Active member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 20
- Thread Author
- #1
அத்தியாயம் -7
"வர்மா...போன்ல யாரு பேசுறது?" என்று ராஜன் கேட்டதும், "தெரியல அப்பா, யாரோ ஒரு பொண்ணோட குரல் தான் கேக்குது" என்ற வர்மனுக்கு தன்னிடம் பேசுவது யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை.
"அப்பா... என் அம்மா தான் என்கிட்ட பேசப் போன் பண்ணிருக்காங்க, போனை தாங்க" என்று பார்வை இல்லாத சிறுவன் அருண், வர்மனின் கையில் இருந்த போனை கேட்டு அடம் பிடித்தான்.
சிறுவனின் பிடிவாதத்தை பார்த்து, "சார்! போனை பையன்கிட்ட கொடுங்க சார்" என்ற மருத்துவரின் வார்த்தைகள் கட்டளையாகக் கேட்டதும், வேறு வழி இல்லாமல் வர்மன் தனது கைபேசியை சிறுவனிடம் கொடுத்தான்.
கைபேசியை வாங்கிய சிறுவன், "அம்மா..." என்று அழைத்தவனின் குரலைக் கேட்டு எதிர்முனையிலிருந்து எந்த வித பதிலும் இல்லாமல் போனது.
"அம்மா... அம்மா நான் அருண்வர்மன் பேசுறேன்! நீங்க எங்க அம்மா இருக்கீங்க? ஏன் நீங்க இன்னைவரைக்கும் என்னை வந்து பார்க்கவே இல்ல? என்னை உங்களுக்குப் பிடிக்காதா? அதனால தான் நீங்க என்னை அப்பாகிட்ட விட்டுட்டு போயிட்டீங்களா? அம்மா என்கிட்ட பேசுங்க" என்ற சிறுவனின் குரல் நடுக்கத்தோடும் ஏக்கத்தோடும் வெளிப்படுவதை கேட்டு அங்குள்ள செவிலியரில் தொடங்கி மருத்துவர் முதற்கொண்டு அவனைப் பரிதாபமாகப் பார்த்தார்கள்.
"டேய் வர்மா! என்னப்பா இதெல்லாம், அருண் யாருகிட்ட பேசுறான்?" என்று ராஜன் புரியாமல் கேட்க,"இருங்க நான் போனை வாங்கி மறுபடியும் நம்பரை செக் பண்ணுறேன்" என்ற வர்மன் தன் கைபேசியை சிறுவனிடமிருந்து வாங்க முயற்சித்தான்.
வர்மனின் கைப்பட்டு போன் லாவுட்ஸ்பீக்கரில் மாறியதும்,
"அருண் செல்லம்! நீங்க என் தங்கம் தானே! நீங்க அழக் கூடாது, அம்மா சீக்கிரமா உங்கள பார்க்க வருவேன்" என்ற பெண்ணின் குரலைக் கேட்டுச் சிறுவனின் வாடிய முகத்தில் வண்ணம் மிகுந்த புன்னகை மலர்ந்தது.
"அம்மா... நீங்க என்னைப் பார்க்க வரிங்களா!? எப்போ வருவீங்க!? நீங்க இப்போ எங்க இருக்கீங்க?இத்தனை நாள் ஏன் நீங்க என்னைப் பார்க்க வரவே இல்ல?" என்று சிறுவன் மேலும் தன் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான்.
"அது... அது வந்து தங்கம், நான் உன்னை நேர்ல வந்து பார்க்கும்போது நீ கேக்குற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லுறேன்,
இப்போ நீ சமத்தா டாக்டர் கொடுக்குற மாத்திரை மருந்தேல்ல்லாம் போட்டுக்கோ, அப்போ தான் நான் உன்னைச் சீக்கிரமா உன் வீட்டுல வந்து சந்திப்பேன்" என்ற பெண்ணின் பதிலில் அருணின் முகத்தில் புன்னகையும், வர்மனின் முகத்தில் சந்தேக ரேகையும் படர்ந்தது.
"ஏன் அம்மா! அப்போ நீங்க உடனே வந்து என்னைப் பார்க்க மாட்டிங்களா?" என்று மீண்டும் வாடிய முகத்தோடு அருண் கேட்டான்.
"நீ அடம் பண்ணாம இருந்தா உன்னைச் சீக்கிரமா டாக்டர் வீட்டுக்கு அனுப்பிடுவாரு, நீ வீட்டுக்குப் போனதும் உடனே அம்மா வந்து உன்னைப் பார்ப்பேன்" என்ற பெண்ணின் குரலைக் கேட்டு அருண் மகிழ்ச்சியாகத் தலையாட்டினான்.
அவன் விழிகளுக்குப் பார்வை இல்லையெனினும், அருணின் பேச்சில் அவன் தன் தாயை எவ்வளவு தேடுகிறான் என்ற பாசமும் நம்பிக்கையும் தெள்ளதெளிவாக அனைவருக்கும் தெரிந்தது.
"நான் இனிமேல் அடம் பிடிக்கமாட்டேன். சமத்தா இருந்துடுவேன்.
நீங்கச் சொன்னதெல்லாம் கேக்கறேன் அம்மா...
நான் வீட்டுக்குப் போனதும் நீங்க வந்து என்னைப் பாருங்க.
ஆனா!
நான் இந்த ஹாஸ்பிடல்ல இருக்குற வரைக்கும்
நீங்க என்கூட போன்ல பேசுவீங்களா?"என்று கேட்டான் சிறுவன்.
அவனது முகம் சற்றும் கலங்கவில்லை,
ஆனாலும் அந்தக் கேள்வியும்
அதன் பின்னாலிருந்த ஏக்கமும் அந்த அறையையே ஒரு நிமிடம்
உறைய செய்தது.
தற்காலிய நிலையில் அருணுக்கு பார்வை இல்லை. ஆனால் அவன் காதில் கேட்ட தன் அம்மாவின் குரல்
அவனுக்கு ஒரு உலகத்தை அவன் கருமணிக்குள் படைத்தது.
அருண் அவன் அம்மாவின் பதிலுக்காகக் காத்திருந்தான், “அம்மா... சொல்லுங்க அம்மா” என்று மீண்டும் கேட்டான்.
"கண்டிப்பா பேசுவேன். ஆனா நான் தான் உங்களுக்குப் போன் பண்ணுவேன், நீங்க அப்பாவைத் தொந்தரவு செய்து எனக்குப் போன் பண்ண சொல்லிக் கேக்க கூடாது" என்ற பெண்ணின் வார்த்தைக்கு,
"இல்ல இல்ல நான் கேக்க மாட்டேன், நீங்களே போன் பண்ணுங்க. நம்ம நிறைய நேரம் பேசலாம்" என்ற சிறுவனின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கும் இந்தக் குரலின் சொந்தக்காரி யாரென்று வர்மன் குழம்பி போனான்.
கிட்டத்தட்ட அரைமணி நேரம் சிறுவன் கைபேசியில் புன்னகை வாடாத நிலையில் பேசிக்கொண்டு இருந்தான்.
"அருண்... இப்போ அம்மா போனை கட் பண்ண போறேன், நீங்க நல்ல புள்ளையா இருக்கணும், அப்போ தான் நைட் உங்களுக்குப் போன் பண்ணுவேன்" என்ற பெண்ணின் குரலுக்கு அருண் பதில் சொல்லும் முன்னே கைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.
தன் அன்னையிடம் பேசிய பூரிப்பில் இருந்த அருணின் முகத்தில் இறைவனே குடிக்கொண்டு இருந்தான்.
தன் மகனை நீண்ட வருடங்கள் கடந்து சிரித்த முகத்துடன் பார்த்த வர்மனின் மனதில் எல்லையில்லாத மகிழ்ச்சி எழுந்தாலும், யார் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரி என்ற சந்தேகம் இருக்க
தான் செய்தது.
"அப்பா..." என்ற அருணின் அருகே சென்ற வர்மன், "அருண்!" என்றதும், "அப்பா! அம்மா என்கூட பேசுனாங்க அப்பா!" என்றவன், வர்மனை கட்டி அணைத்துக்கொண்டான்.
"இனி நான் சமத்து பிள்ளையா இருந்தால் அம்மா என்னைப் பார்க்க நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருக்காங்க" என்ற சிறுவனின் வார்த்தையில், அவன் தன் அம்மா மீது எந்த அளவுக்கு அன்பாக இருக்கின்றான் என்பதை வர்மனும் அறிந்துக் கொண்டான்.
"நல்லது அருண். நீ சமத்தா இருந்துக்கோ" என்ற வர்மன் தன் கைபேசியை சிறுவனிடமிருந்து வாங்க முயன்றான்.
"அப்பா... உங்க போன் என்கிட்டயே இருக்கட்டும், அம்மா எப்போ வேணாலும் என்னிடம் பேசுவாங்க" என்ற அருண் கைபேசியை இறுக்கமாகத் தன் கையில் பிடித்து வைத்துக்கொண்டான்.
"சார்! போன் பையன்கிட்டயே இருக்கட்டும். அவன் அம்மாகிட்ட பேசும்போது தான் குழந்தை இயல்பா இருக்கான், உங்க பிரச்சனை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு அவனோட அம்மாவைப் பிள்ளைகிட்ட சேர்த்து வையுங்க, அது தான் உங்க பிள்ளைக்கு நல்லது" என்ற மருத்துவர் அருணுக்கு மாற்று மருந்தைத் தந்தப்படி அங்கிருந்து வெளியேறினார்.
"வர்மா! என்னப்பா இதெல்லாம்? போன்ல யார் தான் பேசுனது?" என ராஜன் கேக்க, "இருங்க அப்பா! முதல்ல அருண் தூங்கட்டும். அப்புறமா நான் என் போன்ல இருக்குற நம்பரை வைத்துப் பேசுனது யாருன்னு கண்டு பிடிக்கிறேன்" என்றான் வர்மன்.
கைபேசியில் தன்னிடம் பேசியது அவனை இன்றேடுத்த அன்னை தான் என்று நம்பிய அருண் அன்றைய தினம் முழுதும் நல்ல பிள்ளையாகவே இருந்தான்.
மதிய நேரம் கடந்தும் தூங்காமல் தன் கைக்குள் அலைபேசியை பிடித்து வைத்து இருந்த அருண், அப்படியே உறங்கியும் போனான்.
அருண் உறங்கியதை பார்த்த வர்மன் அவன் கையில் இருந்த தன் அலைபேசியை எடுத்துக்கொண்டு சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்தவன் சற்றும் தாமதிக்காமல் அருணிடம் பேசிய குரலுக்குச் சொந்தமான பெண்ணின் கைபேசி எண்ணுக்கு அழைத்தான்.
"நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் தற்காலியமாகச் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டுள்ளது" என்ற கணினியில் பதிவு செய்து இருந்த குரலைக் கேட்டு வர்மன் மேலும் குழப்பம் அடைந்தான்.
தன் மகனின் குழப்பதை கண்டு ராஜனும் குழப்பத்தில் முழுகி இருக்க,
"என்ன வர்மா! அப்பாவும் மகனும் ஆழ்ந்த யோசனையில் இருக்கீங்களா?" என்று கேட்டுக்கொண்டே மாயன் கையில் மதிய உணவுடன் இவர்களை நோக்கி வந்தவனை கேள்வியாகப் பார்த்தான் வர்மன்.
"மாயா... யார் அந்தப் பொண்ணு!?" என்ற வர்மனின் கேள்வி எதைப் பற்றி என்று அறிந்து இருந்தாலும்,அறியாதை போல,
"எந்தப் பொண்ணு வர்மா! புதுசா யாரேனும் நர்ஸ் வந்து இருக்காங்களா?" என்று கிண்டலாகக் கேட்டான் மாயன்.
"விளையாடாத மாயா! அருண்கிட்ட போன்ல பேசுன பொண்ணு யாரு?" என்று வர்மன் கேட்க,
"கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு வர்மா! அருண் கிட்ட பேசுனது என் தங்கச்சி மகதி தான்" என்று மாயன் சொன்னதும், வர்மனுக்கு மேலும் கோபம் அதிகரித்தது.
"என்ன மாயன் சொல்ற! மகதி எதுக்காக அருண் கிட்ட பேசணும்?" என்று ராஜன் கேட்க, வர்மனின் மனதிலும் அதே கேள்விதான் கோபத்துடன் எழுந்தது.
"வேற என்ன சார் பண்ண சொல்றீங்க? நேத்து டாக்டர் அருணோட பிரச்சனையைப் பற்றிச் சொல்லும்போது நீங்களும் தானே இருந்தீங்க! இப்போ அருணுக்கு தேவை மன நிம்மதி. அந்த நிம்மதி அந்தச் சின்னக் குழந்தைக்குக் கிடைக்கனும்னா! அவனுக்கு அவனுடைய அம்மா பாசம் கிடைக்கணும். அது இந்த ஜென்மத்துல கிடைக்காதுன்னு உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும், அதனாலதான் மகதி கிட்ட சொல்லி அருண் கிட்ட அப்படி பேசச் சொன்னேன்" என்றான் மாயன்.
"ஐயோ மாயா! நீ எவ்ளோ பெரிய முட்டாள்தனமான வேலை பண்ணியிருக்கிறேன்னு உனக்குப் புரியுதா புரியலையா! சரி ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்குப் போற வரைக்கும் மகதி அருண் கிட்ட பேசுறதாவே இருக்கட்டும்,ஆனா! வீட்டுக்குப் போனதுக்குப் பிறகு என்னுடைய அம்மா எங்கே என்று அருண் கேட்டால் நம்ம என்ன பதில் சொல்லுவோம்" என்ற வர்மனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மாயன் சிரித்தான்.
"நான் என்ன கேட்கிறேன், நீ ஏன் இப்படி சிரிக்கிற?"என்று வர்மன் கேட்க, "இதையெல்லாம் யோசிக்காமல் நான் எந்தக் காரியமும் பண்ணல வர்மா. நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு. அருண் ஆரோக்கியம் நமக்கு ரொம்ப முக்கியம். அருணுக்கு மறுபடியும் கண் பார்வை கிடைக்கணும்! அதனால நீ இதெல்லாம் பெருசா எடுத்துக்காத" என்ற மாயன் மதிய உணவை வர்மனிடம் நீட்டினான்.
"ஆனா மாயா! வர்மன் சொல்ற மாதிரி, ஏற்கனவே நியூஸ் அது இதுன்னு மகதியையும் வர்மனையும் சேர்த்து வச்சு மீடியாக்காரங்க தேவையில்லாத செய்தியைப் பரப்பி இருக்காங்க. இப்போ இந்த விஷயமும் தெரிந்தால் மகாலிங்கம் என்னைத் தப்பா நினைக்கமாட்டாரா!" என்று தன் மனதில் உள்ள தயக்கத்தை கேட்டார் ராஜன்.
"சித்தப்பா கிட்ட நான் பேசிட்டேன் சார். யாரிடமிருந்தும் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது.நம்ம அருணை நல்லபடியா ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு அழைச்சிட்டு போகணும், அதுதான் இப்போ நமக்கு முக்கியம்" என்ற மாயனுக்குமே வர்மனைப் போலவே அருண் மீது அதீத அன்பும், பாசமும், அக்கறையும் இருந்தது.
"வர்மா...போன்ல யாரு பேசுறது?" என்று ராஜன் கேட்டதும், "தெரியல அப்பா, யாரோ ஒரு பொண்ணோட குரல் தான் கேக்குது" என்ற வர்மனுக்கு தன்னிடம் பேசுவது யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை.
"அப்பா... என் அம்மா தான் என்கிட்ட பேசப் போன் பண்ணிருக்காங்க, போனை தாங்க" என்று பார்வை இல்லாத சிறுவன் அருண், வர்மனின் கையில் இருந்த போனை கேட்டு அடம் பிடித்தான்.
சிறுவனின் பிடிவாதத்தை பார்த்து, "சார்! போனை பையன்கிட்ட கொடுங்க சார்" என்ற மருத்துவரின் வார்த்தைகள் கட்டளையாகக் கேட்டதும், வேறு வழி இல்லாமல் வர்மன் தனது கைபேசியை சிறுவனிடம் கொடுத்தான்.
கைபேசியை வாங்கிய சிறுவன், "அம்மா..." என்று அழைத்தவனின் குரலைக் கேட்டு எதிர்முனையிலிருந்து எந்த வித பதிலும் இல்லாமல் போனது.
"அம்மா... அம்மா நான் அருண்வர்மன் பேசுறேன்! நீங்க எங்க அம்மா இருக்கீங்க? ஏன் நீங்க இன்னைவரைக்கும் என்னை வந்து பார்க்கவே இல்ல? என்னை உங்களுக்குப் பிடிக்காதா? அதனால தான் நீங்க என்னை அப்பாகிட்ட விட்டுட்டு போயிட்டீங்களா? அம்மா என்கிட்ட பேசுங்க" என்ற சிறுவனின் குரல் நடுக்கத்தோடும் ஏக்கத்தோடும் வெளிப்படுவதை கேட்டு அங்குள்ள செவிலியரில் தொடங்கி மருத்துவர் முதற்கொண்டு அவனைப் பரிதாபமாகப் பார்த்தார்கள்.
"டேய் வர்மா! என்னப்பா இதெல்லாம், அருண் யாருகிட்ட பேசுறான்?" என்று ராஜன் புரியாமல் கேட்க,"இருங்க நான் போனை வாங்கி மறுபடியும் நம்பரை செக் பண்ணுறேன்" என்ற வர்மன் தன் கைபேசியை சிறுவனிடமிருந்து வாங்க முயற்சித்தான்.
வர்மனின் கைப்பட்டு போன் லாவுட்ஸ்பீக்கரில் மாறியதும்,
"அருண் செல்லம்! நீங்க என் தங்கம் தானே! நீங்க அழக் கூடாது, அம்மா சீக்கிரமா உங்கள பார்க்க வருவேன்" என்ற பெண்ணின் குரலைக் கேட்டுச் சிறுவனின் வாடிய முகத்தில் வண்ணம் மிகுந்த புன்னகை மலர்ந்தது.
"அம்மா... நீங்க என்னைப் பார்க்க வரிங்களா!? எப்போ வருவீங்க!? நீங்க இப்போ எங்க இருக்கீங்க?இத்தனை நாள் ஏன் நீங்க என்னைப் பார்க்க வரவே இல்ல?" என்று சிறுவன் மேலும் தன் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான்.
"அது... அது வந்து தங்கம், நான் உன்னை நேர்ல வந்து பார்க்கும்போது நீ கேக்குற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லுறேன்,
இப்போ நீ சமத்தா டாக்டர் கொடுக்குற மாத்திரை மருந்தேல்ல்லாம் போட்டுக்கோ, அப்போ தான் நான் உன்னைச் சீக்கிரமா உன் வீட்டுல வந்து சந்திப்பேன்" என்ற பெண்ணின் பதிலில் அருணின் முகத்தில் புன்னகையும், வர்மனின் முகத்தில் சந்தேக ரேகையும் படர்ந்தது.
"ஏன் அம்மா! அப்போ நீங்க உடனே வந்து என்னைப் பார்க்க மாட்டிங்களா?" என்று மீண்டும் வாடிய முகத்தோடு அருண் கேட்டான்.
"நீ அடம் பண்ணாம இருந்தா உன்னைச் சீக்கிரமா டாக்டர் வீட்டுக்கு அனுப்பிடுவாரு, நீ வீட்டுக்குப் போனதும் உடனே அம்மா வந்து உன்னைப் பார்ப்பேன்" என்ற பெண்ணின் குரலைக் கேட்டு அருண் மகிழ்ச்சியாகத் தலையாட்டினான்.
அவன் விழிகளுக்குப் பார்வை இல்லையெனினும், அருணின் பேச்சில் அவன் தன் தாயை எவ்வளவு தேடுகிறான் என்ற பாசமும் நம்பிக்கையும் தெள்ளதெளிவாக அனைவருக்கும் தெரிந்தது.
"நான் இனிமேல் அடம் பிடிக்கமாட்டேன். சமத்தா இருந்துடுவேன்.
நீங்கச் சொன்னதெல்லாம் கேக்கறேன் அம்மா...
நான் வீட்டுக்குப் போனதும் நீங்க வந்து என்னைப் பாருங்க.
ஆனா!
நான் இந்த ஹாஸ்பிடல்ல இருக்குற வரைக்கும்
நீங்க என்கூட போன்ல பேசுவீங்களா?"என்று கேட்டான் சிறுவன்.
அவனது முகம் சற்றும் கலங்கவில்லை,
ஆனாலும் அந்தக் கேள்வியும்
அதன் பின்னாலிருந்த ஏக்கமும் அந்த அறையையே ஒரு நிமிடம்
உறைய செய்தது.
தற்காலிய நிலையில் அருணுக்கு பார்வை இல்லை. ஆனால் அவன் காதில் கேட்ட தன் அம்மாவின் குரல்
அவனுக்கு ஒரு உலகத்தை அவன் கருமணிக்குள் படைத்தது.
அருண் அவன் அம்மாவின் பதிலுக்காகக் காத்திருந்தான், “அம்மா... சொல்லுங்க அம்மா” என்று மீண்டும் கேட்டான்.
"கண்டிப்பா பேசுவேன். ஆனா நான் தான் உங்களுக்குப் போன் பண்ணுவேன், நீங்க அப்பாவைத் தொந்தரவு செய்து எனக்குப் போன் பண்ண சொல்லிக் கேக்க கூடாது" என்ற பெண்ணின் வார்த்தைக்கு,
"இல்ல இல்ல நான் கேக்க மாட்டேன், நீங்களே போன் பண்ணுங்க. நம்ம நிறைய நேரம் பேசலாம்" என்ற சிறுவனின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கும் இந்தக் குரலின் சொந்தக்காரி யாரென்று வர்மன் குழம்பி போனான்.
கிட்டத்தட்ட அரைமணி நேரம் சிறுவன் கைபேசியில் புன்னகை வாடாத நிலையில் பேசிக்கொண்டு இருந்தான்.
"அருண்... இப்போ அம்மா போனை கட் பண்ண போறேன், நீங்க நல்ல புள்ளையா இருக்கணும், அப்போ தான் நைட் உங்களுக்குப் போன் பண்ணுவேன்" என்ற பெண்ணின் குரலுக்கு அருண் பதில் சொல்லும் முன்னே கைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.
தன் அன்னையிடம் பேசிய பூரிப்பில் இருந்த அருணின் முகத்தில் இறைவனே குடிக்கொண்டு இருந்தான்.
தன் மகனை நீண்ட வருடங்கள் கடந்து சிரித்த முகத்துடன் பார்த்த வர்மனின் மனதில் எல்லையில்லாத மகிழ்ச்சி எழுந்தாலும், யார் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரி என்ற சந்தேகம் இருக்க
தான் செய்தது.
"அப்பா..." என்ற அருணின் அருகே சென்ற வர்மன், "அருண்!" என்றதும், "அப்பா! அம்மா என்கூட பேசுனாங்க அப்பா!" என்றவன், வர்மனை கட்டி அணைத்துக்கொண்டான்.
"இனி நான் சமத்து பிள்ளையா இருந்தால் அம்மா என்னைப் பார்க்க நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருக்காங்க" என்ற சிறுவனின் வார்த்தையில், அவன் தன் அம்மா மீது எந்த அளவுக்கு அன்பாக இருக்கின்றான் என்பதை வர்மனும் அறிந்துக் கொண்டான்.
"நல்லது அருண். நீ சமத்தா இருந்துக்கோ" என்ற வர்மன் தன் கைபேசியை சிறுவனிடமிருந்து வாங்க முயன்றான்.
"அப்பா... உங்க போன் என்கிட்டயே இருக்கட்டும், அம்மா எப்போ வேணாலும் என்னிடம் பேசுவாங்க" என்ற அருண் கைபேசியை இறுக்கமாகத் தன் கையில் பிடித்து வைத்துக்கொண்டான்.
"சார்! போன் பையன்கிட்டயே இருக்கட்டும். அவன் அம்மாகிட்ட பேசும்போது தான் குழந்தை இயல்பா இருக்கான், உங்க பிரச்சனை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு அவனோட அம்மாவைப் பிள்ளைகிட்ட சேர்த்து வையுங்க, அது தான் உங்க பிள்ளைக்கு நல்லது" என்ற மருத்துவர் அருணுக்கு மாற்று மருந்தைத் தந்தப்படி அங்கிருந்து வெளியேறினார்.
"வர்மா! என்னப்பா இதெல்லாம்? போன்ல யார் தான் பேசுனது?" என ராஜன் கேக்க, "இருங்க அப்பா! முதல்ல அருண் தூங்கட்டும். அப்புறமா நான் என் போன்ல இருக்குற நம்பரை வைத்துப் பேசுனது யாருன்னு கண்டு பிடிக்கிறேன்" என்றான் வர்மன்.
கைபேசியில் தன்னிடம் பேசியது அவனை இன்றேடுத்த அன்னை தான் என்று நம்பிய அருண் அன்றைய தினம் முழுதும் நல்ல பிள்ளையாகவே இருந்தான்.
மதிய நேரம் கடந்தும் தூங்காமல் தன் கைக்குள் அலைபேசியை பிடித்து வைத்து இருந்த அருண், அப்படியே உறங்கியும் போனான்.
அருண் உறங்கியதை பார்த்த வர்மன் அவன் கையில் இருந்த தன் அலைபேசியை எடுத்துக்கொண்டு சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்தவன் சற்றும் தாமதிக்காமல் அருணிடம் பேசிய குரலுக்குச் சொந்தமான பெண்ணின் கைபேசி எண்ணுக்கு அழைத்தான்.
"நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் தற்காலியமாகச் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டுள்ளது" என்ற கணினியில் பதிவு செய்து இருந்த குரலைக் கேட்டு வர்மன் மேலும் குழப்பம் அடைந்தான்.
தன் மகனின் குழப்பதை கண்டு ராஜனும் குழப்பத்தில் முழுகி இருக்க,
"என்ன வர்மா! அப்பாவும் மகனும் ஆழ்ந்த யோசனையில் இருக்கீங்களா?" என்று கேட்டுக்கொண்டே மாயன் கையில் மதிய உணவுடன் இவர்களை நோக்கி வந்தவனை கேள்வியாகப் பார்த்தான் வர்மன்.
"மாயா... யார் அந்தப் பொண்ணு!?" என்ற வர்மனின் கேள்வி எதைப் பற்றி என்று அறிந்து இருந்தாலும்,அறியாதை போல,
"எந்தப் பொண்ணு வர்மா! புதுசா யாரேனும் நர்ஸ் வந்து இருக்காங்களா?" என்று கிண்டலாகக் கேட்டான் மாயன்.
"விளையாடாத மாயா! அருண்கிட்ட போன்ல பேசுன பொண்ணு யாரு?" என்று வர்மன் கேட்க,
"கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு வர்மா! அருண் கிட்ட பேசுனது என் தங்கச்சி மகதி தான்" என்று மாயன் சொன்னதும், வர்மனுக்கு மேலும் கோபம் அதிகரித்தது.
"என்ன மாயன் சொல்ற! மகதி எதுக்காக அருண் கிட்ட பேசணும்?" என்று ராஜன் கேட்க, வர்மனின் மனதிலும் அதே கேள்விதான் கோபத்துடன் எழுந்தது.
"வேற என்ன சார் பண்ண சொல்றீங்க? நேத்து டாக்டர் அருணோட பிரச்சனையைப் பற்றிச் சொல்லும்போது நீங்களும் தானே இருந்தீங்க! இப்போ அருணுக்கு தேவை மன நிம்மதி. அந்த நிம்மதி அந்தச் சின்னக் குழந்தைக்குக் கிடைக்கனும்னா! அவனுக்கு அவனுடைய அம்மா பாசம் கிடைக்கணும். அது இந்த ஜென்மத்துல கிடைக்காதுன்னு உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும், அதனாலதான் மகதி கிட்ட சொல்லி அருண் கிட்ட அப்படி பேசச் சொன்னேன்" என்றான் மாயன்.
"ஐயோ மாயா! நீ எவ்ளோ பெரிய முட்டாள்தனமான வேலை பண்ணியிருக்கிறேன்னு உனக்குப் புரியுதா புரியலையா! சரி ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்குப் போற வரைக்கும் மகதி அருண் கிட்ட பேசுறதாவே இருக்கட்டும்,ஆனா! வீட்டுக்குப் போனதுக்குப் பிறகு என்னுடைய அம்மா எங்கே என்று அருண் கேட்டால் நம்ம என்ன பதில் சொல்லுவோம்" என்ற வர்மனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மாயன் சிரித்தான்.
"நான் என்ன கேட்கிறேன், நீ ஏன் இப்படி சிரிக்கிற?"என்று வர்மன் கேட்க, "இதையெல்லாம் யோசிக்காமல் நான் எந்தக் காரியமும் பண்ணல வர்மா. நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு. அருண் ஆரோக்கியம் நமக்கு ரொம்ப முக்கியம். அருணுக்கு மறுபடியும் கண் பார்வை கிடைக்கணும்! அதனால நீ இதெல்லாம் பெருசா எடுத்துக்காத" என்ற மாயன் மதிய உணவை வர்மனிடம் நீட்டினான்.
"ஆனா மாயா! வர்மன் சொல்ற மாதிரி, ஏற்கனவே நியூஸ் அது இதுன்னு மகதியையும் வர்மனையும் சேர்த்து வச்சு மீடியாக்காரங்க தேவையில்லாத செய்தியைப் பரப்பி இருக்காங்க. இப்போ இந்த விஷயமும் தெரிந்தால் மகாலிங்கம் என்னைத் தப்பா நினைக்கமாட்டாரா!" என்று தன் மனதில் உள்ள தயக்கத்தை கேட்டார் ராஜன்.
"சித்தப்பா கிட்ட நான் பேசிட்டேன் சார். யாரிடமிருந்தும் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது.நம்ம அருணை நல்லபடியா ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு அழைச்சிட்டு போகணும், அதுதான் இப்போ நமக்கு முக்கியம்" என்ற மாயனுக்குமே வர்மனைப் போலவே அருண் மீது அதீத அன்பும், பாசமும், அக்கறையும் இருந்தது.