New member
- Joined
- Dec 23, 2024
- Messages
- 9
- Thread Author
- #1
ஆண் இலக்கணம்.
புது வண்ண பட்டுடுத்தி, அவள் இடை தொட்டுக் கொண்டிருந்த கார்கூந்தலில், மல்லிகை சரம் சரமாக தொங்கி கொண்டிருக்க, அவளுடைய அஞ்சன விழிகளால் தன்னைப் பார்க்க மாட்டாளா என்று ஏங்கிக் கொண்டிருந்தது ராகவனின் மனம்.
ஒருமுறை அந்த பெயருக்கே வலிக்காத வண்ணம் அவள் பெயரை உச்சரித்து பார்த்தான். “கார்குழலி”, அந்த பெயருக்கு ஏற்றார் போல, கருப்புக் கூந்தலில் அழகுடையவளாகத் தான் தெரிந்தாள் பாவையவள்.
ஆனால் அவள் தலையை நிமிர்வேனா என்று சங்கல்பம் எடுத்துக் கொண்டால் போல. பூமியை பார்த்த வண்ணம் நின்று இருந்தாள்.
பெரியவர்கள் எல்லாம் தங்களுக்குள் அடுத்த கட்ட பேச்சுக்கு முன்னேறி இருந்தார்கள். திருமணத்தை எப்படி ஆடம்பரமாக செய்வது எங்கே செய்வது என்ற பேச்சுக்கள் வலுத்துக் கொண்டிருக்க. ராகவன் தனக்கும் அந்த பேச்சுக்கும் சம்பந்தமில்லை என்று. தான் பார்க்க வந்திருந்த அந்த பெண்ணை வஞ்சனை இல்லாமல் ரசித்து கொண்டிருந்தான்.
பெண்ணிடம் பேச வேண்டும் என்று ஆசை துளிர் விட ஆரம்பித்தது. தன் அண்ணன் ராஜவேலுவை பார்த்து கண்களால் இறைஞ்சினான். அதில் ராஜவேலுவின் இதழ்கள் தாராளமாக விரிந்து கொண்டது.
தன் அறை வாசலின் முன்பு வந்து நின்ற தன் தம்பியை பார்த்த ராஜவேலு. “என்னடா அம்மா கூப்பிடுறாங்களா?, கிளம்பிட்டு தான் இருக்கேன் அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன் “, என்று கூறியபடியே தன் பெண் பிள்ளைக்கு தலையை பின்னிக் கொண்டிருந்தான் அவன். அவனுடைய மனைவி கண்ணாடியின் முன்பு நின்று தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். தன் அண்ணனையும் அவன் மகளையும் தன் அண்ணியையும் பார்த்தவன்.
“ஸ்ஸ்ஸ், ஸ்ஸ்ஸ்”, என்று தன் அண்ணனை மட்டும் அழைக்க. ஜடையை பின்னி முடித்தவன். தன் மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனிடம் வந்து நின்று என்னவென்று கேட்டான்.
“ உனக்கு பொண்ணு பாக்க போகும்போது அண்ணி நம்பர் நான் வாங்கி கொடுக்கும்போது உன் கிட்ட ஒரு டீல் போட்டேன் ஞாபகம் இருக்கா? “, என்று ராகவன் கேட்க அவன் யோசிப்பது போல பாவனை செய்தான்.
“ இதான வேண்டான்றது, காரியமான உடனே கழட்டி விட்டுடுறீங்க பாத்தீங்களா? “, ராகவன் தன் அண்ணனை முறைத்தபடி கேட்க.
“சும்மா விளையாடினேன் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு கண்டிப்பா நான் பண்றேன்”, என்று கூறியவனுக்கு இப்பொழுது அது ஞாபகம் வந்தது.
தன்னுடைய பெற்றோர்களை திரும்பி பார்த்தவன். வேறு வழியில்லாமல் தான் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து. “பொண்ணும் மாப்பிள்ளையும் கொஞ்சம் தனியா பேசட்டுமே?”, என்று கேட்டான்.
யாருமே அதை எதிர்பார்க்கவில்லை போல, அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தாலும். கார்குழலியின் தந்தை உடனே தன்னை மீட்டுக் கொண்டு.
“அதுக்கு என்ன தம்பி தாராளமா பாக்கட்டும்”, என்று ஒற்று ஊதினார். அவருடைய மனைவியோ தன் கணவனை தவிப்பாக பார்க்க.
ராகவனின் பெற்றோர்கள் ராஜவேலுவை முறைத்துக் கொண்டு நிற்க அதற்குள் ராகவன் எழுந்து நின்று விட்டான். இப்பொழுது யாராலும் எதுவும் சொல்ல முடியாத நிலை.
கார்குழலியின் தாய் பவளவல்லி, பெண்ணிடம் எதையோ முணுமுணுத்துக் கொண்டு தோட்டத்தின் பக்கம் அழைத்துச் செல்ல, தன் தம்பி ராகவனை ராஜவேலு அழைத்துச் சென்றான்.
பெண்ணை தனியாக நிக்க வைத்து விட்டு தாய் வருவதை பார்த்துவிட்டு ராகவனை அனுப்பி வைத்துவிட்டு ராஜவேலு திரும்பிச் உள்ளே சென்றவன், கவனமாக தன் தாய் தந்தையின் பார்வையே தவிர்த்தான்.
முகம் மலர வந்தவனுக்க இப்பொழுது என்ன பேசுவது என்று தெரியவில்லை. காலரை ஒரே கையால் முன் எடுத்து விட்டவன். தொண்டையைக் கனைத்து தன் பதட்டத்தை குறைத்துக் கொண்டு.
“எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு. உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா”, என்று கேட்டான். பேச்சுக்கள் திருமணம் வரை சென்று கொண்டிருக்க இந்த வாக்கியம் அபத்தமானது என்று தெரிந்தாலும் கேட்டிருந்தான்.
“இல்ல”, என்று ஒற்றை வரியில் அவள் நிறுத்தி விட்டாள், அவன் மூச்சை அல்ல வார்த்தையை.
“ என்னங்க சொல்றீங்க? “, அப்பட்டமான அதிர்ச்சி ராகவன் கேள்வியில்.
“ஏன் உங்களுக்கு தமிழ் புரியலையா??, இல்லன்னா இல்லன்னு தான் அர்த்தம் “, என்றால் மிடுக்குடன். இவ்வளவு நேரம் தலை தாழ்த்தி பதுமையாக நின்றது இவள் தானா என்று சந்தேகமே எழுந்தது ராகவனுக்கு.
மிடறு விலுங்கியவன் தன்னை சுதாரித்துக் கொண்டு. “ஏன்,, ஏன் பிடிக்கல??, போட்டோவை பார்த்து பிடிச்சிருக்குன்னு சொல்லி தானே பொண்ணு பாக்க வர சொன்னீங்க. இப்பயும் உள்ள திருமண பேச்சு நடந்துகிட்டு இருக்கும்போது அமைதியாக தான் இருந்தீங்க. இப்ப பிடிக்கலைன்னு சொன்னா என்ன அர்த்தம்? “, படபடப்புடன் அவன் கேட்டிருக்க.
“ பிடிக்கலைன்னு தான் அர்த்தம்?”, என்று அவளும் தோரணையாகவே பதில் கூறினாள்.
“ அதான் ஏன்னு கேட்டேன்?, யாரையாவது காதலிக்கிறீங்களா,, இல்ல வேற ஏதும் பிரச்சனை இருக்கா எதுவாயிருந்தாலும் சொல்லுங்க “, அழுத்தமாக அவன் கேட்க.
“நான் ஒரு ஆம்பளைய தான் கட்டிக்க விரும்புறேன். எந்த பொண்ணும் அதை தான் விரும்புவாங்க”.
“நிறுத்துங்க, விட்டா பேசிக்கிட்டே போறீங்க. அப்படி என்ன தெரிஞ்சுதுன்னு இப்படி பேசுறீங்க??, யாரோ உங்கள நல்லா குழப்பி இருக்காங்க. உங்களுக்கு தப்பான விஷயத்தை சொல்லி இருக்காங்கன்னு நினைக்கிறேன். ஒரு விஷயம் உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்காம இப்படி பேசுறது அநாகரிகம்னு உங்களுக்கு தெரியலையா?“.
“ யாரும் எனக்கு சொல்லல சார். நான் என் கண்ணால இப்ப தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்தேன்“, என்று சொல்லும் போதே அவன் புருவம் இடுங்கியது.
தான் பேசியது சற்று அதிகபடி என்று தோன்றிய போதும். கார்க்குழலி பேச்சை தொடர்ந்தாள். அவனை புகைப் படத்தில் பார்த்ததுமே அவளுக்கு பிடித்து தான் இருந்தது. பெற்றவர்களுக்கும் அவனுடைய பின்புலம் வேலை படிப்பு என்று எல்லாம் பிடித்திருக்க. பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டினரையும் வர வைத்து விட்டனர். இருந்தும் அவளுக்கு இப்பொழுது பிடிக்கவில்லை.
“எங்கப்பா என்ன எப்படி படிக்க வச்சாரோ, அப்படித்தான் உங்களை படிக்க வைத்திருக்கிறார். எங்கம்மா என்னை எப்படி சுமந்தாங்களோ, எனக்கு என்ன எல்லாம் செஞ்சாங்களோ, அதையே தான் உங்க அம்மாவும் உங்களுக்கு செஞ்சிருக்காங்க. நீங்க வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிக்கிற மாதிரி. நானும் ஒரு நல்ல கம்பெனில நல்ல வேலையில இருக்கேன். ஆனாலும் உங்க அம்மா வரதட்சணையா நகை, காரு ரொக்கம்னு கேட்கும்போது நீங்க அமைதியா தான் உட்கார்ந்துகிட்டு இருக்கீங்க. இப்பவே உங்க கூட வாழ போற பொண்ணுக்காக குரல் கொடுக்காத நீங்க. பின்னாடி எப்படி இதெல்லாம் செய்வீங்க??. இப்பவே பொண்ணு வீட்ல இருந்து வரதட்சணை வாங்கி தான், உங்க ஸ்டேட்டஸ் உயர்த்திக்கனும்னு நினைக்கிற நீங்க , பின்னாடியும் இதை செய்ய மாட்டீங்கன்னு என்ன நிச்சயம் இருக்கு. வெறும் ஃபோட்டோவை பார்த்து மட்டும் முடிவு செய்வது இல்ல திருமணம் என்பது. உங்க அண்ணனா கேட்கலனா நான் கேட்கலான்னு தான் இருந்தேன். உங்ககிட்ட தனியா பேசுறதுக்கு. நல்ல வேலை அவரே கேட்டுட்டாரு. நீங்களாவே போய் திருமணத்தை நிறுத்திடுங்க. நானா வந்து உங்களை பிடிக்கலைன்னு சொன்னா அது வீட்டுக்கு வந்தவங்கள அவமானப் படுத்துற மாதிரி ஆயிடும். நீங்க வேணா உங்களுக்கு வரப்போற மனைவியை பத்தி தெரிஞ்சுக்காம யோசிக்காம இருந்திருக்கலாம். ஆனா நான் அப்படி இல்லை. நான் உங்களை நிராகரிச்சா உங்க வீட்ல மட்டும் இல்ல எங்க வீட்லயும் கேள்வி கேப்பாங்க . ஆனா எங்க வீட்டு ஆளுங்களுக்கு என்ன பத்தி நல்லா தெரியும். அதனால நீங்களே பொண்ணு புடிக்கலன்னு சொல்லி கல்யாணத்தை நிறுத்துங்க“, என்று கூறியபடி அவள் கைகளை கட்டிக் கொண்டு நேர் பார்வை பார்த்தால் அவனை.
ஏனோ ராகவனுக்கு இப்பொழுதும் அவளை ரசிக்கத்தான் தோன்றியது. இதழ்களில் யாருக்கும் தெரியாமல் ஒரு புன்னகை கீற்று வந்து சென்றது. வீட்டை நோக்கி அமைதியாக நடந்தவன் நின்று அவளை மீண்டும் திரும்பிப் பார்த்தான்.
“ஆனா எனக்கு உன்ன பிடிச்சிருக்கு “, என்று கூறிவிட்டு வேகமாக வீட்டின் உள்ளே சென்று விட்டான்.
அவள் ஆழ்ந்த பெருமூச்சை விட்டுக் கொண்டே, அவன் பின்னோடே மெல்ல அடி எடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தாள். அவளுக்கும் வருத்தம் தான். பெண்ணின் எதிர்பார்ப்பு என்பது அவளுக்கும் அவள் குடும்பத்திற்கும் அவள் பெண்ணுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம். அதுவே அங்கே உடையும்போது அவனை நம்பி அடுத்த அடியை எடுத்து வைக்க அவள் மனம் ஏற்கவில்லை.
“ எனக்கு பொண்ணு ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா இந்த திருமணத்தில் எனக்கு சில கண்டிஷன் இருக்கு”, என்று அவன் பேசிக் கொண்டிருப்பது அவள் காதுகளில் நன்றாகவே கேட்டது.
புது வண்ண பட்டுடுத்தி, அவள் இடை தொட்டுக் கொண்டிருந்த கார்கூந்தலில், மல்லிகை சரம் சரமாக தொங்கி கொண்டிருக்க, அவளுடைய அஞ்சன விழிகளால் தன்னைப் பார்க்க மாட்டாளா என்று ஏங்கிக் கொண்டிருந்தது ராகவனின் மனம்.
ஒருமுறை அந்த பெயருக்கே வலிக்காத வண்ணம் அவள் பெயரை உச்சரித்து பார்த்தான். “கார்குழலி”, அந்த பெயருக்கு ஏற்றார் போல, கருப்புக் கூந்தலில் அழகுடையவளாகத் தான் தெரிந்தாள் பாவையவள்.
ஆனால் அவள் தலையை நிமிர்வேனா என்று சங்கல்பம் எடுத்துக் கொண்டால் போல. பூமியை பார்த்த வண்ணம் நின்று இருந்தாள்.
பெரியவர்கள் எல்லாம் தங்களுக்குள் அடுத்த கட்ட பேச்சுக்கு முன்னேறி இருந்தார்கள். திருமணத்தை எப்படி ஆடம்பரமாக செய்வது எங்கே செய்வது என்ற பேச்சுக்கள் வலுத்துக் கொண்டிருக்க. ராகவன் தனக்கும் அந்த பேச்சுக்கும் சம்பந்தமில்லை என்று. தான் பார்க்க வந்திருந்த அந்த பெண்ணை வஞ்சனை இல்லாமல் ரசித்து கொண்டிருந்தான்.
பெண்ணிடம் பேச வேண்டும் என்று ஆசை துளிர் விட ஆரம்பித்தது. தன் அண்ணன் ராஜவேலுவை பார்த்து கண்களால் இறைஞ்சினான். அதில் ராஜவேலுவின் இதழ்கள் தாராளமாக விரிந்து கொண்டது.
தன் அறை வாசலின் முன்பு வந்து நின்ற தன் தம்பியை பார்த்த ராஜவேலு. “என்னடா அம்மா கூப்பிடுறாங்களா?, கிளம்பிட்டு தான் இருக்கேன் அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன் “, என்று கூறியபடியே தன் பெண் பிள்ளைக்கு தலையை பின்னிக் கொண்டிருந்தான் அவன். அவனுடைய மனைவி கண்ணாடியின் முன்பு நின்று தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். தன் அண்ணனையும் அவன் மகளையும் தன் அண்ணியையும் பார்த்தவன்.
“ஸ்ஸ்ஸ், ஸ்ஸ்ஸ்”, என்று தன் அண்ணனை மட்டும் அழைக்க. ஜடையை பின்னி முடித்தவன். தன் மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனிடம் வந்து நின்று என்னவென்று கேட்டான்.
“ உனக்கு பொண்ணு பாக்க போகும்போது அண்ணி நம்பர் நான் வாங்கி கொடுக்கும்போது உன் கிட்ட ஒரு டீல் போட்டேன் ஞாபகம் இருக்கா? “, என்று ராகவன் கேட்க அவன் யோசிப்பது போல பாவனை செய்தான்.
“ இதான வேண்டான்றது, காரியமான உடனே கழட்டி விட்டுடுறீங்க பாத்தீங்களா? “, ராகவன் தன் அண்ணனை முறைத்தபடி கேட்க.
“சும்மா விளையாடினேன் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு கண்டிப்பா நான் பண்றேன்”, என்று கூறியவனுக்கு இப்பொழுது அது ஞாபகம் வந்தது.
தன்னுடைய பெற்றோர்களை திரும்பி பார்த்தவன். வேறு வழியில்லாமல் தான் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து. “பொண்ணும் மாப்பிள்ளையும் கொஞ்சம் தனியா பேசட்டுமே?”, என்று கேட்டான்.
யாருமே அதை எதிர்பார்க்கவில்லை போல, அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தாலும். கார்குழலியின் தந்தை உடனே தன்னை மீட்டுக் கொண்டு.
“அதுக்கு என்ன தம்பி தாராளமா பாக்கட்டும்”, என்று ஒற்று ஊதினார். அவருடைய மனைவியோ தன் கணவனை தவிப்பாக பார்க்க.
ராகவனின் பெற்றோர்கள் ராஜவேலுவை முறைத்துக் கொண்டு நிற்க அதற்குள் ராகவன் எழுந்து நின்று விட்டான். இப்பொழுது யாராலும் எதுவும் சொல்ல முடியாத நிலை.
கார்குழலியின் தாய் பவளவல்லி, பெண்ணிடம் எதையோ முணுமுணுத்துக் கொண்டு தோட்டத்தின் பக்கம் அழைத்துச் செல்ல, தன் தம்பி ராகவனை ராஜவேலு அழைத்துச் சென்றான்.
பெண்ணை தனியாக நிக்க வைத்து விட்டு தாய் வருவதை பார்த்துவிட்டு ராகவனை அனுப்பி வைத்துவிட்டு ராஜவேலு திரும்பிச் உள்ளே சென்றவன், கவனமாக தன் தாய் தந்தையின் பார்வையே தவிர்த்தான்.
முகம் மலர வந்தவனுக்க இப்பொழுது என்ன பேசுவது என்று தெரியவில்லை. காலரை ஒரே கையால் முன் எடுத்து விட்டவன். தொண்டையைக் கனைத்து தன் பதட்டத்தை குறைத்துக் கொண்டு.
“எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு. உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா”, என்று கேட்டான். பேச்சுக்கள் திருமணம் வரை சென்று கொண்டிருக்க இந்த வாக்கியம் அபத்தமானது என்று தெரிந்தாலும் கேட்டிருந்தான்.
“இல்ல”, என்று ஒற்றை வரியில் அவள் நிறுத்தி விட்டாள், அவன் மூச்சை அல்ல வார்த்தையை.
“ என்னங்க சொல்றீங்க? “, அப்பட்டமான அதிர்ச்சி ராகவன் கேள்வியில்.
“ஏன் உங்களுக்கு தமிழ் புரியலையா??, இல்லன்னா இல்லன்னு தான் அர்த்தம் “, என்றால் மிடுக்குடன். இவ்வளவு நேரம் தலை தாழ்த்தி பதுமையாக நின்றது இவள் தானா என்று சந்தேகமே எழுந்தது ராகவனுக்கு.
மிடறு விலுங்கியவன் தன்னை சுதாரித்துக் கொண்டு. “ஏன்,, ஏன் பிடிக்கல??, போட்டோவை பார்த்து பிடிச்சிருக்குன்னு சொல்லி தானே பொண்ணு பாக்க வர சொன்னீங்க. இப்பயும் உள்ள திருமண பேச்சு நடந்துகிட்டு இருக்கும்போது அமைதியாக தான் இருந்தீங்க. இப்ப பிடிக்கலைன்னு சொன்னா என்ன அர்த்தம்? “, படபடப்புடன் அவன் கேட்டிருக்க.
“ பிடிக்கலைன்னு தான் அர்த்தம்?”, என்று அவளும் தோரணையாகவே பதில் கூறினாள்.
“ அதான் ஏன்னு கேட்டேன்?, யாரையாவது காதலிக்கிறீங்களா,, இல்ல வேற ஏதும் பிரச்சனை இருக்கா எதுவாயிருந்தாலும் சொல்லுங்க “, அழுத்தமாக அவன் கேட்க.
“நான் ஒரு ஆம்பளைய தான் கட்டிக்க விரும்புறேன். எந்த பொண்ணும் அதை தான் விரும்புவாங்க”.
“நிறுத்துங்க, விட்டா பேசிக்கிட்டே போறீங்க. அப்படி என்ன தெரிஞ்சுதுன்னு இப்படி பேசுறீங்க??, யாரோ உங்கள நல்லா குழப்பி இருக்காங்க. உங்களுக்கு தப்பான விஷயத்தை சொல்லி இருக்காங்கன்னு நினைக்கிறேன். ஒரு விஷயம் உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்காம இப்படி பேசுறது அநாகரிகம்னு உங்களுக்கு தெரியலையா?“.
“ யாரும் எனக்கு சொல்லல சார். நான் என் கண்ணால இப்ப தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்தேன்“, என்று சொல்லும் போதே அவன் புருவம் இடுங்கியது.
தான் பேசியது சற்று அதிகபடி என்று தோன்றிய போதும். கார்க்குழலி பேச்சை தொடர்ந்தாள். அவனை புகைப் படத்தில் பார்த்ததுமே அவளுக்கு பிடித்து தான் இருந்தது. பெற்றவர்களுக்கும் அவனுடைய பின்புலம் வேலை படிப்பு என்று எல்லாம் பிடித்திருக்க. பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டினரையும் வர வைத்து விட்டனர். இருந்தும் அவளுக்கு இப்பொழுது பிடிக்கவில்லை.
“எங்கப்பா என்ன எப்படி படிக்க வச்சாரோ, அப்படித்தான் உங்களை படிக்க வைத்திருக்கிறார். எங்கம்மா என்னை எப்படி சுமந்தாங்களோ, எனக்கு என்ன எல்லாம் செஞ்சாங்களோ, அதையே தான் உங்க அம்மாவும் உங்களுக்கு செஞ்சிருக்காங்க. நீங்க வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிக்கிற மாதிரி. நானும் ஒரு நல்ல கம்பெனில நல்ல வேலையில இருக்கேன். ஆனாலும் உங்க அம்மா வரதட்சணையா நகை, காரு ரொக்கம்னு கேட்கும்போது நீங்க அமைதியா தான் உட்கார்ந்துகிட்டு இருக்கீங்க. இப்பவே உங்க கூட வாழ போற பொண்ணுக்காக குரல் கொடுக்காத நீங்க. பின்னாடி எப்படி இதெல்லாம் செய்வீங்க??. இப்பவே பொண்ணு வீட்ல இருந்து வரதட்சணை வாங்கி தான், உங்க ஸ்டேட்டஸ் உயர்த்திக்கனும்னு நினைக்கிற நீங்க , பின்னாடியும் இதை செய்ய மாட்டீங்கன்னு என்ன நிச்சயம் இருக்கு. வெறும் ஃபோட்டோவை பார்த்து மட்டும் முடிவு செய்வது இல்ல திருமணம் என்பது. உங்க அண்ணனா கேட்கலனா நான் கேட்கலான்னு தான் இருந்தேன். உங்ககிட்ட தனியா பேசுறதுக்கு. நல்ல வேலை அவரே கேட்டுட்டாரு. நீங்களாவே போய் திருமணத்தை நிறுத்திடுங்க. நானா வந்து உங்களை பிடிக்கலைன்னு சொன்னா அது வீட்டுக்கு வந்தவங்கள அவமானப் படுத்துற மாதிரி ஆயிடும். நீங்க வேணா உங்களுக்கு வரப்போற மனைவியை பத்தி தெரிஞ்சுக்காம யோசிக்காம இருந்திருக்கலாம். ஆனா நான் அப்படி இல்லை. நான் உங்களை நிராகரிச்சா உங்க வீட்ல மட்டும் இல்ல எங்க வீட்லயும் கேள்வி கேப்பாங்க . ஆனா எங்க வீட்டு ஆளுங்களுக்கு என்ன பத்தி நல்லா தெரியும். அதனால நீங்களே பொண்ணு புடிக்கலன்னு சொல்லி கல்யாணத்தை நிறுத்துங்க“, என்று கூறியபடி அவள் கைகளை கட்டிக் கொண்டு நேர் பார்வை பார்த்தால் அவனை.
ஏனோ ராகவனுக்கு இப்பொழுதும் அவளை ரசிக்கத்தான் தோன்றியது. இதழ்களில் யாருக்கும் தெரியாமல் ஒரு புன்னகை கீற்று வந்து சென்றது. வீட்டை நோக்கி அமைதியாக நடந்தவன் நின்று அவளை மீண்டும் திரும்பிப் பார்த்தான்.
“ஆனா எனக்கு உன்ன பிடிச்சிருக்கு “, என்று கூறிவிட்டு வேகமாக வீட்டின் உள்ளே சென்று விட்டான்.
அவள் ஆழ்ந்த பெருமூச்சை விட்டுக் கொண்டே, அவன் பின்னோடே மெல்ல அடி எடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தாள். அவளுக்கும் வருத்தம் தான். பெண்ணின் எதிர்பார்ப்பு என்பது அவளுக்கும் அவள் குடும்பத்திற்கும் அவள் பெண்ணுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம். அதுவே அங்கே உடையும்போது அவனை நம்பி அடுத்த அடியை எடுத்து வைக்க அவள் மனம் ஏற்கவில்லை.
“ எனக்கு பொண்ணு ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா இந்த திருமணத்தில் எனக்கு சில கண்டிஷன் இருக்கு”, என்று அவன் பேசிக் கொண்டிருப்பது அவள் காதுகளில் நன்றாகவே கேட்டது.