின் அருகில் வந்தவள், சத்தியமா நான் தான் போட்டேனென்று, கபிலன் தலையில் அடிக்க, அய்யோ என் மண்டையென்று கத்தினான்".
" கபிலன் கத்துவதை கேட்டுக்கொண்டே அங்கு வந்த கண்ணன்,என்னமா காலையிலே உன் அண்ணனுக்கு விளையாட்டு?".
"எதேஏஏ விளையாட்டா என்றவன், மண்டை பணியாரம் போல வீங்கி கிடக்கு, இவருக்கு நக்கலென்க, கபிலன் சொன்னதை கேட்ட ஆதிராவோ ஹாஹாஹா என சிரித்து விட்டாள்".
" பின்னர், அப்பா என்க, ம்ம் சொல்லுப்பா னு கண்ணன் கேட்க, உங்களுக்கு கோவம் இல்லையே?".
" மகன் எதைப் பற்றி கேட்கிறான் என்று புரிந்த கண்ணன், நிச்சயமா இல்லப்பா. உன் ஆசையை நிறைவேற்றுவது தான் இந்த அப்பனோட கடமை".
"அதுக்காய், எனக்கு பிடிக்கல என்பதற்காக உன்னோட ஆசையை தடை பண்ணனும் என்கிற எண்ணம், எனக்கு கொஞ்சம் கூட கிடையாது என்றவர், எப்போ கிளம்பணும்பா".
"எப்படி போற போல? என மகனிடம் ட்ரைனிங் பற்றி விசாரிக்க, திங்கட்கிழமை அங்கு இருக்கணும் என்றும், ஞாயிற்றுக்கிழமை கிளம்பினால் சரியா இருக்கும் பா".
" அப்புறம் பா,வர இரண்டு வருஷமாகும். நடுவில் நேரம் கிடைத்தால் தான் வருவேன்.முதல் மூன்று மாதம் உங்களை கான்டக்ட் பண்ண முடியாது.ஆனால் நீங்க வரலாமென்று நினைக்கிறேன்".
"நீங்க ரெண்டு பேரும் பத்திரமா இருந்து கொள்வீர்களா?, நாங்க என்னப்பா சின்ன பிள்ளைங்களா?, எங்களை பற்றி கவலை படாதே.".
"ஆமா,ரெண்டு வருஷம் ஆகுமா என்றார்.ம்ம் பார்ட் பார்டா பிரித்து தான் ட்ரைனிங் கொடுப்பாங்கள்பா. ரெண்டு வருஷம் முடிஞ்சா தான் உங்க பையன் ஐபிஎஸ் ஆபீசர் என்க, சந்தோசம் சந்தோஷம்".
"நல்லபடியா போயிட்டு வெற்றியோடு வாப்பா. உன்மேல எனக்கு பூரண நம்பிக்கை இருக்கு. நீ தொட்டதெல்லாம் வெற்றியாகவே இருக்கட்டும் என்று மகனை ஆசிர்வதித்தவர்,தேவகி தேவகி...".
" டீ போட போனியா?,இல்ல மாடு வாங்கி இனி தான் பால் கரக்குறியா?".
" இதோங்களென்று அங்கு வந்தவர், கணவருக்கும், மகனுக்கும் டீயை கொடுக்க, குடித்து முடித்தவர், தேவகி திடல்ல எள்ளு விதைக்கும் வேலை இருக்கு, நான் வயலுக்கு போயிட்டு வரேனென்ற கண்ணனோ அங்கிருந்து சென்று விட்டார்".
"அம்மா என்ன நீ எதுவுமே அதை பத்தி பேச மாட்டேங்கறனு கபிலன் கேட்க, நான் பேசறதுக்கு என்ன கண்ணா இருக்கு".
"உன்னோட விருப்பம் தான் என்னோட விருப்பமென்று தேவகி சொல்ல, அம்மான்னா அம்மா என்று அவர் தோளில் சாய்ந்து கொண்டவன், அப்புறம் இனிமே ரெண்டு பேரும் காதல் புறா தானே".
"உங்களை கேள்வி கேட்க ஆள் கிடையாது என்று தாயை கிண்டல் பண்ண, போடா போக்கிரி என மகனின் தலையில் கொட்ட, என்ன அம்மாவும் பொண்ணும் மாத்தி மாத்தி கொட்டி, என் மண்டைய ஒடச்சிடுவீங்க போல?".
"ஆமா அப்படியே, நாங்க கொட்டி தான் மாங்காய் போல பொளந்துடுச்சு பாரு என தேவகி சொல்ல,அம்மா நல்லா பேச கத்துக்கிட்ட நீ என்றான்".
"ஏன்பா, இத்தனை நாள் நான் என்ன ஊமையாகவா இருந்தேன்? என்று தேவகி கேட்க, தேவகி கலக்குற கலக்குற என்றவன், என்னமா,உன் மருமகளுக்கு இன்னும் விடியலையா?,இப்படி இருந்தாக்க எங்கே இருந்து என் வாழ்க்கை பிரகாசிக்கும்".
" அதிகாலை நாலு இல்லை அஞ்சு மணிக்கு எல்லாம் எழுந்து வாசல் கூட்டி, கோலம் போட்டு, 6 மணிக்கெல்லாம் டிபன் ரெடியா இருக்கிறது இல்லையா?, என்னவோ போ".
"உன் அண்ணன் பொண்ணை என் தலையில் கட்டி வைத்து, என் வாழ்க்கையை கெடுத்துட்ட என்று சொல்லிக் கொண்டிருந்தவன் காலடி சத்தம் கேட்டு திரும்பி பார்க்க, ரியாவோ,மாடிப்படியிலிருந்து அவனை முறைத்துக் கொண்டே கீழே இறங்கி வந்து கொண்டிருந்தாள்".
"ஆத்தாடி, சொன்னதெல்லாம் காதுல வாங்கிட்டா போலயே?, அடேய் கபிலா நீ செத்தடா என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்".
" ஹிஹிஹி அம்மா உன் மருமகளும் வந்தாச்சி டீ குடு, எனக்கு கொஞ்சம் மெயில் செக் பண்ணுற வேலை இருக்கு, நான் வரெனென்று அங்கிருந்து வேகமாக சென்றான்".
" வாடா ரியா, டீயா இல்லை காஃபி என்க, அத்தை, நான் போட்டுக்குறேன். நீங்கள் இருங்களென்றவள், எதுக்கு உங்க பையன் இப்படி தலைதெறிக்க ஓடுறாரு? என்றாள்".