• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
வெற்றி- ஜனனி நினைவுகள், பொள்ளாச்சி:

"பரவாயில்லை, நல்லபடியாக தான் சார் பேசுறாங்கள். மற்றவர்கள் தான் எப்படினு தெரியலையே? என புலம்பிக் கொண்டிருக்கும் போது,மற்ற பாட வேலைக்கான ஆசிரியர்களும்,வகுப்பிற்கு வந்தனர்".


"அவர்களும் அதே போல முதல் நாள் வகுப்பென்பதால், சாதாரணமா பேசி சென்று கொண்டிருந்தனர். மாணவர்களுக்கான மதிய உணவு இடைவேளையும் வந்தது".

"ஜனனி, கீதா இருவருக்கும் இன்னும் மூன்று தோழிகள் இருந்தனர். அவர்களில் அஞ்சு- மஞ்சு இருவரும் இரட்டையர்கள்,மற்றவள் கவி".

" ஐவரும் ரவுண்டாக உட்கார்ந்து கொண்டு, அவரவர் டிபன் பாக்ஸை பிரித்து ஷேர் பண்ணிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவளுங்கள், கிளாஸின் முன்புறமிருக்கும் வராண்டாவில் உட்கார்ந்து கொண்டு இலந்தை அடையை சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஜனனிக்கு வயிற்றை வலிப்பது போலிருந்தது".

" என்னாச்சென்று யோசித்தவள், இன்னொரு வாய் சாப்பிடப்போக, மீண்டும் வலித்தது".

" ஏன் இப்படி வலிக்குதென்று யோசனையோடே பார்த்தவளின் கண்ணில், ஹெட்மாஸ்டர் ரூமிலிருந்து வெளியே வரும் வெற்றியும், கோபியும் தென்பட்டனர்".

"ஹேய் வெற்றி அண்ணன் டி. சர்டிபிகேட் வாங்க வந்துருக்காங்க போலயென்று கவி சொல்ல, ஆமாடி. இந்த வருஷம் அவங்க காலேஜ் போறாங்களென்று கீதா சொன்னாள்".

" ஜனனியோ வெற்றி வருவதை பார்க்க, அந்நேரம் வெற்றியும் தற்செயலாக அங்கிருந்து ஜனனியை பார்க்க, அப்பா என்று வயிற்றை பிடித்துக்கொண்டவள் , பக்கத்தில் உட்கார்ந்திருந்த அஞ்சுவின் மீது சாய்ந்து கொண்டாள்".

" அதைப்பார்த்த தோழிகள், ஜனா ஜனா என்னாச்சென்று பதற, அவர்கள் சத்தத்தில் அக்கம் பக்கமிருந்த மாணவர்களும் அவர்களிடம் ஓடி வர, டேய் அங்கே என்னாச்சுனு தெரியலை ?,வாடா என்று கோபியை இழுத்துக்கொண்டு வெற்றியும் அங்கே ஓடி வந்தவன், கூட்டத்தை விலக்கி என்னாச்சுமா என்க, திடீர்னு அப்பானு கத்துனாள்ணானு கீதா சொன்னாள்".

" அதற்குள் மாணவி ஒருவர் டீச்சர்ஸ் ரூமில் போய் விஷயத்தை சொல்ல, தமிழாசிரியரும்,கணக்காசிரியரும் அவ்விடம் வந்தனர்".

" ஏய் எட்ட போங்களென்று அருகில் வந்தவர்கள், என்னாச்சி என்க, ஜனனி வயிற்றை பிடிச்சிக்கிட்டு அழுறாள் டீச்சரென்றாள் மஞ்சு".

" சரி சரி எல்லாரும் போங்களென்று விலக்கி விட்டவர், ஜனனி எந்திரி என்கவும், அவள் எழுந்த இடத்தில் ரத்தத்தின் ஈரமிருக்க, கீதா ஓடி போய் பி.டி டீச்சர் கிட்ட புர்கா வாங்கிட்டு வா என்றார்".

" சிறிது நிமிடத்தில் வந்தவளிடமிருந்து புர்காவை வாங்கியவர், இந்தா மா. இதை போடுயென்று கொடுக்க, அதை வாங்கி போட்டுக் கொண்டவளை பார்த்தவர், நீயும் கீதாவும் போய் சிக் ரூம்ல இருங்க".

" அஞ்சு,ஆயா கிட்ட சொல்லி வாளியில் தண்ணீர் எடுத்து வர சொல்லுமாயென அனுப்பி வைத்த கணித ஆசிரியர், டீச்சர் நான் போய் ஜனனி அப்பாவிற்கு விஷயத்தை சொல்லிட்டு வரேனென்று சென்றார்".

" மஞ்சு, கவி, உங்க தோழி பெரிய பொண்ணா ஆகிட்டாடி. பயப்படாதீங்களென்று தமிழாசிரியர் சொல்லிய பிறகே, இருவர் முகத்திலும் சிரிப்பு வந்தது".

" டீச்சர் நாங்க போய் ஜனாவை பார்க்கட்டுமா?, ஹாஹா போங்கடி போங்க. அடுத்து நீங்க தானென்று சிரித்தார்".

" மஞ்சுவும், கவியும் டீச்சர் வார்த்தையை கேட்டு வெக்கப்பட்டுக்கொண்டே, சிக் ரூமை நோக்கி ஓடினாளுங்கள்".

"உள்ளே ஓடி வந்த இருவரும் அங்கே அழுது கொண்டிருந்த கீதாவையும், ஜனனியையும் பார்த்து என்னடி ஆச்சி? என்று பதறினர்".

" மஞ்சு, கவி, ஜனாவிற்கு என்னமோ ஆகிட்டுடி, அவள் உடம்பிலிருந்து ரத்தம் வருதாமென்று கீதா அழ, அடி பைத்தியம் வாயை மூடுடி என்றாள் கவி".

" ஜனா வயசுக்கு வந்துட்டாளாம் டி. தமிழ் டீச்சர் சொன்னாங்களென்று கவி சொல்ல, என்னாஆஆஆ என்று இப்பொழுது, ஜனனியும், கீதாவும் அதிர்ந்தனர்".

"என்னடி சொல்லுறனு கீதா கேட்க, மஞ்சுவோ, ஆமாடி. அதான் ஜனாவுடைய அப்பாக்கு விஷயத்தை சொல்ல டீச்சர் போயிருக்காளென்றாள்".

" இப்பொழுது தோழி பக்கம் திரும்பிய கீதா, அய்யோ,கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இவள் என்னை எப்படி எல்லாம் பயமுறுத்துட்டா தெரியுமா என்க, கீதா சொன்னதை கேட்டு, என்னடி ஆச்சு என்று மஞ்சுவும்,கவியும் கேட்டனர்".

"அது வந்து என் உடம்பில் ரத்தம் வருது. நான் சாகப் போறேன். இனி உங்க கூட நான் படிக்க முடியாது. உங்க கூட என்னால விளையாட முடியாது".

" நான் ஆவியா தான் உங்க கூட இருப்பேனு சொன்னாளென்று கீதா அழ,தோழிகள் இருவரும் சத்தமாக சிரித்து விட்டனர்".

" ஏண்டி அவள் தான் சொல்லுறாளென்றாள், அப்படியே நீயும் நம்பிட்டியா லூசு புடிச்சவளேனு சொல்லும் போதே, ஜனனி என்று ராக்கம்மா பாட்டியின் குரல் கேட்டது".

"ஏய் பாட்டி வந்துடுச்சுடி என்றபடியே கவி போய் கதவை திறக்க, ராக்கம்மா பாட்டியும் கலாவும் அந்த ரூமிற்குள் வந்தவர்கள், ஆத்தா மகமாயினு சொல்லிக்கொண்டே பேத்தியியின் நெற்றியில் கை வைத்து திருஷ்டி சுற்றி போட்டவர், தாயி நீ தான் கூட இருந்து எல்லாத்தையும் பார்க்கணுமென்று சொல்லும் போதே, பாட்டியின் கண்கள் கலங்கியது".

" பின்னர்,ஏண்டி யாரு முகத்தையும் பாக்கலை தானேனு பாட்டி கேட்க, கீதாவோ யாரு மூஞ்ச பார்க்கணும்? என்றாள்".

"இல்லடி இங்க இருக்க பயலுங்க யாருடைய மூஞ்சியாவது பார்த்தீங்களா என்க,ஆமா இப்ப எங்களுக்கு அது தான் வேலை பாரு என்று கோவமாக மஞ்சு சொல்ல, போங்கடி கோட்டிக்காரி சிறுக்கிங்களா".

"கேட்கிறதுக்கு பதில் சொல்றாளுங்களா பாரு கலா என்றவர், சரி சரி வாத்தா வீட்டுக்கு போகலாம் என்க, கீழே உட்கார்ந்திருந்த ஜனனியும் எழ,கலாவும் ராக்கமா பாட்டியும், ஆளுக்கு ஒரு பக்கம் அணைத்துக் கொண்டு வெளியே வந்தவர்கள், சற்றி தள்ளி நிற்கும், சத்தியமூர்த்தி வீட்டின் அம்பாசிட்டர் காருக்கு அருகில் அழைத்துச் சென்றார்கள்".

" ஜனா கண்ணு, உள்ள போய் உட்காரு. ஐயா தான் கார் கொடுத்து அனுப்பியிருக்காங்க என்று கலா சொல்லும் போது, வெற்றியும் அங்கு வந்து டிரைவர் சீட்டின் பக்கத்து சீட்டில் உட்கார, ராக்கம்மா பாட்டிக்கும், கலாவிற்கும் நடுவில் ஜனனி உட்கார்ந்தாள்".

"பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த டீச்சரிடமும், மஞ்சு அஞ்சு கவியிடம் சொல்லிக் கொண்டு, கீதாவையும் காரில் அழைத்துக்கொண்டு,வீட்டை நோக்கி சென்றனர்".

" அப்பொழுது,சின்னதம்பி எப்ப காலேஜ் சேருறீங்க என்க, சர்டிபிகேட் வாங்கணும் மா".அப்பா தான் கையெழுத்து போடணும். அதுக்குள்ள ஏதோ கோயம்புத்தூர்ல பஞ்சாயத்து வந்திருக்குன்னு போயிட்டாங்க".

"நாளைக்கு தான் வந்து வாங்கணும் என்றவன், கண்ணாடி வழியாக ஜனனியை பார்க்க, அவளோ லேசாக தலை குனிந்து உட்கார்ந்திருக்க, அவளின் கண்கள் மட்டும் படபடப்பாக அடித்துக் கொண்டிருப்பது வெற்றிக்கு தெரிந்தது".

சதூர்வேதமங்கலம்:

" இரண்டு பெண்களும் மேலும் சிறிது நேரம் பாட்டியிடம் பேசியிருந்து விட்டு, வேறு ஒன்னும் விஷயம் தெரிஞ்சுக்க முடியாதென்பதை தெரிந்து கொண்டவர்கள்,சரிங்கம்மா.வந்து ரொம்ப நேரம் ஆகி விட்டது.நாங்கள் சென்று வருவோம்மானு சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்".

" போகும் இருவரையும் பார்த்து சிரித்த பாட்டியம்மா, எத்தனை பேரை என் வாழ்க்கையில் பார்த்திருப்பேனென்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவர், இடது பக்கமாய் இருந்த அடி பாம்பில் தண்ணீர் வருதானு சோதித்துப் பார்க்க, குழாயிலிருந்து தண்ணீரும் வந்தது".

" இரண்டு நிமிடம் பைப்பின் கைப்பிடியில் அழுத்தி தண்ணீரை வெளியேற்றியவர், பரவாயில்ல நல்லா தான் தண்ணீர் வருதென்று சொல்லிக் கொண்டவர், வீட்டின் உள்ளே சென்று வாளி ஏதாவது இருக்கா என்று பார்த்தார்".

" கிச்சன் செல்பின் கீழ் பக்கத்தில் இரண்டு வாளிகள் இருப்பது தெரிந்தது. பிளாஸ்டிக் வாளியை எடுத்து வந்தவர் அதில் தண்ணீரை இறைத்து, இவ்வளவு நேரம் சுத்தம் பண்ணி இடத்திலெல்லாம் தெளித்தார்".

"பின்னர் கை கால்களை கழுவிக்கொண்டவர், முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டு அங்கிருந்த திண்ணையில் சாய்ந்து உட்காரும் போது,வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது".

"ஆட்டோவிலிருந்து கருப்பாயியும், ஆர்கலியும் வண்டியிலிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினர்".

" தங்கச்சிமா,எப்ப வேண்டுமானாலும் ஆட்டோக்கு கூப்பிடுங்கள், நான் வருவேனென்றவாறு அங்கிருந்து சென்றார்".

" இருவரும் போகும் போது இருந்ததற்கும் இப்பொழுது சுத்தமாக இருப்பதை பார்த்து, எதுக்கு நீங்க மட்டும் தனியா செஞ்சீங்க? நாங்களும் வந்திருப்போமே என்றனர்".

ஆராமா நீ அம்மாவுக்கு டீயை கொடு, நான் போய் பைகளை வைக்கிறேனென்ற கருப்பாயி,பைகளை தூக்கிக் கொண்டு வீட்டில் உள்ளே சென்றவர், அங்கே வைத்து விட்டு,செல்ஃபிலிருந்த இரண்டு டீ டம்ளரையும் எடுத்து வந்து ஆர்கலியின் முன்பு நீட்ட,அதை வாங்கிக் கொண்டாள்".

" பிளாஸ்கை திறந்தவள், இரண்டு டம்ளரிலும் டீயை ஊற்றி, பாட்டி இந்தாங்க, அண்ணி இந்தாங்கள் என்று இருவரிடமும் டீ டம்ளரை நீட்ட,நீ என கருப்பாயி கேட்க, நான் டீ குடிக்கிறது இல்லை என்றாள்".

" அடக்கொடுமையே அப்போ உனக்கு வேறு ஏதாச்சும் வாங்கி இருக்கலாமே ஆராமா என்றவர், சரி இரு. நம்ம வீட்டுக்கு பின்னாடி தெருவில் தான் டீ கடை இருக்கு".

"உனக்கு பால்-டீ வாங்கிட்டு வரேன் என்று கருப்பாயி சொல்ல ,அதுலாம் ஒன்றும் வேண்டாம் அண்ணி என்று சொல்லிவிட்டாள்".

" அட சும்மா இரு ஆராமா. வயித்து புள்ளைக்காரி இப்படியா இருக்கிறதென்று, வேகமாக டீயை வாயில் ஊற்றிக்கொண்டு இதோ வருகிறேனென்று சென்றார்".

"நம்ப சொல்லாமலே எப்படி இவர்களுக்கு நாம் கர்ப்பமாக இருக்கிறது தெரிந்தது? என்று ஆர்கலி முழிக்க,அவள் முகத்தைப் பார்த்து பாட்டியும் சிரித்து விட்டார்".

"ஆராமா, அது தான் பெண்களோட மதிநுட்பம். ஒருவரை பார்த்த உடனே எடை போடுவது".

" நல்ல பொண்ணா தான் இருக்காளென்றவர், ரொம்ப செலவு ஆகிட்டாத்தா?".

" இல்லைங்க பாட்டி என்க,வந்த பையிங்களை பார்த்தால் அப்படி தான் தெரியுது என்றவர், ஹப்பாடா என்று திண்ணையின் தரையில் சாய்ந்து படுக்க, உங்களுக்கு ஏன் இந்த வேலை பாட்டி".

" ஒரு ஆளை வச்சி நாளைக்கு சுத்தம் பண்ணிக்கலாமென்று ஆர்கலி சொல்ல, சும்மா எப்படிமா இருக்க ,அதான் கொஞ்சோண்டு இடத்தை சுத்தம் செய்தேன்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
திருச்சூர்- நாயர் மருத்துவமனை:

" என்னை போய் இப்படி பண்ணிட்டானுங்களேனு புலம்பிக்கொண்டே, ஆதுக்கு டீயும், ருத்ரனுக்கு காஃபியையும் கலந்து மூடி வைத்தவர், மனைவிக்கு நன்கு ஆற்றிய ஹார்லிக்ஸோடு வந்தார்".


" விஐபி ரூம் என்பதால், அதிலே சிறு கிச்சனும் இருந்தது".

" கிரிஜா என்று கூப்பிட்டுக்கொண்டே மனைவியின் அருகில் வந்த சிம்ஹன் தாத்தா, இந்தாமாயென்று கிளாஸை நீட்ட, தேங்க்யூ மாமா என்றவாறே அவரிடமிருந்து கிளாஸை வாங்கி குடித்தவர், நீங்க குடிச்சீங்களா?".

" எங்கே..குடிக்க? , அதான் இரண்டு சாரும் எனக்கு ஆர்டர் போட்டுட்டு போய் இருக்காங்களே, அவர்களும் வரட்டும், நான் குடிக்கிறேன் என்கும் போது, அவர்கள் இருக்கும் அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்டு, இருவரும் வாசல் பக்கம் பார்த்தனர்".

" பின்னர், சிம்ஹன் தாத்தா போய் லாக்கை எடுத்து விட்டு,கதவை திறக்க, அங்கே சுந்தரபாண்டியன் தாத்தாவும், சைலஜா பாட்டியும் நின்றனர்".

" இருவரையும் பார்த்தவர் உள்ளே வர வழி விட, அவர்களும் சிறு தலையசைப்போடு உள்ளே வந்தவர்கள் நேராக கிரிஜா பாட்டியிடம் சென்றனர்".

" இப்போ எப்படி இருக்குங்களென்று சுந்தரபாண்டியன் தாத்தா கேட்க,நல்லா இருக்குங்க என்றவர், தன் கையை பிடித்துக்கொண்டு பரிதவிப்போடு நிற்கும் உடன் பிறந்தவளை பார்த்த கிரிஜா பாட்டி, என்ன சைலு, உன் வீட்டிற்கு இந்த அக்காவை கூப்பிடமாட்டியா?".

" தனது அக்கா சொன்னதை கேட்ட சைலஜா பாட்டி, உன்னை கூப்பிட்டு போறதுக்காக தான் இவ்வளவு சீக்கிரமா வந்தேன் ".

" பின்னர் பொதுவாக நால்வரும் பேசிக்கொண்டிருக்க,அந்நேரம் ப்ரஷ் ஆக சென்று இருவரும் அங்கு வந்தனர்".

" பேரன்கள் இருவரையும் பார்த்த சிம்ஹன் தாத்தா, கிச்சன்ல இருக்குயென்க, எல்லாம் குடிச்சாச்சி குடிச்சாச்சி என்ற ஆது, நாட் பேட் என்க,என் நேரம்டா என்றார் சிம்ஹன் தாத்தா".

" இவர்கள் பேசிக்கொள்வது புரியாததால் சுந்தரபாண்டியன் தாத்தாவும், சைலஜா பாட்டியும் விசித்திரமாக பார்த்தனர்".

" அப்பொழுது கதவை திறந்து உள்ளே வந்த நர்ஸ், மேடம் டாக்டர் ரவுண்ட்ஸ் வராங்களென்று சொல்லும் போதே, டாக்டரும் அங்கு வந்தார்".

" கிரிஜா மேடம், இப்போ எப்படி இருக்கென்று கேட்டுக்கொண்டே பாட்டியை செக் பண்ணியவர், எல்லாம் ஆல்ரைட் மேடம், இனி தாராளமா நீங்க வீட்டிற்கு போகலாம்" .

" மெடிசின் மட்டும் ஒன் மந்த்
எடுத்துக்கொள்ளுங்களென்று அங்கிருந்து சென்றார்".

" சிஸ்டர், டிஸ்சார்ஜ் பார்மாலிட்டீஸென்று ருத்ரன் கேட்க, கீழே கவுண்டரில் கேட்டுக்கொள்ளுங்கள் தம்பி என்றவர், மீதமிருந்த இன்ஜெக்ஷனை போட்டு விட்டு, உடம்பை பார்த்துக் கொள்ளுங்களென்று சொல்லி செல்ல, சரி கிரி நாங்க போய் பார்த்துட்டு வரோமென்று சொல்லி, ஆதுவும், ருத்ரனும் வெளியே போனார்கள்".

" இப்பொழுது நால்வர் மட்டுமே அந்த அறையில் இருக்க, அடுத்து என்ன பேசுவதென்று அவரவர் யோசனையில் இருந்தனர்".

" அதை கலைக்க விரும்பிய கிரிஜா பாட்டி, சைலு, இன்னமும் நீ புளியங்காய் உப்பு தொட்டு சாப்பிடுறியா? என்க, அதைக்கேட்டவர், ஹீஹீஹீ வெட்கப்பட்டு சிரித்தார்".

" மேலும் தங்களின் சிறுவயதில் சாப்பிட்ட உணவுகளின் சின்ன சின்ன விஷயங்களையும் கிரிஜா பாட்டி தனது தங்கையிடம் கேட்க, அதை எல்லாம் கேட்டு சைலஜா பாட்டியும் சிரித்துக் கொண்டே இருந்தார்".

" அந்நேரம் கதவை திறந்து உள்ளே வந்தவர்கள், கிரி டிஸ்சார்ஜ் பண்ணியாச்சு. இனி நம்ம வீட்டுக்கு கிளம்ப வேண்டியது டா என்றான் ஆது".

"போகலாம் போகலாம் ஒன்னும் அவசரம் இல்லை. அதுக்கு முன்னாடி கொஞ்சம் வேலை இருக்கு.எல்லாத்தையும் முடிச்சிட்டு போகலாமென்று லிப்டில் ஏறி கீழே வந்தவர்கள், இரண்டு கார்களில் ஏறி பாண்டியன் பேலஸிற்கு வந்து சேர்ந்தனர்".

" அக்கா கொஞ்சம் நில்லுயென்று சொல்லிக்கொண்டே உள்ளே போன சைலஜா பாட்டி, கையில் ஆரத்தி தட்டை எடுத்துட்டு வந்தவர், தனது அக்காவுக்கு சுற்றி, நெற்றில் போட்டு வைத்து விட்டு, அதை போய் வாசலில் ஊற்றி வந்தவர், இப்போ உள்ளே போகலாமென்றார்".

"ஹாலில் உட்காருறியா?, இல்லை ரூமிற்கு போகலாமானு சிம்ஹன் தாத்தா கேட்க, ரூமிற்கே போகலாம் மாமா என்றவர், சைலு வீடு ரொம்ப அழகா இருக்கென்று தங்கையை நோக்கி கையை நீட்ட, சைலஜா பாட்டியும் அந்த கரத்தை பிடித்துக்கொள்ள, இருவரும், கீழே இருந்த ரூமிற்குள் சென்றனர்".

" தனது அருகிலிருந்த ருத்ரனிடம், சமூகம் ரொம்ப பெரிய இடம் போலடாயென்று ஆது சொல்ல, அப்படி தான் நினைக்குறேன்டா".

" சரி வா நாமளும் போவோம். என்னமோ ரகசியம் இவைங்களிடம் இருக்கு. அது இன்னைக்கு தெரியுமென்ற ருத்ரன், ஆதுவை இழுத்துக் கொண்டு பாட்டியின் அறைக்குச் சென்றான்".

" அப்பொழுது வசுவும், மைக்கேலும் அங்கு வந்தனர். அம்மா இப்ப எப்படி இருக்கென்று வசு கேட்க,தனது தங்கை மகளை பார்த்த கிரிஜா பாட்டி , நல்லா இருக்கேன் மா என்றார்".

" சரி வாங்க, ஃபர்ஸ்ட் பிரேக் பாஸ்ட் எல்லாரும் சாப்பிட்டலாமென்று சொல்லிக்கொண்டே வசு அங்கிருந்து டைனிங் ஹாலிற்கு வந்தவர், மீராம்மா எல்லாம் ரெடி தானே என்க, சாப்பிடலாம் சாப்பிடலாம் வசு என்றவர், சமைத்த உணவுகளை, இன்னொரு வேலையாளோடு, டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைத்தார்".

"எல்லாருக்கும் மீரா பரிமாற வர, நான் பார்த்துக்குறேன் மா. நீங்க போய் முதல்ல சாப்பிட்டு, மாத்திரை போடுங்களென்று அனுப்பி வைத்த வசு,மற்றவர்களுக்கு உணவை எடுத்து பரிமாறினார்".

"சாப்பிட்டு முடித்தவர்கள் ஹாலில் வந்து உட்கார, வசு நீ ஆபிஸ் போகலையாமா என்க,இல்லம்மா. ஒன் வீக் லீவ் போட்டுருக்கேனென்று தனது அம்மாவிடம் சொல்ல,எங்கமா வொர்க் பண்ணுறீங்கள்?, பரவாயில்லையே, ஒன் வீக் வரை லீவெல்லாம் தராங்களே என்றான் ஆது".

" அதைக் கேட்டவர், இங்க பக்கத்துல தான் கலெக்டரா இருக்கேனென்று வசு சொல்ல, ஓ அப்படியாமா என்றவன், பின்னர் சுதாரித்து எதேஏஏ கலெக்டரா என்று அதிர்ந்தான்".

" கஞ்சி போட்ட காட்டன் சட்டை போல, விறைப்பா இருக்கும் போதே யோசித்திருக்கணும்டா ஆதுனு, அவன் முணுமுணுக்க,அதைக்கேட்டு மற்றவர்கள் சிரித்து விட்டனர்".

"ருத்ரனோ, தனது அருகில் இருந்த நண்பனை முறைத்தவன்,அடேய் எருமை வாயை மூடுடா.அவங்க வீட்டில் இருந்து கொண்டே என்ன பேசுற?என்று திட்டினான்".

"அம்மாடி வசுயென்று சிம்ஹன் தாத்தா கூப்பிட, சொல்லுங்க சாரென்று வசு சொல்ல,உனக்கு நாங்கள் யாரென்று தெரியாது இல்லையா?".

" ஆமாங்க சார் என்க, சார்... ஹாஹா... சார் என்று சிரித்தவர்,உன் அம்மாவும், என் மனைவியும்,கூடப்பிறந்த இரட்டையர்களென்று சொன்னார்".

" அதைக்கேட்ட ஆதுவோ, ஷாக்கெல்லாம் ஒன்னும் வரவில்லை. அதான் மூஞ்ச பார்த்தாலே தெரியுதே சிங்கம். அடுத்த விஷயத்திற்கு வாயென்றான்".

கண்ணன்- ரியா நினைவுகள்:

"விடியல் அழகாய் ஆரம்பமானது".

"வீடு முழுவதும் ஒரு பக்கம் நிச்சயத்திற்கான அலங்காரம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தெரிந்தவர்கள் சிலர், தேவராஜை பார்க்க வந்திருந்தனர்".

" என்ன தேவா, இப்போ தான் நம்ப ஊர் தெரிந்ததாயென்று சொந்தத்தில் ஒருவர் கேட்க, அப்படிலாம் இல்லைங்க மச்சானென்று சிரித்தார்".

"உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்லைங்க மச்சான்,வேலை அப்படியென்க,அது என்னமோ உண்மை தான் தேவா".

" ஓட வேண்டிய இடத்தில் இருக்கோமே, நாம உட்கார்ந்தால் அவ்வளவு தான். தொழில் எப்படி போகுதுப்பா?, ஒன்னும் நஷ்டமில்லையே?".

" இல்லை மாமா, அகலக்கால் வைக்காம தான் இருக்கேன், நல்லதுப்பா என்றார்".

" வேலையாள் ஒருவர் அங்கு பேசிக்கொண்டிருப்பவர்களுக்கும், வேலை செய்பவர்களுக்கும், டீயை கொண்டு வந்து கொடுத்து சென்றார்".

" அப்புறம் தேவா, நிச்சயம் முடிஞ்சி உடனே பயணமா இல்லை, தங்குறியானு மற்றொருவர் கேட்க, தங்கிட்டு தான்ணா போறேன்".

" புள்ளை மேல படிக்கணும் இல்லையா, அது விஷயமா பார்க்கணுமே என்கவுமா,அதுவும் சரிதானென்றனர்".

" நேரமும் ஓடிக்கொண்டிருந்தது".

" வண்ண வண்ண விளக்கொளியில் மாளிகையே மின்னி ஜொலித்தது".

" சொந்த பந்தங்கள், தெரிந்தவர்கள், தொழில் நண்பர்களென்று அந்த வீட்டின் முன் பக்கத்தில் போட்டிருந்த பந்தல் முழுவதும் ஆட்களாய் நிறைந்திருந்தார்கள்".

"மேடையில் உட்கார்ந்திருந்த அய்யரும், நிச்சயத்திற்கான சம்பிரதாயத்தை செய்து கொண்டிருக்க, அவர் கேட்பதை ஆதிராவும், மேகாவும் எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தாளுங்கள்".

"பங்ஷனிற்கு வந்தவர்களை தேவராஜ், தேவகி, கண்ணன் மூவரும் வாசலில் நின்று வரவேற்துக் கொண்டிருக்க, அவர்களுக்கு குடிக்க தேவையானதை சங்கரோடு, தீபனும் ஒரு பக்கம் செய்து கொண்டிருந்தான்".

" நல்ல நேரம் ஆரம்பித்து விட்டது. மாப்பிள்ளையை கூப்பிட்டு வாருங்களென்று ஐயர் சொல்ல,அங்கிருந்து வேகமாய் வாசலுக்கு வந்த தீபன், அப்பா மாமாவை கூப்பிட்டு வர சொல்லுறாங்கனு தேவராஜிடம் சொன்னான்".

"இதோ கண்ணு என்றவர்,சரி வாங்க போகலாமென்று மேடைக்கு வந்தனர்".

" தீபன் நீ போய் கபிலனை கூட்டிட்டு வாடானு கண்ணன் சொல்ல,சரி மாமா என்றவன்,மாடியிலிருக்கும் கபிலன் அறைக்கு முன்பு வந்தவன், மாமா மாமா என்று கதவை தட்டினான்".

" தனது நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த கபிலன், தீபனின் சத்தம் கேட்டு, டேய் தீபன் வந்துருக்கான்".

" போய் கதவை திறங்கடா என்க,நண்பன் ஒருவன் போய் கதைவை திறக்க, அண்ணா, மாமாவை வர சொல்றாங்க, இதோடா என்றபடி நண்பர்களோடு அலங்கரிக்கப்பட்ட மேடைக்கு வந்தான்".

" தாய்மாமா வந்து சீர்வரிசை கொடுங்களென்று ஐயர் சொல்ல, அங்கிருந்த கபிலனுக்கான ஆடைகள் உள்ள தாம்பூலத்தை எடுத்து, மருமகனிடம் தேவராஜ் கொடுத்தார். தம்பி போய் மாத்திட்டு சீக்கிரம் வாங்க, பொண்ணை வர சொல்லுங்க என்றார்".

" மேகாவும் ஆதிராவும் தோழியை அழைத்துக் கொண்டு மேடைக்கு வர, கண்ணனும் தேவகியும் சேர்ந்து, அவளுக்கான புடவை உள்ள தட்டை கொடுத்தனர்".

"சீக்கிரம் மாத்தி கூப்பிட்டு வாங்கம்மா, இன்னும் இருபது நிமிஷம் தான் நல்ல நேரம் இருக்கென்று ஐயர் சொல்ல, சரிங்க ஐயரே என்று ரியாவோடு ரூமிற்குள் சென்றனர்".

" இருவரும் கொடுத்த டிரஸை மாற்றிக்கொண்டு மேடைக்கு வந்து சேர, ஐயரும் அடுத்த சம்பிரதாயத்தை ஆரம்பித்தார்".

" தங்களது பூர்வீக நகையை கொடுத்த தேவகி, மருமகளுக்கு போடச்சொல்ல, கபிலனும் போட்டு விட்டான்".

" அதைப்போல் மச்சான் முறையை கபிலனுக்கு, தீபனை விட்டு தேவராஜ் செய்ய சொன்னார்".

" பின்னர் வந்திருந்த எல்லாரும் மேடைக்கு வந்து, இருவரையும் வாழ்த்தி விட்டு அவர்களிடத்திற்கு சென்று அமர்ந்தனர்".

" மகளை மாலை கோலத்தில் தம்பதியராய் பார்த்த தேவராஜிற்கு, தனது மனைவி பிரியாவை நினைக்க, கண்கள் கலங்கியது".

ஆர்கலி எங்கே...?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top