• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
20
அத்தியாயம் -7

"வர்மா...போன்ல யாரு பேசுறது?" என்று ராஜன் கேட்டதும், "தெரியல அப்பா, யாரோ ஒரு பொண்ணோட குரல் தான் கேக்குது" என்ற வர்மனுக்கு தன்னிடம் பேசுவது யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை.

"அப்பா... என் அம்மா தான் என்கிட்ட பேசப் போன் பண்ணிருக்காங்க, போனை தாங்க" என்று பார்வை இல்லாத சிறுவன் அருண், வர்மனின் கையில் இருந்த போனை கேட்டு அடம் பிடித்தான்.

சிறுவனின் பிடிவாதத்தை பார்த்து, "சார்! போனை பையன்கிட்ட கொடுங்க சார்" என்ற மருத்துவரின் வார்த்தைகள் கட்டளையாகக் கேட்டதும், வேறு வழி இல்லாமல் வர்மன் தனது கைபேசியை சிறுவனிடம் கொடுத்தான்.

கைபேசியை வாங்கிய சிறுவன், "அம்மா..." என்று அழைத்தவனின் குரலைக் கேட்டு எதிர்முனையிலிருந்து எந்த வித பதிலும் இல்லாமல் போனது.

"அம்மா... அம்மா நான் அருண்வர்மன் பேசுறேன்! நீங்க எங்க அம்மா இருக்கீங்க? ஏன் நீங்க இன்னைவரைக்கும் என்னை வந்து பார்க்கவே இல்ல? என்னை உங்களுக்குப் பிடிக்காதா? அதனால தான் நீங்க என்னை அப்பாகிட்ட விட்டுட்டு போயிட்டீங்களா? அம்மா என்கிட்ட பேசுங்க" என்ற சிறுவனின் குரல் நடுக்கத்தோடும் ஏக்கத்தோடும் வெளிப்படுவதை கேட்டு அங்குள்ள செவிலியரில் தொடங்கி மருத்துவர் முதற்கொண்டு அவனைப் பரிதாபமாகப் பார்த்தார்கள்.

"டேய் வர்மா! என்னப்பா இதெல்லாம், அருண் யாருகிட்ட பேசுறான்?" என்று ராஜன் புரியாமல் கேட்க,"இருங்க நான் போனை வாங்கி மறுபடியும் நம்பரை செக் பண்ணுறேன்" என்ற வர்மன் தன் கைபேசியை சிறுவனிடமிருந்து வாங்க முயற்சித்தான்.

வர்மனின் கைப்பட்டு போன் லாவுட்ஸ்பீக்கரில் மாறியதும்,
"அருண் செல்லம்! நீங்க என் தங்கம் தானே! நீங்க அழக் கூடாது, அம்மா சீக்கிரமா உங்கள பார்க்க வருவேன்" என்ற பெண்ணின் குரலைக் கேட்டுச் சிறுவனின் வாடிய முகத்தில் வண்ணம் மிகுந்த புன்னகை மலர்ந்தது.

"அம்மா... நீங்க என்னைப் பார்க்க வரிங்களா!? எப்போ வருவீங்க!? நீங்க இப்போ எங்க இருக்கீங்க?இத்தனை நாள் ஏன் நீங்க என்னைப் பார்க்க வரவே இல்ல?" என்று சிறுவன் மேலும் தன் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான்.

"அது... அது வந்து தங்கம், நான் உன்னை நேர்ல வந்து பார்க்கும்போது நீ கேக்குற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லுறேன்,

இப்போ நீ சமத்தா டாக்டர் கொடுக்குற மாத்திரை மருந்தேல்ல்லாம் போட்டுக்கோ, அப்போ தான் நான் உன்னைச் சீக்கிரமா உன் வீட்டுல வந்து சந்திப்பேன்" என்ற பெண்ணின் பதிலில் அருணின் முகத்தில் புன்னகையும், வர்மனின் முகத்தில் சந்தேக ரேகையும் படர்ந்தது.

"ஏன் அம்மா! அப்போ நீங்க உடனே வந்து என்னைப் பார்க்க மாட்டிங்களா?" என்று மீண்டும் வாடிய முகத்தோடு அருண் கேட்டான்.

"நீ அடம் பண்ணாம இருந்தா உன்னைச் சீக்கிரமா டாக்டர் வீட்டுக்கு அனுப்பிடுவாரு, நீ வீட்டுக்குப் போனதும் உடனே அம்மா வந்து உன்னைப் பார்ப்பேன்" என்ற பெண்ணின் குரலைக் கேட்டு அருண் மகிழ்ச்சியாகத் தலையாட்டினான்.

அவன் விழிகளுக்குப் பார்வை இல்லையெனினும், அருணின் பேச்சில் அவன் தன் தாயை எவ்வளவு தேடுகிறான் என்ற பாசமும் நம்பிக்கையும் தெள்ளதெளிவாக அனைவருக்கும் தெரிந்தது.

"நான் இனிமேல் அடம் பிடிக்கமாட்டேன். சமத்தா இருந்துடுவேன்.
நீங்கச் சொன்னதெல்லாம் கேக்கறேன் அம்மா...
நான் வீட்டுக்குப் போனதும் நீங்க வந்து என்னைப் பாருங்க.
ஆனா!
நான் இந்த ஹாஸ்பிடல்ல இருக்குற வரைக்கும்
நீங்க என்கூட போன்ல பேசுவீங்களா?"என்று கேட்டான் சிறுவன்.

அவனது முகம் சற்றும் கலங்கவில்லை,
ஆனாலும் அந்தக் கேள்வியும்
அதன் பின்னாலிருந்த ஏக்கமும் அந்த அறையையே ஒரு நிமிடம்
உறைய செய்தது.

தற்காலிய நிலையில் அருணுக்கு பார்வை இல்லை. ஆனால் அவன் காதில் கேட்ட தன் அம்மாவின் குரல்
அவனுக்கு ஒரு உலகத்தை அவன் கருமணிக்குள் படைத்தது.

அருண் அவன் அம்மாவின் பதிலுக்காகக் காத்திருந்தான், “அம்மா... சொல்லுங்க அம்மா” என்று மீண்டும் கேட்டான்.

"கண்டிப்பா பேசுவேன். ஆனா நான் தான் உங்களுக்குப் போன் பண்ணுவேன், நீங்க அப்பாவைத் தொந்தரவு செய்து எனக்குப் போன் பண்ண சொல்லிக் கேக்க கூடாது" என்ற பெண்ணின் வார்த்தைக்கு,

"இல்ல இல்ல நான் கேக்க மாட்டேன், நீங்களே போன் பண்ணுங்க. நம்ம நிறைய நேரம் பேசலாம்" என்ற சிறுவனின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கும் இந்தக் குரலின் சொந்தக்காரி யாரென்று வர்மன் குழம்பி போனான்.

கிட்டத்தட்ட அரைமணி நேரம் சிறுவன் கைபேசியில் புன்னகை வாடாத நிலையில் பேசிக்கொண்டு இருந்தான்.

"அருண்... இப்போ அம்மா போனை கட் பண்ண போறேன், நீங்க நல்ல புள்ளையா இருக்கணும், அப்போ தான் நைட் உங்களுக்குப் போன் பண்ணுவேன்" என்ற பெண்ணின் குரலுக்கு அருண் பதில் சொல்லும் முன்னே கைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.

தன் அன்னையிடம் பேசிய பூரிப்பில் இருந்த அருணின் முகத்தில் இறைவனே குடிக்கொண்டு இருந்தான்.

தன் மகனை நீண்ட வருடங்கள் கடந்து சிரித்த முகத்துடன் பார்த்த வர்மனின் மனதில் எல்லையில்லாத மகிழ்ச்சி எழுந்தாலும், யார் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரி என்ற சந்தேகம் இருக்க
தான் செய்தது.

"அப்பா..." என்ற அருணின் அருகே சென்ற வர்மன், "அருண்!" என்றதும், "அப்பா! அம்மா என்கூட பேசுனாங்க அப்பா!" என்றவன், வர்மனை கட்டி அணைத்துக்கொண்டான்.

"இனி நான் சமத்து பிள்ளையா இருந்தால் அம்மா என்னைப் பார்க்க நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருக்காங்க" என்ற சிறுவனின் வார்த்தையில், அவன் தன் அம்மா மீது எந்த அளவுக்கு அன்பாக இருக்கின்றான் என்பதை வர்மனும் அறிந்துக் கொண்டான்.

"நல்லது அருண். நீ சமத்தா இருந்துக்கோ" என்ற வர்மன் தன் கைபேசியை சிறுவனிடமிருந்து வாங்க முயன்றான்.

"அப்பா... உங்க போன் என்கிட்டயே இருக்கட்டும், அம்மா எப்போ வேணாலும் என்னிடம் பேசுவாங்க" என்ற அருண் கைபேசியை இறுக்கமாகத் தன் கையில் பிடித்து வைத்துக்கொண்டான்.

"சார்! போன் பையன்கிட்டயே இருக்கட்டும். அவன் அம்மாகிட்ட பேசும்போது தான் குழந்தை இயல்பா இருக்கான், உங்க பிரச்சனை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு அவனோட அம்மாவைப் பிள்ளைகிட்ட சேர்த்து வையுங்க, அது தான் உங்க பிள்ளைக்கு நல்லது" என்ற மருத்துவர் அருணுக்கு மாற்று மருந்தைத் தந்தப்படி அங்கிருந்து வெளியேறினார்.

"வர்மா! என்னப்பா இதெல்லாம்? போன்ல யார் தான் பேசுனது?" என ராஜன் கேக்க, "இருங்க அப்பா! முதல்ல அருண் தூங்கட்டும். அப்புறமா நான் என் போன்ல இருக்குற நம்பரை வைத்துப் பேசுனது யாருன்னு கண்டு பிடிக்கிறேன்" என்றான் வர்மன்.

கைபேசியில் தன்னிடம் பேசியது அவனை இன்றேடுத்த அன்னை தான் என்று நம்பிய அருண் அன்றைய தினம் முழுதும் நல்ல பிள்ளையாகவே இருந்தான்.

மதிய நேரம் கடந்தும் தூங்காமல் தன் கைக்குள் அலைபேசியை பிடித்து வைத்து இருந்த அருண், அப்படியே உறங்கியும் போனான்.

அருண் உறங்கியதை பார்த்த வர்மன் அவன் கையில் இருந்த தன் அலைபேசியை எடுத்துக்கொண்டு சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்தவன் சற்றும் தாமதிக்காமல் அருணிடம் பேசிய குரலுக்குச் சொந்தமான பெண்ணின் கைபேசி எண்ணுக்கு அழைத்தான்.

"நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் தற்காலியமாகச் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டுள்ளது" என்ற கணினியில் பதிவு செய்து இருந்த குரலைக் கேட்டு வர்மன் மேலும் குழப்பம் அடைந்தான்.

தன் மகனின் குழப்பதை கண்டு ராஜனும் குழப்பத்தில் முழுகி இருக்க,
"என்ன வர்மா! அப்பாவும் மகனும் ஆழ்ந்த யோசனையில் இருக்கீங்களா?" என்று கேட்டுக்கொண்டே மாயன் கையில் மதிய உணவுடன் இவர்களை நோக்கி வந்தவனை கேள்வியாகப் பார்த்தான் வர்மன்.

"மாயா... யார் அந்தப் பொண்ணு!?" என்ற வர்மனின் கேள்வி எதைப் பற்றி என்று அறிந்து இருந்தாலும்,அறியாதை போல,
"எந்தப் பொண்ணு வர்மா! புதுசா யாரேனும் நர்ஸ் வந்து இருக்காங்களா?" என்று கிண்டலாகக் கேட்டான் மாயன்.

"விளையாடாத மாயா! அருண்கிட்ட போன்ல பேசுன பொண்ணு யாரு?" என்று வர்மன் கேட்க,

"கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு வர்மா! அருண் கிட்ட பேசுனது என் தங்கச்சி மகதி தான்" என்று மாயன் சொன்னதும், வர்மனுக்கு மேலும் கோபம் அதிகரித்தது.

"என்ன மாயன் சொல்ற! மகதி எதுக்காக அருண் கிட்ட பேசணும்?" என்று ராஜன் கேட்க, வர்மனின் மனதிலும் அதே கேள்விதான் கோபத்துடன் எழுந்தது.

"வேற என்ன சார் பண்ண சொல்றீங்க? நேத்து டாக்டர் அருணோட பிரச்சனையைப் பற்றிச் சொல்லும்போது நீங்களும் தானே இருந்தீங்க! இப்போ அருணுக்கு தேவை மன நிம்மதி. அந்த நிம்மதி அந்தச் சின்னக் குழந்தைக்குக் கிடைக்கனும்னா! அவனுக்கு அவனுடைய அம்மா பாசம் கிடைக்கணும். அது இந்த ஜென்மத்துல கிடைக்காதுன்னு உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும், அதனாலதான் மகதி கிட்ட சொல்லி அருண் கிட்ட அப்படி பேசச் சொன்னேன்" என்றான் மாயன்.

"ஐயோ மாயா! நீ எவ்ளோ பெரிய முட்டாள்தனமான வேலை பண்ணியிருக்கிறேன்னு உனக்குப் புரியுதா புரியலையா! சரி ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்குப் போற வரைக்கும் மகதி அருண் கிட்ட பேசுறதாவே இருக்கட்டும்,ஆனா! வீட்டுக்குப் போனதுக்குப் பிறகு என்னுடைய அம்மா எங்கே என்று அருண் கேட்டால் நம்ம என்ன பதில் சொல்லுவோம்" என்ற வர்மனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மாயன் சிரித்தான்.

"நான் என்ன கேட்கிறேன், நீ ஏன் இப்படி சிரிக்கிற?"என்று வர்மன் கேட்க, "இதையெல்லாம் யோசிக்காமல் நான் எந்தக் காரியமும் பண்ணல வர்மா. நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு. அருண் ஆரோக்கியம் நமக்கு ரொம்ப முக்கியம். அருணுக்கு மறுபடியும் கண் பார்வை கிடைக்கணும்! அதனால நீ இதெல்லாம் பெருசா எடுத்துக்காத" என்ற மாயன் மதிய உணவை வர்மனிடம் நீட்டினான்.

"ஆனா மாயா! வர்மன் சொல்ற மாதிரி, ஏற்கனவே நியூஸ் அது இதுன்னு மகதியையும் வர்மனையும் சேர்த்து வச்சு மீடியாக்காரங்க தேவையில்லாத செய்தியைப் பரப்பி இருக்காங்க. இப்போ இந்த விஷயமும் தெரிந்தால் மகாலிங்கம் என்னைத் தப்பா நினைக்கமாட்டாரா!" என்று தன் மனதில் உள்ள தயக்கத்தை கேட்டார் ராஜன்.

"சித்தப்பா கிட்ட நான் பேசிட்டேன் சார். யாரிடமிருந்தும் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது.நம்ம அருணை நல்லபடியா ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு அழைச்சிட்டு போகணும், அதுதான் இப்போ நமக்கு முக்கியம்" என்ற மாயனுக்குமே வர்மனைப் போலவே அருண் மீது அதீத அன்பும், பாசமும், அக்கறையும் இருந்தது.
 
Joined
Feb 6, 2025
Messages
20
அந்த நொடியிலிருந்து தினமும் மூன்று வேளையும் மகதி சிறுவன் அருண்ணோடு கைபேசியில் பேசியவள் தாய் பாசத்துக்கு அடிமையாக மாறி இருந்தாள்.

அருணின் பேச்சு நடவடிக்கை எல்லாம் சாந்தமாக மாறி இருப்பதை பார்த்து வர்மனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் ஒரு பொய்யை மறைக்க இனி எத்தனை பொய்யைச் சொல்ல நேரிடுமோ என்ற அச்சம் எழுந்தது.

நினைவு தெரிந்ததிலிருந்து தாய் பாசத்துக்கு ஏங்கி தவித்த அருண் இன்று மகதியின் குரலுக்கு அடிமையாகி அவள் தான் தன்னை இன்றேடுத்த தாய் என்று முழுதாக நம்பினான்.

முதலில் மாயனின் வற்புறுத்தலின் விளைவாக மகதி சிறுவனிடம் அவன் அம்மாவாகப் பேசத் தொடங்கியவளுக்கு நாளிடைவில் அருண் மீது உண்மையான பாசம் மலர்ந்தது.

சிறுவனின் அம்மா ரம்யா தற்போது வெளிநாட்டில் வசிப்பவளின் முகவரி தெரியாத காரணத்தால் தான், அருணை காப்பாற்றுவதற்க்காக மகதி சிறுவனிடம் அம்மாவாகப் பேச வேண்டும் என்று மாயன் கெஞ்சி கேட்டதால் வேறு வழி இல்லாமல் மகதியும் சம்மதித்து அருணின் தாயில்லாத ஏக்கத்தைத் தீர்க்கக் குரலின் வடிவே அன்னையாக மாறி இருந்தாள்.

நாட்கள் வாரமாக மாறியது, விடிந்தால் அருணை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர் பரிந்துரைத்தார்.

"என்ன! நான் வீட்டுக்குப் போகப் போறேனா!அப்போ அம்மாவை நான் பார்க்கப் போறேனா!" என்று துள்ளி குதித்தான் அருண்.

"பார்த்தியா மாயா! இப்போ நீ என்ன பண்ண போற? இதுக்கு தான் சின்னப் பையன் மனசுல ஆசையை வளர்க்காதேன்னு தலைபாடா அடிச்சிகிட்டேன்" என்று மாயன் வார்த்தையை மென்னு துப்பினான்.

"இப்போ ஏன் வர்மா நீ உணர்ச்சி வசப்படுற, நீ வா நம்ம அருணை வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்" என்று இயல்பாகச் சொன்னான் மாயன்.

"டேய்! அருண் வீட்டுக்குப் போனதும் அம்மா எங்கேன்னு கேப்பான் டா! என்ற வர்மன் தன் நண்பன் என்றும் பாராமல் மாயனின் சட்டை காலரை கோவமாகப் பற்றினான்.

"ஐயோ வர்மா... நான் தான் சொல்லுறேனே! நான் இருக்கேன் டா, நான் எல்லாத்தையும் பார்த்துப்பேன்" என்ற மாயன், கட்டிலில் அமர்ந்து இருக்கும் சிறுவன் அருகே சென்றான்.

"அருண்... வீட்டுக்குப் போகலாமா" என்று மாயன் கேக்க, "அம்மா வீட்டுக்கு வந்தாச்சா மாமா" என்ற சிறுவனின் கண்களில் கட்டுக் கட்டி இருந்தது.

"நம்ம வீட்டுக்குப் போகும்போது உன் அம்மா வீட்டுல இருப்பாங்க. வாப்போகலாம்" என்ற மாயன், சிறுவனைத் தூக்கிக் கொண்டான்.

"என்ன டா வீட்டுல இருக்குற என் அப்பாவுக்குப் புடவைக்கட்டி அழைத்து வந்து அருண் முன்னாடி நிப்பாட்டப் போறியா!?" என்று மாயன் காதில் மட்டும் கேக்கும்ப்படி கோவமாகக் கேட்டான் வர்மன்.

"மொக்கை ஐடியா வர்மா இதெல்லாம். நீ போய் டாக்டர்க்கிட்ட அடுத்து செக் அப் எப்போ,அருணுக்கு என்ன மருதெல்லாம் தரணும்னு தெளிவா கேட்டுட்டு காருக்கு வந்துடு,நானும் அருணும் பார்க்கிங்ல வெயிட் பண்ணுறோம்"என்ற மாயன் சிறுவனை அலுங்காமல் தூக்கிக்கொண்டு மருத்துவ மனையிலிருந்து வெளியேறி இருந்தான்.

"ஐந்து ஆறு நண்பன் வச்சி இருக்கவன் எல்லாம் சந்தோசமா இருக்கான், இந்த மாயன் ஒருவனை வச்சிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே! ஹ்ம்...எல்லாம் என் தலையெழுத்து" என்று முணங்கிய வர்மன் மருத்துவரைத் தேடி அவர் அறைக்குச் சென்றான்.

அருணுக்காக மருத்துவர் எழுதிக் கொடுத்த சீட்டை வாங்கிக்கொண்டு வர்மன் கார் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றான்.

"அப்பா எங்க மாமா! சீக்கிரமா அவரை வரச் சொல்லுங்க, அம்மா எனக்காகக் காத்து இருப்பாங்க, சீக்கிரமா அப்பாவை வரச் சொல்லுங்க" என்று சிறுவன் மாயனை நச்சரித்துக்கொண்டு இருந்தான்.

"அதோ உன் அப்பா வந்துட்டாரு அருண். இரு இரு! இன்னும் அரைமணி நேரத்துல நம்ம வீட்டுக்குப் போயிடலாமா" என்று மாயன் சொல்ல, அதே தருணம் வர்மன் காரில் ஏறி அருண் அருகே அமர்ந்துகொண்டான்.

வர்மனின் வீட்டை நோக்கி மாயன் காரை விரட்ட, அருண் தன் அம்மாவைத் தொட்டு தழுவித் தன் தாய் பாசத்தை உணர போகிறோம் என்ற எதிர்பார்ப்பு அவனின் உடல் மொழியிலேயே வர்மனுக்கு தெரிந்தது.

அருணின் எதிர்பார்ப்புகள் எல்லாம் பொய்யாக மாறினால்! அருணை எப்படி சமாளிக்க போகிறோம் என்ற பயமும் வர்மனை ஆட்கொண்டு இருக்க, மாயன் விரட்டிய கார் வர்மனின் பங்களாவிற்குள் நுழைந்தது.

"மாமா மாமா வீட்டுக்கு வந்துட்டோமா!" என்ற சிறுவன் கார் நின்றதை வைத்துச் சரியாகக் கணித்து கேட்டதும், "ஹாங் வந்தாச்சு அருண்" என்றான் மாயன்.

"அப்பா கார் கதவைத் திறங்க, நான் அம்மாவைப் பார்க்க! ஹ்ம் ஹ்ம்... அம்மாகிட்ட பேசணும்"என்று அருண் சொல்லும் தருணம், இவர்கள் இருக்கும் காரின் பின் கதவைத் திறந்தாள் மகதி.

மகதியை அங்குச் சற்றும் எதிர்பாராத வர்மனின் விழிகள் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போனது.

வர்மன் இருக்கும் திசை பக்கம் கூடத் தன் பார்வையை திருப்ப மனமில்லாத மகதி, "அருண் செல்லம்" என்று அழைத்த மறு வினாடி, "அம்மா!"என்று சத்தமாக அழைத்த சிறுவனின் கரங்கள் மகதியை கட்டி அணைக்க ஏங்கியது.

சிறுவனின் தவிப்பை காண முடியாத மகதி கண் இமைக்கும் நொடியில் அருணை கட்டி அணைத்து அவன் முகம் முழுதும் முத்தமழை பொழிந்தாள்.

"அம்மா... அம்மா நீங்க ஏன் அம்மா என்னை இத்தனை நாள் வந்து பார்க்கவே இல்லை? என்னை உங்களுக்கு ஏன் அம்மா பிடிக்காம போச்சு?" என்று மகதியின் கையில் இருந்தப்படியே சிறுவன் இதுநாள் வரை தன் அன்னையிடம் கேக்க நினைத்த எல்லா கேள்விகளையும் மகதியிடம் கேட்கத் தொடங்கினான்.

சிறுவனின் உயிரைக் காப்பாற்ற தான் மகதி இன்று அவன் அன்னையாக நடிக்க வந்தாள், ஆனால் அருணின் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது, என்ன பதில் சொல்வது என்று அறியாமல் அவளும் குழம்பி தான் போனாள்.

மகதியின் நிலையை அறிந்து வர்மன் தன் நண்பன் மாயனை முறைக்க, "அருண்... நீ இந்த மாதிரிக் கேள்வி கேட்டா அப்புறம் உன் அம்மா மறுபடியும் உன்னை இங்கேயே விட்டுட்டு அவங்க வேற எங்காவது போயிடுவாங்க பார்வையில்லையா!" என்று மாயன் கேட்டான்.

"ஐயோ வேணா மாமா, இனி நான் எந்தக் கேள்வியும் கேக்க மாட்டேன். சாரி அம்மா நான் இனி எதுவும் கேக்க மாட்டேன்" என்ற சிறுவன் மகதியின் தோளில் சாய்ந்து இருக்க, வர்மனுக்கோ எல்லாம் அவன் கையை மீறி நடப்பதை போலத் தோன்றியது.

"என்ன இது ஏன் எல்லோரும் வாசல்ல நின்னே பேசிகிட்டு இருக்கீங்க, அருண் செல்லம் தாத்தாகிட்ட வாடா" என்ற ராஜன் சிறுவன் கையைப் பிடிக்க, "தாத்தா நான் அம்மாகிட்ட இருக்கேன்" என்ற சிறுவன் மகதியின் தோளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டான்.

"சார்! அருண் அவங்க அம்மாகூடவே இருக்கட்டும், இருங்க நான் போய் ஆரத்தி எடுத்துட்டு வரேன்" என்ற மாயன் வீட்டுக்குள் விரைந்து சென்றவன் கையில் ஆரத்தி தட்டுடன் வெளியே வந்தான்.

"வர்மா நீயும் அருண் பக்கத்துல நில்லு" என்ற மாயனை வர்மன் முறைத்து பார்க்க, "ஆமா வர்மா நீயும் என் மருமகள் பக்கத்துல நில்லு" என்ற ராஜனின் வார்த்தையைக் கேட்டு வர்மனை விடவே மகதிக்கு கோவம் வந்தது.

ஒரு வழியாக மாயன் இவர்களுக்குத் திருஷ்டி கழித்து வீட்டுக்குள் அழைத்து வந்ததும், "அம்மா…" என்று அழைத்தான் சிறுவன்.

அருணின் அழைப்பில் அடுத்து அவன் என்ன கேள்வி கேக்க போகிறான் என்று மகதி தயங்கியப்படி நின்று இருந்தவளை,
"அம்மா... உங்க பேர் என்ன?" என்று கேட்டான் அருண்.

மகதி என்று தன் பெயரைச் சொல்ல அவள் வாய் திறக்கும் முன்னே,"உன் அம்மா பேர் சித்ரா"என்றான் மாயன்.

"வாவ்! உங்க பெயர் ரொம்ப அழகா இருக்கு அம்மா" என்ற சிறுவன் மேலும் மகதியை கட்டிக்கொண்டதும், "மருமகளே! நீ அருணை அவன் ரூமுக்கு அழைச்சிட்டு போ" என்றார் ராஜன்.

"தாத்தா தாத்தா இனி! நான், அம்மா, அப்பா மூன்று பேருமே ஒரே ரூம்ல தான் தூங்க போறோம்,அதனால அம்மா நீங்க என்னை அப்பா ரூமுக்கு தூக்கிட்டு போங்க" என்று சிறுவன் சொன்னதும், மகதி திடுக்கிட்டு வர்மனை பார்க்க, வர்மனின் பார்வையோ கொலைவெறியோடு மாயன் பக்கம் திரும்பியது.

சிறுவனின் உயிரைக் காப்பாற்ற மகதியை அவனுக்குத் தாயாக நடிக்க வைத்து அருணின் மனநிலையை சீராக்க எண்ணிய மாயனுக்கு தன் தங்கை சித்ரமகதியை வர்மனுடன் சேர்த்து வைப்பதற்க்காகவும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திகொண்டான்.

வர்மனுக்கு தன் நினைவே இல்லை என்று அறிந்துகொண்ட மகதி, ஏனோ சிறுவனின் நிலையை அறிந்து அவனைக் காப்பாற்ற உதவி கேட்கும் மாயனை மறுத்துப் பேச மனம் இல்லாமல் போனது.

மகதி அருணுக்காக உதவி செய்ய வந்தவளுக்கு, அருணின் அன்பு தொல்லையாக மாறியது.

மகதியின் பதற்றத்தை பார்த்து
"அருண்... நீ மட்டும் என் ரூம்ல என் கூடப் படுத்துக்கோ" என்று கண்டிப்புடன் சொன்னான் வர்மன்.

"அப்பா...நம்ம எல்லாம் ஒண்ணா தான் தூங்கணும். என் பிரண்ட்ஸ் எல்லாம் அவங்க அம்மா அப்பாகூட தான் தூங்குவாங்க" என்று அருண் சொன்னதும்,

"சரி சரி உன் அப்பாவும் அம்மாவும் கூட உன்கூடவே தூங்குவாங்க, இப்போ நீ வா நான் உன்னை உன் அப்பா ரூமுக்கே தூக்கிட்டு போறேன்" என்ற மாயன் சிறுவனைத் தூக்கிக்கொண்டு வர்மனின் அறைக்குள் நுழைந்தான்.

மாயனுடன் சிறுவன் சென்றதை ஊர்ஜிதம் படுத்திகொண்ட வர்மன், "மகதி..." என்று தன் எதிரே நின்று இருப்பவளை அழைத்தான்.

"பேசாதீங்க வர்மன், நீங்க
காதலிக்கும் உண்மையா இல்ல, பொண்டாட்டிக்கும் உண்மையா இல்ல, பெத்த பிள்ளைக்கும் உண்மையா இல்ல, ஏன் வர்மா! ஏன் இப்படி மாறிப் போயிட்டீங்க! உங்ககிட்ட இருந்து இப்படியொரு மாற்றத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை வர்மா" என்ற மகதி கண்களில் கண்ணீருடன் சிறுவனைக் காண வர்மனின் அறைக்குள் நுழைந்தவளை பார்த்துத் தலையில் அடித்துக்கொண்டான் வர்மன்.

"வர்மா...மகதிக்கு அருணை பற்றி முழு விவரம் தெரியல, அதான் இப்படி கோவமாகப் பேசுறாள்" என்று ராஜன் சொல்ல,

"அதெல்லாம் இருக்கட்டும் அப்பா, ஆனா ஏன் அடிக்கடி இந்தப் பொண்ணு என்னைப் பார்த்துக் காதலுக்கு நான் உண்மையா இல்லைன்னு சொல்லுது!?அப்படி நான் யாரை காதலித்து ஏமாற்றினேன்!?"என்று வர்மன் கேட்தும்,

"வேற யாரை? மகதியை தான்!"என்றான் மாயன்.





 
New member
Joined
Feb 8, 2025
Messages
16
Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe
 
New member
Joined
May 9, 2025
Messages
8
Going good. Any accidents for Varman that he forgot her or she is having crush on him. Whatever the podipayan is in trouble. Save him from his longing for mom.👩
 
New member
Joined
May 2, 2025
Messages
8
இப்போ தான் கதை சூடு பிடிக்குது. அருமை அருமை வாரம் ரெண்டு முறையாவது போடுங்க அக்கா பிளீஸ்
 
New member
Joined
Mar 12, 2025
Messages
9
குழந்தயின் தாய் ஏக்கம் பவமாக இருக்கு. சீக்கிரமா வர்மனுக்கு மகத்தி காதல் புரியனும் 👌
 
New member
Joined
Feb 8, 2025
Messages
13
superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr
 
New member
Joined
May 2, 2025
Messages
7
பாவம் அருண். மகதி தான் அவன் ஏக்கம் தீர்க்கணும்
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top