Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
இலங்கை இரத்தினபுரி:
மகன் சொன்னதைக் கேட்ட ஆனந்தன்,ஆது என்று பல்லை கடித்தவர்,என் மனைவிக்கு என்னுடைய நிலைமை நல்லாவே தெரியும்.
"உனக்கு அம்மா ஆவதற்கு முன்பே, எனக்கு பொண்டாட்டியானவள்,அதை முதலில்புரிந்து கொள்".
" அப்புறம்,ரெண்டு பேரும் சீக்கிரமா இங்கிருந்து கிளம்பற வழியை பாருங்களென்று சொல்லி விட்டு காரிலிருந்து இறங்கி சென்றார்".
"டேய் ஏன்டா இப்படி பண்றனு ருத்ரன் கேட்க,வேற என்னடா பண்றது?".
"எனக்குனு இருக்கிறது இவர் மட்டும் தானென்று ஆது கண் கலங்க,அப்படி எல்லாம் மாமாக்கு எதுவும் ஆகாதுடா".
அப்போ என்னலாம் பாத்தால் உனக்கு மனுஷனா தெரியலையா?.
"டேய் நான் ஒரு பேச்சுக்கு சொன்னேனென்று நண்பனை கூல் படுத்தியவன், இப்போ என்னடா பண்றது என்க,சரி மாமா சொன்ன போல இங்கிருந்து நாம போலாம்".
"கொஞ்சம் சுற்றி பாரு,போலீஸ் மப்டியில் இங்குதான் இருக்காங்க என்க,ஆதுவும் அதைப்போல் பார்த்துவிட்டு பின் மனமே இல்லாமல், இருவரும் அங்கிருந்து கிளம்பினர்".
"கொஞ்ச தூரம் போய் ஓரமாக காரை நிறுத்தி விட்டு,காரிலிருந்து இருவரும் இறங்கி பேங்க்கை நோக்கி வந்தனர்".
"ஆது கன் எடுத்துகிட்டியா?என்க, பேங்கிற்கு தானே போறோம்னு, நான் வீட்டிலே வச்சிட்டு வந்துட்டேன்டா".
அறிவு கெட்டவனே,எத்தனை முறை உன் கிட்ட சொல்றது கன் எதுக்கும் நம்ம கிட்ட இருக்கட்டுமென்று?,எதுக்கு தான் லைசென்ஸோடு வாங்கிருக்கோம்டா என்று கடிந்து கொண்ட ருத்ரன்,தனது இடுப்பில் கன் இருக்கானு பார்த்துக்கொண்டான்.
"இருவரும் பேங்க் அருகில் வரும் போதே,அங்கு ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது".
"டேய் அங்க என்னாச்சிடா என்றவாறே இருவரும் ஓடி வந்தவர்கள் என்னாச்சுனு கேட்க,கொள்ளை கும்பல்,பேங்கில் நுழைச்சிட்டாங்க".துப்பாக்கி முனையில் எல்லாரையும் பூட்டி வச்சிருக்காங்களென்றனர்.
அப்பாயென்று ஆது தேடி பார்க்க, ஆனந்தன் அங்கு இருப்பது போல தெரியவில்லை.
"அப்பொழுது கண்ணாடியை உடைத்துக்கொண்டு,முகமூடி போட்டுக்கொண்ட ஒருவன்,பேங்க் வாசலில் வந்து விழுந்தான்".
"அங்கே போலீஸ் வண்டியின் சைரன் சத்தம் கேட்க,கூடியிருந்த மக்களோ சத்தம் வரும் திசையை நோக்கி பார்த்தனர்".
"வண்டியிலிருந்து கீழே இறங்கிய போலீஸ்காரர்கள்,அடிபட்டு கீழே விழுந்து கிடந்தவன் கையில் விலங்கை மாட்டி விட்டு,பேங்க்கின் உள்ளே சென்றனர்".
"அங்கு,மற்ற கொள்ளையர்கள் கை,கால் கட்டப்பட்டு தரையில் கிடந்தனர்".
"ஆனந்தனை பார்த்து கண்ணசைத்து விட்டு,அவர்களை இழுத்துக்கொண்டு சென்றனர்".
"ஆனந்தனிடம் வந்த மேனேஜர் ரொம்ப நன்றிங்க சார்.தக்க சமயத்தில் என்னை காப்பாற்றினீர்கள் என்று சொல்ல, இதுல என்ன இருக்குங்க சார்,ஒரு குடிமகனாக இது என்னுடைய கடமை".
"ஆனந்தன் வெளியே வருவதை பார்த்த ருத்ரன்,டேய் மாமாடா என்க,வாடா என்றவாறே அவரிடம் வேகமாக சென்றவர்கள்,உங்களுக்கு ஒன்னும் இல்லையே என்க அங்கிருந்த இருவரையும் பார்த்தவர்,அடேய் இன்னும் நீங்க போகலையாடா? உங்க ரெண்டு பேர் கிட்ட மீட்டிங் தானே அட்டென்ட் பண்ண சொன்னேன்".
"உங்களை என்று,இருவரும் பல்லை கடித்தனர்".
"ஹாஹாஹாஹா என்றவர்,அடேய் இது தான் என்னுடைய கடைசி கேஸ் டா,நெக்ஸ்ட் வீக் எனக்கு ரிட்டையர்மெண்ட், நீங்க வீட்டுக்கு போங்க,நான் ஆபிஸிற்கு போறேனென்று சொல்லிச்சென்றார்".
"என்னடா இவர் நமக்கு பல்பு கொடுத்துட்டு போகிறாரென்று ஆது சொல்ல,என்னமோ இது நமக்கு புதுசு போல தான்,அட வாடா போகலாமென்று ருத்ரன் போக,உனக்கு இது தேவையா ஆதுவென்று ஒரு விரலை தனது முகத்தை நீட்டி கேட்டவன்,டேய் நில்லுடா என்றவாறே ருத்ரனின் பின்னே ஓடினான்.
" சிம்ஹன் பேலஸிற்குள் வந்த நண்பர்கள் இருவரும்,ஹப்பாடானு ஓய்ந்து போய் சோபாவில் உட்கார்ந்தனர்".
"இருவரையும் பார்த்த கிரிஜா பாட்டி, என்னப்பா ஆச்சு?.
ஏன் இப்படி இருக்கீங்க?.
இருவரும் அமைதியாக இருப்பதை பார்த்தவர்,ஏன் ஆது கண்ணா போன காரியம் சக்சஸ் ஆகலையாப்பா,சரி விடுங்க.இந்த பேங்க் மட்டுமா அதிசயமா இருக்கு?."ஊர் உலகத்தில் எத்தனையே பேங்க் இருக்கு.அதில் ஒன்னுல லோன் கிடைக்குமென்றார்".
கிரிஜா பாட்டி சொன்னதை கேட்ட ஆது,அடேய் கிரி,தலை வலிக்குது.
மனுஷன் குடிக்கிற போல,இரண்டு இஞ்சி டீ எடுத்துட்டு வா.
அடேய் என பல்லை கடித்தவர்,உள்ளே போய் வேலையாளிடம் இஞ்சி டீ போட்டு வந்து,இருவரிடம் கொடுக்கச்சொன்னார்.
"சிறிது நிமிடத்தில்,வேலையாள் இருவருக்கும் டீ கொண்டு வந்து கொடுத்து செல்ல,இருவரும் டீயை குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்த கிரிஜா பாட்டி, தன் கையில் வைத்திருந்த நியூஸ் பேப்பரை சுருட்டி எடுத்து போய், அங்கிருந்த பேரன்கள் இருவரின் தலையில் பட்டு பட்டென்று அடித்தார்".
அட,கிரிஈஈஈ உனக்கு என்ன கிறுக்கு எதாவது புடிச்சிட்டா என்று ஆது கேட்க,ஆமாடா ஆமாம் என்றார். மனுஷன் குடிக்கிற போலவா உனக்கு டீ கேட்குதென்று சொல்லி,ஆதவன் தலையில் மேலும் இரண்டு அடியை கொடுத்தார் கிரிஜா பாட்டி".
" போன காரியம் சக்சஸ் தான் கிரி, ஆனால் அங்கு நடந்தது வேறென்று, பாட்டியிடம் எல்லாவற்றையும் சொன்னான்".
" ப்பூஊஊஊ இவ்வளவு தானா என்றார்".
" எதேஏஏஏ இவ்வளவு தானானு சொல்லுறியே கிரி,அப்போ இந்த விஷயம் எல்லாம் உனக்கு முன்பே தெரியுமா?".
" ஹா ஹா என்று சிரித்தவர் எனக்கு தெரியாமல் எப்படிடா இருக்கும்".
" ரெண்டு பேரும் மேல்படிப்பு படிக்க கனடா போய்ட்டீங்க,அந்த கேப்பில் இங்கு எவ்வளவோ நடந்து விட்டது".
" இப்போ நம்ம மக்கள் நிம்மதியா இங்கு பிஸ்னஸ் பண்ண,நம்ப ஆனந்தனோட உழைப்பு தான் முக்கியமான காரணம்பா".விரும்பி ஆசப்பட்டு இந்த வேலையில் சேர்ந்த புள்ளை,அடுத்த வாரம் இதோ வெற்றிகரமா முடிக்க போகுதென்றார்".
" அப்போ எல்லா விஷயமும் தெரிஞ்சி கிட்டு நீயும் கம்முனு இருக்கிறியா கிரி என்க,போங்கடா பிஸ்கோத்துங்களா".
என்ன வெங்காயத்துக்கு உங்ககிட்ட எல்லாவற்றையும் சொல்லணும்?,போங்கடா போங்க.போய் பொழப்ப பாருங்கடானு சொல்லிக்கொண்டே அங்கிருந்து சென்றார் கிரிஜா பாட்டி".
பொள்ளாச்சி:
வேலை முடிந்து அனைவரும் வீட்டிற்கு கலைந்து சென்றனர்.வீட்டிற்கு வந்த ஜனனியும்,தோட்டத்தில் கீற்று மறைவில் இருந்த பாத்ரூமில் குளித்து முடித்தவள், உள்ளே போய் வேறு உடையை மாற்றிக்கொண்டு அப்பாவிடம் சொல்லிக்கொண்டு பெரிய வீட்டிற்கு சென்றாள்.
"போகும் மகளை பார்த்துக் கொண்டிருந்த மாரியப்பன்,படித்த புள்ளை,மகன் போல கஷ்டப்படுதேனு கலங்கி போனார்".
"மகனின் வருத்தமான முகத்தை பார்த்துக்கொண்டே வந்த ராக்கம்மா பாட்டி,அய்யா மதியம் சாப்பிட்டியா?.
மருந்தெல்லாம் சாப்பிட்டியா?,ஆச்சுமா என்றவர்,ஆம்பளை நான் குத்து கல்லு போல வீட்டில் இருக்க,நீங்க ரெண்டு பேரும் கஷ்டபடுறீங்கிளேனு கண்கலங்க,அய்யா,எதுக்கு ராசா அழுற.
ஆணுக்கு ஆணா, பொண்ணுக்கு பொண்ணா மவளை பெத்து வச்சிருக்கைய்யா என்க,ஆமாம்மா நல்லவன் ஒருத்தன் கையில் புடிச்சு கொடுத்துட்டா கவலை தீர்ந்துடுமென்று மாரியப்பன் சொல்ல, நேரம் கூடி வந்தால் எல்லாம் நடக்கும் ராசா.
அவளுக்குனு இனி புதுசா பொறக்கவா போறானென்றவர், வீட்டின் உள்ளே சென்று மகனுக்கு வரகாப்பியை போட்டார்.
இரும்பு கேட்டை திறந்து உள்ளே வந்தவளை மேலே இருந்து வெற்றியும் பார்த்துக் கொண்டிருந்தான்.
"மாரியப்பன் தான் அந்த வீட்டிற்கு இத்தனை வருடமாக கணக்கு பிள்ளையாக இருந்தார்".
சில நாட்களுக்கு முன்பு,வயல் வேலையை மேற்பார்வை பார்த்துக்கொண்டே வரப்பில் நடந்து வரும் போது,சேறு வழிக்கி கீழே விழ, வலது கையில் மூட்டு நழுவி விட்டதென்று,மாவு கட்டு போட்டிருக்கின்றார்.
"இனி கணக்கு பிள்ளை வேலையை தானே பார்த்துக்கொள்வதாக சத்தியமூர்த்தியிடம் ஜனனி வந்து சொல்ல,சிரித்துக் கொண்டே சரிமா என்று சொல்லிவிட்டார்" .
அதனால்,கடந்த ஒரு மாதமாக,
வரவு செலவு எல்லாம் ஜனனி தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
"அவளுக்காக ஒரு அறையை பெரியவர் கொடுக்க,மாலை நேரத்தில் வந்து அனைத்தையும் எழுதி வைப்பது தான் வழக்கமாக ஜனனி செய்யும் வேலை".
கதவை திறந்து உள்ளே வந்தவள், அலமாரியில் இருந்து நோட்டை எடுத்து,இன்று மொத்தமாக எத்தனை பேர் வயலில் வேலை செய்தார்கள் என்றும்,அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்றும்,கணக்கு பண்ணி எழுதி முடிக்க ஜனனிக்கு அரை மணி நேரம் ஆனது.
பின்னர் நோட்டோடு வெளியே வந்தவள்,பெரியவரை தேட, சத்தியமூர்த்தி ஊஞ்சலில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.
மாமானு கூப்பிட்டுக்கொண்டே அவரிடம் வந்தவள்,நோட்டை காட்டி சம்பளம் எவ்வளவு என்பதை சொல்லி விட்டு மணியை பார்க்க,மாலை ஐந்து என்று காட்டியது.
ஆறு மணிக்கு மேல் வீட்டிலிருந்து பணம்,உப்பு இவைகளை கொடுப்பது நல்லதல்லனு ராக்கம்மா பாட்டி சொல்லுவார்.
மாமா நான் போய் சம்பளத்தை கொடுக்குறேன் என்றவள், அங்கிருந்து வேகமாக ரூமிற்குள் வந்தவள்,டிராவிலிருந்த சாவியை எடுத்து, பீரோவை திறந்தவள், தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு,மீண்டும் பூட்டி விட்டு வெளியே வந்தாள்.
அங்கே சிலர் சம்பளத்துக்கு காத்திருக்க,ஆண்களுக்கான பணத்தை ஒருவரிடமும், பெண்களுக்கான பணத்தை இவள் எடுத்துக் கொண்டு உள்ளே வந்தவள்,சத்தியமூர்த்தியிடம் சொல்லிக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றாள்.
பெரியம்மா,பெரியம்மா என்ற குரல் வாசலில் கேட்க,யாருத்தா என்று கேட்டபடியே வெளியே வந்த கண்ணம்மா பாட்டி,அங்கிருந்த தனது கூடப்பிறந்தா அக்கா மகளை பார்த்தவர்,என்ன பெத்த ஆத்தா மலரு என்று அதிர்ந்தார்.
நானே தான் பெரியம்மா என்றவர், நல்லா இருக்கியாம்மா?, நல்லாயிருக்கேன் ஆத்தா.
நீ எப்படி இருக்க?.
இன்றைக்கு தான் இந்த பெரியாத்தாளை கண்ணுக்கு தெரிஞ்சிதாத்தா என்றவர்,உள்ளே வாம்மானு கூப்பிட்டுக்கொண்டே வீட்டின் உள்ளே சென்றவர்,நீ இரு நான் போய் டீ வாங்கிட்டு வரேனென்று சொம்போடு வெளியே சென்றார்.
கால் மணி நேரத்தில் டீ சொம்போடு உள்ளே வந்தவர்,எத்தா மலரு இந்தா டீ குடி என்று சொம்பை கீழே வைத்து விட்டு,உள்ளே போய் டம்ளரோடு வந்தவர்,அங்கிருந்த மண் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தார்.
தனக்கும் பெரியம்மாவிற்கும் டம்ளரில் டீயை ஊற்றியவர், இந்தாம்மா என்று கண்ணம்மா பாட்டியிடம் நீட்ட,இருவரும் டீயை குடித்து முடித்தனர்.
"எம்புட்டு மாசமாவது உன்னை பார்த்து".
மருமவன் பேர புள்ளைங்களாம் நல்லா இருக்காங்களா?என்று பாட்டி கேட்க,எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா,நீ ஜனனி,அங்க அத்தை வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா?.
" என்னத்தை சொல்ல,உன் தங்கச்சி புருஷன் தான் கீழே விழுந்து கையில கட்டு போட்டுருக்குத்தா".
" அவளை ஒருத்தவன் கையில புடிச்சி குடுத்துட்டா,உங்கப்பனும், உன் தங்கச்சி மல்லிகாவும் போன இடத்துக்கே,நான் போய்டுவேனென்று சொல்லி பாட்டி கண் கலங்கினார்".
" அம்மா, நானும் அது சம்பந்தமா தான் உங்ககிட்ட பேச வந்துருக்கேன் என்க, அதை கேட்டவர் என்னத்தா சொல்லுறனு கண்ணம்மா பாட்டி அதிர்ந்து போனார்".
மகன் சொன்னதைக் கேட்ட ஆனந்தன்,ஆது என்று பல்லை கடித்தவர்,என் மனைவிக்கு என்னுடைய நிலைமை நல்லாவே தெரியும்.
"உனக்கு அம்மா ஆவதற்கு முன்பே, எனக்கு பொண்டாட்டியானவள்,அதை முதலில்புரிந்து கொள்".
" அப்புறம்,ரெண்டு பேரும் சீக்கிரமா இங்கிருந்து கிளம்பற வழியை பாருங்களென்று சொல்லி விட்டு காரிலிருந்து இறங்கி சென்றார்".
"டேய் ஏன்டா இப்படி பண்றனு ருத்ரன் கேட்க,வேற என்னடா பண்றது?".
"எனக்குனு இருக்கிறது இவர் மட்டும் தானென்று ஆது கண் கலங்க,அப்படி எல்லாம் மாமாக்கு எதுவும் ஆகாதுடா".
அப்போ என்னலாம் பாத்தால் உனக்கு மனுஷனா தெரியலையா?.
"டேய் நான் ஒரு பேச்சுக்கு சொன்னேனென்று நண்பனை கூல் படுத்தியவன், இப்போ என்னடா பண்றது என்க,சரி மாமா சொன்ன போல இங்கிருந்து நாம போலாம்".
"கொஞ்சம் சுற்றி பாரு,போலீஸ் மப்டியில் இங்குதான் இருக்காங்க என்க,ஆதுவும் அதைப்போல் பார்த்துவிட்டு பின் மனமே இல்லாமல், இருவரும் அங்கிருந்து கிளம்பினர்".
"கொஞ்ச தூரம் போய் ஓரமாக காரை நிறுத்தி விட்டு,காரிலிருந்து இருவரும் இறங்கி பேங்க்கை நோக்கி வந்தனர்".
"ஆது கன் எடுத்துகிட்டியா?என்க, பேங்கிற்கு தானே போறோம்னு, நான் வீட்டிலே வச்சிட்டு வந்துட்டேன்டா".
அறிவு கெட்டவனே,எத்தனை முறை உன் கிட்ட சொல்றது கன் எதுக்கும் நம்ம கிட்ட இருக்கட்டுமென்று?,எதுக்கு தான் லைசென்ஸோடு வாங்கிருக்கோம்டா என்று கடிந்து கொண்ட ருத்ரன்,தனது இடுப்பில் கன் இருக்கானு பார்த்துக்கொண்டான்.
"இருவரும் பேங்க் அருகில் வரும் போதே,அங்கு ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது".
"டேய் அங்க என்னாச்சிடா என்றவாறே இருவரும் ஓடி வந்தவர்கள் என்னாச்சுனு கேட்க,கொள்ளை கும்பல்,பேங்கில் நுழைச்சிட்டாங்க".துப்பாக்கி முனையில் எல்லாரையும் பூட்டி வச்சிருக்காங்களென்றனர்.
அப்பாயென்று ஆது தேடி பார்க்க, ஆனந்தன் அங்கு இருப்பது போல தெரியவில்லை.
"அப்பொழுது கண்ணாடியை உடைத்துக்கொண்டு,முகமூடி போட்டுக்கொண்ட ஒருவன்,பேங்க் வாசலில் வந்து விழுந்தான்".
"அங்கே போலீஸ் வண்டியின் சைரன் சத்தம் கேட்க,கூடியிருந்த மக்களோ சத்தம் வரும் திசையை நோக்கி பார்த்தனர்".
"வண்டியிலிருந்து கீழே இறங்கிய போலீஸ்காரர்கள்,அடிபட்டு கீழே விழுந்து கிடந்தவன் கையில் விலங்கை மாட்டி விட்டு,பேங்க்கின் உள்ளே சென்றனர்".
"அங்கு,மற்ற கொள்ளையர்கள் கை,கால் கட்டப்பட்டு தரையில் கிடந்தனர்".
"ஆனந்தனை பார்த்து கண்ணசைத்து விட்டு,அவர்களை இழுத்துக்கொண்டு சென்றனர்".
"ஆனந்தனிடம் வந்த மேனேஜர் ரொம்ப நன்றிங்க சார்.தக்க சமயத்தில் என்னை காப்பாற்றினீர்கள் என்று சொல்ல, இதுல என்ன இருக்குங்க சார்,ஒரு குடிமகனாக இது என்னுடைய கடமை".
"ஆனந்தன் வெளியே வருவதை பார்த்த ருத்ரன்,டேய் மாமாடா என்க,வாடா என்றவாறே அவரிடம் வேகமாக சென்றவர்கள்,உங்களுக்கு ஒன்னும் இல்லையே என்க அங்கிருந்த இருவரையும் பார்த்தவர்,அடேய் இன்னும் நீங்க போகலையாடா? உங்க ரெண்டு பேர் கிட்ட மீட்டிங் தானே அட்டென்ட் பண்ண சொன்னேன்".
"உங்களை என்று,இருவரும் பல்லை கடித்தனர்".
"ஹாஹாஹாஹா என்றவர்,அடேய் இது தான் என்னுடைய கடைசி கேஸ் டா,நெக்ஸ்ட் வீக் எனக்கு ரிட்டையர்மெண்ட், நீங்க வீட்டுக்கு போங்க,நான் ஆபிஸிற்கு போறேனென்று சொல்லிச்சென்றார்".
"என்னடா இவர் நமக்கு பல்பு கொடுத்துட்டு போகிறாரென்று ஆது சொல்ல,என்னமோ இது நமக்கு புதுசு போல தான்,அட வாடா போகலாமென்று ருத்ரன் போக,உனக்கு இது தேவையா ஆதுவென்று ஒரு விரலை தனது முகத்தை நீட்டி கேட்டவன்,டேய் நில்லுடா என்றவாறே ருத்ரனின் பின்னே ஓடினான்.
" சிம்ஹன் பேலஸிற்குள் வந்த நண்பர்கள் இருவரும்,ஹப்பாடானு ஓய்ந்து போய் சோபாவில் உட்கார்ந்தனர்".
"இருவரையும் பார்த்த கிரிஜா பாட்டி, என்னப்பா ஆச்சு?.
ஏன் இப்படி இருக்கீங்க?.
இருவரும் அமைதியாக இருப்பதை பார்த்தவர்,ஏன் ஆது கண்ணா போன காரியம் சக்சஸ் ஆகலையாப்பா,சரி விடுங்க.இந்த பேங்க் மட்டுமா அதிசயமா இருக்கு?."ஊர் உலகத்தில் எத்தனையே பேங்க் இருக்கு.அதில் ஒன்னுல லோன் கிடைக்குமென்றார்".
கிரிஜா பாட்டி சொன்னதை கேட்ட ஆது,அடேய் கிரி,தலை வலிக்குது.
மனுஷன் குடிக்கிற போல,இரண்டு இஞ்சி டீ எடுத்துட்டு வா.
அடேய் என பல்லை கடித்தவர்,உள்ளே போய் வேலையாளிடம் இஞ்சி டீ போட்டு வந்து,இருவரிடம் கொடுக்கச்சொன்னார்.
"சிறிது நிமிடத்தில்,வேலையாள் இருவருக்கும் டீ கொண்டு வந்து கொடுத்து செல்ல,இருவரும் டீயை குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்த கிரிஜா பாட்டி, தன் கையில் வைத்திருந்த நியூஸ் பேப்பரை சுருட்டி எடுத்து போய், அங்கிருந்த பேரன்கள் இருவரின் தலையில் பட்டு பட்டென்று அடித்தார்".
அட,கிரிஈஈஈ உனக்கு என்ன கிறுக்கு எதாவது புடிச்சிட்டா என்று ஆது கேட்க,ஆமாடா ஆமாம் என்றார். மனுஷன் குடிக்கிற போலவா உனக்கு டீ கேட்குதென்று சொல்லி,ஆதவன் தலையில் மேலும் இரண்டு அடியை கொடுத்தார் கிரிஜா பாட்டி".
" போன காரியம் சக்சஸ் தான் கிரி, ஆனால் அங்கு நடந்தது வேறென்று, பாட்டியிடம் எல்லாவற்றையும் சொன்னான்".
" ப்பூஊஊஊ இவ்வளவு தானா என்றார்".
" எதேஏஏஏ இவ்வளவு தானானு சொல்லுறியே கிரி,அப்போ இந்த விஷயம் எல்லாம் உனக்கு முன்பே தெரியுமா?".
" ஹா ஹா என்று சிரித்தவர் எனக்கு தெரியாமல் எப்படிடா இருக்கும்".
" ரெண்டு பேரும் மேல்படிப்பு படிக்க கனடா போய்ட்டீங்க,அந்த கேப்பில் இங்கு எவ்வளவோ நடந்து விட்டது".
" இப்போ நம்ம மக்கள் நிம்மதியா இங்கு பிஸ்னஸ் பண்ண,நம்ப ஆனந்தனோட உழைப்பு தான் முக்கியமான காரணம்பா".விரும்பி ஆசப்பட்டு இந்த வேலையில் சேர்ந்த புள்ளை,அடுத்த வாரம் இதோ வெற்றிகரமா முடிக்க போகுதென்றார்".
" அப்போ எல்லா விஷயமும் தெரிஞ்சி கிட்டு நீயும் கம்முனு இருக்கிறியா கிரி என்க,போங்கடா பிஸ்கோத்துங்களா".
என்ன வெங்காயத்துக்கு உங்ககிட்ட எல்லாவற்றையும் சொல்லணும்?,போங்கடா போங்க.போய் பொழப்ப பாருங்கடானு சொல்லிக்கொண்டே அங்கிருந்து சென்றார் கிரிஜா பாட்டி".
பொள்ளாச்சி:
வேலை முடிந்து அனைவரும் வீட்டிற்கு கலைந்து சென்றனர்.வீட்டிற்கு வந்த ஜனனியும்,தோட்டத்தில் கீற்று மறைவில் இருந்த பாத்ரூமில் குளித்து முடித்தவள், உள்ளே போய் வேறு உடையை மாற்றிக்கொண்டு அப்பாவிடம் சொல்லிக்கொண்டு பெரிய வீட்டிற்கு சென்றாள்.
"போகும் மகளை பார்த்துக் கொண்டிருந்த மாரியப்பன்,படித்த புள்ளை,மகன் போல கஷ்டப்படுதேனு கலங்கி போனார்".
"மகனின் வருத்தமான முகத்தை பார்த்துக்கொண்டே வந்த ராக்கம்மா பாட்டி,அய்யா மதியம் சாப்பிட்டியா?.
மருந்தெல்லாம் சாப்பிட்டியா?,ஆச்சுமா என்றவர்,ஆம்பளை நான் குத்து கல்லு போல வீட்டில் இருக்க,நீங்க ரெண்டு பேரும் கஷ்டபடுறீங்கிளேனு கண்கலங்க,அய்யா,எதுக்கு ராசா அழுற.
ஆணுக்கு ஆணா, பொண்ணுக்கு பொண்ணா மவளை பெத்து வச்சிருக்கைய்யா என்க,ஆமாம்மா நல்லவன் ஒருத்தன் கையில் புடிச்சு கொடுத்துட்டா கவலை தீர்ந்துடுமென்று மாரியப்பன் சொல்ல, நேரம் கூடி வந்தால் எல்லாம் நடக்கும் ராசா.
அவளுக்குனு இனி புதுசா பொறக்கவா போறானென்றவர், வீட்டின் உள்ளே சென்று மகனுக்கு வரகாப்பியை போட்டார்.
இரும்பு கேட்டை திறந்து உள்ளே வந்தவளை மேலே இருந்து வெற்றியும் பார்த்துக் கொண்டிருந்தான்.
"மாரியப்பன் தான் அந்த வீட்டிற்கு இத்தனை வருடமாக கணக்கு பிள்ளையாக இருந்தார்".
சில நாட்களுக்கு முன்பு,வயல் வேலையை மேற்பார்வை பார்த்துக்கொண்டே வரப்பில் நடந்து வரும் போது,சேறு வழிக்கி கீழே விழ, வலது கையில் மூட்டு நழுவி விட்டதென்று,மாவு கட்டு போட்டிருக்கின்றார்.
"இனி கணக்கு பிள்ளை வேலையை தானே பார்த்துக்கொள்வதாக சத்தியமூர்த்தியிடம் ஜனனி வந்து சொல்ல,சிரித்துக் கொண்டே சரிமா என்று சொல்லிவிட்டார்" .
அதனால்,கடந்த ஒரு மாதமாக,
வரவு செலவு எல்லாம் ஜனனி தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
"அவளுக்காக ஒரு அறையை பெரியவர் கொடுக்க,மாலை நேரத்தில் வந்து அனைத்தையும் எழுதி வைப்பது தான் வழக்கமாக ஜனனி செய்யும் வேலை".
கதவை திறந்து உள்ளே வந்தவள், அலமாரியில் இருந்து நோட்டை எடுத்து,இன்று மொத்தமாக எத்தனை பேர் வயலில் வேலை செய்தார்கள் என்றும்,அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்றும்,கணக்கு பண்ணி எழுதி முடிக்க ஜனனிக்கு அரை மணி நேரம் ஆனது.
பின்னர் நோட்டோடு வெளியே வந்தவள்,பெரியவரை தேட, சத்தியமூர்த்தி ஊஞ்சலில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.
மாமானு கூப்பிட்டுக்கொண்டே அவரிடம் வந்தவள்,நோட்டை காட்டி சம்பளம் எவ்வளவு என்பதை சொல்லி விட்டு மணியை பார்க்க,மாலை ஐந்து என்று காட்டியது.
ஆறு மணிக்கு மேல் வீட்டிலிருந்து பணம்,உப்பு இவைகளை கொடுப்பது நல்லதல்லனு ராக்கம்மா பாட்டி சொல்லுவார்.
மாமா நான் போய் சம்பளத்தை கொடுக்குறேன் என்றவள், அங்கிருந்து வேகமாக ரூமிற்குள் வந்தவள்,டிராவிலிருந்த சாவியை எடுத்து, பீரோவை திறந்தவள், தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு,மீண்டும் பூட்டி விட்டு வெளியே வந்தாள்.
அங்கே சிலர் சம்பளத்துக்கு காத்திருக்க,ஆண்களுக்கான பணத்தை ஒருவரிடமும், பெண்களுக்கான பணத்தை இவள் எடுத்துக் கொண்டு உள்ளே வந்தவள்,சத்தியமூர்த்தியிடம் சொல்லிக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றாள்.
பெரியம்மா,பெரியம்மா என்ற குரல் வாசலில் கேட்க,யாருத்தா என்று கேட்டபடியே வெளியே வந்த கண்ணம்மா பாட்டி,அங்கிருந்த தனது கூடப்பிறந்தா அக்கா மகளை பார்த்தவர்,என்ன பெத்த ஆத்தா மலரு என்று அதிர்ந்தார்.
நானே தான் பெரியம்மா என்றவர், நல்லா இருக்கியாம்மா?, நல்லாயிருக்கேன் ஆத்தா.
நீ எப்படி இருக்க?.
இன்றைக்கு தான் இந்த பெரியாத்தாளை கண்ணுக்கு தெரிஞ்சிதாத்தா என்றவர்,உள்ளே வாம்மானு கூப்பிட்டுக்கொண்டே வீட்டின் உள்ளே சென்றவர்,நீ இரு நான் போய் டீ வாங்கிட்டு வரேனென்று சொம்போடு வெளியே சென்றார்.
கால் மணி நேரத்தில் டீ சொம்போடு உள்ளே வந்தவர்,எத்தா மலரு இந்தா டீ குடி என்று சொம்பை கீழே வைத்து விட்டு,உள்ளே போய் டம்ளரோடு வந்தவர்,அங்கிருந்த மண் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தார்.
தனக்கும் பெரியம்மாவிற்கும் டம்ளரில் டீயை ஊற்றியவர், இந்தாம்மா என்று கண்ணம்மா பாட்டியிடம் நீட்ட,இருவரும் டீயை குடித்து முடித்தனர்.
"எம்புட்டு மாசமாவது உன்னை பார்த்து".
மருமவன் பேர புள்ளைங்களாம் நல்லா இருக்காங்களா?என்று பாட்டி கேட்க,எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா,நீ ஜனனி,அங்க அத்தை வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா?.
" என்னத்தை சொல்ல,உன் தங்கச்சி புருஷன் தான் கீழே விழுந்து கையில கட்டு போட்டுருக்குத்தா".
" அவளை ஒருத்தவன் கையில புடிச்சி குடுத்துட்டா,உங்கப்பனும், உன் தங்கச்சி மல்லிகாவும் போன இடத்துக்கே,நான் போய்டுவேனென்று சொல்லி பாட்டி கண் கலங்கினார்".
" அம்மா, நானும் அது சம்பந்தமா தான் உங்ககிட்ட பேச வந்துருக்கேன் என்க, அதை கேட்டவர் என்னத்தா சொல்லுறனு கண்ணம்மா பாட்டி அதிர்ந்து போனார்".