Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
சதூர்வேதமங்கலம்:
"சிறிது நிமிடத்தில், சின்ன சொம்பில் பூஸ்ட் வாங்கிக்கொண்டு வந்த கருப்பாயி, ஆராமா இதை குடியென்று சொம்போடு இன்னொர் பொட்டலத்தையும் நீட்டினார்".
"என்னது அண்ணி? எனக் கேட்டுக் கொண்டே, பேப்பரை பிரித்துப் பார்க்க, அதில் இரண்டு பன் இருந்தது".
"ரொம்ப தேங்க்ஸ் அண்ணி என்றவள், பக்கத்தில் இருந்த டம்ளரில் பூஸ்ட்டை ஊற்றி,பன்னை தொட்டு சாப்பிட்டு முடித்தாள்".
"சரி வா,நாம போயிட்டு வாங்கிய பொருளெல்லாம் அடுக்கி வைத்து விடலாமென்று கருப்பாயி சொல்ல,நீங்க இருங்க.நான் பிறகு அடிக்கிக்கிறேன்ணி என்றாள்".
"அட என்ன இது, நானும் சும்மா தான் இருக்கேன்.உன் அண்ணன் வருவதற்கு எப்படியும் ஏழு, எட்டு மணி ஆயிடும். மதியம் ஆக்கின குழம்பு இருக்கு, தோசை நாலு போட்டுக்கலாமென்றார்".
"பின்னர் இருவரும் பேசிக்கொண்டே, வாங்கிய பொருட்களையெல்லாம்,.அடுக்கி வைத்தனர்".
"பிறகு, பக்கெட்டில் தண்ணீர் வைத்து, அதில் மாப்பை முக்கி எடுத்த ஆர்கலி, வீடு முழுவதும் துடைத்தெடுத்தாள்".
"அப்பொழுது, தங்கச்சிமா என்கும் சங்கரின் குரல் கேட்க, உன் அண்ணன் வந்தாச்சு என்றவாறு பிரித்த கவர்களையெல்லாம் ஒரு பையில் போட்டு கட்டிய கருப்பாயி, அங்கிருந்த டஸ்பினினுள் போட்டார்".
"உள்ளே வந்த சங்கர், என்னம்மா எல்லாம் வாங்கிட்டீங்களா?,ம்ம் வாங்கியாச்சு அண்ணா".
"வாங்கியதையும் அடுக்கி முடித்து விட்டோமென்க, சரிமா சரி என்றவர்,மனைவியின் பக்கம் திரும்பி, ஏன் புள்ள இராவுக்கு, தங்கச்சிக்கும் ஆச்சிக்கும் என்ன சோறு?".
"மாவு இருக்கு மாமா.சட்னி மட்டும் அரைக்கணும், சரி சரி வா பின்னே, அதை போய் செஞ்சு எடுத்துட்டு வரலாமென்று, மனைவியை கூப்பிட்டுக்கொண்டு சென்றார்".
"வேலை செய்தது கசகசப்பாக இருக்க, ஒரு குளியலை போட்டு வெளியே வர,பாட்டியும் தோட்டத்திலிருந்த கிணற்று நீரில் குளித்திட்டு உள்ளே வந்தார்".
"வாங்கிய புடவையை எடுத்து போனவள், இந்தாங்க பாட்டியென்று நீட்ட,இத்தனை புடவையானு, மலைத்து போனார்".
"ரொம்ப அதிகமாகலாம் வாங்கவில்லையென்று சொல்லிக் கொண்டே சென்றாள்".
பின்னர் இருவரும் ஆடையை மாற்றிக் கொண்டு உட்கார்ந்திருக்க, கருப்பாயியும் சங்கரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
உங்களுக்கு வேற நாங்கள் சிரமம் கொடுக்கிறோம் இல்லையானு பாட்டி, கேட்க என்ன ஆச்சி இப்படிலாம் சொல்றீங்க?.
"யாரும் இல்லாத அனாதைகளுக்கு, நீங்க தான் இப்போ, உறவா கிடைத்திருக்கீங்களென்று,சங்கர் கண் கலங்கினார்".
"என்னப்பா சொல்றனு பாட்டி கேட்க,ஆமா ஆச்சி.அப்பா அம்மா எல்லாம் சின்ன வயசா இருக்கும் போது இறந்துட்டாங்க".
"ஐயா வீட்டுல தான் எங்க அப்பா மாடு மேய்த்துக்கொண்டு இருந்தாரு. அதுக்கு அப்புறம், தேவராஜ் அய்யாவோட அப்பா தான் கவனிச்சிக்கிட்டாங்க".
"வளர்ந்த பின்ன நானும் அங்க வேலைக்கு போயிட்டேன். பெரியைய்யா எவ்வளவோ சொன்னார், பள்ளிக்கூடம் போடா, படியென்று,நமக்கு சுத்தமா மண்டையில் ஏறவில்லை".
" சினிமா பாட்டும், மாட்டுக்கு புண்ணாக்கு அளவும் தான் நல்லா தெரிஞ்சிது. கத்திக்கத்தி பார்த்துட்டு, பெரியைய்யாவும் போடாணு விட்டுட்டார்.அவங்க பார்த்து தான், பக்கத்து ஊர்லிருந்த, இவளை என் தலையில கட்டி வச்சாங்க".
"இவளுக்கு அம்மா மட்டும் தான் இருக்காங்க ஆச்சி. எங்க கூட வந்துருங்களென்று எவ்வளவோ கூப்பிட்டு பார்க்கிறோம், வர மாட்டேன்னு சொல்றாங்க".
"அதனால் தான், ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை, புள்ளைங்களை மட்டும் நான் போய் சைக்கிளில் விட்டுட்டு, திங்கள் கிழமை காலையிலே போய் கூப்பிட்டு வந்துடுவேன் .
"என்னப்பா பொல்லாத உறவு...அதான் உன் தங்கச்சி இருக்கிறாள், ஆச்சி நான் இருக்கிறேன், இது போதாதா?, இது போதும் ஆச்சியென்று தம்பதிகள் இருவரும் கண் கலங்கினர்".
"பின்னர் நால்வரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவர்கள், மேலும் சிறிது நேரம் இவர்களோடு பேசியிருந்து விட்டு, காலையில் வருவதாக சொல்லிக் கொண்டு சென்றார்கள்".
" பாட்டி உங்களுக்கு படுக்கையை விரிக்கட்டுமானு ஆர்கலி கேட்க, கொஞ்ச நேரம் போகட்டும் ஆரா கண்ணு".
" நீ உள்ள படுத்துக்கோ, நான் இப்படி படுத்துக்குறேனென்றவர், ஹாலின் ஓரமாய் இருந்த, ஒயர் கட்டிலில் போய் உட்கார்ந்தவர், எங்கையோ பிறந்து வளர்ந்து வாழ்ந்து, இப்போ இங்க வந்து சேர்ந்திருக்கிறோம்".
" வாழ்க்கை தான் எத்தனை விசித்திரங்களை கொண்டதாக இருக்கின்றது?, நேற்று வரை யாரும் இல்லாமலிருந்த நமக்கு, இன்று பேத்திகளும், பேரனும் கிடைத்திருக்கு".
" அப்பா நீலகண்டா, அம்மா சண்டி சாமுண்டா, உங்க ஆட்டம் இன்னும் எத்தனையோ என் வாழ்விலென்று, மனதிற்குள் சொல்லிக்கொண்டவாறு கட்டிலின் மீது சாய்ந்து படுத்தார்".
" உள் அறையிலிருந்த ஆர்கலிக்கு தூக்கம் வரவில்லை. இரவு விளக்கை போட்டவள், அங்கிருந்த ஜன்னலை திறந்து விட, மெல்லிய காற்று அறைக்குள் வந்தது".
" பின்னர் எழுந்து போய் அங்கிருந்த கபோர்டை சத்தமில்லாமல் திறந்தவள், அதிலிருந்த ஹேண்ட் பேகை எடுத்து, ஜிப்பை திறந்து, உள்ளே இருந்த ஃபோட்டோவை எடுத்துக் கொண்டாள்".
" பிறகு ஜன்னலோரம் வந்து சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தவள்,கையிலிருந்த ஃபோட்டோவை, ஜன்னலின் வழியே,உள்ளே வந்த நிலவொளியின் வெளிச்சத்தில் பார்க்க, கண்களிலிருந்து வழிந்த கண்ணீர், அந்த ஃபோட்டோவில் பட்டு தெரித்தது".
" என்னை மன்னிச்சிடுங்கள்".
" நிச்சயமாக என்னை காணாமல் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்பது, எனக்கு நன்கு தெரியும்".
" என்ன செய்ய?,இந்த பிறவியில் சொந்த பந்தத்தோடு வாழும் வாழ்க்கையை, அந்த ஆண்டவன் என் தலையில் எழுதவில்லை போல".
" எங்கு இருந்தாலும் நீங்கள் நால்வரும் நலமோடு இருங்களென்று, ஃபோட்டோவில் இருக்கும், வசு, சுந்தரபாண்டியன் தாத்தா, கிரிஜா பாட்டி, மற்றும் மைக்கேலின் உருவங்களை தொட்டு சொல்லியவள், கண்ணை மூடி ஜன்னல் மேலே சாய, ருத்ரனின் முகம் நினைவிற்கு வந்தது".
"ச்சை... என்று வலு கட்டாயமாக அவனை தனது நினைவிலிருந்து விலக்கி விட்டு,அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று யோசனையில் மூழ்கியவள், வெகு நேரம் சென்றே தூங்கினாள்".
" ஆராமா... ஆராமா... என்ற சத்தம் கேட்டு உறக்கத்திலிருந்த ஆர்கலி கண் விழித்து பார்க்க, அங்கே பாட்டி நின்று கொண்டிருந்தார்".
" எந்திரிச்சி இதை குடி கண்ணு என்று டம்ளரை நீட்ட, என்னது பாட்டி என்றவாறே எழுந்து போய் முகத்தை கழுவி, வாயை கொப்பளித்து வந்து, அவரிடமிருந்து டம்ளரை வாங்கி குடித்தவள், நீங்களென்று கேட்டாள்".
" நான் குடிச்சிட்டேன் கண்ணு. உன் அண்ணன்காரன் தான் வந்து கொடுத்துட்டு போனான்".
" நல்ல நேரம் ஒன்பது மணியிலிருந்து பத்தரை வரைக்கும் உண்டாம், அந்த நேரத்தில் பால் காய்ச்சிக்கலானு சொல்லிட்டு போயிருக்கானென்றவர், இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக்க கண்ணுனு வெளியே சென்றார்".
திருச்சூர்- பாண்டியன் பேலஸ்:
" ஆது கண்ணானு கிரிஜா பாட்டி கூப்பிட, பின்ன என்ன கிரி.. ".
" அதான் வார்னிஷ் அடித்த வெள்ளை பணியாரம் போல, இருவரும் ஒரே போல இருக்கீங்களே இது எங்களுக்கு தெரியாதா?,புதுசா குண்டு போடுறாராம் உன் சிங்கமென்றான்".
" ஆது சொன்னதை கேட்டு சிம்ஹன் தாத்தா முறைத்து பார்க்க, மற்றவர்களோ சத்தமாக சிரித்து விட்டனர்".
" அப்பொழுது அத்தைஐஐஐஐ என்ற குரல் கேட்டு வாசல் பக்கம் பார்க்க, ஆனந்தன் தான் வேகமாக உள்ளே வந்து கொண்டிருந்தார்".
" ஆனந்தனை பார்த்த ருத்ரன், இந்த போலீஸ் எப்படிடா வந்தாரென்க,அதற்கு ஆதுவோ,பரதேசி பயலே நானும் உன் கூட தான் இருக்கேன். எனக்கு மட்டும் எப்படி தெரியும் டா? என்றான்".
" சோபாவில் உட்கார்ந்திருந்த கிரிஜா பாட்டியிடம் வந்த ஆனந்தன், அத்தை உனக்கு என்னாச்சி?, ஏன் ஒரு வார்த்தை சொல்லவில்லை? என்று பதறினார்".
" நீயும் வந்துட்டியாடானு சிம்ஹன் தாத்தா அதிர, மாமா என்று பல்லை கடித்தவர், இவ்வளவு நடந்துருக்கு, இந்த ரெண்டு எருமை மாடும் தான் சொல்லவில்லை, நீங்களுமா மாமா என்றவாறு திரும்பியவர், அங்கிருந்த வசுந்தராவை பார்த்து அதிர்ந்தார்".
" மேடம் நீங்களென்று சொல்லியவர்,பக்கத்தில் இருந்த சுந்தரபாண்டியனை பார்த்து, சார் நீங்களுமா என்க, வசுவும் ஆனந்தனை இங்கு எதிர்பார்க்கவில்லை என்பது, அவர் முகத்திலிருந்த அதிர்விலே தெரிந்தது".
"எஸ் மிஸ்டர் ஆனந்தன், நான் தான்".
" எங்க வீடு தான் இது, இவங்க என்னுடைய அப்பா தானென்று வசு சொல்ல,இங்கு என்னடா நடக்குதென்று, ஆனந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை".
"சுந்தரபாண்டியன் தாத்தாவிற்கு தொண்டை ஒரு மாதிரி இருப்பதாக பேசிக்கொண்டிருக்கும் போது சொல்ல, கசாயம் எடுத்து வரேனென்று உள்ளே சென்ற கிரிஜா பாட்டியும் அப்பொழுது கிச்சனிலிருந்து ஹாலிற்கு வர, அவரின் முக சாயலை பார்த்து ஆனந்தனும் அதிர்ந்து போனார்".
" ஆனந்தனின் ரியாக்க்ஷனை பார்த்த நண்பர்கள் இருவரும், டேய் போலீஸ் மூஞ்சை பாருடா, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லையென்று ஆது சொல்ல, அதற்கு ருத்ரனும்,சத்தியமா என்னாலையும் முடியலைடா என்றான்".
"அத்தை இவங்கள் இவங்களென்று ஆனந்தன் சொல்ல, என்ன?,தி கிரேட் பிசினஸ் மேன் ஆனந்தனுக்கு திக்குவாயோனு ருத்ரன் சொல்ல,கூப்பிட்டு வாடா.நல்ல டாக்டரை பார்க்கலாமென்றான் ஆது".
" அடேய்... ரெண்டு பேரும் வாயை மூடலை, இப்போ நான் என்ன செய்வேன்னு தெரியாதென்று சிம்ஹன் தாத்தா சொல்ல, அதான் தெரியாதுனு சொல்லியாச்சே, பிறகென்ன சிங்கத்துக்கு வாய் சவடாலென்று ருத்ரன் கேட்டான்".
" கிரிஜாஆஆஆஆ என்று சிம்ஹன் தாத்தா பல்லை கடிக்க, ஆது கண்ணா, வீரா கண்ணா கொஞ்ச நேரம் அமைதியா இருங்கப்பா என்றார் கிரிஜா பாட்டி".
" பின்னர் ஆனந்தின் பக்கம் திரும்பிய கிரிஜா பாட்டி, ஆனந்த், அவங்க உன்னுடைய சின்ன அத்தை சைலஜா. என் கூட பிறந்த இரட்டை பிறவி".
" அப்படியா என்று மீண்டும் அதிர்ந்தவர், சரி மற்றது பிறகு பேசிக்கலாம். முதல்ல உங்களுக்கு உடம்பு எப்படி இருக்குங்கத்தை?, ரஞ்சன் சொன்னதும் கிடைத்த ஃப்ளைட்டில் வந்துட்டேன்".
" மாமாவும் எதுவும் சொல்லவில்லை, இந்த எருமைங்களும் ஒன்னும் சொல்லவில்லை, எனக்கு எப்படி இருக்குமென்று ஆனந்த் வருத்தப்பட்டு சொல்ல, அதற்கு ஆதுவோ, என்ன பீலிங்கா இருந்துருக்கும் என்றான்".
" ஆது பேசுவதை கேட்டு, மற்றவர்களுக்கு சிரிக்காமலும் இருக்க முடியவில்லை".
" ஏய் சைலு, வா எதுக்கு இப்படி பேயறைந்த போல நிக்குறனு தங்கையை அழைத்த கிரிஜா பாட்டி, இது ஆனந்த்".
" ஆது கண்ணாவோட அப்பா என்கும் போது, உன்னோட அண்ணன் பையனும்தானென்று, சிம்ஹன் தாத்தா ஒரு குண்டை போட்டார்".
"சிம்ஹன் தாத்தா சொன்னதை கேட்டு அங்கிருந்த அக்கா தங்கை மட்டுமல்ல, ஆனந்தன், ருத்ரன் மற்றும் ஆதுவும் அதிர்ந்து போயினர்".
"சிறிது நிமிடத்தில், சின்ன சொம்பில் பூஸ்ட் வாங்கிக்கொண்டு வந்த கருப்பாயி, ஆராமா இதை குடியென்று சொம்போடு இன்னொர் பொட்டலத்தையும் நீட்டினார்".
"என்னது அண்ணி? எனக் கேட்டுக் கொண்டே, பேப்பரை பிரித்துப் பார்க்க, அதில் இரண்டு பன் இருந்தது".
"ரொம்ப தேங்க்ஸ் அண்ணி என்றவள், பக்கத்தில் இருந்த டம்ளரில் பூஸ்ட்டை ஊற்றி,பன்னை தொட்டு சாப்பிட்டு முடித்தாள்".
"சரி வா,நாம போயிட்டு வாங்கிய பொருளெல்லாம் அடுக்கி வைத்து விடலாமென்று கருப்பாயி சொல்ல,நீங்க இருங்க.நான் பிறகு அடிக்கிக்கிறேன்ணி என்றாள்".
"அட என்ன இது, நானும் சும்மா தான் இருக்கேன்.உன் அண்ணன் வருவதற்கு எப்படியும் ஏழு, எட்டு மணி ஆயிடும். மதியம் ஆக்கின குழம்பு இருக்கு, தோசை நாலு போட்டுக்கலாமென்றார்".
"பின்னர் இருவரும் பேசிக்கொண்டே, வாங்கிய பொருட்களையெல்லாம்,.அடுக்கி வைத்தனர்".
"பிறகு, பக்கெட்டில் தண்ணீர் வைத்து, அதில் மாப்பை முக்கி எடுத்த ஆர்கலி, வீடு முழுவதும் துடைத்தெடுத்தாள்".
"அப்பொழுது, தங்கச்சிமா என்கும் சங்கரின் குரல் கேட்க, உன் அண்ணன் வந்தாச்சு என்றவாறு பிரித்த கவர்களையெல்லாம் ஒரு பையில் போட்டு கட்டிய கருப்பாயி, அங்கிருந்த டஸ்பினினுள் போட்டார்".
"உள்ளே வந்த சங்கர், என்னம்மா எல்லாம் வாங்கிட்டீங்களா?,ம்ம் வாங்கியாச்சு அண்ணா".
"வாங்கியதையும் அடுக்கி முடித்து விட்டோமென்க, சரிமா சரி என்றவர்,மனைவியின் பக்கம் திரும்பி, ஏன் புள்ள இராவுக்கு, தங்கச்சிக்கும் ஆச்சிக்கும் என்ன சோறு?".
"மாவு இருக்கு மாமா.சட்னி மட்டும் அரைக்கணும், சரி சரி வா பின்னே, அதை போய் செஞ்சு எடுத்துட்டு வரலாமென்று, மனைவியை கூப்பிட்டுக்கொண்டு சென்றார்".
"வேலை செய்தது கசகசப்பாக இருக்க, ஒரு குளியலை போட்டு வெளியே வர,பாட்டியும் தோட்டத்திலிருந்த கிணற்று நீரில் குளித்திட்டு உள்ளே வந்தார்".
"வாங்கிய புடவையை எடுத்து போனவள், இந்தாங்க பாட்டியென்று நீட்ட,இத்தனை புடவையானு, மலைத்து போனார்".
"ரொம்ப அதிகமாகலாம் வாங்கவில்லையென்று சொல்லிக் கொண்டே சென்றாள்".
பின்னர் இருவரும் ஆடையை மாற்றிக் கொண்டு உட்கார்ந்திருக்க, கருப்பாயியும் சங்கரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
உங்களுக்கு வேற நாங்கள் சிரமம் கொடுக்கிறோம் இல்லையானு பாட்டி, கேட்க என்ன ஆச்சி இப்படிலாம் சொல்றீங்க?.
"யாரும் இல்லாத அனாதைகளுக்கு, நீங்க தான் இப்போ, உறவா கிடைத்திருக்கீங்களென்று,சங்கர் கண் கலங்கினார்".
"என்னப்பா சொல்றனு பாட்டி கேட்க,ஆமா ஆச்சி.அப்பா அம்மா எல்லாம் சின்ன வயசா இருக்கும் போது இறந்துட்டாங்க".
"ஐயா வீட்டுல தான் எங்க அப்பா மாடு மேய்த்துக்கொண்டு இருந்தாரு. அதுக்கு அப்புறம், தேவராஜ் அய்யாவோட அப்பா தான் கவனிச்சிக்கிட்டாங்க".
"வளர்ந்த பின்ன நானும் அங்க வேலைக்கு போயிட்டேன். பெரியைய்யா எவ்வளவோ சொன்னார், பள்ளிக்கூடம் போடா, படியென்று,நமக்கு சுத்தமா மண்டையில் ஏறவில்லை".
" சினிமா பாட்டும், மாட்டுக்கு புண்ணாக்கு அளவும் தான் நல்லா தெரிஞ்சிது. கத்திக்கத்தி பார்த்துட்டு, பெரியைய்யாவும் போடாணு விட்டுட்டார்.அவங்க பார்த்து தான், பக்கத்து ஊர்லிருந்த, இவளை என் தலையில கட்டி வச்சாங்க".
"இவளுக்கு அம்மா மட்டும் தான் இருக்காங்க ஆச்சி. எங்க கூட வந்துருங்களென்று எவ்வளவோ கூப்பிட்டு பார்க்கிறோம், வர மாட்டேன்னு சொல்றாங்க".
"அதனால் தான், ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை, புள்ளைங்களை மட்டும் நான் போய் சைக்கிளில் விட்டுட்டு, திங்கள் கிழமை காலையிலே போய் கூப்பிட்டு வந்துடுவேன் .
"என்னப்பா பொல்லாத உறவு...அதான் உன் தங்கச்சி இருக்கிறாள், ஆச்சி நான் இருக்கிறேன், இது போதாதா?, இது போதும் ஆச்சியென்று தம்பதிகள் இருவரும் கண் கலங்கினர்".
"பின்னர் நால்வரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவர்கள், மேலும் சிறிது நேரம் இவர்களோடு பேசியிருந்து விட்டு, காலையில் வருவதாக சொல்லிக் கொண்டு சென்றார்கள்".
" பாட்டி உங்களுக்கு படுக்கையை விரிக்கட்டுமானு ஆர்கலி கேட்க, கொஞ்ச நேரம் போகட்டும் ஆரா கண்ணு".
" நீ உள்ள படுத்துக்கோ, நான் இப்படி படுத்துக்குறேனென்றவர், ஹாலின் ஓரமாய் இருந்த, ஒயர் கட்டிலில் போய் உட்கார்ந்தவர், எங்கையோ பிறந்து வளர்ந்து வாழ்ந்து, இப்போ இங்க வந்து சேர்ந்திருக்கிறோம்".
" வாழ்க்கை தான் எத்தனை விசித்திரங்களை கொண்டதாக இருக்கின்றது?, நேற்று வரை யாரும் இல்லாமலிருந்த நமக்கு, இன்று பேத்திகளும், பேரனும் கிடைத்திருக்கு".
" அப்பா நீலகண்டா, அம்மா சண்டி சாமுண்டா, உங்க ஆட்டம் இன்னும் எத்தனையோ என் வாழ்விலென்று, மனதிற்குள் சொல்லிக்கொண்டவாறு கட்டிலின் மீது சாய்ந்து படுத்தார்".
" உள் அறையிலிருந்த ஆர்கலிக்கு தூக்கம் வரவில்லை. இரவு விளக்கை போட்டவள், அங்கிருந்த ஜன்னலை திறந்து விட, மெல்லிய காற்று அறைக்குள் வந்தது".
" பின்னர் எழுந்து போய் அங்கிருந்த கபோர்டை சத்தமில்லாமல் திறந்தவள், அதிலிருந்த ஹேண்ட் பேகை எடுத்து, ஜிப்பை திறந்து, உள்ளே இருந்த ஃபோட்டோவை எடுத்துக் கொண்டாள்".
" பிறகு ஜன்னலோரம் வந்து சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தவள்,கையிலிருந்த ஃபோட்டோவை, ஜன்னலின் வழியே,உள்ளே வந்த நிலவொளியின் வெளிச்சத்தில் பார்க்க, கண்களிலிருந்து வழிந்த கண்ணீர், அந்த ஃபோட்டோவில் பட்டு தெரித்தது".
" என்னை மன்னிச்சிடுங்கள்".
" நிச்சயமாக என்னை காணாமல் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்பது, எனக்கு நன்கு தெரியும்".
" என்ன செய்ய?,இந்த பிறவியில் சொந்த பந்தத்தோடு வாழும் வாழ்க்கையை, அந்த ஆண்டவன் என் தலையில் எழுதவில்லை போல".
" எங்கு இருந்தாலும் நீங்கள் நால்வரும் நலமோடு இருங்களென்று, ஃபோட்டோவில் இருக்கும், வசு, சுந்தரபாண்டியன் தாத்தா, கிரிஜா பாட்டி, மற்றும் மைக்கேலின் உருவங்களை தொட்டு சொல்லியவள், கண்ணை மூடி ஜன்னல் மேலே சாய, ருத்ரனின் முகம் நினைவிற்கு வந்தது".
"ச்சை... என்று வலு கட்டாயமாக அவனை தனது நினைவிலிருந்து விலக்கி விட்டு,அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று யோசனையில் மூழ்கியவள், வெகு நேரம் சென்றே தூங்கினாள்".
" ஆராமா... ஆராமா... என்ற சத்தம் கேட்டு உறக்கத்திலிருந்த ஆர்கலி கண் விழித்து பார்க்க, அங்கே பாட்டி நின்று கொண்டிருந்தார்".
" எந்திரிச்சி இதை குடி கண்ணு என்று டம்ளரை நீட்ட, என்னது பாட்டி என்றவாறே எழுந்து போய் முகத்தை கழுவி, வாயை கொப்பளித்து வந்து, அவரிடமிருந்து டம்ளரை வாங்கி குடித்தவள், நீங்களென்று கேட்டாள்".
" நான் குடிச்சிட்டேன் கண்ணு. உன் அண்ணன்காரன் தான் வந்து கொடுத்துட்டு போனான்".
" நல்ல நேரம் ஒன்பது மணியிலிருந்து பத்தரை வரைக்கும் உண்டாம், அந்த நேரத்தில் பால் காய்ச்சிக்கலானு சொல்லிட்டு போயிருக்கானென்றவர், இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக்க கண்ணுனு வெளியே சென்றார்".
திருச்சூர்- பாண்டியன் பேலஸ்:
" ஆது கண்ணானு கிரிஜா பாட்டி கூப்பிட, பின்ன என்ன கிரி.. ".
" அதான் வார்னிஷ் அடித்த வெள்ளை பணியாரம் போல, இருவரும் ஒரே போல இருக்கீங்களே இது எங்களுக்கு தெரியாதா?,புதுசா குண்டு போடுறாராம் உன் சிங்கமென்றான்".
" ஆது சொன்னதை கேட்டு சிம்ஹன் தாத்தா முறைத்து பார்க்க, மற்றவர்களோ சத்தமாக சிரித்து விட்டனர்".
" அப்பொழுது அத்தைஐஐஐஐ என்ற குரல் கேட்டு வாசல் பக்கம் பார்க்க, ஆனந்தன் தான் வேகமாக உள்ளே வந்து கொண்டிருந்தார்".
" ஆனந்தனை பார்த்த ருத்ரன், இந்த போலீஸ் எப்படிடா வந்தாரென்க,அதற்கு ஆதுவோ,பரதேசி பயலே நானும் உன் கூட தான் இருக்கேன். எனக்கு மட்டும் எப்படி தெரியும் டா? என்றான்".
" சோபாவில் உட்கார்ந்திருந்த கிரிஜா பாட்டியிடம் வந்த ஆனந்தன், அத்தை உனக்கு என்னாச்சி?, ஏன் ஒரு வார்த்தை சொல்லவில்லை? என்று பதறினார்".
" நீயும் வந்துட்டியாடானு சிம்ஹன் தாத்தா அதிர, மாமா என்று பல்லை கடித்தவர், இவ்வளவு நடந்துருக்கு, இந்த ரெண்டு எருமை மாடும் தான் சொல்லவில்லை, நீங்களுமா மாமா என்றவாறு திரும்பியவர், அங்கிருந்த வசுந்தராவை பார்த்து அதிர்ந்தார்".
" மேடம் நீங்களென்று சொல்லியவர்,பக்கத்தில் இருந்த சுந்தரபாண்டியனை பார்த்து, சார் நீங்களுமா என்க, வசுவும் ஆனந்தனை இங்கு எதிர்பார்க்கவில்லை என்பது, அவர் முகத்திலிருந்த அதிர்விலே தெரிந்தது".
"எஸ் மிஸ்டர் ஆனந்தன், நான் தான்".
" எங்க வீடு தான் இது, இவங்க என்னுடைய அப்பா தானென்று வசு சொல்ல,இங்கு என்னடா நடக்குதென்று, ஆனந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை".
"சுந்தரபாண்டியன் தாத்தாவிற்கு தொண்டை ஒரு மாதிரி இருப்பதாக பேசிக்கொண்டிருக்கும் போது சொல்ல, கசாயம் எடுத்து வரேனென்று உள்ளே சென்ற கிரிஜா பாட்டியும் அப்பொழுது கிச்சனிலிருந்து ஹாலிற்கு வர, அவரின் முக சாயலை பார்த்து ஆனந்தனும் அதிர்ந்து போனார்".
" ஆனந்தனின் ரியாக்க்ஷனை பார்த்த நண்பர்கள் இருவரும், டேய் போலீஸ் மூஞ்சை பாருடா, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லையென்று ஆது சொல்ல, அதற்கு ருத்ரனும்,சத்தியமா என்னாலையும் முடியலைடா என்றான்".
"அத்தை இவங்கள் இவங்களென்று ஆனந்தன் சொல்ல, என்ன?,தி கிரேட் பிசினஸ் மேன் ஆனந்தனுக்கு திக்குவாயோனு ருத்ரன் சொல்ல,கூப்பிட்டு வாடா.நல்ல டாக்டரை பார்க்கலாமென்றான் ஆது".
" அடேய்... ரெண்டு பேரும் வாயை மூடலை, இப்போ நான் என்ன செய்வேன்னு தெரியாதென்று சிம்ஹன் தாத்தா சொல்ல, அதான் தெரியாதுனு சொல்லியாச்சே, பிறகென்ன சிங்கத்துக்கு வாய் சவடாலென்று ருத்ரன் கேட்டான்".
" கிரிஜாஆஆஆஆ என்று சிம்ஹன் தாத்தா பல்லை கடிக்க, ஆது கண்ணா, வீரா கண்ணா கொஞ்ச நேரம் அமைதியா இருங்கப்பா என்றார் கிரிஜா பாட்டி".
" பின்னர் ஆனந்தின் பக்கம் திரும்பிய கிரிஜா பாட்டி, ஆனந்த், அவங்க உன்னுடைய சின்ன அத்தை சைலஜா. என் கூட பிறந்த இரட்டை பிறவி".
" அப்படியா என்று மீண்டும் அதிர்ந்தவர், சரி மற்றது பிறகு பேசிக்கலாம். முதல்ல உங்களுக்கு உடம்பு எப்படி இருக்குங்கத்தை?, ரஞ்சன் சொன்னதும் கிடைத்த ஃப்ளைட்டில் வந்துட்டேன்".
" மாமாவும் எதுவும் சொல்லவில்லை, இந்த எருமைங்களும் ஒன்னும் சொல்லவில்லை, எனக்கு எப்படி இருக்குமென்று ஆனந்த் வருத்தப்பட்டு சொல்ல, அதற்கு ஆதுவோ, என்ன பீலிங்கா இருந்துருக்கும் என்றான்".
" ஆது பேசுவதை கேட்டு, மற்றவர்களுக்கு சிரிக்காமலும் இருக்க முடியவில்லை".
" ஏய் சைலு, வா எதுக்கு இப்படி பேயறைந்த போல நிக்குறனு தங்கையை அழைத்த கிரிஜா பாட்டி, இது ஆனந்த்".
" ஆது கண்ணாவோட அப்பா என்கும் போது, உன்னோட அண்ணன் பையனும்தானென்று, சிம்ஹன் தாத்தா ஒரு குண்டை போட்டார்".
"சிம்ஹன் தாத்தா சொன்னதை கேட்டு அங்கிருந்த அக்கா தங்கை மட்டுமல்ல, ஆனந்தன், ருத்ரன் மற்றும் ஆதுவும் அதிர்ந்து போயினர்".