• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
கதிர் வீடு!

அத்தை நாங்க கோயிலுக்கு போய் விட்டு வருகிறோம் என்ற ராதாவிற்கு, பார்த்து போய்ட்டு வாங்கம்மா என்றார் வள்ளி பாட்டி.

சரிங்கத்தை என்று சொல்லிய சீதா, செல்வி...செல்வி...இன்னும் என்ன பண்ணுற?,இதோ வந்துட்டேன் மா என சொல்லிக்கொண்டே மாடி படியிலிருந்து வேகமாக இறங்கி வந்தாள்.

"அப்பொழுது உள்ளே வந்த கதிர், என்னம்மா கோயிலுக்கா என்க, ஆமாப்பா என்ற சீதா,வாயேன் பா நீயும்?,ஹம் நீங்க போய் கிட்டே இருங்கம்மா நான் வந்துடுறேன் என்றவன்,படியில் ஏறி தனது அறைக்குச் சென்றான்.

"அறைக்குள் வந்தவன் வேக வேகமாக குளித்து விட்டு,ஆடையை மாற்றிக் கொண்டு கீழே வந்தவன்,அப்பாயி நானும் கோவிலுக்கு போயிட்டு வருகிறேனென்க,பேரனை பார்த்தவர் என்னைக்கும் என் அப்பு கருப்பு வைரம் தான்.போய்டு வாப்பு.

"கதிர் கோயிலுக்கு வரும் காரணமே அல்லியிடம் பேசி,அன்று கூட வந்தவள் யார் என்று தெரிந்து கொள்வதற்காக தான்.இன்று துர்க்கை அம்மனுக்கு விளக்க போடுவற்தாக அவர்கள் வழக்கமாக கோயிலுக்கு போவார்கள் என்பது அவனுக்கு முன்பே தெரியும்.

அவன் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரம் என்பதால் தன்னவள் யாரென்று யோசித்துக்கொண்டே நடந்து சென்றவன்,நீ யாரென்று இன்று தெரிய போகுதுடி?ஆமாம்,ஏன் இதுவரை நீ செயின் தொலைந்ததை பற்றி தேடி வரவில்லை?அப்போ அது உன்னுடையதாக இருக்காதோ?என பலவாராக தனக்குள்ளே கேள்விகளை கேட்டுக்கொண்டே கோயிலுக்கு நடந்து சென்றவனுக்கு நண்பனின் நினைவு வர,தனது போனிலிருந்து வேலுவிற்கு கால் பண்ணினான்.

தாமரை வீடு:

"தன் மொபைல் ரிங்டோன் சத்தம் கேட்டதும் வேலுவோ எடுத்து அட்டென்ட் பண்ணியவன் சொல்லுடா மச்சான்,மாப்பிள்ளை எங்கடா இருக்க?. இப்பதாண்டா நம்ப சல்மான் கிட்ட பேசிட்டு வரேன்.அடுத்த படத்துக்கு அப்பாயின்மென்ட் கேட்டார்.நான் ரொம்ப பிஸின்னு சொல்லிட்டு வரேன்

"நண்பன் சொன்னதை கேட்ட கதிரோ, என்னடா நக்கலா என்க,வீணா போனவனே,இப்ப தானேடா சொல்லிட்டு வந்தேன் சித்தி வீட்டுக்கு போறேன்னு. அதுக்குள்ளே எங்கடா இருக்க? நொங்கடா இருக்கேன்னு?கேட்டால் வேற என்ன சொல்ல முடியும்னு வேலு திட்ட,சரி...சரி நான் வந்துட்டு இருக்கேன்,கோயிலுக்கு போலாம் நீயும் வந்துடு என்றான்.

"ஏண்டா...என்னை சாமியாராக ஆக்கிடலாமென்று முடிவே பண்ணிட்டியா?கோயில்ல இருந்து இப்போ தானேடா வந்தேன்.45 நாளைக்கு பிறகு இன்னைக்கு தான் ஆசாமியா ஆகிருக்கேன்டா,அது உனக்கு பொறுக்கலையா?உன்னை போல நண்பன் இருந்தாலே போதும் டா விளங்கிடும்.

சரி பேசுனது போதும் சீக்கிரம் வா,நம்ப செட்டியார் கடைகிட்ட நிக்கிறேன் என்றபடி கதிர் கட் பண்ணினான்.

"இவ்வளவு நேரம் வேலு போனில் பேசியதை கேட்டுக்கொண்டிருந்தவர்கள், தற்பொழுது சத்தமிட்டு சிரித்தனர், தாமரையை தவிர.அப்பொழுது அல்லியோ அண்ணா,அந்த சிடுமூஞ்சி சித்தப்பன் கிட்ட எப்படி தான் இத்தனை வருஷம் குப்பை கொட்டுற நீ?.

"ஏய்... வாலு,என்ன கொழுப்பா?மச்சானை அப்படிலாம் சொல்லக்கூடாது சரியா என்று சொல்லி அவள் தலையில் கொட்டிய வேலு,சரி சித்தி நான் கிளம்புறேன்னு கதிர் நிற்கும் கடைக்கு சென்றான்.

"அல்லி,தாமரை இரண்டு பேரும் சீக்கிரம் ரெடி ஆகிட்டு வாங்க கோவிலுக்கு போகணும் என்றவர், சிவா...டீ போட்டு ரெடியா வச்சிருக்கேன் அப்பா,தாத்தா,பாட்டி மூன்று பேரும் வந்த பிறகு சூடு பண்ணி மட்டும் கொடுத்திடு.நாங்க போய் விளக்கு போட்டு வரோம்பா என்று சொல்லிக்கொண்டே தனது அறைக்கு சென்றார்.

"மூவரும் சிறிது நிமிடங்களில் ரெடியாகி வெளியே வந்தவர்கள்,சிவாவிடம் சொல்லிக்கொண்டு கோயிலை நோக்கி நடந்தார்கள்.போகும் வழியில் தெரிந்தவர் எல்லாரும் கவிதாவிடம் கூட வருவது யார் என்று கேட்க,தனது பெரிய மகள் என்று சொல்லிக்கொண்டே போனார்.

" எடுத்து வந்த எலுமிச்சை பழத்தை இரண்டா கட் பண்ணி மகள்களிடம் கவிதா கொடுக்க,அல்லியும் தாமரையும் அதில் உள்ள சாற்றை பிழுந்து விட்டு, அதனுள் எண்ணெய் ஊற்றி,திரியை வைத்தனர்.

மூவரும் ஆளுக்கு ஆறு விளக்கை ஏற்றி துர்க்கை அம்மனிடம் மனதுருக வேண்டிய பின்,சன்னதியின் உள்ளே இருக்கும் அம்மனிடம் செல்லும் போது தாமரையின் செல்லிற்கு கால் வர, எடுத்து பார்த்தவளுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது.

மகளின் முகத்தை பார்த்த கவிதா, என்ன தாமரைனு அவள் தோளை தொட,தாயிடம் செல் போனை காட்டியவளின் கண்கள் கலங்கியது. எடுத்து பேசுடா என்றவாறு தோளை தட்டி கொடுத்தார்

போனோடு ஓரமாக சென்று அட்டென் பண்ணியவள் ஹலோ என்க,மைடியர் ஏஞ்சல் என்ற குரல் ஆங்கிலத்தில் கேட்டது.தாமரையும் அவரும் ஆங்கிலத்தில் பேசுவதை இங்கு தமிழிலே எழுதியிருக்கின்றேன்.

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கேட்கும் குரல் தான்,ஆனால் அதே அன்பு அந்த குரலில் மாறாமல் இருப்பதில் அவளின் கண்ணிலிருந்து நீர் வழிந்து ஓடியது.

என்ன ஏஞ்சல் என்னை மறந்திட்டியா என்கும் அந்த குரலுக்கு சொந்தமான ஜீவனோ,உலகெங்கும் தனது பிரத்யோகிய ஆடைகள் மூலமாய்
கொடிகட்டி பறக்கும்,பேமஸ் டிசைனரான வி.வி.என்று பலரால் அழைக்கப்படும், விஷாகா வில்லியம்ஸ்.

ஏஞ்சல்....என்று மீண்டும் அழைக்க, தற்பொழுது நினைவிற்கு வந்தவளுக்கு அழுகை தான் வந்தது.என்ன லோட்டஸ் இத்தனை வருஷம் போய் கால் பண்ணியிருக்கேன்,பேசாமல் இருக்கியே என்று மீண்டும் கேட்டார் வி. வி.

"ஆன்ட்டி என அழுது கொண்டே தாமரை கூப்பிட,ம்ம் என்றவர் எப்படி இருக்க ஏஞ்சல்?.ஹம் என்றவளிடம் சீமக்கரை எப்படி இருக்கு?என்க,ஓஓஓ.... அத்தையம்மா சொல்லிட்டாங்களோ?.

அதற்கு சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்த வி. வி.வாழ்த்துக்கள் ஏஞ்சல். வெற்றிகரமாக படிப்பை முடித்து விட்டாய்.இன்னும் சில மாதங்களில் மேடம் சிங்கப்பூர்கு பறந்து வரப்போறீங்கள்.

என் ஏஞ்சலை நானும் நேரில் பார்க்க போகிறேன் என்றவர்,உனக்கு ஒரு ப்ராஜெக்ட் வொர்க் தரப் போறேன் இன்னும் 5 மினிட்ஸ்ல வீடியோ கால்ல வரேன் என்று சொல்லி அழைப்பை கட் பண்ணினார் வி.வி.

"அம்மா என்று கூப்பிட்டுக்கொண்டே கவிதாவின் அருகில் வந்த தாமரை, வி. வி.சொன்னதை சொல்ல,சரி நீயும் அல்லியும் வீட்டுக்கு போங்க நான் வரேன் என்றவர்,அம்மன் இருக்கும் கருவரையை நோக்கி செல்ல,அங்கே, சீதா,ராதா,செல்வி மூவரும் இருப்பது தெரிந்தது.

அல்லி இன்னும் அஞ்சு நிமிஷத்துல நம்ம வீட்டுக்கு போகணும் கொஞ்சம் வேகமா நடந்துவாடி என்று தாமரை சொல்ல,சரிக்கா என்றவள்,வா குறுக்கு சந்து வழியா போகலாம் என அக்காவை அழைத்துக் கொண்டு வேகமாக இரண்டு வீடுகளுக்கு இடையில் இருக்கும் சந்துகளில் புகுந்து சென்றாள்.

இருவரும் வீட்டிற்குள் வந்து சேரவும் கால் வரவும் சரியாக இருந்தது.உடனே வேகமாக ஓடிப்போய் தனது பேகில் இருந்து லேப்டாப்பை எடுத்து ஆன் பண்ணி தன் போனில் கனைக்ட் பண்ணியவள் கால் அட்டென்ட் பண்ண அங்கு தெரிந்த உருவத்தை பார்த்த தாமரையோ அதிர்ந்து போனாள்.

சிறு வயதில் பார்த்த உருவம் அதன் பிறகு இப்பொழுது தான் பார்க்கிறாள். வருடத்திற்கு ஒருமுறை அந்த குரலை மட்டும் அவள் கேட்டிருக்கிறாள்.அதும் கடந்த ஐந்து வருடங்களாக இல்லை.

என்ன ஏஞ்சல் அதிர்ச்சியாக இருக்குதா என்று வி வி கேட்க,ம்ம் என்றவளுக்கு வார்த்தைகள் வர மறுத்தது.ஆமாம் அவள் சிறுவயதில் பார்த்த உருவமோ அவ்வளவு மார்டனாக இருந்தது. இப்பொழுது பார்கும் உருவமோ நம்ப பக்கத்து வீட்டு மடிசார் மாமியை பார்பது போல இருந்தது தாமரைக்கு.

"ஏஞ்சல்,இதை பற்றி பிறகு பேசலாம் என்றவர்,இங்கு இருக்கும் பலர் கோயில் சிற்பங்களை புடவையா ரெடி பண்ணி கேட்கிறார்கள்.அதான் உனக்கு மூணு மாசம் டைம் இருக்கே.உன்னால எத்தனை சிற்பங்கள் டிசைன் பண்ண முடியுமா அத்தனையும் வரைந்து எனக்கு மெயில்ல சென்ட் பண்ணு.

இந்த முறை உன் டிசைன் கலெக்க்ஷனை தான் இன்ட்ரோ பண்ண போறேன் என்று வி.வி சொல்ல,இது அவளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. தன்னுடைய டிசைனை இவ்வளவு பெரிய டிசைனர் அறிமுகப்படுத்தப் போவதை நினைத்து அவளுக்கு வார்த்தையே வரவில்லை.

உன் பிரின்ஸ்பல் உன்னை பத்தி நல்ல விதமா சொன்னாங்க.இங்க நீ வருவதற்கு முன்னாடியே ஒரு நல்ல அங்கீகாரம் உனக்கு கிடைக்கணும்னு எனக்கு தோணிச்சு.நம்ம லீனாவும் அதே தான் சொன்னாள்.இந்தியன் கல்ச்சர் பத்தி உனக்கு நல்லா தெரியும்.இதுவரைக்கும் நான் இந்த மாடல் புடவைகள் தயாரித்தது இல்லை.

இதை நீ பெஸ்ட்டா செஞ்சு முடிப்பாயென்று நான் நம்புறேன். அக்ரிமெண்ட் பேப்பர் உன்னோட இமெயில் க்கு அனுப்பியிருக்கேன். படிச்சு பாத்துட்டு சைன் பண்ணி சென்ட் பண்ணு.

இதற்கு பிறகு நான் உனக்கு கால் பண்ண மாட்டேன்.இனி நீ நேரில் வந்த பிறகு பேசிக்கிறேன் என்றவர்,உன் ப்ராஜெக்ட் நல்லபடியாக முடிக்க ஆல் தி பெஸ்ட் ஏஞ்சல் என்று சொல்லியபடி வீடியோ கால் கட் ஆனது.

இதுவரை அவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த அல்லியும், சிவாவும் ஹேய்.... வாழ்த்துக்கள் கா என்று கத்தி சொல்ல,தம்பி தங்கையின் குரலில் கலைந்தவள் பின் தனது மெயிலை ஓப்பன் பண்ணி படித்தவள்,வி.வி. க்கு மெயில் அனுப்பினாள்.

இந்த அக்ரிமெண்ட் எனக்கு தேவையில்லை.முதல் முறையாக எனக்கு கொடுத்த வேலையை என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக செய்வேன் என்று அனுப்பி விட்டு,லேப்டாப்பை ஆப் பண்ணியவள்,நேராக சாமியறைக்கு சென்று கண் மூடி வணங்கினாள்.

அல்லியோ சமையலறைக்கு சென்று வேலு வாங்கி வந்த பஞ்சாமிர்தத்தை எடுத்து வந்தவள் தாமரை பூஜையறையிலிருந்து வெளியே வர, அக்கா ஆ காட்டு என்க,என்னடி என்றாள்.

நீ காட்டு என்க,தாமைரையும் வாயை திறக்க,அவள் வாயில் ஒரு ஸ்பூன் பஞ்சாமிர்தத்தை வைத்தவள், இனிப்போடு வாழ்த்துகள் கா.

தேங்க்ஸ்டி என்றவள்,இதை முதல்ல வேதாம்மாக்கு சொல்லணும் என்று சொல்லி விட்டு,தனது செல்லில் இருந்து வேதாவிற்கு அழைத்து விஷயத்தை சொல்ல,அவருக்கும் மருமகள் சொல்லிய விஷயத்தை கேட்டு மகிழ்ச்சியாக இருந்தது.

அக்கா தங்கை இருவரும் கவிதாவை பார்த்து தலையசைத்து விட்டு,அம்மனுக்கு புஜை செய்வதை கவனிக்க தொடங்கினர்.கவிதாவும் கண்ணை மூடி அம்மனை வணங்கிய பின்னர் கருவறையினுள் இருக்கும் அம்மனை பார்க்க,ஆரத்தி தட்டோடு அய்யரும் வெளியே வந்தார்.

தன்னிடமுள்ள பூவை அர்ச்சனை தட்டின் மேல் வைத்த கவிதா,அய்யரிடம் மெஷின் வாங்கியதை பற்றி சொல்லி மகளின் பேருக்கு அர்ச்சனை பண்ண சொல்ல,அதேப்போல மந்திரம் ஓதி பூஜை செய்தவர் இரண்டு எலுமிச்சை பழத்தையும் சிறிது துண்டு பூவையும் கவிதாவிடம் வந்து கொடுத்து,பழத்தை அறிந்து மெஷினின் இரண்டு புறம் குங்குமம் தடவி வைக்க சொல்லி விட்டு, அவருக்கு குங்குமத்தையும் பூவையும் கொடுத்து உள்ளே சென்றார்.

"கவிதா, தாமரை வந்திருக்கான்னு கேள்விப்பட்டோம்" என்று சீதா சொல்ல,
"ஆமாங்கண்ணி. அவளும் தான் கோயிலுக்கு வந்திருந்தாள். அதுக்குள்ளே வேலை விஷயமாக போன் வந்ததுனு அல்லி கூட வீட்டுக்கு போயிட்டாள்."

"நாங்க அவளை பார்க்கலாம்னு ஆசையா இருந்தோம்" என ராதா சொல்ல,
"தெரியும் அண்ணி. வளவன் வந்து உங்களிடம் சொல்லி இருக்கும்னு நினைத்துக் கொண்டு தான் இருந்தேன்."
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
மேலும் சிறிது நிமிடம் பேசி விட்டு,நான் விநாயகர் சன்னதிக்கு போகிறேன் அண்ணி என்றவாறு அங்கிருந்து கவிதா போக,இவர்கள் மூவரும் கோவில் மண்டபத்தின் ஓர் ஓரத்தில் வந்து உட்கார்ந்தனர்.

"வேலுவோ செட்டியார் கடையின் அருகில் வந்து வண்டியை நிறுத்த,செட்டியாரிடம் பேசிக் கொண்டிருந்த கதிர்,அவரிடம் சொல்லிக் கொண்டு நண்பனின் வண்டியில் ஏறினான்.

என்ன திடீர்னு உனக்கு கோயிலுக்கு? என்று வேலு கேட்க,எல்லாம் காரணமாகத்தான்,நீ வண்டியை எடுடா என்றான்.

காதல் வந்தாலே கிறுக்கு பிடித்து விடும் என்பது நெசம் தான் போல என வேலு சொல்ல,நண்பனின் தோளில் தட்டியவன் எனக்கும் இதை சொல்ல நேரம் வரும்டா.அப்போ நானும் பார்க்க தான் போறேன் என கதிர் சொல்ல, நடக்காது மாப்பு நடக்காது.இந்த காதல் கத்திரிக்கா எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுடா என்று வேலு சொல்ல, அதையும் பார்க தாண்டா போறேன்.

அப்ப இந்த வாய் என்ன பண்ணுது என்று இவனும் பதில் சொல்ல,இருவரும் பேசிக்கொண்டே கோயிலை வந்தனர்.வண்டியில் இருந்து கீழே இறங்கிய இருவரும் கோயிலின் உள்ளே சென்ற இருவரும் அம்மனை வணங்கி விட்டு கோயிலை சுற்றி வரும் போது,அங்கு கவிதா மட்டும் விநாயகர் சன்னதியில் அமர்ந்து கண்ணை மூடி ஏதோ வேண்டிக் கொண்டிருப்பது தெரிந்தது.

எங்கே இவள்? என சுற்றிப் பார்த்தவனுக்கு அல்லி இருப்பது போல் கதிருக்கு தெரியவில்லை.

எங்கடா மச்சான் உன் தங்கச்சியை காணும் என்க,எந்த தங்கச்சி கேட்கிறடா? என்றான் வேலு.அதாண்டா அல்லி என்று கதிர் சொல்ல,என்ன திடீர்னு என் தங்கச்சி மேல உனக்கு கரிசனம்?

ம்ம்...உன் பெரிய தங்கச்சி யாருன்னு தெரிஞ்சுக்க தான்.

அதான...சோழியும் குடுமியும் சும்மா ஆடாதுன்னு பழமொழி சொன்னது சரியா தான் இருக்கு என்ற வேலுவிற்கு, ஏண்டா..ஏன்...நண்பனுக்கு உதவி பண்ணனும்னு கொஞ்சமாவது எண்ணம் இருக்கா?இப்படி கேள்வி மேல கேள்வி கேட்டு உசுர வாங்குறியேடா.

ஏண்டி மாப்பு...எந்த அடையாளமும் தெரியாதவள போய் தேடி கொடுக்க சொன்னால்,நான் எங்க இருந்துடா தேடுவதென்று வேலு முறைக்க,அதற்கு கதிரோ நண்பனை பாவமாக பார்க்க,இப்ப என்ன, என் தங்கச்சி எங்கேன்னு உனக்கு தெரியனும் அவ்வளவு தானே.நீ போய் உன் குடும்பத்துல ஐக்கியமாகு,நான் போய் சித்தி கிட்ட கேட்டுட்டு வரேன் என்று சொல்லி விட்டு கவிதா இருக்கும் விநாயகர் சன்னதியை நோக்கிப் போனான்.

தனது தியானத்தை முடித்துவிட்டு எழுந்த கவிதா,மீண்டும் விநாயகரை வணங்கி விட்டு படியில் இருந்து கீழே இறங்கி வர,அங்கு வந்த வேலுவோ, என்ன சித்தி நீ மட்டும் தனியா வந்திருக்க?

இல்லப்பா,உன் தங்கச்சிங்க ரெண்டு பேரும் தான் வந்தாங்க.தாமரைக்கு வேலை விஷயமா போன் வந்துச்சி அதான் ரெண்டு பேரும் வீட்டுக்கு போயிட்டாங்க.

ஓஓஓ என்றவன்,சரி வா நான் உன்னை வீட்டில் விடுறேன் என்கவும்,இல்லப்பா நான் நடந்து போகிறேன் என்று கவிதா சொல்ல,பரவால்ல வா என்றவன் கதிருக்கு அங்கிருந்து தலையசைத்து விட்டு கவிதாவோடு வீட்டிற்கு சென்றான்.

"இருவரும் பேசிக் கொண்டே வீட்டிற்கு வர,அங்கு பிள்ளைகள் மூவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.உள்ளே வந்த கவிதாவை கண்ட தாமரை,அம்மா என்று ஓடிப்போய் கட்டிக்கொண்டாள்.

என்னம்மா என்க,போனில் சொன்ன செய்திகளை அவள் சொல்ல அவருக்கு மகளை நினைத்து பெருமையாக இருந்தது.

வேலுக்கு என்ன என்று புரியாததால் அவன் அமைதியாக இருக்க,அவனிடம் தனது படிப்பை பற்றியும் தற்பொழுது கிடைத்திருக்கும் ப்ராஜெக்ட் பற்றியும் தாமரை சொல்ல வாழ்த்துக்கள்டா என்றான்.

அதற்கு அவளோ,தேங்க்ஸ்ணா என்க,தங்கச்சியின் தலையில் கை வைத்தவன் உன் ஆசைப்படியே நடக்கட்டும்டா என்றவன், ஏய் வாலு பொம்மலாட்டம் போட்டுருந்தாங்களாமே என எதார்தமாக கேட்பது போல அல்லியிடம் கேட்டான்.

"ஆமாணா...நானும் அக்காவும் தான் போயிருந்தோம் என்று அல்லி சொல்ல, அப்படியா!!!என்று ஆச்சரியமாக கேட்டான் வேலு.ஆமாணா...அம்மா போக வேண்டான்னு தான் சொல்லுச்சு. அப்பா தான் சரி பார்த்து போங்கன்னு சொன்னாங்கணா.

"முடிந்து வரும் போது ஒரு விஷயம் நடந்திச்சிணா"என்று அல்லி சொல்ல, அதைக்கேட்டு தாமரைக்கு திக்கென்று இருந்தது.அய்யோ...!யார் மேலையோ விழுந்தோமே அது இவளுக்கு தெரிந்திருக்குமோ என்று நினைத்தவள்,நான் விழுந்தது இருட்டில்.

இடித்தவன் யாரென்று எனக்கே தெரியலை,இவளுக்கு எங்கே தெரியப்போகிறது என்று இயல்பாக இருப்பது போல் இருக்க,இதுவரை அவள் முக மாற்றத்தை கவனித்த வேலுவிற்கு எங்கேயோ விஷயம் இடிப்பது போல் இருந்தது.

என்னடா பொம்மலாட்டகாரன் கிட்ட இருந்து ஏதாச்சு பொம்மையை திருடிட்டு ஓடி வந்தியா என்று வேலு சிரிக்க, அய்யோஓஓஓ அண்ணாஆஆஆ என பல்லை கடித்தவள்,நாங்க ரெண்டு பேரும் பொம்மலாட்டம் பாத்துட்டு திரும்ப வீட்டுக்கு வந்துட்டு இருக்கும் போது எப்பையும் போல கல்லு வச்சி விளையாண்டுகிட்டே வந்தேன்

"அப்பவே அக்கா சொல்லுச்சு கல்லு எடுத்து விளையாடாதடினு.நான் கேட்காம தூக்கி போட்டே வரும் போது அங்க நம்ம பரமன் வீட்டு நாய் படுத்திருந்துச்சா அது மேல கல்லு பட்டுவிட்டது.அய்யய்யோ அது கடிக்கிற நாயாச்சேடா என்றான் வேலு

"ஆமாணா.முதல்ல அது எங்க ரெண்டு பேரையும் பார்த்து குறைச்சிது.அதுக்கு பிறகு எங்களை துரத்த ஆரம்பிச்சிட்டு. எனக்கு நம்ப ஊர் சந்துலாம் நல்லா தெரியுமே அதனால வேகமா ஓடி வந்துட்டேன்.ரெண்டு மூன்று சந்து தாண்டிய பிறகு தான் பின்னாடியே ஓடி வந்த அக்காவை காணோமே என்று தெரிஞ்சிது.

அந்த நேரத்தில் தான் கரண்டும் திடீர்னு கட் ஆயிடுச்சு.அப்போ தான் எனக்கு ஞாபகம் வந்ததுணா என் கையில செல்போன் இருப்பது.

ஐயோ.. இந்த இருட்டில் அக்கா எங்க போய் மாட்டிக்கிறாளோனு லைட் அடிச்சிக்கிட்டே அக்கா அக்கா என கூப்பிட்டு கிட்டே வரும்போது அக்காவும் அந்த சந்தில் இருந்து வந்துச்சுணா.

அப்போ...அன்று இரவு கதிரின் மேல் மோதியவள் தனது பெரிய தங்கை என்பது வேலுக்கு புரிய,அது இவள் தான் என்று தெரிந்தால் அவன் என்ன முடிவு எடுப்பான் என்று ஒரு பக்கம் யோசனையானது.

"சரி அவன் கிட்ட சொல்லலாம், அடுத்ததாக அவன் என்ன முடிவு எடுக்கிறானோ எடுக்கட்டுமென்று நினைத்தவன்,மேலும் சிறிது நிமிடங்கள் அவர்களோடு பேசியிருந்து விட்டு நான் கிளம்புறேன் சித்தி என்றவனிடம்,அண்ணே நானும் வரேன் என்றாள் தாமரை.

"எங்கடா?என்றவனுக்கு பெரியம்மாவை பார்க தான்,அப்படியே பாட்டியையும் பார்கனும் என்று அவள் சொல்ல,அங்கு இருப்பவர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.பாட்டி வீட்டுக்கு இன்னொரு நாளைக்கு போகலாம் பாப்பா,அங்க மாமா வீட்ல வயல்ல நடவு நடக்குது.

எல்லாரும் அங்கே தான் இருப்பாங்க.நீ போனாலும் அவங்களை பார்க்க முடியாதே என சமாளித்தவன்,இப்ப நீ அம்மாவை வந்து பாருடா என்றான்..

அண்ணா நான் ஏற்கனவே வந்து ரெண்டு நாள் ஆகுதுணா.பாட்டிக்கு தாத்தாவுக்கு எல்லாம் டிரஸ் வாங்கிட்டு வந்தேன் அவங்களுக்கு கொடுக்கனுமே என்று சொல்ல, இன்னொரு நாளைக்கு வள்ளி செல்லத்தை பார்க போகலாம். நீயே யோசி,வயல் வேலை நடக்கும் போது யாராவது வீட்டில் இருப்பார்களா?

அதற்கு தாமரையோ நீ சொல்றதும் சரிதான் என்றவள்,இரு அம்மாவை மட்டும் பார்கலாம் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று ஒரு கவரோடு வந்தவள் அம்மா நான் போய் பெரியம்மாவை பாத்துட்டு வரேனென்று சொல்ல,நானும் வரேன் என்று சொன்னாள் அல்லியும்.

சரி பார்த்து போங்கள் என்ற கவிதாவிடம் நால்வரும் சொல்லிக்கொண்டு,சிவா வண்டியில் அல்லியும்,வேலுவின் வண்டியில் தாமரையும் ஏறிக்கொள்ள அவர்கள் நால்வரும் வேலுவின் வீட்டை நோக்கி சென்றனர்.

ஐந்து நிமிட பயணத்தில் வேலுவின் வீட்டு வாசலில் வந்து வண்டி நிற்க,கீழே இறங்கியவள் பெரியம்மா பெரியம்மா என்று கூப்பிட்டுக்கொண்டே அல்லி போக,என்ன மேடத்துக்கு இந்த பக்கம் காத்தடிக்குது?

அதும் திடிர்னு பாசம் பொங்குது பெரியம்மா மேல?என கேட்டுக் கொண்டே வந்த வேலுவின் அம்மா, அங்கிருந்து தாமரையை யோசனையாக பார்க்க,அம்மா என்று ஓடிப்போய் அவரை கட்டிக் கொண்டாள்.

வந்தவள் யார் என்று சொல்லாமலே அவருக்கு தெரிய,அதிர்ச்சியோடே செல்லம் நீயாடா?என்க,நான் தான் மா என்றவளின் கண்ணில் நீர் தழும்பியது.

எத்தனை வருஷம் ஆகுதுடா ஆத்தா உன்னை பார்த்து என்றவர் மகளை கட்டிக்கொண்டு இந்த அம்மா மேல உனக்கு கொஞ்சம் கூட பாசம் இல்லாம போயிடுச்சு?மறந்துட்ட இல்ல நீ?

"இல்லம்மா,அது எப்படி நான் உங்களை மறப்பேன்.

அப்பொழுது,என்ன இப்படி வெளியே நின்றே பாசத்தை புழிய போறீங்களா?,இல்லை வீட்டுக்குள்ளே போக போறீங்களா என்று வேலு சொல்ல,மகனின் பேச்சை கேட்டவர்,அய்யோ வந்த பிள்ளையை வாசலில் நிக்க வச்சு பேசிகிட்டு இருக்கேனே என்றவர், வாடா வாடா என்று தாமரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று அங்கிருக்கும் திண்ணையில் அமர்ந்து கொண்டவர், செல்லம் எப்படி இருக்கடா?என்றவர் வேதாவை பற்றியும் தாமரையிடம் விசாரித்தார்.

அப்பொழுது,இங்க ஒருத்தி இருக்கேன் என்றாள் அல்லி.அட சின்ன கழுதைக்கு பொறாமைய பாரு என்று சிரித்தவர், இருடா அம்மா சமைக்கிறேன்,எத்தனை வருஷம் ஆகுது என் கையால உனக்கு சாப்பாடு ஊட்டி விட்டு என்று சொல்லி கண் கலங்க,அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்மா என்றாள் தாமரை.

"நீ சும்மா இருடா என்றவர்,சமையல் அறைக்குள் சென்று,ஒரு அடுப்பில் மதியம் சாமிக்கு படைக்க செய்த சாம்பாரை சூடு பண்ண,இன்னொரு அடுப்பில் சட்னிக்கு வெங்காயம் தக்காளி,காய்ந்த மிளகாயை வதக்கி, அதை ஆற விட்டு அங்கிருந்த அம்மியில் அரைத்து எடுத்தவர்,பின் தோசையை ஊற்றினார்.

அம்மா சமைக்கும் வரை,தாமரைக்கு வீட்டில் இருந்த அவளின் சிறு வயது போட்டோவை வேலுவும் காட்டிக் கொண்டிருந்தான்.

சமைத்ததை ஒரு தட்டில் போட்டு எடுத்து வந்தவர் செல்லம் என அவளருகில் அமர்ந்து தன் கையாலே தாமரைக்கு ஊட்டி விட, பெரியம்மா இது என்ன ஓரவஞ்சனை?

"குத்துக்கல்லு போல ஒருத்தி இருக்கிறேன்.என்னை பார்த்தா உனக்கு மகளா தெரியலையா?என அல்லி முறைக்க,பொறாமை புடிச்ச கழுதை. உனக்கு முன்னாடியே நான் தூக்கி வளர்த்த பிள்ளைடி தாமரை என்றவருக்கு நடக்கட்டும் நடக்கட்டும் என்று சொல்லி விட்டு,உள்ளே போய் மீதி இருந்த மூவருக்கும் சாப்பிட எடுத்து வந்தவள்,தட்டில் வைத்து சிவாவிடமும், வேலுவிடமும் கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டாள்.

நால்வரும் சாப்பிட்டு முடித்த பின் மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கும் போது வேலுவின் தந்தையும் வந்துவிட,அவருக்கும் தாமரை பற்றிய அறிமுக படலத்தை சொல்லினர்.சரிமா நேரம் ஆகுது,நான் போய் பாப்பாவை வீட்ல விட்டுட்டு வரேன் என்று வேலு சொல்ல சரிப்பா பாத்து போங்க என்றார்.

"தாமரை வாங்கி வந்த புடவையை கணவரிடம் காட்டியவர்,சின்ன புள்ளையில் என் காலையே சுத்தி சுத்தி விளையாண்ட புள்ளை,இன்னைக்கு எவ்வளவு பெரிய பொண்ணா ஆகிட்டு பாருங்களேன் என்றார்.

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top