• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சதாரா!

வழக்கமாய் எழும் நேரம் தாண்டிச்சென்றே எழுந்தவளுக்கு, இரவெல்லாம் அழுதபடியே தூங்கியது, தற்பொழுது தலை வலித்தது.குளித்து ரெடியாகி கீழே வந்தவள், அம்மா என்று கூப்பிட ,எந்த சத்தமும் இல்லை.


அம்மா தாமரை என்று விஸ்வத்தின் குரல் கேட்டு திரும்பி பார்க்க, பூரணியும், மாறனும் சொந்தக்காரவங்க ஒருத்தருக்கு உடம்பு முடியலைனு போயிருக்காங்க.

அவங்க வர ஈவ்னிங் ஆகிடும்மா.

நீ வந்த பிறகு உன் கிட்ட சொல்ல சொல்லிட்டு தான் போனாள்மா.

அப்படியா அங்கிள் என்றவள், தலை வலிக்குது, நான் காஃபி போட்டுக்கட்டுமா என்று தயங்கியவாரு கேட்க,எனக்கும் சேர்த்து போடேன்.

ம்ம் என்றவள் இதோ என்று இருவருக்கும் காஃபியை தயாரித்தவள், இரண்டு கப்பில் எடுத்துக்கொண்டு வந்து, அங்கிள் என்று கூப்பிட்டுக்கொண்டே வர,விஸ்வத்தை காணும்.

எங்கே போனாங்களென்று சுற்றி பார்த்தவள், ஒரு வேளை ரூமிற்குள் இருப்பாங்களோ என்று கதவை தட்ட, எந்த சத்தமும் இல்லை.

காஃபி வேறு ஆறிடுமே என்றபடியே வாசல் பக்கம் வந்து பார்க்க, சில அடி தள்ளி நின்று அவர் ஃபோனில் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.

புல் தரை கார்டனில் போட்டிருக்கும் சேரின் அருகில் வந்தவள்,அங்கிருந்த டீப்பாயின் மேலே காஃபியை வைக்கும் போது, அந்த லேப்டாப்பில் தெரிந்த உருவத்தை பார்த்து வி. வி என்று அதிர்ந்தாள்.

வி. வி,என்று சொல்லும் போது, இவ்வளவு நேரம் போன் பேசி விட்டு திரும்பி வந்தவரின் காதில் விழுந்தது.

தாமரை நீ என்ன சொன்ன என்க, அங்கிள் இவங்க,இவங்க என்று வி. வி. போட்டோவை பார்த்து கேட்க, என்னோட மனைவி வினிதா விஸ்வம்.

இப்போ உயிரோட இருக்காளா?, இல்லையானே தெரியலை? என்று சொல்லி விஸ்வம் கண் கலங்க, என்னாஆஆஆஆஆ என்று அதிர்ந்து போனவள் அங்கிள் நீங்க என்ன சொல்லுறீங்க?, அப்போ பூரணி அம்மானு அவள் தடுமாற, பூரணிக்கு தெரியும் மா.

பசங்களுக்கு மட்டும் தான் தெரியாது என்றவர், தனது கடந்த காலத்தை சொல்ல தொடங்கினார்.

என்னோட பூர்வீகம் நீலகிரி தான் என்றவர்,முப்பது வருடத்திற்கு முன்பு டெக்ஸ்டைல்ஸ் கோர்ஸ் சம்பந்தமாக படிக்க, நான் லண்டனுக்கு போயிருந்தேன்.அங்கு என் கூட படித்தவள் தான் வினிதா வில்லியம்ஸ்.
முதலில் இருவரும் நண்பர்களாக தான் இருந்தோம். பிறகு இருவருக்கும் நட்பை தாண்டி காதல் வந்து விட்டது.

மூன்று வருஷம் படிப்பு முடிஞ்சிது, தாலி கட்டிக்கொள்ளாமல், கணவன் மனைவியாக தான் வாழ்ந்தோம்.
நான் படிப்பு முடிந்து ஊருக்கு கிளம்பும் போது, அங்கு உள்ள கோயிலில் ஹிந்து முறைப்படி அவளை கல்யாணம் பண்ணிட்டு தான் இந்தியாவிற்கு வந்தேன்.

இங்கு வந்து எங்க அப்பாவோட பிஸ்னஸை பார்த்து கிட்டு, நேரம் வரும் போது வினிதா பற்றி எங்க அப்பா,அம்மா கிட்ட விஷயத்தை சொல்லலாமென்று இருக்கும் போது, திடீர்னு எங்க அப்பாக்கு உடம்பு முடியாமல் போய் விட்டது.

அப்பா சாகுறதுக்கு முன்பு உன்னை குடும்பமா பார்க்க ஆசைப்படுறேன் என்க..

நான் வேறொரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டேன்னு சொல்ல வரும் போது, எனக்கு தாலி பிச்சை போடுப்பானு எங்கம்மா கதறி அழுதாங்க.சூழ்நிலை கைதியானேன். என்ன பண்ணுறதுனு புரியலை.

நாளுக்கு நாள் அப்பாவோட உடல் நிலை மோசமாவது தெரிந்து, அம்மாவோட சொந்தக்கார பொண்ணான பூரணியை கட்டி வச்சாங்க.கல்யாணம் முடிந்த இரண்டு நாளில் எங்க அப்பா இறந்துட்டாங்க.

ஆறு மாசம் வரை நான் வினிதாவ தொடர்பு கொள்ளவேயில்லை.

பூரணியோட சொந்த ஊர் பூனா தான்.
அம்மாவும் கொஞ்ச நாளில் இறக்க, பூரணி கிட்ட நான் விஷயத்தை சொன்னேன்.

அழுதவள் சரி முதல்ல போய் வினிதாவ நேரில் பார்த்து பேசுங்கனு சொன்னாள்.
நானும் திரும்ப லண்டன் போனேன், ஆனால் அவள் அங்கு இல்லை.

மூன்று மாதத்திற்கு முன்னாடியே வினிதாவோட அம்மா இறந்து போய்ட்டதாகவும், அன்றைக்கே அங்கே இருந்து போய்விட்டதாக சொன்னாங்கள்.

அன்றிலிருந்து இப்போ வரை அவளை பற்றி எதுவும் தெரியலைனு விஸ்வம் கண் கலங்க, ஆன்ட்டி சிங்கப்பூரில் இருக்காங்க.தி பேமஸ் டிசைனர் வி. வி. தான் ஆன்ட்டி என்று தாமரை சொல்ல, என்னாயென இப்பொழுது விஸ்வம் அதிர்ந்து போனார்.

என் வினி உயிரோட இருக்காளா?, சொல்லுமா?, உனக்கு எப்படி அவளை தெரியுமென்று பதறினார்.

என்னை இங்க அனுப்பி வைத்ததே ஆன்ட்டி தான். அதுவும் இல்லாமல் லீனா அக்கா, ஆன்ட்டி கிட்ட தான் அசிஸ்டென்டா வேலை பாக்குறாங்கள்..

என்னம்மா சொல்லுறனு விழி பிதுங்கி நின்றவரை பார்க்க பாவமாக இருந்தது. ஒரு நிமிஷம் என்றவள், மாடியில் இருக்கும் தனது லேட்டாப் மற்றும் ஃபோனை எடுத்து வந்து, வி. வி. நம்பருக்கு வீடியோ கால் பண்ண,அட்டென் பண்ணிய வி. வி. ஏஞ்சல் என்றார்.

என்ன இந்த நேரத்தில், அதும் வீடியோ கால் என்க, லேப்டாப்பை விஸ்வம் பக்கம் திருப்ப,நீண்ட வருடங்களுக்கு பின்னர் பார்த்துக்கொண்ட இருவரும், அதிர்ந்தனர்.

விஷு என்று வி. வி சொல்ல,வினி என்று விஸ்வம் சொன்னதைக் கேட்டு அந்த பக்கத்தில் இருந்து கால் கட் ஆனது.மீண்டும் தொடர்பு கொள்ள ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.

அம்மாடி தாமரை எனக்கு ஒரு விஷயத்தை சொல்லு?.

உனக்கு எப்படி வினிய தெரியும்?.

தாமரையும் 15 வருடங்களுக்கு முன்பு நடந்ததை பற்றி விஸ்வத்திடம் சொல்ல தொடங்கினாள்.

ஏழு வயது அண்ணன் மகள் தாமரையோடு நீலகிரிக்கு வந்து சேர்ந்தார் வேதா.அங்கிருந்த மலைவாழ் மக்கள், வேதா யாரென்று தெரிந்து ஆனந்த தாண்டவமாடினர்.

ஏனென்றால் அந்த மலைவாழ் மக்களுக்கு சேவை செய்ய, அந்த கிராமத்திற்கு யாருமே இதுவரை வருவதில்லை.

இப்போ இருக்கும் வசதி போல அப்பொழுது, போக்குவரத்து வசதி இல்லாததே முதல் காரணம்.

பின்னர் அவர்களெல்லாம் சேர்ந்து வேதா தங்குவதற்காக அழகான குடிலை செய்து கொடுத்தனர்.

நாட்கள் செல்ல செல்ல வேதாவின் குணம் ,அங்கு இருக்கும் மக்களிடம் நல்ல பெயரை வாங்கித் தந்தது.
அரசாங்கத்திடம் பேசி சிறு சிறு வசதிகளையும் அவர்களுக்கு செய்து கொடுத்தார்.

மலை கிராமத்திற்கு இதுவரை யாருமே பணிபுரிய வரவில்லை.வேதாவே விரும்பி போனதால், வேதா கேட்பதை செய்து கொடுக்க சொல்லி அதிகாரிகளும் உத்தரவிட்டனர்.

பின்னர் பிள்ளைகளுக்கு சிறிய பள்ளிக்கூடமும் அரசாங்கம் அவர்களுக்கு கட்டி கொடுத்தது.

அதே போல் மருத்துவமனையும் பழைய கூரையை பிரித்து விட்டு சிமெண்ட் கட்டிடமாக மாறியது.வேதா வந்த ஒரு வருடத்திற்குள் அந்த மலை கிராமமே புதிய தோற்றத்தில் மாறியதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர்.

சுற்றுலா தளம் அருகில் என்பதால் நிறைய பேர் வந்து பார்த்து செல்வார்கள்.

இப்படி ஒரு நாள் வேதாவும் தாமரையும் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அங்கிருந்த மலையை நோக்கி யாரோ ஒரு பெண் வேகமாக போவது தாமரைக்கு தெரிந்தது.

வேதா கூட வந்தவள், அந்தப் பெண் போகும் திசையை நோக்கி ஓட, தாமரை எங்கே போறனு வேதாவும் பின்னாடியே போனார்.

மலையின் மேல் ஏறிய அந்த இளம் பெண், குதிக்க போகும் போது அவள் கையை தாமரை எட்டிப்பிடிக்க, பேலன்ஸ் பண்ண முடியாமல் இருவரும் தடுமாறி பள்ளத்தில் உருண்டனர்.

ஐயோ காப்பாத்துங்க என்று வேதா கத்தி கதற ,அந்த வழியாக வந்தவர்கள் இவர் குரலை கேட்டு ஓடி வந்தனர்.

பள்ளத்தில் விழுந்து கிடந்தவர்களை கை நீட்டி காட்டினார். பின்னர் அவர்கள் கீழே இறங்கி பார்க்கும் போது, வினிக்கு கை கால்களில் நான்கு அடிபட்டு இருப்பது தெரிந்தது.

தாமரை அங்கிருந்த புல் மண்டிய இடத்தில் விழுந்ததால் அவளுக்கு பெரிதாக எந்த காயமும் இல்லை. அதிர்ச்சியில் மட்டுமே அவள் மயங்கி இருப்பது தெரிந்தது.

இருவரையும் சிரமப்பட்டு மேலே தூக்கிக்கொண்டு வேதா இருக்கும் குடிலுக்கு வந்தார்கள்.

நர்சாக இருந்தாலும் சற்று முன்னர் நடந்த அதிர்ச்சியால் வேதாவிற்கு என்ன பண்ணுவதென்று ஒன்னும் புரியவில்லை.

மலைவாழ் மக்களில் இருந்த வைத்தியர் தான் வினியின் கை, கால்களுக்கு கட்டு போட்டு, உள்ளுக்குள் பச்சிலையையும் கொடுத்தார்.

வினியின் கை கால்கள் சரியாக இரண்டு வாரம் ஆனது.அவரிடம் வேதா எதுவுமே கேட்கவில்லை, ஆனால் நன்கு கவனித்துக் கொண்டார்.

பள்ளிக்கு போயிட்டு வந்த தாமரை ஒருநாள் வினியிடம் உக்காந்து பேசிக் கொண்டிருக்கும் போது, தற்கொலை தீர்வு இல்லை என்று பள்ளியில் பாடம் எடுத்தது பற்றி சொல்ல, அந்த சிறுபிள்ளையின் வார்த்தை வினியின் மனதிற்குள் ஆழமாக பதிந்தது.

தாமரை உறங்கி விட்டாள் என்பதை பார்த்து,தனது பெயர் வினிதா விஸ்வம் என்றும்,லண்டனிலிருந்து வந்திருப்பதாகவும், தன் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர், இந்தியாவிற்கு வந்து பத்து வருடங்கள் மேலாகுது.

இன்று வருவார், நாளை வருவாறென்று காத்திருந்து வருடம் போய்விட்டதாகவும், அவருடைய ஊர் நீலகிரி என்பது மட்டும் தெரியும்.அதை வைத்து இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்து ஒவ்வொரு ஊராக தேடியும்,அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை.

பெற்றோரும் இல்லை, கணவனை பற்றியும் எதுவும் தெரியவில்லை, இனி எதற்கு வாழனுமென தற்கொலை பண்ணிக்க போகும் போது தான், மலையில் நடந்ததென்று சொல்லி அழுதாள்.

சிறிது நேரம் சென்று வினிதாவின் அழுகை நின்றது.

தற்கொலை பண்ணிக்கொண்டாள் தீர்வு என்று எல்லாரும் நினைத்தால் என்ன ஆவது?.வாழ்க்கையில் உனது லட்சியம் என்ன?, இந்த உலகத்தில் தாய் தந்தை இல்லாதவர்களெல்லாம் வாழவில்லையா? .

இரண்டு கண்ணில்லாதவர்கள், கை கால் இல்லாதவர்கள் உழைத்து வாழும் போது, உனக்கு எதற்கு இந்த முடிவு?.

அதோடு தான் படித்த சைக்காலஜி படிப்பை வைத்து, வினிதாவின் மனதிற்குள் தைரியத்தை உருவாக்கினார்.

அன்றிலிருந்து வினிதாவிடமும் நல்ல மாற்றம் தெரிந்தது. தாமரை ஒவ்வொருவரின் ஆடைகளை உற்று பார்ப்பதை பார்த்த வினிதா, ஏன் அவங்க டிரஸை அப்படி பாக்குறாய்?.

அவங்க டிரஸ் அப்படி இருந்தா நல்லா இருக்கும், இப்படி இருந்தா நல்லா இருக்கும் என்று, அந்த சின்ன வயதில் அவள் சொல்வதை கேட்டு அவளுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை உணர்ந்து கொண்டாள்.

உடனே தாமரையை அழைத்துக் கொண்டு கீழே இருக்கும் டவுனிற்கு சென்றவள் வரைவதற்கான கலர் பென்சில்களையும், வண்ணம் தீட்டுவதற்காக வாட்டர் பெயிண்ட், பேப்பர் சார்டெல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்து, உனக்கு தெரிந்ததை எல்லாம் இதில் வரை என்றாள்.

தாமரையும் தனக்கு தெரிந்ததை வரைந்து இருவரிடமும் காட்ட, அதில் இருக்கும் ஓவியங்களை பார்த்த இருவருக்கும், அதிர்ச்சியாக இருந்தது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சீமக்கரை... சிந்து பிளாஸ்ஃபேக்

ஆமாம் தமிழென்றேன்.


அவரை பார்த்தால் நல்லவர் போல தோன்ற, வீரை சந்தித்ததிலிருந்து, சற்று முன்னர் தப்பித்து வந்தது வரையில், எல்லாம் சொல்லி அழுதேன். அனைத்தையும் கேட்டவர், சரி உங்க வீட்டிற்கு நான் கூப்பிட்டு போறேனென்றார்.

வேண்டாம், இவ்வளவு நேரம் என்னை காணும் என்பது வீட்டினருக்கு அவமானமாகிருக்கும்.ஊர் மக்கள் எல்லாம் தப்பாக தான் பேசுவார்கள். இப்பொழுது நான் போனாலும் ஓடிப்போனவள் வந்து விட்டேனென்று மேலும் அவர்களுக்கு கெட்ட பெயர் தான்.

நான் ஓடினது ஓடிப்போனதாக இருக்கட்டும் .எங்கோ ஆறு, குளத்தில் விழுந்து தற்கொலை பண்ணிக்கிறேன்னு அழவும், ஓங்கி அரைந்து விட்டார்.

அடி வாங்கியதில் நான் அதிர்ந்து பார்க்க, சாகனும் என்பதை தவிர வாழ்ந்து காட்டணுமென்று உனக்கு தோணவில்லையா?

இத்தனை வருடம் உன்னை பெற்று வளர்தவர்களுக்கு, ஏன் உனக்கும் எவ்வளவு கனவு இருக்கும். அந்த கனவை நினைவாக்கனுமென்று உனக்கு எண்ணமில்லையா?

ஹம்..நான் டாக்டராக ஆகனும்னு ஆசைப்பட்டேன் என்க,சரி நான் உன்னை படிக்க வைக்கிறேன்.நம்பிக்கை இருந்தால் என்னோட வீட்டுக்கு வா. அங்கு என் அம்மா மட்டும் தான் இருக்காங்க.நான் மிலிட்ரியில் டிரைனிங் முடிந்து இப்போ தான் வீட்டுக்கு போறேன், அப்புறம் என்னோட பெயர் நீரஜ் என்றார்.

அதைப்போல அவர் வீட்டுக்கு என்னை கூப்பிட்டு போனவர், அவங்க அம்மாகிட்ட நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு. இப்போதைக்கு இவளுக்கு யாருமில்லை, இனி அம்மா அப்பா எல்லாம் நீ தான்மா என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.

அதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது.

வாம்மா என்று என்னை அவங்களும் வீட்டிற்குள் கூப்பிட்டு போனாங்கள்.

வெற்றிவேல் அண்ணனும் நீரஜும் நெருங்கிய நண்பர்கள். அவரிடம் என்னை பற்றி சொல்ல,அவர் அரசியலில் இருப்பதால், அதன் மூலயமாக நம்ப ஸ்கூலிலிருந்து என்னுடைய சர்டிபிகேட் வாங்கி வந்து அசாமில் சேர்த்து விட்டார்.

நானும் நல்ல முறையில் படித்து பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்தேன்.எனக்கு மெடிக்கல் சீட் கிடைத்தது. நான்கு வருட படிப்பு முடிந்ததும், இருவருக்கும் திருமணம் நடந்தது.

எங்கள் திருமணம் முடிந்த சில மாதத்திற்கு பின்னர் வெற்றி அண்ணாவிற்கு கல்யாணம் வந்தது.
தமிழ்நாட்டில் இருந்து தான் பெண் எடுக்கிறார்கள் என்று தெரியும்.
நாங்களும் கல்யாணத்துக்கு போயிருந்தோம்.

மணப்பெண்ணாக மேடைக்கு வருபவளை பார்த்து, நான் அதிர்ந்து போனேன்.இருவருக்கும் பரிசு கொடுப்பதற்காக நானும் நீரஜும் மேடைக்கு போக, அப்பொழுது திலகாவும் என்னை பார்த்து சிந்து என்று அதிர்ந்தாள்.

வெற்றி அண்ணா தான் இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம். வீட்டிற்கு போன பிறகு பேசிக்கலாமென்று திலகா கிட்ட சொல்லிட்டாங்க.

அதேப்போல் எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து, மேலும் இரண்டு நாள் சென்ற பிறகு,நானும் நீரஜும் அங்கு போனோம்.

நடந்த எல்லாவற்றையும் திலகாகிட்ட சொல்லி அழ,, நான் இறந்து விட்டதாக நினைத்து,நீங்க அமாவாசை விரதம் எடுக்குறீங்கனு அவள் தான் சொன்னாள்.சரி அப்படியே இருக்கட்டுமென்று நானும் இருந்துட்டேன்.

எத்தனையோ முறை நீரஜ், அண்ணா, திலகா மூன்று பேரும் இங்க வர கூப்பிட்டாங்க.எனக்கு தான் குற்ற உணர்சியில் மனம் இடம் தரவில்லை.

நவீனுக்கு 5 வயது இருக்கும் போது அவரும் போரில் இறந்துட்டார், மகன் இறந்த கவலையில், என்னோட மாமியாரும் கொஞ்ச நாள்ல இறந்துவிட்டாங்கள்.அதிலிருந்து அண்ணாவும், திலகாவும் தான் எங்கள் இருவருக்கும் அம்மா அப்பா.

அவசரப்பட்டு வயசுக்கோளாரில் நான் செய்த வேலையால், உங்களுக்கு எவ்வளவு பெரிய அவமானத்தை தந்துருக்கேன்னு எனக்கு நல்லா புரியும்.

தெரியாமல் அவன் சொன்னதை நம்பி இப்படி பண்ணிட்டேன், இந்த பாவியை மன்னிச்சிடுங்கனு கதறி அழுதார்.

இதுவரை சிந்து சொல்லியதையெல்லாம் கேட்ட வீட்டினர் அனைவருக்கும், மனதில் தோன்றியது ஒரே ஒரு விஷயம் தான்.அந்த படுபாவியால் வாழ்க்கை நாசமா போகாமல், நீரஜால் இன்று நாலு பேர் மதிக்கும் டாக்டராக இருப்பதை நினைத்து பெருமை பட்டனர்.

சரி போனது போகட்டும், இப்போவாது இந்த உண்மை தெரிந்ததே அதே போதுமென்றார் முத்து.

தனது அண்ணன்கள் இருவரிடம் வந்த சிந்து, பெரியண்ணா முப்பத்தஞ்சி வருஷமா மனசுக்குள்ளே உன்கிட்ட மன்னிப்பு கேட்குறேன்ணா.

நான் படிக்குற வரை நீதான் கூட உட்கார்ந்திருப்ப,நான் உனக்கு உசுருனு தெரியும், புத்தி கெட்டு போய்ட்டேன்ணானு பெருமாள் காலில் விழுந்து கதறி அழ, அவரும் மௌனமாக கண்ணீர் வடித்தார்.

பிள்ளைகள் எல்லாரையும் விட, சிந்துவின் மேல் பாசம் அதிகம்.
சிந்து காணமல் போன பிறகு தான், மற்றவர்களிடம் கடுமையான முகத்தை காட்ட தொடங்கினார்.

மச்சானென்று செல்வம் கூப்பிட, அந்த குரலில் நிமிர்ந்து பார்த்த பெருமாளுக்கு சிந்துவை கண் காட்டினார்.

போதும் மா எந்திரிமானு தங்கையிடம் சொல்லியவர், இப்போவும் மருமகன் கூப்பிட்டு வரைவில்லை என்றால் நீ வந்திருக்க மாட்டே அப்படி தானே?.

அண்ணனின் கேள்விக்கு சிந்துவோ தலைகுனிந்து நின்றார்.

பின்னர் அங்கிருந்தவர்கள் யார் யாரென்று சிந்துவோட வந்த மூவருக்கும் செல்வம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

மாமா என்று சொல்லிக்கொண்டு செல்வத்திடம் வந்த சிந்து, மன்னிச்சிடுங்க என்க, விடுத்தா. எல்லாம் நம்ப அய்யனார் சித்தமென்றார்.

அத்தை, மாமா எல்லாம் எப்படி இருக்காங்க? என்க,யாரும் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர்.

பாரு, கவிதாவிற்கு எத்தனை பசங்கள்?, வா நாம போய் பார்த்துட்டு வரலாமென்று கூப்பிட்டவர், அண்ணா நீயும் திலகாவும் இங்க இருங்க.

நான், நவீன் பாரு மூன்று பேரும் அத்தை வீட்டுக்கு சென்று வருகிறோமென்று சொல்லியவர், இருவரையும் அழைத்துக்கொண்டு, அத்தை வீட்டை நோக்கி சென்றார்.

போகும் வழியெங்கும் சிறு வயது கதைகளை மகனுக்கு சொல்லிக்கொண்டு வந்தார்.மூன்று தெரு தாண்டி வந்தவர்கள், அத்தை வீடு இருக்கும் கீழ தெருக்குள் நுழைந்தனர்.

சிறிது நிமிடத்தில் அங்கு வந்தவர்கள், அத்தை என்று கூப்பிட்டுக்கொண்டே சிந்து உள்ளே போக, அங்கிருந்தவர்கள் சிந்துவை பார்த்து அதிர்ந்து நின்றனர்.

கவிதா என்க, பல வருடங்களுக்கு பிறகு தனது அக்காவை பார்த்தவர், அக்கா என கத்திக்கொண்டே ஓடிவந்து,அவரை கட்டிக்கொண்டு கதறி அழுதார்.

பார்வதி தான் அவர்களை சமாதானப் படுத்தி விட்டு, சுருக்கமாக சிந்துவை பற்றி சொல்ல, கேட்டவர்களும் அய்யனார் தான் உன்னை காப்பாற்றிருக்காரென்றனர்.

பின்னர் நவீனை அங்கிருந்தவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

தனது மாமா வீட்டினரிடமும் சிந்து மன்னிப்பு கேட்டார்.

முடிஞ்சதை விடு என்றவர், தங்கைக்கு எத்தனை பிள்ளைகள் என்க,எதுவும் சொல்லாமல் கவிதா அழ, என்னாச்சுடி?, எதுக்கு பாரு அவள் அழுகுறாள்?

அக்கா பிறகு சொல்லுறேன் என்க, மேலும் சிறிது நேரம் பேசி விட்டு மூவரும் வீட்டிற்கு வந்தனர்.

ஆமா கவிதாவிற்கு குழந்தைகள் இல்லையா?, புள்ளைங்களை பற்றி கேட்டால், எதுவும் சொல்லாமல் அழுறாளேனு சிந்து சொல்ல,அவரிடம் எல்லா விஷயத்தையும் செல்வமும் சொன்னார்.

அனைத்தையும் கேட்ட வெற்றிவேல், கவலை வேண்டாம்.தாமரை ஃபோட்டோ எதாவது இருந்தால் உடனே கண்டு பிடித்து விடலாமென்றார்.

நெசமாவா தம்பினு வள்ளி அப்பாயி கேட்க,ஆமாம்மா, கவலையை விடுங்க. சிந்து போல தான் கவிதாவும் எனக்கு என்றவர், ஃபோட்டோக்கு மட்டும் ஏற்பாடு பண்ணுங்க என்கவும் என்கிட்ட இருக்குங்கப்பா என்றான் கதிர்.

அனைவரும் அவனை பார்க்க, தனது ஃபோனிலிருந்த தாமரையின் ஃபோட்டோவை வெற்றிவேலிடம் காட்ட, என் நம்பருக்கு அனுப்புப்பா என்றவர் அவரின் நம்பரை சொன்னார்.

கதிரும் அவரின் நம்பருக்கு தாமரையின் ஃபோட்டோவை அனுப்பி வைத்தான்.

உடனே தனது போனிலிருந்து யாருக்கோ கால் பண்ணியவர், இந்த ஃபோட்டோவில் இருக்கும் பெண் எங்கே இருந்தாலும் கண்டு பிடிக்குமாறு உத்தரவிட்டார்.

நாளைக்குள் மருமகளை கண்டு பிடிச்சிடலாம் தம்பினு வெற்றிவேல் சொல்ல, ரொம்ப நன்றிங்கப்பா என்றான் கதிர்.

அப்பனுக்கு எதுக்கு கண்ணு நன்றி என்றவர், திலகா என்ன வந்ததில் இருந்து வாயை திறக்கலை, ஊமையாகிட்டியா?

இல்லைங்க இவ்வளவு சொந்தம் இருக்கும் போது, நம்ப புள்ளைங்களுக்கு சொல்லாமலே வளர்த்திட்டோமே, அதை நினைத்தால் தான் கவலையா இருக்கு.

அம்மாடி எல்லாரும் தங்க ரூம் ரெடி பண்ணுங்கனு வள்ளி அப்பாயி சொல்ல, சரிங்கத்தை என்றனர்.

நவீன் கதிர் அறையிலே இருப்பதாக சொல்ல, வெற்றிவேல் திலகாவிற்கு கீழே இருந்த மற்றொரு அறையும், பெற்றோரின் அறையில் சிந்துவும்,எஸ்கார்ட் இருவரும் வளவனோடு தங்கிக்க முடிவானது.

பின்னர் பெண்கள் சேர்ந்து கொண்டு, அனைவருக்கும் உணவை சமைத்து பரிமாறினர்.

எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவதை பார்த்த பிரகாசம் தம்பதிக்கு,கலா குடும்பம் மட்டும் இங்கு இல்லையேனு கவலையானது.

சிந்து சென்றிருந்த நேரத்தில்,வேதா தோட்டத்தில் இருந்ததால் அவருக்கு தெரியவில்லை.சிந்து வந்து சென்ற விஷயத்தை பற்றி அன்பு தான் தனது தங்கைக்கு சொன்னார்.

அதைக்கேட்ட வேதாவிற்கும் சிந்து கிடைத்ததை நினைத்து ஆனந்த அதிர்ச்சியே.

வர்ஷனிடம் சிறிது நேரம் ஃபோனில் பேசி முடித்த நவீன், ரூமிற்குள் வர, அங்கு கதிரோ நிலவை பார்த்தவாறு நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

மச்சி என்று நவீன் கூப்பிட, கதிர் திரும்பி பார்த்தான். உன்னை விட மூன்று வயது நான் பெரியவன் தான் .

உனக்கு எப்படி கூப்பிடனுமோ அப்படியே கூப்பிடு என்றவன், கவலைப்படாதே, நாளைக்கு தங்கச்சிய பற்றி தெரிந்து விடுமென்றான்.

சரிங்க மச்சான் என்று சொல்லும் போதே வேலுவும் அங்கு வர, வாடா தம்பி என்றவன், இப்போ எனக்கு தம்பி தங்கச்சி இருக்காங்க என்று சொல்லி கண் கலங்கினான்.

பின்னர் மேலும் சிறிது நேரம் மூவரும் பேசியவாறு படுத்து விட்டனர்.

வழக்கம் போல விடியல் தொடங்கியது.

சிந்து கிடைச்ச பின்ன, நம்ப அய்யனாருக்கு கிடா வெட்டுறேன்னு வேண்டியிருந்தேன்.இன்றைக்கு நாள் நல்லாருக்கு செய்துவிடலாமானு வள்ளி அப்பாயி கேட்க, தாராளமா செய்து விடலாமென்றார்கள்.

அம்மா, மாமா குடும்பத்தையும் கோவிலுக்கு கூப்பிடனுமென்று சிந்து சொல்ல, அவங்க வரமாட்டாங்களே

நாம போய் பேசலாமென்று பிராகாசத்திடம் வெற்றிவேல் சொல்ல,வேண்டாம் தம்பி.அவங்க கோபம் நியாயமானது, அங்க போய் ஏதாவது வார்த்தை தடித்து விட்டால், மனக்கசப்பு தானென்றார்.

அதை நான் பார்த்துக்குறேனென்றவர், செல்வம் மச்சான் நீங்க வாங்க என்றவர், எஸ்கார்ட்ஸிடம் நீங்க இங்கையே இருங்க என்க, சார் உங்கள் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியமென்று கூட வந்தனர்.

சரி என்று, நவீனுடன் காரில் ஏறி,கவிதா வீட்டை நோக்கி வந்தனர்.

முதலில் காரிலிருந்து இறங்கிய எஸ்கார்ட்ஸ் நான்கு பக்கமும் சென்று வீட்டை சுற்றி பார்த்து விட்ட பிறகே வாங்க சார் என்க, வீட்டின் உள்ளே வந்தவர்கள் யாரென்று தெரியவில்லை என்றாலும், செல்வமும் அவர்களோடு இருப்பதை பார்த்து, வாங்க என்றனர்.

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top