Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
வெற்றி- ஜனனி நினைவுகள்:
" மாமா, எனக்கு பதில் சொல்லிட்டு நீங்கள் பொறுமையாவே சிரியுங்கள், நான் வேண்டாமென்று சொல்லவில்லைனு கோபி சொல்ல, வெற்றியோ அடேய் வாய மூடுடா என்றான்".
" உனக்கு என்னடா வந்தது?,என்ன மருந்து சாப்பிடுறார்னு தெரிஞ்சிக்கிட்டால், பின்னாடி நமக்கு யூஸ்டா என்று கோபி சொல்ல, அதைக்கேட்ட சத்தியமூர்த்தி, மீண்டும் சிரித்தார்".
அய்யோ மாமா... எனக்கு மண்டை காயுது".என் கேள்விக்கான பதில் சொல்லி விட்டு பொழுது முழுவதும் சிரிச்சிட்டே இருங்க என்க,
"சரி வீடு என்றால் எப்படி இருக்கும் சொல்லு?, வீடு என்றால் சுத்தமா இருக்கணும்".அந்தந்த பொருள் அந்தந்த இடத்துல இருக்கணும்.அப்புறம், அப்புறம், ஆங் மூணு வேலை சாப்பாடு இருக்கணும். ".
"அதை வேஸ்ட் பண்ணாமல் சாப்பிடணும், பிறகு நம்மகிட்ட இருக்கிறதை வச்சுக்கிட்டு, போட்டி பொறாமை இல்லாமல் சந்தோஷமா வாழணும், இதான் மாமா".
" ம்ம் ஒரு வீடே அப்படி என்றால், அதில் இருக்கும் நாம் எப்படி இருக்க வேண்டுமென்பதை யோசித்து பார்த்தால்,உனக்கு பதில் கிடைத்து விடுமென்றார்".
" அவர் சொன்னதை கோபியும், வெற்றியும் யோசித்துப் பார்த்தனர்".
" மாமா புரிந்து விட்டதென்று கோபி சொல்ல, என்ன புரிஞ்சது பா?., கண்ட கண்ட குப்பைகள் எல்லாம் நம்ம மனசுக்குள்ள இருக்கு.அதை முதல்ல தூக்கி வெளியில போடணும்".அடுத்து உணவு, அதை நேரத்திற்கு நாம சாப்பிடணும், அதே நேரம் அது சத்துள்ளதாகவும் இருக்கணும் சரியா?".
" ம்ம் சரி தான்டா மாப்பிள்ளை".
" இப்படியே மாற்ற மாற்றி சத்தியமூர்த்தியும், கோபியும் பேசிக்கொண்டிருக்க, வீட்டிற்கு சாப்பிட போன ஆட்களும், வயலுக்கு வந்து மீண்டும் வேலையை தொடங்கினர்".
" ஒரு வழியாக நாற்று பறித்து முடித்து வயலில் கொண்டு போய் வைக்க, மாலை 5 மணி ஆனது. பின்னர் அனைவரும் கலைந்து செல்ல, இவர்கள் மூவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்".
" மேலும் இரண்டு நாட்கள் சென்றது. மூன்றாவது நாள் ஊருக்குள் பாட்டு சத்தம் காலையிலே கேட்க,ஜனனிக்கு தான் சடங்கு என்பது வெற்றிக்கு புரிந்தது".
" சத்தியமூர்த்தியும் வெற்றியும் காலை டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்க, வள்ளி அவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருக்கும் போது, ஐயா என்று மாரியப்பன் குரல் வாசலில் கேட்க".
உள்ளே வாங்க கணக்கு என்றார்".
"அங்கு வந்த மாரியப்பன், சாயங்காலம் புள்ளைக்கு சடங்கு வச்சிருக்கேங்க, ஒரு எட்டு வந்துட்டு போங்களென்றவர், அம்மாடி வள்ளி நீயும் வந்துடுமா என்க, அதற்கு வெற்றியோ, மாமா அப்போ நான் வர வேண்டாமா? என்றான்".
" அச்சச்சோஓஓஓ அப்படிலாம் இல்லைங்க சின்ன தம்பி. நீங்க இளைஞர் சங்கம் என்பதால், கண்டிப்பாக வந்துருவீங்களென்று தெரியும்".
"சரிங்க மாரியப்பன் கண்டிப்பா நாங்க வந்துடுறோம், வாங்க ஒரு வாய் சாப்பிடுங்களென்று சத்தியமூர்த்தி சொல்ல, சாப்பிட்டு தான் வந்தேங்க".
"இன்னும் சிலரை கூப்பிடனுங்க, அப்போ நான் வருகிறேனென்று அங்கிருந்து சென்றார்".
" மாலை வேளையும் வந்தது".
" சொந்த பந்தத்தின் வருகையால் ஜனனி வீடு நிறைந்திருக்க, சிறு பிள்ளைகள் அங்கங்கே ஓடி ஆடி விளையாண்டனர்".
" வாசலில் நீண்ட பந்தல் போட்டு, அதில் அவளை உட்கார வைக்க அலங்கரிக்க பட்ட சேர் இருக்க, சில பிள்ளைகள் ஓடிப்போய் அதில் உட்கார்ந்து ஓடி வந்தனர்".
"நேரம் கடந்து கொண்டிருக்க தூரத்தில் மேள சத்தம் கேட்டது".
" தன்னிடம் உள்ளதை கொண்டு சொந்த பந்தங்களை வைத்து, பேத்திக்கு சீர் சாமான்களை வாங்கிக்கொண்டு, சொந்தங்கள் சூழ கண்ணம்மா பாட்டி வந்து கொண்டிருந்தார்".
" சத்தியமூர்த்தியும், வள்ளியும் விசேஷ வீட்டிற்கு வந்து சேர, மாரியப்பனும், ராக்கம்மாவும் இருவரையும் வரவேற்தனர்".
"வள்ளியம்மை தனது தோழியை தேட, மலரு சீர் எடுத்து வருதுங்க என்றார் மாரியப்பன்".
" சீரோடு வந்தவர்களை கலா ஆலம் சுற்றி வரவேற்தார்".
" ஆண்கள் அங்கிருந்த சேரில் உட்கார்ந்து கொண்டு கதைகளை பேசினர்".
" சீர்வரிசை தட்டுகளை பந்தலில் வைத்து விட்டு, ஜனனியை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு வந்தார்கள்".
" மூன்று நாட்கள் குளிக்காமல் இருந்தவளுக்கு, எப்போடா குளித்து வேறு டிரஸ் மாற்றுவோமென்று இருந்தது".
"இங்க வந்து உட்காரு ஜனனி என்றவர் வாங்க புள்ளைக்கு நலுங்கு வைங்களென்று சொல்லி, அவரே ஆரம்பித்து வைத்தார்.மற்றவர்களும் எண்ணெய், சீயக்காய் தொட்டு அவள் தலையில் வைத்தனர்".
" பின்னர் கலாவே அவளை கூப்பிட்டு போய், தலையில் சீயக்காயையும், ஷாம்பையும் ஊற்றி நன்கு தேய்த்து விட்டு, அண்ணி வாங்க தண்ணீர் ஊற்றலாமென்று கூப்பிட்டார்".
" ஐந்து சுமங்கலி பெண்கள் சேர்ந்து மஞ்சள் வேப்பில்லை கலந்த தண்ணீரை மொண்டு,ஜனனி தலையின் மேல் உள்ள சல்லடையில் ஊற்றி விட்டு,எம்மாடி நல்லா தேய்ச்சி குளிச்சிட்டு வாடியம்மானு வெளியே சென்றார்கள்".
திருச்சூர் -பாண்டியன் பேலஸ்- பிளாஷ் பேக்:
" அப்பா, நம்ப ஜெய சிம்ஹன் தான் மாப்பிள்ளை என்று நகுலனிடம் சொல்ல, ம்ம் நல்ல பையன் தான் பா.".
ஆனால்,அந்தப் பையனுக்கு இதுல இஷ்டம் இருக்கணுமே?என்று நகுலன் கேட்க,அவன் கிட்ட நான் பேசிட்டேன்ப்பா".
"நேன்று தான் அவன் தமிழ்நாட்டுக்கு போயிருக்கிறான்.பேசிட்டு வந்து, பதில் சொல்றேன்னு சொல்லி இருக்கான் பா, ஓஓ நீயே எல்லாம் பேசி முடிச்சிட்டியா, அப்போ சந்தோஷம் சந்தோஷம்".
நல்ல பையன் தான்.நல்ல திறமைசாலி மற்றும் உழைப்பாளி. லீலாவை நம்பி கொடுக்கலாம் பா என்றவாறு மகளிடம் திரும்பியவர் லீலா, நீ என்ன சொல்லுற? அப்பா உங்க ரெண்டு பேருக்கும் எது சரியென்று படுகின்றதோ, அதை எனக்கு செய்யுங்கள்.
" மகளின் வார்த்தையைக் கேட்டு பெற்றோராக அவருக்கு பெருமையாக இருந்தது.இல்லடா இது உன்னோட வாழ்க்கை".
"கடைசி வரைக்கும் வாழப் போறது நீதான். உனக்கு அப்படி வேற ஏதாச்சு விருப்பமிருந்தால், மறைக்காம அப்பா கிட்ட சொல்லுடா என்க, இல்லப்பா எனக்கு அப்படி தனிப்பட்ட முறையில் எந்த ஆசையும் இல்லை".
"தாராளமா நீங்க பார்க்கிற மாப்பிள்ளையை நான் கல்யாணம் பண்ணிக்கிறேனென்று உறுதியாக சொல்லி விட்டு, லீலா அங்கிருந்து சென்றாள்".
கலசங்காடு:
"இரண்டு நாட்களாக இரவில் மட்டும் விடிய விடிய மழை பெய்து கொண்டிருந்தது".
" திண்ணையில் உட்கார்ந்து மழையை பார்த்துக்கொண்டிருந்த வீரையன், மாசம் மூனு ஆவது,பிறகு ஏன் ஜெய் வரவில்லை?, புள்ளைக்கு எதாவது உடம்பு சுகமில்லையோனு தெரியலையே? என்று கவலையோடு தனது மனைவியான மீனாட்சியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்".
"நம்ம செந்தூரன் புண்ணியத்துல அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாதுங்க.வேலையா இருக்குமென்றவர், சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா? என்க, சரிமா போய் எடுத்து வை நான் வரேன்".
" வீட்டின் உள்ளே இருந்த முற்றத்தில், சமைத்த உணவுகளை கொண்டு வந்து வைத்தவர்,ஜெய் அப்பா என குரல் கொடுக்க, முற்றத்து கம்பி வழியாக வரும் மழை நீரில், கையை நீட்டி கழுவி விட்டு, வந்து உட்கார்ந்தார்".
"கணவருக்கு தட்டை வைத்து அதில் சூடான சாப்பட்டை போட்டு, அதன் மேல் குழம்பை ஊற்றப் போக, யாரோ வாசல் கதவை திறக்கும் சத்தம் கேட்டது".
" யாரு இந்த மழையிலென்று போய் பாருமா என்க,குழம்பை போட்டுட்டு போறேனேங்க என்று மீனாட்சி சொல்ல, இருக்கட்டும்மா".
" போய் பார்த்துட்டு வா, சோறும்-குழம்பும் எங்கே போய்விடப்போகிறதென்றார்".
"சரிங்க என்றபடியே எழுந்து போனவர் அங்கு தண்ணீரை உதறிக்கொண்டிருந்தவனை பார்த்து ஜெய்ஈஈஈ என்க, நான் தான் மா என்று திரும்பியவன், துண்டு எடுத்து வாம்மா என்றான்".
" இதோப்பா என வேகமாக உள்ளே வந்தவர், ஏங்க ஜெய் தான் வந்திருக்கானென்று சொல்லியபடியே, கொடியிலிருந்த துண்டையும், கைலியையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்த மீனாட்சி, இந்தாப்பா என்க, அம்மாவிடமிருந்து வாங்கிக் கொண்டவன், இந்த பைய எடுத்துட்டு போய் உள்ள வை மா என்று, போட்டிருந்த ஈர ஆடையை கழற்றினான்".
" கைலியை கட்டிக்கொண்டவன், தலையை துவட்டிக்கொண்டே உள்ளே வர, வாப்பா என்றார்".
" நல்லா இருக்கீங்களாப்பா என ஜெய் கேட்க, ம்ம் நீ ஏன் இப்படி மெலிஞ்சிருக்க?, சரியா சாப்டுறாயா?, இல்லையா என்ற வீரையன், மீனாட்சி இன்னும் என்ன பண்ணுற என்க, மகனுக்கு சூடாக போட்ட ஆம்ப்லேட்டோடு அங்கு வந்தார்".
" வாப்பா சாப்பிடு என்க, தந்தையின் அருகில் வந்து ஜெய் உட்கார, மகனுக்கும் சாதத்தை போட்டு, அதன் மேல், சூடான மீன் குழம்பை ஊற்றியவர், முட்டையை எடுத்து வைத்தார்".
" நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது அம்மாவின் கைமணத்தை ரசித்து ருசித்து சாப்பிட்டான். இன்னும் கொஞ்சம் சோறுப்பா என்க, அய்யோ போதும் மா".
" இனி முடியாது என்று எழுந்து போய் கையை கழுவியவன், தனது அறைக்குள் சென்று, கபோர்டில் இருந்த சட்டையை எடுத்து போட்டுக்கொண்டு முற்றத்திற்கு வந்தான்".
" ஏன்டி நீயும் உட்கார்ந்து சாப்பிடேனென்று வீரையன் சொல்ல, இருக்கட்டுங்க, நீங்க சாப்பிடுங்க என்றவர், இன்னும் கொஞ்சமென சாதத்தை காட்ட, வேண்டாம் போதுமென்று எழுந்தார்".
" பின்னர் மீனாட்சியும் சாப்பிட்டு முற்றத்திற்கு வர, அப்பா என்று கணக்கு நோட்டை எடுத்து நீட்டினான்".
"என்ன அவசரம்?,காலைல பாத்துக்கலாமே?, இல்லப்பா பார்த்துடுங்களேன், ஒருவேலை முடியுமே என்றான்".
" அந்த அனுபவஸ்தர், அரை மணி நேரத்தில் 3 மாத கணக்கை பார்த்து முடித்தவர், சில இடத்திலிருந்த சந்தேகத்தை எல்லாம் மகனிடம் கேட்டார்".
" சரி நேரம் ஆகுது போய் படுயென்றவர், தனது அறைக்குள் எழுந்து செல்ல, மீனாட்சியும் ஜெய்யும் பொறுமையாக பேசிக் கொண்டிருந்தனர்".
" ஏம்பா, சரியா சாப்பாடு தண்ணீரில்லையா?, கழுத்து எலும்புலாம் இப்படி தெரியுதேயென்று மகனின் கன்னத்தை பிடித்து மீனாட்சி கேட்க, நல்லா தான் சாப்டுறேன்மா".
" அப்புறம்மா ஒரு விசயமென்க, சொல்லுப்பா என்றார். இதோ வரேனென்று எழுந்து உள்ளே போனவன்,சிறிது நிமிடத்தில் ஃபோட்டோவோடு வந்து, தாயின் முன்பு நீட்டினான்".
" மாமா, எனக்கு பதில் சொல்லிட்டு நீங்கள் பொறுமையாவே சிரியுங்கள், நான் வேண்டாமென்று சொல்லவில்லைனு கோபி சொல்ல, வெற்றியோ அடேய் வாய மூடுடா என்றான்".
" உனக்கு என்னடா வந்தது?,என்ன மருந்து சாப்பிடுறார்னு தெரிஞ்சிக்கிட்டால், பின்னாடி நமக்கு யூஸ்டா என்று கோபி சொல்ல, அதைக்கேட்ட சத்தியமூர்த்தி, மீண்டும் சிரித்தார்".
அய்யோ மாமா... எனக்கு மண்டை காயுது".என் கேள்விக்கான பதில் சொல்லி விட்டு பொழுது முழுவதும் சிரிச்சிட்டே இருங்க என்க,
"சரி வீடு என்றால் எப்படி இருக்கும் சொல்லு?, வீடு என்றால் சுத்தமா இருக்கணும்".அந்தந்த பொருள் அந்தந்த இடத்துல இருக்கணும்.அப்புறம், அப்புறம், ஆங் மூணு வேலை சாப்பாடு இருக்கணும். ".
"அதை வேஸ்ட் பண்ணாமல் சாப்பிடணும், பிறகு நம்மகிட்ட இருக்கிறதை வச்சுக்கிட்டு, போட்டி பொறாமை இல்லாமல் சந்தோஷமா வாழணும், இதான் மாமா".
" ம்ம் ஒரு வீடே அப்படி என்றால், அதில் இருக்கும் நாம் எப்படி இருக்க வேண்டுமென்பதை யோசித்து பார்த்தால்,உனக்கு பதில் கிடைத்து விடுமென்றார்".
" அவர் சொன்னதை கோபியும், வெற்றியும் யோசித்துப் பார்த்தனர்".
" மாமா புரிந்து விட்டதென்று கோபி சொல்ல, என்ன புரிஞ்சது பா?., கண்ட கண்ட குப்பைகள் எல்லாம் நம்ம மனசுக்குள்ள இருக்கு.அதை முதல்ல தூக்கி வெளியில போடணும்".அடுத்து உணவு, அதை நேரத்திற்கு நாம சாப்பிடணும், அதே நேரம் அது சத்துள்ளதாகவும் இருக்கணும் சரியா?".
" ம்ம் சரி தான்டா மாப்பிள்ளை".
" இப்படியே மாற்ற மாற்றி சத்தியமூர்த்தியும், கோபியும் பேசிக்கொண்டிருக்க, வீட்டிற்கு சாப்பிட போன ஆட்களும், வயலுக்கு வந்து மீண்டும் வேலையை தொடங்கினர்".
" ஒரு வழியாக நாற்று பறித்து முடித்து வயலில் கொண்டு போய் வைக்க, மாலை 5 மணி ஆனது. பின்னர் அனைவரும் கலைந்து செல்ல, இவர்கள் மூவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்".
" மேலும் இரண்டு நாட்கள் சென்றது. மூன்றாவது நாள் ஊருக்குள் பாட்டு சத்தம் காலையிலே கேட்க,ஜனனிக்கு தான் சடங்கு என்பது வெற்றிக்கு புரிந்தது".
" சத்தியமூர்த்தியும் வெற்றியும் காலை டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்க, வள்ளி அவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருக்கும் போது, ஐயா என்று மாரியப்பன் குரல் வாசலில் கேட்க".
உள்ளே வாங்க கணக்கு என்றார்".
"அங்கு வந்த மாரியப்பன், சாயங்காலம் புள்ளைக்கு சடங்கு வச்சிருக்கேங்க, ஒரு எட்டு வந்துட்டு போங்களென்றவர், அம்மாடி வள்ளி நீயும் வந்துடுமா என்க, அதற்கு வெற்றியோ, மாமா அப்போ நான் வர வேண்டாமா? என்றான்".
" அச்சச்சோஓஓஓ அப்படிலாம் இல்லைங்க சின்ன தம்பி. நீங்க இளைஞர் சங்கம் என்பதால், கண்டிப்பாக வந்துருவீங்களென்று தெரியும்".
"சரிங்க மாரியப்பன் கண்டிப்பா நாங்க வந்துடுறோம், வாங்க ஒரு வாய் சாப்பிடுங்களென்று சத்தியமூர்த்தி சொல்ல, சாப்பிட்டு தான் வந்தேங்க".
"இன்னும் சிலரை கூப்பிடனுங்க, அப்போ நான் வருகிறேனென்று அங்கிருந்து சென்றார்".
" மாலை வேளையும் வந்தது".
" சொந்த பந்தத்தின் வருகையால் ஜனனி வீடு நிறைந்திருக்க, சிறு பிள்ளைகள் அங்கங்கே ஓடி ஆடி விளையாண்டனர்".
" வாசலில் நீண்ட பந்தல் போட்டு, அதில் அவளை உட்கார வைக்க அலங்கரிக்க பட்ட சேர் இருக்க, சில பிள்ளைகள் ஓடிப்போய் அதில் உட்கார்ந்து ஓடி வந்தனர்".
"நேரம் கடந்து கொண்டிருக்க தூரத்தில் மேள சத்தம் கேட்டது".
" தன்னிடம் உள்ளதை கொண்டு சொந்த பந்தங்களை வைத்து, பேத்திக்கு சீர் சாமான்களை வாங்கிக்கொண்டு, சொந்தங்கள் சூழ கண்ணம்மா பாட்டி வந்து கொண்டிருந்தார்".
" சத்தியமூர்த்தியும், வள்ளியும் விசேஷ வீட்டிற்கு வந்து சேர, மாரியப்பனும், ராக்கம்மாவும் இருவரையும் வரவேற்தனர்".
"வள்ளியம்மை தனது தோழியை தேட, மலரு சீர் எடுத்து வருதுங்க என்றார் மாரியப்பன்".
" சீரோடு வந்தவர்களை கலா ஆலம் சுற்றி வரவேற்தார்".
" ஆண்கள் அங்கிருந்த சேரில் உட்கார்ந்து கொண்டு கதைகளை பேசினர்".
" சீர்வரிசை தட்டுகளை பந்தலில் வைத்து விட்டு, ஜனனியை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு வந்தார்கள்".
" மூன்று நாட்கள் குளிக்காமல் இருந்தவளுக்கு, எப்போடா குளித்து வேறு டிரஸ் மாற்றுவோமென்று இருந்தது".
"இங்க வந்து உட்காரு ஜனனி என்றவர் வாங்க புள்ளைக்கு நலுங்கு வைங்களென்று சொல்லி, அவரே ஆரம்பித்து வைத்தார்.மற்றவர்களும் எண்ணெய், சீயக்காய் தொட்டு அவள் தலையில் வைத்தனர்".
" பின்னர் கலாவே அவளை கூப்பிட்டு போய், தலையில் சீயக்காயையும், ஷாம்பையும் ஊற்றி நன்கு தேய்த்து விட்டு, அண்ணி வாங்க தண்ணீர் ஊற்றலாமென்று கூப்பிட்டார்".
" ஐந்து சுமங்கலி பெண்கள் சேர்ந்து மஞ்சள் வேப்பில்லை கலந்த தண்ணீரை மொண்டு,ஜனனி தலையின் மேல் உள்ள சல்லடையில் ஊற்றி விட்டு,எம்மாடி நல்லா தேய்ச்சி குளிச்சிட்டு வாடியம்மானு வெளியே சென்றார்கள்".
திருச்சூர் -பாண்டியன் பேலஸ்- பிளாஷ் பேக்:
" அப்பா, நம்ப ஜெய சிம்ஹன் தான் மாப்பிள்ளை என்று நகுலனிடம் சொல்ல, ம்ம் நல்ல பையன் தான் பா.".
ஆனால்,அந்தப் பையனுக்கு இதுல இஷ்டம் இருக்கணுமே?என்று நகுலன் கேட்க,அவன் கிட்ட நான் பேசிட்டேன்ப்பா".
"நேன்று தான் அவன் தமிழ்நாட்டுக்கு போயிருக்கிறான்.பேசிட்டு வந்து, பதில் சொல்றேன்னு சொல்லி இருக்கான் பா, ஓஓ நீயே எல்லாம் பேசி முடிச்சிட்டியா, அப்போ சந்தோஷம் சந்தோஷம்".
நல்ல பையன் தான்.நல்ல திறமைசாலி மற்றும் உழைப்பாளி. லீலாவை நம்பி கொடுக்கலாம் பா என்றவாறு மகளிடம் திரும்பியவர் லீலா, நீ என்ன சொல்லுற? அப்பா உங்க ரெண்டு பேருக்கும் எது சரியென்று படுகின்றதோ, அதை எனக்கு செய்யுங்கள்.
" மகளின் வார்த்தையைக் கேட்டு பெற்றோராக அவருக்கு பெருமையாக இருந்தது.இல்லடா இது உன்னோட வாழ்க்கை".
"கடைசி வரைக்கும் வாழப் போறது நீதான். உனக்கு அப்படி வேற ஏதாச்சு விருப்பமிருந்தால், மறைக்காம அப்பா கிட்ட சொல்லுடா என்க, இல்லப்பா எனக்கு அப்படி தனிப்பட்ட முறையில் எந்த ஆசையும் இல்லை".
"தாராளமா நீங்க பார்க்கிற மாப்பிள்ளையை நான் கல்யாணம் பண்ணிக்கிறேனென்று உறுதியாக சொல்லி விட்டு, லீலா அங்கிருந்து சென்றாள்".
கலசங்காடு:
"இரண்டு நாட்களாக இரவில் மட்டும் விடிய விடிய மழை பெய்து கொண்டிருந்தது".
" திண்ணையில் உட்கார்ந்து மழையை பார்த்துக்கொண்டிருந்த வீரையன், மாசம் மூனு ஆவது,பிறகு ஏன் ஜெய் வரவில்லை?, புள்ளைக்கு எதாவது உடம்பு சுகமில்லையோனு தெரியலையே? என்று கவலையோடு தனது மனைவியான மீனாட்சியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்".
"நம்ம செந்தூரன் புண்ணியத்துல அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாதுங்க.வேலையா இருக்குமென்றவர், சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா? என்க, சரிமா போய் எடுத்து வை நான் வரேன்".
" வீட்டின் உள்ளே இருந்த முற்றத்தில், சமைத்த உணவுகளை கொண்டு வந்து வைத்தவர்,ஜெய் அப்பா என குரல் கொடுக்க, முற்றத்து கம்பி வழியாக வரும் மழை நீரில், கையை நீட்டி கழுவி விட்டு, வந்து உட்கார்ந்தார்".
"கணவருக்கு தட்டை வைத்து அதில் சூடான சாப்பட்டை போட்டு, அதன் மேல் குழம்பை ஊற்றப் போக, யாரோ வாசல் கதவை திறக்கும் சத்தம் கேட்டது".
" யாரு இந்த மழையிலென்று போய் பாருமா என்க,குழம்பை போட்டுட்டு போறேனேங்க என்று மீனாட்சி சொல்ல, இருக்கட்டும்மா".
" போய் பார்த்துட்டு வா, சோறும்-குழம்பும் எங்கே போய்விடப்போகிறதென்றார்".
"சரிங்க என்றபடியே எழுந்து போனவர் அங்கு தண்ணீரை உதறிக்கொண்டிருந்தவனை பார்த்து ஜெய்ஈஈஈ என்க, நான் தான் மா என்று திரும்பியவன், துண்டு எடுத்து வாம்மா என்றான்".
" இதோப்பா என வேகமாக உள்ளே வந்தவர், ஏங்க ஜெய் தான் வந்திருக்கானென்று சொல்லியபடியே, கொடியிலிருந்த துண்டையும், கைலியையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்த மீனாட்சி, இந்தாப்பா என்க, அம்மாவிடமிருந்து வாங்கிக் கொண்டவன், இந்த பைய எடுத்துட்டு போய் உள்ள வை மா என்று, போட்டிருந்த ஈர ஆடையை கழற்றினான்".
" கைலியை கட்டிக்கொண்டவன், தலையை துவட்டிக்கொண்டே உள்ளே வர, வாப்பா என்றார்".
" நல்லா இருக்கீங்களாப்பா என ஜெய் கேட்க, ம்ம் நீ ஏன் இப்படி மெலிஞ்சிருக்க?, சரியா சாப்டுறாயா?, இல்லையா என்ற வீரையன், மீனாட்சி இன்னும் என்ன பண்ணுற என்க, மகனுக்கு சூடாக போட்ட ஆம்ப்லேட்டோடு அங்கு வந்தார்".
" வாப்பா சாப்பிடு என்க, தந்தையின் அருகில் வந்து ஜெய் உட்கார, மகனுக்கும் சாதத்தை போட்டு, அதன் மேல், சூடான மீன் குழம்பை ஊற்றியவர், முட்டையை எடுத்து வைத்தார்".
" நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது அம்மாவின் கைமணத்தை ரசித்து ருசித்து சாப்பிட்டான். இன்னும் கொஞ்சம் சோறுப்பா என்க, அய்யோ போதும் மா".
" இனி முடியாது என்று எழுந்து போய் கையை கழுவியவன், தனது அறைக்குள் சென்று, கபோர்டில் இருந்த சட்டையை எடுத்து போட்டுக்கொண்டு முற்றத்திற்கு வந்தான்".
" ஏன்டி நீயும் உட்கார்ந்து சாப்பிடேனென்று வீரையன் சொல்ல, இருக்கட்டுங்க, நீங்க சாப்பிடுங்க என்றவர், இன்னும் கொஞ்சமென சாதத்தை காட்ட, வேண்டாம் போதுமென்று எழுந்தார்".
" பின்னர் மீனாட்சியும் சாப்பிட்டு முற்றத்திற்கு வர, அப்பா என்று கணக்கு நோட்டை எடுத்து நீட்டினான்".
"என்ன அவசரம்?,காலைல பாத்துக்கலாமே?, இல்லப்பா பார்த்துடுங்களேன், ஒருவேலை முடியுமே என்றான்".
" அந்த அனுபவஸ்தர், அரை மணி நேரத்தில் 3 மாத கணக்கை பார்த்து முடித்தவர், சில இடத்திலிருந்த சந்தேகத்தை எல்லாம் மகனிடம் கேட்டார்".
" சரி நேரம் ஆகுது போய் படுயென்றவர், தனது அறைக்குள் எழுந்து செல்ல, மீனாட்சியும் ஜெய்யும் பொறுமையாக பேசிக் கொண்டிருந்தனர்".
" ஏம்பா, சரியா சாப்பாடு தண்ணீரில்லையா?, கழுத்து எலும்புலாம் இப்படி தெரியுதேயென்று மகனின் கன்னத்தை பிடித்து மீனாட்சி கேட்க, நல்லா தான் சாப்டுறேன்மா".
" அப்புறம்மா ஒரு விசயமென்க, சொல்லுப்பா என்றார். இதோ வரேனென்று எழுந்து உள்ளே போனவன்,சிறிது நிமிடத்தில் ஃபோட்டோவோடு வந்து, தாயின் முன்பு நீட்டினான்".