• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
பொள்ளாச்சி:

அன்பு நினைவுகள்!

"ம்ம் இருக்கேன் கா".


"ரெண்டு சூனியகார பொம்பளைங்க கிட்ட மாட்டிக்கிட்டு தான் படாத பாடென்றாள்".

"அடியேய் சீம சித்துராங்கி,நாட்டு முள்ளு வாங்கி".யாரை பார்த்துடி சூனியக்காரினு சொல்லுற?.வாய் இருக்காதுடி என்றார் ராக்கம்மா பாட்டி".

"ஏன்,உங்க வாய் எங்கே போச்சாம்?, என் வாய்க்கு வந்து நிக்குறீங்களென்றாள்".

"ச்சூஊஊஊஊ....இதுங்க பஞ்சாயத்துக்கு ஒரு முடிவே இல்லையாடானு அன்பு சொல்ல,நல்லா சொல்லுணா.எப்போ பாரு,என் கிட்ட வம்புக்கு வருவதே சிலருக்கு வேலையென்றாள்".

"ஆமாடி,எங்களுக்கு வேலையில்லை பாரேன்னு கண்ணம்மா பாட்டி சொல்ல, அதில் என்ன சந்தேகமென்றாள்".

"ஜனா போதும்டி.நம்ப பாட்டி தானே விடுடி என்றவாறே தங்கைக்கு வாங்கி வந்ததை எடுத்து வந்து வேணி நீட்ட, சூப்பரூ என்றாள்".

"பின்னர் மாரியப்பனும் வீட்டிற்கு வர, நலம் விசாரித்து விட்டு,இரவு உணவை சாப்பிட்டு படுத்தனர்".

"அதிகாலையில் கண்விழித்த வேணி, தன் மேல் கால் தூக்கி போட்டுக்கொண்டு தூங்கும் தங்கையின் தூக்கம் கலையாதவாறு எழுந்து போய், முகம் கழுவியவள், வாசல் தெளித்து கோலமிட,திண்ணையில் படுத்திருந்த மாரியப்பனுக்கும் விழிப்பு வந்தது".

"ஏத்தா,செம்பை எடுத்து வா,நான் போய் திருமுகம் கடையில் டீ வாங்கிட்டு வாறேன்.சரிப்பா என்றபடியே உள்ளே வந்த வேணியும்,சொம்பில் தண்ணீரோடு எடுத்து வந்து கொடுத்தாள்".

"அந்த தண்ணீரில் வாயை கொப்பளித்து, முகத்தை கழுவியவர், துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு டீக்கடையை நோக்கிச்சென்றார்".

"ராக்கம்மா பாட்டியும் எழுந்து வாசலுக்கு வர, வேணி பக்கத்து வீட்டு அக்காவோடு பேசிக்கொண்டு நிற்பது தெரிந்தது".

"எம்மாடி வேணி என்று குரல் கொடுத்தார்".

"பாட்டியின் குரலைக்கேட்டவள் நான் வரேன்கானு சொல்லிட்டு வர,அந்த மாடு கிட்ட என்ன பேச்சு?".

"வயித்தெரிச்சல் புடிச்சவள்,அவள் கண்ணுல கொள்ளி வைக்கணும், நீ உள்ளே வா என்று பேத்தியை கையோடு கூப்பிட்டுக்கிட்டு வீட்டின் உள்ளே சென்றார்".

"மற்ற இருவரும் தூங்கி எழவும், மாரியப்பன், டீ, பன் வாங்கிக்கொண்டு வீட்டிற்குள் வந்தார்".

"பின்னர் அனைவருக்கும் டீயும், பன்னும் கொடுத்து விட்டு, வேணியும் குடித்து முடித்தவள்,காலை என்ன சமைக்கயென்றாள்".

இருக்கா, நான் ஆக்குறேனென்று ஜனனி சொல்ல, பார்ரா!என் தங்கச்சி அவ்வளவு பெரிய பொண்ணாகிட்டாளா என்க, ம்ம் என்று ஜனனியும் சிரித்தாள்".

"சரி யாரோ சமைங்க, ஆனால் பசிக்கு வயிற்றுக்கு போடுங்களென்ற அன்பு, வீட்டிலிருந்த டீவியை ஆன் பண்ணியவன், சேனலை மாற்றிக்கொண்டே வர, கிழக்குச்சீமையிலே படம் ஓடிக்கொண்டிருந்தது".

"அதை வைத்து விட்டு தோட்டத்தில் போய் பல்லை விலக்கிக்கொண்டு உள்ளே வர, அந்த நேரம் கீதாவும் வீட்டிற்கு வர, டிவியிலோ, அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே, பருவம் சுமந்து வந்த பாவாடை தாவணியே என்ற பாடல் ஓடியது".

"கீதாவை பார்த்தவன் திகைத்து போனான்".

"சிறு பெண்ணாக பார்த்தவளோ, இன்று பருவம் எய்திய பின், பாவாடை தாவணியில் கண்கள் படபடக்க நின்றவளை பார்த்தவனுக்கு, உள்ளுக்குள் ஏதோ செய்தது".

"கீதாவும், அன்புவை பார்த்து அதிர்ந்து தான் போனாள்".

"அவளுக்கும் அதே நிலமை தான்".

"கீது என்ற வேணியின் சத்தத்தில் இருவரும் கலைந்தனர்".

"அக்கா என்று போய் வேணியை கட்டிக்கொண்டாள்".

"எப்படி இருக்க என்க, ம்ம் நீ அங்க அம்மா அப்பா, தம்பிலாம் நல்லா இருக்காங்களானு பேசிக்கொண்டே
காலை டிபனை செய்து முடித்தனர்".

"ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்தவனுக்கு, கீதாவிடமிருந்து பார்வையை திருப்ப முடியவில்லை".

எப்பா.... என்ன நம்மை இப்படி சுத்த வைக்குறாள்?.

"அடேய் அன்பு,அடக்கி வாசிடானு தனக்குள் சொல்லிக்கொண்டான்".

"பின்னர் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து காலை உணவை சாப்பிட்டு முடிக்க, மாரியப்பன் பெரிய வீட்டிற்கு வேலைக்கு செல்ல, பாட்டிகள் இருவரும் வயல் வேலைக்கு சென்றனர்".

"வீட்டில் இருந்த நால்வரும் சிறு வயதில் குதித்து விளையாடிய குளத்திற்கு சென்றனர்".

"தாமரை குளத்தை பார்த்ததும், நால்வருக்கும் சிறு வயது நினைவுகள் வந்தது".

"சோமுவும், மாரியப்பனும் தான் இவர்கள் நால்வருக்கும்,இந்த தாமரை குளத்தில் நீச்சல் கற்றுக்கொடுத்தவர்கள்".

"இன்றும் நீச்சல் அடிக்க வந்தாலும் அன்பு, ஜனனி, வேணி மூவரும் தண்ணீரில் இறங்க, கீதாவோ கரையிலே நின்றாள்".

"அன்பு தான் அவள் வராததை பார்த்து, குட்டி அங்க பாருடா என்றான்".

"பின்னர் இருவரும் பார்த்து விட்டு, அடியேய் ஏண்டி மேலே நிக்கிற?". இறங்கி வா எருமைனு ஜனனி கூப்பிட,இல்லை நான் இங்கையே இருக்கேனென்று சொல்ல, என்னாச்சிடி?.எருமைக்கு போட்டியா தண்ணியில் கிடப்பியே, இப்போ என்ன வந்துச்சி என்றாள் வேணி".

"தொண்டை கரகரப்பா இருக்குற போல இருக்குக்கா, அதனால் நான் கரையிலே இருக்கேன்".

"அதற்கு மேலும் அவளை வற்புறுத்த விரும்பாமல், மற்ற மூவரும் தண்ணிக்குள் நீந்தி போட்டி போட்டுக்கொண்டு அக்கரையை தொட்டு வந்து மகிழ்ந்தனர்".

"நேரமும் கடந்து செல்ல மூவருக்கும் பசியெடுக்க, தண்ணியில் இருந்து ஏறி மேலே வந்தனர்".

"அன்புவோ குளத்தில் பரித்து எடுத்து வந்த தாமரையை, கீதாவின் முன்பு நீட்டினான்".அதை வாங்கும் போது, அவன் தலையிலிருந்த நீர் துளிகள் கீதாவின் மேல் பட்டு தெரித்தது".

இரத்தினபுரி- பிளாஷ்பேக்:

"பின்னர் நண்பர்கள் சாப்பிட்டு முடித்து, அரட்டையோடு நேரத்தை போக்கினர்".

"மாலை டீ குடித்துக்கொண்டு டெலசில் நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, ஏய் நில்லு நில்லு என்ற குரல் கேட்டு,சத்தம் வந்த திசை நோக்கி ருத்ரன் பார்க்க, அங்கே இரட்டை ஜடை பின்னிய பெண்ணெருத்தி, இரண்டு வாண்டுகளை துரத்திக்கொண்டு ஓடினாள்".

"ருத்ரனின் பார்வை சென்ற திசையை பார்த்த ராம், அங்கு வந்து பார்த்து விட்டு, அது ஆசிரமம்டா என்றான்".

"ஓஓஓ என்றவன், மீண்டும் அந்த குரல் கேட்காதாயென்று யோசனையாக, சில நிமிடத்தில் பாட்டு பாடும் சத்தம் கேட்டது".

"ஆர்கலி தான் பாடுறாளென்று ராம் சொல்ல,ஓஓஓ என்றான் ருத்ரன்".

" ஆமாம், யார்டா அந்த ஆர்கலி?, பெயரே வித்யாசமா இருக்குடா".

" ஆமாம் டா".

" 11 த் படிக்குறாள்".

" அந்த ஆசிரமத்தில் தான் வளருறாள்".

" கனடா வரும் வரை அவர்களோடு தான் என்னுடைய நேரம் போகுமென்றான்"..

"சரிடா, போதும்டா சாமி உன் ஆர்கலி புராணமென்றான் விக்டர்".

"என்னடா சைட்டானு ஆது கேட்க,அடி செருப்பால.பண்ணாடைப்பயலே அவள் தங்கச்சி போலடா.இன்னொரு முறை இப்படி பேசுன,வாய் இருக்காதென்று ராம் திட்ட,சரிடா சரி என்றான் ஆது".

"என்ன மச்சி பயந்துட்டியா?, நீ தான் தைரியமான ஆளாச்சேடானு பிலிப் சொல்ல,ஏண்டா?, ஏன்?.அந்த எருமை கிட்ட நான் வாங்கி கட்டிக்கணும், நீ நல்லா வேடிக்கை பார்க்கணும்".
நல்லா வருவடா நீ".

"சரிடா வாங்க கீழே போகலாமென்று ருத்ரன் சொல்ல, பின்னர் நண்பர்களும் கீழே வந்தனர்.இரவு உணவை ஹோட்டலில் சாப்பிட்டு வந்து படுத்து விட்டனர்".

"சூரியன் தன் இருப்பை காட்டிக்கொண்டு கிழக்கிலிருந்து உதயமாக ஆயத்தமானான்".

"தூங்கி எழுந்த ருத்ரன் நண்பர்களை பார்க்க, மற்றவர்கள் நல்ல உறக்கத்தில் இருந்தனர்.

"பின்னர் தனது ஜாக்கிங் டிரஸை போட்டுக்கொண்டு சத்தமில்லாமல் கதவை திறந்து சாத்தி விட்டு படியில் இறங்கி கீழே வர,அங்கே வரலெட்சுமியும் சிவனும் டீ குடித்துக் கொண்டிருந்தனர்".

"ருத்ரனை பார்த்தவர் இரு ருத்ரா பிளாக் காஃபி கொண்டு வரேனென்று சொல்ல, வந்து குடிக்கிறேன் ஆன்டி என்றவன், வெளியே வந்து பார்க்க, லேசாக புகை மூட்டம் போல் பனி புகை தெரிந்தது".

"அதன் அழகை ஒரு நிமிடம் ரசித்தவன், பின்னர் மெயின் கேட்டை திறந்து ஜாக்கிங் ஓட தொடங்கினான்".

"நேற்றிரவே தெருவை பற்றி தெரிந்து கொண்டதால்,ருத்ரன் ஜாக்கிங் கிளம்பி விட்டான்.இன்னும் சிலர் ரோட்டோரமாக வாக்கிங் போவதும் தெரிந்தது".

"இரண்டு தெருவை தாண்டி முடித்தவன் மூன்றாவது தெருவில் ஓடி வர,அது ஒரு சந்து பகுதி என்பதால் எதிரில் வரும் ஆள் தெரியாமல் இவன் திரும்ப,அந்த நேரம் அங்கு ஓடி வந்தவள் மேல் மோத, ஆஆஆ என்று கீழே விழுந்தாள்".

"கண்ணிமைக்கும் நொடியில் நடந்து விட்ட நிகழ்வால், அய்யோ பாப்பா என்றவாரே அவளை தூக்கி விட்டவனை பார்த்து முறைத்து நின்றாள்".

"தன் முன்னால் முறைத்து நிற்பவளை பார்த்த ருத்ரனுக்கு ரசனையானது. குண்டு கண்கள் உருட்டி, இடுப்பில் கையை வைத்துக்கொண்டு, காதை மறைத்து ஸ்கார்ப் கட்டிக்கொண்டு பொம்மை போல் நின்றிருந்தாள்".

"என்னமா பாப்பா அடி பட்டுவிட்டதா என்று மீண்டும் ருத்ரன் கேட்க, என்ன மேன் கொழுப்பா?".

"நான் என்ன பால்வாடியா போறேன்?.
பாப்பா கூப்பானு, ஐ ஆம் 11 த் ஸ்டேன்டர்டு என்றாள்".

"ஓஓஓ...,பெரிய படிப்பு தானுங்கக்கா என்றான்".

"என்ன அக்காவா என்று கால்களை கீழே உதைத்தவள், கண்ணு தெரியாத ஆளுலாம் எதுக்கு வாக்கிங் வரணும்.வீட்டிலே இருக்க வேண்டியது தானேயென்று திட்ட,அவள் திட்டுவதை கேட்டு ருத்ரனிற்கு சிரிப்பு தான் வந்தது".

"சரி பாப்பா சாரி என்றவன், பாப்பாவை மட்டும் அழுத்தி சொல்லி விட்டு அங்கிருந்து சென்றான்".

"நெட்லிங்,லேம்ப்போஸ்ட் என்று திட்டிக்கொண்டே அவளும் அங்கிருந்து சென்று விட்டாள்".

"பின்னர், ஜாகிங் முடித்து வீட்டிற்கு வந்தவன், லெட்சுமி குடுத்த காஃபியை குடித்து விட்டு மேலே வர, மற்ற நண்பர்களும் எழுந்தனர்".

"காலை 9- 10.30 நல்ல நேரம் என்பதால், பந்தல் கால் ஊன்றுவதற்கும், நலுங்குக்கும் வீட்டில் உள்ள சொந்தக்கார பெண்கள் அதற்கான வேலை செய்து கொண்டிருந்தனர்".

"ஐய்யரும் சொன்ன நேரத்தை விட சிறிது நிமிடத்திற்கு முன்பே வந்து சேர, வாங்க சாமி என்று சொல்லி விட்டு, அவர் கேட்கும் பொருட்களை எடுத்து கொடுக்க ஒரு ஆளையும் அமர்த்தினர்".

"எல்லாம் தயாரானதும், முதலில் பெரியவர்கள் சேர்ந்து சாமிக்கு பூஜையை முடித்து,பந்தல் கால் ஊன்றி முடித்தனர்.பின்னர் மணையில் உட்கார வைத்து, ராம்க்கு நலுங்கை ஆரம்பித்து வைத்தார்கள்".

"நடப்பவைகளை நண்பர்கள் எல்லாரும் அதிசயமாக பார்த்துக்கொண்டே தங்கள் ஃபோனில் வீடியோவாகவும் எடுத்துக்கொண்டிருந்தனர்".

"நல்லவிதமாக நலுங்கு வைத்து முடிய, ராம் குளித்து முடித்து புதுத்துணியை போட்டுக்கொண்டு வந்த பின்னர், சாமிக்கு தீபத்தை காட்டி விட்டு, சமைத்த உணவை பந்தியில் பரிமாற, கேலி கலாட்டாக்களோடு வந்தவர்களும் சாப்பிட்டு சென்றனர்".

"அப்பொழுது கேட் திறக்கும் சத்தம் கேட்டு வாசலை பார்த்த ருத்ரனோ உள்ளே வருபவளை பார்த்து திகைத்தான்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
"சிறு பெண்ணாக காலையில் பார்த்தவள், இப்பொழுது புடவை கட்டி அழகோவியமாய் வருபவளை கண்டு திகைத்திருந்த ருத்ரன், ஆதுவின் அடியில் கலைந்தான்".

"உள்ளே வந்தவள் வரலெட்சுமியிடம் சென்று நிற்க, முகத்தை முறுக்கி காட்டினார்".

"அதான் வந்தேட்டேனே பிறகு என்னங்கம்மானு ஆர்கலி சிணுங்க, ஏண்டி உன்னை எப்போ வர சொன்னதற்கு இப்போ வருகிறாய்".

"இன்று உன் அண்ணனுக்கு முதல் நலுங்கென்று படித்து படித்து சொன்னேன் தானே?".

"எப்படியோ அவரை சமாதானப்படுத்தியவள், அவரோடு இணைந்து மற்ற வேலைகளை பார்த்தாள்".

"அப்பொழுது தனது நண்பர்களோடு உள்ளே வந்த ராம், ஏய் வாயாடி என்கவும்,அண்ணாஆஆஆ என்று முறைத்துக்கொண்டே அவன் முன்பு வந்து நின்றாள்".

"யாருடா இந்த சின்ன பாப்பானு ஆது கேட்க,எதேஏ பாப்பாவா?...

"காலையில இந்த நெட்லிங்கும் அப்படி தான் சொன்னார்.இப்போ நீங்களும் அப்படி சொல்லுறீங்க. என்ன பார்த்தால் பால்வாடி பாப்பா போலையா இருக்கு?.
உங்களுக்கெல்லாம் கண்ணு தெரியுமா?, இல்லை தெரியாதானு சண்டைக்கு போனாள்".

"ஆர்கலி போதும் போதும். நான் சொல்லிருக்கேன் இல்லையா, இவங்க எல்லாம் என்னோட ப்ரண்ட்ஸென்று, நண்பர்களை அவளுக்கு அறிமுகப்படுத்தினான்".

"பின்னர் அவளையும் தனது நண்பர்களிடம் தங்கை என்று சொல்ல, ருத்ரனை தவிர மற்றவர்களோ எங்களுக்கும் தங்கை தான் என்றனர்".

"இப்படியே பலவித கலாட்டாக்களோடு ஏழு நாள் நலுங்கும் முடிந்தது".

"கல்யாண நாளும் வந்தது".

"நண்பர்கள் அனைவரும் கிளம்பிக்கொண்டிருந்தனர்.அந்த நேரம் ருத்ரனிற்கு ஏதோ ஃபோன் கால் வர, அட்டென் பண்ணியவனுக்கு சிக்னல் கிடைக்காமல் போக, ஹலோ ஹலோ என்று கத்தியவாரே மாடிக்கு வந்தான்".

"அந்த பக்கத்தில் இருந்து ரஞ்சன் தான் பேசினான். சொல்லுடா என்க, பெரிய ஆர்டர் ஒன்று வந்திருப்பதை பற்றி ரஞ்சன் சொல்ல, டேய் இதெல்லாம் நீ பார்த்துக்கடானு சொல்லிக்கொண்டே திரும்பி பார்த்து அதிர்ந்தான்".

"ருத்ரன் பார்க்கும் போது அங்கே ஆசிரமத்தில் எலெக்ட்ரிக் ஷாக் அடித்து, ஆர்கலி தூரமாய் போய் விழுந்தாள்".

"ஆர்கலி என்றவாறே படியில் இறங்கி வேகமாக வெளியே ஓடிப்போனவன், பக்கத்து ஆஸ்ரமத்தின் கதவை திறந்து தோட்டத்து பக்கம் ஓட,அதை பார்த்த வாட்ச்மேன் ஃபாதர், ஃபாதர் எவனோ ஒருத்தன் ஆசிரமத்தில் நுழைஞ்சிட்டானென்று கத்தினான்".

"இங்கு வீட்டில் இருந்த சிலரோ, ருத்ரன் ஓடுவதை பார்த்து என்னாச்சோ என்று அவன் நண்பர்களிடம் சொல்ல, அவர்களும் ஆசிரமத்திற்குள் ஓடி வந்து பார்க்க, ஆஸ்ரமத்தில் உள்ளவர்களும் திருடனென்று ஓடி வர,அங்கே நடப்பதை பார்த்து அதிர்ந்தனர்".

"தரையில் படுத்திருந்த ஆர்கலியின் உதட்டோடு உதட்டை வைத்திருந்தான் ருத்ரன்".

"டேய் என்னடா பண்ணுற என்றவாறே வாட்ச்மேன் அடிக்க போக, நண்பர்கள் அவரை தடுத்து நிறுத்தி விட்டு, ருத்ரா என்று கத்தினர்".

"அந்த சத்தத்தில் திரும்பியவன், ஓ காட், டேய் சீக்கிரம் வாங்க,உடனே ஹாஸ்பிட்டலில் சேர்க்கணுமென்றான்".

"என்னடா சொல்லுறனு ஆது கேட்க, நடந்த விஷயத்தை ருத்ரன் சொல்ல,உடனே ஆஸ்ரமத்திற்கு டாக்டர் வரவழைக்கப்பட்டார்".

"அதற்குள் விஷயம் தெரியாமல் ஆளுக்காள், அங்கு நடப்பதை பார்த்து இருவரையும் தவறாக பேசினர்".

"இவள் தினமும் புடவை கட்டி வந்தது இதேக்குத்தானோ என்றனர் சிலர்".

"பின்னர் அவளை தூக்கிட்டு போய் உள்ளே இருந்த பெட்டில் படுக்க வைக்க, டாக்டரும் வந்து சேர்ந்தார்".

"நடந்ததை பற்றி ஃபாதர் சொல்ல, ஆர்கலிக்கு இன்ஜெக்க்ஷனை போட்டவர், ருத்ரனை பாராட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்".

"டேய் கல்யாணத்திற்கு போகணுமென்று சொல்ல,மனமே இல்லாமல் அவர்களோடு வெளியே வந்த ருத்ரன், பின்னர் நண்பர்கள் அனைவரும் மண்டபத்திற்குள் போய் சேர்ந்தனர்".

"திருமணம் நல்லபடியாக முடிய, ராம் தனது நண்பர்களை மனைவிக்கு அறிமுகப்படுத்தினான்".

"மேலும் இரண்டு நாட்கள் சென்றது. மறுநாள் எல்லாரும் அவரவர் நாட்டிற்கு செல்ல வேண்டும்".

"வராண்டாவில் உட்கார்ந்து நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்க, அவர்களிடம் வந்து நின்றாள் ஆர்கலி".

"அந்த நாளுக்கு பிறகு இன்று தான் அவளை ருத்ரன் பார்க்கின்றான். அவனை பார்த்தவள் எதுக்கு என்னை காப்பாற்றுனீங்க?".

"பாக்குறவன் எல்லாம் எப்போ ஷாக் அடிக்கும்ணு சொல்லு, நான் வந்து வைத்தியம் பண்ணுறேன்னு கேட்குறானேனு சொல்லி அழுதாள்".

"அதைக்கேட்ட ருத்ரனுக்கு கொலை வெறியானது.ஏய் யார் அப்படி பேசினாங்க சொல்லு. அவங்களை உண்டு இல்லையென்று பண்ணிடுறேன் என்கும் போதே, ஆர்கலி மயங்கி கீழே விழப்போக,ருத்ரன் அவளை தாங்கி பிடித்தான்".

"ஏய் என்னாச்சினு தெரியலையே என்று பதற, அதற்குள் ஃபாதரும் அங்கு வந்தவர், சீக்கிரம் ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போகணும்".

"தூக்க மாத்திரையை சாப்பிட்டிருக்காளென்று பதறினார்.பின்னர் அவளை அங்குள்ள ஹாஸ்பிட்டலில் கொண்டு போய் சேர்த்து டிரீட்மெண்ட் போனது".

"எல்லாரும் தப்பா பேசுவதால், எனக்கு வாழ பிடிக்கலைனு லெட்டர் எழுதி வைத்து, தூக்க மாத்திரை போட்டிருக்காளென்று சொல்லி ஃபாதர் வருத்தப்பட்டார்".

திருச்சூர்:

மைக்கேல் நினைவுகள்...

பிகார்-கயை மாவட்டம்:

"வீட்டின் உள்ளே வந்த ஷாலி, டியூட்லைட்டின் வெளிச்சத்தில், அந்த இடத்தை சுற்றி பார்த்தாள்".

"வீடு மிகவும் சுத்தமாக இருந்தது".

"பின்னர் உள்ளே போய் பார்க்க, சிறிய கிச்சன் மற்றும் பெட்ரூமும் இருந்தது.இது தான் இந்த ஏழையோட பேலஸ்டி".

"இது போதும் திவாரி என்றவள்,நேரம் ஆகிட்டு கொஞ்ச நேரம் படுக்கலாமா என்க, ம்ம் என்றவன் நீ உள்ளே பெட்டில் படுத்துக்கோ".

"ஹலோ திவாரி, உங்களை ஒன்றும் நான் ரேப் பண்ணிட மாட்டேன். நம்பி வந்து பக்கத்தில் படுங்களென்றவள், உள்ளே போய் பெட்டில் படுத்துக்கொண்டாள்".

"மனைவி சொன்னதை கேட்டு மைக்கேலுக்கு சிரிப்பு வந்தது.உனக்கு அவ்வளவு தைரியம் இருக்காடி என்றவாறு அவளிடம் நெருங்கி வர,குண்டு கண்கள் விரிய அதிர்ந்து முழித்தாள்".

"அவ்வளவு பயம் இருக்கு இல்லை, பிறகு எதுக்குடி இந்த வீர வசனமெல்லாம்?".

"ஹலோ...பயம் ஒன்னும் இல்லையே என்று கண்ணை மூடி கொண்டாள்".

"பின்னர் வீட்டை பூட்டி வந்து அவனும் பெட்டில் ஒரு பக்கம் படுக்க, இருவருக்கும் நடந்து சென்று நிகழ்வுகள் தான் நினைவு வந்தது".

"இதுவரை தான் மட்டுமே இருந்த வீட்டிற்கு, இன்று தனக்கு துணையாக ஒருத்தி இருப்பதை நினைச்சு, மைக்கேலிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.அந்த சந்தோஷத்திலே அவன் கண்கள் கலங்கியது".

"அறை முழுவதும் இருளாக இருந்ததால், அவனின் ஆனந்த கண்ணீர் பற்றி ஷாலிக்கு தெரியவில்லை" .

"சிறிலு நிமிடங்கள் கழிந்த பின்னரே இருவருக்கும் உறக்கம் வந்தது".

"வழக்கம் போல் விடியல் ஆரம்பமாக, டீ கிளாசோடு வந்த கரீம், பாய் ,பாய் என்று கதவை தட்டினான்".

"அந்த சத்தத்தில் ஷாலிக்கு விழிப்பு வந்து எழுந்தவள்,ரெஸ்ட் ரூமிற்குள் சென்று முகத்தை கழுவி,வாயை கொப்பளித்து துப்பியவள், சுடிதார் துப்பட்டாவால் முகத்தை துடைத்துக்கொண்டே கதவை திறந்தாள்".

"பாய் என்றவாறே உள்ளே வலது கால் எடுத்து உள்ளே வைக்கப்போனவன், அங்கு நின்றவளை பார்த்து அதிர்ந்தான்.மைக்கேலிற்கு இதுவரை எந்த பொண்ணு கூடயும் தொடர்பு கிடையாது.அவன் யாரிடமும் பேசவும் மாட்டான்.அப்படி இருக்கும் போது, ஒரு பெண் வந்து கதவை திறந்ததை கண்டு தான் அதிர்ந்தான்".

"அவர் தூங்கிட்டு இருக்கார்.கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க என்றவள் உள்ளே போய் திவாரி, திவாரி என்று அவன் தோளில் தட்டி எழுப்பினாள்".

"ம்ம் என்றவன், ஜானு என அவள் கையை பிடித்து இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டவன், தினமும் இப்படி கனவிலே வந்து எழுப்புறியேடி".

"ஓஓஓ சார் கனவுனு இருக்காரென்று நினைத்தவள், அவன் தோளில் கிள்ள அந்த வலியில் சுதாரித்து எழுந்தான்".

"யாரோ ஒரு பையன் வந்துருக்கானென்று ஷாலி சொல்ல, கரீம் தான் டீ வாங்கிட்டு வந்திருப்பானென்றவன், கரீம் கரீம் என்று குரல் கொடுத்தான்".

"பாய் என்று வாசலில் நின்றே கரீம் சொல்ல, உள்ளே வாடா, உன் பாபி( அண்ணி) இவள் தானென்றான்".

"மைக்கேல் சொன்னதைக்கேட்டவன், நிஜமாவா என்றவாறே உள்ளே வந்தான்".

"ஆமாடா, நீ போய் அவளுக்கும் ஒரு காஃபி வாங்கிட்டுவா என்க, பால் வாங்கிட்டு வாங்க பையா(சகோதரன்) என்றாள்".

"சரிங்க பாபி என்றவன் வேகமாக போய் பால், காப்பித்தூள், ஜீனி வாங்கி வந்து கொடுக்க, சிறிது நிமிடத்தில் மூவருக்கும் காஃபியை போட்டவள், இருவருக்கும் நீட்டினாள்".

"பாய் இவங்க அந்த மழையில் இழுத்துட்டு வந்தீங்களேனு கரீம் சொல்ல,அவளே தான் டா".

"சரி நாஸ்தா( டிபன்) என்ன செய்ய?, இங்கு அடுப்பும் சிலிண்டர் தவிர, மளிகை பொருட்கள் எதுவும் இருக்க போல தெரியலையே என்றாள்".

"கரீம் நீ போய் நம்ப பாட்டி கிட்ட சொல்லி கோயில்ல கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண சொல்லு.நான் உன் அண்ணிய கூப்பிட்டு போய், அவளுக்கு மாத்துக்க டிரஸ் வாங்கி வரேன் டா".

"சரி பாய், நான் போனா அந்த கிழவி பேசியே கொன்றுவிடும். நீயும் வாயேன் பாய்.சரிடா என்று சிரித்த மைக்கேல், மேடம் ரெஸ்ட் எடுங்க இதோ வந்துடுறேன் என்றவன், சட்டையை போட்டுக்கொண்டு கரீம் உடன் வெளியே சென்றான்".

"அந்த தெரு முனையில் இருக்கும் இரண்டாவது வீட்டின் இரும்பு கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த இருவரும், பாட்டி, பாட்டி என்றனர்".

"யாரு என்றவாறு வெளியே வந்தவர், மைக்கேலை பார்த்து முறைத்தார்".
வேலை அதான் வர முடியலை. பங்ஷன் நல்லா முடிஞ்சிதா?".

"பாட்டிம்மா எதுவும் சொல்லாமல் இருப்பதை பார்த்தவன்? தாயே மன்னிச்சிடுங்க என்று அவர் காலில் விழ,போடா போக்கிரி பயலே".

" சரி சரி என்ன இவ்வளவு காலையிலே இந்த பக்கமென்று பாட்டி கேட்க,இன்றைக்கு எனக்கு கல்யாணத்திற்காக கோயில்ல நீ தான் எல்லா ஏற்பாடும் பாக்கணுமென்றான்".

"என்னா கல்யாணமானு பாட்டியும் அதிர்ந்து போனார்".

"ஆமாம் என்றவன், பின்னர் நடந்ததை பாட்டியிடம் சொல்லி முடித்து விட்டு அங்கிருந்து சென்றான்".

கரீம்,நீ பாட்டிக்கூட போய் எல்லாம் பாருடா என்க, சரிணா.

"இதை நீ சொல்ல வேண்டுமா? என்றவன், சரி நீ டவுனுக்கு போய்ட்டுவா நான் கடைய பார்த்துக்குறேன் என்க, சரிடா என்ற மைக்கேல் வீட்டை நோக்கிச்சென்றான்".

"ஜானு, ஜானு என்று கதவை தட்ட, கதவை திறந்தவளை பார்த்து திகைத்தான்.குளித்து முடித்து தலையில் ஈரம் சொட்ட, அவனுடைய டிராக் பேண்டையும், டீ சர்டும் போட்டிருந்தாள்".

"என்ன மேன் லுக்?".

"அந்த டிரஸை துவைத்து போட்டுருக்கேன், ஃபேன் காற்றில் காயிது என்றாள்".

"பின்னர் மைக்கேலும் குளித்து தயாராக, ஷாலியும் காய்ந்த ஆடையை போட்டு ரெடியானாள்".

"போலாமா ஜானு என்க, ம்ம் என்றாள்".

"பின்னர் இருவரும் வண்டியில் ஏறி டவுனிற்கு சென்றனர்".

ஆர்கலி எங்கே?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top