New member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 21
- Thread Author
- #1
பகுதி-9
கதிர்வேலனின் அணைப்பில் இருக்கும் முல்லையின் அஞ்சன விழிகளில் KM
என்ற எழுத்துக்கள் தான் தெரிந்தது.
'சொல்லுடி செல்லம்! இப்போவாது உனக்கு இந்த மாமன் காதல் புரியுதா!' என்று கதிர்வேலன் கேட்க,
"டேய் டேய் கதிரு என்னடா பண்ற' என்று தலைத்தெரிக்க ஓடி வந்த நாகராஜன், தன் நண்பனை தன் வசம் இழுத்தான்.
நாகா இழுத்த வேகத்தில்,'ஏன்டா பாவிங்களா! என் காதலிக்கிட்ட இருந்து என்னை பிரிக்கறீங்க!' என்று கத்தியப்படி நிலை தடுமாறி கீழே விழ போன கதிர்வேலனை முல்லையே தாங்கி பிடித்துக்கொள்ள,
'ஐயோ முல்லை! நான்னு நினைத்து தான் மாமா உன்கிட்ட இப்படியெல்லாம் பேசிகிட்டு இருக்காரு, நீ எதுவும் தப்பா நினைச்சுக்காத' என்று மீனா சொல்ல,
எப்படியோ மீனாவே தப்பாக புரிந்துகொண்டு,சரியாக சூழ்நிலையை சமாளித்தவளை பார்த்து ரோஜாவுக்கு போன உயிர் அப்போது தான் திரும்ப வந்தது.
மின்சாரம் தடைப்பட்ட காரணத்தால் தான் ஆள் மாறி மீனா என்று எண்ணி முல்லையிடம் கதிர்வேலன் காதல் வசனம் பேசினார் என்று நினைத்த முல்லையுடன் மீனாவும் இருட்டில் நின்றுக் கொண்டு இருக்க,
'மாமா... ஏன் மாமா குடிச்சு குடிச்சு உன் உடம்ப நீயே இப்படி கெடுத்துக்குற' என்று மீனா உண்மையான காதலுடன் கதிர்வேலனை பார்த்து சஞ்சலம் அடைந்தாள்.
இருளின் கருமையை அகற்ற நாகராஜன் மெழுகு வத்தியை எடுத்துக்கொண்டு இவர்கள் அருகே வர,
'ஏய் கஸு... நீ ஏன் இங்க வந்த!?' என்று மீனாவை பார்த்து குடிப்போதையில் கேட்டார் கதிர்வேலன்.
'என்ன கஸுவா!? யாரு மாமா கஸு!?' என்று மீனா கேட்க,
'நீ தானே கஸ்தூரி அத்த!... அப்போ நீ தான் கஸு' என்று மீனாவை கஸ்தூரியாக நினைத்து புலம்ப ஆரம்பித்து இருந்தார் கதிர்வேலன்.
'ஏன் கதிரு! மீனா அம்மா கஸ்தூரியை கஸுன்னு கூப்பிடுற, அப்போ முல்லை சித்தி பார்வதியை பசுன்னு கூப்பிடுவியா!?' என்று நாகராஜன் கேட்க,
'வாவ்!! வாட் a sense of humour நாகா உனக்கு' என்று கை தட்டி சிரித்த கதிர்வேலனுக்கு மற்ற நாளை விடவே இன்று போதை அதிகமாகி இருக்கிறது என்று ரோஜா அறிந்துகொண்டாள்..
'என்ன ரோஜா இது! ஏன் மாமா சார் இப்படி குடிக்கிறாரு. இவரு இப்படி எல்லாம் பண்ணா மீனாவை இவருக்கு கல்யாணம் பண்ணி தர கஸ்தூரி சித்தி எப்படி சம்மதிப்பாங்க!?' என்று முல்லை கவலையாக கேட்டதும், மீனா மேலும் கண்கள் கலங்கினாள்.
'ஹே... அவங்க யாரு எனக்கு கல்யாணம் பண்ணி தர, நான் நினைச்சா இப்போவே... இப்போ.... இப்போவே உன் கழுத்துல தாலி கட்டுறேன் பார்க்குறியா!' என்று கதிர்வேலன் முல்லையை பார்த்து கேட்கும் கேள்விகள் எல்லாம் மீனாவிடம் அவர் பேசியதாக காட்சிகள் அமைய,
'பார்த்தியா முல்ல... என் மாமாவுக்கு என் மேல உள்ளுக்குள்ள நிறைய பாசம் இருக்க தான் செய்யுது' என்ற மீனாவின் முகத்தில் அப்போது தான் புன்னகை பூத்தது.
கதிர்வேலன் இன்று அளவுக்கு அதிகமாக குடித்ததால், தன்னிலை மறந்து பிரச்சனை செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணிய ரோஜா,
யாரும் தன் இளைய அண்ணனை இந்த நிலையில் காணக்கூடாது என்று நினைத்தவள், எப்படியாவது கதிர்வேலனை நாகராஜனின் வீட்டில் உறங்க வைக்க முயற்சி செய்தாள்.
ஆனால் கதிர்வேலனோ யார் பேச்சையும் கேட்கமால் மேலும் குடித்துவிட்டு பிரச்சனை செய்துக்கொண்டு இருக்க,'மாமா! ஏன் மாமா இப்படி பண்றிங்க! நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாத கவலையில தானே இப்படி குடிக்கிறிங்க! கவலை படாதீங்க மாமா, என் உயிரை கொடுத்தாவது நான் நம்ம கல்யாணத்தை நடக்க வைப்பேன்' என்றாள் மீனா.
'வாட் நான்சென்ஸ் யூ ஆர் டாக்கிங்!! நீ உயிரை கொடுத்தா உனக்கு எப்படி டி கல்யாணம் நடக்கும் மக்கு மீனா!' என்று கதிர்வேலன் மேலும் தள்ளாடிய நிலையில் கேட்க,
'ஆமா இல்ல! சாரி மாமா... நான் எப்பாடு பட்டாவது நம்ம கல்யாணத்தை நடத்த என் அம்மாவை சம்மதிக்க வைக்கிறேன்' என்று மீனா சொல்ல,
'அதெல்லாம் நீ ஒரு புண்ணாக்கும் பண்ண வேண்டாம், காலையில நீ பண்ண வேலைக்கே உன் மேல நான் கொலை கடுப்புல இருக்கேன், ஒழுங்கா இங்க இருந்து ஓடிப் போயிடு' என்று மீனா விஷம் குடித்த நிகழ்வை நினைவில் கொண்டு கதிர்வேலன் கோபத்துடன் அவளை வசைப்பாடிக்கொண்டு இருந்தார்.
கதிர்வேலன் திட்டியதும் மீனா மேலும் கண்கள் கலங்க,'அழாத மீனா! ஆனாலும் நீ பண்ண தப்புக்கு தானே மாமா சார் உன்னை திட்டுறாரு, இனிமே அப்படி பண்ண மாட்டேன்னு சொல்லி! இந்த வாழையிலை அல்வாவை அவருக்கு கொடுத்துடு' என்றாள் முல்லை.
முல்லையின் வார்த்தையை கேட்ட மீனா, தன் கண்ணீரை துடித்துக்கொண்டவள்,'சாரி மாமா! இனிமே நான் இந்த மாதிரி எல்லாம் பண்ண மாட்டேன், சரி இந்தாங்க அல்வா சாப்பிடுங்க' என்று மீனா சொல்ல,'என்ன அல்வா வா!?' என்று புருவத்தை உயர்தினார் கதிர்வேலன்.
'ம்... அல்வா தான். முல்லை தான் பண்ணிக்கொடுத்தாள். சாப்பிடுங்க' என்று மீனா தன் கையில் இருந்த இனிப்பை கதிர்வேலனிடம் நீட்ட,
'அவ தான் எனக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடியே அல்வா கொடுத்துட்டாளே!' என்ற கதிர்வேலன்,
'இனி யார் கொடுக்குற அல்வாவும் எனக்கு வேணா! நீங்களே எல்லா அல்வாவையும் சாப்பிடுங்க' என்று புலம்பியாவரே, நாகராஜனின் வீட்டில் உள்ள சின்ன கட்டிலில் அபப்டியே சரிந்து விழ, அதே சமயம் மின்சாரமும் ஒளிர்ந்தது.
வெளிச்சம் வந்ததை கூட அறியாமல் கதிர்வேலன் அதித மது போதையில் மயங்கி இருக்க,
' மீனா! நீங்க ஏன் இங்க வந்திங்க? முதல்ல நீங்க வீட்டுக்கு போங்க' என்று கண்டிப்பான குரலில் சொன்ன ரோஜாவிற்கு தன் இளைய அண்ணனை இந்த நிலையில் அவர்கள் பார்ப்பது பிடிக்காமல் போனது.
'மீனா நீ வா நம்ம போகலாம்' என்ற முல்லை மயங்கி இருந்த கதிர்வேலனை கேள்வியாகவே பார்த்தப்படி அங்கிருந்து வெளியேற, முல்லையை தொடர்ந்து மீனாவும் கண்கள் கலங்கிய நிலையில் வெளியேறி இருந்தாள்.
மீனாவும் முல்லையும் சென்றதும்,'நாகா, வாத்தியை தூக்கி உக்கார வையுங்க' என்றவள், தன் அண்ணனுக்கே அவளே இரவு உணவை ஊட்டி விட,
'இவருக்கு யார் இவ்வளவு சாராயத்தை வாங்கி கொடுத்தாங்க' என்று கோவமாக கேட்டாள்.
'யார் வாங்கி தரணும்! அதான் வீரன் சூரன்னு மூலை மூலைக்கு கடையில சாராயம் விக்கறாங்களே! உங்க அண்ணனுக்கு போய் வாங்கிக்க தெரியாதாக்கும்!' என்று நாகா அலுப்பாக சொல்ல,
'இவரை குடிக்க வைத்து நீங்க வேடிக்கை பாக்குறீங்களா' என்று கோவமாக கேட்டாள் ரோஜா.
'ஹையோ சின்னமா! ஆமா ஆமா உங்க அண்ணன் குழந்தை பாருங்க நான் அவரை குடிக்க வச்சி வேடிக்கை பார்க்க' என்று நாகராஜன் கிண்டலான தோரணையில் பதில் கொடுக்க,
'விடியட்டும் உங்க நண்பனுக்கு இருக்கு கச்சேரி' என்ற ரோஜா மயக்கத்தில் உறங்கிக்கொண்டு இருக்கும் தன் அண்ணனை முறைத்த வண்ணமாக நாகராஜனின் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தாள்.
**************
ரோஜா, முல்லை, மீனா என்று மூவரும் ஒரே அறையில் ஒன்றாக படுத்து இருக்க,
'முல்ல... இன்னைக்கு கதிர் மாமா உன்கிட்ட அப்படி பேசுனதை எல்லாம் ஜீவா மாமாகிட்ட நீ சொல்லிடாத' என்று கெஞ்சும் குரலில் கேட்டுக்கொண்டாள் மீனா.
'ஏன் மீனா! இதெல்லாம் நீ எனக்கு சொல்லனுமா என்ன! நான் அதெல்லாம் ஜீவா மாமாகிட்ட சொல்ல மாட்டேன்' என்று முல்லை சொல்ல,
'நாளைக்கு வேற அம்மா வந்து என்ன லந்து பண்ண போன போகுதோ' என்று கவலையாக சொன்னாள் மீனா.
'அதெல்லாம் கவலைப்படாத மீனா! நாளைக்கு கஸ்தூரி அத்த வந்தா ஐயன் அவங்ககிட்ட நல்ல முறையில பேசி உன்னை இந்த வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு வருவாரு' என்று ரோஜா சொல்ல,
இவர்கள் பேசும் வார்த்தையில் கவனத்தை செலுத்திடாத முல்லை,கழுத்தில் இருக்கும் இதய வடிவிலான சங்கிலியை தன் கைக்கொண்டு சுற்றியப்படியே ஆழ்ந்த யோசனையில் முழுகி இருந்தாள்.
'என்ன முல்ல... என்ன யோசனை' என்று மீனா கேட்க,
'அப்பா எப்படி இருப்பாருனு தெரியல' என்று கவலையாக முல்லை சொல்ல,
'மாமாவுக்கு ஒரு நாள் அவங்களை பற்றி எல்லாம் தெரிய வரும் முல்லை. அப்போ அவரே உன்கிட்ட வந்து பேசுவாரு' என்று முல்லையை சமாதானம் செய்தாள் ரோஜா.
இவர்கள் மூவரும் ஒன்றாக பேசியப்படியே படுத்து இருக்க, 'ஆமா ரோஜா, அந்த ஒத்த செருப்பு எப்படி இருக்கான்' என்று சம்மதமே இல்லாமல் கேட்டாள் மீனா.
'என்ன ஒத்த செருப்பா! யாரு டி அது' என்று முல்லை கேட்க,'அவன் ஒரு விளங்காதவன் முல்ல, நம்ம ரோஜா கோவிலுக்கு போகும் போதும் வரும் போதும் நான் உன்னை காதலிக்கிறேன் என்னை கல்யாணம் பண்ணிக்குறியான்னு கேட்டு ரோஜாவை இம்சை பண்ணுவான்' என்றாள் மீனா.
'சரி... அது என்ன ஒத்த செருப்புனு ஒரு பேர்!?' என்று முல்லை சந்தேகமாக கேட்க,
'நம்ம ரோஜா கோவில் போகும் போது, அவ ஒரு கால் செருப்பை இவன் களவாடிக்கிட்டு போயிட்டான், அதான் அவனுக்கு அந்த பேர்' என்று சொல்லி மீனா வாய்விட்டு சிரிக்க,
'அடப்பாவி, அந்த ஒரு கால் செருப்பை வச்சி அவன் என்ன பண்ண போறான்' என்று கேட்டு முல்லையும் அழகாய் சிரித்துக்கொண்டாள்.
இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து சிரித்து இருக்க, இப்போது ரோஜா ஆழ்ந்த சிந்தனையில் முழுகி இருந்தாள்.
'என்ன ரோஜா! என்னடி ஆச்சு?!' என்று அவளின் மாற்றத்தை பார்த்த முல்லை விசாரிக்க,'என்ன ரோஜா! அந்த ஒத்த செருப்பை உனக்கு பிடித்து இருக்கா' என்று போட்டு வாங்கினாள் மீனா.
'அப்படியா ரோஜா! உனக்கு அவரை பிடித்து இருக்கா! நாங்க வேணும்னா மாமாகிட்ட பேசி உனக்கு அவர்கூட கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணவா!?' என்று முல்லை கேட்க,
'என் பிரச்சனை தெரிந்தால் ஒத்த செருப்பா இருந்தாலும் சரி,ஒத்த காது கம்மலா இருந்தாலும் சரி, யாரும் என்னை கல்யாணம் பண்ண முன் வர மாட்டாங்க' என்ற ரோஜா, வேறு பக்கம் திரும்பி படுத்துக்கொண்டவளை பாவமாக பார்த்தார்கள் மீனாவும் முல்லையும்.
'என்ன முல்ல இவ இப்படி சொல்லுறா' என்று ரோஜாவை சுட்டிகாட்டி மீனா கேட்க,
'நம்ம தான் ரொம்ப பேசிட்டோமோ? ஆமா ரோஜா இப்போ எல்லாம் கோவிலுக்கு போகிறாளா!?' என்று முல்லை கேட்க,
'பூஜை நடக்காத சமயம் மட்டும் போய் விளக்கு போட்டுட்டு வந்துடுவாள்' என்று மீனா சொன்னாள்.
மீனாவும் முல்லையும் மாறி மாறி ரோஜாவை நினைத்து வருத்தம்க் கொண்டு இருக்க,
'இங்க பாருங்க! என் பிரச்சனையை நினைத்து எனக்கு எந்த கவலையும் இல்லை, என்னை நினைத்து நீங்க கவலை படாமல்,ஒழுங்கா படுத்து தூங்குங்க.நாளைக்கு வெள்ளன எந்திரிக்கணும்' என்ற ரோஜா மீண்டும் கண்களை மூடிக்கொள்ள,
மீனாவும் முல்லையும் அவளுடனே சேர்ந்து அதே கட்டில் படுத்துக் கொண்டார்கள்.
கதிர்வேலனின் அணைப்பில் இருக்கும் முல்லையின் அஞ்சன விழிகளில் KM
'சொல்லுடி செல்லம்! இப்போவாது உனக்கு இந்த மாமன் காதல் புரியுதா!' என்று கதிர்வேலன் கேட்க,
"டேய் டேய் கதிரு என்னடா பண்ற' என்று தலைத்தெரிக்க ஓடி வந்த நாகராஜன், தன் நண்பனை தன் வசம் இழுத்தான்.
நாகா இழுத்த வேகத்தில்,'ஏன்டா பாவிங்களா! என் காதலிக்கிட்ட இருந்து என்னை பிரிக்கறீங்க!' என்று கத்தியப்படி நிலை தடுமாறி கீழே விழ போன கதிர்வேலனை முல்லையே தாங்கி பிடித்துக்கொள்ள,
'ஐயோ முல்லை! நான்னு நினைத்து தான் மாமா உன்கிட்ட இப்படியெல்லாம் பேசிகிட்டு இருக்காரு, நீ எதுவும் தப்பா நினைச்சுக்காத' என்று மீனா சொல்ல,
எப்படியோ மீனாவே தப்பாக புரிந்துகொண்டு,சரியாக சூழ்நிலையை சமாளித்தவளை பார்த்து ரோஜாவுக்கு போன உயிர் அப்போது தான் திரும்ப வந்தது.
மின்சாரம் தடைப்பட்ட காரணத்தால் தான் ஆள் மாறி மீனா என்று எண்ணி முல்லையிடம் கதிர்வேலன் காதல் வசனம் பேசினார் என்று நினைத்த முல்லையுடன் மீனாவும் இருட்டில் நின்றுக் கொண்டு இருக்க,
'மாமா... ஏன் மாமா குடிச்சு குடிச்சு உன் உடம்ப நீயே இப்படி கெடுத்துக்குற' என்று மீனா உண்மையான காதலுடன் கதிர்வேலனை பார்த்து சஞ்சலம் அடைந்தாள்.
இருளின் கருமையை அகற்ற நாகராஜன் மெழுகு வத்தியை எடுத்துக்கொண்டு இவர்கள் அருகே வர,
'ஏய் கஸு... நீ ஏன் இங்க வந்த!?' என்று மீனாவை பார்த்து குடிப்போதையில் கேட்டார் கதிர்வேலன்.
'என்ன கஸுவா!? யாரு மாமா கஸு!?' என்று மீனா கேட்க,
'நீ தானே கஸ்தூரி அத்த!... அப்போ நீ தான் கஸு' என்று மீனாவை கஸ்தூரியாக நினைத்து புலம்ப ஆரம்பித்து இருந்தார் கதிர்வேலன்.
'ஏன் கதிரு! மீனா அம்மா கஸ்தூரியை கஸுன்னு கூப்பிடுற, அப்போ முல்லை சித்தி பார்வதியை பசுன்னு கூப்பிடுவியா!?' என்று நாகராஜன் கேட்க,
'வாவ்!! வாட் a sense of humour நாகா உனக்கு' என்று கை தட்டி சிரித்த கதிர்வேலனுக்கு மற்ற நாளை விடவே இன்று போதை அதிகமாகி இருக்கிறது என்று ரோஜா அறிந்துகொண்டாள்..
'என்ன ரோஜா இது! ஏன் மாமா சார் இப்படி குடிக்கிறாரு. இவரு இப்படி எல்லாம் பண்ணா மீனாவை இவருக்கு கல்யாணம் பண்ணி தர கஸ்தூரி சித்தி எப்படி சம்மதிப்பாங்க!?' என்று முல்லை கவலையாக கேட்டதும், மீனா மேலும் கண்கள் கலங்கினாள்.
'ஹே... அவங்க யாரு எனக்கு கல்யாணம் பண்ணி தர, நான் நினைச்சா இப்போவே... இப்போ.... இப்போவே உன் கழுத்துல தாலி கட்டுறேன் பார்க்குறியா!' என்று கதிர்வேலன் முல்லையை பார்த்து கேட்கும் கேள்விகள் எல்லாம் மீனாவிடம் அவர் பேசியதாக காட்சிகள் அமைய,
'பார்த்தியா முல்ல... என் மாமாவுக்கு என் மேல உள்ளுக்குள்ள நிறைய பாசம் இருக்க தான் செய்யுது' என்ற மீனாவின் முகத்தில் அப்போது தான் புன்னகை பூத்தது.
கதிர்வேலன் இன்று அளவுக்கு அதிகமாக குடித்ததால், தன்னிலை மறந்து பிரச்சனை செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணிய ரோஜா,
யாரும் தன் இளைய அண்ணனை இந்த நிலையில் காணக்கூடாது என்று நினைத்தவள், எப்படியாவது கதிர்வேலனை நாகராஜனின் வீட்டில் உறங்க வைக்க முயற்சி செய்தாள்.
ஆனால் கதிர்வேலனோ யார் பேச்சையும் கேட்கமால் மேலும் குடித்துவிட்டு பிரச்சனை செய்துக்கொண்டு இருக்க,'மாமா! ஏன் மாமா இப்படி பண்றிங்க! நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாத கவலையில தானே இப்படி குடிக்கிறிங்க! கவலை படாதீங்க மாமா, என் உயிரை கொடுத்தாவது நான் நம்ம கல்யாணத்தை நடக்க வைப்பேன்' என்றாள் மீனா.
'வாட் நான்சென்ஸ் யூ ஆர் டாக்கிங்!! நீ உயிரை கொடுத்தா உனக்கு எப்படி டி கல்யாணம் நடக்கும் மக்கு மீனா!' என்று கதிர்வேலன் மேலும் தள்ளாடிய நிலையில் கேட்க,
'ஆமா இல்ல! சாரி மாமா... நான் எப்பாடு பட்டாவது நம்ம கல்யாணத்தை நடத்த என் அம்மாவை சம்மதிக்க வைக்கிறேன்' என்று மீனா சொல்ல,
'அதெல்லாம் நீ ஒரு புண்ணாக்கும் பண்ண வேண்டாம், காலையில நீ பண்ண வேலைக்கே உன் மேல நான் கொலை கடுப்புல இருக்கேன், ஒழுங்கா இங்க இருந்து ஓடிப் போயிடு' என்று மீனா விஷம் குடித்த நிகழ்வை நினைவில் கொண்டு கதிர்வேலன் கோபத்துடன் அவளை வசைப்பாடிக்கொண்டு இருந்தார்.
கதிர்வேலன் திட்டியதும் மீனா மேலும் கண்கள் கலங்க,'அழாத மீனா! ஆனாலும் நீ பண்ண தப்புக்கு தானே மாமா சார் உன்னை திட்டுறாரு, இனிமே அப்படி பண்ண மாட்டேன்னு சொல்லி! இந்த வாழையிலை அல்வாவை அவருக்கு கொடுத்துடு' என்றாள் முல்லை.
முல்லையின் வார்த்தையை கேட்ட மீனா, தன் கண்ணீரை துடித்துக்கொண்டவள்,'சாரி மாமா! இனிமே நான் இந்த மாதிரி எல்லாம் பண்ண மாட்டேன், சரி இந்தாங்க அல்வா சாப்பிடுங்க' என்று மீனா சொல்ல,'என்ன அல்வா வா!?' என்று புருவத்தை உயர்தினார் கதிர்வேலன்.
'ம்... அல்வா தான். முல்லை தான் பண்ணிக்கொடுத்தாள். சாப்பிடுங்க' என்று மீனா தன் கையில் இருந்த இனிப்பை கதிர்வேலனிடம் நீட்ட,
'அவ தான் எனக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடியே அல்வா கொடுத்துட்டாளே!' என்ற கதிர்வேலன்,
'இனி யார் கொடுக்குற அல்வாவும் எனக்கு வேணா! நீங்களே எல்லா அல்வாவையும் சாப்பிடுங்க' என்று புலம்பியாவரே, நாகராஜனின் வீட்டில் உள்ள சின்ன கட்டிலில் அபப்டியே சரிந்து விழ, அதே சமயம் மின்சாரமும் ஒளிர்ந்தது.
வெளிச்சம் வந்ததை கூட அறியாமல் கதிர்வேலன் அதித மது போதையில் மயங்கி இருக்க,
' மீனா! நீங்க ஏன் இங்க வந்திங்க? முதல்ல நீங்க வீட்டுக்கு போங்க' என்று கண்டிப்பான குரலில் சொன்ன ரோஜாவிற்கு தன் இளைய அண்ணனை இந்த நிலையில் அவர்கள் பார்ப்பது பிடிக்காமல் போனது.
'மீனா நீ வா நம்ம போகலாம்' என்ற முல்லை மயங்கி இருந்த கதிர்வேலனை கேள்வியாகவே பார்த்தப்படி அங்கிருந்து வெளியேற, முல்லையை தொடர்ந்து மீனாவும் கண்கள் கலங்கிய நிலையில் வெளியேறி இருந்தாள்.
மீனாவும் முல்லையும் சென்றதும்,'நாகா, வாத்தியை தூக்கி உக்கார வையுங்க' என்றவள், தன் அண்ணனுக்கே அவளே இரவு உணவை ஊட்டி விட,
'இவருக்கு யார் இவ்வளவு சாராயத்தை வாங்கி கொடுத்தாங்க' என்று கோவமாக கேட்டாள்.
'யார் வாங்கி தரணும்! அதான் வீரன் சூரன்னு மூலை மூலைக்கு கடையில சாராயம் விக்கறாங்களே! உங்க அண்ணனுக்கு போய் வாங்கிக்க தெரியாதாக்கும்!' என்று நாகா அலுப்பாக சொல்ல,
'இவரை குடிக்க வைத்து நீங்க வேடிக்கை பாக்குறீங்களா' என்று கோவமாக கேட்டாள் ரோஜா.
'ஹையோ சின்னமா! ஆமா ஆமா உங்க அண்ணன் குழந்தை பாருங்க நான் அவரை குடிக்க வச்சி வேடிக்கை பார்க்க' என்று நாகராஜன் கிண்டலான தோரணையில் பதில் கொடுக்க,
'விடியட்டும் உங்க நண்பனுக்கு இருக்கு கச்சேரி' என்ற ரோஜா மயக்கத்தில் உறங்கிக்கொண்டு இருக்கும் தன் அண்ணனை முறைத்த வண்ணமாக நாகராஜனின் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தாள்.
**************
ரோஜா, முல்லை, மீனா என்று மூவரும் ஒரே அறையில் ஒன்றாக படுத்து இருக்க,
'முல்ல... இன்னைக்கு கதிர் மாமா உன்கிட்ட அப்படி பேசுனதை எல்லாம் ஜீவா மாமாகிட்ட நீ சொல்லிடாத' என்று கெஞ்சும் குரலில் கேட்டுக்கொண்டாள் மீனா.
'ஏன் மீனா! இதெல்லாம் நீ எனக்கு சொல்லனுமா என்ன! நான் அதெல்லாம் ஜீவா மாமாகிட்ட சொல்ல மாட்டேன்' என்று முல்லை சொல்ல,
'நாளைக்கு வேற அம்மா வந்து என்ன லந்து பண்ண போன போகுதோ' என்று கவலையாக சொன்னாள் மீனா.
'அதெல்லாம் கவலைப்படாத மீனா! நாளைக்கு கஸ்தூரி அத்த வந்தா ஐயன் அவங்ககிட்ட நல்ல முறையில பேசி உன்னை இந்த வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு வருவாரு' என்று ரோஜா சொல்ல,
இவர்கள் பேசும் வார்த்தையில் கவனத்தை செலுத்திடாத முல்லை,கழுத்தில் இருக்கும் இதய வடிவிலான சங்கிலியை தன் கைக்கொண்டு சுற்றியப்படியே ஆழ்ந்த யோசனையில் முழுகி இருந்தாள்.
'என்ன முல்ல... என்ன யோசனை' என்று மீனா கேட்க,
'அப்பா எப்படி இருப்பாருனு தெரியல' என்று கவலையாக முல்லை சொல்ல,
'மாமாவுக்கு ஒரு நாள் அவங்களை பற்றி எல்லாம் தெரிய வரும் முல்லை. அப்போ அவரே உன்கிட்ட வந்து பேசுவாரு' என்று முல்லையை சமாதானம் செய்தாள் ரோஜா.
இவர்கள் மூவரும் ஒன்றாக பேசியப்படியே படுத்து இருக்க, 'ஆமா ரோஜா, அந்த ஒத்த செருப்பு எப்படி இருக்கான்' என்று சம்மதமே இல்லாமல் கேட்டாள் மீனா.
'என்ன ஒத்த செருப்பா! யாரு டி அது' என்று முல்லை கேட்க,'அவன் ஒரு விளங்காதவன் முல்ல, நம்ம ரோஜா கோவிலுக்கு போகும் போதும் வரும் போதும் நான் உன்னை காதலிக்கிறேன் என்னை கல்யாணம் பண்ணிக்குறியான்னு கேட்டு ரோஜாவை இம்சை பண்ணுவான்' என்றாள் மீனா.
'சரி... அது என்ன ஒத்த செருப்புனு ஒரு பேர்!?' என்று முல்லை சந்தேகமாக கேட்க,
'நம்ம ரோஜா கோவில் போகும் போது, அவ ஒரு கால் செருப்பை இவன் களவாடிக்கிட்டு போயிட்டான், அதான் அவனுக்கு அந்த பேர்' என்று சொல்லி மீனா வாய்விட்டு சிரிக்க,
'அடப்பாவி, அந்த ஒரு கால் செருப்பை வச்சி அவன் என்ன பண்ண போறான்' என்று கேட்டு முல்லையும் அழகாய் சிரித்துக்கொண்டாள்.
இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து சிரித்து இருக்க, இப்போது ரோஜா ஆழ்ந்த சிந்தனையில் முழுகி இருந்தாள்.
'என்ன ரோஜா! என்னடி ஆச்சு?!' என்று அவளின் மாற்றத்தை பார்த்த முல்லை விசாரிக்க,'என்ன ரோஜா! அந்த ஒத்த செருப்பை உனக்கு பிடித்து இருக்கா' என்று போட்டு வாங்கினாள் மீனா.
'அப்படியா ரோஜா! உனக்கு அவரை பிடித்து இருக்கா! நாங்க வேணும்னா மாமாகிட்ட பேசி உனக்கு அவர்கூட கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணவா!?' என்று முல்லை கேட்க,
'என் பிரச்சனை தெரிந்தால் ஒத்த செருப்பா இருந்தாலும் சரி,ஒத்த காது கம்மலா இருந்தாலும் சரி, யாரும் என்னை கல்யாணம் பண்ண முன் வர மாட்டாங்க' என்ற ரோஜா, வேறு பக்கம் திரும்பி படுத்துக்கொண்டவளை பாவமாக பார்த்தார்கள் மீனாவும் முல்லையும்.
'என்ன முல்ல இவ இப்படி சொல்லுறா' என்று ரோஜாவை சுட்டிகாட்டி மீனா கேட்க,
'நம்ம தான் ரொம்ப பேசிட்டோமோ? ஆமா ரோஜா இப்போ எல்லாம் கோவிலுக்கு போகிறாளா!?' என்று முல்லை கேட்க,
'பூஜை நடக்காத சமயம் மட்டும் போய் விளக்கு போட்டுட்டு வந்துடுவாள்' என்று மீனா சொன்னாள்.
மீனாவும் முல்லையும் மாறி மாறி ரோஜாவை நினைத்து வருத்தம்க் கொண்டு இருக்க,
'இங்க பாருங்க! என் பிரச்சனையை நினைத்து எனக்கு எந்த கவலையும் இல்லை, என்னை நினைத்து நீங்க கவலை படாமல்,ஒழுங்கா படுத்து தூங்குங்க.நாளைக்கு வெள்ளன எந்திரிக்கணும்' என்ற ரோஜா மீண்டும் கண்களை மூடிக்கொள்ள,
மீனாவும் முல்லையும் அவளுடனே சேர்ந்து அதே கட்டில் படுத்துக் கொண்டார்கள்.