Active member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 20
- Thread Author
- #1
அத்தியாயம்- 6
மகதி பேசிய வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று வர்மன் யோசிக்கும் முன்னே அவள் அங்கிருந்து வெளியேறி இருந்தாள்.
வர்மன் இருந்த சூழ்நிலையில் அவனும் மேற்கொண்டு மகதியின் பேச்சைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.
மாயனுடன் ராஜனும் மகதியும் காரில் பயணித்துக்கொண்டு இருக்க,
"என்னைக்கு அந்த ரம்யா எங்க குடும்பத்துக்கு வந்தாளோ அன்னைக்கே என் குடும்பத்தோட நிம்மதி போனது தான் மிச்சம். அந்த ரம்யா வயத்துல பிறந்த பாவம் தான் அருண் வாழ்க்கையும் வீனா போகக் காரணம்" என்று வழியெல்லாம் ராஜன் புலம்பினார்.
"சார்... நீங்கத் தான் வர்மனுக்கு ஆறுதல் சொல்லணும். நீங்களே இப்படி கவலை பட்டால் பாவம் அவன் என்ன பண்ணுவான்" என்ற மாயனை கேள்வியாகப் பார்த்தாள் மகதி.
"பாவம் மாயா, எங்க குடும்ப பிரச்சனையில மகதியும் தெரியாம உள்ள வந்து சீக்கிகிட்டாள்" என்ற ராஜனுக்கு நாளுக்கு நாள் அருணால் பிரச்சனைகள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.
"எல்லாம் நல்லதுக்கு நினைப்போம் சார். நீங்க வருத்தப்பட்டு உங்க நலத்தை கெடுத்துக்காதிங்க"என்று மாயன் அவன் காரை வர்மன் வீட்டின் முன்னே நிறுத்தினான்.
"ஏன் மாயா... இப்போ அருண் எழுந்து அவன் அம்மா எங்கென்னு கேட்டால் என்ன பண்றது?" என்று ராஜன் கேக்க, "பேசாம அருணோட அம்மாவை வர வையுங்க மாமா" என்றாள் மகதி.
"அதுக்கு அந்தப் பொண்ணு எங்க இருக்கானு நமக்குத் தெரியணுமே மகதி"என்று ராஜன் சொல்ல,"ஏன் அவங்க இருக்குற இடம் வர்மனுக்கு கூடவா தெரியாது?" என்று கோவமாகக் கேட்டாள் மகதி.
"மகதி...தலையும் புரியாம காலும் புரியாம நீயா எதையாவது கேள்வினு கேக்காத, கொஞ்ச நேரம் சும்மா இரு" என்ற மாயன் மீண்டும் காரை ஸ்டார்ட் செய்தவன், "சார்... அருணை நான் சமாளிச்சுக்கிறேன். நீங்க நிம்மதியா போய்ச் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க" என்றான்.
"சரி மாயா என் மருமகளை பார்த்து அழைச்சிட்டு போ. நம்ம நாளைக்கு மீட் பண்ணலாம்" என்ற ராஜன் வர்மனின் வீட்டுக்குள் நுழைய, மாயன் தன் தங்கையை அழைத்த்துக்கொண்டு அவன் வீட்டை நோக்கிக் காரை விரட்டினான்.
"சொந்த மருமகள் இப்போ எங்க இருக்கிறான்னு கூட இவருக்குத் தெரியாதாம்! ஆனா என்கிட்ட மட்டும் மருமகளே சிறுமகளேன்னு ஆசையா பேசுவாறாம்! இப்படியே அப்பாவும் மகனும் என் மனசுல நம்பிக்கையை வளர்த்துட்டு என்னை நல்லா ஏமாத்திட்டாங்க"என்று சத்தமாகப் புலம்பும் மகதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் சரமாரியாக வெடித்தது.
மகதியின் அர்த்தமில்லாத புலம்பளை கண்டு குழம்பிய மாயன்,"என்ன பாப்பா... யாரை திட்டிகிட்டு வர?" என்று கேட்டான்.
"ம்... எல்லாம் உங்க நண்பனைத் தான்" என்றவள் மேலும் வர்மனை வாய்க்குள் வசைப்பாடினாள்.
"பாப்பா... போதும் நிறுத்து.என் காது வலிக்குது" என்ற மாயன் தன் சுண்டு விரலால் அவன் காதைக் குடைந்துகொள்ள, "எனக்கு இதயமே வலிக்குது, அது உங்களுக்குத் தெரியலையா?" என்ற மகதி பொங்கி வரும் அழுகையை தனக்குள் இழுத்து பிடித்துக்கொண்டாள்.
தன் தங்கையின் கண்ணீரை கண்டு பதறிய மாயன், "என்னடா பாப்பா நீ... ஏன் அழற?" என்றவன் சட்டென்று காரை ஓரம் கட்டியதும், மகதி சத்தம் போட்டு அழுதவள்,
"அண்ணா... நான் இங்க வந்ததே எங்க கல்யாணம் எப்போ நடக்கும்னு வர்மனை பார்த்துக் கேக்க தான் வந்தேன்" என்ற மகதியின் வார்த்தையைக் கேட்டுப் புருவம் உயிர்த்தினான் மாயன்.
"என்ன பாப்பா சொல்லுற? உன் கல்யாணத்துக்கும் வர்மனுக்கும் என்ன சம்மந்தம்" என்ற மாயனிடம் மகதி அவள் கைபேசியில் உள்ள புகைப்படத்தைக் காட்டியவள், "இது அவரு எனக்கு எழுதிக்கொடுத்த லெட்டர். இதுல என்ன எழுதி இருக்குனு படியுங்கள்" என்றவளின் கைபேசியில் உள்ள லெட்டரை வாசித்தான் மாயன்.
"இந்த லெட்டரை தான் நான் தினமும் ஆயிரம் முறையாவது படிச்சி பார்த்துப்பேன். என் போனோட டிஸ்பிலேல கூட இந்த லெட்டர் தான்" என்ற மகதியின் அழுகையை பார்த்த மாயனுக்கு அந்தக் கணம் தான் அவளின் அழுகைக்கு காரணமே மாயன் தான் என்ற கூற்று புரிந்தது.
"வர்மன் எனக்குக் கொடுத்த நம்பிக்கையில தான் நான் அவருக்காக இத்தனை வருடம் காத்து இருந்தேன். வீட்டுல அம்மா அவங்க தம்பிக்கு என்னைக் கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்க. ஆனா என் மனசுல வர்மனை தவிர வேற யாருமே இல்லைனு அப்பாவுக்குத் தெரியும். அதனால தான் நான் அப்பாகிட்ட மட்டும் சொல்லிட்டு வர்மனை தேடி மும்பைக்கு வந்தேன். ஆனா அவருக்கு என்னைப் பற்றிய நினைவே இல்லை" என்றவளின் வார்த்தைகள் உடைந்து, எழுத்துக்கள் கண்ணீரால் மிதந்தது.
"நான் தான் இத்தனை வருடமும் அவரைக் கண் மூடித் தனமா காதலிச்சு இருக்கேன். ஆனா அவரு என்னடானா யாரோ ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவருக்குப் பிறந்த குழந்தையோடு அவரு ரொம்ப சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருக்காரு" என்றவள் மேலும் அழுதுக்கொண்டு தான் இருந்தாள்.
மகதியின் கண்ணீருக்கு மாயன் தான் முழு காரணம் என்று உணர்ந்த மாயனுக்கு இனி மகதியின் சிரிப்புக்கும் அவனே காரணமாக மாற வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் ஆணித்தனமாகப் பதிந்தது.
"பாப்பா... நீ அழாத. எல்லாம் நன்மைக்குனு நினைப்போம். கண்ணைத் துடைச்சுக்கோ" என்ற மாயன் காரைத் தன் வீட்டை நோக்கி விரட்டினான்.
மாயன் வீட்டுக்குள் நுழைந்த மகதியை,
"குட்டி பாப்பா எப்படி இருக்க" என்ற கீதா ஆசையோடு கட்டிக்கொண்டு கன்னத்தில் இதழ் பத்திதார்.
"பெரியம்மா... நீங்க எப்படி இருக்கிங்க?" என்ற மகதியின் கண்கள் இரண்டும் மாதுளை மணிகளின் நிறத்தில் சிவந்து காணப்பட்டது.
"என்ன அம்மா? கோவில்ல நல்ல
தரிசனமா?" என்ற மாயன் தன் சட்டையைக் கழட்டி ஆணியில் மாட்டியவன் கைக்கால்களைக் கழுவ சென்றான்.
"கண்ணுக்குக் குளிர்ச்சியா பாண்டி முனிஸ்வரணை தரிசனம் பண்ணிட்டு வந்தேன் மாயா" என்ற கீதா தன் மகனின் நெற்றியில் விபூதியை பூசினார்.
"பாப்பா... நீயும் போய்க் கைக்கால் அலம்பிட்டு வா, அம்மா நீங்கச் சாப்பிட்டீங்களா?" என்ற மாயன் தன் அறையை எட்டி பார்க்க அங்கே அவனின் மனைவி நந்தினி கையில் புத்தகத்தை வைத்து வாசித்துக்கொண்டு இருந்தாள்.
"நான் சாப்பிட்டேன் மாயா"என்று கீதா சொல்ல,"நந்தினி... நீ சாப்பிட்டியா?" என்ற மாயனின் கேள்வியைக் காதில் வாங்காதப்படி தன் அறையில் அமர்ந்து இருந்தாள் நந்தினி.
"இன்னும் நந்தினி சாப்பிடல மாயா.
ஒரு வேள உங்ககூட சாப்பிட காத்து இருக்காகளோ என்னவோ" என்று கீதா சொன்னதும், "நந்தினி ஏன் இன்னும் நீ சாப்பிடல?நேரத்துக்குச் சாப்பிடுன்னு எத்தனை முறை சொல்லுறது" என்று கேட்டுக்கொண்டே மாயன் அவன் அறைக்குள் நுழைந்தான்.
"எனக்குப் பசிச்சா நான் சாப்பிடுப்பேன். உங்க கரிசனமோ உங்க அம்மா கரிசனமோ எனக்குத் தேவையில்லை" என்ற நந்தினி புத்தகத்தை மூடி வைத்தவள் கட்டிலில் படுத்துப் போர்வையால் தன்னை முழுவதுமாகப் போர்த்திகொண்டாள்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் நந்தினியின் மாற்றத்தைக்கண்டு பழகிப் போன மாயன் பெருமூச்சுடனே அறையிலிருந்து வெளியே வந்தான்.
மகிழ்ச்சியாக இருந்த தன் மகனும் மருமகளும் சில மாதங்களாக மனஸ்த்தாபத்தோடு வாழ்ந்து வருவதை உணர்ந்த கீதா அவர்களே அவர்களுக்குள் பேசிச் சமாதானம் அடையட்டும் என்று எண்ணியவர் கணவன் மனைவி பிரச்சனையில் தலையிடக் கூடாது என்று முடிவெடுத்து அமைதியை கடைபிடித்தார்.
"குட்டிமா சாப்பிடலாமா?" என்ற மாயனே தன் தங்கைக்குச் சாப்பாட்டை பரிமாறியவன், "அம்மா... வர்மனுக்கு சாப்பாடு எடுத்து வச்சிட்டீங்களா" என்று கேட்டவன், முன்னதாகவே தன் நண்பனுக்கும் சேர்த்து சமைக்கும்ப்படி நந்தினியிடம் குறுஞ்செய்தி வாயிலாகத் தெரியப்படுத்தி இருந்தான்.
"நந்தினி எல்லாமே ரெடி பண்ணி வச்சிட்டாள் மாயா. ஆமா! அந்தச் சின்னப் பையன் இப்போ எப்படி தான் இருக்கான்" என்ற கீதாவிடம் அருணின் தற்போதையை நிலைமையைப் பற்றி விவரமாக எடுத்துறைத்தான் மாயன்.
"பாவம் அந்தச் சின்னப் பையன்! தாய் பாசத்துக்கு ஏங்குற வயசுல அவனைப் பெத்துப்போட்ட ரக்ஷாஷி வேற எவன் கூடவோ கூத்து கும்மாளமுன்னு சுத்திகிட்டு இருக்காள்.ஹ்ம்... இந்தக் கடவுளுக்கும் கண்ணு இல்லாம போச்சு.
குழந்தையை நல்லப்படியா பாத்துக்க துப்பு இல்லாத ஆளுங்ககிட்ட தான் அந்த இறைவனும் பிள்ளை வரத்தைக் கொடுக்குறான். ஆனா இங்க பாரு. என் மகனுக்கும் மருமகளும் ஒரு பிள்ளை வேணும்னு நான் தவமா தவம் இருக்கேன். அந்தக் கடவுளுக்கு என் வேண்டுதல் கேக்கவே மாட்டுது" என்ற கீதாவின் புலம்பல் தன் அறையில் படுத்து இருந்த நந்தினி காதில் தெள்ள தெளிவாகக் கேட்டது
"அம்மா... யாருக்கு என்ன கொடுக்கணும்னு அந்தக் கடவுளுக்குத் தெரியும்.
இறைவன் கொடுக்குறதை யாராலும் தடுக்கவும் முடியாது. அவன் தடுக்குறதை யாராலும் கொடுக்கவும் முடியாது" என்ற மாயனின் பேச்சைக் கேட்ட நந்தினியின் விழிகள் ஈரமானது.
"சரி மாயா... நீ சாப்பிட்டு உன் நண்பனுக்குச் சாப்பாடு எடுத்துட்டு போ. மகதி செல்லம் நம்ம காலையில நிறைய கதை பேசலாம். இப்போ நான் போய்த் தூங்குறேன். கால் எல்லாம் ரொம்ப வலியா இருக்கு" என்ற கீதா அவர் அறைக்குள் சென்றார்.
"அண்ணா...அண்ணிக்கும் உங்களுக்கும் சண்டையா? ஏன் அண்ணி உங்ககூட சரியா பேச மாட்டுறாங்க?" என்று மகதி கேட்டதும்,
"அப்படியெல்லாம் ஒன்னுமில்ல பாப்பா.வேலையில நந்தினிக்கு எதாவது பிரச்சனை இருக்கும். சரி நீ போய்ப் படுத்துக்கோ நான் ஹாஸ்பிடல் கிளம்புறேன்" என்ற மாயன் வர்மனுக்காகச் சாப்பாடை எடுத்து வைத்தான்.
"அண்ணா...அருணை பத்திரமா பார்த்துக்கொங்க" என்று மகதி சொல்ல, "ம்... நான் பார்த்துக்குறேன் குட்டி. அப்புறம் சித்தப்பா உன்கிட்ட அந்த மீடியா நியூஸ் பற்றி எதாவது கேட்டா நீ எதுவும் சொல்லாத. நான் சித்தப்பாகிட்ட பாக்குவமா பேசிக்கிறேன்" என்ற மாயன் சமையலறையிலிருந்து இன்னொரு சாப்பாட்டுத் தட்டை எடுத்துக்கொண்டு நந்தினியின் அறைக்குச் சென்றான்.
"நந்து உனக்குச் சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன் சாப்பிட்டு படுத்துக்கோ" என்றவன் வேறு சட்டையை அணிந்துகொண்டு வேகமாகத் தன் வீட்டிலிருந்து வெளியேறினான்.
மாயன் தன் வீட்டிலிருந்து வெளியேறியதும் நந்தினி அவள் அறையில் இருந்த சாப்பாட்டை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தவள்,
"நீ சாப்பிட்டியா?" என்று தன்னை கேள்வியாகப் பார்த்து இருந்த மகதியை கேட்டாள்.
மகதி பேசிய வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று வர்மன் யோசிக்கும் முன்னே அவள் அங்கிருந்து வெளியேறி இருந்தாள்.
வர்மன் இருந்த சூழ்நிலையில் அவனும் மேற்கொண்டு மகதியின் பேச்சைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.
மாயனுடன் ராஜனும் மகதியும் காரில் பயணித்துக்கொண்டு இருக்க,
"என்னைக்கு அந்த ரம்யா எங்க குடும்பத்துக்கு வந்தாளோ அன்னைக்கே என் குடும்பத்தோட நிம்மதி போனது தான் மிச்சம். அந்த ரம்யா வயத்துல பிறந்த பாவம் தான் அருண் வாழ்க்கையும் வீனா போகக் காரணம்" என்று வழியெல்லாம் ராஜன் புலம்பினார்.
"சார்... நீங்கத் தான் வர்மனுக்கு ஆறுதல் சொல்லணும். நீங்களே இப்படி கவலை பட்டால் பாவம் அவன் என்ன பண்ணுவான்" என்ற மாயனை கேள்வியாகப் பார்த்தாள் மகதி.
"பாவம் மாயா, எங்க குடும்ப பிரச்சனையில மகதியும் தெரியாம உள்ள வந்து சீக்கிகிட்டாள்" என்ற ராஜனுக்கு நாளுக்கு நாள் அருணால் பிரச்சனைகள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.
"எல்லாம் நல்லதுக்கு நினைப்போம் சார். நீங்க வருத்தப்பட்டு உங்க நலத்தை கெடுத்துக்காதிங்க"என்று மாயன் அவன் காரை வர்மன் வீட்டின் முன்னே நிறுத்தினான்.
"ஏன் மாயா... இப்போ அருண் எழுந்து அவன் அம்மா எங்கென்னு கேட்டால் என்ன பண்றது?" என்று ராஜன் கேக்க, "பேசாம அருணோட அம்மாவை வர வையுங்க மாமா" என்றாள் மகதி.
"அதுக்கு அந்தப் பொண்ணு எங்க இருக்கானு நமக்குத் தெரியணுமே மகதி"என்று ராஜன் சொல்ல,"ஏன் அவங்க இருக்குற இடம் வர்மனுக்கு கூடவா தெரியாது?" என்று கோவமாகக் கேட்டாள் மகதி.
"மகதி...தலையும் புரியாம காலும் புரியாம நீயா எதையாவது கேள்வினு கேக்காத, கொஞ்ச நேரம் சும்மா இரு" என்ற மாயன் மீண்டும் காரை ஸ்டார்ட் செய்தவன், "சார்... அருணை நான் சமாளிச்சுக்கிறேன். நீங்க நிம்மதியா போய்ச் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க" என்றான்.
"சரி மாயா என் மருமகளை பார்த்து அழைச்சிட்டு போ. நம்ம நாளைக்கு மீட் பண்ணலாம்" என்ற ராஜன் வர்மனின் வீட்டுக்குள் நுழைய, மாயன் தன் தங்கையை அழைத்த்துக்கொண்டு அவன் வீட்டை நோக்கிக் காரை விரட்டினான்.
"சொந்த மருமகள் இப்போ எங்க இருக்கிறான்னு கூட இவருக்குத் தெரியாதாம்! ஆனா என்கிட்ட மட்டும் மருமகளே சிறுமகளேன்னு ஆசையா பேசுவாறாம்! இப்படியே அப்பாவும் மகனும் என் மனசுல நம்பிக்கையை வளர்த்துட்டு என்னை நல்லா ஏமாத்திட்டாங்க"என்று சத்தமாகப் புலம்பும் மகதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் சரமாரியாக வெடித்தது.
மகதியின் அர்த்தமில்லாத புலம்பளை கண்டு குழம்பிய மாயன்,"என்ன பாப்பா... யாரை திட்டிகிட்டு வர?" என்று கேட்டான்.
"ம்... எல்லாம் உங்க நண்பனைத் தான்" என்றவள் மேலும் வர்மனை வாய்க்குள் வசைப்பாடினாள்.
"பாப்பா... போதும் நிறுத்து.என் காது வலிக்குது" என்ற மாயன் தன் சுண்டு விரலால் அவன் காதைக் குடைந்துகொள்ள, "எனக்கு இதயமே வலிக்குது, அது உங்களுக்குத் தெரியலையா?" என்ற மகதி பொங்கி வரும் அழுகையை தனக்குள் இழுத்து பிடித்துக்கொண்டாள்.
தன் தங்கையின் கண்ணீரை கண்டு பதறிய மாயன், "என்னடா பாப்பா நீ... ஏன் அழற?" என்றவன் சட்டென்று காரை ஓரம் கட்டியதும், மகதி சத்தம் போட்டு அழுதவள்,
"அண்ணா... நான் இங்க வந்ததே எங்க கல்யாணம் எப்போ நடக்கும்னு வர்மனை பார்த்துக் கேக்க தான் வந்தேன்" என்ற மகதியின் வார்த்தையைக் கேட்டுப் புருவம் உயிர்த்தினான் மாயன்.
"என்ன பாப்பா சொல்லுற? உன் கல்யாணத்துக்கும் வர்மனுக்கும் என்ன சம்மந்தம்" என்ற மாயனிடம் மகதி அவள் கைபேசியில் உள்ள புகைப்படத்தைக் காட்டியவள், "இது அவரு எனக்கு எழுதிக்கொடுத்த லெட்டர். இதுல என்ன எழுதி இருக்குனு படியுங்கள்" என்றவளின் கைபேசியில் உள்ள லெட்டரை வாசித்தான் மாயன்.
"இந்த லெட்டரை தான் நான் தினமும் ஆயிரம் முறையாவது படிச்சி பார்த்துப்பேன். என் போனோட டிஸ்பிலேல கூட இந்த லெட்டர் தான்" என்ற மகதியின் அழுகையை பார்த்த மாயனுக்கு அந்தக் கணம் தான் அவளின் அழுகைக்கு காரணமே மாயன் தான் என்ற கூற்று புரிந்தது.
"வர்மன் எனக்குக் கொடுத்த நம்பிக்கையில தான் நான் அவருக்காக இத்தனை வருடம் காத்து இருந்தேன். வீட்டுல அம்மா அவங்க தம்பிக்கு என்னைக் கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்க. ஆனா என் மனசுல வர்மனை தவிர வேற யாருமே இல்லைனு அப்பாவுக்குத் தெரியும். அதனால தான் நான் அப்பாகிட்ட மட்டும் சொல்லிட்டு வர்மனை தேடி மும்பைக்கு வந்தேன். ஆனா அவருக்கு என்னைப் பற்றிய நினைவே இல்லை" என்றவளின் வார்த்தைகள் உடைந்து, எழுத்துக்கள் கண்ணீரால் மிதந்தது.
"நான் தான் இத்தனை வருடமும் அவரைக் கண் மூடித் தனமா காதலிச்சு இருக்கேன். ஆனா அவரு என்னடானா யாரோ ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவருக்குப் பிறந்த குழந்தையோடு அவரு ரொம்ப சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருக்காரு" என்றவள் மேலும் அழுதுக்கொண்டு தான் இருந்தாள்.
மகதியின் கண்ணீருக்கு மாயன் தான் முழு காரணம் என்று உணர்ந்த மாயனுக்கு இனி மகதியின் சிரிப்புக்கும் அவனே காரணமாக மாற வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் ஆணித்தனமாகப் பதிந்தது.
"பாப்பா... நீ அழாத. எல்லாம் நன்மைக்குனு நினைப்போம். கண்ணைத் துடைச்சுக்கோ" என்ற மாயன் காரைத் தன் வீட்டை நோக்கி விரட்டினான்.
மாயன் வீட்டுக்குள் நுழைந்த மகதியை,
"குட்டி பாப்பா எப்படி இருக்க" என்ற கீதா ஆசையோடு கட்டிக்கொண்டு கன்னத்தில் இதழ் பத்திதார்.
"பெரியம்மா... நீங்க எப்படி இருக்கிங்க?" என்ற மகதியின் கண்கள் இரண்டும் மாதுளை மணிகளின் நிறத்தில் சிவந்து காணப்பட்டது.
"என்ன அம்மா? கோவில்ல நல்ல
தரிசனமா?" என்ற மாயன் தன் சட்டையைக் கழட்டி ஆணியில் மாட்டியவன் கைக்கால்களைக் கழுவ சென்றான்.
"கண்ணுக்குக் குளிர்ச்சியா பாண்டி முனிஸ்வரணை தரிசனம் பண்ணிட்டு வந்தேன் மாயா" என்ற கீதா தன் மகனின் நெற்றியில் விபூதியை பூசினார்.
"பாப்பா... நீயும் போய்க் கைக்கால் அலம்பிட்டு வா, அம்மா நீங்கச் சாப்பிட்டீங்களா?" என்ற மாயன் தன் அறையை எட்டி பார்க்க அங்கே அவனின் மனைவி நந்தினி கையில் புத்தகத்தை வைத்து வாசித்துக்கொண்டு இருந்தாள்.
"நான் சாப்பிட்டேன் மாயா"என்று கீதா சொல்ல,"நந்தினி... நீ சாப்பிட்டியா?" என்ற மாயனின் கேள்வியைக் காதில் வாங்காதப்படி தன் அறையில் அமர்ந்து இருந்தாள் நந்தினி.
"இன்னும் நந்தினி சாப்பிடல மாயா.
ஒரு வேள உங்ககூட சாப்பிட காத்து இருக்காகளோ என்னவோ" என்று கீதா சொன்னதும், "நந்தினி ஏன் இன்னும் நீ சாப்பிடல?நேரத்துக்குச் சாப்பிடுன்னு எத்தனை முறை சொல்லுறது" என்று கேட்டுக்கொண்டே மாயன் அவன் அறைக்குள் நுழைந்தான்.
"எனக்குப் பசிச்சா நான் சாப்பிடுப்பேன். உங்க கரிசனமோ உங்க அம்மா கரிசனமோ எனக்குத் தேவையில்லை" என்ற நந்தினி புத்தகத்தை மூடி வைத்தவள் கட்டிலில் படுத்துப் போர்வையால் தன்னை முழுவதுமாகப் போர்த்திகொண்டாள்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் நந்தினியின் மாற்றத்தைக்கண்டு பழகிப் போன மாயன் பெருமூச்சுடனே அறையிலிருந்து வெளியே வந்தான்.
மகிழ்ச்சியாக இருந்த தன் மகனும் மருமகளும் சில மாதங்களாக மனஸ்த்தாபத்தோடு வாழ்ந்து வருவதை உணர்ந்த கீதா அவர்களே அவர்களுக்குள் பேசிச் சமாதானம் அடையட்டும் என்று எண்ணியவர் கணவன் மனைவி பிரச்சனையில் தலையிடக் கூடாது என்று முடிவெடுத்து அமைதியை கடைபிடித்தார்.
"குட்டிமா சாப்பிடலாமா?" என்ற மாயனே தன் தங்கைக்குச் சாப்பாட்டை பரிமாறியவன், "அம்மா... வர்மனுக்கு சாப்பாடு எடுத்து வச்சிட்டீங்களா" என்று கேட்டவன், முன்னதாகவே தன் நண்பனுக்கும் சேர்த்து சமைக்கும்ப்படி நந்தினியிடம் குறுஞ்செய்தி வாயிலாகத் தெரியப்படுத்தி இருந்தான்.
"நந்தினி எல்லாமே ரெடி பண்ணி வச்சிட்டாள் மாயா. ஆமா! அந்தச் சின்னப் பையன் இப்போ எப்படி தான் இருக்கான்" என்ற கீதாவிடம் அருணின் தற்போதையை நிலைமையைப் பற்றி விவரமாக எடுத்துறைத்தான் மாயன்.
"பாவம் அந்தச் சின்னப் பையன்! தாய் பாசத்துக்கு ஏங்குற வயசுல அவனைப் பெத்துப்போட்ட ரக்ஷாஷி வேற எவன் கூடவோ கூத்து கும்மாளமுன்னு சுத்திகிட்டு இருக்காள்.ஹ்ம்... இந்தக் கடவுளுக்கும் கண்ணு இல்லாம போச்சு.
குழந்தையை நல்லப்படியா பாத்துக்க துப்பு இல்லாத ஆளுங்ககிட்ட தான் அந்த இறைவனும் பிள்ளை வரத்தைக் கொடுக்குறான். ஆனா இங்க பாரு. என் மகனுக்கும் மருமகளும் ஒரு பிள்ளை வேணும்னு நான் தவமா தவம் இருக்கேன். அந்தக் கடவுளுக்கு என் வேண்டுதல் கேக்கவே மாட்டுது" என்ற கீதாவின் புலம்பல் தன் அறையில் படுத்து இருந்த நந்தினி காதில் தெள்ள தெளிவாகக் கேட்டது
"அம்மா... யாருக்கு என்ன கொடுக்கணும்னு அந்தக் கடவுளுக்குத் தெரியும்.
இறைவன் கொடுக்குறதை யாராலும் தடுக்கவும் முடியாது. அவன் தடுக்குறதை யாராலும் கொடுக்கவும் முடியாது" என்ற மாயனின் பேச்சைக் கேட்ட நந்தினியின் விழிகள் ஈரமானது.
"சரி மாயா... நீ சாப்பிட்டு உன் நண்பனுக்குச் சாப்பாடு எடுத்துட்டு போ. மகதி செல்லம் நம்ம காலையில நிறைய கதை பேசலாம். இப்போ நான் போய்த் தூங்குறேன். கால் எல்லாம் ரொம்ப வலியா இருக்கு" என்ற கீதா அவர் அறைக்குள் சென்றார்.
"அண்ணா...அண்ணிக்கும் உங்களுக்கும் சண்டையா? ஏன் அண்ணி உங்ககூட சரியா பேச மாட்டுறாங்க?" என்று மகதி கேட்டதும்,
"அப்படியெல்லாம் ஒன்னுமில்ல பாப்பா.வேலையில நந்தினிக்கு எதாவது பிரச்சனை இருக்கும். சரி நீ போய்ப் படுத்துக்கோ நான் ஹாஸ்பிடல் கிளம்புறேன்" என்ற மாயன் வர்மனுக்காகச் சாப்பாடை எடுத்து வைத்தான்.
"அண்ணா...அருணை பத்திரமா பார்த்துக்கொங்க" என்று மகதி சொல்ல, "ம்... நான் பார்த்துக்குறேன் குட்டி. அப்புறம் சித்தப்பா உன்கிட்ட அந்த மீடியா நியூஸ் பற்றி எதாவது கேட்டா நீ எதுவும் சொல்லாத. நான் சித்தப்பாகிட்ட பாக்குவமா பேசிக்கிறேன்" என்ற மாயன் சமையலறையிலிருந்து இன்னொரு சாப்பாட்டுத் தட்டை எடுத்துக்கொண்டு நந்தினியின் அறைக்குச் சென்றான்.
"நந்து உனக்குச் சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன் சாப்பிட்டு படுத்துக்கோ" என்றவன் வேறு சட்டையை அணிந்துகொண்டு வேகமாகத் தன் வீட்டிலிருந்து வெளியேறினான்.
மாயன் தன் வீட்டிலிருந்து வெளியேறியதும் நந்தினி அவள் அறையில் இருந்த சாப்பாட்டை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தவள்,
"நீ சாப்பிட்டியா?" என்று தன்னை கேள்வியாகப் பார்த்து இருந்த மகதியை கேட்டாள்.