அத்தியாயம் - 32
ஜோதா அக்பர் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வந்து பிறகு அவர்களுடைய வாழ்க்கை வசந்தமாக மாறியது. வாழ்கை நல்ல திசையை நோக்கித் திரும்பும் போது அக்பருடைய அம்மா இறந்துவிட்டார்கள். தன்னுடைய ஆணிவேர் சிதைந்ததைத் தாங்க முடியாத சோகத்தில் இருந்து மீள முடியாமல் இருந்தார் அக்பர்...
அத்தியாயம் - 31
எந்தவித கவனச் சிதறலும் இல்லாமல் ஒரே நேர்கோட்டில் அவன் அடைய வேண்டிய இலக்கு மட்டுமே மனதில் வைத்து ஆதி தயாராகிக் கொண்டிருந்தான். தீவிரமான பயிற்சிக்குப் பிறகு வாய்ப்பிற்காக காத்திருந்த ஆதிக்கு ஒரு நல்ல செய்தி தேடி வந்தது.
மாநில அளவிலான பாக்ஸிங் போட்டிக்கான அறிவிப்பு வெளியாகி...
அத்தியாயம் - 29
ஆதியின் அப்பா எதிர்பார்த்த நாள் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் புகுந்திருந்ததால் வசதியாகப் போனது அவருக்கு. கீழ் வீட்டில் நடப்பதை மாடிப் படிக்கட்டில் மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த ஆதியின் அப்பா எதுவும் தெரியாதது போல
“என்னமா கீழ சத்தம் ? “ என்று வசனம் பேசிக்கொண்டே கீழே வந்தார்...
அத்தியாயம் - 28
அப்படிப்பட்ட ஒருவருக்கு இப்படி ஒரு தீங்கு செய்ய அவர்களுக்கு எப்படித்தான் மனது சம்மதித்ததோ தெரியவில்லை… என்று தனக்குள்ளே புழுங்கிக் கொண்டிருந்த ஜோதா தன் அம்மாவிற்கு அழைத்து அவள் மனதில் இருந்த அத்தனை ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்துவிட்டு இனிமேல் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னுடன்...
அத்தியாயம் - 27
அக்பருக்கு அங்கு நடந்ததும் அவர் கண்களால் பார்த்த விஷயங்களும் ஏதோ கனவில் நடப்பதுபோல் இருந்ததால் வாயடைத்து விழி பிதுங்கி குழம்பிப் போனார். அதனால்தான் அங்கிருந்தவர் அக்பரிடம் எதுவும் சொல்லாமல் அவருடைய அம்மாவை அழைத்து நடந்த விஷயத்தை விளக்கிச் சொன்னார்.
“சரியாக ஒருவருடத்திற்கு...
அத்தியாயம் - 26
இந்த முடிவில் அக்பருக்கும் பெரிதாக உடன்பாடு இல்லை. எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக அவளை செயல்பட வைப்பதுதான் அவருக்குத் தெரிந்த காதலாக இருந்தது. அதே நேரத்தில் எல்லாரையும் எதிர்த்து நிற்க முடியாது. யாராவது நம்மையும் நம் முடிவையும் ஏற்றுக் கொள்ள தயாராகும்போது நாமும்...
அத்தியாயம் - 25
நம்மிடம் எப்படி அலட்டிக்கொள்ளாமல் ஆற அமரப் பேசினாளோ அதே போல் அப்பாவிடமும் பேசி காரியத்தைச் சாதிக்கப் பார்க்கிறாள் என்பதை ஜோதா புரிந்து கொண்டாள்.
தன்னால் அக்பருக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்கிற எண்ணத்தில் இருந்தாளே தவிர, அவர் இல்லாத வாழ்க்கையை அவளால் நினைத்துக் கூடப்...
அத்தியாயம் - 24
“ஏன் எப்ப பாத்தாலும் டீயே குடிக்குற?. ஒரு சேன்ஞ்காக இன்னைக்கு ஹார்ட் சாக்லேட் குடிக்கலாமா?. நேத்து நான் குடிச்சேன் நல்லா இருந்தது “ என்றார் அக்பர். நேற்று டிக்கடை கனவு நினைவுக்கு வந்ததும் சிரித்தாள் ஜோதா. என்ன சிரிப்பு என்று அவன் கேட்க சொல்லாமல் மறுத்துவிட்டு அவனது இடது கையைக்...
அத்தியாயம் - 23
ஜோதா அக்பரை வெறுக்கவில்லை. அவருடைய நினைவுகளைத்தான் வெறுக்கிறாள். அவர் இல்லாத நாட்களில் அவரை விட அந்த நினைவுகளே அவளை வாட்டி எடுத்தது. பிரிவின் கடைசி படிக்கட்டில் நின்று கதறிய நாட்களில் முதுகில் ஆணியாக இறங்கிய அந்த நினைவுகளை அவள் புறக்கணித்தாள்.
ஒருவேளை இந்தக் குறுஞ்செய்திக்கு...
அத்தியாயம் - 22
முடிந்தவரைத் தன்னை ஏதோ ஒரு வேலைக்குள் முழ்கடித்துக் கொள்வாள். அவளுக்குப் பிடித்த தூக்கமும் கூட எதிராளியானது. என்னதான் ஈடுபாடோடு ஒரு செயலில் இறங்கினாலும் இடையிலேயே அவன் நியாபகம் வந்து வழி மறித்து வதைத்து எடுக்கும்.
அவனைச் சேரும் போராட்டத்தில் சோர்வுற்ற ஜோதா பழியை விதியின் மேல்...
அத்தியாயம் - 21
“ஒரு டைம் மெசேஜ் பண்ணி ரிப்லை வரலனா வெயிட் பண்ணணும். இப்படி ஆயிரம் மெசேஜ் பண்ணி வச்சிருந்தா ஒரு மனுசன் என்னதான் பண்றது?“
“நீ ஒன்னும் பண்ண வேணாம். வீட்ல எல்லார்கிட்டையும் பேசுற எங்கிட்ட பேச மட்டும் உனக்கு புடிக்கல. நான் உனக்காகதான இருக்கேன். நீ ஏன் இப்படி பண்ற?. நான் அப்படியே...
அத்தியாயம் - 20
“இங்க பாரு பெரிய சந்தோஷத்த அனுபவிக்க, இப்படி சின்னச் சின்ன சந்தோஷத்த இழக்குறது தப்பே இல்ல. எனக்கு உன்னைய விட காசு முக்கியமில்ல. காதலிக்க காசு தேவையில்லனு வசனம் பேச நான் ஒன்னும் எல்லாரையும் மாதிரி முட்டாள் இல்ல. நல்லா கஷ்டப்பட்டு உழச்சாதான் உன்ன நல்லவிதமா பாத்துக்க முடியும்ற...
அத்தியாயம் - 19
அவன் அப்பாவின் பழைய இருக்கை வார் (லெதர் பெல்ட்) போன்று இருந்த சப்பாத்தியை விருப்பமில்லாமல் அசைபோட்டுக் கொண்டிருந்த அதே வேலையில் அவன் கால் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த செல்ஃபோன் அதிர்ந்து கொண்டிருந்தது.
அதிரல் விடாமல் தொடர… செல்ஃபோனைக் கையில் எடுத்துப் பார்த்தான்...
அத்தியாயம் - 18♡
அடுத்து என்ன நடந்ததென்று நாளை வீடியோவில் பார்க்கலாம் என்று சொல்லிக் காணொளியை முடித்தான் ஆதி. அன்றைய நாளுக்கான வேலையை சிறப்பாக செய்து முடித்துவிட்டு, யாமினிக்கு குட் நைட் மெசேஜ் செய்துவிட்டு எந்த வித மனக்கவலையும் இன்றி நிம்மதியாக உறங்கச் சென்றான் ஆதி.
ஆதி இறக்கி வைத்ததை விட...
அத்தியாயம் - 17
நதிமீது விழுந்த பச்சிலையைப் போல சுற்றித் திரிந்த அதே நாள் இன்னொரு ஆனந்தமான அதிர்ச்சியைக் கொடுத்தார் அவர். ஒரு ரீல்ஸ் கருத்துப்பெட்டியில் ஜோதாவின் ஐடியை ஒட்டி அருகில் கருப்பு நிற இதயத்தைப் போட்டிருந்தார். அந்த ரீல்ஸில் “உங்களுக்கு பிடித்த நண்பரை டேக் செய்து அன்பை வெளிப்படுத்தவும்...
அத்தியாயம் - 16
“ம்மா நீ சொல்றது எல்லாம் சரிதான்.வாழ்கையில முதல் முறையா உன்னையத் தவிர வேற யாரோ முகம் தெரியாத மனுஷங்க வாழ்த்தும்போதும், பாராட்டும்போதும் எப்படி இருக்கு தெரியுமா?. இதெல்லாம் எனக்கு கனவுமா”
“கனவுல இருந்து விழிச்சுக்கோ… கனவுல மெதந்துகிட்டே இருந்தா நீ போறதுக்கு முன்னாடியே உன்...
அத்தியாயம் - 15
ஆதி வழக்கத்தைப் போலவே கனத்த இதயத்தோடு வீட்டை விட்டுப் பரிந்து மீண்டும் விடுதிக்கு செல்ல அப்பாவின் பின்னால் பைக்கில் அமர்ந்து பேருந்து நிலையம் சென்றான். அப்பாவும் ஜிம்மிற்கு சென்று வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.
அப்பாவும் ஆதியும் வீட்டை விட்டு வெளியேறியதும் வீடு மீண்டும் அமைதியை...
அத்தியாயம் - 14
வண்டியை நிறுத்திவிட்டு “இறங்கு” என்றார். இருவரும் மாமரத்து நிழலுக்கு அடியில் சென்று அமர்ந்தார்கள். எப்போது வந்தாலும் ஒரு அறை மணி நேரத்திற்கு “இந்த மாந்தோப்பை நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கினேன் தெரியுமா ? “ என்ற தலைப்பில் பேசிய பிறகுதான் அடுத்த விஷயத்திற்கே வருவார். அன்றும்...
அத்தியாயம் - 13
“நான் உன் மேல வச்ச பாசத்துக்கு ரெண்டு சொட்டு கண்ணீர்தான் விலையா? “
“உனக்கெல்லாம் அதுவே ஜாத்திடா”
“சொல்லுவடா சொல்லுவ. ஏன் சொல்ல மாட்ட? உன்னையெல்லாம் அப்பவே ரிட்டன் போட்டு விட்டிருக்கனும் என் தப்புதான்”
“ரிட்டனா? என்னடா லூசு மாதிரி பேசுற? ஹாஸ்டல் சோத்த திண்ணு மூள மழுங்கிப்...