Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
கோவை மாவட்டம்-பொள்ளாச்சி கிராமம்:
"அண்ணா, அண்ணா என்ற குரல் வாசலில் கேட்க,சாமியறையில் இருந்த சத்தியமூர்த்தி,வெளியே வந்து பார்க்க,அங்கே நடுத்தர வயது ஆண் ஒருவர் வாசலில் நின்று கொண்டிருந்தார்".
"அவரை பார்த்த சத்தியமூர்த்தி, சொல்லுங்க என்றார்".
" அண்ணா, நான் பக்கத்து ஊருணா, என் குழந்தைக்கு ஏதோ வண்டு போல கடிச்சிட்டு,அது உடம்பு முழுவதும் வீங்கி போய் அழுதுங்கண்ணா, புள்ளைய தூக்கி கிட்டு,இம்புட்டு தூரம் வரலானா,தொட்டாவே புள்ளை அழுவுதுங்கண்ணா என்று கண் கலங்கினார்".
" அதைக்கேட்டவர்,இதோ வந்துடுறேன் என்றவாறே உள்ளே சென்றவர்,அங்கிருந்த அவரது தங்கையிடம் விஷயத்தை சொல்லி விட்டு,பச்சிலை இருக்கும் பெட்டியை எடுத்து வெளியே வந்தவர்,வெற்றி வெற்றி என்று குரல் கொடுக்க, இளைஞன் ஒருவன் அங்கு வந்தான்".
" வண்டிய எடு என்றவர்,வாப்பா என்று அழுது கொண்டிருந்தவரையும் கூப்பிட்டுக்கொண்டு,காரில் ஏறியதும், வெற்றியும் பக்கத்து ஊரை நோக்கி வேகமாக காரை ஓட்டினான்".
" கால் மணி நேரத்தில் அந்த ஓட்டு வீட்டின் முன்பு போய் கார் நிற்க, வேகமாக இறங்கி உள்ளே சென்றவர், அங்கு கட்டிலில் படுத்திருக்கும் குழந்தையை சோதித்து பார்த்து விட்டு, தான் எடுத்து வந்த பெட்டியை திறந்தவர்,ஏதோ ஒரு பச்சிலையை எடுத்து,கொஞ்சம் தண்ணீர் கொண்டு வர சொன்னார்".
அதைப் போலவே தண்ணீர் சொம்பை கொண்டு வந்து கொடுக்க, பச்சிலையில் கொஞ்சம் நீர் விட்டு கலந்து,குழந்தையின் நாக்கில் தடவி விட, கசப்பின் காரணமாய் குழந்தை அழுதது.
" கொஞ்ச நேரத்தில் சரியாகிடும் என்றவர்,கையை கழுவி விட்டு, மேலும் மூன்று நாட்களுக்கு கொடுக்க பச்சிலையையும்,என்ன சாப்பிடக்கூடாது என்பதையும் குழந்தையின் தாயிடம் சொன்னார்".
"ரொம்ப நன்றிங்கைய்யா என்று, பெற்றோர் இருவரும் கண்ணீரோடு கையெடுத்து கும்பிட,இது என்னோட தொழில் என்க,குழந்தையின் தந்தையோ ஏம்மணி காசு கொண்டு வந்து குடு என்குவும், சத்தியமூர்த்தியோ அதெல்லாம் வேண்டாமென்றார்".
" அய்யா, இம்புட்டு தூரம் வந்துட்டு, சும்மா போறியேளே என்க,குழந்தைய கவனிங்க என்று சொல்லி வெளியே வந்தவர்,காரில் ஏறியதும், வெற்றியோ தங்கள் ஊரை நோக்கி ஓட்டினான்".
கார் ஓட்டிக்கொண்டிருந்த வெற்றி, கண்ணாடி வழியாக தெரியும் சத்தியமூர்த்தியிடம்,அப்பா நம்ப ஊருக்கு புது கலெக்டர் வரப்போறாங்கனு பேச்சு அடிபடுது.
"அப்படியாப்பா,யார் சொன்னாங்க? என்றார் சத்தியமூர்த்தி".
" நேற்று நம்ப தாலுக்காபிஸூக்கு போயிருந்தேன்,அங்க சொல்லிக்கிட்டாங்கப்பா".
"யாரோ,லேடி தான் வராங்களாம் பா".
" ஓஓ என்றவர்,உனக்கு எப்போ ரிசல்ட் வருது என்க,இன்னும் ரெண்டு வாரத்தில் வரும்னு சொல்லிருங்காங்க, ஏன் பா கண்டிப்பா நான் போலிஸ் ஆகணுமா?".
" நிச்சயமாக".
" அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்றார் சத்தியமூர்த்தி".
" இல்லை...,நானும் உங்க கூடவே இருந்து என்று அவன் பேச்சை இழுத்தான்".
ம்ம் என் கூடயே இருந்து பருத்தி புண்ணாக்கு திண்ணுட்டு கிட, அங்கே,மாரியப்பன் யாராவது வேலைக்கார மாப்பிள்ளை வந்தால், ஜனனிய கட்டி வைக்கட்டுமென்றார்.
அவர் சொன்னதைக்கேட்டு சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தியவன், பயத்தோடு பின்னால் திரும்பி பார்த்தான்.
" என்னப்பா என்றார்".
" அப்பா,அது வந்துப்பானு வெற்றி இழுக்க,மருமவள் என்கிட்ட சொல்லிட்டு தம்பி.நீ தான் இன்னும்,என்னை அப்பாயென்று ஏத்துக்கவில்லை".
" ஜனனிக்கு நான் தான் மாமனார் என்றவர்,ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டார்".
"சிறிது நிமிடம் அந்த இடத்தில் பேரமைதியே நிலவியது".
" பின்னர் காரை ஸ்டார்ட் பண்ணியவன், கண்ணாடி வழியாக தனது சித்தப்பாவை பார்க்க,அவரோ ஜன்னல் பக்கம் உள்ள தன் பார்வையை திருப்பவேயில்லை".
" வீட்டிற்கு முன்பு வந்து கார் நின்றதும், கதவை திறந்து பெட்டியோடு இறங்கி உள்ளே சென்றார்".
" போகும் சித்தப்பாவை பார்த்த வெற்றிக்கு,மனதிற்குள் வேதனையாக இருந்தது".
" உள்ளே வந்த சத்தியமூர்த்தி மருந்து பெட்டியை அதற்கான இடத்தில் வைத்து விட்டு,ஹாலில் இருந்த ஃபோட்டோவிற்கு முன்பு போய் நின்றார்".
" அங்கே,சத்தியமூர்த்தி கவுண்டர் என்ற பெயர் தாங்கி,கம்பீர தோரணையோடு அவரின் தாத்தா இருக்கும் ஃபோட்டோ இருந்தது".
"அதற்கு பக்கத்தில் கவுண்டரின் மனைவி கலாவதி,அடுத்த கீழ் வரிசையில் சத்தியமூர்த்தியின் அப்பா சந்திரன்,அம்மா சகுந்தலா, அடுத்ததாக,வெற்றியின் அப்பா சரவணனும்,அம்மா காந்திமதி, சரவணனின் அப்பா இந்திரனும், அவரின் மனைவி லீலாவின் ஃபோட்டோக்களுக்கு மாலை போடப்பட்டிருந்தது".
" தனது குடும்பத்தாரின் ஃபோட்டோக்களை பார்த்தவருக்கு கண்கள் கலங்கியது".
திருச்சூர்:
மயங்கி விழுந்த மகளை கண்டு, வசுஊஊஊ என்றவாறு பதறி வந்த சைலஜா பாட்டி,தண்ணீர் கொண்டு வாங்க என்று குரல் கொடுக்க, வேலையாள் ஒருவர்,கிச்சனில் இருந்து தண்ணீரோடு வேகமாக ஓடி வந்தார்.
" அதை வாங்கி மகளின் முகத்தில் தெளிக்க,சிறிது நொடிகள் சென்ற பின்னர் வசுவின் மூடிய இமைகள் அங்கும்,இங்குமாக உருள்வது தெரிந்தது".
" வசு,அம்மாடி வசுவென்று,சைலஜா பாட்டி தனது மகளின் கன்னத்தில் தட்டி எழுப்ப,கண்ணை திறந்த வசுந்தரா,பட்டென்று எழுந்து உட்கார்ந்தார்".
"என்னோட பொண்ணு இப்போ எங்க இருக்காளென்று தந்தையை கேட்க, கோயம்புத்தூரில் இருக்கும் ஆசிரமத்தின் பெயரை சுந்தரபாண்டியன் சொல்ல,கீழே கிடந்த தனது ஃபோனை எடுத்து ஒருவாரம் பர்சனல் லீவிற்கு அப்ளே பண்ணியவர்,மைக்கேல் அண்ணா காரை எடுங்க என்றவாறே வெளியே சென்றார்".
" போகும் மகளை பார்த்து கண்ணீரோடு நின்ற சைலஜா பாட்டி, திரும்பி கணவனை முறைத்து பார்க்க,அவ வாழ்க்கை நல்லா இருக்குமென்று தான் இப்படி பண்ணுனேன்,அதை நம்புமாயென்றார்".
" ம்கும், என் பொண்ணோட வாழ்க்கையே போய்ட்டே?,அதை உங்களால் திருப்பி தரமுடியுமா?".
"சைலஜா,தயவு செய்து கொஞ்சம் என் சூழலையும் புரிஞ்சிக்கோ,அந்த நேரத்தில் இந்த முடிவு தான் எனக்கு சரியென்று தோன்றியது".அதனால் தான் அப்படி ஒரு முடிவை எடுத்தேன்".
" நானும் மனுஷன் தான்".
என் பொண்ணு குடும்பமாக வாழவேண்டுமென்ற எண்ணம், எனக்கும் இருக்கும் தானே?.
இல்லையென்று உன்னால் சொல்ல முடியுமா?,சொல்லுமா என்று தனது மனைவியை பார்த்து சுந்தரபாண்டியன் கேட்டார் .
ம்கும்...."அவரவர் நீதி, நியாயம் அவர்களுக்கு பெரியது" என்றவர், இப்போ மட்டும் உங்க பொண்ணு குடும்பமா வாழுறாளா?.உங்க மருமகன் எப்படி, உங்களைப்போலவே ஜமீன் வாரிசா? இல்லை,அரசியல் பின்புலமா?.
இல்லை கோடியில் புரளும் ஓர் ஆளா?, சொல்லுங்க என்றார்.
மனைவியின் கேள்விகளோ, கோடாரியாள் பிளப்பதை போலிருக்க,
அய்யோஓஓஓ சைலஜா, வார்த்தையால் என்னை கொல்லாதேம்மா?.இத்தனை வருஷமா உள்ளுக்குள் நான் செத்துக்கிட்டு இருந்தது போதுமென்றார்.
அது இருக்கட்டும்,என்ன திடீர்னு இப்போ இதைப்பற்றி சொல்ல வேண்டிய அவசியமென்று சைலஜா பாட்டி கேட்க,நம்ப பேத்திய பற்றி மூன்று மாதமா எந்த தகவலும் இல்லைமா.
அவள் சென்னைக்கு போன வரையில் தான் ஃபாதருக்கு தெரியும்,அதற்கு பின்னர் என்ன ஆச்சென்று அவருக்கு தெரியவில்லை.முடிந்த அளவு நான் தேடி பார்க்கிறேன்னு,எனக்கு தகவல் கொடுத்திருந்தார்.
ஆனால்...,இரண்டு வாரங்களுக்கு மேலாக பாதர் கிட்டயிருந்தும் எந்த தகவலும் இல்லையென்று சொல்லி சுந்தரபாண்டியன் கண் கலங்கினார் .
அய்யோஓஓ,என் மகளுக்கு ஏன் இந்த தலையெழுத்து?.
இன்னும் நான் உயிரோட இருந்து என்னவெல்லாம் பார்க்க வேண்டுமென்று இருக்கோவென்று சைலஜா பாட்டி கதறி அழுதார்.
" காரின் பின் இருக்கையில் உட்கார்ந்திருந்த வசுந்தராவிற்கு, அவர் மனநிலையை விவரிக்க வார்த்தையில்லை".
" இருபத்தி மூன்று வருடங்களுக்கு பிறகு தன் வயிற்றில் சுமந்த குழந்தை உயிரோடு இருப்பதை கேட்ட பொழுது, ஒரு நொடி தன் மூச்சு நின்றுவிடாதா என்று நினைத்தார்".
" ஒரு நாள் இரண்டு நாட்களா?, இல்லையே,இருபத்தி இரண்டு வருடங்களாச்சே".
" எப்படிப்பா இதை என்னிடம் இருந்து மறைத்தீர்கள்".
" எதை நினைத்து நீங்கள் இந்த காரியத்தை செய்திருப்பீர்களென்று எனக்கு நல்லா தெரியும்பா".
ஆனால்,நீங்க நினைத்த போல என் வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லையே?.
"எப்படிப்பா,என்னால் இன்னொருத்தனுக்கு மனைவியாக முடியுமென்று,தனது மனதிற்குள் பேசிக்கொண்டே வரும் வசுந்தராவின் இரு கண்களிலிருந்தும்,கண்ணீர் வழிந்தோடியது".
" தனது நினைவிற்குள் மூழ்கியிருந்த வசுக்கு, அம்மாடி வசு,வசு அம்மாடி வசு என்று கூப்பிடும் குரல் கேட்டு கண்ணை திறக்க,மைக்கேல் தான் கூப்பிடுவது தெரிந்தது".
" என்னங்கண்ணா?".
" வாம்மா,ஒரு வாய் காஃபி குடி".
" நீ எதுவும் சாப்டலைனு தெரியுது வாம்மா என்றார்".
" அண்ணா,அண்ணா என்று வசுவின் நா தழுதழுக்க,எல்லாம் நல்லதே நடக்கும்மா".
" காரணகாரியம் இல்லாமல் கடவுள் எந்த முடிச்சையும் போட மாட்டான்".அதுக்கு நானே மிகச்சிறந்த உதாரணம்.எனக்கும் பசிக்குது என்றார்".
" அவர் பசிக்குது என்றவுடனே, பெண்களுக்கே உள்ள தாய்மை குணம் தலை தூக்க,கண்ணை துடைத்துக்கொண்டவர்,அண்ணா நான் கீழே வந்தால் தேவையில்லாத கூட்டம் கூடிடும்ணா என்க, தெரியும்மா".
" அதான்,நம்ப காரை ஓரமா நிறுத்தியிருக்கேன்".நீ மாஸ்க் மட்டும் போட்டுக்கிட்டு வா.
" அதைப்போலவே,வசுந்தராவும் முகத்தை முக்கால் பாகம் மறைத்த வாரு மாஸ்க் போட்டுக்கொண்டு கீழே இறங்கியவர்,இடது பக்கமிருக்கும் ரெஸ்டாரன்டை நோக்கிச்சென்றார்"
" உள்ளே வந்தவர் சுவர் பக்கமாக இருக்கும் இருக்கையை தேடி அமர்ந்து கொண்டார்.மற்றவர்களுக்கு வசுவின் பின்பக்கம் மட்டும் தெரியும் படி இருந்தது".
"எதிரில் உட்கார்ந்திருந்த மைக்கேல் அங்கு வந்த பேரரிடம்,இரண்டு தோசை,இரண்டு காஃபியை ஆர்டர் செய்ய,அண்ணா,எனக்கு எதுவும் வேண்டாமென்றார்".
" சரி நீ சாப்பிடவில்லை என்றால், எனக்கும் வேண்டாம் என்க,எல்லாம் தெரிந்தும் நீங்களே இப்படி பண்ணுறீங்களேண்ணா என்கும் போது வசுவின் கண்ணிலிருந்து நீர் வருவதை பார்த்தவர்,எல்லாம் தாங்குவதற்கு உனக்கு மனதைரியம் மட்டும் போதாது".உடம்பிலும் தெம்பு வேண்டும்மா".
" சிறிது நொடிகள் இருவரிடமும் மௌனமே ஆட்சி செய்தது".
அப்பொழுது, இருவருக்கும் ஆர்டர் பண்ணியதை பேரர் கொண்டு வந்து டேபிளின் மேல் வைக்க,சாப்பிடுமா என்றார்.
பின்னர் இருவரும் சாப்பிட்டு முடித்து, பில்லை செட்டில் பண்ணி விட்டு தனது காரில் ஏறினர்.அம்மாடி வசு அன்று சொன்னது தான் இன்றும் சொல்லுறேன்.சத்தியமூர்த்தி கிட்ட தப்பு இருப்பது போல எனக்கு கொஞ்சம் கூட தெரியவில்லை.அவர் சூழல் என்னவென்று தெரியாமல்,நீ அவரை குற்றவாளியாக்குவது சரியில்லை".
" தீர விசாரித்து முடிவு பண்ணுமா".
எப்படிணா குற்றவாளி இல்லைனு நான் சொல்ல முடியும்?.
23 வருஷமா ஒருத்தன் உயிரோடு இருக்கானா?,இல்லையானே தெரியலையேணா?வந்துடுறேன்னு போனான்,ஆனால் இதுவரை வரவே இல்லையேன்ணா? என்று சொல்லி கண்கலங்கினார் அந்த கம்பீரமான பெண்மணி வசுந்தரா சுந்தர பாண்டியன்.
"அண்ணா, அண்ணா என்ற குரல் வாசலில் கேட்க,சாமியறையில் இருந்த சத்தியமூர்த்தி,வெளியே வந்து பார்க்க,அங்கே நடுத்தர வயது ஆண் ஒருவர் வாசலில் நின்று கொண்டிருந்தார்".
"அவரை பார்த்த சத்தியமூர்த்தி, சொல்லுங்க என்றார்".
" அண்ணா, நான் பக்கத்து ஊருணா, என் குழந்தைக்கு ஏதோ வண்டு போல கடிச்சிட்டு,அது உடம்பு முழுவதும் வீங்கி போய் அழுதுங்கண்ணா, புள்ளைய தூக்கி கிட்டு,இம்புட்டு தூரம் வரலானா,தொட்டாவே புள்ளை அழுவுதுங்கண்ணா என்று கண் கலங்கினார்".
" அதைக்கேட்டவர்,இதோ வந்துடுறேன் என்றவாறே உள்ளே சென்றவர்,அங்கிருந்த அவரது தங்கையிடம் விஷயத்தை சொல்லி விட்டு,பச்சிலை இருக்கும் பெட்டியை எடுத்து வெளியே வந்தவர்,வெற்றி வெற்றி என்று குரல் கொடுக்க, இளைஞன் ஒருவன் அங்கு வந்தான்".
" வண்டிய எடு என்றவர்,வாப்பா என்று அழுது கொண்டிருந்தவரையும் கூப்பிட்டுக்கொண்டு,காரில் ஏறியதும், வெற்றியும் பக்கத்து ஊரை நோக்கி வேகமாக காரை ஓட்டினான்".
" கால் மணி நேரத்தில் அந்த ஓட்டு வீட்டின் முன்பு போய் கார் நிற்க, வேகமாக இறங்கி உள்ளே சென்றவர், அங்கு கட்டிலில் படுத்திருக்கும் குழந்தையை சோதித்து பார்த்து விட்டு, தான் எடுத்து வந்த பெட்டியை திறந்தவர்,ஏதோ ஒரு பச்சிலையை எடுத்து,கொஞ்சம் தண்ணீர் கொண்டு வர சொன்னார்".
அதைப் போலவே தண்ணீர் சொம்பை கொண்டு வந்து கொடுக்க, பச்சிலையில் கொஞ்சம் நீர் விட்டு கலந்து,குழந்தையின் நாக்கில் தடவி விட, கசப்பின் காரணமாய் குழந்தை அழுதது.
" கொஞ்ச நேரத்தில் சரியாகிடும் என்றவர்,கையை கழுவி விட்டு, மேலும் மூன்று நாட்களுக்கு கொடுக்க பச்சிலையையும்,என்ன சாப்பிடக்கூடாது என்பதையும் குழந்தையின் தாயிடம் சொன்னார்".
"ரொம்ப நன்றிங்கைய்யா என்று, பெற்றோர் இருவரும் கண்ணீரோடு கையெடுத்து கும்பிட,இது என்னோட தொழில் என்க,குழந்தையின் தந்தையோ ஏம்மணி காசு கொண்டு வந்து குடு என்குவும், சத்தியமூர்த்தியோ அதெல்லாம் வேண்டாமென்றார்".
" அய்யா, இம்புட்டு தூரம் வந்துட்டு, சும்மா போறியேளே என்க,குழந்தைய கவனிங்க என்று சொல்லி வெளியே வந்தவர்,காரில் ஏறியதும், வெற்றியோ தங்கள் ஊரை நோக்கி ஓட்டினான்".
கார் ஓட்டிக்கொண்டிருந்த வெற்றி, கண்ணாடி வழியாக தெரியும் சத்தியமூர்த்தியிடம்,அப்பா நம்ப ஊருக்கு புது கலெக்டர் வரப்போறாங்கனு பேச்சு அடிபடுது.
"அப்படியாப்பா,யார் சொன்னாங்க? என்றார் சத்தியமூர்த்தி".
" நேற்று நம்ப தாலுக்காபிஸூக்கு போயிருந்தேன்,அங்க சொல்லிக்கிட்டாங்கப்பா".
"யாரோ,லேடி தான் வராங்களாம் பா".
" ஓஓ என்றவர்,உனக்கு எப்போ ரிசல்ட் வருது என்க,இன்னும் ரெண்டு வாரத்தில் வரும்னு சொல்லிருங்காங்க, ஏன் பா கண்டிப்பா நான் போலிஸ் ஆகணுமா?".
" நிச்சயமாக".
" அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்றார் சத்தியமூர்த்தி".
" இல்லை...,நானும் உங்க கூடவே இருந்து என்று அவன் பேச்சை இழுத்தான்".
ம்ம் என் கூடயே இருந்து பருத்தி புண்ணாக்கு திண்ணுட்டு கிட, அங்கே,மாரியப்பன் யாராவது வேலைக்கார மாப்பிள்ளை வந்தால், ஜனனிய கட்டி வைக்கட்டுமென்றார்.
அவர் சொன்னதைக்கேட்டு சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தியவன், பயத்தோடு பின்னால் திரும்பி பார்த்தான்.
" என்னப்பா என்றார்".
" அப்பா,அது வந்துப்பானு வெற்றி இழுக்க,மருமவள் என்கிட்ட சொல்லிட்டு தம்பி.நீ தான் இன்னும்,என்னை அப்பாயென்று ஏத்துக்கவில்லை".
" ஜனனிக்கு நான் தான் மாமனார் என்றவர்,ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டார்".
"சிறிது நிமிடம் அந்த இடத்தில் பேரமைதியே நிலவியது".
" பின்னர் காரை ஸ்டார்ட் பண்ணியவன், கண்ணாடி வழியாக தனது சித்தப்பாவை பார்க்க,அவரோ ஜன்னல் பக்கம் உள்ள தன் பார்வையை திருப்பவேயில்லை".
" வீட்டிற்கு முன்பு வந்து கார் நின்றதும், கதவை திறந்து பெட்டியோடு இறங்கி உள்ளே சென்றார்".
" போகும் சித்தப்பாவை பார்த்த வெற்றிக்கு,மனதிற்குள் வேதனையாக இருந்தது".
" உள்ளே வந்த சத்தியமூர்த்தி மருந்து பெட்டியை அதற்கான இடத்தில் வைத்து விட்டு,ஹாலில் இருந்த ஃபோட்டோவிற்கு முன்பு போய் நின்றார்".
" அங்கே,சத்தியமூர்த்தி கவுண்டர் என்ற பெயர் தாங்கி,கம்பீர தோரணையோடு அவரின் தாத்தா இருக்கும் ஃபோட்டோ இருந்தது".
"அதற்கு பக்கத்தில் கவுண்டரின் மனைவி கலாவதி,அடுத்த கீழ் வரிசையில் சத்தியமூர்த்தியின் அப்பா சந்திரன்,அம்மா சகுந்தலா, அடுத்ததாக,வெற்றியின் அப்பா சரவணனும்,அம்மா காந்திமதி, சரவணனின் அப்பா இந்திரனும், அவரின் மனைவி லீலாவின் ஃபோட்டோக்களுக்கு மாலை போடப்பட்டிருந்தது".
" தனது குடும்பத்தாரின் ஃபோட்டோக்களை பார்த்தவருக்கு கண்கள் கலங்கியது".
திருச்சூர்:
மயங்கி விழுந்த மகளை கண்டு, வசுஊஊஊ என்றவாறு பதறி வந்த சைலஜா பாட்டி,தண்ணீர் கொண்டு வாங்க என்று குரல் கொடுக்க, வேலையாள் ஒருவர்,கிச்சனில் இருந்து தண்ணீரோடு வேகமாக ஓடி வந்தார்.
" அதை வாங்கி மகளின் முகத்தில் தெளிக்க,சிறிது நொடிகள் சென்ற பின்னர் வசுவின் மூடிய இமைகள் அங்கும்,இங்குமாக உருள்வது தெரிந்தது".
" வசு,அம்மாடி வசுவென்று,சைலஜா பாட்டி தனது மகளின் கன்னத்தில் தட்டி எழுப்ப,கண்ணை திறந்த வசுந்தரா,பட்டென்று எழுந்து உட்கார்ந்தார்".
"என்னோட பொண்ணு இப்போ எங்க இருக்காளென்று தந்தையை கேட்க, கோயம்புத்தூரில் இருக்கும் ஆசிரமத்தின் பெயரை சுந்தரபாண்டியன் சொல்ல,கீழே கிடந்த தனது ஃபோனை எடுத்து ஒருவாரம் பர்சனல் லீவிற்கு அப்ளே பண்ணியவர்,மைக்கேல் அண்ணா காரை எடுங்க என்றவாறே வெளியே சென்றார்".
" போகும் மகளை பார்த்து கண்ணீரோடு நின்ற சைலஜா பாட்டி, திரும்பி கணவனை முறைத்து பார்க்க,அவ வாழ்க்கை நல்லா இருக்குமென்று தான் இப்படி பண்ணுனேன்,அதை நம்புமாயென்றார்".
" ம்கும், என் பொண்ணோட வாழ்க்கையே போய்ட்டே?,அதை உங்களால் திருப்பி தரமுடியுமா?".
"சைலஜா,தயவு செய்து கொஞ்சம் என் சூழலையும் புரிஞ்சிக்கோ,அந்த நேரத்தில் இந்த முடிவு தான் எனக்கு சரியென்று தோன்றியது".அதனால் தான் அப்படி ஒரு முடிவை எடுத்தேன்".
" நானும் மனுஷன் தான்".
என் பொண்ணு குடும்பமாக வாழவேண்டுமென்ற எண்ணம், எனக்கும் இருக்கும் தானே?.
இல்லையென்று உன்னால் சொல்ல முடியுமா?,சொல்லுமா என்று தனது மனைவியை பார்த்து சுந்தரபாண்டியன் கேட்டார் .
ம்கும்...."அவரவர் நீதி, நியாயம் அவர்களுக்கு பெரியது" என்றவர், இப்போ மட்டும் உங்க பொண்ணு குடும்பமா வாழுறாளா?.உங்க மருமகன் எப்படி, உங்களைப்போலவே ஜமீன் வாரிசா? இல்லை,அரசியல் பின்புலமா?.
இல்லை கோடியில் புரளும் ஓர் ஆளா?, சொல்லுங்க என்றார்.
மனைவியின் கேள்விகளோ, கோடாரியாள் பிளப்பதை போலிருக்க,
அய்யோஓஓஓ சைலஜா, வார்த்தையால் என்னை கொல்லாதேம்மா?.இத்தனை வருஷமா உள்ளுக்குள் நான் செத்துக்கிட்டு இருந்தது போதுமென்றார்.
அது இருக்கட்டும்,என்ன திடீர்னு இப்போ இதைப்பற்றி சொல்ல வேண்டிய அவசியமென்று சைலஜா பாட்டி கேட்க,நம்ப பேத்திய பற்றி மூன்று மாதமா எந்த தகவலும் இல்லைமா.
அவள் சென்னைக்கு போன வரையில் தான் ஃபாதருக்கு தெரியும்,அதற்கு பின்னர் என்ன ஆச்சென்று அவருக்கு தெரியவில்லை.முடிந்த அளவு நான் தேடி பார்க்கிறேன்னு,எனக்கு தகவல் கொடுத்திருந்தார்.
ஆனால்...,இரண்டு வாரங்களுக்கு மேலாக பாதர் கிட்டயிருந்தும் எந்த தகவலும் இல்லையென்று சொல்லி சுந்தரபாண்டியன் கண் கலங்கினார் .
அய்யோஓஓ,என் மகளுக்கு ஏன் இந்த தலையெழுத்து?.
இன்னும் நான் உயிரோட இருந்து என்னவெல்லாம் பார்க்க வேண்டுமென்று இருக்கோவென்று சைலஜா பாட்டி கதறி அழுதார்.
" காரின் பின் இருக்கையில் உட்கார்ந்திருந்த வசுந்தராவிற்கு, அவர் மனநிலையை விவரிக்க வார்த்தையில்லை".
" இருபத்தி மூன்று வருடங்களுக்கு பிறகு தன் வயிற்றில் சுமந்த குழந்தை உயிரோடு இருப்பதை கேட்ட பொழுது, ஒரு நொடி தன் மூச்சு நின்றுவிடாதா என்று நினைத்தார்".
" ஒரு நாள் இரண்டு நாட்களா?, இல்லையே,இருபத்தி இரண்டு வருடங்களாச்சே".
" எப்படிப்பா இதை என்னிடம் இருந்து மறைத்தீர்கள்".
" எதை நினைத்து நீங்கள் இந்த காரியத்தை செய்திருப்பீர்களென்று எனக்கு நல்லா தெரியும்பா".
ஆனால்,நீங்க நினைத்த போல என் வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லையே?.
"எப்படிப்பா,என்னால் இன்னொருத்தனுக்கு மனைவியாக முடியுமென்று,தனது மனதிற்குள் பேசிக்கொண்டே வரும் வசுந்தராவின் இரு கண்களிலிருந்தும்,கண்ணீர் வழிந்தோடியது".
" தனது நினைவிற்குள் மூழ்கியிருந்த வசுக்கு, அம்மாடி வசு,வசு அம்மாடி வசு என்று கூப்பிடும் குரல் கேட்டு கண்ணை திறக்க,மைக்கேல் தான் கூப்பிடுவது தெரிந்தது".
" என்னங்கண்ணா?".
" வாம்மா,ஒரு வாய் காஃபி குடி".
" நீ எதுவும் சாப்டலைனு தெரியுது வாம்மா என்றார்".
" அண்ணா,அண்ணா என்று வசுவின் நா தழுதழுக்க,எல்லாம் நல்லதே நடக்கும்மா".
" காரணகாரியம் இல்லாமல் கடவுள் எந்த முடிச்சையும் போட மாட்டான்".அதுக்கு நானே மிகச்சிறந்த உதாரணம்.எனக்கும் பசிக்குது என்றார்".
" அவர் பசிக்குது என்றவுடனே, பெண்களுக்கே உள்ள தாய்மை குணம் தலை தூக்க,கண்ணை துடைத்துக்கொண்டவர்,அண்ணா நான் கீழே வந்தால் தேவையில்லாத கூட்டம் கூடிடும்ணா என்க, தெரியும்மா".
" அதான்,நம்ப காரை ஓரமா நிறுத்தியிருக்கேன்".நீ மாஸ்க் மட்டும் போட்டுக்கிட்டு வா.
" அதைப்போலவே,வசுந்தராவும் முகத்தை முக்கால் பாகம் மறைத்த வாரு மாஸ்க் போட்டுக்கொண்டு கீழே இறங்கியவர்,இடது பக்கமிருக்கும் ரெஸ்டாரன்டை நோக்கிச்சென்றார்"
" உள்ளே வந்தவர் சுவர் பக்கமாக இருக்கும் இருக்கையை தேடி அமர்ந்து கொண்டார்.மற்றவர்களுக்கு வசுவின் பின்பக்கம் மட்டும் தெரியும் படி இருந்தது".
"எதிரில் உட்கார்ந்திருந்த மைக்கேல் அங்கு வந்த பேரரிடம்,இரண்டு தோசை,இரண்டு காஃபியை ஆர்டர் செய்ய,அண்ணா,எனக்கு எதுவும் வேண்டாமென்றார்".
" சரி நீ சாப்பிடவில்லை என்றால், எனக்கும் வேண்டாம் என்க,எல்லாம் தெரிந்தும் நீங்களே இப்படி பண்ணுறீங்களேண்ணா என்கும் போது வசுவின் கண்ணிலிருந்து நீர் வருவதை பார்த்தவர்,எல்லாம் தாங்குவதற்கு உனக்கு மனதைரியம் மட்டும் போதாது".உடம்பிலும் தெம்பு வேண்டும்மா".
" சிறிது நொடிகள் இருவரிடமும் மௌனமே ஆட்சி செய்தது".
அப்பொழுது, இருவருக்கும் ஆர்டர் பண்ணியதை பேரர் கொண்டு வந்து டேபிளின் மேல் வைக்க,சாப்பிடுமா என்றார்.
பின்னர் இருவரும் சாப்பிட்டு முடித்து, பில்லை செட்டில் பண்ணி விட்டு தனது காரில் ஏறினர்.அம்மாடி வசு அன்று சொன்னது தான் இன்றும் சொல்லுறேன்.சத்தியமூர்த்தி கிட்ட தப்பு இருப்பது போல எனக்கு கொஞ்சம் கூட தெரியவில்லை.அவர் சூழல் என்னவென்று தெரியாமல்,நீ அவரை குற்றவாளியாக்குவது சரியில்லை".
" தீர விசாரித்து முடிவு பண்ணுமா".
எப்படிணா குற்றவாளி இல்லைனு நான் சொல்ல முடியும்?.
23 வருஷமா ஒருத்தன் உயிரோடு இருக்கானா?,இல்லையானே தெரியலையேணா?வந்துடுறேன்னு போனான்,ஆனால் இதுவரை வரவே இல்லையேன்ணா? என்று சொல்லி கண்கலங்கினார் அந்த கம்பீரமான பெண்மணி வசுந்தரா சுந்தர பாண்டியன்.