• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

90 கிட்ஸ் வாங்கிய அடிகள்

Member
Joined
Sep 12, 2024
Messages
35
அக்காலத்தில் நாம் வாங்கிய அடிகளின் லிஸ்ட்!

இன்று இருக்கும் சின்ன பிள்ளைகளுக்கு எங்க காலத்தில எதுக்கெல்லாம் நாங்க அடி வாங்கி இருக்கோம்னு தெரிய வாய்ப்பில்லை.

ஆனால், வாங்கின ஒவ்வொரு அடியும் எங்களை புடம் போட்ட தங்கமா ஆச்சு என்பது தான் இங்க மேட்டர்.

1. அடி வாங்கி ரொம்ப நேரம் அழுதுட்டு இருந்தா, மறுபடியும் அடி!

2. அடி வாங்கிட்டு அமுக்கமா அழாமல் இருந்தால், எவ்வளவு நெஞ்சழுத்தம்னு மறுபடியும் அடி.

3. அடி வாங்காமலேயே அழுதா, நடிக்கிறயான்னு விழும் அடி.

4. பெரியவங்க உட்கார்ந்திருக்கர இடத்தில நின்னுட்டு இருந்தா அடி.

5.பெரியவங்க நின்னுட்டு இருக்கும் போது உட்கார்ந்திட்டே இருந்தா அடி.

6. பெரியவங்க உட்கார்ந்து இருக்கும் போது குறுக்காலும் நெடுக்காலும் நடந்தா அடி.

7. விருந்தாளிக்கு சமைத்ததை முன்னதாக சாப்பிட்டா அடி.

8. தட்ல சோத்தை வெச்ச பிறகு சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிச்சா அடி.

9. சூரியன் மறைஞ்ச பிறகு லேட்டா வீட்டுக்கு வந்தா, எங்க சுத்திட்டு வர்ரேன்னு ஒரு மொத்து.

10. அடுத்தவன் வீட்ல சாப்பிட்டு விட்டு வந்தா அடி.

11. எப்போ பார்த்தாலும் மூஞ்சியை தூக்கி வெச்சுட்டு இருந்தா அடி.

12. ரொம்பவும் துள்ளிக் குதிச்சாலும் அடி.

13. மூத்தவங்களோட சண்டை போட்டு தேறத்தற அடி.

14. சின்னப் பசங்களோட சண்டை போட்டு ஜெயிச்சிட்டேன்னு கூவினா அடி.

15.ரொம்பவும் மெதுவா சாப்பிட்டா அடி.

16.அவசர அவசரமா அள்ளி போட்டு சாப்பிட்டாலும் அடி.

17. காணாதது கண்டது போல கண்டமேனிக்கு சாப்பிட்டால் அடி.

18. தட்ல போட்டதை முழுக்க சாப்பிடாம இருந்தால் அடி.

19.சாப்பிட்ட பிறகும் தட்டை சுரண்டிட்டு இருந்தால் அடி,

20. பேசிட்டே சாப்பிட்டா அடி.

21.பெரியவங்க எழுந்த பிறகும் தூங்கிட்டு இருந்தா அடி.

22.விருந்தாளிங்க சாப்பிடுவதை பார்த்தால் அடி.

23. தடுமாறி நடந்து விழுந்தா உதை.

24. பெரியவங்களை முறச்சு பார்த்தா அடி.

25. பெரியவங்க பேசும்போது முழிச்சா அடி.

26. அவங்க பேசும்போது முழிக்காம வெறிச்சு பார்த்தா அடி.

27. பெரியவங்களை ஓரக் கண்ணால பார்த்தால் அடி.

28. நண்பர்கள் தெருவில் ஃபுட்பால் ஆடும்போது நாம அவங்களோட சேர்ந்தால் அடி.

29. நண்பர்கள் விளையாடும் போது நாம உம்முன்னு வீட்ல உட்க்கார்ந்திருந்தாலும் அடி.

30. சாப்பிட்ட பின், தட்டை அலம்பலேன்னா அடி.

31. சாப்பிட்ட தட்டை சரியா கழுவலைன்னா அடி.

32. சாப்பிட்ட தட்டை கீழே போட்டு நசுங்கல் ஏற்பட்டா அடி.

33. கழுவின தட்டை ஒழுங்கா வைக்கலேன்னா அடி.

34.நகத்தைக் கடிச்சா அடி.

34..குளிக்காட்டி ஒரே அடி.

35.காக்கா குளியலா குளிச்சு உடனே வந்தா முதுகுல ஒரு அடி.

36. பாத்ரூம் உள்ள போயி ஒரு மாமாங்கம் ஆச்சுன்னா, வெளில வந்தவுடன் அடி.

37. ஸ்கூல்ல மிஸ்பிஹேவ் பண்ணினேன்னு தெரிஞ்சா வீட்ல அடி.

38.தெருல போர கார் உரசிட்டு போச்சுன்னா, ஏண்டா கார் கிட்ட போனேன்னு சொல்லி அடி.

39. வண்டியில அடிபட்டு குத்துயிரும் குலையுயிருமா இருந்தாலும், அஜாக்கிரதைக்கு நாலு அடி.

40. கேட்ட கேள்விக்கு பதில் வரலைன்னா அடி

41. பெரியவங்க பேசும்போது பதில் சொன்னா அடி.

42 லேட்டா கோவிலுக்கு போனா அடி.

43. பிரெண்ட்ஸ்கிட்டே இருந்து ஓஸியா ஷூ வாங்கி போட்டுகிட்டா அடி. ...சர்ட் வாங்கி போட்டாலும் அடி

44.அம்மா செலெக்ட் பண்ணின சட்டை பிடிக்கலைன்னு சொன்னா அடி.

45. கடைல choose செய்து ஷர்ட்டை எடுக்க நேரம் பண்ணினா, இதுக்கு இம்புட்டு நேரமான்னு அடி

46. வாத்தியார் சொல்லிக் குடுத்த ரெண்டுங்கெட்டான் பதிலை பரீட்சைல எழுதினா அதே வாத்தியார் ”சொந்தமா என்னடா ரீல் விட்றயா”ன்னு சொல்லி அடிக்கும் அடி.

47டீச்சர் தப்பு தப்பா நோட்ஸ் கொடுத்தாலும், நாம கர்ரெக்ட் பதில் எழுதினா, ”நீ பெரிய பிஸ்த்தாவா”ன்னு சொல்லி வாங்கும் அடி.

48.வீட்ல பெற்றோர்கள் இடையில் அல்லது பெருசுங்க சண்டை மூட்ல இருந்தா, நாம வாங்கும் அடி.

49 சொந்த காரங்கவீட்ல, நண்பர் வீட்ல பக்கிங்க மாதிரி சாப்பிட்டால், நம்ம வீட்ல வந்து வாங்கும் அடி.

50. மூணு தோசை /பூரியை தாண்டி இன்னொன்னாலும் அடி...போதும்னாலும் அடி,

51 எல்லாத்துக்கும் நெய்யா கேக்குதுன்னு முதுகுல அடி.

52.சாப்பிட்ட பிறகு தட்டை நக்கினால் அடி.

53...பக்கத்து வீட்டு பொண்ணெ பார்த்தா அடி

54...காரணமும் தாண்டி, காரணமே இல்லாமல் வாங்கும் அடி.

இன்னிக்கு பசங்களுக்கு இதெல்லாம் அபத்தமா தெரியலாம். ஆனால், கிட்டத் தட்ட கூட்டு குடும்பத்தில் பெரியோர்கள், பங்காளிகளுடன் வாழ்ந்த அந்நாட்களில், இவ்வடிகள் வாங்கித்தான் பலர் பெரிய மனுஷனாக உசந்தாங்கன்னு சொல்ல முடியுமோ இல்லியோ, *எங்களில் பலருக்கு இந்த இளமையில் வாங்கிய அடிகள், வாழ்வில் முன்னேற உதவின என உறுதியாக சொல்ல முடியும்...பெருமையாகவும் சொல்ல முடியும்

*வாழ்க இந்திய பெற்றோர்களும், ஆசிரியர்களும்.

அன்று அடிகள் நம் வாழ்வின் படிகள்.
இன்றோ அனைத்தும் பகையாய்!

படித்ததில் பிடித்தது.
அதை உங்களுடன் பகிர்கிறேன்.

- நித்யா ராஜா
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top