• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
பொள்ளாச்சி:

"என்னப்பா பண்ணுறீங்க என்றவாறே சிறிய தந்தையிடம் சென்றவன், அவர் கையை கீழே இறக்கி விட்டான்".


"நீ அமைதியா இருப்பா.என் மகன் செய்ததற்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்.ஆசைப்பட்ட பொண்ணை விட்டுக்கொடுக்க முடியாமல் தான்இப்படி பண்ணிட்டானென்று சத்தியமூர்த்தி சொல்ல,எவ்வளவு பெரிய மனுஷன்,இப்படி எல்லார்கிட்டையும் மன்னிப்பு கேட்டுட்டாறேனு சிலர் வருத்தப்பட்டனர்".

"அந்த நேரத்தில்,ஆத்தா மலரு, நான் ஒன்னு சொல்லுறேன் கேட்குறியானு ராக்கம்மா பாட்டி கேட்க, சொல்லுங்கத்தை என்றார்".

"கீதாவை உன் ஊட்டுக்கு மருமவளா கூட்டிட்டு போத்தா.ஜனனி வேற அவள் வேற இல்லை.இவளும் உன் மகள் தானே?".ரெண்டு பேரும், ஒரு தாய் கிட்ட தானே பால் குடிச்சி வளர்ந்தாளுங்க?".

"உன் தங்கச்சி புள்ளைய பெத்துட்டு போய் சேர்ந்துட்டாள்.அவளுக்கு ஆத்தாளா இருந்தது கலா.அப்போ கலாவும் உன் தங்கச்சி தானே?".

"அத்த..ஒருத்தி தான் போய் சேர்ந்துட்டாள்.எனக்கு கூட பொறந்த பொறப்பா இருக்குறது கலா தான்.கீதாவும் எம் மவள் தான்.என்னங்க நீங்க என்ன சொல்லுறீங்கனு கணவரை கேட்க,கந்தனோ தனது தங்கை மகனை திரும்பி பார்த்தார்".

"தலையாட்டி அன்பு சம்மதம் சொல்ல,பெரியாத்தா,நீ சொல்றது வாஸ்தவம் தானென்ற கந்தன்,சகலை நீங்க என்ன சொல்றீங்க? என்க".

"சோமுவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை".

"அவர் அமைதியாய் இருப்பதை பார்த்த மலரோ, மாமா என்னை நம்பி கீதாவை தரமாட்டியா என்க,என்னாத்தா பேச்சு இது?".உனக்கு என்ன தோணுது பண்ணுத்தானு மனைவியை பார்க்க கலாவும் சம்மதம் சொன்னார்".

"அப்புறம் என்னப்பா, அதான் சோமுவும் சம்மதம் சொல்லியாச்சி, சட்டு புட்டுனு புள்ளைய கூப்பிட்டு போய், துணிய மாற்றி கூப்பிட்டு வாங்க என்றார் கண்ணம்மா பாட்டி".

"அதுக்கு முன்ன,வெற்றி தம்பிக்கும் ஜனனிக்கும் சம்பிரதாயத்தை முடிச்சிடலாமென்று கலா சொல்ல, அதுவும் சரியென்று பட்டது".

"பின்னர், இருவரையும் சேரில் உட்கார வைத்து, அனைவரும் வந்து மஞ்சள் குங்குமம் பூசி ஆசீர்வாதம் செய்தனர்".

"இவர்களுக்கு முடிந்த பின்னர் அன்புக்கும்- கீதாவிற்கும் பெரியவர்கள் ஆசீர்வாதத்தோடு நிச்சயத்தை முடித்து, இன்னும் ஆறு மாதத்தில் கல்யாணம் என்று முடிவெடுத்தார்கள்".

"வீட்டின் உள்ளேயிருந்த ஜனனியோ, ஆத்தா மகமாயி என் வேண்டுதலையை நிறைவேற்றிட்ட தாயி".உனக்கு வேண்டியபடியே பொங்கல் வைத்து, தீ மிதிக்கிறேன் ஆத்தானு மனதிற்குள் நன்றி சொல்லிக்கொண்டாள்".

"வந்தவர்கள் எல்லாருக்கும் மதிய உணவை பரிமாறினர்".

"இரண்டு ஜோடிகளையும் ஒன்றாக உட்கார வைத்து இலை போட, நால்வரின் மன நிலையும்,நாலு விதமாக இருந்தது".

"வெற்றியின் முகமோ, எள்ளு அள்ளி போட்டால் வெடித்து சிதறி விடும் போல, அவ்வளவு கோவத்தோடு அய்யனார் கணக்காய் இருந்தான்".

"ஜனனியோ தன்னவன் ஆசைப்பட்ட வேலை கிடைத்ததை நினைத்து, உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டாள்".

"அன்புவோ எதையும் காட்டிக்காமல் இயல்பாய் இருந்தான்".

"கீதாவோ,ஒரு வித பயத்தோடே அன்புவின் அருகில் உட்கார்ந்திருந்தாள்.தன்னருகில் உட்கார்ந்திருப்பவளை கடைக்கண்ணால் பார்த்த அன்பு, எதிர் பார்க்கவில்லை இல்லையா இப்படி ஒரு டுவிஸ்டை?, என்றான்".

"அவன் குரலை கேட்டு நிமிர்ந்து பார்க்க, மறக்கலைடி, எதையும் மறக்கலைனு பல்லை கடித்தவன், சாப்பிட்டு முடித்ததும் உங்க வீட்டிற்கு பின்னாடி உள்ள புங்க மரத்து கிட்ட வெய்ட் பண்ணுறேன், மரியாதையா வந்து சேருடி என்றவன், இலையில் பரிமாரிய உணவை சாப்பிட ஆரம்பித்தான்".

பாவம்,கீதாவிற்கு தான் சாதம் உள்ளே இறங்கவில்லை.ஜனனியோ, தனது இலையில் பரிமாறியதையெல்லாம் ரசித்து ருசித்து சாப்பிட்டாள்".

"சிறிது நிமிடங்கள் அவள் சாப்பிடுவதை பார்த்தவன், எவன் கூட வேண்டுமானாலும் முந்தி விரிக்க தயாராகணும் இல்லையா, நல்லா சாப்புடுடி என்று வெற்றி சொல்ல,அவன் சொல்லியதை கேட்டவளின் கண்ணில் நீர் திரண்டது".

"அதன் பிறகு அவளால் ஒரு வாய் கூட சாப்பிட முடியவில்லை".

"அவளுக்கு எதிர்மாறாக வெற்றியோ வெளுத்து கட்டியவன், அன்புவை பார்த்து என்ன சகலை எழலாமா என்க, சரிங்க சகலை என்றான்".

"அவனுங்கள் இருவரும் எழுந்து செல்ல, தோழிகளும் இலையை மூடி விட்டு, இயந்தர கதியாய் எழுந்து போய் கையை கழுவி உள்ளே சென்றனர்".

"அன்பு சொல்லியது போலவே மரத்தின் கீழ் காத்திருக்க, பயந்து கொண்டே கீதாவும் வந்து சேர்ந்தாள்".

"சில அடி இடைவெளியில் கீழே குனிந்து நிற்பவளை, உச்சி முதல் பாதம் வரை ரசனையோடு பார்த்தவன்,பருவத்தில் பார்த்ததை விட அழகாய் தான் டி இருக்கனு அவளை நோக்கி செல்ல, பின்னாடியே நடந்து சென்றவளோ அங்கிருந்த சுவற்றில் இடித்து நின்றாள்".

"இனியும் நகர முடியாதென தெரிந்து கீழே குனிந்து நிற்க,வெளிநாட்டிற்கு போனவன் திரும்பி வரமாட்டானு நினைச்சிட்டியோ? என்றான்".

"அன்புவின் வார்த்தையை கேட்டவள் பதறி நிமிர, பின்ன?, இத்தனை வருஷமா எத்தனை ஃபோன் பண்ணிருப்பேன், ஏன் எடுக்கலை".

"ஏண்டி உன்னை காத்திருனு சொல்லிட்டு தானேடி போனேன்?, பிறகு எப்படி உங்க வீட்டில் உனக்கு மாப்பிள்ளை பார்க்கலாமென்று அவள் கழுத்தை பிடிக்க, நான் தான் சம்மதம் சொல்லவில்லையே என்றாள்".

"ஐந்து வருடங்களுக்கு பின்னர், தன்னவளின் குரலை கேட்டவனுக்கு சில்லென்று இருந்தது".

"கழுத்தை பிடித்திருந்தவன் கையை தட்டி விட்டவள், என்னை விரும்புறேன், காத்திருனு சொல்லிட்டு, இன்னொருத்தி கூட நிச்சயம் பண்ண வந்தது நீங்களென்றாள்".

"ஓஓஓஓ.... அது நடந்துச்சா?".

"நடக்குமா?".

"ஏண்டி,நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து என்னை அண்ணனு கூப்பிட்டவள், எப்படி புருஷனா ஏற்றுக்கொள்ளுவாள்?".

"சொல்லுடி? "

சென்னை- மகாபலிபுரம்:

"தனக்குள் பெருமூச்சி விட்ட வசந்தி, கடவுளே, நான் அப்படி என்ன பாவம் பண்ணுனேன்?".

"எல்லாரையும் போல தானே குடும்ப வாழ்க்கையை சந்தோஷமா ஏத்துக்கிட்டேன்".

"அதில் எனக்கு மட்டும் ஏன் பொய்த்து போனது? என்றவாறே தன் வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டிருக்க, போன் பேசி முடித்து விட்டு தேவியும் அங்கு வந்து சேர்ந்தார்".

"வசந்தி வசந்தி என்க, ம்ம் சொல்லு தேவி".

"அவர் போன காரியம் சக்சஸ் ஆகிட்டாம்டி".

"ஆனால் வர இன்னும் ரெண்டு நாள் ஆகுமாம் என்க, அப்போ நாம இங்கையேவா இருப்பதென்று கேட்க, நோ நோ".

" நாளைக்கு நம்ம கடை விளம்பரத்தில் நடிக்க, மாடல்சுக்கு ஆடிஷன் இருக்குடி.நான் போயே ஆகணும் என்றவர், காலையிலே கிளம்பிடலாம் என்க, சரி வா.இப்பவே நேரம் ஆகிட்டு என்றபடியே ரூமிற்குள் சென்று இருவரும் படுத்து விட்டனர்".

"ஏன் தேவி, எனக்கு என்னமோ வீராவிற்கு விஷயம் தெரிஞ்சிருக்குமோயென்று தோணுதுடி".

"என்னாடி வசந்தி சொல்லுறனு தேவி பதற, ஆமா தேவி".

"என் உள் மனசு இதான் சொல்லிக்கிட்டு இருக்கு".

"வீரா இங்கு வர வாய்ப்பு இல்லை. அதனால் நீ ஆசைப்பட்ட போல, ஆதிராவிற்கும் நம்ப வீராவிற்கும் சீக்கிரம் திருமண ஏற்பாடு பண்ணுவது நல்லது".

"நீ சொல்லுறதும் சரி தான் வசந்தி".

"ஆதிரா இதே சென்னையில் படிக்கிறாள், ஆனால் நம்ப வீட்டிற்கு வரமாட்டுறாள்".

"நாம தான் போய் பார்க்குறோம், ஒரு வேளை மேகலா எதாவது சொல்லிருக்கலாம், கல்யாணத்திற்கு முன்பு அடிக்கடி அத்தை வீட்டிற்கு போகக்கூடாது என்று, அதனால் தான் வரமாட்டுறாள் போலடி".

"என் அண்ணன் பொண்ணு தான் எனக்கு மருமகளா வரணும்".

"இந்த சிம்ஹன் குடும்பத்துக்கு ஏத்த மருமகள் ஆதிரா தான்".

"நடுவில் யாரோ ஒரு அன்னக்காவடி நாய் என் பையன் வாழ்க்கையில் குறுக்கே வந்தால், நான் விட்டுருவேனா?".

"நெவர்".

"ஒரு வேளை என் அண்ணனுக்கு பொண்ணு இல்லாமல் இருந்திருந்தால், அப்போ வேண்டுமானால் வேற ஒருத்தியை பற்றி யோசிக்க வாய்ப்பு இருந்திருக்கும்".

"அந்த கடவுளே அதுக்கும் எனக்கு வழி செஞ்சிட்டாரு".

"எவ்வளவு பெரிய சொத்துக்கு முதலாளியா ஆகப்போறவள், இன்னும் அவள் அம்மா போலவே எளிமையா இருக்காள் பாறேன்".

"அந்த குணம் அவள் கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சது வசந்தி என்று தனது அண்ணன் மகளைப்பற்றி தேவி சொல்ல, ஏற்கெனவே கேட்ட விஷயமாக இருந்தாலும், வசந்தியும் தோழி சொல்வதை புதிதாய் கேட்பது போல் கேட்டுக்கொண்டார்".

சென்னை கே.எம்.சி.மெடிக்கல் காலேஜ் ஹாஸ்டல்.

"தனது அம்மாவிடம் பேசி விட்டு ஃபோனை வைத்த ஆதிரா, ஜன்னல் வழியாக ரோட்டில் போகும் வாகனத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்".

"அவள் இலங்கையில் இருந்து சென்னைக்கு படிக்க வந்து,நான்கு வருடம் ஆகப்போகின்றது".

"எந்த சூழலில் இங்கு வந்தாள் என்பது ஆதுக்கும், ஆதிராவிற்கு மட்டும் தான் தெரியும்".

"மேகலாவும் எத்தனையோ முறை மகளை கெஞ்சி பார்த்து விட்டார். ஒரு முறை வந்து முகத்தை காட்டேன்டி என்று,அதற்கு ஆதிராவோ, படித்து முடித்த பிறகு தான் வருவேனென்று உறுதியாக சொல்லி விட்டாள்".

"அப்பொழுது அவள் செல்ஃ போனிற்கு கால் வரும் ரிங் டோன் சத்தம் கேட்டு, டேபிள் மேல் இருக்கும் ஃபோனை எடுத்துப் பார்க்க, அதில் வந்து பெயரை பார்த்து புருவத்தை சுருக்கியவள்,அட்டென்ட் பண்ணி ஹலோ அங்கிள், சொல்லுங்க என்றாள்".

"அவர் சொன்ன விஷயத்தை கேட்டவள், அப்படியா உடனே பார்க்கிறேன் என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டு, தனது லேப்டாப்பை திறந்தவள்,டேட்டா கார்டு போட்டு ஆன் பண்ணினாள்".

"பின்னர் மெயில் பாக்ஸை திறந்து பார்க்க, அதில் ஏகப்பட்ட மெயில்கள் வந்து குவிந்து போய் கிடந்தது".

"கடந்த ஒரு வாரமாக எக்ஸாம் நடந்து கொண்டிருப்பதால், அவளின் பர்சனல் மெயிலை பார்க்க முடியவில்லை".

"பின்னர் அங்கிள் சொன்ன மெயிலை ஓப்பன் பண்ணி படித்து முடித்தவள், அதற்கு பதில் அனுப்பி விட்டு, ஷட்டவுன் பண்ணியவளின் சிந்தனை எங்கெங்கோ சென்றது".

"உங்களை பார்க்கும் போது எதிர்பாராத உச்சத்தில் இருப்பேனென்று ஃபோனில் இருக்கும் உருவத்தை பார்த்து சொல்லிக்கொண்டவள், படிக்கும் வேலையை பார்க்க தொடங்கினாள்".

"நேரம் சென்று கொண்டிருந்தது. படிப்பில் மூழ்கியிருந்தவளை கதவு தட்டும் சத்தம் திசை திருப்ப, எழுந்து போய் கதவை திறக்க, அங்கே அவளின் ஒரே தோழியான ரியா நின்றிருந்தாள்".

"ரியாவின் முகமோ எதுவோ சரியில்லை என்பதை உணர்த்த, சரி இப்பொழுது தோழியிடம் ஏதும் கேட்க வேண்டாம் என்று ஆதிராவும் அமைதியாகிவிட்டாள்".

"உள்ளே வந்து பெட்டின் மேல் படுத்த ரியாவோ, சத்தமின்றி அழுவது தெரிந்தது".

"அழுது முடித்து அவளே சொல்லட்டும் என்று ஆதிராவும் இருந்தாள்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
இரத்தினபுரி:

"நாட்களும், மாதங்களாய் கடந்து சென்றது.ராகினியின் உடல் நிலையிலும், நல்ல முன்னேற்றம் வருவதாக, டாக்டரும் சொன்னார்கள்".


"இதுவரை எதுக்கு இந்த வாழ்க்கையென்று வெறுப்பாய் இருந்த ரஞ்சனிற்கு, தங்கையின் முன்னேற்றம் நம்பிக்கை கொடுத்தது".

"நண்பர்கள் செய்த உதவிற்கு, இன்னும் தனது உழைப்பை போட்டான்".

"மூவரின் பெயரும் உச்சத்தை தொட்டது".

"பெஸ்ட் டிசைனர்ஸ் என்ற அவார்டை இவர்களும் வாங்கி, மேலும் ஷோருமிற்கு பெருமை சேர்த்தனர்".

"ஓர் நாள் மூவரும் டிசைனிங் செக்க்ஷனில் வேலையாய் இருக்கும் போது, நண்பர்கள் குருப்பிலிருந்து வீடியோ கால் வர, ருத்ரனும், ஆதுவும் அட்டென் பண்ணினர்".

"அங்கே கனடாவில் படித்த மேலும் சிலர் இணைப்பில் இருக்க, ஹாய் ஹாய் என்று பேசியவர்கள், என்னடா இது ஆனந்த அதிர்ச்சி".

"மச்சான் நம்ப ராம் எருமை தான் கால் பண்ணுச்சி, என்ன விஷயம்னு கேட்டால், எல்லார்கிட்டையும் ஒன்றா சொல்லுறேன்னு உசுர வாங்குறான்டா என்றான் இன்னொரு நண்பன்".

அப்படியா?.

"சொல்லு எருமை என்க,இந்தியாவிலிருந்து பேசிய ராம், மச்சான் ஒரு சந்தோஷமான விஷயமா தான் கால் பண்ணுனேன்டா ".

"அடேய் செருப்பு பிஞ்சிடும்".

"அப்போ இருந்து இதே டயலாக் தான் சொல்லிட்டு இருக்குற".

"என்ன விஷயம்னு சொல்லி தொலைடா என்று இன்னொரு நண்பன் கத்தினான்".

"சரிடா சரிடா என்றவன், நெக்ஸ்ட் மந்த் எனக்கு மேரேஜ். திடீர்னு பிக்ஸ் ஆகிட்டு.நீங்களெல்லாம் கண்டிப்பா வரணும்டா.அதுக்கு தான் ஒரு மாதத்திற்கு முன்பே உங்க கிட்ட சொல்லுறேன்".

"எந்த நாயும் காரணம் சொல்லக்கூடாதுடா என்க, அடப்பாவி....

"ஸ்பின்னிங் மில்லுக்கு போறேன், போறேன்னு, இந்த வேலை தான் பார்த்தியாடா என்று ஆது கேட்க, ஹாஹாஹா என்று ராம் சிரித்தான்".

"டேய் நீங்களும் இந்தியாவிற்கு வந்ததில்லை.நாம எல்லாம் பிரிந்து போய் மூன்று வருஷம் ஆகுதுடா".

"என் கல்யாணத்தின் மூலயமாய் எல்லாரையும் மீட் பண்ணலாம்டா என்க, சரிடா முடிவு பண்ணிட்டு சொல்லுறோம் என்றவர்கள், மேலும் சிறிது நேரம் பேசி விட்டு போனை வைத்தனர்".

"பின்னர் நண்பர்கள் பேசி முடிவெடுத்து, இந்தியாவிற்கு செல்ல டிக்கெட்டையும் போட,இதோ ஆதுவும், ருத்ரனும் இந்தியாவிற்கு செல்லும் நாளும் வந்தது".

"பாட்டி... பாட்டி... என்று சத்தமாக கூப்பிட,இத்தனை நேரம் கடந்த காலத்தில் மூழ்கியிருந்த கிரிஜா பாட்டி, ஆங் சொல்லு கண்ணா என்றார்".

"எந்த உலகத்தில் இருக்கிறாய்?".

"எவ்வளவு நேரம் ஆசீர்வாதம் பண்ணென்று சொல்லுறேன், நீ ஏதோ யோசனையில் இருக்கியே? ".

"ஒன்னுமில்லை வீரா , பார்த்து போங்கப்பா.போய் சேர்ந்ததும் கால் பண்ணு வீரா என்க, சரி பாட்டி".

" வாசலில் ரஞ்சன் ஹார் ஹாரனை ஒலிக்க விட, சரி போய்ட்டு வரேனென்றவன் லக்கேஜோடு காரில் ஏற,ஏர்போர்ட்டை நோக்கி ரஞ்சன் காரை ஓட்டினான்".

" வீட்டிலிருந்து அனுராதாபுரம் ஏர்போர்ட்டிற்கு செல்ல ஐந்து மணி நேரப்பயணம்".

" இடையில் ஆதுவையும் பிக்கப் பண்ணிக்கொண்டு, ஏர்போர்ட்டிற்கு வந்து சேர்ந்தனர்".

" பின்னர் ரஞ்சனிடம் சொல்லிக்கொண்டு, எல்லா பார்மாலிட்டிஸையும் முடித்து விட்டு உள்ளேச் சென்றனர்".

" மற்ற நண்பர்கள் கனடா, லண்டன், சிங்கப்பூரிலிருந்து வரவேண்டும்".

" அதனால் எல்லாரும் சென்னைக்கு வந்து சேர்ந்து, அங்கிருந்து கோயம்புத்தூருக்கு செல்வதாக பிளான் பண்ணி, அதற்கு ஏற்ற போலவே டிக்கெட்டும் போட்டிருந்தனர்".

" இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு, ஃப்ளைட்டில் மூன்றை மணி நேரப்பயணம்.சிறு வயதில் வந்ததால், ருத்ரனிற்கு இந்தியாவே மறந்து விட்டது".

"ஆதுக்கு இதுவரை இந்தியாவிற்கு போக வேண்டிய வேலை இல்லாததால், அவனும் வந்ததில்லை".

"ஒரு வழியாக இரவு எட்டு மணிக்கு, சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்டிற்கு நண்பர்கள் இருவரும் வந்து சேர்ந்தனர்".

"பின்னர்,அங்கும் பார்மாலிட்டீஸை முடித்துக்கொண்டு வெளியே வர, அவர்கள் புக் பண்ணிய ஹோட்டலிலிருந்து கார் வந்திருந்தது".

"இருவரும் காரில் ஏறி ஹோட்டல் ரூமிற்கு சென்றவர்கள், ஃப்ரஸ் ஆகி விட்டு, வந்து சேர்ந்ததை சொல்லி விட்டு, மற்ற நண்பர்கள் வருகைக்காக காத்திருந்தனர்.இவர்கள் ஆறுபேரும் கல்லூரியில் மிகவும் குளோஸ்".

"அதில் ஒருவன் ராம் கோயம்புத்தூர். இவர்கள் இருவர் இலங்கை, சாம் கனடா, விக்டர் லண்டன், மற்றவன் பிலிப் சிங்கப்பூர்.

"மற்ற மூவரும் ஒவ்வொரு டைமில் வந்து சேர்ந்தனர்".

"பின்னர் அவரவர், வீட்டையும் கல்லூரி நாட்களை பேசி மனம் விட்டு சிரித்தவர்கள், காலை எட்டு மணிக்கு ஃப்ளைட் என்பதால் தூங்காமலே அரட்டையில் கழித்தனர்".

"பிறகு ஐவரும் குளித்து தயாராகி,ஒரு மணி நேரத்திற்கு முன்பே ஏர்போர்ட்டிற்கு வந்து சேர்ந்தனர்".

"இவர்களுக்கான ஃப்ளைட் அறிவிப்பு வந்ததும், பார்மாலிட்டீஸை முடித்துக்கொண்டு ஃப்ளைட்டின் உள்ளே சென்று, இருக்கையில் உட்கார, ஆதுவோ ஏர்ஹோஸ்டை பார்த்து வாவ் அழகிங்கடா என்றான்".

"ஏண்டா இவங்களை விட அழகான பொண்ணுங்களை நாம பார்க்கலையா என்க,எருமைங்களா நல்லா உத்து பாருங்கடா. இவங்க கிட்ட தனித்துவமாய் ஒரு அழகு தெரிகிறதென்றான்".

"சரி சரி செருப்படி வாங்காமல் நீயே ரசித்து பாருடானு நண்பர்கள் சொல்ல, அட பரதேசிங்களா?.எவ்வளவு நல்ல எண்ணம்டா உங்களுக்கு".

"கண்டிப்பா, அதில் என்ன சந்தேகம்டா என்றனரங".

"ஒரு மணி நேரம் வானில் பறந்து வந்த ஏர் இந்தியா விமானம், கோவை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது".

"பின்னர் ஐவரும் தங்கள் லக்கேஜோடு வெளியே வர, அவர்களுக்காய் ராம் அங்கே காத்திருப்பதை பார்த்து, ஏர்போர்ட் என்பதையும் மறந்து, ஓடிப்போய் நண்பனை கட்டிக்கொண்டனர்".

"ராம்கும் நண்பர்களை பார்த்த சந்தோஷத்தில் பேச்சு வரவில்லை".

"சரிடா வாங்க போகலாமென்றவன், நண்பர்களோடு வாசலுக்கு வர, அவர்களுக்கு முன்பு வந்து நின்றது டிராவலர் வேன்".

"வேலையாள் ஒருவர், அவர்களுடைய லக்கேஜை ஏற்ற, இவனுங்கள் உள்ளே போய் உட்கார்ந்த சிறிது நிமிடத்தில், வீட்டை நோக்கி வேன் புறப்பட்டது".

"ஏர்போர்ட்டிலிருந்து ராம் வீட்டிற்கு ஒரு மணி நேரப்பயணம்".

"கேலி, கிண்டல்களோடு அந்த பங்களாவிற்கு முன்பு வந்து வேன் நிற்க, வாங்கடா என்றவாறே ராம் கீழே இறங்க, மற்றவர்களும் இறங்கி, அந்த ஏரியாவை சுற்றி பார்த்தனர்".

"அத்தனை வீடுகளும், ஒவ்வொரு வித மாடலில் கண்ணுக்கு அழகாய் தெரிந்தது".

"வாங்க கண்ணுங்களானு சொல்லிக்கொண்டே, அங்கு வந்தார் ராம் அப்பா சிவன்".

"வரோம் அங்கிள் என்றனர்".

"உள்ளே வாங்க கண்ணுங்களா, இப்போவாது ஊட்டுக்கு வர தோணிச்சே என்று சிரித்தார்".

"அங்கு வந்த ராமுடைய அம்மா வரலெட்சுமி,என்ன புள்ளைங்களை வாசல்ல நிக்க வச்சி பேசிக்கிட்டு என்க,
அம்மா நல்லா இருக்கீங்களா என்கவும் போங்கடா, ஒருத்தன் கிட்டயும் நான் பேச மாட்டேன் என்றார்".

"அய்யோ லெட்சு டார்லிங், நாங்க வரோம்னு சொல்லும் போதெல்லாம், இந்த ஆது எருமை தான் எதாவது ஒன்னை இழுத்து வைக்கிறான் என்றான் விக்டர்".

"டேய் நிறுத்துங்கடா, ஆது கண்ணு ஒரு வாரம் கூட வீடியோ கால் பண்ண மறக்குறதில்லை என்றவர், உள்ளே வாங்க கண்ணுங்களானு அழைத்துச் சென்றார்".

திருச்சூர்:

மைக்கேல் பிளாஸ் பேக்:

"மாமா... மாமா நிறுத்துங்க".

கடந்த காலத்தை சொல்லிக்கொண்டிருந்த மைக்கேலோ, ஆர்கலி சொன்னதைக்கேட்டு, ம்ம் என்றார்.

"அப்போ நீங்க நார்த் இண்டியனா?".

"ஆனால், பார்க்க நம் தமிழ் மண் போல தானே இருக்கீங்க?.

"மண்டை காயுதே என்றாள்".

"ஆர்கலி கேட்ட கேள்விகளுக்கு சிரித்தவர், என் மருமகள் புத்திசாலி தான் என்றார்".

"அதற்கு ஆர்கலியோ,விஷயத்திற்கு வாங்க மாமா, பிறகு பாராட்டுங்கள் என்க, சரிடா அம்மு".

"நீ நினைப்பது போல என்னோட பூர்வீகம் தமிழ்நாடு தான். அதாவது என்னோட தாத்தாவோட தாத்தா மதுரை".

"அவர் துணி வியாபாரம் செய்ய, பீகாருக்கு வந்துருக்கிறார். பிறகு அங்கையே செட்டில் ஆகிட்டாங்க".

"மூன்று தலைமுறையா பீகார்ல போஜ்பூர்ல தான் இருந்தது. எல்லாம் நல்லா போயிட்டு இருந்துச்சி அம்மு".

"கோயில் பூஜைக்கு போய்ட்டு வரும் போது, கட்சிகாரன் சண்டையில் பஸ்ஸை கொளுத்திட்டானுங்க".

"அதில் எல்லாருமே இறந்துட்டாங்க. என்னை மட்டும், தாத்தா ஜன்னல் வழியா தூக்கி எறிஞ்சதில், நான் போய் புதர் மண்டிய இடத்தில் விழுந்து மயக்கமாகிட்டேன்".

"மறுநாள் கண் திறந்து பார்க்க,ஒரு வயதானவர் வீட்டில் படுத்திருந்தேன்".

"அப்போ எனக்கு ஏழு வயசு, அவர் கிட்ட விஷயத்தை சொல்லி அழுதேன், சரினு என்னையும் கூப்பிட்டு,அந்த இடத்துக்கு போன பிறகு தான், பஸ்ஸில் இருந்த யாருமே உயிரோட இல்லைனு தெரிஞ்சது".

"பிறகு அவர் கிட்ட தான் வளர்ந்தேன். அவர் தான் எனக்கு மெக்கானிக் வேலையை கத்து குடுத்தார்".

"அப்படியே வாழ்க்கை ஓட ஆரம்பிச்சிது, என்னோட பதினெட்டு வயசுல அந்த தாத்தாவும் இறந்துட்டார்".

"பிறகு அந்த சின்ன வீடு இருந்த இடத்தை விற்று விட்டு, கயாக்கு வந்து அந்த பணத்தில் இடத்தை வாங்கி, அங்கையே மெக்கானிக் ஷாப் வச்சேன்".

"அச்சோ என்று வருத்தப்பட்டவள், அப்போ அத்தையை பார்த்ததும் காதல் வந்துச்சோ என்றவள், பிறகு ஏன் மாமா கஞ்சா விற்றீங்க?".

"சொல்லுறேன் அம்மு... முழுதா கேட்ட பிறகு, உனக்கு விஷயம் புரியும்டா".

"சரி மாமா, அப்போ விட்டதில் இருந்து ஆரம்பிங்க என்க,சரிடா என்றவாறே மீண்டும் தனது கடந்த காலத்தில் மைக்கேல் மூழ்கினார்".

பீகார் மாநிலம்- கயை மாவட்டம்.

"சுவர் பக்கம் திரும்பி நின்றவள், தன் காதில் கேட்ட விஷயத்தால் அதிர்ந்து திரும்ப, மைக்கேலின் மேல் இடித்து நின்றாள்".

"அப்பொழுது கரீம் வரும் காலடி சத்தம் கேட்க, மனமில்லாமல் அவளிடமிருந்து விலகிப்போய், அங்கிருந்த ஸ்டூலின் மேல் உட்கார்ந்தவன், விட்ட வேலையை தொடர்ந்தான்".

"பாய் என்றபடியே உள்ளே வந்தவன் டீயை கொடுக்க, முதல்ல அங்க காஃபிய குடுடா என்றான்".

"ம்ம் என்றவன் திதி(அக்கா) என்று காஃபி கிளாசை நீட்ட, அந்த நேரம் ஷாலிக்கும் அது தேவையாகத்தான் இருந்தது".

"கரீமிடமிருந்து வாங்கியவள், மைக்கேலை பார்க்காமல் கீழே குனிந்து கொண்டு குடித்து முடித்தாள்".

"வெளியே எட்டி பார்க்க மழை விட்ட போல தெரியவில்லை".

" மேலும் ஒரு மணி நேரம் சென்ற பிறகே மழை விட்டது".

" ஷாலியின் உடையும் அங்கிருந்த ஃபேன் காற்று பட்டு காய்ந்தது, பின்னர் தேங்க்யூ என்று மட்டும் சொல்லி விட்டு, வெளியே சென்று விட்டாள்".

நாட்களும் நத்தை போல நகர, தன் உள்ளுணர்வில் தோன்றுவதற்கு காரணமானவன் ,மைக்கேல் என்பதை கண்டு கொண்டாள்.

"மைக்கேலுக்கும் அங்கே பிஸ்னஸ் முடிந்து விட, இரவோடு இரவாக கயைக்கு வந்து விட்டான்".

"அவன் கடை வழியாக தான் கல்லூரிக்கு போக வேண்டுமென்பதால், சில நாட்களாக கடை பூட்டியிருக்கவும், அவனை காணமலும் உள்ளுக்குள் தவித்து போனாள்".

ஆர்கலி எங்கே....?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top