Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
திருச்சூர்- நாயர் ஹாஸ்பிட்டல்:
டாக்டர் சொன்ன போலவே ஒரு மணி நேரம் சென்று, கிரிஜா பாட்டியை பார்க்க உள்ளே சென்றனர்.
"அங்கிருந்த நர்ஸ், சார் சத்தம் இல்லாமல் அவங்களை பார்த்து விட்டு வந்துடுங்களென்று ரூம் கதவை திறந்து விட்டார்".
"பல ஒயர்கள் சூழ்ந்து, ஓய்ந்து போய் தூங்கி கொண்டிருக்கும் பாட்டியின் அருகில் வந்தவனுக்கு, கண்கள் கலங்கியது".
" அவரின் வலது கையை பிடித்தவன், சிறு பிள்ளை போல் மண்டியிட்டு, பாட்டி படுத்திருக்கும் பெட்டில் தலைவைத்து சத்தமின்றி அழுதான்".
" பேரனின் பின்னாலே வந்த சிம்ஹன் தாத்தா, வீரா என்று கண்டிப்போடு கூப்பிட்டவர், எதுக்கு இப்போ அழற?, அவளுக்கு ஒன்னும் இல்லை".இலங்கையில் இருக்கும் நம்ப வீட்டில் படுக்க இடம் இல்லையென்று, இங்கு வந்து தூங்கிட்டிருக்காள்".
" அவள் தூங்கட்டும் வா என்றவர், மனைவியை ஆழமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, அங்கிருந்து வெளியே சென்றார்".
"சரி நல்லா தூங்கு , குட்நைட் என்று சொல்லி வெளியே வந்தான்".
" மாமா நான் போய் என வார்த்தைகளை சைலஜா பாட்டி மென்னு முழுங்க, என்கிட்ட இதை கேட்கணுமா டா?".
"பின்னர் கதவை திறந்து கொண்டு கணவரோடு உள்ளே சென்ற சைலஜா பாட்டி, தனது அக்காவின் கால்களை பிடித்துக்கொண்டு, சத்தமின்றி கதறி அழுதார்".
"மனைவியின் தோளை தட்டிய சுந்தரபாண்டியன், சைலு வேண்டாமென்க, கணவரின் நெஞ்சில் சாய்ந்து கண்ணீர் வடித்தார்".
"சரி வா போகலாமென்று வெளியே அழைத்து வந்தவர், மனைவியின் கையில் தட்டிக்கொடுத்தார்".
" அப்பொழுது அங்கே வந்த ஹாஸ்பிட்டல் அட்டெண்டர்,டைம் ஆகி விட்டது சார். இனி விசிட்டர்ஸ் யாரும் இங்கே இருக்க கூடாது".
" பேஷண்ட் ஐசியு ல் இருப்பதால் அட்டெண்டர்க்கு உள்ளே எந்த வேலையும் இல்லை. வெளியே வந்து வெய்ட் பண்ணுங்களென்றார்".
" சரிப்பாயென்ற சிம்ஹன் தாத்தா, வாங்கயென்று சொல்லி நடக்க, அவர் பின்னாடியே மற்றவர்களும் நடந்தனர்".
"லிப்டில் ஏறி கீழே வந்தவர்கள், வெளியே இருந்த வெய்டிங் ஹாலிற்கு சென்று, அங்கிருந்த காலி இருக்கையில் உட்கார்ந்து கொண்டனர்".
யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை".
" சிறிது நேரம் சென்று, அங்கிள் இங்கு பக்கத்தில் எதாவது லாட்ஜ் இருக்காயென்று ருத்ரன் கேட்க,பேரனின் வார்த்தையை கேட்ட சிம்ஹன் தாத்தா, வீரா என்று கண்டன பார்வையோடு பார்த்தவர், உன் பாட்டி வீடு இங்கே இருக்கும் போது, உனக்கு எதற்கு லாட்ஜ்?".
" தாத்தா அது வந்து.. நான் மட்டும் ஹாஸ்பிட்டலில் இருக்கேன், நீங்க போய் ரெஸ்ட் எடுக்க தான்".
" தம்பி ஒன்னும் பிரச்சினை இல்லை, நான் பார்த்துக்குறேன். நீங்க நாலு பேரும் வீட்டிற்கு போங்களென்று மைக்கேல் சொல்ல, பரவாயில்லைங்க அங்கிளென்றான்".
" பாட்டி என்று முதல் முறையாக சைலஜாவை கூப்பிட, சொல்லு அப்புயென்றார். அவர் சொன்ன அப்பு என்ற வார்த்தையை கேட்டு அதிர்ந்தான்".
" கிரிஜா பாட்டி மட்டும் தான், சில நேரம் அவனை அப்பு என்று கூப்பிடுவார்".
" பின் தொண்டையை செருமி தன்னை சரி பண்ணிக்கொண்டவன், நீங்க தாத்தாவை கூப்பிட்டு வீட்டிற்கு போங்கள். நான் பார்த்துக்குறேன்". டாக்டர் தான் சொன்னாங்களே, நாளைக்கு வார்டிற்கு மாற்றிடுவாங்களென்று, பிறகு வாங்கள்".
"அதுலாம் ஒன்னு வேண்டாமென்று சிம்ஹன் தாத்தா சொல்ல, பின்னர் ஒரு வழியாக பேசி மைக்கேலோடு மூவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தான்".
" சேரில் உட்கார்ந்திருந்தவனுக்கு முதுகு வலிப்பது போலிருக்க, எழுந்து வெளியே வந்தவன், அங்கிருந்த ஓ வடிவ புல் மண்டிய காரிடரில் கொஞ்ச நேரம் நடந்து விட்டு மணியை பார்க்க, நள்ளிரவு 12 என்று காட்டியது".
"தொண்டை வறட்சியாக இருக்கவும், ஹாஸ்பிட்டல் கேண்டினிற்குள் நுழைய, அங்கே பகல் போல பரபரப்பாக இருந்தனர்".
"காஃபி ஒன்று என்க, வேற எதாவது வேண்டுமா என்று ருத்ரனிடம் கேட்டவர், டிபன் ஐட்டமும் சூடாக இருக்குயென்றார்".
" காஃபியும், ஒரு பன் போதுமென்று சொல்ல,வெய்டரும் சிறிது நிமிடத்தில் அவன் கேட்டதை கொண்டு வந்து, டேபிளின் மேல் வைத்து சென்றார்".
"காஃபியை குடித்தவனுக்கு, பன் சாப்பிட தோணவில்லை. அப்பொழுது ஆர்கலி என்ற சத்தம் கேட்டு பட்டென்று எழுந்து திரும்பி பார்க்கவும், இரண்டு வயது குழந்தை ஒன்று கேண்டின் உள்ளே ஓடி வந்தது".
" ஆர்கலி பெயரை கேட்ட பிறகு தான் ருத்ரனுக்கும், தான் எதற்காக இங்கே வந்திருக்கிறோம் என்பது நினைவிற்குள் வர, ஆர்கலி என்று பல்லை கடித்தவன், காலையில் வரேண்டி என்று சொல்லிக் கொண்டான்".
" கண்ணை முடியவன்,
சிறு வயதில் சிம்ஹன் தாத்தா அவனுக்கு சொல்லிக்கொடுத்த வரிகளை, மனதிற்குள் சொல்லலானான்".
வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்து தான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம்
போர்க்களம் தான் மாறுமா.... என்று இரண்டு முறை தனக்குள் சொல்லியவன், பணத்தை கொடுத்து விட்டு வெளியே வந்தவன், மீண்டும் உள்ளே போய் வெய்ட்டிங் ஹால் சேரில் சாய்ந்து உட்கார்ந்தவனுக்கு, ஆர்கலியின் நினைவு வந்தது".
" பனி புகையின் ஊடே முதன் முதலாக அவளை கண்ட அந்த நாளை நினைத்து பார்க்க,அவள் சொன்ன லேம்போஸ்ட் வார்த்தையை முணுமுணுத்தவனுக்கு சிரிப்பு வர, வந்துட்டேன்டி".
" ரெண்டு வருஷமா பாக்காத கோவத்தில் தான் சொல்லாமல் இங்கு ஓடி வந்து விட்டாயா? என்று தனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவன், எப்போ தூங்கினான் என்பது தெரியவில்லை".
சதுர்வேதமங்கலம்:
"சிறிது நேரம் நகத்தை கடித்து துப்பியவள், கண்ணை மூடி திறந்து விட்டு, எழுந்து மேலே சென்றவள், கபியின் அறையின் முன்பு நின்று கதவை தட்ட யோசித்தாள்".
"அப்பொழுது, படாரென்று கதவை திறந்து,அவள் கையை பிடித்து உள்ளே இழுத்தவன், ஏண்டி கூப்பிட்டால் வர முடியாதா?".
"உன்னை என்ன நான் கடித்து தின்றுவிடுவேனா? என்றவாறு தன் மாமன் மகளை ஒரு பார்வை பார்த்தவன், அவள் அதிர்வில் இருப்பதை கண்டு, சிரிப்பு வந்தது".
" ரியா,தாவணி போட்டிருப்பது வசதியாக போக,இடது பக்கமுள்ள இடையில் நறுக்கென்று கிள்ளி விட்டு, தள்ளி நின்றான்".
"வலியில் நிகழ்விற்கு வந்தவளோ எதிரில் இருப்பவனை திட்ட வாயெடுத்தவள், அவன் பார்வையை கண்டு கீழே குனிந்து கொண்டாள்".
"சிறு வயதிலுருந்து இவள் தான் உன்னவளென்று சொல்லி வளர்க்கப்பட்டதால், மாமன் மகள் என்பதை விட, தன் பொண்டாட்டி என்றே, மனதில் நினைக்க தொடங்கினான்".
"வளரும் பருவம் வந்த பின்னர், அவள் மேலிருந்த அன்பு காதலாய் மாறியது. ஆனால் ரியா முகம் கொடுத்து பேச மாட்டாள்".
"சரி ஊரில் தெரிஞ்சவர்கள் கிண்டல் பண்ணுவதால் தான், இப்படி இருக்கிறாளென்று நினைத்துக் கொண்டிருக்கின்றான்".
"பருவம் எய்திய பின்னர், அவளை திருட்டு தனமாக பார்த்து ரசிப்பது, கபிலனுக்கு பேரானந்தமாக இருந்தது".
"மருத்துவம் படிக்க சென்னை போகணுமென்று ரியா சொல்லிய பிறகு, அவள் வார்த்தையை தட்ட முடியாமல், மனமேயின்றி அவளை கல்லூரியில் சேர்த்து விட்டு வந்தான்".
"அதன் பின்னரே அவளிடம் இன்னும் ஒதுக்கம் வந்தது".
சரியென்று அதையும் கபிலன் பெரிதாக நினைக்கவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்னர் அவள் ஃபோனில் கூப்பிட்ட மாமா என்ற வார்த்தையில் உள்ள உணர்வு, அவனை வெகுவாக தாக்கியது.
"ரியாவிற்கும் தன் மேல் விருப்பமிருக்கிறது என்பது, அன்று தான் கபிலனுக்கு புரிந்தது".
" யோவ் விருமாண்டினு ரியா கூப்பிட, அவள் சத்தத்தில் நினைவிற்குள்ளிருந்து வெளியே வந்தவன், எதேஏஏ யோவாஆஆ!".
" ஆமாயா".
" மேலே வா வா வா என்று உசுரை வாங்கி விட்டு, என்னமோ இடிச்ச புளி போல நிக்குறீங்க".
" தன்னவளின் வாயாடித்தனமான பேச்சை அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தவனின் முன்பு வந்து நின்றவள், என்ன கபிலா வாயடைத்து போயாச்சானு அவன் கண் முன்னால் சொடுக்கு போட்டாள்".
" சொடுக்கு சத்தத்தில் கண்ணை மூடி திறந்தவன், அவள் கையை பிடித்து இழுக்க,ஒரு சுற்று சுற்றி அவன் நெஞ்சின் மேல் சாய்ந்து விழுந்தாள்".
"தன் மேல் சாய்ந்திருப்பவளை இறுக அணைத்தவன், ஒரு கையால் அவளின் பின்னந்தலையை பின்பக்கமாய் இழுத்தவன், முதன் முதலாய் தன்னவளின் இதழோடு, தன் முரட்டு இதழை பதித்தான்".
" முதலில் திமிறியவள் பின் தன் மாமனின் இதழ்போரில் இணைந்து கொண்டாள்".
" இருவரும் அவர்கள் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்க,கண்ணனின் புல்லட் வரும் சத்தம் கேட்டு விலகியவர்கள், வேறு பக்கம் திரும்பி நின்றனர்".
" தன் தலைமுடியை அழுத்தமாக கோதியவன், அது வந்து வந்து என்க, அண்ணாஆஆஆ என்றவாறு அந்நேரம் ஆதிராவும் அங்கு வந்தாள்".
"அங்கு ரியாவும் இருப்பதை பார்த்தவள், ஏய் நீ இங்கே தான் இருக்கியா?, அம்மா உன்னை தோட்டத்திற்கு தேட போயிருக்காங்க.அம்மா சாப்பிட கூப்பிடுறாங்கள், வாங்க அண்ணா என்றாள்".
" வாடா ஆதி போகலாமென்று கபி முன்னே நடந்து செல்ல, வாடினு தோழியின் கையை இழுத்துக்கொண்டு ஆதிராவும் சென்றாள்".
"மூவரும் மாடியிலிருந்து கீழே வர, கண்ணனும் வீட்டிற்குள் வந்தவர், என்னடா சாப்டீங்களாயென்க,இனி தானுங்கப்பானு ஆதிரா சொல்ல, மணி என்ன ஆகுது?, இப்போ தானென்று சொல்லுற".
" எங்க அவள், ஏய் தேவகி என்று சத்தம் போட்டு கூப்பிட, எதுக்கு இப்படி கத்துறீங்க என்றவாறே தோட்டத்து வாசல் வழியா தேவகியும் வீட்டிற்குள் வந்தார்".
" ஏண்டி மணி பத்தரையாகுது, இன்னும் புள்ளைங்களுக்கு சாப்ட குடுக்காம என்ன பண்ணுற?".
" அப்பா... அம்மா முன்னவே சாப்ட சொன்னாங்க, நாங்க தான் சாப்பிடவில்லையென்று ஆதிரா சொல்ல, அப்படியா கண்ணு என்றபடியே மனைவியை பார்க்க, அங்கே தேவகியோ தனது கணவனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார்".
" சரி சரி சாப்டுங்கடானு அங்கிருந்து தனது அறைக்கு வேகமாக செல்ல,தனது அருகில் நின்ற அம்மாவை பார்ததவன் என்னம்மா, உன் புருசர் ரொம்ப கொதிக்குறாரு?".
" அவரு கடக்கட்டும், முதல்ல நீங்க சாப்பிடுங்கப்பாளென்று, மூவருக்கும் பரிமாறியவர், கணவரையும் கூப்பிடச்சென்றார்".
" கதவை திறந்து உள்ளே வந்து பார்க்க, கண்ணன் ரெஸ்ட்ரூமில் இருப்பது தெரிந்தது. சிறிது நிமிடத்தில் கதவை திறந்து வெளியே வந்தவரை பார்த்து, மாமா வாங்க சாப்பிடலாமென்று தேவகி கூப்பிட, எடுத்து வை மா என்றார்".
டாக்டர் சொன்ன போலவே ஒரு மணி நேரம் சென்று, கிரிஜா பாட்டியை பார்க்க உள்ளே சென்றனர்.
"அங்கிருந்த நர்ஸ், சார் சத்தம் இல்லாமல் அவங்களை பார்த்து விட்டு வந்துடுங்களென்று ரூம் கதவை திறந்து விட்டார்".
"பல ஒயர்கள் சூழ்ந்து, ஓய்ந்து போய் தூங்கி கொண்டிருக்கும் பாட்டியின் அருகில் வந்தவனுக்கு, கண்கள் கலங்கியது".
" அவரின் வலது கையை பிடித்தவன், சிறு பிள்ளை போல் மண்டியிட்டு, பாட்டி படுத்திருக்கும் பெட்டில் தலைவைத்து சத்தமின்றி அழுதான்".
" பேரனின் பின்னாலே வந்த சிம்ஹன் தாத்தா, வீரா என்று கண்டிப்போடு கூப்பிட்டவர், எதுக்கு இப்போ அழற?, அவளுக்கு ஒன்னும் இல்லை".இலங்கையில் இருக்கும் நம்ப வீட்டில் படுக்க இடம் இல்லையென்று, இங்கு வந்து தூங்கிட்டிருக்காள்".
" அவள் தூங்கட்டும் வா என்றவர், மனைவியை ஆழமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, அங்கிருந்து வெளியே சென்றார்".
"சரி நல்லா தூங்கு , குட்நைட் என்று சொல்லி வெளியே வந்தான்".
" மாமா நான் போய் என வார்த்தைகளை சைலஜா பாட்டி மென்னு முழுங்க, என்கிட்ட இதை கேட்கணுமா டா?".
"பின்னர் கதவை திறந்து கொண்டு கணவரோடு உள்ளே சென்ற சைலஜா பாட்டி, தனது அக்காவின் கால்களை பிடித்துக்கொண்டு, சத்தமின்றி கதறி அழுதார்".
"மனைவியின் தோளை தட்டிய சுந்தரபாண்டியன், சைலு வேண்டாமென்க, கணவரின் நெஞ்சில் சாய்ந்து கண்ணீர் வடித்தார்".
"சரி வா போகலாமென்று வெளியே அழைத்து வந்தவர், மனைவியின் கையில் தட்டிக்கொடுத்தார்".
" அப்பொழுது அங்கே வந்த ஹாஸ்பிட்டல் அட்டெண்டர்,டைம் ஆகி விட்டது சார். இனி விசிட்டர்ஸ் யாரும் இங்கே இருக்க கூடாது".
" பேஷண்ட் ஐசியு ல் இருப்பதால் அட்டெண்டர்க்கு உள்ளே எந்த வேலையும் இல்லை. வெளியே வந்து வெய்ட் பண்ணுங்களென்றார்".
" சரிப்பாயென்ற சிம்ஹன் தாத்தா, வாங்கயென்று சொல்லி நடக்க, அவர் பின்னாடியே மற்றவர்களும் நடந்தனர்".
"லிப்டில் ஏறி கீழே வந்தவர்கள், வெளியே இருந்த வெய்டிங் ஹாலிற்கு சென்று, அங்கிருந்த காலி இருக்கையில் உட்கார்ந்து கொண்டனர்".
யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை".
" சிறிது நேரம் சென்று, அங்கிள் இங்கு பக்கத்தில் எதாவது லாட்ஜ் இருக்காயென்று ருத்ரன் கேட்க,பேரனின் வார்த்தையை கேட்ட சிம்ஹன் தாத்தா, வீரா என்று கண்டன பார்வையோடு பார்த்தவர், உன் பாட்டி வீடு இங்கே இருக்கும் போது, உனக்கு எதற்கு லாட்ஜ்?".
" தாத்தா அது வந்து.. நான் மட்டும் ஹாஸ்பிட்டலில் இருக்கேன், நீங்க போய் ரெஸ்ட் எடுக்க தான்".
" தம்பி ஒன்னும் பிரச்சினை இல்லை, நான் பார்த்துக்குறேன். நீங்க நாலு பேரும் வீட்டிற்கு போங்களென்று மைக்கேல் சொல்ல, பரவாயில்லைங்க அங்கிளென்றான்".
" பாட்டி என்று முதல் முறையாக சைலஜாவை கூப்பிட, சொல்லு அப்புயென்றார். அவர் சொன்ன அப்பு என்ற வார்த்தையை கேட்டு அதிர்ந்தான்".
" கிரிஜா பாட்டி மட்டும் தான், சில நேரம் அவனை அப்பு என்று கூப்பிடுவார்".
" பின் தொண்டையை செருமி தன்னை சரி பண்ணிக்கொண்டவன், நீங்க தாத்தாவை கூப்பிட்டு வீட்டிற்கு போங்கள். நான் பார்த்துக்குறேன்". டாக்டர் தான் சொன்னாங்களே, நாளைக்கு வார்டிற்கு மாற்றிடுவாங்களென்று, பிறகு வாங்கள்".
"அதுலாம் ஒன்னு வேண்டாமென்று சிம்ஹன் தாத்தா சொல்ல, பின்னர் ஒரு வழியாக பேசி மைக்கேலோடு மூவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தான்".
" சேரில் உட்கார்ந்திருந்தவனுக்கு முதுகு வலிப்பது போலிருக்க, எழுந்து வெளியே வந்தவன், அங்கிருந்த ஓ வடிவ புல் மண்டிய காரிடரில் கொஞ்ச நேரம் நடந்து விட்டு மணியை பார்க்க, நள்ளிரவு 12 என்று காட்டியது".
"தொண்டை வறட்சியாக இருக்கவும், ஹாஸ்பிட்டல் கேண்டினிற்குள் நுழைய, அங்கே பகல் போல பரபரப்பாக இருந்தனர்".
"காஃபி ஒன்று என்க, வேற எதாவது வேண்டுமா என்று ருத்ரனிடம் கேட்டவர், டிபன் ஐட்டமும் சூடாக இருக்குயென்றார்".
" காஃபியும், ஒரு பன் போதுமென்று சொல்ல,வெய்டரும் சிறிது நிமிடத்தில் அவன் கேட்டதை கொண்டு வந்து, டேபிளின் மேல் வைத்து சென்றார்".
"காஃபியை குடித்தவனுக்கு, பன் சாப்பிட தோணவில்லை. அப்பொழுது ஆர்கலி என்ற சத்தம் கேட்டு பட்டென்று எழுந்து திரும்பி பார்க்கவும், இரண்டு வயது குழந்தை ஒன்று கேண்டின் உள்ளே ஓடி வந்தது".
" ஆர்கலி பெயரை கேட்ட பிறகு தான் ருத்ரனுக்கும், தான் எதற்காக இங்கே வந்திருக்கிறோம் என்பது நினைவிற்குள் வர, ஆர்கலி என்று பல்லை கடித்தவன், காலையில் வரேண்டி என்று சொல்லிக் கொண்டான்".
" கண்ணை முடியவன்,
சிறு வயதில் சிம்ஹன் தாத்தா அவனுக்கு சொல்லிக்கொடுத்த வரிகளை, மனதிற்குள் சொல்லலானான்".
வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்து தான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம்
போர்க்களம் தான் மாறுமா.... என்று இரண்டு முறை தனக்குள் சொல்லியவன், பணத்தை கொடுத்து விட்டு வெளியே வந்தவன், மீண்டும் உள்ளே போய் வெய்ட்டிங் ஹால் சேரில் சாய்ந்து உட்கார்ந்தவனுக்கு, ஆர்கலியின் நினைவு வந்தது".
" பனி புகையின் ஊடே முதன் முதலாக அவளை கண்ட அந்த நாளை நினைத்து பார்க்க,அவள் சொன்ன லேம்போஸ்ட் வார்த்தையை முணுமுணுத்தவனுக்கு சிரிப்பு வர, வந்துட்டேன்டி".
" ரெண்டு வருஷமா பாக்காத கோவத்தில் தான் சொல்லாமல் இங்கு ஓடி வந்து விட்டாயா? என்று தனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவன், எப்போ தூங்கினான் என்பது தெரியவில்லை".
சதுர்வேதமங்கலம்:
"சிறிது நேரம் நகத்தை கடித்து துப்பியவள், கண்ணை மூடி திறந்து விட்டு, எழுந்து மேலே சென்றவள், கபியின் அறையின் முன்பு நின்று கதவை தட்ட யோசித்தாள்".
"அப்பொழுது, படாரென்று கதவை திறந்து,அவள் கையை பிடித்து உள்ளே இழுத்தவன், ஏண்டி கூப்பிட்டால் வர முடியாதா?".
"உன்னை என்ன நான் கடித்து தின்றுவிடுவேனா? என்றவாறு தன் மாமன் மகளை ஒரு பார்வை பார்த்தவன், அவள் அதிர்வில் இருப்பதை கண்டு, சிரிப்பு வந்தது".
" ரியா,தாவணி போட்டிருப்பது வசதியாக போக,இடது பக்கமுள்ள இடையில் நறுக்கென்று கிள்ளி விட்டு, தள்ளி நின்றான்".
"வலியில் நிகழ்விற்கு வந்தவளோ எதிரில் இருப்பவனை திட்ட வாயெடுத்தவள், அவன் பார்வையை கண்டு கீழே குனிந்து கொண்டாள்".
"சிறு வயதிலுருந்து இவள் தான் உன்னவளென்று சொல்லி வளர்க்கப்பட்டதால், மாமன் மகள் என்பதை விட, தன் பொண்டாட்டி என்றே, மனதில் நினைக்க தொடங்கினான்".
"வளரும் பருவம் வந்த பின்னர், அவள் மேலிருந்த அன்பு காதலாய் மாறியது. ஆனால் ரியா முகம் கொடுத்து பேச மாட்டாள்".
"சரி ஊரில் தெரிஞ்சவர்கள் கிண்டல் பண்ணுவதால் தான், இப்படி இருக்கிறாளென்று நினைத்துக் கொண்டிருக்கின்றான்".
"பருவம் எய்திய பின்னர், அவளை திருட்டு தனமாக பார்த்து ரசிப்பது, கபிலனுக்கு பேரானந்தமாக இருந்தது".
"மருத்துவம் படிக்க சென்னை போகணுமென்று ரியா சொல்லிய பிறகு, அவள் வார்த்தையை தட்ட முடியாமல், மனமேயின்றி அவளை கல்லூரியில் சேர்த்து விட்டு வந்தான்".
"அதன் பின்னரே அவளிடம் இன்னும் ஒதுக்கம் வந்தது".
சரியென்று அதையும் கபிலன் பெரிதாக நினைக்கவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்னர் அவள் ஃபோனில் கூப்பிட்ட மாமா என்ற வார்த்தையில் உள்ள உணர்வு, அவனை வெகுவாக தாக்கியது.
"ரியாவிற்கும் தன் மேல் விருப்பமிருக்கிறது என்பது, அன்று தான் கபிலனுக்கு புரிந்தது".
" யோவ் விருமாண்டினு ரியா கூப்பிட, அவள் சத்தத்தில் நினைவிற்குள்ளிருந்து வெளியே வந்தவன், எதேஏஏ யோவாஆஆ!".
" ஆமாயா".
" மேலே வா வா வா என்று உசுரை வாங்கி விட்டு, என்னமோ இடிச்ச புளி போல நிக்குறீங்க".
" தன்னவளின் வாயாடித்தனமான பேச்சை அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தவனின் முன்பு வந்து நின்றவள், என்ன கபிலா வாயடைத்து போயாச்சானு அவன் கண் முன்னால் சொடுக்கு போட்டாள்".
" சொடுக்கு சத்தத்தில் கண்ணை மூடி திறந்தவன், அவள் கையை பிடித்து இழுக்க,ஒரு சுற்று சுற்றி அவன் நெஞ்சின் மேல் சாய்ந்து விழுந்தாள்".
"தன் மேல் சாய்ந்திருப்பவளை இறுக அணைத்தவன், ஒரு கையால் அவளின் பின்னந்தலையை பின்பக்கமாய் இழுத்தவன், முதன் முதலாய் தன்னவளின் இதழோடு, தன் முரட்டு இதழை பதித்தான்".
" முதலில் திமிறியவள் பின் தன் மாமனின் இதழ்போரில் இணைந்து கொண்டாள்".
" இருவரும் அவர்கள் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்க,கண்ணனின் புல்லட் வரும் சத்தம் கேட்டு விலகியவர்கள், வேறு பக்கம் திரும்பி நின்றனர்".
" தன் தலைமுடியை அழுத்தமாக கோதியவன், அது வந்து வந்து என்க, அண்ணாஆஆஆ என்றவாறு அந்நேரம் ஆதிராவும் அங்கு வந்தாள்".
"அங்கு ரியாவும் இருப்பதை பார்த்தவள், ஏய் நீ இங்கே தான் இருக்கியா?, அம்மா உன்னை தோட்டத்திற்கு தேட போயிருக்காங்க.அம்மா சாப்பிட கூப்பிடுறாங்கள், வாங்க அண்ணா என்றாள்".
" வாடா ஆதி போகலாமென்று கபி முன்னே நடந்து செல்ல, வாடினு தோழியின் கையை இழுத்துக்கொண்டு ஆதிராவும் சென்றாள்".
"மூவரும் மாடியிலிருந்து கீழே வர, கண்ணனும் வீட்டிற்குள் வந்தவர், என்னடா சாப்டீங்களாயென்க,இனி தானுங்கப்பானு ஆதிரா சொல்ல, மணி என்ன ஆகுது?, இப்போ தானென்று சொல்லுற".
" எங்க அவள், ஏய் தேவகி என்று சத்தம் போட்டு கூப்பிட, எதுக்கு இப்படி கத்துறீங்க என்றவாறே தோட்டத்து வாசல் வழியா தேவகியும் வீட்டிற்குள் வந்தார்".
" ஏண்டி மணி பத்தரையாகுது, இன்னும் புள்ளைங்களுக்கு சாப்ட குடுக்காம என்ன பண்ணுற?".
" அப்பா... அம்மா முன்னவே சாப்ட சொன்னாங்க, நாங்க தான் சாப்பிடவில்லையென்று ஆதிரா சொல்ல, அப்படியா கண்ணு என்றபடியே மனைவியை பார்க்க, அங்கே தேவகியோ தனது கணவனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார்".
" சரி சரி சாப்டுங்கடானு அங்கிருந்து தனது அறைக்கு வேகமாக செல்ல,தனது அருகில் நின்ற அம்மாவை பார்ததவன் என்னம்மா, உன் புருசர் ரொம்ப கொதிக்குறாரு?".
" அவரு கடக்கட்டும், முதல்ல நீங்க சாப்பிடுங்கப்பாளென்று, மூவருக்கும் பரிமாறியவர், கணவரையும் கூப்பிடச்சென்றார்".
" கதவை திறந்து உள்ளே வந்து பார்க்க, கண்ணன் ரெஸ்ட்ரூமில் இருப்பது தெரிந்தது. சிறிது நிமிடத்தில் கதவை திறந்து வெளியே வந்தவரை பார்த்து, மாமா வாங்க சாப்பிடலாமென்று தேவகி கூப்பிட, எடுத்து வை மா என்றார்".