Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
பகுதி 8
"என்ன ரோஜா அப்படி பாக்குற?" என்று கனகா ரோஜாவை கேள்வி கேட்டுக்கொண்டே அவள் அருகில் வந்தாள்.
"இவன் இங்க என்ன பண்ணுறான்னு ரோஸ்க்கு சந்தேகம் போல" என்று துர்வா கனகாவுக்கு பதில் தந்தவனின் கண்கள் ரோஜாவை பார்த்து கொண்டு இருந்தது.
"அப்படியா ரோஜா? அதுதான் உன் பார்வைக்கு அர்த்தமா?" என்று கனகா கேட்டாள்.
"துர்கா நீங்க எப்படி இங்க?" என்று ரோஜா கேட்க,
"ம்.... உன்னை பாக்க தான் வந்தேன். ஏன் நான் வர கூடாதா?" என்றான் துர்வா.
"நான் இங்க இருக்குறது உங்களுக்கு எப்படி தெரியும்?”
"ரோஜா மேடம். உன் துர்கா என் மோகனோட நண்பன்" என்றாள் கனகா.
"என்ன கனகா சொல்ற?”
துர்வா, "ஆமா ரோஸ். மோகன் என் நண்பன்."
"அது மட்டும் இல்ல ரோஜா. எங்க கல்யாணத்துக்கு சாட்சி கையெழுத்து போட்டதே துர்வா தான்" என்றாள் கனகா.
"ஆனா...” மேலே கேட்காது நிறுத்தினாள்.
"என்ன ஆனா? இப்போ எப்படி துர்வா இங்க வந்தான்னு கேக்க போறியா?"
"ம்..." என்றாள் ரோஜா.
"உனக்கு தலையில அடிபட்டு நீ துர்வா வீட்டுக்கு போன கதையை சொன்ன பாரு. அப்போவே நீ இவனை பற்றி தான் சொல்றேன்னு நான் தெரிஞ்சிகிட்டேன். நேத்து தான் துர்வாக்கு போன் பண்ணி நீ என்கூட தான் இருக்கன்னு சொன்னேன்."
"ஆனா.” என்றாள் திரும்பவும்.
"இரு இரு. ஏன் இந்த விஷயத்தை இவன்கிட்ட சொன்னேன்னு எல்லாம் கேக்காத. துர்வாவோட குழந்தைக்கு உடம்பு சரியில்லன்னு நீ அன்னைக்கு சொன்ன இல்ல. அத விசாரிக்க தான் இவனுக்கு கால் பண்ணேன். எனக்கு எப்படி விஷயம் தெரியும்னு கேட்டான். அதான் நீ இங்க இருக்குற எல்லா விஷயத்தை சொல்ல வேண்டியதா போச்சு."
"எல்லாம்னா?" என்றாள் புரியாது.
“எல்லாம் தான் ரோஸ்" என்றான் துர்வா.
"இல்ல துர்கா நான்..."
“லீவ் இட் ரோஸ். பாஸ்ட் பற்றி பேச வேணாம்.”
"அம்மா... இந்த ரூம்ல விளையாட்டு எல்லாம் இல்லையா?” என்று குழந்தை கேட்க,
"திக்ஷி பாப்பாவுக்கு விளையாட என்ன வேணும்?”
"அவளுக்கு இப்போ நீ மட்டும் போதும். அதனால அவளை தூக்கிகிட்டு கீழே வா." என்று ரோஜாவை அழைத்த கனகா கீழே இறங்கி செல்ல, துர்வா ரோஜாவிடம் இருந்து குழந்தையை தன் வசம் வாங்கி கொண்டவன்
"என்ன ரோஸ். உனக்கு நான் இங்க வந்தது பிடிக்கலையா?” என்றான்.
“சாரி துர்கா."
"எதுக்கு இந்த சாரி?”
"என் பாஸ்ட் உங்கிட்ட சொல்ல கூடாதுன்னு இல்ல. ஆனா, நான் என் விஷயத்தைச் சொல்லி உங்கள சங்கடப்படுத்த விரும்பல" என்றாள் ரோஜா.
"ம்... புரியுது" என்றான் அவனும்.
"என் மேல கோவம் இல்லையே?"
"இந்த விஷயத்துக்கு இல்ல தான். ஆனா...” என்று இழுத்தான்.
"வேற என்ன கோவம்?" என்றாள் புரியாது.
"கோவம் இல்ல ரோஸ். ஆனா, என்னைக்காவது உன்னைப் பார்த்தா உன்கிட்ட கேக்கணும்ன்னு நினைச்ச ஒரு கேள்வி இருக்கு."
இப்பொழுதும் புரியாது, "என்ன? என்ன கேள்வி துர்கா?" என்றாள்.
"ஏன் ரோஸ், ஆறு வருஷதுக்கு முன்னாடி, என்கிட்ட ஒரு குட் பை கூட சொல்லாம சொல்லாம போன?"
"அது வந்து...” என்று வார்த்தைகள் இல்லாது திணற,
"இல்ல ரோஸ். ஜஸ்ட் ஒரு பை சொல்லிட்டுப் போய் இருக்கலாம்ல?"
"துர்கா! உங்கிட்டன்னு இல்ல. என் நண்பர்கள் நிறைய பேருக்கு நான் காலேஜ் விட்டு ஏன் நின்னுட்டேன்னு தெரியாது. ஏன்னா சொல்லிட்டு போறதுக்கு உண்டான சூழ்நிலையில அன்னைக்கு நான் இல்ல. எப்பவும் போல காலேஜ் முடிச்சிட்டு வீட்டுக்கு போன என்னைப் பெண் பார்க்க வந்துருக்காங்கன்னு என் அப்பா ஒரு குடும்பத்தை அறிமுகப்படுத்தி வச்சாரு. வந்தவங்களும் ஜாதகம் பொருந்தி இருக்கு, அடுத்த முகூர்த்ததிலேயே கல்யாணத்தை முடிச்சிடலாம்ன்னு சொல்லிட்டாங்க. எல்லாமே கனவு போல நடந்து முடிஞ்சிடுச்சி. என்னை என்ன பண்ண சொல்றிங்க?” என்று ரோஜா தன் நியாயத்தை விளக்கிச் சொன்னாள்.
"ம்... சரி. நான் கீழே போறேன். இல்லனா கனகா கட்டையில அடிப்பாங்க." என்று கிண்டலாக சிரித்த துர்வா, ரோஜாவின் அறையில் இருந்து தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்க, துர்வாவைப் பின் தொடர்ந்து ரோஜாவும் கீழே இறங்கினாள்.
"அப்பா நான் அம்மாகிட்ட போறேன்." என்று துர்வா தோளில் இருந்து இறங்கிய குழந்தை ரோஜாவின் கையில் சேர்ந்தது.
"காபி எடுத்துக்கோங்க" என்று சொன்ன கனகா மேசை மேல் நான்கு கோப்பையை வைத்தவள், குழந்தை திக்ஷிக்கு ஹார்லிக்ஸ் கொண்டு வந்து தந்தாள்.
"ரோஜா! நான் இன்னைக்கு துர்வாவை இங்க வர சொன்னதுக்கு வேற ஒரு முக்கியமான காரணமும் இருக்கு" என்று கனகா தன் பேச்சில் பீடிகை போட்டாள்.
‘என்ன?’ என்று தன் பார்வையால் கேட்டாள் ரோஜா.
“அடுத்த வாரம் நான் கேரளா போறேன். அப்போ உன்னால இங்க தனியா இருக்க முடியாது. அதான் நீ துர்வா வீட்டுல... இல்ல இல்ல திக்ஷிதா வீட்ல இருக்க உனக்கு சம்மதமான்னு கேக்க தான் இவனை வர சொன்னேன்" என்று கனகா சொன்னதும், துர்வா முகமும், ரோஜா முகமும் ஒன்று சேர்ந்தது போல மாறியது.
"ஐயோ ரோஸ்! எனக்கும், இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. நீ மோகன் வீட்டுல இருக்கன்னு கனகா சொன்னதால தான் நான் குழந்தையைத் தூக்கிகிட்டு, உனக்கு ஒரு ஷாக் டிரீட்மென்ட் தரலாம்னு வந்தேன். மத்தபடி கனகா சொல்றதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை" என்று துர்வா பதறினான்.
"ஆமா ரோஜா. துர்வாக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாது. எனக்கே இன்னைக்கு ஈவினிங் தான் மெசேஜ் வந்துச்சு. இந்த மீட்டிங்க்கு நான் கண்டிப்பா போய் ஆகணும். அதான் உன்னை எப்படி இங்க தனியே விட்டுட்டு போறதுன்னு யோசனையா இருந்துச்சு" என்று கனகா யோசித்தாள்.
"இதுல என்ன இருக்கு. நான் என்ன சின்ன பிள்ளையா? அதெல்லாம் நான் தனியா இருந்துப்பேன். நீ உன் மீட்டிங்கை வெற்றிகரமா முடிச்சிட்டு வா" என்று ரோஜா நாசூக்காக துர்வாவின் வீட்டுக்கு செல்ல மறுத்து விட்டாள்.
"இந்த ஊரு உனக்கு பழக்கம் இல்லையே ரோஜா. அதான் சொன்னேன் அங்க போகச் சொன்னேன். சரி அப்புறம் உன் இஷ்டம்" என்று சொன்ன கனகா இவர்கள் குடித்து வைத்த காபி கப்பை எடுத்து கொண்டு சமையல் அறைக்குச் சென்றாள்.
"அப்புறம் ரோஸ். உனக்கு எங்க தாத்தா லைப்ரரில ஒர்க் பண்றது பிடிச்சிருக்கா? என்று துர்வா கேட்டதும், “ரோஜா அவனை முறைத்தவள்,
"நான் அங்க வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் ஆச்சு. நீங்க இப்போ தான் இந்த கேள்வியை கேக்குறீங்களா" என்றாள் ரோஜா.
"ஒரு வாரமோ ஒரு யுகமோ, கேள்வி கேட்டா பதில் சொல்லணும்" என்றான் துர்வா.
"ரொம்ப மனநிறைவா இருக்கு துர்கா. நமக்குப் பிடிச்சப் புத்தகங்கள் நடுவில் வாழும் போது அப்படி ஒரு சந்தோசமா இருக்கு. நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்” என்று முகம் மலர்ந்து சிரித்தாள் ரோஜா.
"என்ன மகிழ்ச்சி? யாருக்கு மகிழ்ச்சி?” என்று கேள்வி எழுப்பி கொண்டே கையில் காய்கறிகளுடன் வந்தாள் கனகா.
"தாங்க நான் கட் பண்றேன்" என்று துர்வா கனகா அருகில் அமர்ந்தவன் முதலில் வெங்காயத்தை வெட்ட ஆரம்பிக்க, அவன் செயலை ஆச்சிரியமாக பார்த்து கொண்டு இருந்தாள் ரோஜா.
"என்ன ரோஜா அப்படி பாக்குற? இந்த முரளிக்கும், என் மோகனுக்கும் இது தான் வேலை. மாசத்துல ஒரு முறை கண்டிப்பா இந்த முரளி எங்க வீட்டுக்கு வந்துடுவான். வந்தவன் சும்மா இல்லாம என் மோகன் கூட சேர்ந்து சமையல் அறையை ஒரு வழி பண்ணிடுவான். ஆனா, சும்மா சொல்லக்கூடாது, சாப்பாடு எல்லாம் நல்லாவே பண்ணுவான்" என்று சொல்லி கொண்டே கனகா அவள் அருகில் இருந்த கேரட்டைக் கடித்தாள்..
"ஆமா யார் அது முரளி?" என்று ரோஜா கேள்வி கேட்டவள் திக்ஷியை தூக்கி கொண்டு மேசையின் அருகில் வந்தாள்.
"வேற யாரு. இதோ இந்தப் பையன் தான் முரளி" என்று கனகா தன் கரங்களைத் துர்வாவை நோக்கி நீட்ட, துர்வா தன் கையில் இருந்த கத்தியை கொண்டு கனகாவை குத்துவதை போல பாவனை செய்தான்.
"ரோஜா இந்த துர்வா பையன் காலேஜ் டைம்ல ஒரு பெண்ணை லவ் பண்ணிருக்கான். அந்தப் பொண்ணுகிட்ட இவன் காதலைச் சொல்ல எண்ணும் போதெல்லாம், ஏதோ ஒரு நெருடல் ஏற்பட்டு தன் காதலைச் சொல்லாமலேயே தனக்குள்ள மறச்சு வச்சி இந்த இதயம் படத்துல முரளி வருவாரு இல்ல அப்படி இருந்துக்குறான் பயபுள்ள.”
"என்ன ரோஜா அப்படி பாக்குற?" என்று கனகா ரோஜாவை கேள்வி கேட்டுக்கொண்டே அவள் அருகில் வந்தாள்.
"இவன் இங்க என்ன பண்ணுறான்னு ரோஸ்க்கு சந்தேகம் போல" என்று துர்வா கனகாவுக்கு பதில் தந்தவனின் கண்கள் ரோஜாவை பார்த்து கொண்டு இருந்தது.
"அப்படியா ரோஜா? அதுதான் உன் பார்வைக்கு அர்த்தமா?" என்று கனகா கேட்டாள்.
"துர்கா நீங்க எப்படி இங்க?" என்று ரோஜா கேட்க,
"ம்.... உன்னை பாக்க தான் வந்தேன். ஏன் நான் வர கூடாதா?" என்றான் துர்வா.
"நான் இங்க இருக்குறது உங்களுக்கு எப்படி தெரியும்?”
"ரோஜா மேடம். உன் துர்கா என் மோகனோட நண்பன்" என்றாள் கனகா.
"என்ன கனகா சொல்ற?”
துர்வா, "ஆமா ரோஸ். மோகன் என் நண்பன்."
"அது மட்டும் இல்ல ரோஜா. எங்க கல்யாணத்துக்கு சாட்சி கையெழுத்து போட்டதே துர்வா தான்" என்றாள் கனகா.
"ஆனா...” மேலே கேட்காது நிறுத்தினாள்.
"என்ன ஆனா? இப்போ எப்படி துர்வா இங்க வந்தான்னு கேக்க போறியா?"
"ம்..." என்றாள் ரோஜா.
"உனக்கு தலையில அடிபட்டு நீ துர்வா வீட்டுக்கு போன கதையை சொன்ன பாரு. அப்போவே நீ இவனை பற்றி தான் சொல்றேன்னு நான் தெரிஞ்சிகிட்டேன். நேத்து தான் துர்வாக்கு போன் பண்ணி நீ என்கூட தான் இருக்கன்னு சொன்னேன்."
"ஆனா.” என்றாள் திரும்பவும்.
"இரு இரு. ஏன் இந்த விஷயத்தை இவன்கிட்ட சொன்னேன்னு எல்லாம் கேக்காத. துர்வாவோட குழந்தைக்கு உடம்பு சரியில்லன்னு நீ அன்னைக்கு சொன்ன இல்ல. அத விசாரிக்க தான் இவனுக்கு கால் பண்ணேன். எனக்கு எப்படி விஷயம் தெரியும்னு கேட்டான். அதான் நீ இங்க இருக்குற எல்லா விஷயத்தை சொல்ல வேண்டியதா போச்சு."
"எல்லாம்னா?" என்றாள் புரியாது.
“எல்லாம் தான் ரோஸ்" என்றான் துர்வா.
"இல்ல துர்கா நான்..."
“லீவ் இட் ரோஸ். பாஸ்ட் பற்றி பேச வேணாம்.”
"அம்மா... இந்த ரூம்ல விளையாட்டு எல்லாம் இல்லையா?” என்று குழந்தை கேட்க,
"திக்ஷி பாப்பாவுக்கு விளையாட என்ன வேணும்?”
"அவளுக்கு இப்போ நீ மட்டும் போதும். அதனால அவளை தூக்கிகிட்டு கீழே வா." என்று ரோஜாவை அழைத்த கனகா கீழே இறங்கி செல்ல, துர்வா ரோஜாவிடம் இருந்து குழந்தையை தன் வசம் வாங்கி கொண்டவன்
"என்ன ரோஸ். உனக்கு நான் இங்க வந்தது பிடிக்கலையா?” என்றான்.
“சாரி துர்கா."
"எதுக்கு இந்த சாரி?”
"என் பாஸ்ட் உங்கிட்ட சொல்ல கூடாதுன்னு இல்ல. ஆனா, நான் என் விஷயத்தைச் சொல்லி உங்கள சங்கடப்படுத்த விரும்பல" என்றாள் ரோஜா.
"ம்... புரியுது" என்றான் அவனும்.
"என் மேல கோவம் இல்லையே?"
"இந்த விஷயத்துக்கு இல்ல தான். ஆனா...” என்று இழுத்தான்.
"வேற என்ன கோவம்?" என்றாள் புரியாது.
"கோவம் இல்ல ரோஸ். ஆனா, என்னைக்காவது உன்னைப் பார்த்தா உன்கிட்ட கேக்கணும்ன்னு நினைச்ச ஒரு கேள்வி இருக்கு."
இப்பொழுதும் புரியாது, "என்ன? என்ன கேள்வி துர்கா?" என்றாள்.
"ஏன் ரோஸ், ஆறு வருஷதுக்கு முன்னாடி, என்கிட்ட ஒரு குட் பை கூட சொல்லாம சொல்லாம போன?"
"அது வந்து...” என்று வார்த்தைகள் இல்லாது திணற,
"இல்ல ரோஸ். ஜஸ்ட் ஒரு பை சொல்லிட்டுப் போய் இருக்கலாம்ல?"
"துர்கா! உங்கிட்டன்னு இல்ல. என் நண்பர்கள் நிறைய பேருக்கு நான் காலேஜ் விட்டு ஏன் நின்னுட்டேன்னு தெரியாது. ஏன்னா சொல்லிட்டு போறதுக்கு உண்டான சூழ்நிலையில அன்னைக்கு நான் இல்ல. எப்பவும் போல காலேஜ் முடிச்சிட்டு வீட்டுக்கு போன என்னைப் பெண் பார்க்க வந்துருக்காங்கன்னு என் அப்பா ஒரு குடும்பத்தை அறிமுகப்படுத்தி வச்சாரு. வந்தவங்களும் ஜாதகம் பொருந்தி இருக்கு, அடுத்த முகூர்த்ததிலேயே கல்யாணத்தை முடிச்சிடலாம்ன்னு சொல்லிட்டாங்க. எல்லாமே கனவு போல நடந்து முடிஞ்சிடுச்சி. என்னை என்ன பண்ண சொல்றிங்க?” என்று ரோஜா தன் நியாயத்தை விளக்கிச் சொன்னாள்.
"ம்... சரி. நான் கீழே போறேன். இல்லனா கனகா கட்டையில அடிப்பாங்க." என்று கிண்டலாக சிரித்த துர்வா, ரோஜாவின் அறையில் இருந்து தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்க, துர்வாவைப் பின் தொடர்ந்து ரோஜாவும் கீழே இறங்கினாள்.
"அப்பா நான் அம்மாகிட்ட போறேன்." என்று துர்வா தோளில் இருந்து இறங்கிய குழந்தை ரோஜாவின் கையில் சேர்ந்தது.
"காபி எடுத்துக்கோங்க" என்று சொன்ன கனகா மேசை மேல் நான்கு கோப்பையை வைத்தவள், குழந்தை திக்ஷிக்கு ஹார்லிக்ஸ் கொண்டு வந்து தந்தாள்.
"ரோஜா! நான் இன்னைக்கு துர்வாவை இங்க வர சொன்னதுக்கு வேற ஒரு முக்கியமான காரணமும் இருக்கு" என்று கனகா தன் பேச்சில் பீடிகை போட்டாள்.
‘என்ன?’ என்று தன் பார்வையால் கேட்டாள் ரோஜா.
“அடுத்த வாரம் நான் கேரளா போறேன். அப்போ உன்னால இங்க தனியா இருக்க முடியாது. அதான் நீ துர்வா வீட்டுல... இல்ல இல்ல திக்ஷிதா வீட்ல இருக்க உனக்கு சம்மதமான்னு கேக்க தான் இவனை வர சொன்னேன்" என்று கனகா சொன்னதும், துர்வா முகமும், ரோஜா முகமும் ஒன்று சேர்ந்தது போல மாறியது.
"ஐயோ ரோஸ்! எனக்கும், இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. நீ மோகன் வீட்டுல இருக்கன்னு கனகா சொன்னதால தான் நான் குழந்தையைத் தூக்கிகிட்டு, உனக்கு ஒரு ஷாக் டிரீட்மென்ட் தரலாம்னு வந்தேன். மத்தபடி கனகா சொல்றதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை" என்று துர்வா பதறினான்.
"ஆமா ரோஜா. துர்வாக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாது. எனக்கே இன்னைக்கு ஈவினிங் தான் மெசேஜ் வந்துச்சு. இந்த மீட்டிங்க்கு நான் கண்டிப்பா போய் ஆகணும். அதான் உன்னை எப்படி இங்க தனியே விட்டுட்டு போறதுன்னு யோசனையா இருந்துச்சு" என்று கனகா யோசித்தாள்.
"இதுல என்ன இருக்கு. நான் என்ன சின்ன பிள்ளையா? அதெல்லாம் நான் தனியா இருந்துப்பேன். நீ உன் மீட்டிங்கை வெற்றிகரமா முடிச்சிட்டு வா" என்று ரோஜா நாசூக்காக துர்வாவின் வீட்டுக்கு செல்ல மறுத்து விட்டாள்.
"இந்த ஊரு உனக்கு பழக்கம் இல்லையே ரோஜா. அதான் சொன்னேன் அங்க போகச் சொன்னேன். சரி அப்புறம் உன் இஷ்டம்" என்று சொன்ன கனகா இவர்கள் குடித்து வைத்த காபி கப்பை எடுத்து கொண்டு சமையல் அறைக்குச் சென்றாள்.
"அப்புறம் ரோஸ். உனக்கு எங்க தாத்தா லைப்ரரில ஒர்க் பண்றது பிடிச்சிருக்கா? என்று துர்வா கேட்டதும், “ரோஜா அவனை முறைத்தவள்,
"நான் அங்க வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் ஆச்சு. நீங்க இப்போ தான் இந்த கேள்வியை கேக்குறீங்களா" என்றாள் ரோஜா.
"ஒரு வாரமோ ஒரு யுகமோ, கேள்வி கேட்டா பதில் சொல்லணும்" என்றான் துர்வா.
"ரொம்ப மனநிறைவா இருக்கு துர்கா. நமக்குப் பிடிச்சப் புத்தகங்கள் நடுவில் வாழும் போது அப்படி ஒரு சந்தோசமா இருக்கு. நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்” என்று முகம் மலர்ந்து சிரித்தாள் ரோஜா.
"என்ன மகிழ்ச்சி? யாருக்கு மகிழ்ச்சி?” என்று கேள்வி எழுப்பி கொண்டே கையில் காய்கறிகளுடன் வந்தாள் கனகா.
"தாங்க நான் கட் பண்றேன்" என்று துர்வா கனகா அருகில் அமர்ந்தவன் முதலில் வெங்காயத்தை வெட்ட ஆரம்பிக்க, அவன் செயலை ஆச்சிரியமாக பார்த்து கொண்டு இருந்தாள் ரோஜா.
"என்ன ரோஜா அப்படி பாக்குற? இந்த முரளிக்கும், என் மோகனுக்கும் இது தான் வேலை. மாசத்துல ஒரு முறை கண்டிப்பா இந்த முரளி எங்க வீட்டுக்கு வந்துடுவான். வந்தவன் சும்மா இல்லாம என் மோகன் கூட சேர்ந்து சமையல் அறையை ஒரு வழி பண்ணிடுவான். ஆனா, சும்மா சொல்லக்கூடாது, சாப்பாடு எல்லாம் நல்லாவே பண்ணுவான்" என்று சொல்லி கொண்டே கனகா அவள் அருகில் இருந்த கேரட்டைக் கடித்தாள்..
"ஆமா யார் அது முரளி?" என்று ரோஜா கேள்வி கேட்டவள் திக்ஷியை தூக்கி கொண்டு மேசையின் அருகில் வந்தாள்.
"வேற யாரு. இதோ இந்தப் பையன் தான் முரளி" என்று கனகா தன் கரங்களைத் துர்வாவை நோக்கி நீட்ட, துர்வா தன் கையில் இருந்த கத்தியை கொண்டு கனகாவை குத்துவதை போல பாவனை செய்தான்.
"ரோஜா இந்த துர்வா பையன் காலேஜ் டைம்ல ஒரு பெண்ணை லவ் பண்ணிருக்கான். அந்தப் பொண்ணுகிட்ட இவன் காதலைச் சொல்ல எண்ணும் போதெல்லாம், ஏதோ ஒரு நெருடல் ஏற்பட்டு தன் காதலைச் சொல்லாமலேயே தனக்குள்ள மறச்சு வச்சி இந்த இதயம் படத்துல முரளி வருவாரு இல்ல அப்படி இருந்துக்குறான் பயபுள்ள.”