• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 26, 2024
Messages
11
ஆபீஸில் இருந்து வந்த மாதவன் தனது மனைவியின் பெயரைக் கூறி, அவளை அழைத்தபடியே வீட்டினுள் நுழைந்தான்.

“உமா எங்க இருக்க? “

“நான் பின்னாடி துணி காய போட்டுட்டு இருக்கேங்க.”

உடையை கூட மாற்றாமல் தன்னை தேடி வந்த கணவரிடம்,

“என்ன டிரஸ் கூட மாத்தாம நேரா பொண்டாட்டியைத் தேடி வந்திருக்கீங்க, என்ன விஷயம்?”

“ முதல்ல உன் போன் எங்க? மதியத்துல இருந்து சுவிட்ச் ஆப்னே வருது?”

“ உங்க அரும குட்டிமேடம் அதை குளிக்க வெச்சுட்டா, அதை நான் பார்ட் பார்ட்டா பிரிச்சு அரிசி மூட்டைக்குள்ள காய வெச்சிருக்கேன். இரண்டு வார்த்தை சத்தமா திட்டிட்டேன், உடனே ரோசம் வந்துடுச்சு, உங்க அம்மாவை கூட்டிட்டு கோவிலுக்கு ஓடிட்டா. ”

“ ஓ அதுதான் வீடு இவ்வளவு அமைதியா இருக்கா? அட நான் சொல்ல வந்ததையே மறந்துட்டேன் பாரு, அடுத்த மாசம் பதினைஞ்சாம் தேதி ஆபீஸ்ல இருந்து டூர் கூட்டிட்டு போறாங்க, எல்லாரும் ஃபேமிலியோட வர்றாங்க.

நம்ம வீட்ல அப்ப ஏதாவது கமிட்மெண்ட்ஸ் இருக்கா? அதை கேட்க தான் நான் உனக்கு போன் பண்ணேன் சுவிட்ச் ஆப்னே வரவும் சரி வீட்ல போய் கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன். நாம கன்ஃபார்ம் பண்ணி சொன்னா தான், அதுக்கேத்த மாதிரி முன்னாடியே வண்டி அரேன்ஜ் பண்ணுவாங்க. அப்ப ஏதாவது வேலை இருக்கா என்ன?”

இடுப்பில் கைவைத்தபடி அவனை முறைத்தவளோ,

“மறந்துட்டீங்களா நம்ம பெரிய மேடம்க்கு பப்ளிக் எக்ஸாம் பதினைஞ்சாம்தேதி தான் ஸ்டார்ட் ஆகுது.”

“ அட ஆமால்ல… சாரிமா நெஜமாவே மறந்துட்டேன்.”

“சரிதான் இவ்வளவு மறதி ஆகாது அசிஸ்டெண்ட் மேனேஜர் சார்.”

“ இந்த மன்த்னு நினைவிருக்கு பட் டேட் தான் சரியா நியாபகம் இல்ல, சரி பெரிய மேடம் பப்ளிக் எக்ஸாம்க்கு தயாராகிட்டாங்களா?”

“அதெல்லாம் நல்லாவே படிக்கறாப்புல, ஆனா அதோட கொஞ்சம் பயமும் அதிகமாகவே இருக்கு.”

“டீச்சரே கூட இருக்கும்போது என்ன பயம் வேண்டியிருக்கு?”

“நான் கூட இருந்தா மட்டும் போதுமா? நானா அவங்களுக்கு பதிலா எக்ஸாம் எழுத போறேன், இந்த பயம் மட்டும் இல்லாட்டி கண்டிப்பா நல்ல மார்க் வரும்.”

அந்த நேரம் ஹாலில் மாதவனின் தங்கை வசந்தியின் குரல் கேட்க, இந்த நேரத்தில் அவளது வருகை இருவருக்குமே சற்று ஆச்சரியத்தை கொடுத்தது.

வசந்தியின் புகுந்த வீடு சற்று வசதியானது. அவர்கள் இணக்கமாகவே பழகினாலும் வசந்திக்கு அவ்வளவு வசதிகளை விட்டுவிட்டு, இங்கு வந்து தங்க விருப்பம் இருந்ததில்லை. அதுவும் ஏழை வீட்டில் இருந்து வந்த தனது அண்ணி என்றால் ரொம்பவே இளப்பம்.

ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றால் மட்டும் தனது பிறந்த வீட்டிற்கு வருபவள், தனது தந்தையின் உதவியோடு எப்படியும் அதை சாதித்து விடுவாள்.

“என்ன வசந்தி எதுவும் சொல்லாம திடீர்னு வந்திருக்கே? எதுவும் பிரச்சனையா?”

“என்னோட அப்பா வீட்டுக்கு வர நான் யார்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு வரணும் அண்ணி. இனிமேல் எத்தனை மணிக்கு வர்றேன் எப்ப வரேன் அதோட உங்களுக்கு அப்போ டைம் ப்ரீயான்னு கேட்டுட்டே இங்க வரேன்.”

“வசந்தி என்ன பேச்சு இது? இது உன் வீடு தான் நான் இல்லன்னு சொல்லல, ஆனா இது உமாவுக்கும் சொந்த வீடு தான்.

இப்படி சாயங்கால வேளை தனியா வந்திருக்கியேன்னு தான் எதோ அக்கறையில கேட்டா, உனக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லைன்னா நீ எதுவும் பேச தேவையில்லை.

நீ அப்பாவை பார்க்க தானே வந்திருக்க? அப்பாக்கு இன்னைக்கு நைட் சிப்ட் 12 மணிக்குத் தான் வருவாரு, அவர்கிட்டயே பேசிக்கோ.”

வசந்திக்கு தற்போது இவர்கள் மூலம் காரியமாக வேண்டுமே, அதற்காக தனிந்து சென்றாள்

“ ஐயோ அண்ணா நான் எதோ விளையாட்டுக்கு தான் அண்ணிகிட்ட அப்படி சொன்னேன், உன் மருமகனுக்கு காது குத்தலாம்னு இருக்கோம், அதுதான் அப்பாகிட்ட டேட் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.”

“சொல்லிட்டு போலாம்ணா? அப்போ ஆல்ரெடி எல்லாமே பிக்ஸ் பண்ணிட்டு தான் எங்களை சீர் வைக்க சொல்ல வந்திருக்கே?”

“அதெல்லாம் இல்ல அண்ணே ஜோசியர் மூனு டேட் குறிச்சி கொடுத்திருக்கார். அதுல ஒரு டேட் அவனோட பர்த்டேவே வருது. அப்போ எல்லாரையும் கூப்பிட்டு விருந்து வைக்கலாம்னு இருந்தேன்.

இன்னொரு டேட் அவரோட தூரத்து சொந்தத்துல ஒரு கிரகப்பிரவேசம், மீதி இருக்கிறது ஒரு நாள் தான். அது தான் அப்பாகிட்ட சொல்லிட்டு போலாம்னு ஜோசியரை பார்த்துட்டு நேரா இங்க வந்தேன்.

என் வீட்டுக்காரர் ஆபீஸ் முடிஞ்சு போகும் போது என்னை அப்படியே கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்கார்.”

“சரி என்ன டேட்ல வைக்கலாம்னு இருக்கீங்க?”

“அடுத்த மாசம் பதினைஞ்சாம் தேதி.”

அதை கேட்டவுடனே உமாவும் மாதவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ஏன் வசந்தி வேற எதுவும் டேட் இல்லையா? வேணும்னா மத்த ரெண்டு டேட்ல ஏதாவது ஒன்னை பிக்ஸ் பண்ணலாமா?”

“ஏன் பதினைஞ்சாம் தேதிக்கு என்ன குறைச்சல் அண்ணி….?”

“என்னம்மா உனக்கு ஞாபகம் இல்லையா…? அது டென்த் பப்ளிக் எக்ஸாம் ஸ்டார்ட் பண்ற டைம்.”

“இவ்வளவு தானா இதுக்கு வேண்டியா என் பையனோட காதுகுத்தை தள்ளி வைக்கச் சொல்றீங்க?

ஆமாம் அண்ணி இந்த வயசுல என்னோட அம்மா பப்ளிக் எக்ஸாம் எழுதி, என்ன கலெக்டராவா ஆகப் போறாங்க…? அவங்களோட ரீஎக்ஸாமுக்கு எதுக்கு நீங்க இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துட்டு இருக்கீங்க.”

“ வசந்தி படிப்பு விஷயம் எல்லாத்துக்குமே ஒன்னு தான். ஏன் உங்க அம்மா உன்னை படிக்க வைக்கும் போது அப்படி பார்த்திருந்தா நீ ரீஎக்ஸாம் எழுதி பாஸ் ஆகி இருக்கத் தான் முடியுமா? இல்ல இப்படி ஒரு நல்ல இடத்துல வாக்கப்பட்டுப்போய் சந்தோஷமா வாழ்ந்திட்டு இருக்க தான் முடியுமா?”

“உங்ககிட்டயெல்லாம் முகம் கொடுத்து பேசினது என்னோட தப்பு தான், இங்க பாருங்க எனக்கு பதினைஞ்சாம் தேதி தான் சரியா வரும், நான் அப்பா வந்ததும் அவர்கிட்ட பேசிக்கிறேன்.

நான் வரும்போதே அப்பாக்கு கால் பண்ணிட்டு தான் வந்தேன். பர்மிஷன் போட்டுட்டு சீக்கிரமா வரேன்னு சொல்லி இருக்காரு. அதோட என் வீட்டுக்காரரும் வருவார் நாங்கள் பேசி முடிவு எடுத்துக்கறோம். தாய்மாமாவா வந்து சபைல உட்காரு அது போதும், இல்ல உனக்கு விருப்பமில்லைனா விட்டுடு, நான் அப்பா மடில வெச்சு முறையை செஞ்சுக்கறேன்.”

அவள் பேச்சு வார்த்தையை முடித்து கொண்டு தனது அறைக்குச் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

மாதவனும் உமாவும் அவளது வார்த்தையில் அதிர்ந்து போய் நின்று கொண்டிருந்த வேளையில் தான் வீட்டினுள் நுழைந்தார் சாரதா.

“அம்மாடி உமா இந்தா இந்த பிரசாதத்தை எடுத்துக்கோ, வைஷுக்குட்டி பக்கத்து வீட்டு பொண்னோட வெளிய விளையாடிட்டு இருக்கா, மழை வரும் போல இருக்கு நான் போய் மேல காயற வடகத்தை எடுத்துட்டு வந்திடறேன்.”

அவர் சென்ற சிறிது நேரத்திலேயே மாதவனின் செல்ல மகள் சாரதாவின் மொபைலை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தவள், வெளியே அவளது தோழி அழைத்திட அதை ஹாலிலேயே வைத்துவிட்டு விளையாடச் சென்று விட்டாள்.

சற்று நேரத்திற்கு முன்னால் தனது மகள் வருவதால் அவளுக்கு பிடித்த உணவுகளை சமைக்கச் சொல்வதற்காக மாதவனின் தந்தை வாசுதேவன், தனது மனைவி சாரதாவின் மொபைலுக்கு அழைத்திருந்தார்.

அதை அட்டென்ட் செய்து பேசிய குழந்தை வைஷு பாட்டியை தேடி உள்ளே வந்தது. தனது தோழியின் அழைப்பைக் கேட்டவுடன் அனைத்தையும் மறந்து போனை அங்கேயே வைத்துவிட்டு வெளியே ஓடி விட்டது.

தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த தனது மனைவியின் மனதைப் புரிந்து கொண்ட மாதவன்,

“உமா விட்டிடு நீ அம்மாவுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கணும்னு சொன்னே, நானும் நல்ல விஷயம்னு தான் சரின்னு சொல்லி சப்போர்ட் பண்ணேன். அதோட பப்ளிக் எழுதவும் அப்ளிகேஷன் அனுப்பி வெச்சேன். ஆனா இப்போ இது தான் முக்கியம்னு சொன்னா வீட்ல பெரிய சண்டையே வெடிக்கும்.”

கைகளை கட்டிக் கொண்டு நிமிர்ந்து நின்றவள்,

“என்னால கண்டிப்பா இதை ஏத்துக்க முடியாதுங்க. உங்க தங்கை சொன்னதை கேட்டீங்களா? மத்தவங்களுக்கு கொடுக்கற இம்பார்ட்டண்ட்ஸ்ல ஒரு ரெண்டு சதவீதம் கூட உங்க அம்மா மேல கிடையாதா?

இத்தனை வயசுக்கு அப்புறம் அவங்க படிக்கணும்னு நினைக்கிறது அவ்ளோ பெரிய குத்தமா?

உங்க தங்கை நியாயமான காரணத்தை சொல்லி இருந்தா கண்டிப்பா நானும் இதை ஏத்துக்குவேன். ஆனால் யாரோ முகம் தெரியாத தூரத்து சொந்தத்துக்காகவும், தம் பையனோட பிறந்தநாளை ஆடம்பரமா கொண்டாடி மத்தவங்ககிட்ட பெருமை தேடிக்கவும் அவங்க கொடுக்கிற முக்கியத்துவத்தை, உங்க அம்மாவோட ஆசைக்கும் மகிழ்ச்சிக்கும் கொடுக்க முடியாதா?

படிப்புங்கறது எல்லாருக்கும் ஒன்னு தான், அது குழந்தையா இருந்தாலும் சரி, பெரியவங்களா இருந்தாலும் சரி, அவங்க படிப்புக்காக ஏங்கும் போது அவங்களுக்கு உண்டான கல்வியை கொடுக்கணும்னு தான் எனக்கு தோணும்.”

“நான் ஒன்னும் அம்மாவுக்கு படிப்பு வேண்டாமுன்னு சொல்லலையே உமா, இப்போதைய சிச்சுவேஷன்ல எப்படியும் அம்மாவால எழுத முடியாது. ஏன்னா அம்மா கண்டிப்பா அப்பா சொல்றதைத் தான் கேட்பாங்க.

அதோட அப்பாவும் வசந்திக்குத் தான் சப்போர்ட் பண்ணுவார். நீ இடையில போனா உன்னால அம்மாவுக்கு இன்னும் ரெண்டு சேர்த்து தான் திட்டு விழுகும்.

ஏற்கனவே நீ அவங்களை படிக்க வைக்கறதையே குத்தம்னு சொல்லிட்டு இருக்காரு.”

“நம்ம ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி உங்க அம்மாவோட ஊருக்கு போனோமே உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அப்போ உங்க அப்பாவோட அத்தை என்கிட்ட பேசினாங்க, அவங்க அம்மாவை பத்தி என்ன சொன்னாங்க தெரியுமா?

உங்க அம்மா எப்பவுமே வகுப்புல முதல் மதிப்பெண் எடுக்கற மாணவி, அவங்க நைன்த் படிச்சிட்டு இருக்கும்போது, அவங்களோட அக்கா ஓடிப்போய் காதல் கல்யாணம் பண்ணிட்டாங்கன்னு சொல்லி, இவங்களை ஸ்கூலைவிட்டே நிறுத்திட்டாங்க.

இவங்களும் அவங்க அக்கா மாதிரி ஓடிப் போயிடக் கூடாதுன்னு ஒரு வருஷத்துலயே அவங்களை உங்க அப்பாவுக்கு பிடிச்சு கட்டி வச்சுட்டாங்க.

பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்கணும்னு ஆசையா இருந்தவங்களை அப்பவே குடும்பம் என்கிற கூட்டுக்குள்ள அடைச்சுட்டாங்க.

அது மட்டுமா அடுத்தடுத்து அந்த சின்ன வயசுலயே குழந்தைகளையும் பெத்துகிட்டு கூட்டு குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு, எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க…?

ஓடியோடி இந்த குடும்பத்துக்காக உழைச்சவங்க இப்ப தான் ஓய்ந்து போய் உட்கார்ந்து இருக்காங்க.

உங்க அம்மாவோட வயசான காலத்துலயாச்சும் அவங்களோட விருப்பத்தை நிறைவேற்றி வைக்கணும்னு உங்களுக்கு தோணலையா?

நம்ம பாப்பாவை முதன் முதலா ஸ்கூல்ல சேர்த்தும் போது, அவ அந்த புக்கை எல்லாம் ஆசையா தொட்டுப் பார்த்தா தெரியுமா? அதே பார்வையை உங்க அம்மாவோட கண்ணுலையும் நான் அன்னைக்கு பார்த்தேன். அப்பவே முடிவு பண்ணிட்டேன் அவங்களுக்கு இந்த கல்வியை கத்துக் கொடுத்தே ஆகனும்னு.

ஆனா உங்க அப்பாவோட அத்தை மூலமா அவங்களை பத்தி தெரிஞ்சுகிட்டதும், கண்டிப்பா அவங்களை டென்த் பாஸ் பண்ண வச்சு, ஒரு டிகிரிவது வாங்க வைக்கணும்னு ஒரு ஆசிரியரா எனக்குள்ள ஒரு உறுதி எடுத்துக்கிட்டேன்.

இதை கூட செய்யலைன்னா நான் படிச்ச படிப்புக்கு அர்த்தமே இல்லாம போயிடுங்க.


கண்டிப்பா மாமாகிட்ட என்னால முடிஞ்ச அளவு அத்தைக்காக பேசுவேன். அப்படி இல்லையா நீங்க பங்ஷனுக்கு போயிட்டு வாங்க, நாங்க எக்ஸாம் முடிச்சிட்டு நேரா அங்க வந்திடறோம்.”
 
Last edited by a moderator:

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top