- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
33
“நமக்குத் தெரியாமல் நடத்துற சர்ப்ரைஸ் கல்யாணம். காலையில கல்யாணத்தப்ப நீ மேடைக்கு வந்து, எனக்கு நல்லது செய்றேன்னு நதீராவைதான் நீங்க கட்டிக்கணும்னு சொல்லி மேடையை விட்டு இறங்கிட்டா? என்ன பண்ண முடியும் என்னால்? அப்படி ஒரு கேரக்டர் இல்ல அது நீதான்னு சொல்லியும் நீ நம்பலன்னா? அந்த இடத்தில் இப்படி நடக்க நிறைய சான்ஸ் இருந்தது. அதான் ஃபாத்தியை நடிக்கச் சொன்னேன்.”
“உன் மனசும் நோகக்கூடாது. அட் த சேம் டைம், நீ எனக்கு வேணும். யாரையும் நினைக்காம என்னை மட்டும் மனசுல சுமந்து, என்னைக் கல்யாணம் பண்ணனும்னு முடிவெடுத்தேன். நீ எந்த வகையிலும் சஞ்சலப்படக் கூடாதுன்னுதான் மேரேஜ் ப்ரபோஸல் அப்பவே, அன்புதான் காதல்னா நான் உன்னைக் காதலிக்கிறேன்னு என் மனதிலுள்ளதைச் சொல்லி, மணமேடையிலயும் ஐ லவ் யூன்னு சொன்னேன்.”
“அந்த வார்த்தைதான் என் மனசுல சஞ்சலத்தை உண்டாக்கியது. ஒரே நாள்ல இன்னொரு பொண்ணுகிட்ட எப்படின்னு கேள்வி எனக்குள்ள. கொஞ்சம் இல்ல நிறையவே குழப்பம் தடுமாற்றம்” என்றாள்.
“கல்யாணத்துக்கு முந்தின நாள், நான் விரும்பின பொண்ணோட மட்டும்தான் என் கல்யாணம் நடக்கும்னு உனக்குப் பிராமிஸ் பண்ணினேன் நதி. அதை நீ சரியா கேட்ச் பண்ணியிருந்தா கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டப்ப, என்கிட்ட இப்படிச் சொன்னீங்களேன்னு கேட்டுருப்ப. நானும் ஆமாம்னு எல்லா உண்மையையும் அப்பவே சொல்லியிருப்பேன்.”
“அதான் சென்டிமெண்டா பேசி வாய் திறக்கவிடாமல் செய்துட்டீங்களே. அப்புறம் எப்படி கட்டிக்கமாட்டேன்னு மறுக்க முடியும்.”
“நீ சம்மதிப்பியான்னு நைட் புல்லா தவிச்ச தவிப்பு எனக்குத்தான் தெரியும். நீ சம்மதம் சொன்னதும் அப்படியே கட்டிக்கத் தோணிச்சி. நாகரீகம் கருதியும், உனக்கு என் மேலான இமேஜ் குறைஞ்சிடக்கூடாதுன்னும் விலகி நின்னேன்.”
“ம்... நிறைய டைம் உங்க இமேஜ் உங்க பார்வையில் தெரிஞ்சது” என்று புன்னகைத்து, “எப்படின்னு பலமுறை யோசிச்சிருக்கேன். இப்பப் புரியுது சாரோட பார்வைக்கான அர்த்தம்.”
“நிஜமாவே புரிஞ்சிருச்சிதான? அப்ப ஐ லவ் யூ சந்துரு சொல்லு?”
“நான் ஏன் சொல்லணும்? அதெல்லாம் முடியாது போங்க.”
“காதலனுக்கு ஒரு ஐ லவ் யூ சொல்ல முடியல. ஆனா அவன் தங்கைக்கு ஆயிரம் லவ் யூ போகுது” என்றான் முறைத்தபடி.
“ஹலோ நீங்க காதலன் இல்ல கணவன். உங்க தங்கைக்கு ஆயிரமென்ன லட்சம் லவ் யூ சொல்வேன். எதுக்காக தெரியுமா? என் காதலனை எனக்குக் கணவனா தந்ததுக்கு. அவளோட குடும்பத்துல நானும் ஒருத்தின்னு சொல்ல வச்சதுக்கு. அவள் என்மேல் வச்ச அன்புக்கு!”
“ஹ்ம் எல்லா இடத்திலும் ஹீரோ மார்க் ஸ்கோர் பண்ணுவான். நம்ம வீட்ல மட்டும் அப்படியே ஆப்போசிட்டா மின்னல் ஸ்கோர் பண்றா.”
“பொறாமையில பொங்காதீங்க. அவளுக்கு அன்பா தாங்குற கணவன், அன்பை மட்டுமே தர்ற குடும்பம்னு அமையணும். கடைசிவரை கஷ்டம் தெரியாத பொண்ணா வாழணும்ங்க” என்றாள் மனதார.
“வாழ வச்சிரலாமே நதிமா. மாமா முகிலை பார்க்கலாம் கேட்கிறாங்க.”
“எப்படிங்க செட்டாகும்?”
“சித்தார்த் வெண்மதி பிரச்சனை அப்பவும் நீ நோதான் சொன்ன. இப்பப் போய்ப்பாரு. நாம லவ் மேரேஜ்னு வெளில சொல்ல முடியாத மாதிரி இருக்கு, அவங்களோட காதல். என்ன ரொமான்ஸ்! ஹ்ம்...” என பெருமூச்சுவிட்டான்.
“உங்களை யார் ரொமான்ஸ் பண்ண வேண்டாம் சொன்னது? நீங்களா எதையாவது நினைச்சிக்கிட்டா நான் பொறுப்பில்ல” என்று முகம் திருப்ப..
“நான் மட்டுமே பொறுப்பாகிக்கறேன் நதிமா” என்று முத்தமிட வந்தவன் நிறுத்தி, வெட்கத்தில் விலகிய மனைவியின் முகம் பார்த்து “கோவிலுக்குப் போயிட்டு வரலாமா?” என்றான்.
மாலை ஐந்து மணிக்கெல்லாம் இருவரும் கோவில் வர. இரு வீட்டினருடன் ஆறுமுகனின் புன்னகையுமே வரவேற்க, “இன்னைக்கு அபிஷேகம் செய்ய அம்மா ரெடி செய்திருந்தாங்க” என்றான் மனைவியிடம்.
“ஹேய் நதிமா சமாதானமாகியாச்சா? சமாதானமாகலன்னா இன்னும் இரண்டு நாள் எடுத்துக்கோங்க. நாங்க எதுவும் கேட்கமாட்டோம்” என்று மெல்ல தோழியிடம் குனிந்தவள், “உனக்கு ஹனிமூன் ஸ்பாட் எதுவும் கிடைக்கலையாடி? உங்க வீடே போதும்னு விட்டுட்டியா?” என்றாள்.
“ஏய் போடி” என்று நட்சத்திரா வெட்கத்தை மறைக்க முகம் திருப்ப.
“பார்றா! ப்ளான் பண்ணி இங்க வந்து உட்கார்ந்துப்பாங்களாம். வீட்டுக்காரர் பின்னாடியே சமாதானப்படுத்தப் போயிருவாராம். கேட்டா கோவமாம்.”
“என்ன நக்கல்ஸா? கோவில்ல வச்சி என்னடி பேசுற? வாயை மூடிட்டு சாமி கும்பிடு” என்று கண்டிக்க,
“ஹான்! ஜஸ்ட் விக்கல்மா ஹக்...” என்று செய்து காண்பிக்க,
“மின்னல் பேசாம சாமி கும்பிடு” என்ற தாயின் அதட்டலில் அமைதியானாள்.
“நான் உன்னைப் பார்த்தது இந்த இடத்தில்தான் நதி” என்று அவ்விடத்தைக் காண்பித்தான்.
“நீங்க கார்ல இருந்து இறங்கும்போதே பார்த்தேன். நீங்களும், அத்தையும் பேசினதைக் கேட்டதும் எனக்குள் ஒரு தடுமாற்றம். சம்சாரியாக்க நினைச்சிருக்கலாம்னு சொன்னப்ப அது நான்தான்னு ஒரு குரல்! சட்டுன்னு ஒரு பயம். டெய்லி வருவீங்களான்னு தெரியாது. ஆனா, உங்களைத்தேடி நான் வந்தேன்.”
“உன்னைப் பார்க்கவே நானும் தினமும் வந்தேன் நதி. அப்ப உன்னைப் பார்க்கலையே? தேடிப்பார்த்துட்டு நீ முஸ்லீம் பொண்ணுன்னதும் எப்படி வருவன்னு விட்ருவேன். ஆனா, தேடலை மட்டும் விடலை.”
“அந்தத் தேடல் எனக்கானது தானா? தினமும் யாரைத் தேடுறீங்க யோசிப்பேன். இப்பல்ல புரியுது சார் சாமியைப் பார்க்க வரலை. சம்சாரியாகப் பொண்ணு பார்க்க வந்திருக்கீங்கன்னு” என்று கேலி செய்தாள்.
“அனைத்திற்கும் காரணம் இந்த முருகப் பெருமானே! இவருக்கு லஞ்சம் தர்றேன்னு சொல்லிட்டு மாட்டேன்னுட்ட கோவத்துல, நமக்கு ஒரு அல்லக்கை சிக்கியிருக்குன்னு வச்சி சோதிச்சிட்டார்” என்றான் புன்னகையுடம்.
“சாமியை ஆசாமி மாதிரி பேசாதீங்க. நேரம்னு ஒண்ணு இருக்கே அதை மிஞ்ச யாராலயும் முடியாது. கடவுள் கணக்கை லஞ்சம் கொடுத்து கரெக்ட் பண்ண முடியுமா?”
“நான் ஒண்ணும் பேசல. நீ வக்கீலுக்குப் படிச்சிருக்க வேண்டியவள். மாத்தி எம்.சி.ஏ படிச்சி குடும்ப இஸ்திரியாகிட்ட. நாம வேண்டிக்காததைக் கூட அவருக்கு நான் செய்திடுறேன். ஓகேவா” என்று தங்கையை அழைத்து, “அதை எங்கே மின்னல்?” என்றான்.
“யசோம்மாகிட்ட இருக்கு அண்ணா. அபிஷேகம் முடிச்சி அலங்காரம் பண்ணினதும் ஐயர்கிட்டத் தரலாம்” என்றாள்.
“என்னதுங்க?”
“சஸ்பென்ஸ்.”
“நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம். நீ சொல்லு கொடி?” என்று நாத்தனாரிடம் கேட்டாள்.
“சஸ்பென்ஸ்” என்று அண்ணன் சொன்னதைச் சொல்லிச் சிரிக்க,
“அண்ணன், தங்கை ரெண்டு பேருக்கும் என்னைக் கலாய்க்கிறதுன்னா தண்ணி பட்டபாடு. மத்த நேரம்னா குடுமிப்பிடி சண்டை போடுறீங்க” என்று அவர்கள் இருவரையும் முறைத்தாள்.
“சோ ஸ்வீட் நட்டுமா” என்று செல்லம் கொஞ்ச,
“மின்னல்! நட்சத்திராவை அண்ணின்னு கூப்பிடுன்னு எத்தனை முறை சொல்றது?” பேத்தியைக் கண்டித்தபடி பாக்கியவதி வந்தார்.
“எத்தனை தடவை சொன்னாலும் நோ தான். என் அண்ணியை நான் ஃப்ரண்டாக்கிக்கல. என் ஃப்ரண்டைத்தான் நீங்க அண்ணியாக்குனீங்க. நான் இப்படிதான் கூப்பிடுவேன். எனக்கா அண்ணின்னு எப்ப கூப்பிடத் தோணுதோ அப்ப கூப்பிட்டுக்குறேன்” என்றாள் மின்னல் பெண்.
“உன்னைத் திருத்தவே முடியாது.”
“ஆமா க்ரேன்மா. என்னைத் திருத்தவே முடியாது. நீங்க பார்க்கிற மாப்பிள்ளையாவது என்னைத் திருத்துறானா பார்க்கலாம்” என்று கண்சிமிட்டினாள்.
“மின்னல் அமைதியா இரு. பெரியவங்ககிட்ட வாய்க்குவாய் பேசாதன்னு எத்தனை முறை சொல்றது.”
“ம்மா... இப்படி எதுவுமே பேசக்கூடாதுன்னா என்னதான் பேசுறது?”
“உன் அண்ணியைப் பாரு எவ்வளவு அமைதியா பெரியவங்களை மதிக்கிறா” என்று தாய் சொன்னதும், ‘அவ்வளவு நல்லவளா நீ’ என்பதாய் நட்சத்திராவைப் பார்க்க, அவளின் அசட்டுச் சிரிப்பில் முறைத்துத் தாயைப் பார்க்க, அவரோ, “அவளைப் பார்த்துக் கத்துக்கோ. பூஜைக்கு ரெடியாகிருச்சி அங்கயிங்க நகராம இங்கயே நில்லு” என்று மகளைத் திட்டிக் கொண்டிருந்தார் சகுந்தலா.
“ம்மா...” என பல்லைக்கடித்து தோழியின் புறம் திரும்பி, “நீ அமைதி. நான் வாயாடியா? நீ பேசினது எல்லாம் இவங்களுக்குத் தெரிஞ்சா இதெல்லாம் சொல்வாங்களா? இதோ...” என்று அரிச்சந்திரனைக் காண்பித்து, “இவனைப் பார்த்ததில் இருந்து காதுல ரெத்தம் வர வச்சியே அதை நான் யார்கிட்ட சொல்றது? முருகா இந்த இம்சைகளிடம் இருந்து என்னைக் காப்பாற்று” என்று கடவுளிடம் முறையிட்டாள்.
“கண்டிப்பா காப்பாத்துறேன் எம்.கே” என்றபடி முகில் வர, அப்பன் முருகரின் இதழ்கள் புன்னகை பூத்ததோ!
அவனை முறைத்து, “இங்க பார் நதி, உன் அண்ணன்கிட்ட சொல்லி வை. அவங்க பேசுறது, பார்க்கிறதுன்னு எதுவும் சரியில்லை. கோவத்துல அவங்களை எதாவது செய்துட்டா நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன்” என்றாள்.
“நீ பார்க்காதடி. நாம பார்த்தால்தான நம்மளைப் பார்க்கிறது தெரியும்” என்று தோழியின் கால்வாரினாள்.
‘உன்கிட்ட போய் சொன்னேன் பாரு’ என்பதாய் ஒரு பார்வை பார்த்து அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
சாமி அலங்காரம் முடிய மூன்று அடி உயர தங்கத்தில் செய்த வேல்; முருகரின் கைகளில் தஞ்சமடைந்தது.
‘இதான் அந்த சஸ்பென்ஸா’ என்று கணவனைப் பார்க்க, ‘ஆம்’ என்பதாய் அவன் தலையசைக்க, குடும்பத்திற்காகவும் தங்கள் வாழ்க்கையை நிறைவாக அமைத்ததற்காகவும் மனதார வேண்டி வீடு வந்தார்கள்.
“என்ன சித்தார்த் ஹேப்பியா?” என்று அரிச்சந்திரன் கேட்க,
“தேங்க்ஸ் ப்ரோ” என்றான் அவனும்.
“தேங்க்ஸ்லாம் வேண்டாம். வெண்மதியை நல்லா பார்த்துக்கோங்க. அவங்க ஹாஸ்பிடலைஸ்காக வித்ததுல, நிறைய நீங்கதான் வாங்கி இருக்கீங்க. அது உங்க பணம்ன்றதால அதை விட்ரலாம். மத்தபடி சொத்துப் பிரச்சனை முடிஞ்சிருச்சி. இதுவரை வாங்கினதுல பாதியை அவங்ககிட்ட கொடுத்திருங்க. அதிலும் பாதி வெண்மதி பங்கா உங்களுக்கேத் திரும்பி வரும். அப்புறம்...”
“இல்ல ப்ரோ. சொத்து முழுக்க முகில்கு மட்டும்தான். வெண்மதிக்கு நான் சம்பாதிக்குறது போதும். முடிஞ்சளவு இன்னும் பாதியையும் திருப்பித் தர முயற்சி செய்வேன்” என்றான் திடமாக.
“வேண்டாம் சித்தார்த். நாங்க கொடுத்தது கொடுத்ததாவே இருக்கட்டும். பாதி என் தங்கைக்காகக் கொடுக்க வேண்டிய பங்குதான். நாமெல்லாம் பிறந்ததில் இருந்து உறவு. இப்ப சம்பந்தி வேற. சோ, நடந்ததை மறப்போம்!”
முகில் சொன்னதற்கு அப்போதைக்கு அமைதி காத்தாலும், சொத்தை திருப்பிக் கொடுக்கும் சித்தார்த்தின் எண்ணம் மட்டும் மாறவில்லை. சொல்லிச் செய்வதை விட சொல்லாமல் செய்தலே நன்று என்பதை உணர்ந்திருந்திருந்ததால் மனைவியிடம் மட்டும் சொல்லியிருந்தான்.
சொத்து வழக்குக்கு இடைப்பட்ட காலத்தில், விவாகரத்து வழக்கை திரும்ப வாங்கியதும், ரெங்கசாமி, செல்லம்மா சாத்தூரில் இருக்க, சித்தார்த், வெண்மதி மதுரையில் நிரந்தரமாகத் தங்கினார்கள். மாமியார் மருமகள் பிரச்சனை வர சாத்தியக்கூறுகள் இருப்பதால் இந்த முடிவிற்கு வந்திருந்தான்.
சித்தார்த் அறியாதது, வெளியே வாய் பேசினாலும் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடிக்கும் என்பது. காலம் அவர்களை ஒன்றிணைக்கும்!