• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
May 1, 2025
Messages
8
🩶 தூரம் வேண்டாம் தங்கமே! 🩶

தூரம் 07

இரவு நேரம் கதிரின் வருகைக்காகக் காத்திருந்த அனுபமாவுக்கு கடிகார முட்கள் இன்னும் விரைவாக நகர்ந்திடக் கூடாதா என்ற ஏக்கம். பார்க்கும் போது அவை விரைவாக ஓடாதோ என்று நினைத்து வேறு புறம் பார்வையைத் திருப்பியவளுக்கு, அவனோடு பேசும் வரை மனதின் தவிப்பு நீங்கப் போவதில்லை.

அவன் அழைத்த மறு கணம் உற்சாகம் கரை புரண்டோட, அழைப்பை ஏற்றவளோ தன்னவனையே விழுங்கும் பார்வை பார்த்து வைத்தாள்.

"அம்மு குட்டி! எனக்காக காத்துக்கிட்டு இருந்தியா?" என்று அவன் கேட்க, "இல்ல. நான் ஏன் உங்களுக்காக காத்திருக்கனும்?" என வினவினாள், வஞ்சி.

"ஹான்! புரிஞ்சு போச்சு. உன் புருஷனுக்காக காத்திருந்த. சரியா?" அவன் குறும்பாகக் கேட்டான்.

சில நேரங்களில் அவள் அப்படித் தான். புருஷனுக்காக காத்திருந்ததாக கூறுவாள்.

"இல்லை" இம்முறையும் அவள் இல்லை என்று கூறவே, யோசனைச் சுழலில் சிக்கிக் கொண்டான், கணவன்.

"அப்பறம் யாருக்காக?"

"சொல்லட்டுமா?" வலது புருவத்தை உயர்த்திக் கேட்க, "சொல்லு‌" என்றான்.

"என் குழந்தையோட அப்பாவுக்காக காத்திருந்தேன்" அவளின் ஒற்றைக் கரம் உயர்ந்து வயிற்றை மெதுவாக வருடிக் கொடுத்தது.

"கு..குழந்தையா?" அதிர்ச்சியோடு அவன் கேட்க, "ஆமா தங்கமே! வாழ்த்துகள். அப்பாவாகப் போறீங்க" என்று கூறிய அனுபமாவின் கண்களில் மெல்லிய நீர்ப்படலம்.

"அம்மு! நான் அப்பாவாகப் போறேனா? உன் வயித்துல நம்ம பாப்பா இருக்கா?" வாயில் கை வைத்துக் கொண்டவனுக்கு உணர்வுகள் ஆழிப் பேரலைகளாக பொங்கிப் பிரவாகித்தன.

"ம்ம். கொஞ்ச நாளா ஒரு மாதிரி தலை சுத்துதுன்னு சொன்னேன்ல? டாக்டர் கிட்ட போய் காட்டினேன். அவங்க செக் பண்ணிட்டு நான் கர்ப்பமா இருக்கிறதை சொன்னாங்க. உங்க கிட்ட முதல்ல சொல்லனும்னு ஆசையா இருந்தேன்" என்றவளுக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

"எனக்கு கால் தரையில் படலடி. இந்த உலகத்துல இருக்கிற அத்தனை சந்தோஷமும் எனக்கே எனக்காக கெடச்ச மாதிரி ஒரு ஃபீல். ப்பாஹ் என்னடி இது உணர்வு?" பிடரியை அழுந்தக் கோதிக் கொண்டான்.

"உனக்கு என்ன வேணும் அம்மு? நீ என்ன கேட்டாலும் தருவேன்" என்று அவன் கேட்க, "இப்படி கேட்காதீங்க" என மறுத்தாள்.

"ஏன்?"

"எனக்கு இப்போ என்ன வேணும்னு கேட்டா என்னத்த சொல்லுவேன்? எனக்கு இந்த நிமிஷம் உங்க பக்கத்துல இருக்கனும் போல இருக்கு. உங்க கையை பிடிச்சு தோள்ல சாஞ்சுக்கனும் போல இருக்கு. உங்கள இறுக்கமா அணைச்சுக்கனும் போலிருக்கு. ஆனா எதுவும் பண்ண முடியாது தானே?" வேக வேகமாகப் பேசியவளுக்கு மூச்சு வாங்கியது.

"அம்மு ரிலாக்ஸ்! மெதுவா மெதுவா பேசு டா. இங்க பாரேன். என் தங்கம்ல? சொல்றத கேளு. நான் சொன்னா கேப்ப தானே?" என்று அவன் கேட்க, "கேப்பேன்" தலையை ஆட்டினாள்.

"அப்போ அழக் கூடாது. டென்ஷனாகக் கூடாது. நீ சிரிச்சு சந்தோஷமா இருக்கனும் கண்ணம்மா. எனக்கு அதான் வேணும். சும்மாவே நீ அழறத நான் விரும்ப மாட்டேன். இப்போ பாப்பாவும் இருக்கு. நீ சந்தோஷமா இருந்தா தானே பாப்பாவும் சந்தோஷமா இருக்கும்" குழந்தையைக் கொஞ்சுவது போல் அவளுக்கு மிக மிக மென்மையாக எடுத்துச் சொன்னான், கதிர்.

"அழல. நான் அழ மாட்டேன்" கண்கள் இரண்டையும் அவசரமாகத் துடைத்துக் கொண்டாள்.

"என் செல்லம். நான் கூட தான் இருக்கேன். தூரமா இருக்கேன்னு நீ நெனக்காத. அதையே நெனச்சு நெனச்சு இருந்தா உனக்கு அழுகை தான் வரும். நான் உன்னையே நெனச்சிட்டு இருக்கிறத யோசி. நாம ஒன்னா சந்தோஷமா வாழ்ந்த நாட்கள நெனச்சு பாரு. சந்தோஷம் உன்ன தேடி வரும்"

"அதை நெனக்காம இருப்பேனா? ஒவ்வொரு விஷயம் நடக்கும் போதும் உங்கள தான் ஞாபகம் வருது. சாப்பிடும் போது உங்களுக்கு ஊட்டி விட்ட ஞாபகம். கடலுக்கு போனா உங்க கைய பிடிச்சு நடந்த ஞாபகம். தூங்க போனா நீங்க என் பக்கத்துல இருந்த ஞாபகம். ஒவ்வொன்னும் உங்கள இணைச்சு பாக்குது. நெனச்சி பாக்குது.

இன்னிக்கு ஹாஸ்பிடல் போனேன்ல? ப்ரெக்னன்ட் லேடி ஒருத்தர் வந்திருந்தாங்க. அவங்க ஹஸ்பண்ட் கையை பிடிச்சிருந்தாங்க. அவரும் அவ தோளோடு சேர்த்து பிடிச்சு நடக்க வெச்சிட்டு வந்தாங்க. பாக்க அழகா இருந்தது. எனக்கும் இப்படி நடக்குமானு ஏக்கமா இருந்தது.

ஆனா இன்னொருத்தரோட பேசினேன். அவங்க ப்ரெக்னன்ட். ஆனா போன மாசம் ஹஸ்பண்ட் இறந்துட்டாராம். அவங்க நிலமை ரொம்பவே மோசம்ல? சின்ன வயசுல கணவனை இழந்துட்டாங்க. அவங்களால இனி அவரோட ஒன்னா இருக்கவே முடியாது. பாவம்.

நீங்க பக்கத்துல இல்லயேனு நான் கவலைப்படுறேன். நீங்க தூரத்துலயாவது இருந்து என் கூட பேசி சிரிச்சு அன்பு காட்டிட்டு இருக்கீங்க. அவங்களுக்கு அப்படி எதுவுமே இல்லல்ல. அதோட ஒப்பிட்டு பாக்கும் போது என் நெலம எவ்ளோவோ பரவாயில்ல" என்று அவள் சொல்ல,

"அது உண்மை தான் அம்மு. நமக்கு நடக்கிறதை பெரிய கஷ்டம்னு நெனச்சு ஒடஞ்சி போய் அதையே நெனச்சு நெனச்சு வேதனைப்படுறோம். ஆனா நம்மள விட அதிக கஷ்டத்தோட பல பேர் வாழுறாங்க. நம்மளால ஏத்துக்கவே முடியாத வலிகளை சுமந்துக்கிட்டு வெளியில ஒன்னுமே நடக்காத மாதிரி நெறய பேர் வாழ்ந்துட்டு தான் இருக்காங்க" என அவனும் அதனை ஆமோதித்தான்.

"இனி நீங்க என் கூட இல்லயேனு நான் கவலைப்பட மாட்டேன். முடிஞ்சளவு சந்தோஷமா இருக்க ட்ரை பண்ணுவேன்"

"இப்படி தான் சொல்லுவ. அப்பறம் மறுபடி கவலைப்பட்டுட்டு இருப்ப. உன்ன பத்தி எனக்கு தெரியாதா?"

"நானும் நார்மலா இருக்கனும்னு தான் ஆசைப்படுறேன். ஆனா முடியலயே. ஏதாவது ஒரு நினைவு வரும் போது சட்டுனு ஒடஞ்சி போயிடுறேன். எந்த சோகக் கதையும் இல்லாம உங்களோட பேச தான் விரும்புறேன்"

"எனக்கு தெரியும் அம்மு. உன்ன நீயே வருத்திக்காக. உனக்கு புடிச்ச விஷயங்களை பண்ணிக்கிட்டு இரு. கவனமா இருக்கனும்‌. நல்லா சாப்பிடனும். நேரத்துக்கு மாத்திரை போடனும். சரியா?" அக்கறையோடு கூறினான், காளை.

"சரிங்க. நான் கவனமா இருப்பேன்" நல்ல பிள்ளையாக கேட்டுக் கொண்டாள்.

"நீ என் கிட்ட சண்டை போட மாட்டியா?"

"எதுக்கு?" புரியாமல் பார்த்தாள், பாவை.

"உன் கிட்ட அக்கறையா பேசினேன்ல? குழந்தைக்காக தான் என் கூட இரக்கமா பேசுவீங்களானு சண்டை போடுவாங்களாம் பொண்ணுங்க. குழந்தை வந்தாலும் என் கூட தான் பாசமா இருக்கும்னு ரூல்ஸ் போடுவாங்களாம்" என்றான் அவன்.

"ரூல்ஸ் போடவும் தேவையில்லை. சண்டை போடவும் தேவையில்லை. என் தங்கத்த எனக்கு தெரியும். என் மேல எப்போவும் அன்பா, அக்கறையா தான் இருப்பீங்க. குழந்தை வந்த பிறகும் என்னை இதே மாதிரி பாத்துப்பீங்க. அந்த நம்பிக்கை எனக்கிருக்கு. அதனால நீங்க சொல்லுற மாதிரி பண்ண வேண்டிய அவசியம் இல்ல"

"அய்யோ! பேசிப் பேசியே லாக் பண்ணுறியே. நான் கூட குழந்தை வந்த பிறகு பாத்துக்காம இருக்கலாம்னு நெனச்சேன். ஆனா நீ பேச்சாலயே மயக்கிட்ட"

"ஓஹ்ஹோ! அந்த ஆசை வேற இருக்கா? என்னை பாத்துக்காம இருப்பீங்களா? எல்லாருமே எனக்கு அப்பறம் தான். இல்லனா பேச மாட்டேன். போங்க" முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.

"சும்மா சொன்னதுக்கு போய் இப்படி கோவிக்கிற? நீ தான் எனக்கு எப்பவும் ஃபர்ஸ்ட் அன்ட் பெஸ்ட்! மை கியூட்டி" அவளைச் செல்லம் கொஞ்சினான்.

"ஆனா நான் கோவம்" அவள் முறுக்கிக் கொள்ள, "அச்சோ! என் பட்டுக் குட்டில்ல? பாப்பு குட்டில்ல?" கொஞ்சிக் கொண்டவனின் பேச்சில் குறுக்கிட்டு,

"பாம்புக் குட்டில்ல?" என்றிட, "என்னடி?" எனக் கேட்டான்.

"பாம்பு மாதிரி நானு. என்னைத் தவிர வேற யாருக்காவது முக்கியத்துவம் குடுத்தீங்க, சீறிடுவேன். கொத்திடுவேன்" புசு புசுவென்று மூச்சு விட்டவாறு அவள் கோபத்தோடு சொல்லிய பாங்கில் சில்லறைகள் சிதறியது போல் நகைத்தான்.

"என்னங்க?" அவனது சிரிப்பைப் பார்த்தவளுக்கும் உதடுகள் விரிந்தன.

"அழகி டி நீ" அவளை ரசித்துப் பார்த்தான், அவன்.

"நீங்க தான் சொல்லிக்கனும். எனக்கு ஒன்னும் அப்படி தெரியல" என்றாள், அவள்.

"என் பொண்டாட்டி எனக்கு அழகு தான்" என்றவன், "உண்மைய சொல்லு. நான் அப்படி சொன்னா ஏன் ஒரு மாதிரி பேசுற? உனக்கு புடிக்காதா?" எனக் கேட்டான்.

"நான் அழகுன்னு எப்பவும் நெனக்க மாட்டேன். என்னை விட கலரான அழகான பொண்ணுங்கள பாத்து இவங்கள விட நாம கம்மி தான்னு தோணும். ஆனா நீங்க வேற‌ யாரையும் அழகுன்னு சொல்லுறத என்னால ஏத்துக்க முடியாது.

நான் அழகா இருக்கேன்னு நீங்க சொல்லும் போது அப்படி சொல்ல வேண்டாம்னு சொல்லுவேன் தான். ஆனா எனக்கு அது ரொம்ப புடிக்கும். அதைக் கேட்கும் போது மனசு குளிர்ந்து போயிடும். ஒரு மாதிரி ஹேப்பியா இருக்கும்" என்று அவள் கூற,

"எப்பவும் நீ அழகு தான். நீ மட்டும் தான்ம்மு அழகு. என் கண்ணுக்கு நீ தான் பேரழகு. என் அழகுக் கடல்" என்று அவன் சொல்
ல, அவள் மீது ஆனந்தச் சாரல் சிதறிக் கொட்டியது.

தூரம் தொடரும்.......!!


ஷம்லா பஸ்லி
2025-05-29
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top