• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
கோவை மருத்துவமனை!

அழுது கொண்டிருக்கும் வேதாவிடம் வந்த நர்ஸ்,மேடம் டாக்டர் வந்துருவாங்க என்கவும்,திரும்பி பார்த்தவர்,அவர் எங்கே இருக்கார்?,அவங்க உடல் மார்ச்சுவரியில் இருக்கு.ஹாஸ்பிடலுக்கு வரும் போது இவங்க மட்டும் தான் சீரியஸா இருந்தாங்க.


"அவரோட உயிர் ஸ்பாட்லே போயிடுச்சாம்' என்று நர்ஸ் சொல்ல, அதைக் கேட்டு மயிலாவும், வேதாவும் சத்தமில்லாமல் குலுங்கி அழுதனர்."ப்ரொசூஜர் முடிச்ச பிறகு நீங்க பாடி எடுத்துட்டு போகலாம்".
ப்ளீஸ் மேடம்,வெளியில வாங்க.

டாக்டர்க்கு நான் இன்பார்ம் பண்ணனும் என்கவும்,அப்பொழுது இருவரும் பவி என்க,நான் பார்த்துக்குறேன் என்றார்.

மருது அங்கு இல்லாததை பார்த்த வேதா,எங்க மருது என்இ?,அவன் வெளியே போயிட்டான்மா.

ஹாஸ்பிடலில் இருந்து வெளியே வந்த மருது,வண்டியில் ஏறியவன் கண்களை மூடி,ஸ்டேரிங் மேல் சாய்ந்து கொண்டான்."கற்பனையிலும் நடக்காத ஒரு விஷயம் இப்பொழுது தன் வாழ்க்கையில் நடந்ததை,அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை".

தன் மன ஆசைகள் தெரிந்தும்,தாயே தன்னை இந்த நிலைமையில் தள்ளிவிட்டாரே,"மூன்று வருடக்காதல், ஒரே நிமிடத்தில் மண்ணா போய்விட்டதேயென்று குலுங்கி அழுதான் அந்த ஆண்மகன்".

தாமரை கூட எப்படியெல்லாம் வாழனும் என்று நினைத்தேன்,"என் ஆசையெல்லாம் கானல் நீராய் போய்விட்டதே...."

அதும்..,"பவியை மனைவியாக தன்னால் ஜீரனிக்க முடியவில்லையே??",என்று வாய்விட்டு சொல்லி அழுது கொண்டிருந்தான்.

அப்பொழுது, அவன் செல்லிற்கு கால் வந்தது.தற்பொழுது அழைப்பை ஏற்கும் மனநிலையில் அவனில்லை.

அதனால் அதை கண்டுகொள்ளாமல் தன் வேதனையிலே மூழ்கியிருந்தவன் செல்லிற்கு,மீண்டும் கால் வந்து கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் கோவமானவன், யாரென்று திட்ட ஃபோனை எடுத்து பார்க்க,அதில் வரும் பெயரை பார்த்து கதறினான்.

சீமக்கரை-கதிர் வீடு

ஜான் சொன்னதை கேட்ட வேலு, பைத்தியம் எதாச்சு பிடிச்சிருக்கா?.
அறிவு கெட்ட பயலே,உனக்குலாம் வெட்க்கமா இல்லையானு வாய்க்கு வந்தபடி கதிரை திட்டிக் கொண்டிருந்தான்.

"அப்பொழுது,அவளை நான் பார்த்துட்டேன் டா மச்சான் என்றான் கதிர்".

எவளை?என்று ஜான் கேட்க,அது வந்துடா பங்காளி...,என கதிர் சொல்ல ஆரம்பித்தான்.ஹப்பாஆஆஆஆ... அன்னம் போல நடந்து வரும்"அழகு இருக்கே...நெஞ்சுலாம் அப்படியே ஆட்டம் கண்டுடிச்சிடா".

அதும் காத்துல அவ வச்சிருந்த பூவோட வாசனை,அப்படியே வந்து கும்முனு வீசுச்சி பாரு ஆஹா...அதோட, அலங்காரம் பண்ணுன அம்மன் சிலை போல,கிட்ட வந்தவளை பார்த்ததும்னு கதிர் சொல்ல போக...அடேய்.... நிப்பாட்டுடா மானம் கெட்டவனே.
அண்ணன்காரன் டா நானென்று வேலு முறைக்க,அவளுக்கு அண்ணன்,ஆனால் எனக்கு நீ மச்சான் தானேடா என்றான்" .

இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ஜான்,ஒழுங்கு மரியாதை இரண்டு பேரில் யாராச்சு ஒருவர், விஷமத்தை சொல்லி தொலைங்கடா..
கொரியன் படம் பார்க்கிற போலவே இருக்கு.

"வேலு,ம்ம்...உன் பங்காளி காதல் கடல்ல விழுந்துட்டான்".

என்னாஆஆஆஆ நீயுமாடா என்க, அவன் சொன்னதை கேட்ட வேலுவோ,எதேஏஏஏ நீயுமாவா?.

டேய்...உனக்கு ஒரு கதை இருக்காடா?

"யாருடா?அர டவுசரா,இல்ல முக்கா பனியனா?என்கவும்,ச்சி ச்சி...பரதேசி பயலே...".ஏன் டா இப்படி?என்றவன், எல்லாம் நம்ப ஊர் புள்ளை தான். நேற்று தான் டா பார்த்தேன்.சும்மா..." கும்முனு பார்பிடால் போல இருந்தாள்"

என்னடா சொல்ற?

நேத்து ஒரு நாள் பார்த்ததே உனக்கு காதல் வந்துடுச்சானு வேலு கேட்க, ஆமாடா என்று ஜான் வெட்கப்பட்டான்.

டேய்...டேய்...தயவு செய்து நாலு அடி வேண்டுமானாலும் அடிச்சிக்க.இப்படி வெட்கப்படாதடா?இதெல்லாம் என்னால தாங்க முடியலைடா.

என் கதையை அப்புறம் சொல்றேன்.என் பங்காளி கதை என்ன சமாச்சாரம்?,அதை சொல்லு.

குத்து கல்லு போல உன் எதிரில் தான இருக்கான்?அங்கையே கேட்டு தெரிஞ்சுக்க.திரும்பவும் அதை பற்றி பேசி,என்னால சாக முடியாதென்றான்.

கதிரு....அடேய் கதிரு....என்க,கண்ணை மூடி தாமரையின் நினைவில் இருந்தவன்,ம்ம் என்றான்.

என்ன சங்கதி என்று ஜான் கேட்க?, தாமரையை இருட்டில் இடித்ததிலிருந்து, இன்று நடந்த வரை அனைத்தையும் சொல்லி முடிக்க,ச்சூஊஊஊஊஊ....
இவ்வளவு அக்கப்போறாடா?என்றபடியே சேரில் சாய்ந்து அமர்ந்தவன் இரு ராசா முதல்ல அம்மா குடுத்த சுடு தண்ணிங்களே குடிச்சிக்கலாம் என்றவாறே கதிர் கையில் ஒன்றை கொடுத்து விட்டு, டேய் இந்தாடா என வேலுவிடம் நீட்ட,குடுடா என்று வாங்கிக்கொண்டான்.

பின்ரர் தனக்கான காஃபியை குடித்தவன்,சரி.. என்ன முடிவு பண்ணிருக்க என்க,எதைப்பற்றி? என்றான் கதிர்.

எதேஏஏஏஏ....என நெஞ்சை பிடித்தவன், இவ்வளவு நேரம் சொன்னியே, அதைப்பற்றி தான்டா என்று ஜான் சொல்ல,அதற்கு கதிரோ இதுல முடிவெடுக்க என்ன இருக்கென்றான்.

நண்பனின் வார்த்தையைக் கேட்டு வேலுவை பார்க்க,என்ன பார்த்து ஒன்னும் புண்ணியம் இல்லை பனைமரம்.நீ தானே ஆசைப்பட்ட தெரிஞ்சுகிறதுக்கு,அப்போ,அனுபவி.

அப்பொழுது கதவை தட்டி விட்டு உள்ளே வந்த நிலவன்,மூணு பேரையும் சாப்பிட கூப்பிடுறாங்க என்கவும் இதோ வரோம்டா என்று சொல்லி விட்டு, மூவரும் எழுந்து நிலவனோடு கீழே சென்றனர்.

வீட்டில் எல்லாரும் இருப்பதை பார்த்த ஜான்,அப்பாயி,காலைல ஒரு பேக் கொடுத்தனே என்க?,அந்த ரூம்ல தான் இருக்கு.போய் எடுத்துக்க அப்பு.

பேக்கை எடுத்துட்டு வந்தவன், அவர்,அவர்களுக்கு வாங்கிய பொருட்களை எடுத்து கொடுத்தான்.
மீதமிருந்ததை பார்த்து, இது பாரு அத்தைக்கும்,மாமாவுக்கும் என்க,சரிடா காலையில கொடுத்துக்கலாம் என்றனர்.

ம்ம்..என்று சொல்லி விட்டு,இருடா மிலிட்டரிக்கு ஒரு போன் பண்ணிக்கிறேன்.வந்ததுல இருந்து போனே பண்ணல என்க,எல்லாம் பேசியாச்சு,இப்ப தான் உங்க சித்தப்பன் பேசிச்சு.மாட்டுப் பொங்கலுக்கு ஜூலியும்,லாரன்ஸும் வந்துடுவாங்கப்பு போய் சாப்டுங்க.நாளைக்கு வேலை அதிகமா இருக்கு என்றவர்,எம்மாடி, வந்துட்டானுங்க பாரு மூணு பேரும் என்று மருமகளுங்களுக்கு குரல் கொடுத்தார் வள்ளி அப்பாயி.

பின்னர் அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு,நண்பர்கள் மூவரும் கதிரின் ரூமிற்கு வந்தனர்.வேலுவின் பாதி துணிகள், கதிரின் கபோர்டில் இருக்கும்.

சரிடா பனைமரம்... இப்போ உன் விஷயத்தை சொல்லென்று தரையில் படுத்துக்கொண்டே வேலு கேட்க, "அதுவாடா என்று சிரித்தான்".

அப்படி என்னடா ஜோக் சொல்லிட்டேன், உன் பங்காளி இப்படி சிரிக்கிறானென்று கதிரிடம் கேட்க, கொஞ்சம் பொறுமைடா,பொறுமை என்றான்.

டேய்....சொல்லிட்டு சிரிடா தடிமாடுனு வேலு திட்ட,ம்ம் என்றவாறே...தன் காதல் பற்றி நண்பர்கள் இருவரிடமும் சொல்லத் தொடங்கினான் ஜான்

நான்,மிலிட்ரி, ராமன் அங்கிள் மூன்று பேரும் தான் இன்டர்வியூ பண்ணிட்டு இருந்தோம் டா.திடீர்னு ஃபோன் வர, மிலிட்ரி எஸ் ஆகிட்டார்.மத்தவங்களுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் ரெடி பண்ண, அங்கிளும் போயிட்டார் டா.நான் தான் மீதம் இருந்தவங்களை இன்டர்வியூ பண்ண வேண்டிய சூழல் டா.

கதவை திறந்து ஒருத்தி வந்தாள்.அவ மேல சூரிய ஒளி பட்டு அவ்வளவு பள பளனு மச்சான்.....

ஏண்டா...வார்னிஷ் அடிச்சிட்டு வந்துருப்பாளோனு வேலு கேட்க,ஏன் பக்கினு ஜான் முறைக்க,கதிருக்கு சிரிப்பு வந்தது.

சரி ஆரம்பிடா..ப்படியே...நம்ப கடலை மாவு கலர்ல,பொம்மை போல வந்தவள பார்த்ததும் உள்ளுக்குள் என்னென்னமோ பண்ணுச்சிடா...

கொழுப்பு நிண்டிருக்கும் என்று மீண்டும் வேலு கவுண்டர் கொடுக்க,செருப்பு பிஞ்சிடுமென்று ஜான் முறைக்க,ஓகே... நீ தொடங்கு என்று வேலு கையை அசைக்க, அவ கிட்ட என்ன கேள்வி கேட்கனு தெரியலை.

சரினு...சின்ன புள்ளைங்கள் கிட்ட கேட்கும் கேள்வி போல,முதலமைச்சர் யாரு?, தேசிய விலங்கு எது,கொடில எத்தனை கலர் இருக்குனு பேச்சை வளர்த்தேன் என்கவும்,வேலுவோ த்தூஊஊஊ என்று துப்பினான்

அவ பைலை படிச்சி ஊர் பேரு தெரிஞ்சதும் உள்ளுக்குள்ள குத்தாட்டம் டா என்க,அப்படியா???,எந்த ஊர்காரிடா?

நம்ப ஊர் தான் டா.

நம்ப ஊரா???, யார்டானு கதிர் கேட்க, நம்ப ஸ்கூல் சீனியர் தேவோட தங்கச்சி தேவி என்க,எதேஏஏஏஏஏ என்று படுத்திருந்த வேலு எழுந்து அமர்ந்தான்.

என்னடா சொல்றனு கதிர் கேட்க, ஆமாடா.தேவி தான் நேற்று வேலைக்கு வந்தாள் என்கவும் அதற்கு கதிரோ ஓஓஓ என்றான்.

ஆமா... நீ பார்த்தது சரி.அந்த புள்ளை உன்னை பாக்கனுமேனு வேலு கேட்க, ஏண்டா அவளுக்கு மாலைக்கண் வியாதியா?.

அட துப்புகெட்டவனே....உன்னை அந்த புள்ளை கண்டுகிட்டாளா???என்கவும், எங்கேடா?,ஹேண்ட்சமா ஒருத்தன் எதிர்ல இருக்கேன்,என்னமோ கல்லு, மண்ண பாக்குற போல இருக்காடா.

எப்படிடா உன்னை பார்க்கும்?.அந்த புள்ளை கவனம் எங்கே?,யார் மேல இருக்கோனு வேலு சொல்ல,எதிர் புறமாக சேரில் உட்கார்ந்திருந்த கதிர், வேலுவின் இடுப்பில் ஓங்கி ஒரு உதை விட்டான்.

ஏண்டா மாப்புனு வேலு கேட்க, கால்ல சுளுக்குடா, அதான் நீட்டி பார்த்தேன்.

ஆஹான்...,நம்பிட்டேன்டா நம்பிட்டேன் என்றவன், இன்னும் எதாவது இருக்காடா பனைமரம்? ம்ம் இருக்குடா. ஒரேடியா சொல்லி தொலைடா. பிட்டுபிட்டா சொல்லி சாவடிக்காதடா.

அந்த பிள்ளையவே கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்டா என்று நண்பர்களிடம் ஜான் சொல்ல, நல்ல விஷயம் தான்டா.

நல்ல பொண்ணு தான்.பெருசா வெளியேலாம் வராது.வீட்டில் தான் இருக்கும்.கோவிலுக்கு கூட அவங்க அம்மா கூட வரும்.மற்றபடி வெளியில பார்க்க முடியாது.

அப்படிப்பட்ட பிள்ளை,இப்போ திடீர்னு வேலைக்கு வந்து இருக்கே இது ஆச்சரியமான விஷயம் தான்டா என்றான் கதிர்.

எல்லாம் எனக்காக தான் போலடானு ஜான் சொல்ல,ஆமாடா ஆமாம் என்ற வேலு,போதும் ராசா...இனி தூங்கலாம்டா.ம்ம் என்றபடியே லைட்டை ஆப் பண்ணி விட்டு,நண்பர்கள் மூவரும், சில வருடங்களுக்கு பிறகு ஒன்றாய்,ஒரே இடத்தில்,படுத்து தூங்கத் தொடங்கினர்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
கதிர் வீடு!

வழக்கத்துக்கு மாறாகவே கதிருக்கு உறக்கம் கலைந்து விட்டது.மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சத்தில் நண்பர்களை பார்க்க,அவர்கள் நன்கு தூக்கத்தில் இருப்பது தெரிந்தது.


சத்தமில்லாமல் எழுந்தவன்,பால்கனி கதவை திறந்து வானத்தை பார்க்க, "நிலவு தன் தோழிகளான நட்சத்திரங்களோடு வெளிச்சத்தை வீசிக்கொண்டிருந்தது".இதுவரை சலனமில்லாமல் இருந்தவனுக்கு, நிலவுக்கு பதில் தாமரையின் முகம் தெரிய, சிரித்துக்கொண்டான்.

கண்ணை மூடி அவள் வந்த கோலத்தை மீண்டும் நினைவு பண்ணி பார்த்தவனுக்கு,அந்த அதிகாலை குளிருக்கு போட்டியாக,உடலெல்லாம் புல்லரித்தது.பின் வளவன் அவளோடு பேசிக்கொண்டு வந்தது நினைவு வர, பக்கத்தில் இருந்த தூணில் கையால் குத்தியவன் எவ்வளவு கொழுப்பு இவனுக்கு?.அம்மாங்ககிட்டயே சம்மதம் கேட்கிறானேனு தம்பியின் மேல் ஆத்திரம் வந்தது.

அடேய் அறிவு கெட்டவனே...அவனுக்கும் தான் அவள் அத்த மகள் டா.உனக்கு என்ன உரிமை இருக்கோ,அதே உரிமை அவனுக்கும் இருக்கென்று ஒரு பக்கம் மனசாட்சியோ உண்மையை உணர்த்த, அதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தாமரை என்று பல்லை கடித்தவன்,எதுக்குடி வந்த?.இத்தனை வருஷம் கண்ணுல படாமல் தானே இருந்த.அப்படியே இருக்க வேண்டிய தானடி.உன்னால இன்றைக்கு, அண்ணன் தம்பிக்குள்ள பகை வந்துரும் போல இருக்கேடி...இதுவரை என் தம்பிய நான் கடிஞ்சிகிட்டதே இல்லைடி.

என்றைக்கு என் வாழ்க்கையில் நீ வந்தியோ,அன்றிலிருந்து அவன் எனக்கு எதிரி போல உருவகம் பண்ணுதேனு புலம்பிக்கொண்டே தலையில் கையை வைத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டவன் சிறிது நேரம் நின்று நிலவையே பார்த்தவன், அங்கிருந்த சேரில் உட்கார்ந்து கண்களை மூடினான் .

வழக்கம் போல அதிகாலையில் எழுந்த வேலு,ஜான் மட்டும் அருகில் படுத்திருப்பதை பார்த்தவன் எங்கே போனான் இவனென்று யோசனையோடே எழுந்தவன்,காலை கடனை முடிக்க பாத்ரூம் உள்ளே சென்றவன்,ப்ரஷ் ஆகி வெளியே வந்தவனனோ பால்கனி கதவை பார்த்தான்.

பின்னர் கொடியில் இருந்த துண்டை எடுத்து,முகத்தை துடைத்துக்கொண்டே, அங்கே சென்று பார்க்க,கதிரோ பால்கனியில் இருந்த சேரில் தூங்கி கொண்டிருந்தான்.

இந்த எருமை எதுக்கு இங்க வந்து தூங்குறான் என்றபடியே அவனருகில் சென்றவன் மாப்பு,மாப்புனு தட்டி எழுப்ப,
ம்ம் என்றவாறே கண்ணை திறந்தவன், என்னடா? என்றான்.

உள்ளே வந்து படுடா என்க,சரி என்றவன்,எழுந்து போய் ஜானின் அருகில் படுத்துக்கொண்டான்.

பின்னர் பால்கனி கதவை சாத்திய வேலு,அறைக்கதவை திறந்து சத்தமில்லாமல் சாத்தி விட்டு படியில் இறங்கி கீழே வர,அங்கு வள்ளி அப்பாயி, சீதா,ராதா,மற்றும் பிரகாசம் நால்வரும் டீ குடித்து கொண்டிருந்தனர்.
காலடி சத்தம் கேட்டு வள்ளி அப்பாயி பார்க்க,வேலு வருவது தெரிந்தது.

கீழே வந்தவன்,அப்பாயின் அருகில் உட்கார்ந்து கொண்டு,என்ன செல்லம், காலையிலே வட்ட மாநாடு போல??.

வேலு,டீ யா இல்லை காஃபி எடுத்து வரட்டுமானு ராதா கேட்கவும் டீயே கொடுத்தை என்றான்.

சரிப்பா என்று உள்ளே சென்றவர், சூடாக டீயை எடுத்து வந்து நீட்ட,வாங்கி குடித்தவனுக்கு அந்த அதிகாலை குளிருக்கு டீ இதமாக இருந்தது.

சரி... நான் வீட்டுக்கு போய்ட்டு வந்துடுறேன்.ரெண்டு பேரும் இப்போ எந்திரிக்கமாட்டானுங்க,வந்ததும் சொல்லு செல்லம் என்றவன்,தனது வீட்டை நோக்கி சென்றான்.

போகும் வேலுவையே பார்த்துக்கொண்டிருந்த பிரகாசத்தை, என்ன இன்றைக்கு தான் புதுசா பாக்குற போல பாக்குறீங்க என்றார் வள்ளி அப்பாயி.

மருமகளுங்களை பார்த்தபடியே கொஞ்சநாளா என் மனசுக்கு ஒன்னு தோனிகிட்டே இருக்கு வள்ளி என்றார்.

என்னனு சொன்னா உங்க வாய்ல இருக்கும் பவழம் கொட்டிடுமாக்கும்??என்ற மனைவியை பார்த்து சிரித்தவர், கல்யாண வயசு வந்துட்டு நம்ப பயலுங்களுக்கு.வேலுக்கு செல்விய கட்டி வைக்க மனசு சொல்லிட்டு இருக்கு என்க,ம்கும்....

இதுதானா என்க,ஏண்டி...எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லிருக்கேன். ம்கூம்னு நொர்ணாட்டியம் பண்ணுற என்றவருக்கு,உங்க பெரிய மவள் வேறு யாரையாவது கட்ட விட்டுருவாளா என்றார்.

அது என்னமோ உண்மை தான் வள்ளி என்றவர் புள்ளைங்க ஆசையவும் கேட்கணும்.இந்த காலத்துல அது அதுங்க வாழ்க்கைய முடிவு பண்ணிக்குதுங்க.

நல்லவேளை,நம்ப ஊட்ல இருக்கும் மூனு பயலும் அப்படி யாரையும் இழுத்துட்டு வரலையே என்றார் பிரகாசம் தாத்தா.

தாமரை வீடு...

தாமரையோ எங்கே போனாங்கனு புலம்பிக்கொண்டே,"மீண்டும், வேதாவின் நம்பருக்கு கால் பண்ணினாள்".அதுவோ மீண்டும் முழு ரிங் போய் கட்டானது".

என்னாச்சு தாமரைனு கவிதா கேட்க, ரொம்ப நேரமா அத்தை,மருது,பவிக்குனு,மூன்று பேருக்கும் கால் பண்ணுறேன் மா.யாருமே எடுக்க மாட்டேங்குறாங்கனு கவலையாக சொல்ல,உங்க அத்தைக்கு இருபத்தி நாலு மணிநேரமும் வேலை பற்றிய சிந்தனை தானே."பக்கத்து மலை கிராமத்தில் யாருக்காவது உடம்புக்கு முடியலைனு போயிருக்கும்".
அவ்வளவு தூரம் தனியா போக வேண்டானு மருதும்,பவியும் கூடவே போனாலும் போயிருப்பாங்க மா.
அங்க போக தான்,உங்க மூன்று பேருக்கும் புடிக்குமே என்க,

அட .. ஆமா மா...."இதை பற்றி நான் யோசிக்கவே இல்லை பாரேனென்று சொல்லி தனது தலையில் தட்டிக்கொண்டவள்,தன் வேலையை பார்க்க தொடங்கினாள்.

மகளிடம் சாதாரணமாக பேசினாலும், கவிதாவின் உள் மனதிற்குள் என்னவோ?,ஏதோவென அடித்துக்கொள்ள,கடவுளே..,"யாருக்கும் எந்த தீங்கும் வரக்கூடாது என உள்ளுக்குள் மானசீகமாக வேண்டிக்கொண்டார்".

அடுத்த ஓவியத்தை தாமரை வரைந்து கொண்டிருக்க,"அக்கா, அக்கா,என்றவாறு அல்லியும் அங்கு வந்தாள் அல்லி"."தங்கையின் குரலில் நிமிர்ந்து பார்தவள்,சொல்லுடி என்க, வேலையா இருக்கியாக்கா?".

ஆமாடி.அடுத்த டிசைனுக்கு ஐடியா கிடைச்சிட்டு.அதான் என்றபடியே வரைந்த நோட்டை மூடி வைத்தவள்,ம்ம் இப்போ சொல்லு,ஏன் கா,அத்தைங்கள் கிட்ட பேசுனதை பற்றி அம்மாகிட்ட நீ சொல்லலையா?.

அச்சோ...அதை மறந்துட்டேன்டி என்கவும்,ம்ம் ஆனால் நான் சொல்லிட்டனே என்றவள்,அப்புறம்கா நீ அந்த சிடுமூஞ்சி சிவனான்டிய பார்த்தியா?.

தங்கை சொன்ன பெயரை கேட்டு தாமரைக்கு சிரிப்பு வந்தது.ஹாஹாஹானு சிரித்தவள், யாரைடி சொல்லுற?.

அதான்கா,சீதா அத்தை பெரிய பையன், "அந்த கதிரு,குதிரு".

மீண்டும் சிரித்தவள்,என்னடி பேர் வச்சிருக்க?,சிவனான்டி,குதிருனு..நான் பார்கலையேடி.

ஆமா,அங்க அத்தைங்களும்,வளவன் மாமா மட்டும் தானே வந்து பேசுனாங்கனு யோசனையோடே கேட்டாள்.

சுத்தமென்று தலையில் தட்டிக்கொண்டவள்,அய்யோ அக்கா, நீ வேலு அண்ணனுக்கு விபூதி பூச போனியே,அதாவது ஞாபகம் இருக்கா என்க?.அடியேய்... கிண்டலா?என்றாள்.

அப்போ,அண்ணா பக்கத்துல இரண்டு வளந்த மாடுங்க நின்னுச்சே தெரியுமா?.

தங்கை சொன்னதை கேட்டு நினைத்து பார்த்தவள்,ஆமாடி இரண்டு பேர் நின்றாங்க.ஆனால்,அவங்களை நான் பார்க்கலையே அல்லி?,ம்ம் அது தெரியும்கா.அந்த விருமாண்டி தான்,உன்னை பார்த்து எதோ பேய கண்டது போல நின்றார்கா.

அதைக்கேட்ட தாமரை என்னடி சொல்லுற?என்க,ஆமாகா.அந்த சிவனான்டி ஏன் உன்னை பார்த்து அதிரனும்னு தான் எனக்கும் மண்டைக்குள் கேள்வினு மனதில் இருப்பதை அக்காவிடம் சொன்னாள்.

என்னை எப்படிடி அவருக்கு தெரியும்? என்று தாமரை சொல்ல,இல்லைக்கா, உன்னை அந்த சிடுமூஞ்சிக்கு நல்லா தெரிஞ்சிருக்கு."இதை என்னால் உறுதியா சொல்ல முடியுமென்றாள் அல்லி".ஒரு வேளை அந்த சிடுமூஞ்சி உன்னை சைட் அடிச்சிருக்குமோ என்கவும்,தாமரையோ அடிப்பாவி என்றாள்.

ஆமாக்கா....நீ வேற இன்னைக்கு ரொம்ப அழகா இருந்தியா,அதான் சிவனான்டி அப்படியே கவுந்துட்டார்னு நினைக்கிறேன்.ஆனால் கா...சும்மா சொல்லக்கூடாது,அந்த லேம்ப்போஸ்ட்,யாரையும் சைட் அடிக்க லாயக்கு இல்லை.எப்போ பாரு உர்ருனு, "இஞ்சி தின்ன கொரங்கு"போலவே இருப்பார் கா.

நானும் செல்வி கிட்ட கேட்பேன்.உன் அண்ணனுக்கு சிரிக்க தெரியாத வியாதி எதாவது இருக்காடினு? சொல்லிவிட்டு அல்லி சிரிக்க,தங்கை பேசியவைகளெல்லாம் கேட்டு தாமரைக்கும் சிரிப்பு தாங்கவில்லை.

அடியேய்...ஒரு மனுஷனுக்கு எத்தனை பேருதான்டி என்கவும்,உன் கிட்ட சொன்னது கொஞ்சம் தான் கா.

அது சரி என்ற தாமரை,இதெல்லாம் அவருக்கு தெரிஞ்ச பிறகு உனக்கு இருக்குடி என்க,அடி பாவி அக்கா, நீயெல்லாம் கூடப்பிறந்தவளா?.அந்த ஹிட்லர் கிட்ட மாட்டுனேன் அவ்வளவு தான்.

இவ்வளவு பயப்படும் அளவுக்காடி அவர் இருப்பாரென்று தாமரை கேட்கவும்,ஆமாக்கா...எந்த புள்ளையும் அவர் கிட்ட பேசாதுங்க.ஆனால் அந்த தேவி அக்கா கிட்ட மட்டும்,இந்த விருமாண்டி பேசுவார்..

தங்கை சொன்னதை கேட்டவள்,ஓஓஓ. அது யாருடி தேவி?,நம்ப தேவ் அண்ணாவோட தங்கச்சிக்கா.தேவ் அண்ணாவோட அம்மா வசந்தி பெரியம்மா ரொம்ப நல்லவங்கக்கா.
கோயிலுக்கு வரும்போது அம்மாகிட்டயும்,என்கிட்டயும் பேசுவாங்க.

ஆனால்,இந்த குட்டி குஷ்பு மட்டும் பேசாது.என்னமோ அது பண்டத்தை புடிங்கி திங்க வந்த போல மூஞ்ச வச்சிருக்குமென்று அல்லி சொல்ல, என்னாஆஆஆ,குட்டி குஷ்புவாஆஆஆ என்றாள்.

ஆமாகா....கடலமாவுல நாலு கோட்டிங் குடுத்த போல கலரு."பார்க்க அப்படியே நம்ப குட்டி குஷ்பு போலவே இருக்கும் அந்த தேவி அக்கா".நாங்கலாம் குட்டி குஷ்புனு தான் கூப்பிடுவோம்.அந்த அக்காக்கு தெரியாமல் .

என்றைக்கு உண்மை தெரிஞ்சு, உன்னை டின்னு கட்ட போறாங்களோனு தாமரை சொல்ல,வாய்ப்பில்லை ராஜா.. வாய்ப்பில்லை என்று நையாண்டியோடே அக்காவிடம் சொல்லி விட்டு அல்லியும் வெளியே ஓடி விட்டாள்.

தங்கை போன பிறகு கண்ணை மூடி, சில மணி நேரத்திற்கு முன்பு வேலுவை சந்தித்த நிகழ்வை "மனதிற்குள் நினைத்து பார்த்தாள் தாமரை".
"எவ்வளவோ யோசித்தும் வேலுவை தவிர,மற்ற இருவரின் முகம் அவளுக்கு நினைவில் வரவேயில்லை".

எதுக்கு உனக்கு இந்த தேவையில்லாத வேலையென்று சொல்லிக்கொண்டவள், இன்று கோயிலில் நடந்த நிகழ்வுகளையே வரைய தொடங்கினாள்.நேரமும் சென்று கொண்டிருந்தது.கழுத்து வலி வந்த பிறகு தான் ஃபோனை எடுத்து மணியை பார்க்க,இரவு பத்து ஆகிவிட்டதை காட்டியது."பின்னர், அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு, உறங்க தொடங்கினாள்".

கண்மணி வருவாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top