Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
பொள்ளாச்சி:
"ஜனனியை காட்டி, அது தான் உன் நாத்தனாரென்று வள்ளி சொல்ல, ம்ம் என்று ராணியும் சிரித்தாள்".
"சரி வாங்க நம்ப வீட்டிற்கு போகலாமென்று ராணியும், பாலாஜியும் கூப்பிட, இருக்குட்டும்மா, போய் தான் வெற்றிக்கு எல்லாம் தயார் செய்யணும்".
" நீ தம்பிய கூப்பிட்டு நம்ப வீட்டிற்கு வாடா, இன்னொரு நாள் நாங்க நிச்சயமா வரோமென்று சத்தியமூர்த்தி சொல்ல, சரிங்கப்பாயென்றாள்".
மேலும் சிறிது நேரம் ராணியுடன் பேசியிருந்து விட்டு, மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு கோயிலிலிருந்து வெளியே வந்தவர்கள், அங்கிருந்த ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பொள்ளாச்சியை நோக்கி புறப்பட்டனர்.
" அசதியின் காரணமாய் பெரும்பாலானோர் பஸ்ஸில் தூங்கி விட்டனர்".
" சரி எப்போ டிக்கெட் போடணுமென்று கோபி கேட்க, அப்பா, வள்ளிக்கும் சேர்த்து ஞாயிற்று கிழமை போடலானு இருக்கேண்டா".
" அதுவும் நல்லது தான், இங்க இருக்குறதை நான் பார்த்துக்குறேன்னு கோபி சொல்ல, நண்பேன்டா என்றவாறு தனது பால்யகால நண்பனை தோளோடு அணைத்துக்கொண்டே வெற்றி சொல்ல,நான் இன்னும் கோவமாக தான் இருக்கேனென்றான்".
"அப்புறம்டா வெற்றி, காலையில அந்த புள்ளை வந்து பேசுச்சி, நல்லா திட்டி விட்டுட்டேனென்றான்".
" யாரு, ஜனனியவா என்க, ஆமாடா என்றவன் காலையில் நடந்ததை பற்றி வெற்றியிடம் சொல்ல தொடங்கினான்".
"வெற்றி குளிக்க போன பின்னர், நல்லபடியாக திருச்செந்தூர் வந்து சேர்ந்து விட்டதாக, கோபி தனது அப்பாவிடம் ஃபோனில் சொல்லிக்கொண்டிருந்தான்".
" அங்கு வந்த ஜனனி, கோபிணா என்றாள்".
"ஃபோனில் பேசிக்கொண்டிருந்தவன், சரிப்பா நான் கிளம்பிட்டு சொல்லுறேனென்று கட் பண்ணியவன்,சொல்லுமா என்ன?".
" ஏன்ணா, என் மேல கோவமா இருக்கீங்களா?, முகம் குடுத்து கூட பேச மாட்டீங்கிறீங்கள்?".
"நீங்க பெரிய வீட்டு மருமகள், உங்க மேல கோவப்பட என்ன இருக்கிறது மா".
" என்னணா இப்படி சொல்லுறீங்க?".
" வேற எப்படி சொல்லணும்?,அது தானே உணமை".
" நீங்க இப்படிலாம் பேசுற ஆளே இல்லையேணானு வருத்தமாக கேட்க, நான் கூட தான் நினைச்சேன், நீ வழக்கமாக பேராசை புடிச்ச புள்ளை இல்லை, நல்ல பொண்ணுனு.உன் லட்சணம் நேற்று பந்தலில் தானே தெரிந்தது".
"அந்தனை பேருக்கு முன்ன வாய் கூசாமல் பேசுனியே?, ஏன் உனக்கு காதலிக்கும் போது அவன் வேலை பார்க்கவில்லைனு தெரியாதா?.
"இத்தனை வருஷமா இந்த ஊர்ல தான் இருந்தியா இல்லை, வெளிநாட்டில் வாழ்ந்தியா?, அப்போலாம் அவன் அவங்க பூர்வீக வயல்ல உழைக்குறது கண்ணு தெரியலையோ?.கல்யாணம்னு வந்ததும், உனக்கு இதுலாம் குறையாகிட்டு".
" சரி அதை விடு, என் மாமா எப்படியாப்பட்ட மனுஷன், அவரை பற்றி கொஞ்சமாவது யோசித்தியா?, இல்லையே".
" அவ்வளவு பெரிய மனுஷனை ஊருக்கு முன்னால் கை கூப்பி மன்னிப்பு கேட்க வச்சிட்டியே, உன்னையெல்லாம் பார்த்தாவே எரிச்சலா வருது".உனக்கு புடிக்கலைனா போக வேண்டியது தானே".
" அவனுக்கு வேலை கிடைச்சிட்டுனு லட்டர் வந்ததும் நீ பேசியதையெல்லாம் மறந்துட்டு போல".
" உன்னை போல சுயநலவாதிங்களை பார்த்தாலே பத்திக்கிட்டு வருது,சாமிக்காக வந்துருக்கோம், கண்ணு முன்னாடி நிக்காதே போய்டு என்றான்".
" கோபியின் ஒவ்வொரு கேள்வியும் சாட்டையடியாய் ஜனனியின் மேல் விழ,அழுது கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள்".
"இதான்டா நடந்துச்சியென்று கோபி சொல்ல, நண்பனின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு சீட்டில் சாய்ந்து கண்ணை மூட,வெற்றியின் கண்களிலிருந்து நீர் கசிந்தது".
"பொள்ளாச்சிக்கு வந்து சேர இரவு ஏழு மணியானது, அப்பொழுது அய்யா இந்தாங்களென்று மாரியப்பன் பணத்தை நீட்ட,அதற்கு சத்தியமூர்த்தியோ என்னங்க கணக்கு( கணக்குபிள்ளை)?".
" கோயில் சமாச்சாரம் என்பதால், வந்திருந்த எல்லாரும், அவர்களால் முடிந்த தொகை கொடுத்திருக்கிறார்கள்".
" ஓஓஓ...என்ற சத்தியமூர்த்தி, சரிங்க கணக்கு,இந்த பணத்தை அப்படியே நம்ம கோயில் கணக்கில் வைத்து விடுங்க.ஏதாச்சு கோயில் சம்பந்தப்பட்ட வேலை வந்துச்சு என்றால், அதுக்கு எடுத்து செலவு பண்ணிடுங்க".
"வழக்கம் போல் சத்தியமூர்த்தியின் பெருந்தன்மையான குணத்தை மனதிற்குள்ளும் பாராட்ட தவறவில்லை".
" பின்னர்,சத்தியமூர்த்தியிடம் சொல்லிக் கொண்டு,கோயிலுக்கு வந்தவர்களெல்லாரும், அவர்கள் வீட்டை நோக்கிச் சென்றனர்".
" ஹப்பாடா என்றவாறே ராக்கம்மா பாட்டியும், கண்ணம்மா பாட்டியும், வீட்டு சுவற்றில் சாய்ந்து உட்கார,பாட்டிகள் இருவரையும் பார்த்த ஜனனி, பஸ்ஸில் தானே வந்தீங்க?, என்னமோ நடந்து போன போல சீன் போடுறீங்களென்றாள்".
" அடி போடி".
"எப்போ பாரு நோரு குத்துறதுக்குனே வந்துருவாள்".
"அந்த பாவி பய, ரோடுனா வண்டி ஓட்டுனான் என்றார் ராக்கம்மா பாட்டி".
" அதுக்கு நீங்க நடந்து போகணுமென்று சொல்லியவள், இரவு உணவை சமைக்க போக,எம்மாடி சமைக்க வேண்டாம்தா".
" நான் போய்,நம்ப சின்னா கடையில் இட்லி வாங்கிட்டு வரேனென்ற மாரியப்பன், செருப்பை போட்டுக்கொண்டு வெளியே சென்றார்".
"சிறிது நிமிடத்தில் டிபன் வாங்கிக்கொண்டு மாரியப்பன் வந்து சேர, நால்வரும் சாப்பிட்டு முடித்து, பின்னர் படுத்து விட்டனர்".
பெரிய வீடு:
" டைனிங் ஹாலில் சாப்பிட்டுக்கொண்டே,அப்பா ஞாயிற்றுக்கிழமை நாலு மணிக்கு கோவையிலிருந்து ஃப்ளைட்னு வெற்றி சொல்ல,அப்படியாப்பா.சரி காலையில் பேசிக்கலாம், இப்ப போய் ரெஸ்ட் எடு என்றவர்,எழுந்து போய் கையை கழுவி விட்டு தனது அறையை நோக்கிச்சென்றார்".
" வள்ளி நீயும் வா என்றான்".
" அண்ணன் மகன் எதிரில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தவர், அங்க சூதானமா இருக்கணும் கண்ணு".
" சரியா சாப்பிடு, மாசா மாசாம்( மாதம்) நானும், அப்பாவும் உன்னை பார்க்க வரோம்.உனக்கு என்ன வேண்டுமானாலும் ஃபோன் பண்ணு, அத்தை உடனே அப்பாகிட்ட சொல்லி அனுப்புறேனென்றார்".
" வள்ளி சொல்லியதையெல்லாம் கேட்டவன், ஹாஹாஹா , நான் என்ன பள்ளிக்கூட ஹாஸ்டலுக்கா போறேன்?, எல்லாம் அங்கையே இருக்கும் வள்ளி, நீ கவலைப்படாதே".
சென்னை- மகாபலிபுரம்:
"அப்போ எதற்கு நாம வீட்டிற்கு போகணும்?.
"இங்கையே நைட் இருந்து விட்டு, காலையில் போயிக்கலாமே வசந்தியென்று தேவி சொல்ல, சரி தேவி என்றார்".
"பின்னர் தோழிகள் இருவரும்,கடல் அலையை, தங்கள் அறையிலிருக்கும் கண்ணாடி வழியாக பார்த்து பேசியபடியே உறங்கினர்".
"காலைக்கதிரவன் தன் செக்கச்சிவந்த உருவத்தை உலகிற்கு காட்டிக்கொண்டு, கிழக்கே உதயமாகினான்".
"முதலில் எழுந்த வசந்தி, கடலின் மேல் உதயமாகும் கதிரவனின் தகதகப்பை, கண் குளிர கண்டு ரசித்தார்".
"எத்தனையோ வருடங்களாய் இந்த கடற்கரையில் நின்று ரசித்த சூரியன் தான். இருந்தும் திகட்டவில்லையேனு முணுமுணுத்துக்கொண்டு, குளிக்க சென்று விட்டார்".
"தேவியோ, வழக்கம் போல ஆற அமர எழுந்து தனது ஃபோனை எடுத்து பார்க்க,அதில் டார்லிங் என்ற பெயரில் மூன்று மிஸ்டுகால் இருந்தது".
"அச்சோ தூக்க கலக்கத்தில் கால் வந்தது தெரியலையே என்றவாறே, தனது கணவருக்கு கால் பண்ண, ரிங் போய்க்கொண்டே தான் இருந்ததே தவிர, கால் அட்டென் பண்ணவேயில்லை".
" சரி, வேலையா இருப்பாங்க போல, பார்த்து விட்டு பண்ணுவாங்களென்று சொல்லிக் கொண்டு, ஃபோனை டேபிளின் மேல் வைத்து விட்டு குளிக்கச்செல்லும் போது, கதவை திறந்து கொண்டு வசந்தி உள்ளே வந்தார்".
" மேடம் நடந்துட்டு வந்தாச்சா என்றவாறே, தேவி ரெஸ்ட் ரூமிற்குள் சென்று விட்டார்".
" உள்ளே வந்த வசந்தி, இருவரின் உடைகளை பேக்கிங் பண்ண தொடங்கினார்".
" போட்டுக்கொள்ள தேவையான டிரஸை, தேவி எடுத்து வைத்து சென்றதால், மற்றதை பேகில் வைத்து ஜிப்பை பூட்டினார்".
" அரைமணி நேரத்தில் குளித்து வெளியே வந்த தேவியோ, எடுத்து வைத்த டிரஸை போட்டுக்கொண்டு, கண்ணாடி முன்பு உட்கார்ந்தவர், மேக்கப்பை போட தொடங்கினார்".
" கால் மணி நேரத்தில் தயாராகியவர், கிளம்பளாம் வசந்தினா அறையை ஒரு முறை செக் பண்ண, ம்ம் போலாம் தேவி. நான் செக் பண்ணிட்டேனென்று வசந்தி சொல்ல, தோழியின் தோளில் சாய்ந்து கொண்ட தேவியோ, நீ இருப்பதால் தான் நான் நிம்மதியா இருக்கேன்டி.".
" ஏன் தேவி இப்படி".
" இது என்னுடைய கடமை டி, எப்படியோ போயிருக்க வேண்டியவள், இன்றைக்கு கௌரவமா வாழுறேனென்றால் அது நீ போட்ட வாழ்க்கை".
" அதற்கு கைமாறா என்னால் பெரியதாக எதுவும் செய்ய முடியாது. ஏதோ என்னால் முடிந்ததை, உனக்காக செய்கிறேனென்று வசந்தி சொல்ல, தெரியும்டி".
"நீ எனக்காக உயிரையே தருவாயென்று, போன பிறவியில் நான் செய்த பலன் தான், இந்த பிறவியில் தனா, நீ, அண்ணாலாம் எனக்கு கிடைத்ததென்று சொல்லி, தேவி கண் கலங்கினார்".
" ஏய் கண்ணு மை அழியுதுடி அப்புறம் அந்த பேய் போல உள்ள முகத்தை என்னால் பார்க்க முடியாதென்று வசந்தி சொல்ல, பேயாடி நானென்று அழுகையை நிறுத்தி விட்டு தேவி கேட்டதில், வசந்திக்கு சிரிப்பு வந்து விட்டது".
" தனது தோழி சிரிப்பதை பார்த்த தேவியோ, கிண்டலாடி பண்ணுறயென்று வசந்தியின் கன்னத்தை கிள்ள,அடிப்பாவி, விடுடி விடு.உன் விரல் நகம் பாதி கன்னத்து சதையை எடுத்துவிடும் போலயென்றார்".
" பின்னர் இருவரும் அறைகதவை லாக் பண்ணி விட்டு, லக்கேஜோடு ரிசப்ஷனிற்கு வந்து ரூம் சாவியை கொடுத்தவர்கள், அங்கு வெய்ட் பண்ணிக்கொண்டிருந்த டிரைவரிடம் லக்கேஜ் பேகை கொடுத்து விட்டு, உள்ளே இருந்த ரெஸ்டாரன்டிற்குள் நுழைந்தனர்".
" இருவரும் இருக்கையில் அமர்ந்ததும் வெய்டரும் அங்கே வந்தவர், வணக்கம் மேடம் என்றார்".
" அடிக்கடி இங்கு வருவதால் இவர்களுக்கு அங்கிருப்பவர்கள் நன்கு தெரியும்".
" இருவரும் அவர்களுக்கு தேவையானதை ஆர்டர் பண்ணியதும், சிறிது நிமிடத்தில் உணவும் அவர்கள் டேபிளிற்கு வந்து சேர்ந்தது".
"பிறகு சாப்பிட்டு முடித்தவர்கள், பில்லை பே பண்ணி விட்டு,காரில் ஏறி புறப்பட்டனர்".
" டிராபிக்குள் புகுந்து வந்து சேரவே,மூன்று மணி நேரங்களானது".
" எத்தனை பிரிட்ஜ் கட்டினாலும் டிராபிக் குறைய வழியில்லை என்று தேவி புலம்பிக்கொண்டே வர, கார் ஓட்டுர எனக்கு தான் எரிச்சல் வரணும்.ஏசி காரில் சொகுசா வரும் இந்த மேடத்திற்கு, இவ்வளவு காண்டானு, டிரைவர் தனது மனதிற்குள் சொல்லிக்கொண்டான்".
" மேலும் சிறிது நிமிடங்கள் பயணத்தில் சிம்ஹன் பேலஸிற்கு முன்பு வந்து ஹாரைனை அழுத்த, உள்ளேயிருந்த வாட்ச்மேன் எழுந்து வந்து கதவை திறந்து விட, கார் ஓடிப்போய் அதன் இடத்தில் சென்று நின்றது".
" ஹப்பாடா என்றவாறு ஹாயாக ஹேண்ட்பேகை ஆட்டிக்கொண்டே சென்ற தேவியோ, அங்கிருந்தவர்களை பார்த்து பேயறைந்தது போல அதிர்ந்து நின்றாள்".
"ஜனனியை காட்டி, அது தான் உன் நாத்தனாரென்று வள்ளி சொல்ல, ம்ம் என்று ராணியும் சிரித்தாள்".
"சரி வாங்க நம்ப வீட்டிற்கு போகலாமென்று ராணியும், பாலாஜியும் கூப்பிட, இருக்குட்டும்மா, போய் தான் வெற்றிக்கு எல்லாம் தயார் செய்யணும்".
" நீ தம்பிய கூப்பிட்டு நம்ப வீட்டிற்கு வாடா, இன்னொரு நாள் நாங்க நிச்சயமா வரோமென்று சத்தியமூர்த்தி சொல்ல, சரிங்கப்பாயென்றாள்".
மேலும் சிறிது நேரம் ராணியுடன் பேசியிருந்து விட்டு, மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு கோயிலிலிருந்து வெளியே வந்தவர்கள், அங்கிருந்த ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பொள்ளாச்சியை நோக்கி புறப்பட்டனர்.
" அசதியின் காரணமாய் பெரும்பாலானோர் பஸ்ஸில் தூங்கி விட்டனர்".
" சரி எப்போ டிக்கெட் போடணுமென்று கோபி கேட்க, அப்பா, வள்ளிக்கும் சேர்த்து ஞாயிற்று கிழமை போடலானு இருக்கேண்டா".
" அதுவும் நல்லது தான், இங்க இருக்குறதை நான் பார்த்துக்குறேன்னு கோபி சொல்ல, நண்பேன்டா என்றவாறு தனது பால்யகால நண்பனை தோளோடு அணைத்துக்கொண்டே வெற்றி சொல்ல,நான் இன்னும் கோவமாக தான் இருக்கேனென்றான்".
"அப்புறம்டா வெற்றி, காலையில அந்த புள்ளை வந்து பேசுச்சி, நல்லா திட்டி விட்டுட்டேனென்றான்".
" யாரு, ஜனனியவா என்க, ஆமாடா என்றவன் காலையில் நடந்ததை பற்றி வெற்றியிடம் சொல்ல தொடங்கினான்".
"வெற்றி குளிக்க போன பின்னர், நல்லபடியாக திருச்செந்தூர் வந்து சேர்ந்து விட்டதாக, கோபி தனது அப்பாவிடம் ஃபோனில் சொல்லிக்கொண்டிருந்தான்".
" அங்கு வந்த ஜனனி, கோபிணா என்றாள்".
"ஃபோனில் பேசிக்கொண்டிருந்தவன், சரிப்பா நான் கிளம்பிட்டு சொல்லுறேனென்று கட் பண்ணியவன்,சொல்லுமா என்ன?".
" ஏன்ணா, என் மேல கோவமா இருக்கீங்களா?, முகம் குடுத்து கூட பேச மாட்டீங்கிறீங்கள்?".
"நீங்க பெரிய வீட்டு மருமகள், உங்க மேல கோவப்பட என்ன இருக்கிறது மா".
" என்னணா இப்படி சொல்லுறீங்க?".
" வேற எப்படி சொல்லணும்?,அது தானே உணமை".
" நீங்க இப்படிலாம் பேசுற ஆளே இல்லையேணானு வருத்தமாக கேட்க, நான் கூட தான் நினைச்சேன், நீ வழக்கமாக பேராசை புடிச்ச புள்ளை இல்லை, நல்ல பொண்ணுனு.உன் லட்சணம் நேற்று பந்தலில் தானே தெரிந்தது".
"அந்தனை பேருக்கு முன்ன வாய் கூசாமல் பேசுனியே?, ஏன் உனக்கு காதலிக்கும் போது அவன் வேலை பார்க்கவில்லைனு தெரியாதா?.
"இத்தனை வருஷமா இந்த ஊர்ல தான் இருந்தியா இல்லை, வெளிநாட்டில் வாழ்ந்தியா?, அப்போலாம் அவன் அவங்க பூர்வீக வயல்ல உழைக்குறது கண்ணு தெரியலையோ?.கல்யாணம்னு வந்ததும், உனக்கு இதுலாம் குறையாகிட்டு".
" சரி அதை விடு, என் மாமா எப்படியாப்பட்ட மனுஷன், அவரை பற்றி கொஞ்சமாவது யோசித்தியா?, இல்லையே".
" அவ்வளவு பெரிய மனுஷனை ஊருக்கு முன்னால் கை கூப்பி மன்னிப்பு கேட்க வச்சிட்டியே, உன்னையெல்லாம் பார்த்தாவே எரிச்சலா வருது".உனக்கு புடிக்கலைனா போக வேண்டியது தானே".
" அவனுக்கு வேலை கிடைச்சிட்டுனு லட்டர் வந்ததும் நீ பேசியதையெல்லாம் மறந்துட்டு போல".
" உன்னை போல சுயநலவாதிங்களை பார்த்தாலே பத்திக்கிட்டு வருது,சாமிக்காக வந்துருக்கோம், கண்ணு முன்னாடி நிக்காதே போய்டு என்றான்".
" கோபியின் ஒவ்வொரு கேள்வியும் சாட்டையடியாய் ஜனனியின் மேல் விழ,அழுது கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள்".
"இதான்டா நடந்துச்சியென்று கோபி சொல்ல, நண்பனின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு சீட்டில் சாய்ந்து கண்ணை மூட,வெற்றியின் கண்களிலிருந்து நீர் கசிந்தது".
"பொள்ளாச்சிக்கு வந்து சேர இரவு ஏழு மணியானது, அப்பொழுது அய்யா இந்தாங்களென்று மாரியப்பன் பணத்தை நீட்ட,அதற்கு சத்தியமூர்த்தியோ என்னங்க கணக்கு( கணக்குபிள்ளை)?".
" கோயில் சமாச்சாரம் என்பதால், வந்திருந்த எல்லாரும், அவர்களால் முடிந்த தொகை கொடுத்திருக்கிறார்கள்".
" ஓஓஓ...என்ற சத்தியமூர்த்தி, சரிங்க கணக்கு,இந்த பணத்தை அப்படியே நம்ம கோயில் கணக்கில் வைத்து விடுங்க.ஏதாச்சு கோயில் சம்பந்தப்பட்ட வேலை வந்துச்சு என்றால், அதுக்கு எடுத்து செலவு பண்ணிடுங்க".
"வழக்கம் போல் சத்தியமூர்த்தியின் பெருந்தன்மையான குணத்தை மனதிற்குள்ளும் பாராட்ட தவறவில்லை".
" பின்னர்,சத்தியமூர்த்தியிடம் சொல்லிக் கொண்டு,கோயிலுக்கு வந்தவர்களெல்லாரும், அவர்கள் வீட்டை நோக்கிச் சென்றனர்".
" ஹப்பாடா என்றவாறே ராக்கம்மா பாட்டியும், கண்ணம்மா பாட்டியும், வீட்டு சுவற்றில் சாய்ந்து உட்கார,பாட்டிகள் இருவரையும் பார்த்த ஜனனி, பஸ்ஸில் தானே வந்தீங்க?, என்னமோ நடந்து போன போல சீன் போடுறீங்களென்றாள்".
" அடி போடி".
"எப்போ பாரு நோரு குத்துறதுக்குனே வந்துருவாள்".
"அந்த பாவி பய, ரோடுனா வண்டி ஓட்டுனான் என்றார் ராக்கம்மா பாட்டி".
" அதுக்கு நீங்க நடந்து போகணுமென்று சொல்லியவள், இரவு உணவை சமைக்க போக,எம்மாடி சமைக்க வேண்டாம்தா".
" நான் போய்,நம்ப சின்னா கடையில் இட்லி வாங்கிட்டு வரேனென்ற மாரியப்பன், செருப்பை போட்டுக்கொண்டு வெளியே சென்றார்".
"சிறிது நிமிடத்தில் டிபன் வாங்கிக்கொண்டு மாரியப்பன் வந்து சேர, நால்வரும் சாப்பிட்டு முடித்து, பின்னர் படுத்து விட்டனர்".
பெரிய வீடு:
" டைனிங் ஹாலில் சாப்பிட்டுக்கொண்டே,அப்பா ஞாயிற்றுக்கிழமை நாலு மணிக்கு கோவையிலிருந்து ஃப்ளைட்னு வெற்றி சொல்ல,அப்படியாப்பா.சரி காலையில் பேசிக்கலாம், இப்ப போய் ரெஸ்ட் எடு என்றவர்,எழுந்து போய் கையை கழுவி விட்டு தனது அறையை நோக்கிச்சென்றார்".
" வள்ளி நீயும் வா என்றான்".
" அண்ணன் மகன் எதிரில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தவர், அங்க சூதானமா இருக்கணும் கண்ணு".
" சரியா சாப்பிடு, மாசா மாசாம்( மாதம்) நானும், அப்பாவும் உன்னை பார்க்க வரோம்.உனக்கு என்ன வேண்டுமானாலும் ஃபோன் பண்ணு, அத்தை உடனே அப்பாகிட்ட சொல்லி அனுப்புறேனென்றார்".
" வள்ளி சொல்லியதையெல்லாம் கேட்டவன், ஹாஹாஹா , நான் என்ன பள்ளிக்கூட ஹாஸ்டலுக்கா போறேன்?, எல்லாம் அங்கையே இருக்கும் வள்ளி, நீ கவலைப்படாதே".
சென்னை- மகாபலிபுரம்:
"அப்போ எதற்கு நாம வீட்டிற்கு போகணும்?.
"இங்கையே நைட் இருந்து விட்டு, காலையில் போயிக்கலாமே வசந்தியென்று தேவி சொல்ல, சரி தேவி என்றார்".
"பின்னர் தோழிகள் இருவரும்,கடல் அலையை, தங்கள் அறையிலிருக்கும் கண்ணாடி வழியாக பார்த்து பேசியபடியே உறங்கினர்".
"காலைக்கதிரவன் தன் செக்கச்சிவந்த உருவத்தை உலகிற்கு காட்டிக்கொண்டு, கிழக்கே உதயமாகினான்".
"முதலில் எழுந்த வசந்தி, கடலின் மேல் உதயமாகும் கதிரவனின் தகதகப்பை, கண் குளிர கண்டு ரசித்தார்".
"எத்தனையோ வருடங்களாய் இந்த கடற்கரையில் நின்று ரசித்த சூரியன் தான். இருந்தும் திகட்டவில்லையேனு முணுமுணுத்துக்கொண்டு, குளிக்க சென்று விட்டார்".
"தேவியோ, வழக்கம் போல ஆற அமர எழுந்து தனது ஃபோனை எடுத்து பார்க்க,அதில் டார்லிங் என்ற பெயரில் மூன்று மிஸ்டுகால் இருந்தது".
"அச்சோ தூக்க கலக்கத்தில் கால் வந்தது தெரியலையே என்றவாறே, தனது கணவருக்கு கால் பண்ண, ரிங் போய்க்கொண்டே தான் இருந்ததே தவிர, கால் அட்டென் பண்ணவேயில்லை".
" சரி, வேலையா இருப்பாங்க போல, பார்த்து விட்டு பண்ணுவாங்களென்று சொல்லிக் கொண்டு, ஃபோனை டேபிளின் மேல் வைத்து விட்டு குளிக்கச்செல்லும் போது, கதவை திறந்து கொண்டு வசந்தி உள்ளே வந்தார்".
" மேடம் நடந்துட்டு வந்தாச்சா என்றவாறே, தேவி ரெஸ்ட் ரூமிற்குள் சென்று விட்டார்".
" உள்ளே வந்த வசந்தி, இருவரின் உடைகளை பேக்கிங் பண்ண தொடங்கினார்".
" போட்டுக்கொள்ள தேவையான டிரஸை, தேவி எடுத்து வைத்து சென்றதால், மற்றதை பேகில் வைத்து ஜிப்பை பூட்டினார்".
" அரைமணி நேரத்தில் குளித்து வெளியே வந்த தேவியோ, எடுத்து வைத்த டிரஸை போட்டுக்கொண்டு, கண்ணாடி முன்பு உட்கார்ந்தவர், மேக்கப்பை போட தொடங்கினார்".
" கால் மணி நேரத்தில் தயாராகியவர், கிளம்பளாம் வசந்தினா அறையை ஒரு முறை செக் பண்ண, ம்ம் போலாம் தேவி. நான் செக் பண்ணிட்டேனென்று வசந்தி சொல்ல, தோழியின் தோளில் சாய்ந்து கொண்ட தேவியோ, நீ இருப்பதால் தான் நான் நிம்மதியா இருக்கேன்டி.".
" ஏன் தேவி இப்படி".
" இது என்னுடைய கடமை டி, எப்படியோ போயிருக்க வேண்டியவள், இன்றைக்கு கௌரவமா வாழுறேனென்றால் அது நீ போட்ட வாழ்க்கை".
" அதற்கு கைமாறா என்னால் பெரியதாக எதுவும் செய்ய முடியாது. ஏதோ என்னால் முடிந்ததை, உனக்காக செய்கிறேனென்று வசந்தி சொல்ல, தெரியும்டி".
"நீ எனக்காக உயிரையே தருவாயென்று, போன பிறவியில் நான் செய்த பலன் தான், இந்த பிறவியில் தனா, நீ, அண்ணாலாம் எனக்கு கிடைத்ததென்று சொல்லி, தேவி கண் கலங்கினார்".
" ஏய் கண்ணு மை அழியுதுடி அப்புறம் அந்த பேய் போல உள்ள முகத்தை என்னால் பார்க்க முடியாதென்று வசந்தி சொல்ல, பேயாடி நானென்று அழுகையை நிறுத்தி விட்டு தேவி கேட்டதில், வசந்திக்கு சிரிப்பு வந்து விட்டது".
" தனது தோழி சிரிப்பதை பார்த்த தேவியோ, கிண்டலாடி பண்ணுறயென்று வசந்தியின் கன்னத்தை கிள்ள,அடிப்பாவி, விடுடி விடு.உன் விரல் நகம் பாதி கன்னத்து சதையை எடுத்துவிடும் போலயென்றார்".
" பின்னர் இருவரும் அறைகதவை லாக் பண்ணி விட்டு, லக்கேஜோடு ரிசப்ஷனிற்கு வந்து ரூம் சாவியை கொடுத்தவர்கள், அங்கு வெய்ட் பண்ணிக்கொண்டிருந்த டிரைவரிடம் லக்கேஜ் பேகை கொடுத்து விட்டு, உள்ளே இருந்த ரெஸ்டாரன்டிற்குள் நுழைந்தனர்".
" இருவரும் இருக்கையில் அமர்ந்ததும் வெய்டரும் அங்கே வந்தவர், வணக்கம் மேடம் என்றார்".
" அடிக்கடி இங்கு வருவதால் இவர்களுக்கு அங்கிருப்பவர்கள் நன்கு தெரியும்".
" இருவரும் அவர்களுக்கு தேவையானதை ஆர்டர் பண்ணியதும், சிறிது நிமிடத்தில் உணவும் அவர்கள் டேபிளிற்கு வந்து சேர்ந்தது".
"பிறகு சாப்பிட்டு முடித்தவர்கள், பில்லை பே பண்ணி விட்டு,காரில் ஏறி புறப்பட்டனர்".
" டிராபிக்குள் புகுந்து வந்து சேரவே,மூன்று மணி நேரங்களானது".
" எத்தனை பிரிட்ஜ் கட்டினாலும் டிராபிக் குறைய வழியில்லை என்று தேவி புலம்பிக்கொண்டே வர, கார் ஓட்டுர எனக்கு தான் எரிச்சல் வரணும்.ஏசி காரில் சொகுசா வரும் இந்த மேடத்திற்கு, இவ்வளவு காண்டானு, டிரைவர் தனது மனதிற்குள் சொல்லிக்கொண்டான்".
" மேலும் சிறிது நிமிடங்கள் பயணத்தில் சிம்ஹன் பேலஸிற்கு முன்பு வந்து ஹாரைனை அழுத்த, உள்ளேயிருந்த வாட்ச்மேன் எழுந்து வந்து கதவை திறந்து விட, கார் ஓடிப்போய் அதன் இடத்தில் சென்று நின்றது".
" ஹப்பாடா என்றவாறு ஹாயாக ஹேண்ட்பேகை ஆட்டிக்கொண்டே சென்ற தேவியோ, அங்கிருந்தவர்களை பார்த்து பேயறைந்தது போல அதிர்ந்து நின்றாள்".