- Joined
- Aug 31, 2024
- Messages
- 956
- Thread Author
- #1
28
அதன் பொருட்டே குழந்தை மீது அத்தனை ஏக்கம் இருந்த போதும் ஆசைக்குப் பார்த்துக் கொஞ்சி வந்துவிட்டாள் ஷண்மதி. அடுத்து குழந்தையைப் பார்க்க வரவில்லை. மனைவியின் மனம் புரிந்து மதியழகனும் வரவில்லை. தாய், தம்பி எடுத்துச் சொல்லியும் வேலையைக் காரணம் காண்பித்து விலகி நின்றான்.
இதோ அதன்பிறகு இன்றுதான் வந்திருக்கிறாள். வந்ததும் குழந்தையைத் தூக்கச்சொல்லி மனம் உந்தியதுதான். மூளை இட்ட கட்டளையில் தன்னை அமைதிப்படுத்தி அமர்ந்திருந்தாள்.
குழந்தைக்குப் பெயர் வைக்கும் நேரம் வர, குழந்தையைத் தூக்கி வந்த அனுரதி, ஷண்மதி அருகில் வந்து குழந்தையை அவள் கையில் கொடுத்து, “தொட்டிலில் போடுங்க அக்கா” என்றாள்.
“நானா? இல்ல நீயே போடு” என்று குழந்தையைத் திருப்பிக் கொடுக்க,
“நீங்கதான் போடணும். இது என்னுடைய வேண்டுகோள்” என்று குழந்தையை வாங்காது இருக்க, ஷண்மதியோ கணவனைக் கண்டாள்.
அதுவரை ‘என்ன செய்கிறாள் இந்தப் பெண்?’ என்று தம்பி மனைவியைப் பார்த்திருந்தவன், பின் தம்பியைக் கேள்வியாய் நோக்க, அவனோ ‘தனக்குத் தெரியாது’ என்று தோள்குலுக்கினான். மனைவியின் புறம் திரும்பியவனிடம், அவளின் பார்வை வேண்டுதலாய் விழ, தன்னை மீறிச் சம்மதம் தெரிவித்திருந்தான். அதில் சந்தோசம் எழ, “நீங்களும் வாங்க” என்று கணவனையும் இழுத்துச் செல்ல, இருவரும் சேர்ந்தே தொட்டிலில் போட்டார்கள்.
“அடுத்து பெயர் வைக்க வேண்டியதுதான அனுமா. என்ன பெயர் தேர்வு செய்திருக்க?” மாலினி ஆர்வத்துடன் கேட்டாள்.
அதில் புன்னகைத்த அனுரதி, “ஷண்மதி அக்கா குழந்தைக்கு, நான் எப்படி மானிமா பெயர் வைக்க முடியும்? இது அவங்க குழந்தை. அவங்கதான் பெயர் வைக்கணும்” என்றாள் புன்னகையுடன். அவள் முகத்தில் சிறிதும் குழந்தையைக் கொடுக்கும் கலக்கம் இல்லை. ஒரு நிம்மதி உணர்வு மட்டுமே அவளிடம்.
குழந்தை மதியழகனுடையது என்ற எண்ணத்தில் இருப்பவர்களுமே, அனுரதியின் முடிவை எதிர்பார்த்திருக்கவில்லை. அபிராமி, சாரதாவுமே எப்பொழுதென்றாலும் இதுதான் நிஜம் என்பதால் அமைதியாக இருந்தனர்.
“அனு” என்று அதிர்வுடன், உண்மை தெரிந்தும் எப்படி என்று பார்த்த ஷண்மதி, “என் குழந்தையா?” என்று குழந்தையைக் கண்டவளுக்கு மலையளவு ஏக்கங்கள். அவளைப் பார்த்து குழந்தை அழகாய்ச் சிரிக்க, அம்மழலைச் சிரிப்பில் ஷண்மதியின் ஏக்கங்கள் பறந்து, ஆசைகள் துளிர்த்தது என்றால் மிகையில்லை.
அரவிந்த் அக்காவிடம், “அக்கா கொஞ்ச நாளாகட்டுமே” என்றான் குழந்தையைப் பிரியமுடியா தவிப்புடன்.
“எப்ப இருந்தாலும் இதுதான்றப்ப, எதையும் மாற்ற முடியாது அரவிந்தா. அவங்களையும் ஏன் தவிக்க விடணும்?”
“ஆனாலும்?” அவன் தயங்க,
“எல்லாம் ஆகும்” என்ற தோழியைக் கண்டு, “உனக்குப் பெரிய தியாகின்ற நினைப்போ” என்றவாறு தன்னை முறைத்திருந்த மாலினியைப் பார்த்த அனுரதி, கண்சிமிட்டிச் சிரித்துத் திரும்ப, “உனக்கு பெரிய மனசுதான் அனுமா. உன்கூட பழகக் கிடைத்த வாய்ப்பை எண்ணி, கடவுளுக்கு நன்றி சொல்றேன்” என்றார் மருத்துவர்.வர்ஷா.
“எனக்கும் அதேதான் டாக்டர். என்ன அந்தக் கடவுளே நீங்கதான்னு சொல்லலாம். எனக்குன்னு ஒரு குடும்பம். என் சந்தோசம் எல்லாத்துக்கும் காரணம் நீங்க” என்றவள் அவரை அணைத்து, “ஓவர் எமோஷனலாகி உண்மையை உளறிராதீங்க டாக்டர். ஏன்னா இங்க சிலருக்கு உண்மை தெரியாது” என்றாள்.
“ம்க்கும்... அப்படியே தெரிய விட்டுருவ பாரு. போடி” என்றார் விளையாட்டாக.
“டி சொல்லுறது தப்பு டாக்டர். இருந்தாலும் லவ் யூ” என்று அவர் கன்னத்தில் முத்தமிட, அவளைத் தெரிந்த அனைவரும் ஆவென்று பார்த்திருந்தனர்.
“என்னைக்காவது எனக்கு இப்படி கொடுத்திருக்கியாடி?” பொறாமையில் மாலினி பொங்கி ‘டி’யை அழுத்தினாள்.
“சந்தடி சாக்குல நீயும் டி சொல்ற. ம்... பரவாயில்லை சொல்லிக்க” என்று பெரிய மனதாய்ச் சொல்ல, மாலினி அனுரதியைக் கிள்ள, அவளின் “ஸ்...” என்ற சத்தத்தில், “இது நீதானான்னு கன்பார்ம் பண்ணிக்கக் கிள்ளினேன். எதுவா இருந்தா என்ன. என் அனு சந்தோசமா இருக்கணும்” என்றாள் மாலினி.
தோழியை அணைத்து முத்தமிடுவது போல் சென்று, “என் புருசனுக்கே இதுவரை முத்தம் கொடுத்ததில்லை. உனக்கெப்படித் தர்றது?” என கேட்டு புருவம் உயர்த்தினாள்.
“அப்ப டாக்டருக்குக் கொடுத்த?” என்று அனுரதியை முறைக்க, “அவங்க என்னோட இன்னொரு தாய்” என்றாள் புன்னகையுடன்.
அவர்கள் பேசுவது மற்றவர்களுக்குப் புரிந்தாலும், புன்னகையுடன் அதை ரசித்திருக்க, சற்று தள்ளி நின்ற அறிவழகனோ, பலவித உணர்வுகளில் மனைவியவளை மட்டுமே பார்த்திருந்தான்.
தன்னை மட்டுமே காணும் கணவனின் பார்வையை உணர்ந்தாலும், இவ்வளவு நேரம் காணாதிருந்தவள், அவன் முன் வந்து நின்றாள்.
குழந்தை பிறக்கும் முன்வரை, உன் அண்ணன் குழந்தையைச் சுமப்பது அருவெருப்பு என்றவள். ‘அண்ணன் குழந்தை வயிற்றில், தம்பிக்கு மனைவி நான். என் குழந்தை எனக்குச் சொந்தமில்லையா?’ என்று பலவிதமாக மனதில் உழன்று கொண்டிருந்தவள், இதோ தெளிவான மனநிலையுடன் தன்முன்னே.
குழந்தையைப் பார்த்தவன் அப்படியே மனைவியைக் காண, அவளும் அதையே செய்ய, ‘குழந்தை நம்முடையது என்று தெரியுமா?’ என கண்களால் கேட்க, கண்சிமிட்டிப் புன்னகைத்தவள், “தெரியும். மனம் தெளிந்ததாலயும், உங்க மனம் புரிந்ததாலும்தான், மனப்பூர்வமா குழந்தையைக் கொடுக்கிறேன்” என்றாள் மென்குரலில்.
“லவ் யூ” என்றான் பட்டென்று.
திகைத்து பின் விழி விரித்துச் சிரித்தவள், “எனக்கு ஆங்கிலம் வேண்டாம். சுத்தத் தமிழ்ல வேணும்” என்றாள்.
“அது கொஞ்சம் வேற மாதிரி இருக்குமே. பரவாயில்லையா ரதிப்பொண்ணு” என்றான் கிசுகிசுப்பாக.
‘காதல்’ என்பதற்கு ‘காமுறுதல்’ என்பதுதான் சுத்தத் தமிழ்ச்சொல். இன்னொரு வார்த்தை ‘மையல்.’ அதனால்தான் அப்படிச் சொன்னான்.
“அர்த்தம் ஒண்ணுதானே மேனேஜர் சார். தள்ளி நின்னா எப்படி? வாங்க குழந்தைக்குப் பெயர் வைக்குற வைபவத்தைக் கொண்டாடலாம்” என்றழைக்க, சட்டென அவளை உரசியபடி வந்தவனைக் கண்டு தள்ளிப்போக, மீண்டும் அவளை உரசியபடி வந்தவன், “தள்ளி நின்னா எப்படி மிஸஸ்.அறிவழகன்?” மையல் பார்வை ஒன்றை மனைவியை நோக்கி வீசினான் அறிவழகன்.
“சுத்திலும் ஆளுங்களை வச்சிக்கிட்டு, என்னதிது?” என கடிந்து ஷண்மதி மதியழகன் அருகில் வந்தவள், “இன்னும் என்ன யோசனை? போங்க போய் உங்க குழந்தைக்குப் பெயர் வையுங்க” என்றாள்.
வார்த்தை வரவில்லை ஷண்மதிக்கு. ‘நன்றி’ என்ற வார்த்தையை உணர்ச்சி பொங்க கையெடுத்துக் கும்பிட, “அக்கா என்ன பண்றீங்க? கையைக் கீழே இறக்குங்க” என்று இறக்கிவிட்டாள்.
“உன் உருவத்தில் என் அம்மாவைப் பார்க்கிறேன் அனு” என்றாள் ஷண்மதி.
ஷண்மதியின் அதீத உணர்ச்சியில் மனம் நெகிழ்ந்தாலும், நல்ல நேரம் செல்வதை உணர்ந்து, “அதுக்கென்ன. யங் அன்ட் க்யூட்டா இதோ நிஜ அம்மாவே இருக்காங்க. இவங்களை அம்மாவா நீங்க வச்சிக்கோங்க. எனக்கு என் அபிராமி அத்தை இருக்காங்க” என்று ஷண்மதியை சாரதாவிடம் விட்டாள்.
“உனக்கு அம்மான்னா எனக்கும் அம்மாதான் அனு” என்று ஷண்மதி சாரதா கையைப் பற்றிக்கொள்ள, “உனக்கு அக்கான்னா, எனக்கும் பொண்ணுதான் அனுமா.” மகளிடம் சொல்லி, “போய் குழந்தைக்குப் பெயர் வை ஷண்மதி” என்றார் சாரதா.
குழந்தை அருகில் சென்று மெல்ல குனிந்து, கொண்டு வந்திருந்த செயினை குழந்தையின் கழுத்தில் போட்டு, “மதிமலர்” என்றாள் மென்மையாக.
“ஹேய்! சூப்பர்!” கரகோஷம் எழ, அடுத்து மதியழகன் குழந்தையின் கன்னம் தொட்டு, “மதிமலர்” என உச்சரிக்க, திரும்பவும் அதே ஆரவாரம்.
அடுத்து பெரியவர்கள் பெயர் சொல்லி, சின்னவர்களும் சொல்ல, “அறிவா, அனு வந்து பெயரைச் சொல்லுங்க” என்ற அபிராமியிடம் தலையசைத்து, இருவரும் ஒருவரையொருவர் அர்த்தமாய் பார்த்தபடி குழந்தையிடம் குனிய, தாய் தகப்பனைக் கண்ட குழந்தை சிறிது சப்தமெழுப்பிச் சிரித்தாள்.
அதில் புன்னகை வரப்பெற்றவர்கள், “மதிமலர்” என்று சேர்ந்தே உச்சரித்து குழந்தையின் நெற்றியில் முத்தமிடச் செல்கையில், இருவர் தலையும் முட்ட, “ஸ்...” என நிமிர்ந்து, “ஏன் முட்டுனீங்க? வலிக்குது” என்றாள் அனுரதி.
“அச்சோ! என் ரதிப்பொண்ணுக்கு வலிக்குதா? இரு” என்று தலையில் தேய்த்துவிட்டான்.
“அனுமா ஒரு முறை முட்டினா கொம்பு முளைக்கும். இன்னொரு முறை முட்டிரு” என்ற மாலினியின் குரலில், ‘அட ஆமாம்ல’ என நினைக்குமுன் அறிவழகன் முந்திக்கொண்டு முட்டிவிட்டு ஓட, “ஏய்!” என்றபடி அவனை விரட்டி ஓட, மனம் நிறைவாய் அவர்களைப் பார்த்திருந்தார்கள் நலம் விரும்பிகள்.
அதன் பொருட்டே குழந்தை மீது அத்தனை ஏக்கம் இருந்த போதும் ஆசைக்குப் பார்த்துக் கொஞ்சி வந்துவிட்டாள் ஷண்மதி. அடுத்து குழந்தையைப் பார்க்க வரவில்லை. மனைவியின் மனம் புரிந்து மதியழகனும் வரவில்லை. தாய், தம்பி எடுத்துச் சொல்லியும் வேலையைக் காரணம் காண்பித்து விலகி நின்றான்.
இதோ அதன்பிறகு இன்றுதான் வந்திருக்கிறாள். வந்ததும் குழந்தையைத் தூக்கச்சொல்லி மனம் உந்தியதுதான். மூளை இட்ட கட்டளையில் தன்னை அமைதிப்படுத்தி அமர்ந்திருந்தாள்.
குழந்தைக்குப் பெயர் வைக்கும் நேரம் வர, குழந்தையைத் தூக்கி வந்த அனுரதி, ஷண்மதி அருகில் வந்து குழந்தையை அவள் கையில் கொடுத்து, “தொட்டிலில் போடுங்க அக்கா” என்றாள்.
“நானா? இல்ல நீயே போடு” என்று குழந்தையைத் திருப்பிக் கொடுக்க,
“நீங்கதான் போடணும். இது என்னுடைய வேண்டுகோள்” என்று குழந்தையை வாங்காது இருக்க, ஷண்மதியோ கணவனைக் கண்டாள்.
அதுவரை ‘என்ன செய்கிறாள் இந்தப் பெண்?’ என்று தம்பி மனைவியைப் பார்த்திருந்தவன், பின் தம்பியைக் கேள்வியாய் நோக்க, அவனோ ‘தனக்குத் தெரியாது’ என்று தோள்குலுக்கினான். மனைவியின் புறம் திரும்பியவனிடம், அவளின் பார்வை வேண்டுதலாய் விழ, தன்னை மீறிச் சம்மதம் தெரிவித்திருந்தான். அதில் சந்தோசம் எழ, “நீங்களும் வாங்க” என்று கணவனையும் இழுத்துச் செல்ல, இருவரும் சேர்ந்தே தொட்டிலில் போட்டார்கள்.
“அடுத்து பெயர் வைக்க வேண்டியதுதான அனுமா. என்ன பெயர் தேர்வு செய்திருக்க?” மாலினி ஆர்வத்துடன் கேட்டாள்.
அதில் புன்னகைத்த அனுரதி, “ஷண்மதி அக்கா குழந்தைக்கு, நான் எப்படி மானிமா பெயர் வைக்க முடியும்? இது அவங்க குழந்தை. அவங்கதான் பெயர் வைக்கணும்” என்றாள் புன்னகையுடன். அவள் முகத்தில் சிறிதும் குழந்தையைக் கொடுக்கும் கலக்கம் இல்லை. ஒரு நிம்மதி உணர்வு மட்டுமே அவளிடம்.
குழந்தை மதியழகனுடையது என்ற எண்ணத்தில் இருப்பவர்களுமே, அனுரதியின் முடிவை எதிர்பார்த்திருக்கவில்லை. அபிராமி, சாரதாவுமே எப்பொழுதென்றாலும் இதுதான் நிஜம் என்பதால் அமைதியாக இருந்தனர்.
“அனு” என்று அதிர்வுடன், உண்மை தெரிந்தும் எப்படி என்று பார்த்த ஷண்மதி, “என் குழந்தையா?” என்று குழந்தையைக் கண்டவளுக்கு மலையளவு ஏக்கங்கள். அவளைப் பார்த்து குழந்தை அழகாய்ச் சிரிக்க, அம்மழலைச் சிரிப்பில் ஷண்மதியின் ஏக்கங்கள் பறந்து, ஆசைகள் துளிர்த்தது என்றால் மிகையில்லை.
அரவிந்த் அக்காவிடம், “அக்கா கொஞ்ச நாளாகட்டுமே” என்றான் குழந்தையைப் பிரியமுடியா தவிப்புடன்.
“எப்ப இருந்தாலும் இதுதான்றப்ப, எதையும் மாற்ற முடியாது அரவிந்தா. அவங்களையும் ஏன் தவிக்க விடணும்?”
“ஆனாலும்?” அவன் தயங்க,
“எல்லாம் ஆகும்” என்ற தோழியைக் கண்டு, “உனக்குப் பெரிய தியாகின்ற நினைப்போ” என்றவாறு தன்னை முறைத்திருந்த மாலினியைப் பார்த்த அனுரதி, கண்சிமிட்டிச் சிரித்துத் திரும்ப, “உனக்கு பெரிய மனசுதான் அனுமா. உன்கூட பழகக் கிடைத்த வாய்ப்பை எண்ணி, கடவுளுக்கு நன்றி சொல்றேன்” என்றார் மருத்துவர்.வர்ஷா.
“எனக்கும் அதேதான் டாக்டர். என்ன அந்தக் கடவுளே நீங்கதான்னு சொல்லலாம். எனக்குன்னு ஒரு குடும்பம். என் சந்தோசம் எல்லாத்துக்கும் காரணம் நீங்க” என்றவள் அவரை அணைத்து, “ஓவர் எமோஷனலாகி உண்மையை உளறிராதீங்க டாக்டர். ஏன்னா இங்க சிலருக்கு உண்மை தெரியாது” என்றாள்.
“ம்க்கும்... அப்படியே தெரிய விட்டுருவ பாரு. போடி” என்றார் விளையாட்டாக.
“டி சொல்லுறது தப்பு டாக்டர். இருந்தாலும் லவ் யூ” என்று அவர் கன்னத்தில் முத்தமிட, அவளைத் தெரிந்த அனைவரும் ஆவென்று பார்த்திருந்தனர்.
“என்னைக்காவது எனக்கு இப்படி கொடுத்திருக்கியாடி?” பொறாமையில் மாலினி பொங்கி ‘டி’யை அழுத்தினாள்.
“சந்தடி சாக்குல நீயும் டி சொல்ற. ம்... பரவாயில்லை சொல்லிக்க” என்று பெரிய மனதாய்ச் சொல்ல, மாலினி அனுரதியைக் கிள்ள, அவளின் “ஸ்...” என்ற சத்தத்தில், “இது நீதானான்னு கன்பார்ம் பண்ணிக்கக் கிள்ளினேன். எதுவா இருந்தா என்ன. என் அனு சந்தோசமா இருக்கணும்” என்றாள் மாலினி.
தோழியை அணைத்து முத்தமிடுவது போல் சென்று, “என் புருசனுக்கே இதுவரை முத்தம் கொடுத்ததில்லை. உனக்கெப்படித் தர்றது?” என கேட்டு புருவம் உயர்த்தினாள்.
“அப்ப டாக்டருக்குக் கொடுத்த?” என்று அனுரதியை முறைக்க, “அவங்க என்னோட இன்னொரு தாய்” என்றாள் புன்னகையுடன்.
அவர்கள் பேசுவது மற்றவர்களுக்குப் புரிந்தாலும், புன்னகையுடன் அதை ரசித்திருக்க, சற்று தள்ளி நின்ற அறிவழகனோ, பலவித உணர்வுகளில் மனைவியவளை மட்டுமே பார்த்திருந்தான்.
தன்னை மட்டுமே காணும் கணவனின் பார்வையை உணர்ந்தாலும், இவ்வளவு நேரம் காணாதிருந்தவள், அவன் முன் வந்து நின்றாள்.
குழந்தை பிறக்கும் முன்வரை, உன் அண்ணன் குழந்தையைச் சுமப்பது அருவெருப்பு என்றவள். ‘அண்ணன் குழந்தை வயிற்றில், தம்பிக்கு மனைவி நான். என் குழந்தை எனக்குச் சொந்தமில்லையா?’ என்று பலவிதமாக மனதில் உழன்று கொண்டிருந்தவள், இதோ தெளிவான மனநிலையுடன் தன்முன்னே.
குழந்தையைப் பார்த்தவன் அப்படியே மனைவியைக் காண, அவளும் அதையே செய்ய, ‘குழந்தை நம்முடையது என்று தெரியுமா?’ என கண்களால் கேட்க, கண்சிமிட்டிப் புன்னகைத்தவள், “தெரியும். மனம் தெளிந்ததாலயும், உங்க மனம் புரிந்ததாலும்தான், மனப்பூர்வமா குழந்தையைக் கொடுக்கிறேன்” என்றாள் மென்குரலில்.
“லவ் யூ” என்றான் பட்டென்று.
திகைத்து பின் விழி விரித்துச் சிரித்தவள், “எனக்கு ஆங்கிலம் வேண்டாம். சுத்தத் தமிழ்ல வேணும்” என்றாள்.
“அது கொஞ்சம் வேற மாதிரி இருக்குமே. பரவாயில்லையா ரதிப்பொண்ணு” என்றான் கிசுகிசுப்பாக.
‘காதல்’ என்பதற்கு ‘காமுறுதல்’ என்பதுதான் சுத்தத் தமிழ்ச்சொல். இன்னொரு வார்த்தை ‘மையல்.’ அதனால்தான் அப்படிச் சொன்னான்.
“அர்த்தம் ஒண்ணுதானே மேனேஜர் சார். தள்ளி நின்னா எப்படி? வாங்க குழந்தைக்குப் பெயர் வைக்குற வைபவத்தைக் கொண்டாடலாம்” என்றழைக்க, சட்டென அவளை உரசியபடி வந்தவனைக் கண்டு தள்ளிப்போக, மீண்டும் அவளை உரசியபடி வந்தவன், “தள்ளி நின்னா எப்படி மிஸஸ்.அறிவழகன்?” மையல் பார்வை ஒன்றை மனைவியை நோக்கி வீசினான் அறிவழகன்.
“சுத்திலும் ஆளுங்களை வச்சிக்கிட்டு, என்னதிது?” என கடிந்து ஷண்மதி மதியழகன் அருகில் வந்தவள், “இன்னும் என்ன யோசனை? போங்க போய் உங்க குழந்தைக்குப் பெயர் வையுங்க” என்றாள்.
வார்த்தை வரவில்லை ஷண்மதிக்கு. ‘நன்றி’ என்ற வார்த்தையை உணர்ச்சி பொங்க கையெடுத்துக் கும்பிட, “அக்கா என்ன பண்றீங்க? கையைக் கீழே இறக்குங்க” என்று இறக்கிவிட்டாள்.
“உன் உருவத்தில் என் அம்மாவைப் பார்க்கிறேன் அனு” என்றாள் ஷண்மதி.
ஷண்மதியின் அதீத உணர்ச்சியில் மனம் நெகிழ்ந்தாலும், நல்ல நேரம் செல்வதை உணர்ந்து, “அதுக்கென்ன. யங் அன்ட் க்யூட்டா இதோ நிஜ அம்மாவே இருக்காங்க. இவங்களை அம்மாவா நீங்க வச்சிக்கோங்க. எனக்கு என் அபிராமி அத்தை இருக்காங்க” என்று ஷண்மதியை சாரதாவிடம் விட்டாள்.
“உனக்கு அம்மான்னா எனக்கும் அம்மாதான் அனு” என்று ஷண்மதி சாரதா கையைப் பற்றிக்கொள்ள, “உனக்கு அக்கான்னா, எனக்கும் பொண்ணுதான் அனுமா.” மகளிடம் சொல்லி, “போய் குழந்தைக்குப் பெயர் வை ஷண்மதி” என்றார் சாரதா.
குழந்தை அருகில் சென்று மெல்ல குனிந்து, கொண்டு வந்திருந்த செயினை குழந்தையின் கழுத்தில் போட்டு, “மதிமலர்” என்றாள் மென்மையாக.
“ஹேய்! சூப்பர்!” கரகோஷம் எழ, அடுத்து மதியழகன் குழந்தையின் கன்னம் தொட்டு, “மதிமலர்” என உச்சரிக்க, திரும்பவும் அதே ஆரவாரம்.
அடுத்து பெரியவர்கள் பெயர் சொல்லி, சின்னவர்களும் சொல்ல, “அறிவா, அனு வந்து பெயரைச் சொல்லுங்க” என்ற அபிராமியிடம் தலையசைத்து, இருவரும் ஒருவரையொருவர் அர்த்தமாய் பார்த்தபடி குழந்தையிடம் குனிய, தாய் தகப்பனைக் கண்ட குழந்தை சிறிது சப்தமெழுப்பிச் சிரித்தாள்.
அதில் புன்னகை வரப்பெற்றவர்கள், “மதிமலர்” என்று சேர்ந்தே உச்சரித்து குழந்தையின் நெற்றியில் முத்தமிடச் செல்கையில், இருவர் தலையும் முட்ட, “ஸ்...” என நிமிர்ந்து, “ஏன் முட்டுனீங்க? வலிக்குது” என்றாள் அனுரதி.
“அச்சோ! என் ரதிப்பொண்ணுக்கு வலிக்குதா? இரு” என்று தலையில் தேய்த்துவிட்டான்.
“அனுமா ஒரு முறை முட்டினா கொம்பு முளைக்கும். இன்னொரு முறை முட்டிரு” என்ற மாலினியின் குரலில், ‘அட ஆமாம்ல’ என நினைக்குமுன் அறிவழகன் முந்திக்கொண்டு முட்டிவிட்டு ஓட, “ஏய்!” என்றபடி அவனை விரட்டி ஓட, மனம் நிறைவாய் அவர்களைப் பார்த்திருந்தார்கள் நலம் விரும்பிகள்.